மலேசிய சோசியாலிஸ் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வனை விசாரிக்கத் தண்டனைச் சட்டத்தின் 353வது பிரிவைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று சுவாராம் கூறியது. மலேசியாவின் போராட்ட மரபைப் பின்பற்றும் ஒரு நடைமுறையான அமைதியான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நெருங்குவதை காவல்துறையினர் தடுத்ததே இதற்குக் காரணம் என்று அதன் நிர்வாக இயக்குநர் அசுரா…
ஒங் தி கியாட் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார்
அரசியல் வனவாசத்திலிருந்து திரும்பும் மசீச முன்னாள் தலைவர் ஒங் தி கியாட், அடுத்த மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் தலைவர் போட்டியிடுவார். இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அவர் “ஒங் தி கியாட்டான நான், தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என்பதை அறிவித்துக்கொள்கிறேன்”, என்றார். தலைவர் பதவிக்குப் போட்டியிடும்…
டிஏபி-இல் அணிகள் உண்டு ஆனால், அவற்றால் கட்சிக்குப் பாதிப்பு இல்லை
பினாங்கு டிஏபி தலைவர்கள் இருவர், அக்கட்சியில் இரண்டு அணிகள் அமைந்து டிசம்பர்- 1 தேர்தலையொட்டிய பரப்புரைகளைச் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதை ஒட்டுமொத்தமாக மறுக்கவில்லை, அதேவேளை அதைப் பெரிதுபடுத்தவுமில்லை. “இதெல்லாம் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். எந்தக் கட்சியிலும் அரசியலில் ஒத்த கருத்துக்கொண்டோர் அணிசேர்வது இயல்பான ஒன்றுதான்”, எனத் துணை…
தத்துநடை போடும் எரிஉலை எதிர்ப்பு இயக்கம்
கெப்போங்கில் எரிஉலை கட்டப்படுவதை எதிர்க்கும் KL Tak Nak Insinerator (கேடிஐ) இயக்கம், நாளை நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக செல்வதற்கு முன்னர் அவ்வியக்கத்துக்கு வலுச் சேர்க்க நேற்று ஒரு செராமாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், அக்கூட்டத்திற்கு வந்திருந்தோர் எண்ணிக்கை உற்சாகம் தருவதாக இல்லை. சுமார் 200 பேர்தான் வந்திருந்தனர். …
பிகேஆர் தேர்தலில் ஊழல் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது: வான் அசிசா திட்டவட்டம்
அடுத்த ஆண்டு பிகேஆர் தேர்தல்களில் ஊழலுக்கு இடமில்லை என்றும் ஒழுங்குமீறி நடந்துகொள்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சித் தலைவர் வான் அசிசான் வான் இஸ்மாயில் எச்சரித்துள்ளார். “கட்சிக் கொள்கைகளை மீறுவோரும் ஊழல் செய்வோரும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழப்பார்கள்”. இன்று ஷா ஆலமில், பிகேஆர் சிறப்புக் கூட்டத்தில்…
ஹுசாம், சலாஹுடின் துவான் இப்ராகிம் ஆகியோர் பாஸ் உதவித் தலைவர்கள்
பாஸ் கட்சித் தேர்தலில், நடப்பு உதவித் தலைவர்களில் ஹுசாம் மூசா, சலாஹுடின் ஆயுப் ஆகிய இருவரும் தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொண்டனர். கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் இப்ராகிம் துவான் மான் மூன்றாவது உதவித் தலைவராக வெற்றி பெற்றார். உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மற்றொரு நடப்பு உதவித்…
பெர்சே அனுபவங்கள் பற்றி அம்பிகா உரையாற்றுவார்
அடுத்த புதன்கிழமை, ஒரு விருந்து நிகழ்வில் பெர்சே-இன் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் உரையாற்றவுள்ளார். ‘பெர்சே-இல் கற்றுக்கொண்டது’ என்ற தலைப்பில் அம்பிகா உரையாற்றுவார். தேர்தல் சீரமைப்புக்காக போராடும் இயக்கான பெர்சேக்கு மூன்றாண்டுக் காலம் தலைமைதாங்கிய அனுபவத்தை அவர் அதில் எடுத்துரைப்பார். மலேசியாகினியின் புதிய கட்டிடமான @KINI க்கு நிதி…
மலேசியாவுக்கு வந்து சாட்சியமளிப்பதிலிருந்து போர்ந்திப் தடுக்கப்பட்டுள்ளார்
தியோ பெங் ஹோக் குடும்பத்தினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் இதர 13 பேருக்கு எதிராகத் தொடர்ந்துள்ள வழக்கில் சாட்சியம் அளிக்கவிருந்த தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் போர்ந்திப் ரோஜானாசுனந்தி மலேசியா வருவதிலிருந்து தடுக்கப்பட்டிருப்பதற்குப் பின்னால் "அரசியில் குறுக்கீடு" இருப்பதாகக் கூறப்படுகிறது. வாதியின் வழக்கு கிட்டத்தட்ட முடிவுறும்…
இந்தியர்களின் குறைதீர்க்க ‘பாட்டி வைத்தியமா’ சொல்கிறீர்? ஷஹிடான்மீது ஜஸ்பால் பாய்ச்சல்
இந்திய சமூகத்தின் குறைதீர்க்க பாட்டி வைத்தியம் சொல்லும் வேலையெல்லாம் வேண்டாம் என மஇகா தலைவர் ஒருவர் ஷஹிடான் காசிமை வன்மையாகக் கண்டித்தார். இந்தியர்கள் அரசாங்கக் கொள்கையில் குறைகாணாமல் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும் என்று ஷஹிடான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி இருந்ததன் தொடர்பில் செனட்டர் ஜஸ்பால் சிங் தம்…
கல்வியில் கருத்துவேறுபாடுகளைக் களைய வேண்டும், இல்லையேல் சீனர்களைக் கேலி செய்வார்கள்
சீனமொழிக் கல்வி விவகாரத்தில் வெவ்வேறு தரப்பினர் கொண்டுள்ள வேறுபட்ட கருத்துகளுக்குத் தீர்வுகாணாவிட்டால் சீனர் சமூகமே “கேலிக்குரியதாக” மாறிவிடும் என கெராக்கான் எச்சரித்துள்ளது. கல்வி விவகாரங்களில் பல்வேறு அமைப்புகள் கொண்டுள்ள மாறுபட்ட கருத்துகள் சீனர் சமூகத்தைப் “பிளவுபடுத்தி” இருப்பதாக கெராக்கான் மத்திய செயல்குழுத் தலைவர் டாக்டர் டொமினிக் லாவ் கூறினார்.…
டிஏபி: கார் வயது கொள்கையில் அரசாங்கம் பல்டி அடித்தது
கார்களுக்குக் காலவரம்பு கட்டும் எண்ணம் அரசாங்கத்துக்கு இருப்பதாகக் கூறப்படுவதைப் போக்குவரத்து அமைச்சு மறுத்திருப்பது, ஏற்கனவே இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் அறிவித்திருந்த கொள்கையிலிருந்து அது பின்வாங்குவதைக் காண்பிக்கிறது. சி பூத்தே டிஏபி எம்பி தெரேசா கொக் இவ்வாறு கூறினார். அரசாங்கம் அப்படி ஒரு கொள்கையைக் கொண்டுவர என்றுமே…
ரிம9.65 பில்லியன்: நீர் நிறுவனங்களுக்கு சிலாங்கூர் கொடுக்க முன்வந்துள்ள இறுதித்…
சிலாங்கூர் அரசு, அம்மாநிலத்தில் நீர் சுத்திகரிப்பு, நீர் விநியோகம் ஆகியவற்றைச் செய்துவரும் நான்கு நிறுவனங்களின் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள ரிம9.65 பில்லியன் கொடுக்க தயாராகவுள்ளது. இதுதான் கடைசி விலை என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார். இதை ஏற்பதா, இல்லையா என்பதை முடிவு செய்ய அந்நான்கு நிறுவனங்களுக்கும்-…
ஹாடி: பாஸ், பக்காத்தான் பங்காளிக் கட்சியாக தொடர்ந்து இருக்கும்
பாஸ் கட்சி பக்காத்தான் ரக்யாட்டில் பங்காளிக் கட்சியாக இருந்து சுறுசுறுப்பாக பங்காற்றி வரும் என அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் உறுதி கூறினார். “அந்தக் கூட்டணியில் மற்றவர்களுக்கு நாங்கள் சுமையாக இருக்க மாட்டோம்”, என்றாரவர். “எங்கள் பங்காளிக் கட்சிகளும் அப்படித்தான். பக்காத்தானில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று…
தமிழ்ப்பள்ளிகள் நிலைக்குமா? இன்று கருத்தரங்கு
மலேசிய கல்வி அமைச்சர் வெளியிட்ட மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013 – 2025 நடப்பு ஆண்டிலிருந்து அமலுக்கு வருகிறது. இப்பெரும் கல்வித் திட்டத்தின் வழி மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி வழியிலான கற்றல் கற்பித்தலுக்கும் தேவைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தாய்மொழிப்பள்ளிகளான சீன மற்றும்…
மற்றவர்கள் எழுத்தைத் திருடினேனா? மறுக்கிறார் பேராசிரியர் டீ
யுனிவர்சிடி பெர்தஹானான் நேசனல் மலேசியா (யுஎன்பிஎம்) பேராசிரியர் ரித்வான் டீ அப்துல்லா, தாம் கல்விப் பணிகளுக்கு மற்றவர்களின் எழுத்துகளைத் திருடியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். அவ்வாறு கூறுபவர்கள் தம் “பெயரைக் கெடுக்கும் எண்ணம் கொண்டவர்கள்” என்றவர் சாடினார். உத்துசான் மலேசியாவின் பத்தி எழுத்தாளராகவும் உள்ள ரித்வான், தம் எழுத்தைப் பிடிக்காதவர்கள்தான்…
இந்தியர்கள் தங்களுக்குள் உதவிக்கொள்ள வேண்டும், அரசைக் குறைசொல்லக்கூடாது’- அமைச்சர் அறிவுரை
இந்தியர்கள் அரசாங்கக் கொள்கைகளைக் குறை சொல்லிக்கொண்டிருக்காமல் அவர்களில் உயர்நிலையில் இருப்பவர்கள் வசதிகுறைந்தவர்களுக்கு உதவிட வேண்டும் என ஷாஹிடான் காசிம் கூறுகிறார். “கல்விச் சாதனையாளர்கள் என்று பார்த்தால்கூட இந்தியர்களின் விகிதாசாரம் அதிகம்தான். என்ன, உயர்நிலையில் இருப்பவர்களுக்கும் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டவர்களுக்குமிடையிலான இடைவெளி பெரிதாக இருக்கிறது. “எனவே, உயர்நிலையில் இருப்பவர்கள் கல்வியைப்…
தெங்கு அட்னான்: சொத்துவரி உயர்வு என் மனைவிக்குக்கூடத்தான் பிடிக்கவில்லை
கோலாலும்பூரில் சொத்து வரி உயர்வு மறுஆய்வு செய்யப்படும் எனக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவித்துள்ளார். சொத்து வரி மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுவது கோலாலும்பூர் மக்களில் பலருக்குப் பிடிக்கவில்லை. தம் மனைவிக்கும்கூட அது பிடிக்கவில்லை என தெங்கு அட்னான் கூறினார். இன்று, கோலாலும்பூர்…
அரசு வழக்குரைஞர் குழுவிலிருந்து ஷாபியை நீக்கும் அன்வாரின் முயற்சி தோல்வி
அன்வார் இப்ராகிம், தம் இரண்டாவது குதப் புணர்ச்சி வழக்கின் மேல்முறையீட்டில் அரசுதரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைமைதாங்குவதினின்றும் அம்னோ தொடர்புடைய வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவை நீக்க வேண்டும் என்று செய்துகொண்டிருந்த மனுவைக் கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டிவிட்டரில் இதைத் தெரிவித்த பத்து தொகுதி எம்பி தியான் சுவா,…
ரித்வான் டீ மீது பல புகார்கள் கூறப்பட்டாலும் அவர் பேராசிரியராக…
உத்துசான் மலேசியா பத்தி எழுத்தாளரான யுனிவர்சிடி பெர்தஹானான் நேசனல் மலேசியா (யுஎன்பிஎம்) விரிவுரையாளர் ரித்வான் டீ (இடம்), சாதாரண விரிவுரையாளர் என்ற நிலையிலிருந்து பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். இதனை அவரின் முன்னாள் சகாவும் பினாங்கின் டிஏபி செனட்டருமான அரிபின் ஒமார், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். ரித்வான்…
கார்களுக்குக் கால-வரம்பு கட்டும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை
அரசாங்கம் கார்களுக்குக் கால-வரம்பு கட்டும் கொள்கையைக் கொண்டுவர திட்டமிடுவதாகக் கூறப்படுவதை மறுத்த போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அசீஸ் கப்ராவி, அது “மாற்றரசுக் கட்சிகள் கட்டிவிட்ட கதை”, என்றார். “அரசாங்கத்திடம் அப்படி ஒரு திட்டம் இல்லை”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார். அங்கிருந்த சாலைப்…
ரோஸ்மாவின் காட்டார் பயணம் நாட்டை பிரதிநித்தல்ல
பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா கடந்த நவம்பர் 10 இல் காட்டாருக்கு தனிப்பட்ட ஜெட் விமானத்தில் மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானது. அவர் நாட்டை பிரதிநிக்கவில்லை என்று அவருடன் காட்டாருக்கு சென்ற அம்னோ பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸைனால் ஓத்மான் ஒப்புக்கொண்டார். னால், அவர் ரோஸ்மாவுடன் அதே…
அஸ்ட்ரோவுக்கு எதிராக ஜிங்கா13 போர்க்கொடி
தொலைக்காட்சிச் சேவை வழங்கும் அஸ்ட்ரோவின் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருவதைப் பற்றி அது கவலைப்படவில்லை என்பதைக் காண்பிக்கிறது என அரசுசாரா அமைப்பான ஜிங்கா 13 கூறியது. பெட்ரோல், சீனி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள வேளையில் அஸ்ட்ரோ கட்டண உயர்வும் வந்துள்ளது…
அரசியல் ஈடுபாட்டுக்காக அரசு ஊழியர் எவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதில்லை
அரசியலில் ஈடுபட்ட காரணதுக்காக அரசு ஊழியர் எவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதில்லை என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2010-க்கும் 2013-க்குமிடையில் அனுமதி பெறாமல் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டிய ஒன்பதின்பர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் இவ்வாறு கூறினார். அரசு ஊழியர் நடத்தைவிதிகளின்படி அரசியலில்…
என்எப்சி மீதான அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும்
முந்தைய நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வால் தயாரிக்கப்பட்ட நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) மீதான அறிக்கையை இப்போதைய பொதுக் கணக்குக் குழு ஏற்றுக்கொண்டிருப்பதை அடுத்து அவ்வறிக்கை அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இன்று பிஏசி கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட் (வலம்) இதைத் தெரிவித்தார். அவ்வறிக்கை மேலும்…