மகாதிர்: தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றினால் குழப்பம் உண்டாகும்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  தேச  நிந்தனைச்  சட்டத்தை  அகற்றிவிட்டு  அதனிடத்தில்  நல்லிணக்க, ஒற்றுமை  சட்டங்களைக்  கொண்டு  வந்தால்  குழப்பம்தான்  உருவாகும்  என்று  கூறுகிறார். தேச  நிந்தனைச்  சட்டம்  இல்லை  என்ற  நிலையில், “தீவிரவாதிகள்”  நாட்டில்  முடியாட்சி  குறித்து  கேள்வி  எழுப்புவார்கள், முடியாட்சியை  ஒழிக்க  வேண்டும்  என்றுகூட …

மலாக்கா உள்பட ஐந்து இடங்களில் மிதமான புகைமூட்டம்

இன்று  காலை  மணி 9-க்கு  ஐந்து  இடங்களில்  மிதமான  புகைமூட்டம்  பதிவானது. மலாக்கா  மாநகரில்  காற்றுத்தூய்மைக்கேட்டுக்  குறியீடு(ஏபிஐ) 60ஆக இருந்ததென  சுற்றுச்சூழல்  துறை  கூறிற்று. காற்றின்  தூய்மை  குறைவாக  இருந்த  மற்ற  இடங்கள்  நீலாய் (57), போர்ட்  டிக்சன் (55), பந்திங் (53), புக்கிட்  ரம்பாய் (51) ஆகியவையாகும்.…

யுஎம்சிடெல் தலைவர் பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்; சைபுடினும் பதவி விலகல்

மலாயாப்  பல்கலைக்கழகத்தின்  ஜனநாயக,  தேர்தல்  மையத்தின் (யுஎம்சிடெல்)  இயக்குனர்,  ரிட்சுவான்  ஒத்மான்  பதவி  விலகுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். ரிட்சுவானின்  பல்கலைக்கழக  கலை, சமூக  அறிவியல்  புலத்தின்  தலைவர்  பணி  இன்றுடன்  முடிவுக்கு  வருகிறது. அது  புதுப்பிக்கப்படவில்லை. அவர் “பேராசிரியர்  பணியிலிருந்து ஓய்வுபெறுவதால்”  அவருடைய  யுஎம்சிடெல்  இயக்குனர்  பணியைப்  புதுப்பிப்பதில்லை  என்ற …

இஸ்லாத்துக்குப் பொருந்தாத கருத்துரைத்த ஜாஹிட்டுக்கு என்ஜிஓ கண்டனம்

ஸ்ரீ டெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என். இராயர் வீட்டுக்குமுன்   இரத்தம்-வடியும்  மாட்டுத்தலை  ஒன்று  வீசி  எறியப்பட்டிருந்தது  தொடர்பில்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  தெரிவித்த  கருத்து “இஸ்லாத்துக்கு  ஏற்புடையதன்று”  என  மலேசிய  முஸ்லிம்  இளைஞர்  இயக்கம்(அபிம்)  கூறியது. அது, “தெள்ளத்  தெளிவாக  இந்துக்களை  அவமதிக்கிறது”  என  அபிம் …

டிஎபி: ஹமிடி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்

பிரதமர் நஜிப் அவரது உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக அவரை வேறொரு துறைக்கு மாற்ற வேண்டும் என்று இன்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த டிஎபி உதவித் தலைவர் தெரசா கோக், "வரலாற்றில் மிகப் பொருத்தமற்ற உள்துறை அமைச்சர் ஹமிடி" என்று…

ஐஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுகிறார் குலா

குழந்தை பராமரிப்பு சம்பந்தப்பட்ட வழக்கில் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்காருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடரப்போவதாக வழக்குரைஞர் எம். குலசேகரன் கூறினார். சமயம் சம்பந்தப்பட்ட பராமரிப்பு வழக்கில் குழந்தையின் தாயாரான இந்திரா காந்தியைப் பிரதிநிதிக்கும் குலசேகரன் அந்த வழக்கு சம்பந்தமாக ஈப்போ உயர்நீதிமன்றம்…

காலிட்: கட்சித் தேர்தலில் தோற்றால் எம்பி பதவியிலிருந்து விலக வேண்டும்…

சிலாங்கூர்  மந்திரி  புசார்,  அப்துல் காலிட்  இப்ராகிம்,   பிகேஆர்  துணைத்  தலைவர்  பதவிக்கான தேர்தலில்  தோற்றுப்போனால்கூட  தாம்  பதவி விலக  வேண்டிய  அவசியமில்லை  என்று  கூறுகிறார். கோலா  சிலாங்கூர்  பிகேஆர்  தொகுதித்  தேர்தல்  தோல்வியைத் தொடர்ந்து  காலிட்  இவ்வாறு  கூறினார். அத்தேர்தல்  முடிவை  எதிர்த்து  அவர்  முறையீடு  செய்துள்ளார்.…

மாட்டுத்தலை விவகாரம்: ஜாஹிட்டைச் சாடியது கெராக்கான்

ஸ்ரீ  டெலிமா  சட்டமன்ற  உறுப்பினரின்  வீட்டில்  மாட்டுத்  தலை  வீசி  எறியப்பட்டிருந்த  சம்பவம்  குறித்த  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடியின்  கருத்து  இந்துக்களின்  மனத்தைப்  புண்படுத்தும்  கருத்து  என  கெராக்கான்  சாடியுள்ளது. ஆர்.எஸ்.என். இராயரின்  வீட்டின்  முன்புறம்  வெட்டப்பட்ட  மாட்டுத்  தலை வீசி  எறியப்பட்டிருந்தது  பற்றிக்  கருத்துரைத்த …

இராயரின் வீட்டுக்கு முன்புறம் மாட்டின் தலை

பினாங்கில்,  ஸ்ரீ  டெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என். இராயரின் வீட்டுக்கு  முன்புறத்தில்  மாட்டுத்  தலை  ஒன்று  வீசி  எறியப்பட்டிருந்தது. காலை  7மணிக்கு  மகளைப்  பள்ளிக்கு  அனுப்ப  வீட்டுக்கு  வெளியில்  வந்த  அவரின்  மனைவி  வாசலுக்குமுன்  வெட்டப்பட்ட  மாட்டின்  தலை  கிடப்பதைக்  கண்டு  அதிர்ச்சி  அடைந்தார். “என்  மனைவி  என்னிடம் …

வழக்குரைஞர் மன்றம்: பெற்றோர் ஒப்புதல் தேவை என்பதை அரசமைப்பு தெளிவாகச்…

உரிய  வயதுக்கு  வராத  பிள்ளைகளின்  சமயத்தை  முடிவுசெய்வதில்  பெற்றோர்  இருவரின்  இணக்கமும்  தேவை  என்பதில்  அரசமைப்புத்  தெளிவாக  உள்ளது  என்கிறார்  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  கிறிஸ்டபர்  லியோங்.  அதை நம்பாதவர்கள்  ஒன்று  புரியாதவர்களாக  இருத்தல்  வேண்டும்  அல்லது  “புத்தி மழுங்கியவர்களாக”  இருத்தல்  வேண்டும்  என்றாரவர். “கூட்டரசு  அரசமைப்பின்  பகுதி …

ஏஜி-இன் முயற்சிகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை

வெவ்வேறு  இனத்தவர்  சம்பந்தப்பட்ட  குழந்தைப்  பராமரிப்பு  விவகாரத்தில் தலையிட்டு  ஒரு  தீர்வுகாண   சட்டத்துறைத் தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்ல்  உத்தேசித்தாலும்கூட, அரசியல்  தலைமைக்குச்  சட்டங்களில்  திருத்தம்  செய்யும்  துணிச்சல் இல்லாதவரை  அவ்விவகாரத்துக்குத்  தீர்வுகாண   இயலாது  என்கிறார்  ஒரு  வழக்குரைஞர். கூட்டரசு  அரசமைப்பிலும்  கூட்டரசு, மாநிலச்  சட்டங்களிலும் மைனர்கள் ஒருதலைப்பட்சமாக  …

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, பாருங்க………

சிலாங்கூரின்  தண்ணீர்  நெருக்கடிக்கு அம்மாநில  பக்காத்தான்  ரக்யாட்  அரசின்  திறமைக்குறைவுதான்  காரணம்  என்று  டிஏபி  எம்பி  டோனி  புவா  குறிப்பிட்டது  குறித்து  நகர்ப்புற  நல்வாழ்வு,  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  டிவிட்டரில் கருத்துத்  தெரிவித்திருந்தார். அவர், சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமைத்  தாக்குவார் …

ஐஜிபி, ஏஜி செயல்களால் கடுப்பானார் கெராக்கான் தலைவர்

போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரால்  சட்டத்தைச்  செயல்படுத்தும்  வேலையைச்  செய்ய  முடியவில்லை  என்றால்  அவருக்கு  “வெளியேறும்  வாசலை”க்  காண்பிக்க  வேண்டும்  என  கெராக்கானின்  சட்ட, மனித  உரிமை  விவகாரப்  பிரிவுத்  தலைவர்  பல்ஜிட்  சிங்  கூறினார். “காலிட்  பதவி  விலக  வேண்டும். அவரால்  கடமையைச்  செய்ய…

புவா: நீர் விநியோகத் தடை சிலாங்கூரின் திறமைக்குறைவைக் காட்டுகிறது

மிக  அண்மையில் சிலாங்கூரில்  நீரளிப்புத்  தடைப்பட்டது  மன்னிக்க  முடியாதது  என்றும்  அது  மாநில  அரசின்  திறமைக்குறைவால்  ஏற்பட்ட  தவறு  என்றும்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  கூறுகிறார். வறட்சிக்  காலம்  பற்றி  நெடுங்காலத்துக்கு  முன்பே  முன்னறிவிப்பு  செய்யப்பட்டுள்ள  வேளையில்,  “நீரின்  அளவு  குறைவதற்கு  எதிராக தேவையான …

இன்னொரு மே 13-ஐ ஏற்படுத்தி விடாதீர்- சுல் எச்சரிக்கை

முன்னாள்  பெர்காசா  தலைவர்  சுல்கிப்ளி  நூர்டின்,   முஸ்லிம்களின்  பொறுமையைச்  சோதிக்க  வேண்டாம்  எனக்  கிறிஸ்துவ  தீவிரவாதிகளுக்குக்  கடும்  எச்சரிக்கை  விடுத்துள்ளார். “மே 13  2.0?”  என்ற  தலைப்பில்  வலைப்பதிவிட்டிருக்கும்  அவர்,  முஸ்லிம்களுக்கு  பொறுமையும்  சகிப்புத்தன்மையும்   கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது  என்றும்  ஆனால்,  நாகரிகமானவர்களிடம், பரஸ்பரம்  மரியாதை  பாராட்டுவோரிடம்  மட்டுமே  அவர்கள்  அவற்றைக் …

‘கைதான சூலுக்களில் மலேசிய போலீஸ்காரரும் இருப்பது ஆபத்தின் அறிகுறி’

சூலு  பயங்கரவாதி  என்ற  சந்தேகத்தின்பேரில்  மலேசிய  போலீஸ்காரர்  ஒருவர்  கைது செய்யப்பட்டிருப்பது  சட்டவிரோத  குடியேறிகள்  பாதுகாப்புப்  படைகளிலும்  ஊடுருவி  இருப்பதைக் காட்டுவதாக  தம்பருலி  சட்டமன்ற  உறுப்பினர்  வில்ப்ரெட்  பும்புரிங் கூறியுள்ளார். கைதானவரின்  பின்னணியை  போலீசார்  தெரிவிக்க  வேண்டும்  என்றவர்  கேட்டுக்கொண்டார். புதன்கிழமை  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட் …

ஏஜியின் நோக்கம்தான் என்ன?, கேட்கிறார் குலா

  சமயங்கள் சம்பந்தப்பட்ட இரு பராமரிப்பு வழக்குகளில் குறுக்கீடு செய்ய தீர்மானித்துள்ள சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயிலின் நோக்கம் குறித்து இந்திரா காந்தியின் வழக்குரைஞர் கேள்வி எழுப்பியுள்ளார். சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்கள் அளித்துள்ள பராமரிப்பு உத்தரவுகளை ரத்து செய்வதற்காகவும், இந்த விவாகரத்தை துரிதப்படுத்தும் பொருட்டு பெடரல்…

திடீர் திருப்பம்: குழந்தை பராமரிப்பு உத்தரவை தள்ளிவைக்க முனைகிறார் ஏஜி

  பெரும் இழுபறியில் இருந்து வரும் சமயங்களுக்கிடையிலான பராமரிப்பு விவகாரங்களில் சட்டத்துறை தலைவர் (எஜி) தலையிட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள பராமரிப்பு உத்தரவுகளை தள்ளிவைக்கும் நடவடிக்கையில் இறங்கவிருக்கிறார். இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் தயக்கும் காட்டும் போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பாக்காரை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்கும் வகைசெய்யக்கூடியதாகவும்…

எல் நின்யோ காலத்தில் பினாங்கில் தண்ணீர் தடையின்றி கிடைக்கும்

உலகம்  எல் நின்யோவால்  பாதிக்கப்படும்போது-  மலேசியாவை  அது  ஜூன்  பிற்பகுதி  தொடங்கி  ஜூலை  முற்பகுதிவரை  தாக்கும்  என  எதிர்பார்க்கப்படுகிறது-  பினாங்கு  மக்கள்  குடிநீர்  தடையின்றி  கிடைக்கும்  என நம்பி  இருக்கலாம். பினாங்கில்  தண்ணீர்  பங்கீடு  செய்ய  வேண்டிய  அவசியம்  இருக்காது  என்றே  முதலமைச்சர்  லிம்  குவான் எங்  நினைக்கிறார்.…

சிலாங்கூரின் நீர் பிரச்னைகளுக்கு ‘காலிட்டின் கருமித்தனமே’ காரணம்

சிலாங்கூரின் நீர்  பிர்சனைகளைத் தீர்க்க  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  பணம்  செலவிடத்   தயாராக இல்லை  என்றும்  அதன்  விளைவாகவே   அண்மையில்  சிலாங்கூரில்  நீர்  விநியோகம்  தடைப்பட்டது  எனவும்  முன்னாள்  ஆட்சிக்குழு  உறுப்பினர்  ரோனி  லியு  குற்றம்  சாட்டியுள்ளார். முந்தைய  ஆட்சிக்குழு  சிலாங்கூர்  நீர்  பிரச்னைகளைத்  தீர்க்க …

ஐஎஸ்ஐஎல் பற்றி பிரதமர் குறிப்பிட்டது தவறாக அர்த்தம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது

நஜிப்  அப்துல்  ரசாக்,  ஈராக்கில் இஸ்லாமிய  அரசு  பற்றியும்  லெவாண்ட்  பற்றியும்  பேசியது  தப்பாக  அர்த்தம்  செய்துகொள்ளப்பட்டுள்ளது  எனப்  பிரதமர் அலுவலகம்  இன்று  ஓர்  அறிக்கை  வெளியிட்டுள்ளது. “ஐஎஸ்ஐஎல்  பற்றி  மேலோட்டமாகக்  குறிப்பிடப்பட்டது. ஆனால், பிரதமர்  ஐஎஸ்ஐஎல்-லுக்கு  எந்த  வகையிலும்  ஆதரவு  தெரிவிக்கவில்லை  என்பதை  முக்கியமாக  கவனிக்க  வேண்டும். …

பிகேஆர் தொகுதித் தேர்தலில் எம்பி தோல்வி ‘மைக்’ வெற்றி

கோலா  சிலாங்கூர்  பிகேஆர்  தொகுதித்  தேர்தலில்,  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  அதிர்ச்சியூட்டும்  வகையில்  முன்னாள்  காப்பார்  எம்பி, எஸ்.  மாணிக்கவாசகத்திடம்  தோல்வி  கண்டிருக்கிறார். காலிட்டுக்கு  515 வாக்குகளே  கிடைத்ததாகவும்  மாணிக்கவாசகம்  701  வாக்குகளைப்  பெற்றார்  எனவும்  பிகேஆரின்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலியின்  உதவியாளர் …

ஐஜிபி சட்டத்தை மதிக்கமாட்டாரா? குலா ஆத்திரம்

குழந்தை பராமரிப்பு  வழக்கில்,  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீசின்  அண்மைய  அறிவிப்பைக் கேட்டு  ஆத்திரமடைந்த  வழக்குரைஞர்  எம். குலசேகரன்,  காலிட்  அபு பக்கார்  சட்டத்துக்கும்  மேலானவரா  என்று  கேள்வி  எழுப்பினார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியும்  போலீஸ்  தலைவரைக்  கண்டு  அஞ்சுவதுபோல் …