அமைச்சு: ஏழைகளின் பிரச்னைக்குத் தீர்வுகாண முனைகிறோம்; கொடூரமாக நடந்துகொள்ளவில்லை

கோலாலும்பூர்  மையப்பகுதியில்  பிச்சை  எடுப்போரை அப்புறப்படுத்துவதையும் அவர்களுக்கு  உணவளிப்பதைத்  தடுப்பதையும் வைத்து  ஏழைகளிடம்  தான்  இரக்கமற்று  நடந்துகொள்வதாக  யாரும்  எண்ணி விடலாகாது  எனக்  கூறும் கூட்டரசு  பிரதேச  அமைச்சு,  ஏழைகளுக்கும்  வீடற்றோருக்கும்  ஓரிட  மையம்  ஒன்று  அமைக்கும்  திட்டமொன்று  உருவாகிக்  கொண்டிருப்பதாகக்  குறிப்பிட்டது. அதற்குப்  பொருத்தமான  பல இடங்கள் …

இராமசாமி ‘மலேசிய உணர்வற்றவர்’: கெராக்கான் சாடல்

கெராக்கான்  இளைஞர்  பகுதி,  அதன்  தலைவர்  மா  சியு கியோங்  இந்து  அறவாரியத்  தலைவராக  நியமிக்கப்பட்டிருப்பதைக்  குறைகூறிய  பினாங்கு  துணை  முதல்வர் II பி.இராமசாமியை “மலேசிய  உணர்வற்றவர்”  எனச்  சாடியுள்ளது. மலேசியாவில்  இனம்  பார்ப்பது பொருத்தமற்ற  வேலை  என  அதன்  தலைவர்  டான்  கெங்  லியாங் கூறினார். ஒரு …

கூ அட்னான் அவரது வீட்டிலேயே அத்தனை பேருக்கும் அடைக்கலம் அளிக்கலாம்

கூட்டரசு  பிரதேசத்தில்  வீடுவாசலற்று  சுற்றித்திரிவோரை  ஒழித்துக்கட்டப்போவதாக   சூளுரைக்கும்  கூட்டரசு பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர், அவர்கள்  அத்தனை  பேருக்கும்  அவரது  வீட்டிலேயே  இடமளிக்கலாம். ஜாலான்  டூட்டாவில்  உள்ள  தெங்கு  அட்னானின்  நான்கு-மாடி  வீடு  அவ்வளவு  பெரிது  என்கிறார் பிகேஆர்  எம்பி,  என்.சுரேந்திரன். அத்துடன்  கோலாலும்பூரில்   தடைவிதிக்கப்பட்ட …

வீடற்றோருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துக: சிசிஎம் வேண்டுகோள்

வீடுவாசலற்றோருக்கும்  அவர்களுக்கு  உதவுவோருக்கும்  எதிரான  அத்தனை  நடவடிக்கைகளையும்  நிறுத்த  வேண்டும்  என்று   கிறிஸ்துவ  அமைப்பு  ஒன்று  அரசாங்கத்தைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. சமுதாயத்தில்  வறிய  நிலையில்  உள்ளவர்களுக்கு  எதிராகவும்  அவர்களுக்கு  உதவி  ‘பரிவுள்ள  சமுதாயம்’  என்று  காண்பித்துக்கொள்வோருக்கும்  எதிராகவும்   நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும்  என  அறிவிக்கப்பட்டிருப்பதைக்  கண்டு  வருத்தமடைவதாக  தேவாலயங்கள்  மன்ற(சிசிஎம்)  இளைஞர் …

மா: இந்து அறவாரியப் பொறுப்பு ‘பெருமைக்குரியது’

தாம், இந்து  அறவாரியத்துக்குப்  பொறுப்பான  அமைச்சராக  நியமிக்கப்படிருப்பதைப்  பலர்  குறைகூறினாலும் கெராக்கான்  தலைவர்  மா சியு  கியோங்  அதைப்  பெருமையாகவே  கருதுகிறார். “இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும்  சேவை  செய்ய  கிடைத்த  வாய்ப்பை  எண்ணிப்  பெருமிதம்  கொள்கிறேன்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார். அது, கெராக்கான்  பல்லினங்களுக்கும்  பல  சமயங்களுக்கும்  ஏற்புடைய …

ஐஜிபி: தப்பு செய்யும் போலீஸ்காரர்களை நாங்கள் பாதுகாப்பது இல்லை

தப்பு  செய்யும்  போலீஸ்காரர்கள்  பாதுகாக்கப்படுவதில்லை  என்பதை  வலியுறுத்தும் இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார், தப்பு  செய்ததற்கு ஆதாரங்கள்  இருக்குமானால்  அவர்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படுவது  உறுதி  என்றார். மைவாட்ச்  தலைவர்  ஆர்.ஸ்ரீ சஞ்சீவன்  அம்பலப்படுத்திய  பல  விவகாரங்கள்  குறித்து  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார். சஞ்சீவன் …

பிச்சை எடுப்பதும் இடுவதும் குற்றமே: தெங்கு அட்னான் பிடிவாதம்

கோலாலும்பூரில்  பிச்சைக்காரர்களை  ஒழிக்கும்  இயக்கம் பற்றிக்  குறைகூறப்பட்டாலும்  அரசாங்கம்  அத்திட்டத்தைத்  தொடரும். சாலைகளில்  பிச்சை  எடுத்தால்  கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்றம்  அபராதம்  விதிக்கும்  எனக்  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கூறினார். “பிச்சை  இடுவோருக்கும்  எடுப்போருக்கும்  அழைப்பாணைகள்  (சம்மன்கள்)  கொடுக்கப்படும். கொடையளிப்பவர்களிடம்  நிறைய  பணம் …

ஆங்கில நாளிதழ்மீது பாய்கிறார் சைனுடின்

மசீச-மீது  பாய்ந்து  பிறாண்டிய  சைனுடின்  மைடின், இப்போது  பார்வையை  மசீச-வின் நாளிதழான  த  ஸ்டார்மீது  திருப்பி  இருக்கிறார். அந்த  நாளிதழ்,  உள்ளுக்குள்-உறையும்  எதிரிகளின்  குரலாக  மாறுவதற்குமுன் மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்  அதை அடக்கிவைக்க  வேண்டும்  என்று    அந்த  முன்னாள்  தகவல்  அமைச்சர்  தம்  வலைப்பதிவில்  வலியுறுத்தினார்.…

மா இந்து அறவாரிய தலைவரா? ஐயகோ,வெட்கக்கேடு!

பிரதமர்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள  மா சியு கியோங் தேசிய இந்து அறவாரியத்  தலைவராக  நியமிக்கப்பட்டிருப்பது  இந்துக்களை  அவமதிக்கும்  செயல்  என  பினாங்கு  இந்து  அறவாரியத்  தலைவர்  பி.இராமசாமி  கூறுகிறார். “இந்துக்களுக்கு  இப்படியோர் இழிவா? அப்பொறுப்பைக்  கவனித்துக்கொள்ள  இந்தியர்களில்  தகுதியானவர்கள்  எவருமில்லையா?”, என  பினாங்கின் 2-வது   துணை  முதலமைச்சருமான அவர் …

நியு சிலாந்து விவகாரத்தில் அரசாங்கம் எதையும் மூடி மறைக்கவில்லை

எதிரணி  தலைவர்  அன்வார்  இப்ராகிம்   நாட்டின்  நற்பெயரைக்  கெடுக்கும்  நோக்கத்துடன்  நியு சிலாந்தில்  மலேசிய  தூதரக  அதிகாரி சம்பந்தப்பட்ட  விவகாரம்  மூடிமறைக்கப்பட்டதாகக்  கூறி  இருக்கிறார்  என  அரசாங்கம்  சாடியுள்ளது. “நியு  சிலாந்து  ஊடகத்துக்கு  அளித்த  நேர்காணல் ஒன்றில்  அவ்விவகாரம்  மூடிமறைக்கப்பட்டதாக  அன்வார்  இப்ராகிம்  குறிபிட்டிருப்பது  முற்றிலும்  பொய்யாகும். “இது,…

பிச்சை எடுப்பதையும் இடுவதையும் குற்றமாக்குவது இஸ்லாத்துக்கு ஏற்புடையதல்ல

பிச்சை எடுப்பதும்  இடுவதும்  குற்றம்  என  அறிவிக்கப்படும்  எனக்  கூட்டரசு  பிரதேச அமைச்சர்  தெங்கு  அட்னான்  மன்சூர்  கூறியிருப்பதை யாரும்  வரவேற்பதாகத்  தெரியவில்லை. கூட்டரசு  பிரதேச  பாஸ்  இளைஞர்  பகுதித்  துணைத்  தலைவர்  முகம்மட்  யூசுப்,  அவ்வாறு  செய்வது  இஸ்லாத்துக்கு  ஏற்புடையதல்ல  என்றார். இஸ்லாம் ஈகையை  ஊக்குவிக்கிறது  என்றவர் …

பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களின் நிலை என்ன?

பறிமுதல்  செய்யப்பட்ட  ஈபான். மலாய்  மொழி  பைபிள்கள் நிலை  பற்றி  இதுவரை  எதுவும்  தெரியவில்லை.  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமை  அணுகி  வினவியதற்கு  “நடந்து  கொண்டிருக்கிறது”  என்று  மட்டும்  கூறி  ஆவலை  அதிகப்படுத்தினாரே  தவிர  சந்தேகத்தைத்  தெளிவுபடுத்தவில்லை. மாநில  ஆட்சிக்குழுக்  கூட்டத்துக்குப்  பின்  செய்தியாளர்களைச்  சந்தித்த …

பயிகா மீதும் எம்பி-இன் அரசியல் செயலாளர் மீதும் பிகேஆர் நடவடிக்கை

சிலாங்கூர் மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமின்  ஆலோசகர்கள்  இருவர்மீது  பிகேஆர்  இன்று  ஒழுங்கு  நடவடிக்கை  மேற்கொண்டது. அவரின்  அரசியல்  செயலாளர்  முஸ்தபா முகம்மட்  தாலிப்,  கோலா  சிலாங்கூர்  பிகேஆர்  தொகுதி  தேர்தலில்  போட்டியிட்ட  ஒருவரை  மிரட்டியதற்காக  ஓராண்டுக் காலம்  இடைநீக்கம்  செய்யப்பட்டார். அதே  வேளை  அவரின்  போர்ட் …

குறைகூறிய முன்னாள் சிஜே-யை என்யுசிசி சாடியது

தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்றம்(என்யுசிசி), அதைக்  குறைகூறிய  முன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகமட்டைச்  சாடியுள்ளது. அவர்   மன்றத்தின்  உறுப்பினர்களைப்  பற்றியோ  அது  அமைக்கப்பட்டதன்  நோக்கம்  பற்றியோ  புரிந்துகொள்ளாமல்  பேசி  இருக்கிறார்  என்றது  கூறியது. “எங்கள்    சட்டவரைவுகள்  குறித்து  ஆதாரமின்றி  அவர்  கருத்துரைத்திருப்பது  ஏமாற்றமளிக்கிறது. அது  என்யுசிசி …

‘பாலியல் தாக்குதல்’அரசதந்திரியின் பணிகளில் ஒன்றல்லவே’

பாலியல்  குற்றம்  புரிந்ததாகவும் திருடியதாகவும்  குற்றம்சாட்டப்பட்டுள்ள  தூதரக  அதிகாரி முகம்மட்  ரிசால்மன் இஸ்மாயிலுக்கு  அரசதந்திர  சலுகைகளை  நீட்டிப்பதை  சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்கள்  அமைப்பு  கண்டித்துள்ளது. “அரசதந்திரிகளுக்கான  சலுகை  என்பது வெளிநாடுகளில்  தொந்திரவு  இல்லாமல்  அரசதந்திர  வேலைகளைச்  செய்வதற்காக   வழங்கப்படுவது.  அது,  குற்றச்செயல்கள்  புரிவதற்கான  ‘லைசென்ஸ்’  அல்ல”, என்று அந்த  என்ஜிஓ-வின் …

பெட்ரோனாஸ் விளக்கக் கூட்டத்தில் சரவாக் எதிரணியினருக்கு இடமில்லை

திங்கள்கிழமை  நடந்த  பெட்ரோனாஸ்  விளக்கமளிப்புக்  கூட்டத்துக்குத்  தாங்கள்   அழைக்கப்படாததை  எண்ணி  சரவாக்  சட்டமன்ற  எதிரணியினர்  ஆத்திரம்  அடைந்துள்ளனர். பெட்ரோனாசின்  நடவடிக்கைகள்,  வருமானம்  பற்றி  விளக்கப்பட்ட அக்கூட்டத்தில்  முதலைமைச்சர்  அடினான்  சாதேமும்  மாநில  அமைச்சர்களும்  கலந்துகொண்டனர். எண்ணெய்  உரிமப்பணத்தை  அதிகரிக்க வேண்டும்  என்று கேட்டுக்கொள்ளும்  தீர்மானத்தை  முதல்முதலில்  கொண்டுவர  முனைந்தவர்கள் …

‘பாலியல் வழக்கில்’ அமைச்சர்கள் முதுகெலும்பு உள்ளவர்களாகக் காண்பித்துக் கொள்ள வேண்டும்

மலேசிய  தூதரக  அதிகாரி  ஒருவர்,  நியு சிலாந்தில்  ஒரு பெண்ணிடம்  தகாதமுறையில்  நடந்துகொண்டதாகக்  குற்றம்சாட்டப்பட்டிருக்கும்  வழக்கில்  வெளியுறவு  அமைச்சர்  அனிபா அமானும்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனும்  உறுதியுடன்  நடந்துகொள்ள  வேண்டும். மலேசியாவும்  நியு  சிலாந்தும்  நல்லுறவு  கொண்ட  நாடுகள்  என்பதை வலியுறுத்திய  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின், …

காலிசெய்யும் உத்தரவைத் தடுப்பதில் கம்போங் சுபாடாக் குடியிருப்பாளர்கள் தோல்வி

செந்தூல்,  கம்போங்  சுபாடாக்  தாம்பாஹான்  குடியிருப்பாளர்கள்  தொடுத்த  வழக்கைத்  தோற்கடிப்பதில்   கோலாலும்பூர்  மாநராட்சி  மன்றமும்(டிபிகேஎல்),  மேயரும்,  மேம்பாட்டாளரும்  வெற்றி  பெற்றனர். நில, சுரங்கத்  துறை,  டிபிகேஎல், மேம்பாட்டு  நிறுவனமான  செந்தூல்  முர்னி  சென்.பெர்ஹாட்  ஆகிய தரப்பினர்  தாக்கல்  செய்த  மனுவை  ஏற்று  நீதிபதி  நிக்  ஹஸ்மாட் நிக்  முகம்மட், …

ஜைட்: முன்னாள் சிஜே ஒற்றுமையில் குறைகாண்பவர்

முன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகம்மட்டின்  கருத்து  முன்னாள்  சட்ட  அமைச்சர்  ஜைட் இப்ராகிமுக்குக்  கொஞ்சமும்  வியப்பளிக்கவில்லை. முன்னாள்   தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகம்மட்,  தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்ற (என்யுசிசி)  தலைவர்  பதவி தமக்குக்  கொடுக்கப்பட்டதாகவும்  ஆனால்,  அதை  மறுத்து  விட்டதாகவும்  கூறினார்  என …

பினாங்கில் புதிதாக யாரும் ஜெஇ நோயால் பாதிக்கப்படவில்லை

பினாங்கு  தாசெக் குளுகோரில்  12-வயது  சிறுவன்  ஜப்பானிய  என்சிபலைடிஸ் (ஜெஇ) நோயால்  பாதிக்கப்பட்டிருக்கலாம்  என்ற  சந்தேகத்தை  அடுத்து  வேறு  யாரும்  அந்நோயால்  பாதிக்கப்பட்டிருப்பதாக  இதுவரை  கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுமக்கள்  கவலையுற  வேண்டாம்  என்று  கூறிய பினாங்கு  சுகாதாரத்  துறை  இயக்குனர்  டாக்டர்  லைலானுர்  இப்ராகிம்,  அப்பகுதியில்  கட்டுப்பாட்டு, தடுப்பு  நடவடிக்கைகள் …

பிகேஆர் இளைஞர் தலைவர்: காலிட் எம்பி பதவியிலிருந்து விலக வேண்டும்

சிலாங்கூர்  மந்திரி புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  வெளியேற  வேண்டும்  என்று பிகேஆர்  இளைஞர்  தலைவர்  ஷம்சுல்  இஸ்கண்டர்  முகம்மட்  அகின் (இடம்), வெளிப்படையாகவே  கோரிக்கை  விடுத்துள்ளார். “காலிட்  மந்திரி  புசார்  பதவி என்றென்றும்  தனக்குத்தான்  என்று  நினைத்துக்  கொண்டிருக்க  முடியாது. அது மக்களும் …

அனிபா: நியு சிலாந்துதான் தூதரக அதிகாரியைத் திருப்பி அழைத்துக்கொள்ளச் சொன்னது

நியு  சிலாந்து  அதிகாரிகள்தான்  பாலியல்  குற்றம்  சாட்டப்பட்ட மலேசிய  தூதரக  அதிகாரியைத் திருப்பி  அழைத்துக்கொள்ள  ஆலோசனை  தெரிவித்தார்கள்  என்கிறார்  வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான். இப்போது  அந்த  அதிகாரியின்மீது  தற்காப்பு  அமைச்சு  மனோவியல்  சோதனைகளை  நடத்தி  வருவதாகக்  கூறிய  அமைச்சர்,  அவர் குற்றவாளி  எனத்  தெரிய வந்தால்  மலேசிய …

மலேசிய தூதரக அதிகாரியின் பெயரை நியு சிலாந்து ஊடகங்கள் வெளியிட்டன

 நியு  சிலாந்து  உயர்  நீதிமன்றம், பாலியல்  குற்றம்  சாட்டப்பட்ட மலேசிய  தூதரக  அதிகாரியின் பெயரை  வெளியிடத்  தடைவிதிக்கும்  உத்தரவை  அகற்றியதை  அடுத்து நியு  சிலாந்து  ஊடகங்கள்  அவரின்  பெயரை  அறிவித்துள்ளன. இணைய  செய்தித்தளமான  stuff.com.nz, அவருடைய  பெயர்  முகம்மட்  ரிஸால்மன்  இஸ்மாயில்  என்றும்  அவர் வாரண்ட்  ஆபிசர்  பதவி …