ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
எம்பி: ‘ஒற்றுமையின்மை அமைச்சரா’ ஜோசப் குருப்?
காஜாங்கில் சீன வாக்காளர்கள் “அவர்களின் இனத்தவருக்கே வாக்களிக்க வேண்டும்” என்று கூறிய பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப்பை எதிரணி எம்பி தெரேசா கொக் சாடினார். அரசாங்க பாரங்களில் “இனம்” என்பதைக் குறிப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தை எடுத்துவிட வேண்டும் என்று கடந்த மாதம் வலியுறுத்திய குருப்தான் இடைத் தேர்தலில் “இனவாதம் …
ஒபாமா மலேசியா வருவது உறுதி: அமெரிக்க அதிகாரி
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டபடி மலேசியாவுக்கு வருவார். ஆனால், அவரது வருகைக்கான தேதியும் பயண நிரலும்தான் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என கோலாலும்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தி பொறுப்பாளர் ஹார்வி செர்னோவிட்ஸ் இன்று கூறினார். “கடந்த மாதம் வெள்ளை மாளிகை அறிவித்தபடி ஏப்ரல் மாதக் கடைசியில் …
எம்எச் விளக்கக் கூட்டம்: புறக்கணிக்கப்பட்டதால் பக்காத்தான் எம்பிகள் ஆத்திரம்
நாளை கோலாலும்பூரில் தங்குவிடுதி ஒன்றில் போக்குவரத்து அமைச்சு நடத்தும் எம்எச்370 விளக்கக் கூட்டத்துக்குத் தங்களுக்கு அழைப்பு இல்லை என்பதால் கொதித்துப் போயுள்ளனர் பக்காத்தான் எம்பிகள். அமைச்சின் போக்கு நாடாளுமன்றத்தையே இழிவுபடுத்துவதாக பவுசியா சாலே(பிகேஆர்- குவாந்தான்) கூறினார். இந்த விளக்கக்கூட்டத்தை மக்களவையிலேயே நடத்தி இருக்கலாம் என்றவர்கள் சொன்னார்கள். ஆனால், நோ …
மலேசியா எம்எச்370-ஐ இடைமறிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது
ஒரு நாட்டுக்குள் அடையாளம் தெரியாத ஒரு விமானம் பறந்து சென்றால் போர் விமானங்கள் உடனே புறப்பட்டுச் சென்று இடைமறிக்கும். எல்லா நாடுகளிலும் இதுதான் நடக்கும். ஆனால், மலேசியாவில் அது நடக்கவில்லை. எம்எச்370 தாய்லாந்து குடாகடலுக்கு உயரே அப்படியே திரும்பி மேற்கு நோக்கிப் பறந்தது. ஆனால், மலேசிய ஆயுதப்படை அதைக் …
அவை திருடப்பட்ட கடப்பிதழ்கள்; குடிநுழைவுத் துறை சொன்னதை ஜாஹிட்டும் ஒப்புவிக்கிறார்
எம்எச்370 விமானத்தில் பயணித்த இரு ஈரானியர்கள், ஈரானிய கடப்பிதழ்களை வைத்து மலேசியாவுக்குள் வந்தார்கள் என்று இண்டர்போல் கூறியதை மறுப்பதுபோல் அவர்கள் திருடுபோன கடப்பிதழ்களைக் கொண்டுதான் மலேசியா வந்தனர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். அவ்விருவரும் காத்தாரிலிருந்து தாய்லாந்தின் புக்கெட்வரை சொந்த நாட்டுக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி …
மழை, வறட்சியின் முடிவுக்கு அறிகுறி அல்ல
கிள்ளான் பள்ளத்தாக்கில் சனிக்கிழமை பகலிலும் நேற்றுக் காலையிலும் பெய்த மழை செயற்கையாக பெய்விக்கப்பட்ட மழை அல்ல. வடகிழக்கு பருவகாற்று முடிவுக்கு வருவதைக் குறிக்கும் மழை அது. “வடகிழக்கு பருவக்காற்று முடிவுக்கு வரும்போது கிழக்கிலிருந்து வீசும் காற்று மழையைக் கொண்டு வருவதுண்டு”,என மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் காற்றுமண்டல, செயற்கை மழை…
அன்வார்: பிகேஆரை எம்எச்370 உடன் தொடர்புப்படுத்துவது ஏன்?
காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தையும், விமானி பிகேஆர் உறுப்பினர் என்பதையும் தொடர்புப்படுத்தி செய்திகள் வெளிவருவது குறித்து பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார். குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் குற்றவாளி என்று முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கேட்டு விமானி கேப்டன் ஸஹாரி அஹமட் …
நாடு முழுக்க காற்றின் தரம் மேம்பட்டது
கடந்த சில நாள்களாக ஆரோக்கியத்துக்குக் கேடு செய்யும் வகையில் இருந்த காற்றின் தரம் இப்போது மேம்பட்டுள்ளது. இன்று காலை மணி ஆறுக்கு மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டின் எந்தப் பகுதியிலும் காற்றின் தரம் ‘ஆரோக்கியத்துக்குக் கேடு செய்யும்” அளவில் இல்லை என சுற்றுச்சூழல் துறை (டிஓஇ) கூறியது. டிஓஇ வெளியிட்ட …
ஜயிஸ்: ராஜா போமோ மீது விசாரணை நடத்தப்படும்
காணாமல்போன விமானத்தைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கூறிக்கொண்டிருக்கும் ‘ராஜா போமோ”மீது சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்) விசாரணை மேற்கொள்ளும். அவர் இஸ்லாமிய போதனைகளை மீறியதாகத் தெரியவந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜயிஸ் இயக்குனர் அஹமட் ஸஹாரின் முகம்மட் சாஆட் கூறினார். “பொதுமக்களிடமிருந்தும் இணைய வழியாகவும் பல புகார்களை …
எம்எச்370 காணாமல் போனதற்கு ‘உள்ளூர் விவகாரங்கள்’ காரணமாக இருக்கலாம்-பெரித்தா ஹரியான்
எம்எச்370 காணாமல்போனதற்கு எத்தனை எத்தனை காரணங்களோ சொல்லப்படுகின்றன. லாஹாட் டத்து ஊடுருவல்காரர்கள், பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள், ஷியா பிரிவினர் போன்றோர்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று பெரித்தா ஹரியான் பத்தி எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். “விமானம் காணமல்போனதற்கும் லஹாட் டத்து ஊடுருவலுக்கும் ஏன், அண்மைய நிகழ்வுகளுக்கும்கூட தொடர்பிருக்கலாம்”, என …
எம்எச்370 காணாமல்போனதற்கு அன்வார் காரணமா? மறுக்கிறது பிகேஆர்
பிரிட்டனின் நாளிதழான டெய்லி மெயில், குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால் ஆத்திரமடைந்த எம்எச்370 விமானி ஸஹாரி அஹமட் ஷா அந்த விமானத்தைக் கடத்திச் சென்றார் என்று கூறியிருப்பதை பிகேஆர் மறுத்துள்ளது. ஸஹாரி கடந்த ஆண்டு ஜனவரி 23-இல் பிகேஆரில் சேர்ந்தார் என்பது உண்மைதான் ஆனால் …
மலேசியா இண்டர்போல் உதவியைத் திரும்பத் திரும்ப நிராகரித்ததாம்
எம்எச்370 காணமல்போனது பற்றிய விசாரணையில் இண்டர்போல் பலமுறை உதவ முன்வந்தபோதும் மலேசிய போலீஸ் அதைப் புறம்தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலைநாட்டு சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் இதைத் தெரிவித்ததாக அமெரிக்காவின் ஏபிசி செய்தி நிறுவனம் கூறிற்று. “பழைய 9/11 அணுகுமுறைதான்: தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில்லை என்ற பிடிவாதம்தான் காரணம்”, என்று அந்த …
டிஎபி: அகோங்கிற்கு சவால்விடும் பெர்காசாவின் தேசிய ஒற்றுமை கூட்டணி!
மலாய் இனவாத அமைப்பான பெர்காசாவும் இதர அழுத்தமளிக்கும் இஸ்லாமிய குழுக்களும் அவர்களின் சொந்த தேசிய ஒற்றுமை கூட்டணி (National Unity Front) ஒன்றை அமைத்துள்ள நடவடிக்கை அகோங்கிற்கே சவால் விடுவதாகும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார். பேரரசரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை ஆலோசனை…
குவான் எங்கிற்கு எதிரான இந்திய என்ஜிஓக்களிண் கண்டனம்
இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் பல அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை பினாங்கு கோம்தாரில் கூடி "இந்தியர்களின் அவலநிலையை புறக்கணிப்பதற்காக" முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். கோபிங்கோ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இரு இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் பதாகைகளை…
எம்எச்370: அதிகாரிகளுக்கு “அதிகப்படியான நேரம் தேவைப்படுகிறது” என்பதால் ஊடக சந்திப்பு…
காணாமல் போன எம்எச்370 பயண விமானம் "வேண்டுமென்றே" அதன் பயணப் பாதையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த அன்றாட ஊடக விளக்கமளிப்பு சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது. முன்னதாக, மிக அண்மைய கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய தகவல்களை அளிப்பதற்காக ஓர்…
பாலிஞியான் தொகுதி பின் வேட்பாளரை முகைதின் அறிவித்தார்
சரவாக் மாநில சட்டமன்ற பாலிஞியான் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு பாரிசான் நேசனல் டாலாட் மாவட்ட முன்னாள் அதிகாரி யோசிப்நோஸ் பாலோ, 47, என்பவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளதாக துணைப் பிரதமர் முகைதின் யாசின் அறிவித்தார். வேட்பாளர் நியமன நாள் மார்ச் 17. வாக்களிப்பு மார்ச் 29 இல் நடைபெறும்.…
‘முதலை அடி கொடுப்பேன், ஜாக்கிரதை’-கைரிக்கு போமோ எச்சரிக்கை
காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்தைக் கண்டுபிடிக்க போமோ இப்ராகிம் மாட் ஸின், கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் தேங்காய்களையும் மூங்கில் கழிகளையும் வைத்துக்கொண்டு சடங்குகள் செய்வது பலருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளது. ஒரு பகுதியினர் அவரது செயல்முறைகளை வியந்து பார்க்கிறார்கள். இன்னொரு பகுதியினர் அவர் செய்வதெல்லாம் கோமாளித்தனம் என்று ஆத்திரமடைகிறார்கள். அப்படி …
‘பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர்’- பிஎன் எம்பியைச் சாடியது மசீச
தாய்மொழிக் கல்வி தொடர்பில் மற்றவர் “உணர்வுகளை மதிக்காமல்” பேசும் கிரிக் பிஎன் எம்பி ஹஸ்புல்லா ஒஸ்மானுக்கு மசீச இளைஞர் பகுதி தலைமைச் செயலாளர் லியோங் கிம் சூன் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார். ஐக்கிய தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்க வேண்டும் என்று சீனக் கல்வியாளர்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்கக்கூடாது …
வல்லினம் இலக்கிய குழுவினரின் மூன்று நூல்கள் வெளியீடு.
வல்லினம் இலக்கிய குழுவினரின் 'பறை' காலாண்டிதழ், வல்லினம் பதிப்பகத்தின் வெளியீடான கே.பாலமுருகனின் மாற்று அரசியல் கவிதைகளின் தொகுப்பு 'தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்' மற்றும் கவிஞர் ம.நவீனின் தனித்துவமான கவிதைகளின் தொகுப்பு 'வெறிநாய்களுடன் விளையாடுதல்' , எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.30க்கு கிராண்ட் பசிபிக் விடுதியில் புத்தக…
காஜாங்கில் பக்காத்தான்-எதிர்ப்பு அறிக்கைகள் குவிகின்றன
காஜாங் இடைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் பரப்புரைகள் முமுமுரமாக நடைபெற்றுவரும் வேளையில் பிஎன்ன்னுக்கு ஆதரவும் பக்காத்தானுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் துண்டறிக்கைகள் இப்போது நகர முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு அம்னோ நடவடிக்கை அறையில் ‘சிலாங்கூர் ஹரி இனி’ என்னும் துண்டறிக்கை காணப்பட்டது. நேற்றிரவு தாமான் கோத்தா…
போர்ட் கிளாங்கிலும் பந்திங்கிலும் காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியது
போர்ட் கிளாங்கில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று காலை 7மணிக்கு அங்கு காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) 352ஆக இருந்தது. பந்திங்கில் 316. பின்வரும் பகுதிகளில் காற்றின் தரம் “ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல” எனப் பதிவானது: பத்து மூடா(176), செராஸ்(147),பெட்டாலிங் ஜெயா(186), கோலா சிலாங்கூர்(154), ஷா…
‘குறைகூறினால் சட்ட நடவடிக்கை ’- எச்சரிக்கிறார் போமோ
காணாமல்போன எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்க கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் சில சடங்குகளைச் செய்த ‘போமோ’ இப்ராகிம் மாட் ஸின், தமது சடங்குமுறைகளை இஸ்லாத்துக்கு முரணானவை என்று கூறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார். தம்மை “ராஜா போமோ” என்று கூறிக்கொள்ளும் இப்ராகிம், திருக்குர்ஆன் வாசகங்களையே தாம் …
எம்எச்370-இலிருந்து மின்னியல் துடிப்புகளைச் செயற்கைக்கோள்கள் செவிமடுத்துள்ளன
மலேசிய விமான நிறுவனத்தின் விமானம் ராடார் திரையிலிருந்து மறைந்த பின்னரும் அதனிடமிருந்து மெல்லிய மின்னியல் துடிப்புகள் வெளிப்பட்டதைத் தொடர்புச் செயற்கைக்கோள்கள் செவிமடுத்துள்ளன. விசாரணைக்குழுவுக்கு அணுக்கமான வட்டாரங்கள் இதைத் தெரிவித்தன. விமானத்தின் கோளாறுகளைச் சரிசெய்யும் கட்டமைப்புமுறை முடுக்கி விடப்பட்டிருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட மின்னியல் துடிப்புகள் வெளிவரும். ஒரு மணி நேரத்துக்கு …


