‘காணாமல்போன’ எஸ்ஆர்சி நிர்வாக இயக்குனருக்குப் பயணத் தடை

நாட்டைவிட்டு  வெளியேறத்  தடை  விதிக்கப்பட்டிருப்பவர்களில் எஸ்ஆர்சி  நிர்வாக  இயக்குனர்  நிக்  பைசல்  அரிப்  நிக்  ஒஸ்மான்  கமிலும்  ஒருவராவார். .பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  சொந்த  கணக்குக்கு  ரிம2.6 பில்லியன்  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படும்  விவகாரத்தில் நிக்  பைசலுக்கும்  தொடர்புள்ளதாகக்  கூறப்பட்டுள்ளது. 1எம்டிபிமீது விசாரணை  நடத்திவரும்  சிறப்புப்  பணிக்குழு  அவரையும் …

எம்சிஎம்சி: ஆதாரங்களில்லை; சரவாக் ரிப்போர்ட் முடக்கம் ஒரு தடுப்பு நடவடிக்கையே

1எம்டிபி தொடர்பில்  சரவாக்  ரிப்போர்ட்  வெளியிட்ட  தகவல்கள்  பொய்யானவை  என்பதற்கு  இதுவரை  ஆதாரம்  எதுவும்  இல்லை  என  மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணையம்  கூறியது. இன்று  புத்ரா  ஜெயாவில்,  மலேசியாகினி  உள்பட, இணைய  செய்தித்தளங்களின்  தலைமை  செய்தியாசிரியர்களைச்  சந்தித்த  எம்சிஎம்சி  கண்காணிப்பு மற்றும்  அமலாக்கத்  தலைவர்  சுல்கர்னைன் …

தெரேசா கொக்கும் ரபிஸியும் போர்னியோ செல்ல மட்டுமே தடை

உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி துவாங்கு  ஜாபார்  குடிநுழைவுத்  துறையின்  பயணக்  கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள  டிஏபி  சீபூத்தே  எம்பி  தெரேசா  கோக்கும்  பிகேஆர்  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லியும்  வெளிநாடுகள்  செல்ல  தடையில்லை என  தெளிவுபடுத்தியுள்ளார். வான்  ஜுனாய்டி  தம்மிடம் இதைத்  தெரிவித்ததாக  கொக்  மலேசியாகினியிடம் …

“சூத்திரதாரி” மகாதிருக்கு இன்னும் பயணக் கட்டுப்பாடு ஏதும் இல்லை

  பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டுக்கு எவ்வித பயணக் கட்டுப்பாடும் இதுவரையில் விதிக்கப்படவில்லை. இமிகிரேசன் இலாகா வலைத்தளம் அவரது பயணத் தகுதிக்கு எவ்விதத் தடையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. 1எம்டிபி விவகாரம் காரணமாக மகாதிர்…

புவா மற்றும் ரபிஸி நாட்டை விட்டு வெளியேற தடை

1எம்டிபி விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோனி புவாவும் ரபிஸி ரமலியும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினருமான டோனி புவா இன்று கேஎல் எ2 இல் இமிகிரேசன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்தோனேசியா, ஜோக்ஜாக்கர்த்தாவுக்கு செல்வதற்காக அவர் விமானநிலையத்திற்கு…

மாரா வெளிநாடுகளில் சொத்துகள் வாங்குவதை நிறுத்தும்

ஆஸ்திரேலியாவில்  சொத்து  வாங்கியதில்  முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதாகக்  கூறப்படுவதால்  மாரா  வெளிநாடுகளில்  சொத்து வாங்குவதை  நிறுத்திக்கொள்ள  முடிவு  செய்திருப்பதாக  அதன்  முன்னாள்  தலைவர்  அனுவார்  மூசா  கூறினார். மாரா  அதன்  கடன்களை  அடைப்பதற்காக  சொத்துகள்  சிலவற்றை  விற்கப்  போவதாகவும்  அவர்  தெரிவித்தார். “வெளிநாடுகளில்  சொத்து  வாங்குவதைத்  தொடர  வேண்டாம்  என்ற …

ஆயிரக்கணக்கானவர் திரண்டு சரவாக் சுதந்திர நாளைக் கொண்டாடினர்

போலீஸ்  படைத்  தலைவரின் எச்சரிக்கையைப்  புறக்கணித்து  ஆயிரக்கணக்கான  மக்கள்  இன்று  கூச்சிங்  தெருக்களில்  ஒன்றுதிரண்டு  சரவாக்கின்  52-வது  சுதந்திர  நாளைக்  கொண்டாடினர். 2013-இல்  இக்கொண்டாட்டம்  தொடங்கியதிலிருந்து  இன்று  திரண்டதுதான்  மிகப்  பெரிய  கூட்டமாகும். கூட்டத்தினர்  ஜூபிளி  விளையாட்டுத்  திடலில்  திரண்டு  அங்கிருந்து   சொங்  கெங்  ஹாய்  ரக்பி  திடலுக்கு …

1எம்டிபி விசாரணை: சிங்கப்பூரில் வங்கிக் கணக்குகள் முடக்கம்

1எம்டிபி-இல்  நிதிமுறைகேடு  மீதான  விசாரணைக்கு  உதவியாக  சிங்கப்பூர் போலீஸ்  இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. “ஜூலை 15, 2015-இல்  விசாரணை  தொடர்பான அந்த இரண்டு வங்கிக் கணக்குகளில் பண பட்டுவாடா நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக்  குற்றவியல் சட்டத்தின் கீழ் நாங்கள்  தடை  விதித்தோம்”, என சிங்கப்பூர்  போலீஸ்  இன்று  ஓர் …

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிமீது போலீஸ் விசாரணை

அரசாங்கத்தை  ஜனநாயகத்துக்குப்  புறமான  வழியில்  கவிழ்க்கும்  முயற்சி  மேற்கொள்ளப்பட்டதா  என்பதை  போலீஸ்  ஆராயும். இதனைத்  தெரிவித்த  இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்,  பெட்ரோசவூதி   முன்னாள்  தலைவர்  சேவியர்  ஜஸ்டோ  பற்றி  தாய்லாந்து  போலீசார்  வெளியிட்டுள்ள  தகவல்களையும்  சரவாக்  ரிப்போர்டுக்கு  எதிரான  முன்னாள்  செய்தியாளர்  லெஸ்டர் …

1எம்டிபி புலனாய்வு: மேலும் ஒரு நிறுவன இயக்குனர் கைது

1எம்டிபிமீதான  விசாரணைக்கு  உதவியாக  நிர்வாக  இயக்குனர்  ஒருவர்  ஐந்து  நாள்களுக்குத்  தடுத்து  வைக்கப்பட்டுள்ளார். அவர்  ஒரு ‘டத்தோ’என்று  கூறப்படுகிறது. அவர்,  1எம்டிபி பணக்கையாடலை விசாரணை  செய்துவரும்  சிறப்புப்  பணிக்குழு  கைது  செய்துள்ள இரண்டாவது  நபராவார். 1எம்டிபி  விவகாரம்  தொடர்பில்  நேற்று  ஒருவர்  கைது  செய்யப்பட்டார்.  ஒரு  நிறுவனத்தின்  இயக்குனரான …

மக்கள் சிரிக்கப் போகிறார்கள், அம்னோ தலைவர் அழுகிறார்!

  குற்றச்சாட்டுகளால் துளைக்கப்பட்டிருக்கும் 1எம்டிபி நிறுவனம் மற்றும் பிரதமர் நஜிப் ரசாக் பற்றிய விசாரணையை சிறப்புப் பணிக்குழு விரைவுபடுத்த வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார். என்ன ஆனாலும் சரி, விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பது தமது கருத்து என்று மலேசியகினியிடம் கூறிய ரீஸால் மரைக்கான் நைனா…

1எம்டிபி: கைதான இயக்குனர் எங்களைச் சேர்ந்தவர் அல்லர்

1எம்டிபி  மீதான  சிறப்பு  விசாரணைக்  குழுவால்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்  நிறுவன  இயக்குனர்   அந்த  நிறுவனத்தைச்  சேர்ந்தவர்  அல்லர்  என்று  நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான அந்த  நிறுவனம்  தெரிவித்துள்ளது. “நிறுவன இயக்குனர்  ஒருவர்  புலனாய்வுக்  குழுவின்  விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்  ஊடகச்  செய்திகளை  1எம்டிபி-யும்  கவனித்தது. “1எம்டிபி  ஊழியர் எவரும் …

பெர்னாண்டஸ்: அப்போதே சொன்னேன், யாரும் கேட்கவில்லை

கேஎல்ஐஏ2  கட்டி  முடிக்கப்பட்டதும்  தொடக்கத்தில்  அங்கு  செல்ல  ஏர் ஏசியா  மறுத்தது. அதற்காக  அது  குறைகூறப்பட்டது. அது  மறுத்ததற்கான காரணம்  இப்போதுதான்  தெரிய  வந்துள்ளது. அந்த  விமான  நிலையத்தில்  பிரச்னைகள்  இன்னும்  தீரவில்லை. இதை  ஏர்  ஏசியா  தலைமை  செயல்  அதிகாரி  டோனி  பெர்னாண்டஸ்  டிவிட்டரில் குறிப்பிட்டு  வருத்தப்பட்டிருக்கிறார்.…

நஜிப்பின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் லிம் கொக் விங்

லிம்  கொக்  விங்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பொது  விளம்பர  ஒருங்கிணைப்பாளர்  பதவியிலிருந்து  விலகிக்  கொண்டிருப்பதாகக்  கூறப்படுகிறது. லிம்  இம்மாதத்  தொடக்கத்தில்  அப்பதவியிலிருந்து  விலகிக்  கொண்டதாக  த   மலேசியன்  இன்சைடர்,  சில  வட்டாரங்களை  மேற்கோள்காட்டிக்  கூறியிருந்தது. நஜிப்புக்கான ஆதரவு  சரிந்து  வந்ததைத்  தடுத்து  நிறுத்தவும்  ஆதரவைப்  பெருக்கவும்…

போலீசார் லெஸ்டரிடம் வாக்குமூலம் பதிவு

சரவாக்  ரிப்போர்ட்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குற்றவாளியாகக்  காண்பிப்பதற்காக  பொய்ச்சாட்சியங்களை  உருவாக்கியது  என்று  கூறிய  லெஸ்டர்  மெலான்யியிடம்  பொலீசார்  வாக்குமூலம்  பதிவு  செய்தனர். லெஸ்டரிடம்  வாக்குமூலம்  பதிவுசெய்ய  புக்கிட்  அமான்  போலீசார்  ஜூலை  17, 18-இல்  கூச்சிங்  வந்தார்கள்  என சரவாக்  போலீஸ்  ஆணையர்  முகம்மட்  சப்து…

மகாதிரின் வலைப்பதிவை முடக்கம் செய்யும் துணிச்சல் நஜிப்புக்கு உண்டா?

சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளத்தை  முடக்கிவைத்துள்ளதுபோல்  மகாதிரின்  அகப்பக்கமான  chedet.cc-ஐ  முடக்கி  வைக்கும்  துணிச்சல்  பிரதமர்  நஜிப் அபதுல்  ரசாக்குக்கு  உண்டா  என  எதிரணி  எம்பி  ஒருவர்  சவால்  விடுத்துள்ளார். மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணையம் (எம்சிஎம்சி),   1எம்டிபி  பற்றி  சரவாக்  ரிப்போர்ட்  தொடர்ந்து  தகவல்கள்  வெளியிட்டு  வருவது …

1எம்டிபி: நிறுவன இயக்குனர் ஒருவர் கைது

1எம்டிபிமீது  விசாரணை  மேற்கொண்டுவரும்  பணிக்குழு, நிறுவன  இயக்குனர்  ஒருவரை  விசாரணைக்காக  நான்கு  நாள்களுக்குத்  தடுத்து  வைத்துள்ளது. அந்நபர்  திங்கள்கிழமை  கேஎல்ஐஏ_இல்  கைது  செய்யப்பட்டதாக  நம்பப்படுகிறது. அவரின்  வழக்குரைஞரான  ஷாபி  அப்துல்லா  அது “தேசிய  நலன்”  சம்பந்தப்பட்ட  வழக்கு  என்று  குறிப்பிட்டதாக  ஸ்டார்  ஆன்லைன்  கூறியது. “விசாரணையாளர்கள்  அவரை ஏழு …

எம்ஏசிசி: 1எம்டிபி புலனாய்வு பற்றிய தகவல்கள் எங்கள் அலுவலகத்திலிருந்து கசியவில்லை

மலேசிய   ஊழல்-தடுப்பு  ஆணையம், அதன் அலுவலகத்திலிருந்துதான் 1எம்டிபி மீது   புலனாய்வு  செய்யும்  சிறப்புப்  பணிக்  குழு  சேகரித்த  தகவல்கள் கசிந்ததாக  மலேசியா  டூடே  இணையத்தளம் கூறியிருப்பதை  மறுத்துள்ளது. எம்ஏசிசி  முன்னாள்  ஆலோசகர்  ரேஷ்பால்  சுங்  ஜஸ்வாந்த்  சிங்,  பணிக்குழு  அதன்  புலனாய்வில்  திரட்டிய  தகவல்களை  சரவாக்  ரிப்போர்டுக்குக்  கசிய …

தனியார் கணக்கில் வைக்கப்பட்ட பணம் தேர்தலுக்கு செலவிடப்பட்டது, மகாதிர் கூறுகிறார்

வங்கியில் தனியார் கணக்கில் வைக்கப்பட்டிருந்த பணம் கடந்த பொதுத் தேர்தலுக்கு செலவிடப்பட்டது என்று அம்னோவிடம் கூறப்பட்டதாக மகாதிர் முகமட் தெரிவித்தார். "தனியார் கணக்கில் பணம் வைக்கப்பட்டது மறுக்கப்படவில்லை. அது தேர்தல்களுக்கு என்று அம்னோவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அம்னோ திருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது. "ஓர் அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற…

சரவாக் ரிப்போர்ட் இல்லையென்றால் என்ன கம்போங் ரிப்போர்ட் தொடங்குவோம்

பாஸின்  உதவிச்  செயலாளர்  ஹுசாம்  மூசா  1எம்டிபி  ‘பாவச்  செயல்கள்’ நாட்டின்  மூலை  முடுக்கெல்லாம்  பரவ  வேண்டும்  என  விரும்புகிறார்.  அதற்காக  அச்சடிப்பதற்காகவும்  விநியோகச்  செலவுக்காகவும்  ஒரு  நிதியை  ஏற்படுத்த  வேண்டும்  என்கிறார்  அவர். அந்த  ஊழல்  எல்லாருக்கும்  தெரிந்துவிடும்  எனப்  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்  அஞ்சுவதால் …

இஸ்மாயில் சப்ரி: கெட்ட பரப்புரைகளைத் தடுப்பது முக்கியம்

சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளத்தை  முடக்கிப்போட்ட  மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணைய(எம்சிஎம்சி)  நடவடிக்கை,  நாட்டை  நிலைகுலையச்  செய்யக்கூடிய  தீய  பரப்புரைகள்  பரவுவதைத்  தடுக்கும்  என  விவசாய, விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  கூறினார். “அது  தடுப்பதுடன்  குற்றவியல்  சட்டம் தேச  நிந்தனைச்  சட்டம்,  எம்சிஎம்சி   சட்டம் …

இணையத்தள முடக்கம் பிரதமர் குற்றவாளி என்ற எண்ணத்தைத்தான் வலுப்படுத்துகிறது

சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளம்  முடக்கப்பட்டிருப்பது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  குற்றவாளி  என்ற  எண்ணத்தை  வலுப்படுத்த  உதவுகிறது  என  டிஏபி  பெருந்தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார். அந்த  இணையத்தளத்துக்குச்  செல்ல  முடியாமல்  தடுப்பதன்  மூலமாக  நஜிப்பும்  மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணையமும் “மலேசியர்களுக்கும்   மற்றும் உலகத்தாருக்கும் …

1எம்டிபி-யால் புத்ரா ஜெயாவை இழக்கப் போகிறது அம்னோ

பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி, அம்னோ  தம்மையும்  மற்ற  எதிரணித்  தலைவர்களையும்  பழித்துரைப்பதைக் கண்டு  “குதூகலிக்கிறார்”. “இப்படிப்பட்ட  எதிர்வினைகள் அம்னோ-வுக்கும்  பிஎன்னுக்கும்  எதிராக  மக்களின்  ஆத்திரத்தைக்  கிளறிவிடும். அதுவே  14வது  பொதுத்  தேர்தலில்  எதிரணியை  வெற்றிபெற  வைக்கும்”, என  அவர்  ஒர்  அறிக்கையில்  கூறினார். “1எம்டிபி  ஊழல் …