காய்கறிகளின் விலை உயர்ந்தது, பேருந்து கட்டணம் உயரப்போவதாக மிரட்டுகிறது

கடந்த வாரம் எரிபொருளுக்கான உதவித் தொகை குறைக்கப்பட்டதை அடுத்து காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது. பள்ளி பேருந்து கட்டணம் ஆண்டு இறுதியில் உயரக்கூடும். பள்ளி பேருந்து கட்டணத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் (Spad) மறு ஆய்வு செய்து கொண்டிருப்பதாகவும் ஆண்டு இறுதியில் அது முடிவுறும் எனவும் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்…

பக்காத்தான்: செயல்திட்டத்தில் பல விசயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன

துணைப் பிரதமர் கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வி செயல்திட்டம் 2013-2025, அதன்மீது அக்கறை கொண்டவர்கள் முன்வைத்த கருத்துகளையும் பரிந்துரைகளையும்  கவனத்தில் கொள்ளவில்லை என பக்காத்தான் ரக்யாட் கூறுகிறது. அதன் விளைவாக, அச் செயல்திட்டம் நம் கல்விமுறையில் உருப்படியான மாற்றங்களும் சீரமைப்புகளும் ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என…

பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கான நிலத்தை அவர்களே வாங்கிக்கொள்ள முடியாதா?, கேட்கிறார் முகைதின்

(இச்செய்தி பழையது என்றாலும், மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 வெளியிடப்பட்டுள்ள வேளையில் இது தாய்மொழிப் பள்ளிகள் மீதான கல்வி அமைச்சர் முகதின் யாசினின் நிலைப்பாட்டை தெளிவாகக் காட்டுகிறது.) தாய்மொழிப்பள்ளிகள் ஓரங்கட்டப்படவில்லை. "நாங்கள் அவர்களின் சம்பளத்தைக் கொடுக்கிறோம். அவர்கள் டிஎபியை ஆதரிக்கிறார்களோ பாரிசானை ஆதரிக்கிறார்களோ அதுகுறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை. இது நாங்கள் இப்பள்ளிகளை  ஆதரிக்கிறோம்…

புரொஜெக்ட் ஐசி-இல் எனக்கு சம்பந்தமில்லை: முன்னாள் துணை அமைச்சர்

முன்னாள் துணை அமைச்சர் யாஹ்யா லம்போங் (இடம்), தாம் முன்னாள் உள்துறை துணை அமைச்சர் மெகாட் ஜுனிட் மெகாட் ஆயுப்பைச் சந்தித்ததுமில்லை,  அவரிடம் புரொஜெக்ட் ஐசி தொடர்பில் உத்தரவு எதையும்  பெற்றதுமில்லை  என்று   சாபா அரச  விசாரணை  ஆணையத்திடம்(ஆர்சிஐ) தெரிவித்தார். இதற்குமுன்,  சாபா கள்ளக்குடியேறிகள் மீது விசாரணை நடத்திவரும்…

வழக்குரைஞர் மன்றம், சுஹாகாம் கூறுவதை ஐஜிபி கவனத்தில் கொள்ள வேண்டும்

பெற்றோர்களுக்குத் தெரியாமல் குழந்தைகள் போலீஸ்காரர்களால் விசாரிக்கப்படுவதில் தவறு ஏதும் இல்லை என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறியிருந்ததை அவர் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைக் கழகமான சுஹாகாமும், வழக்குரைஞர் மன்றமும் இது குறித்து எதிர்மறையான கருத்து தெரிவித்திருப்பதால், காலிட் அவ்வாறு செய்ய…

பினாங்கு கெராக்கான்: தெங்கை எதிர்த்து பால்ஜிட் போட்டியிடுகிறார்

பினாங்கு மாநில கெராக்கான் கட்சியின் தலைவர் பதவிக்கு வெளிப்படையாகப் பேசும் பால்ஜிட் சிங் கட்சியின் தற்போதைய உதவித் தலைவர் தெங் சாங் இயோவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இன்று, தேர்தலுக்கான நியமனம் முடிவுற்றதும், உதவித் தலைவர் சாங் இயோ மற்றும் பால்ஜிட் ஆகிய இருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிடும்…

அப்துல் அசிஸ் பாரி: நிழல் அமைச்சரவை இருக்கட்டும், முதலில் சொன்னதைச்…

மாற்றரசுக் கட்சி அதன் நிழல் அமைச்சரவையை அறிவிக்க வேண்டும் என்று கோருவதற்கு முன்பு பாரிசன் மாற்றரசுக் கட்சிக்கு முறையான மதிப்பை அளிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி அறிவுரை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற நடைமுறைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விதிகளை மதிப்பதும், மாற்றரசுக் கட்சி தலைவருக்கு…

அன்வார்: ஆங்கிலத் தேர்ச்சியைக் ‘கட்டாயமாக்க’ மலேசியா இன்னும் தயாராகவில்லை

கல்வி அமைச்சு, பொதுத் தேர்வுகளில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க இன்னும் காலம் கனியவில்லை என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். முதலில் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க  வேண்டும் என்றாரவர். “இது (ஆங்கிலத்தில் கட்டாய தேர்ச்சி) மாணவர்களுக்குப் பெரும் சுமையாக அமையும். ஏனென்றால், வசதிகளோ ஆசிரியர்களோ…

‘ஆலய விவகாரம் பிஎன் மற்ற சமயங்களை மதிக்கவில்லை என்பதைக் காண்பிக்கிறது’

கோலாலும்பூரில் 100ஆண்டு பழமை வாய்ந்த முனீஸ்வரர் காளியம்மன் கோயிலின் “புனிதத்தன்மையைக் கெடுக்கும்” வகையில் நடந்துள்ள செயல்கள் பிஎன் அரசு மற்ற சமயங்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதைக் காண்பிக்கிறது என டிஏபி சாடியுள்ளது. கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் தெய்வச் சிலைகள் கவனமாக, சிதைக்கப்படாமல்தான் அகற்றப்பட்டன என்று…

எரிபொருள் விலை உயர்வால் என்ஜிவி விலை உயரலாம் என டெக்சி…

பெட்ரோல் விலை உயர்வால்  இயற்கை எரிவாயு(என்ஜிவி)வில் ஓடும் கார்களுக்கான தேவை அதிகரிக்கும். அதனால் என்ஜிவி-யைப் பயன்படுத்துவதற்கான சாதனங்களைப் பொருத்தும் செலவுகள் அதிகரிக்கும் என டெக்சி ஓட்டுனர்கள் கூறுகின்றனர். அது தங்களின் பிழைப்பைக் கெடுக்கும் என்று கூறி டெக்சி ஓட்டுனர்கள் அடங்கிய சிறு கும்பல் ஒன்று நேற்று தாமான் பஹாக்யா…

கம்போங் புவா பாலா மக்களை ஏமாற்றியது ம.இ.காவின் இளைஞர் அணி!

-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 6, 2013. கம்போங்  புவா பாலா மக்கள் குறைகளைத் தீர்ப்பதாகச் சொல்லி 12 பேர்களின் நம்பிக்கையயும், வாழ்வாதாரத்தையும் அழித்த இந்த ம.இ.காவின் இளைஞர் அணி தலைவர்கள் அன்று பினாங்கு மாநில பாக்காட்தான் அரசு செய்யவிருந்த சமரசத்தில் மூக்கை நுழைத்து பிரச்சனையை அரசியலாக்காமல் இருந்திருந்தால்,…

சீனர் சங்கங்கள்: முகைதின் சொல்வது உண்மையல்ல

ஒரு திடீர் திருப்பமாக, கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசின் பஹாசா மலேசியா பாடத்துக்குத் தாய்மொழிப் பள்ளிகள் கூடுதல் நேரம் ஒதுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறியிருப்பதை மூன்று சீனர் சங்கங்கள் மறுத்துள்ளன. ஜியாவ் ஜோங், ஹுவா ஜோங், பள்ளித் தலைமையாசிரியர் தேசிய சங்கம் ஆகிய மூன்றும்,  பஹாசா மலேசியா…

அமைச்சர்: பிஎம்-முக்குக் கூடுதல் வகுப்புகள் ஏற்பாடு செய்ய தாய்மொழிப் பள்ளிகள்…

தாய்மொழிப் பள்ள்ளிகள் தேசிய கல்வி செயல்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதுடன் பஹாசா மலேசியா கற்பிக்கக் கூடுதல் நேரத்தை  ஒதுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன எனக் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கூறினார். பஹாசா மலேசியா பாடத்துக்கான நேரத்தை வாரத்துக்கு 180 நிமிடங்களிலிருந்து 270 நிமிடமாகக் கூட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால், சீனர்…

புதிய கல்வி செயல்திட்டம் தாய்மொழிப் பள்ளிகளைப் பாதுகாக்கும்

தாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து இருக்கும். புதிய கல்வி செயல்திட்டத்தில்  அவை பாதுகாக்கப்படும். இன்று புதிய தேசிய கல்வி செயல்திட்டத்தை அறிமுகம் செய்த கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இந்த உறுதிமொழியை வழங்கினார். சீன, தமிழ்ப் பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படுவதற்கு கல்விச் சட்டம் 1966 (பகுதி 28) உத்தரவாதம்…

பழனி போன்ற தலைவர்கள் இருக்கையில் இந்தியர்களுக்கு வேறு பகைவர்கள் தேவையில்லை

உங்கள் கருத்து   ‘ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன, அவற்றின் புனிதத்தன்மை கெடுக்கப்படுகிறது. ஆனால், மஇகாதலைவர் ஜி.பழனிவேல் என்ன செய்கிறார், கட்சித் தேர்தலில் தம்மை யாரும் எதிர்க்காமல் பார்த்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்’ பழனிவேல் இன்னொரு பல்டி, 2016-க்குப் பின் இருக்க மாட்டாராம் நியாயம், நேர்மை: ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன, அவற்றின் புனிதத்தன்மை கெடுக்கப்படுகிறது,…

டிஎபி: இஓ இரத்தாவதற்கு முன்பே வன்முறை குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளன

2005-இலிருந்தே, அதாவது அவசரக் காலச் சட்டம் அகற்றப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்பே, வன்முறை சார்ந்த குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளன என டிஏபி கூறுகிறது. “2005-இலிருந்து 2009 வரை, தடுப்புச் சட்டம் இரத்துச் செய்யப்படுவதற்கு முன்பே, வன்முறை குற்றங்கள் ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளன. அப்படி இருக்கையில் (ஐஜிபி)…

புதிய கல்வி பெரும் திட்டம் தாய்மொழிப்பள்ளிகளைப் பாதுகாக்கும்

தாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து இருக்கும். புதிய கல்வி பெரும் திட்டத்தில்  அவை பாதுகாக்கப்படும். இன்று புதிய தேசிய கல்வி பெரும் திட்டத்தை அறிமுகம் செய்த கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இந்த உறுதிமொழியை வழங்கினார். சீன, தமிழ்ப் பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படுவதற்கு கல்விச் சட்டம் 1966 (பகுதி…

வாக்காளர் பட்டியலில் குறையுண்டு, ஆனால் அதற்கு இசி பொறுப்பல்ல- முன்னாள்…

மலேசியாவின் வாக்காளர் பட்டியல் “ஒழுங்காய்” உள்ளது ஆனால் “அனைத்துலக தரத்துக்கு ஏற்ப இல்லை” என்கிறார் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான். மலேசியாகினி, மின்னஞ்சல்வழி நடத்திய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார். வாக்காளர்களில் “பெரும்பாலோர்” தாங்கள் குடியிருக்கும் இடத்தில் வாக்களிப்பதில்லை. இதனால்தான் ஆவி வாக்காளர்…

பாக் சமட்: பட்டத்தைப பறிக்க வேண்டுமா, தாராளமாக செய்யுங்கள்

ஏ.சமட் சைட், அவரது தேசிய இலக்கியவாதி பட்டத்தைப் பறிக்க வேண்டும் எனச் சில தரப்பினர் கூக்குரல் இடுவது பற்றிக் கவலையே படவில்லை. “என் தேசிய இலக்கியவாதி பட்டத்தைப் பறிக்க வேண்டுமா, தாராளமாக நடக்கட்டும்”, என்றாரவர். அரசாங்கம் தம் குடியுரிமையைப் பறிக்க முடிவு செய்தால்கூட கவலை இல்லை என அந்த…

ஜாஹிட்: அரசியலில் ஈடுபட்டுள்ள இரகசிய சங்க உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அரசியல்வாதிகளாக உள்ள   இரகசிய சங்க உறுப்பினர்களை  உள்துறை அமைச்சு  அடையாளம் கண்டிருக்கிறது  என அதன் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “அந்த அரசியல்வாதிகள் இரகசிய சங்கங்களின்  முன்னாள்  உறுப்பினர்களாக இருந்து இப்போது திருந்தியவர்களாக இருந்தால், அவர்களை  இரகசிய சங்கங்களுடன் இணைந்துப் பேசுவது நியாயமாக இருக்காது. “ஆனால்,…

சாலை வரியை அகற்ற பெட்ரோல் விற்பனையாளர்கள் கோரிக்கை

மலேசிய பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் (பிடிஏஎம்), அரசாங்கம் சாலை வரியை இரத்துச் செய்து 2000 சிசி கார்களுக்கான காப்புறுதிக் கட்டணத்தையும் குறைக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொண்டுள்ளது. அது, குறைந்த- நடுத்தர வருமானம் பெறும் மக்கள் நடப்புப் பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என அதன் தலைவர் ஹஷிம் ஒத்மான்…

பழனிவேல், 2016-க்குப் பின்னர் இருக்கப்போவதில்லை என மீண்டும் ஒரு பல்டி

2016-க்குப் பின்னரும் மஇகா தலைவராக இருக்கும் சாத்தியம் இருக்கிறது என்று கூறி ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜி.பழனிவேல், இப்போது அடுத்த மஇகா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதைத் தெளிபடுத்தியுள்ளார். துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.  

இஓ இரத்தான பின்னர் வன்முறை குற்றங்களில் 5 விழுக்காடு உயர்வு

தடுப்புச் சட்டங்கள் அகற்றப்பட்ட பின்னர், நாட்டில் வன்முறை சார்ந்த குற்றங்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு உயர்ந்தது என போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார். அவசரகாலச் சட்ட  விதிகள் (இஓ)  இரத்துச் செய்யப்படுவதற்கு   20 மாதங்களுக்கு முன்பு, 43,313 வன்முறை குற்றங்கள் பதிவு…