காலிட்: பைபிள் விவகாரத்தில் சுல்தானின் உத்தரவைப் பின்பற்றுவோம்

  மலேசிய வழக்குரைஞர் மன்றம் பைபிள் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தானின் ஆலோசனை குறித்து அதன் கருத்தைத் தெரிவித்திருந்த போதிலும், சிலாங்கூர் அரசாங்கம் சுல்தானின் ஆலோசனையைப் பின்பற்றும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறினார். சிலாங்கூர் மாநில சட்ட ஆலோசகருக்கு…

ஹலோ ஐஜிபி, தீவிரமாக தேடி பிரசன்னா டிக்சாவை கண்டுபிடியுங்கள், குலா

  ஜபாதான் அஹாமா பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகியவற்றுக்கு விரைந்து சென்று உதவும் போலீசார் இந்திரா காந்தியின் குழந்தை பராமரிப்பு தீர்ப்பின்படி குழந்தை பிரசன்னா டிக்சாவை இன்னும் தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைக்காமல் இருக்கும் அக்குழந்தையின் மதம் மாறிய தந்தை கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் பின்…

ஒருதலைப்பட்ச மதமாற்றத்துக்குத் தீர்வுகாணும் பேச்சுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

வயதுக்கு  வராத  சிறுவர்கள்  ஒருதலைப்பட்சமாக  மதமாற்றம்  செய்யப்படும்  விவகாரத்தில்  2009-இல்  அமைச்சரவை  செய்த  முடிவை அமல்படுத்துவது  பற்றிய  பேச்சுகள்   தொடர்வதாக  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கூறினார். “அதைச்  செயல்படுத்தும் வழிமுறைகளைக்  கண்டறிய  முயன்று  வருகிறோம். அதற்கான  பேச்சுகள்  தொடர்கின்றன”, என்றாரவர். “சம்பந்தப்பட்ட  தரப்பினருடன்  சேர்ந்து  அம்முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. …

பிரதமர்: முகைதின் பதவி விலகவில்லை; அது வீண் புரளி

துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின் பதவி  விலகுகிறார்  என்பதை மறுத்துள்ள  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  “சில    தரப்புகள் அரசியல் நோக்குடன்  அப்படி   புரளி கிளப்பி  விட்டிருக்கிறார்கள்” என்றார். ஆனால், சில  நாள்களாக  சமூக  வலைத்தளங்களில்  உலவும்   அப்புரளியைக்  கிளப்பி  விட்டவர்கள்  யார்  என்பதை  அவர்  அடையாளம்  கூறவில்லை. ஏப்ரல், 2009-இலிருந்து …

எம்எச்370: தேடும்பணி பழைய இடத்துக்கே திரும்புகிறது

காணாமல்போன  மலேசிய  விமானத்தைத்  தேடும்பணி  மீண்டும்  பழைய  இடத்துக்கே  திரும்பும்  என  அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது  பெர்துக்கு  1,,800 கிலோ  மீட்டர்  மேற்கே  அதைத்  தேடும்  பணி  மேற்கொள்ளப்படும். எம்எச்370-ஐத்  தேடும்பணி  முதலில்  அங்குதான் தொடங்கியது.  பிறகுதான்  அங்கிருந்து  மேலும்  வடக்கு  நோக்கிச்  சென்றது. ஆனால்,  வல்லுனர்கள்  விமானம்  இந்தத் …

சமயச்சார்பற்ற நாடல்ல என பண்டிகார் குறிப்பிட்டது வரம்புமீறிய கருத்தாகும்

நேற்று நாடாளுமன்றத்தில்  ஒரு  தீர்மானத்தை  நிராகரித்தபோது  அவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா,  மலேசியா  சமயச்சார்பற்ற  நாடல்ல  எனக் கூறியது  “அதிகாரத்தைமீறிய”  பேச்சாகும். இவ்வாறு  குறிப்பிட்ட  கேளாங்  பாத்தா  எம்பி  லிம்  கிட்  சியாங்,  அவைத்  தலைவருக்கு  அரசமைப்பை  மீறும்  அதிகாரம்  கிடையாது  என்றார். ஒரு  பேச்சுக்காக  அப்படிக்…

கையூட்டுக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் அரசு அதிகாரி

மகளிர், குடும்ப, சமூக  மேம்பாட்டு  அமைச்சின்  உயர்  அதிகாரி  ஒருவர்,  அவர்மீது  சுமத்தப்பட்ட  ஊழல்  குற்றச்சாட்டுகளுக்கு  எதிராக  விசாரணை  கோரியுள்ளார். ஹஸ்மி  சம்சுடின் (முகத்தை  மறைத்துக்  கொண்டிருப்பவர்),  பேராக்கில்  மேற்கொள்ளப்படும்    ரிம600,000 பெறுமதியுள்ள  திட்டங்களில்  10விழுக்காடு  கையூட்டு  பெற்றதாக  கோலாலும்பூர்  செசன்ஸ்  நீதிமன்றத்தில்  குற்றம்  சாட்டப்பட்டது. அவர், கோலாலும்பூர்,…

ஜாம்: பல ஏமாற்றங்களைக் கண்டவர் முகைதின்

முகைதின்  யாசின்  துணைப் பிரதமர்  பதவியிலிருந்து  விலகுகிறார்  என்ற  வதந்தி  பலருக்கு  வியப்பைத்  தரலாம். ஆனால்,  முன்னாள்  அமைச்சர்  சைனுடின்  மைடின்  அதைக்  கேட்டு  சிறிதும்  வியப்படைவில்லை. முகைதின்  பதவிவிலகும்  எண்ணம்  கொண்டிருப்பதை  அவரின்  நெருக்கமான  நண்பர்கள் அறிந்தே  உள்ளனர்  என முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு …

சட்டமன்ற தலைவரின் ஒப்புதலின்றி அவை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்க எடுக்க…

  போலீசும் சட்டத்துறை தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் புரியும் எந்த ஒரு குற்றத்திற்காகவும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று பினாங்கு சட்டமன்ற தலைவர் லா சூ கியாங் கூறினார். சட்டமன்ற தலைவரின் ஒப்புதல் இன்றி அதிகாரத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…

முகைதின்: ‘நான் பதவி விலகவில்லை’

பதவி   விலகுவதாகக்  கூறும்  வதந்தியைத்   துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  மறுத்துள்ளார். அவர்,  பதவி  விலகி  அம்னோவை  வலுப்படுத்துவதில்  கவனம்  செலுத்துவார்  என்றும்  அவரது  இடத்துக்குத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  நியமிக்கப்படுவார்  என்றும்  சமூக  வலைத்தளத்தில்  ஒரு  வதந்தி  உலவுகிறது. அமைச்சரவை  மாற்றம்  பற்றி  செய்திகள்  வந்து …

இராயர்மீது இன்று குற்றம் சாட்டப்படாது

டிஏபி  ஸ்ரீ  டெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என். ராயர்மீதான  தேச நிந்தனை  வழக்கு  ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது. ராயர்மீது  இன்று  வழக்கு  பதிவு  செய்யப்படாது  என்று  அரசுத்தரப்பு  வழக்குரைஞர்  தமக்குத்  தகவல்  தெரிவித்ததாக  ராயரின்  வழக்குரைஞர்  கோபிந்த்  சிங்  டியோ  கூறினார். “ஏன்  என்று  தெரியவில்லை.  டிபிபி-இடமிருந்து மேற்கொண்டு  தகவலுக்காகக்…

‘என் கணவர்மீது குற்றம்சாட்டுவது மலாய் இனத்தின்மீது குற்றம்சாட்டப்படுவதற்கு ஒப்பாகும்’

நோர்  சலேஹா  முகம்மட்  சாலே, தம்  கணவரான  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா) தலைவர்  அப்துல்லா  ஸேய்க்  அப்துல்  ரஹ்மான்மீது  தேச  நிந்தனைக்  குற்றம்  சாட்டிய  அதிகாரிகளைக்  குறை  கூறினார். அவர்மீது  குற்றம்  சாட்டப்பட்டிருப்பது  மலாய்க்காரர்களையே  இழிவுபடுத்தும்  செயலாகும்  என்றவர்   குறிப்பிட்டார்.  அவர்,  இன்று  காஜாங்  செசன்ஸ்  நீதிமன்றத்தில் …

இஸ்மா தலைவர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட டிஏபி-தான் காரணம்

ஈக்காத்தான்  முஸ்லிமின்   மலேசியா(இஸ்மா),   டிஏபி  திட்டங்களைத்  தொடர்ந்து  சாடிவருவதுதான்  அதன்  தலைவர்  அப்துல்லா  ஸேய்க்  அப்துல்  ரஹ்மான்   தேச நிந்தனைக்  குற்றம்   சுமத்தப்பட்டு  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டதற்குக்  காரணமாகும்  என  நம்புகிறது. மேலும்  பலர்,  பல்வேறு  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டு  நிதிமன்றத்தில்  நிறுத்தப்படும்  சாத்தியம்  இருப்பதாக  அவ்வமைப்பின்  உதவித்  தலைவர்  முகம்மட்…

மக்களவைத் தலைவர்: மலேசியா சமயச் சார்பற்ற நாடல்ல

இஸ்லாம் நாட்டின்  அதிகாரப்பூர்வ  சமயம்  என்பதால்  மலேசியா  சமயச்  சார்பற்ற  நாடல்ல  என்கிறார்  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா. பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோமை  உரிமைகள், சலுகைகள்  குழுவின்  விசாரணைக்கு  அனுப்ப  வேண்டும்  என்று  கூறப்பட்டதை  நிராகரித்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார். “ஒரு  சமயச்  சார்பற்ற …

பைபிள் விவகாரம் நீதிமன்றம் செல்கிறது

மலேசிய  பைபிள்  கழகத்திலிருந்து  பறிமுதல்  செய்யப்பட்ட  321 பைபிள்களைத்  திருப்பிக்  கொடுப்பதா  அழித்துவிடுவதா  என்பதை  நீதிமன்றத்தின்  முடிவுக்கு  விட்டுவிட  வேண்டும்  என  சிலாங்கூர்  சுல்தான்  ஷராபுதின்  இட்ரிஸ்  ஷா  கூறியுள்ளார். அதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு  மாநில  இஸ்லாமிய துறை(ஜயிஸ்)க்கு அவர்  உத்தரவிட்டார். “நீதிமன்றம் இறுதி  முடிவு  செய்வதற்கு  ஏதுவாக,…

சுரேந்திரன், மறுபடியும் இடைநீக்கம்

பிகேஆர் உதவித்  தலைவரும் பாடாங்  செறாய்  எம்பி-யுமான  என். சுரேந்திரன்  நாடாளுமன்றத்திலிருந்து  ஆறு  மாதகாலம்  இடைநீக்கம்  செய்யப்பட்டார். சுரேந்திரனை  இடைநீக்கம்  செய்யும்  தீர்மானம்  கொண்டுவரப்பட்டபோது  துணை  அமைச்சர்  ஒருவருடன்  சர்ச்சையிட்ட  பிகேஆர்  துணைத்  தலைவரும்  கோம்பாக்  எம்பி-யுமான  அஸ்மின்  அலியும்  அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது பக்காத்தான்  ரக்யாட்  எம்பிகள் …

கேஜே: ஒருதலைபட்ச மதமாற்றம் செல்லாது-அன்றும் இன்றும் இதுதான் கொள்கை

2009-இல்   அமைச்சரவையில்  செய்யப்பட்ட  ஒருதலைப்பட்ச  மதமாற்றம்  செல்லாது  என்ற  முடிவே  இன்னமும்  அமலில்  உள்ளது  என  கைரி  ஜமாலுடின்  கூறுகிறார். “பராமரிப்பு  விவகாரங்கள்  தொடர்பில்  இதுவே அன்றும்  இன்றும்  அமைச்சரவையின்  நிலைப்பாடாகும். “திருமணம்  செய்துகொண்டபோது  பெற்றோர்களின்  சமயம்  எதுவோ  அதற்கு  நாம்  மதிப்பளிக்க  வேண்டும்”, என  இளைஞர், விளையாட்டுத்துறை …

மலேசியாகிக்கு எதிராக நஜிப் தொடுத்துள்ள வழக்கில் நீதிபதி கோமதி மாற்றப்பட்டுள்ளார்

  பிரதமர் நஜிப் மலேசியாகினிக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கை வேறொரு நீதிபதி கேட்கவிருக்கிறார். நஜிப்பின் வழக்குரைஞர் நிறுவனத்திடமிருந்து மலேசியாகினிக்கு எதிரான வழக்கு சம்பந்தமான நோட்டீஸ் ஜூன் 3 ஆம் தேதி மலேசியாகினியிடம் சார்வு செய்யப்பட்டபோது அதில் இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் கோமதி சுப்பையா முன் வழக்கு பரிசீலனைக்கு…

இஸ்மா தலைவர்மீதும் நாளை தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

நாளை, காஜாங்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்,  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  தலைவர்  அப்துல்லா  ஸேய்க்  அப்துல்  ரஹ்மான்மீது தேச நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்படும். சீன  மலேசியர்களை  “அத்துமீறி  நுழைந்தவர்கள்” என்று  குறிப்பிட்டதற்காக  அவர்மீது  இக்குற்றம்  சாட்டப்படுகிறது. போலீஸ் பிடியாணை  கிடைத்ததாகவும்  நாளை  நீதிமன்றத்துக்கு  நேரில்  செல்லப்போவதாகவும்  அப்துல்லா  கூறினார்.

‘செலாகா’ என்றுரைத்த இராயர்மீது தேசநிந்தனைக் குற்றச் சாட்டு

நாளை,  டிஏபி  ஸ்ரீ டெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்   ஆர்.எஸ்.என்.  இராயர்மீது “அம்னோ  செலாகா”  என்றுரைத்ததற்காக  தேச  நிந்தனைக்  குற்றம்  சாட்டப்படும்  என  எதிர்பார்க்கப்படுகிறது. அவரை  ஜாலான்  பட்டானியில்  உள்ள வடகிழக்கு  போலீஸ்  நிலையத்தில்  சரணடையுமாறு  போலீசார்  கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். “இன்றிரவுக்குள்  பிணை  கிடைக்க  வேண்டும். இல்லையேல், இங்குதான்  தூங்க  வேண்டும்”,…

கூலிம் விமான நிலையம்: பிஎன்னின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?

கூலிமில் அனைத்துலக  விமான  நிலையம்  கட்டும்  கெடா  அரசின்  உத்தேசம்  குறித்து  பினாங்கு  பிஎன்னின்  உண்மையான  நிலையை  அறிந்துகொள்ள  விரும்புகிறார்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங். மாநில  அம்னோ  தலைவர்  சைனல்  அபிடின்  ஒஸ்மான்  பினாங்கு  அதைப்  பற்றிக்  கவலைப்பட  வேண்டியதில்லை  என்கிறார். “ஆனால்,  மறுபுறம்  மாநில …

எம்பிகள்: ஜமில் கீரை உரிமைகள் குழுவுக்கு அனுப்ப வேண்டும்

அண்மைய  நாள்களில்  முரண்பாடாக பேசிவரும்  பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோமை  நாடாளுமன்ற  உரிமைகள், சலுகைகள்  குழுவுக்கு  விசாரணைக்கு  அனுப்ப  வேண்டும்  என  எதிரணி  எம்பிகள்  இருவர்  பரிந்துரைத்துள்ளனர். ஒஸ்கார்  லிங் (டிஏபி-  சிபு),  மலேசியா  சமயச் சார்பற்ற  நாடு  என்று  ஜமில்  கீர் கூறியதற்காக  அவரை  உரிமைகள் …

என்எஸ்இ-க்கு ரிம15 மில்லியன் மானியம் கொடுத்ததை மோஸ்டி ஒப்பியது

அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க  அமைச்சு (மோஸ்டி) என்எஸ்இ  ரிஸோர்சஸ்  சென். பெர்ஹாட்டின்  துணை  நிறுவனங்களுக்கு  ரிம15 மில்லியன் மானியம்  கொடுத்ததை  ஒப்புக்கொண்டிருக்கிறது. மோஸ்டி, என்எஸ்இ-க்குப்  பிரதமரின்  கடிதத்தை  அடிப்படையாக  வைத்து  ரிம100 மில்லியன்  மான்யம் தனியே  வழங்கி  இருப்பதாகவும்  கூறப்படுகிறது.   இவ்வாரம்  ரபிஸி  ரம்லி (பிகேஆர் -பாண்டான்)-க்கு …