இந்திய கடல்பகுதியில் தேடும்பணியை மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி மறுப்பு

அந்தமான் -நிகோபார்  தீவுகளுக்கு  அருகில்  காணாமல்போன எம்ஏஎஸ்  விமானத்தைத்  தேட  தன்  கப்பல்களுக்கு  அனுமதி  வழங்க  வேண்டும்  என்ற  சீனாவின்  கோரிக்கையை  இந்தியா  ஏற்கவில்லை. நான்கு  போர்க்கப்பல்கள்  இந்திய  கடல்பகுதிக்குள்  செல்ல  அனுமதிக்க  வேண்டும்  என்று  சீனா  கேட்டுக்கொண்டதாகவும்  இந்தியா  அதற்கு “நயமாக   மறுப்புத்  தெரிவித்துவிட்டதாகவும்”  இந்திய  அதிகாரிகள்…

மசீச: ஆவி வாக்காளர்களை அடையாளம் காட்டினால் ரிம1,000 இனாம்

காஜாங்கில்  ஆவி  வாக்காளர்கள்  குவிந்திருப்பதாக  ஒரு  வதந்தி. உடனே,  மசீச  ஆவி  வாக்காளர்களைப்  பிடிக்கும் இயக்கம்  ஒன்றைத்  தொடங்கியுள்ளது. காஜாங்கில்  ஆவி   வாக்காளர்களை  அடையாளம்  காட்டுவோருக்கு  ரிம1,000  வெகுமதி  வழங்கப்படும்  என அது  அறிவித்துள்ளது. மசீச-வுக்கு  ஆவி  வாக்காளர்களை  அறவே  பிடிக்காது  என்றும்  அதற்காகத்தான்  இந்தப்  பரிசுத்  தொகை …

பள்ளிவாசல்களில் டிஏபி படங்கள்

காஜாங்கில்  வாக்களிப்புக்கு  48  மணி  நேரத்துக்கும்  குறைவான  நேரமே  இருக்கும்  வேளையில்,  இன்று  காலை  பல   தொழுகை  இல்லங்களிலும்  பள்ளிவாசல்களிலும்  டிஏபி   ஸ்டிக்கர்கள்(ஒட்டும் படங்கள்) ஒட்டப்பட்டிருந்தன. நான்கு  பள்ளிவாசல்களிலும்  தொழுகை  இல்லங்களிலும்   சுங்கை  கந்தான்,  செளஜானா இம்பியான்,  காஜாங்  பாரு  ஆகிய   இடங்களில்  உள்ள கொடைவள்ளல்  ஊஜாங்  பாகோங்கின் …

காஜாங் ஸ்டேடியத்தில் ரிபோர்மாசி 2.0: அன்வார் தொடக்கி வைக்கிறார்

பிகேஆர்  நடப்பில்  தலைவர்,  அன்வார்  இப்ராகிம்  இன்று  பிற்பகல்  3 மணிக்கு  புத்ரா  ஜெயா, மரியோட்  தங்குவிடுதியில்  நடைபெறவிருந்த  செய்தியாளர்  கூட்டத்தைத்  தள்ளி வைத்துள்ளார்.   அதற்குப்  பதிலாக  அவர்,  இன்றிரவு  9  மணிக்கு  காஜாங்  விளையாட்டரங்கில் ரிபோர்மாசி  2.0-ஐ  தொடக்கி  வைத்து  அதில்  உரையாற்றுவார்.

விமானம் புறப்படுவதற்குமுன் விமானி தொலைபேசியில் பேசினார்

மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  விமானம்  புறப்படுவதற்குமுன்  விமானி  யாரிடமோ  தொலைபேசியில்  பேசியிருக்கிறார்  என்று  ஒரு  தகவல்  கூறுகிறது.. கேப்டன்  ஸஹாரி  அஹ்மட்  ஷா  யாரிடம் பேசினார்  என்பதைக்  கண்டறியும்  முயற்சியில்  ஆய்வாளர்கள்  இப்போது  ஈடுபட்டிருக்கிறார்கள்  என   பிரிட்டனின்  த  சன்  நாளேடு  கூறியுள்ளது. மார்ச் 8,  பின்னிரவு …

பெர்காசாவுக்கு நிதி உதவி அளிக்கும் நம்பிக்கை மன்னன் நஜிப்பின் துரோகச்…

-ஜீவி காத்தையா, மார்ச் 20, 2014 பெர்காசா ஒரு மலாய் தீவிரவாத, அரசுக்கு அனுகூலமான ஓர் அரசு சார்பற்ற அமைப்பு. அதற்கு முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், முன்னார் ஐஜிபி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி போன்றோரின் ஆதரவும் அரவணைப்பும் உண்டு. அம்மோவின் முழு ஆதரவும் உண்டு. அம்னோ…

பெர்காசாவுக்கு ‘ஒரு சிறு உதவித்தொகை’ கொடுக்கப்பட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டது

பெர்காசாவுக்கு  நிதிஉதவி  செய்ததை ஒப்புக்கொண்ட  கூட்டரசு  அரசாங்கம், அந்த  வலச்சாரி  என்ஜிஓ-வுக்கு  ஆண்டுதோறும்  நிதி  ஒதுக்கீடு  செய்யப்படுவதில்லை  என்பதையும்  தெளிவுபடுத்தியது. பிகேஆரின்  பாயான் பாரு  எம்பி  சிம் ட்சே  ட்சின்னுக்கு  வழங்கிய  எழுத்து  வடிவிலான  பதிலில்  இதனைத்  தெரிவித்த  பிரதமர்துறை  அமைச்சர் ஷஹிடான்  காசிம்,  ஒற்றுமை  மீதான  கருத்தரங்கம் …

குலசேகரன்: ஜுனாய்டி, மன்னிப்பு கேள், இல்லையேல் நடவடிக்கை

  வான் ஜுனாய்டி வான் ஜாப்பார் என்ற ஒரு கீழ்த்தரனமான துணை உள்துறை அமைச்சர் சட்டரீதியான பாலியல் வன்முறை குறித்து போலீஸ் புகார் செய்யப்படுவது பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ஈப்போ பாரத் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் என்று கேட்டுக்கொண்டார். அந்த வான்…

சிதைந்த பகுதிகள் உலகின் மிக மோசமான கடல்பகுதியில் காணப்பட்டன

ஆஸ்திரேலிய செயற்கைக்கோள்  படங்களில்  காணப்படுபவை  காணாமல்போன  எம்எச்370-இன்  உடைந்த  பகுதிகளாக  இருக்கலாம்  என்று  கருதப்படுகின்ற  வேளையில்  அப்பொருள்களைத்  தேடி  எடுத்து  உறுதிப்படுத்திக்கொள்வது  இலேசுபட்ட  காரியமாக  இருக்காது  எனத்  தெரிகிறது. ஆஸ்திரேலிய  கடலியல்  ஆய்வாளர்  ஒருவர்,  அந்தச்  சிதைந்த  பகுதிகள்  மிதப்பது  உலகின்  மிக  மோசமான கடல்பகுதியாகும்  என்கிறார். அப்பகுதியில், …

பிகேஆர்: காஜாங் இடைத் தேர்தல் மத்திய அரசாங்கம் மீதான ஒரு…

பேராக்கிலிருந்தும்  பினாங்கிலிருந்தும்  காஜாங்  வந்துள்ள  பிகேஆர்  கட்சியினர், 'Jom Balik Mengundi' (வீடு  திரும்பி  வாக்களிப்போம்)  என்னும்  இயக்கம்  ஒன்றைத்  தொடங்கியுள்ளனர். காஜாங்குக்கு வெளியில்  வசிக்கும்  சுமார்  2,000  வாக்காளர்களைக்  குறி  வைத்துத்  தொடங்கப்பட்டுள்ள  ஒரு  இயக்கம்  அது. தங்கள்  வேட்பாளரான  பிகேஆர்  தலைவர்  வான்  அசீசா  வான் …

அமைச்சு: அன்வார் ஜப்பான் செல்ல உதவினோம்

வெளியுறவு  அமைச்சு  மேற்கொண்ட  விடாமுயற்சியின்  காரணமாகத்தான்  அன்வார்  இப்ராகிம்,  பிப்ரவரி  26ஆம்  நாள்  எந்தப்  பிரச்னையுமின்றி ஜப்பானுக்குச்  சென்று  உரையாற்றித்  திரும்பிவர  முடிந்தது  என  வெளியுறவு  துணை  அமைச்சர்  ஹம்சா  சைனுதின்  கூறினார். மக்களவையில்  ஷம்சுல்  அகின் (பிகேஆர்- புக்கிட்  கட்டில்) கேட்டிருந்த  கெள்விக்குப்  பதிலளித்த  ஹம்சா, அமைச்சு …

செய்தியாளர்கள்: பயணிகளின் உறவினர்கள் எங்களுடன் பேசக்கூடாதா?

நேற்று  நடந்த  ஒரு  நிகழ்வால்  மலேசிய  அரசாங்கம்  மீண்டும்  பன்னாட்டு  ஊடகங்களின்  குறைகூறலுக்கு  இலக்கானது. வழக்கம்போல்  அன்றாட  செய்தியாளர்  கூட்டம்  நேற்றும்  நடந்தது. அப்போது  காணாமல்போன  விமானப்  பயணிகளின்  உறவினர்கள்  செய்தியாளர்களுடன்  பேச  முனைந்தனர். அதை  மலேசிய  அதிகாரிகள்  அனுமதிக்கவில்லை. இது  ஏனென்று  வெளிநாட்டுச்  செய்தியாளர்களுக்குப்  புரியவில்லை. அதிகாரிகள் …

செயற்கைக்கோள் கண்ட பொருள்கள் எம்எச்370-இன் உடைந்த பகுதிகளா?

ஆஸ்திரேலிய  பிரதமர்  டோனி  எப்பட்,  செயற்கைக்கோள்  இரண்டு  பொருள்களைப்  படம்பிடித்திருப்பதாகவும்  அவை மார்ச்  8-இல்,  239 பேருடன்  காணாமல்போன  எம்ஏஎஸ்  விமானத்தைச்  சேர்ந்தவையாக  இருக்கலாம்  என்றும்  கூறியுள்ளார். “தேடும்  பணியில்  புதிதாக,  நம்பத்தக்க  தகவல்  வந்திருக்கிறது......இந்தியப்  பெருங்கடலின்  தெற்குப்  பகுதியிலிருந்து”, என எப்பட்  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார். விமானங்கள்  பொருள்கள் …

எம்எம்ஏ: பாலியல் வல்லுறவு பற்றி அமைச்சர் ‘அள்ளிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’

பாலியல்  வல்லுறவு என்பதை  மலாய்க்காரர்-அல்லாதார்  சகஜமானது  என்று  ஏற்றுக்கொள்வதாக  உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி  வான்  ஜாபார்  அள்ளி விட்டிருப்பதைக்  கண்டு  மலேசிய  மருத்துவச்  சங்கம்  “நம்ப  முடியாத  அளவுக்கு  அதிர்ச்சி  அடைந்திருப்பதாக”  அதன்  தலைவர்  டாக்டர்  என்.கே.எஸ். தர்மசீலன்  கூறியுள்ளார். வான்  ஜுனாய்டியின்  கூற்று  “இழிவானது,…

ஆத்திரமுற்ற சீன நாட்டவர் செய்தியாளர் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தனர்

சீன நாட்டவர்  அடங்கிய ஒரு  சிறு கும்பல்,  எம்எச்370  விமானம்  பற்றி  விளக்கமளிக்கப்படும்  அரங்குக்குள் அத்துமீறி  நுழைந்து  செய்தியாளர்களிடம்  பேச  முற்பட்டதால்   அரங்கினில்  ஒரே  கூச்சலும்  குழப்பமுமாக  இருந்தது. தங்களைக் காணாமல்போன  விமானப்  பயணிகளின்  உறவினர்கள்  என்று  கூறிக்கொண்ட  அந்த  ஒரு  டஜன்  பேரும், மலேசியாவுக்கு  அழைத்துவரப்பட்ட  தங்களுக்கு …

விமானம் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதிக்குச் சென்றிருக்கலாம்

மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  விமானம் 239  பேருடன்  காணாமல்போனதைக்  கண்டுபிடிக்கும்  பணியில்   ஈடுபட்டுள்ள  ஆய்வாளர்கள் அது  இந்தியப் பெருங்கடலின்  தென்பகுதி  நோக்கிப்  பறந்து  சென்றிருக்கலாம்  என்று  நினைப்பதாக  விசாரணைத்  தரப்புக்கு நெருக்கமான  ஒரு  வட்டாரம்  தெரிவித்தது. முன் எப்போதுமில்லாத  வகையில், 27  நாடுகள், கேஸ்பியன்  கடலிலிருந்து  லாவோஸ் …

‘சொன்னது சரியில்லைதான்; ஆனாலும், ஜுனாய்டி மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை’

உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி  துவாங்கு  ஜாப்பார் பாலியல்  வல்லுறவு  பற்றி  வெளியிட்ட  புள்ளிவிவரங்களை  மறுஆய்வு  செய்ய  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டுள்ள  மசீச,  அதற்காக  அவர்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்று வலியுறுத்தாது. பாலியல்  வல்லுறவு  பற்றிய  புகார்களில்  80 விழுக்காடு  மலாய்க்காரர்களிடமிருந்துதான்  வந்திருக்கிறது  என்றும்  மலாய்க்காரர்-…

ஹிஷாம்: பக்காத்தான் எம்பிகளுக்கு விளக்கமளிக்கவும் தயார்

எம்எச்370  காணாமல்போனது  பற்றி  அதிகாரப்பூர்வமான   விளக்கமளிப்பு  தேவை  என்று  பக்காத்தான்  ரக்யாட்  எம்பிகள்  கேட்டுக்கொண்டால்  விளக்கமளிக்க  ஆயத்தமாக  இருப்பதாய்க்  கூறுகிறார்  இடைக்கால போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன். நேற்று  பிஎன்  எம்பிகளுக்கு  விளக்கமளித்த  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  ஹிஷாம்,  பிஎன்  எம்பிகள்  அதிகாரப்பூர்வமாகக்   கேட்டுக்கொண்டார்கள்  அதனால்தான்  அவர்களுக்கு  விளக்கமளிக்கப்பட்டது …

‘புதிய எம்பி தேவையில்லை’: காஜாங் வாக்காளர் பலரின் கருத்து

காஜாங்கில் யுனிவர்சிடி  சிலாங்கூர் (யுனிசெல்)  மேற்கொண்ட  கருத்துக்கணிப்பில்  கலந்துகொண்டவர்களில்  63  விழுக்காட்டினர்  சிலாங்கூர்  மந்திரி  புசாரை  மாற்ற  வேண்டிய  அவசியமில்லை  என  நினைக்கிறார்கள். யுனிசெல்,  சிலாங்கூர்  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  ஒரு பல்கலைக்கழகம். கருத்துக்கணிப்பில்  394 வாக்காளர்கள்  கலந்துகொண்டதாக  மூத்த  விரிவுரையாளர்  முகம்மட் ஷம்ஷினோர்  அப்துல்  அசீஸ்  கூறினார். அவர்களில் …

அடுத்த ஆண்டு 15,542 உணவகங்களில் ஜிஎஸ்டி

அடுத்த  ஆண்டு  ஏப்ரல்  முதல்  நாளிலிருந்து  பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)  அமலுக்கு  வரும்போது  சுமார்  15,542 உணவகங்களில் அந்த  வரி  வசூலிக்கப்படலாம். ஆண்டுக்கு ரிம500,000  விற்பனையைக்  கொண்ட  உணவகங்கள்  இந்த  வரியை  வசூலித்தாக  வேண்டும்  என  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்   இன்று  நாடாளுமன்றத்தில்  கேள்வி  நேரத்தின்போது …

2013 – ஆம் ஆண்டுக்கான SPM, STPM தேர்வு முடிவுகள்…

2013 - ஆம் ஆண்டுக்கான STPM தேர்வு முடிவுகள் நாளையும் SPM தேர்வு முடிவுகள் நாளை மறு நாள் வியாழக்கிழமையும் வெளியிடப்படுவதாக மலேசிய தேர்வு மன்றத்தின்  பொது உறவு அதிகாரி  Khawari Idris  தெரிவித்தார். மாணவர்கள் மலேசிய தேர்வு மன்றத்தின்  அகப்பக்கமான http://www.mpm.edu.my  வாயிலாக  நண்பகல் 12 மணி  தொடக்கம், அவர்கள்  தேர்வு…

‘5 மாதங்களில் நஜிப் கவிழ்க்கப்படுவார்’என்று டிவிட் செய்த தியான் சுவாமீது…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஐந்து  மாதங்களில்  கவிழ்க்கப்படுவார்  என்று  ட்விட்டரில்  செய்தி  போட்டிருந்த பிகேஆர்  உதவித்  தலைவர்  தியான்  சுவா  தேச  நிந்தனைக் குற்றம்  புரிந்திருக்கிறாரா  என்று  போலீசார்  விசாரணை  செய்கிறார்கள். இதன்  தொடர்பில்  இன்று  அவரிடம்  கோலாலும்பூர்  போலீஸ்  தலைமையகத்தில்  வாக்குமூலம்  பதிவு  செய்யப்பட்டது. பத்து…

அன்வார்: ஆதாரமில்லாமல் விமானியைப் பழித்துரைக்காதீர்

தீர  விசாரிக்காமல்  எம்எச்370  விமானி  கேப்டன்  ஸஹாரி  அஹமட்மீது  பழி  சுமத்தக்கூடாது  என்று  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  ஊடகங்களையும்  அதிகாரிகளையும்   கேட்டுக்கொண்டிருக்கிறார். ஸஹாரி  ஒரு  “நல்ல  குடும்பஸ்தர்”  என்றாரவர். இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  பேசிய  அன்வார்,  ஸஹாரி  தம்  மைத்துனியின்  உறவினர்  என்பதை  ஒப்புக்கொண்டார். …