ரெம்பாவ் போலீசார், இந்த சம்பவத்தில் 16 வயது அறிவுத்திறன் குறைபாடுள்ள சிறுமியும் 36 வயது ஆண் ஆசிரியரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறினர். பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை 5.15 மணிக்கு புகார் அளித்ததை அடுத்து, சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக ரெம்பாவ் போலீசார் தெரிவித்தனர். மே 5 அன்று…
பொதுநல இலாகாவால் வேண்டுமென்றே இழிவுபடுத்தப்பட்டதால் உடல் ஊனமுற்றவர் படியில் தவழ்ந்தே…
உடல் ஊனமுற்ற ஒருவர் தமது மகஜர் ஒன்றை கெடா பொதுநல இலாகாவிடம் (ஜேகேஎம்) தாக்கல் செய்வதற்காக பல படிகளை தவழ்ந்தே ஏறிச் சென்றார். அவருக்காக அவரது மன்றம் எடுத்துக் கொண்ட முயற்சியை அவ்விலாகா இயக்குனர் வேண்டுமென்றே இழிவுபடுத்தியதால், அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டார். பெர்சத்துவான் ஒகேயு செத்தியா டெயரா கூலிம்…
வீட்டுப் பணி தொழிலாளர்களுக்கு எதிரான செயல்கள் கொடூரமாகிக் கொண்டிருக்கின்றன, ஐரின்…
வீட்டுப் பணி தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாடுகளின் கொடூரம் அதிகரித்துக் கொண்டு வருவதோடு உயிருக்கு மருட்டலாகவும் இருக்கிறது என்று தெனகானித்தாவின் செயல்முறை இயக்குனர் ஐரின் பெர்னாண்டிஸ் கூறுகிறார். கடந்த ஆண்டில், 96 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாரவர். "இத்தொழிலாளர்கள் கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள். காப்பாற்றப்பட்டவர்களில்…
அன்வார்: டிஎபி கிறிஸ்துவ மதத்தை பர்ப்புகிறது என்பது பொய்
பினாங்கில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு டிஎபி முயற்சித்தது என்று கூறுவோரை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வன்மையாகக் கண்டித்தார். தாம் அது போன்ற முயற்சி எதனையும் கண்டதில்லை என்றாரவர். செபராங் ஜெயா சந்தைக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், அக்கட்சி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான்…
ம.இ.கா பரிந்துரை செய்யுமா ?
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 6, 2013. 2013 ஆம் ஆண்டு குற்றச் தடுப்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பொழுது, சில திடுக்கிடும் தகவல்களை உள்துறை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி நாட்டில் எல்லா இனத்தைச் சார்ந்தவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதில் அதிகமானோர் இந்தியர்கள்…
மலேசியாகினி: எங்கள் செய்தியாளர்களுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்துங்கள்
சுயேட்சை செய்தி இணையதளத்தின் செய்தியாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடியை மலேசியாகினி கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் நலன் கருதி கேள்வி கேட்கும் அடிப்படை உரிமை செய்தியாளர்களுக்கு உண்டு. அக்கேள்விகளுக்கு பதில் கூறும் கடப்பாடு அமைச்சர்களுக்கு உண்டு என்று மலேசியாகினியை கூட்டாக தோற்றுவித்தவர்களான பிரமேஷ் சந்திரனும் ஸ்டீவன்…
கைரியின் தாராளக் கொள்கையே அவருக்கு எதிரி
நடப்பு அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினின் தாராளக் கொள்கைகள் இளைஞர் பகுதியின் மூல நோக்கத்துக்கே குழிபறிப்பதுபோல் இருப்பதால்தான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக அக்ராம்ஷா முவாம்மார் உபைடா கூறியுள்ளார். ஒத்துப்போவதும் விட்டுக்கொடுப்பதுமான கைரியின் அணுகுமுறை கட்சியின் மூல நோக்கத்துக்கு எதிரானது என்று அக்ராம்ஷா குறிப்பிட்டார். “அம்னோ இளைஞர் பகுதி…
தொலைந்துபோன துப்பாக்கிகள் பற்றிக் கேள்விகேட்கும் உரிமை வரிசெலுத்துவோருக்கு உண்டு
உங்கள் கருத்து ‘ஜாஹிட் அவர்களே, இது தேசிய நலன் சம்பந்தப்பட்ட விவகாரம். அந்த ஆயுதங்கள் எப்படிக் காணாமல் போயின என்பதை விளக்குவது உங்கள் பொறுப்பு. நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அதைப் பற்றிப் பேசுவோம்’ தொலைந்துபோன போலீஸ் துப்பாக்கிகள் பற்றி இனி யாரும் பேசக்கூடாது கிம் குவேக்: போலீஸ் தலைவர்…
போலீசார் சுரண்டப்படும் பூர்வீகக் குடிமக்களை பாதுகாக்க வேண்டும்
முரும் அணைக்கட்டு கட்டப்படும் இடத்திற்குச் செல்லும் சாலையில் சுமார் 300 பெனான்கள் முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அந்த முற்றுகையை நிறுத்துவதற்கு கிட்டத்தட்ட 30 போலீசார் சென்றனர் என்று சுவராம் ஒருங்கிணைப்பாளர் தேவராஜன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார். பெனான் சமூகத்தினர் எஸ்இபியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பெனான்…
ஹுவா பெங்: சுவாவை எதிர்த்தேன்; விலக்கப்பட்டேன்
நேற்று மசீசவிலிருந்து நீக்கப்பட்ட மத்திய செயல்குழு உறுப்பினர், லீ ஹுவா பெங், கட்சித் தலைவருக்கு எதிராக ஏபிசி இயக்கம் ( Anybody But Chua Soi Lek) தொடங்கியதுதான் தாம் கட்சியிலிருந்து தூக்கப்பட்டதற்கான காரணம் என்கிறார். மூன்று நாள்களுக்கு முன்னர்தான் அந்த இயக்கம் தொடக்கப்பட்டது என்றும் அதன் தொடர்பில்…
தன் முதுகு தனக்குத் தெரியாது: பக்காத்தானைச் சாடுகிறது மசீச
தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் பல தவறுகள் நிகழ்ந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை அக்கூட்டணி கண்டுகொள்வதில்லை. அதே வேளை, மத்திய அரசின் நிதி நிர்வாகத் தவறுகளை மட்டும் அது தவறாமல் குறைகூறும் என மசீச மத்திய செயல்குழு உறுப்பினர் லோ செங் கொக்…
இறந்துபோனவர்களுக்கு பண உதவியும் வீட்டு வசதியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது
கடந்த ஆண்டு கணக்கறிக்கையின்படி, காலமான பின்னரும்கூட பலருக்கு சமூகநல உதவியும் வீட்டு வசதியும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. நெகிரி செம்பிலான் சமூக நலத் துறை 2008-க்கும் 2012-க்குமிடையில் இறந்துபோன 40 பேருக்குத் தொடர்ந்து பண உதவி செய்து வந்துள்ளதாக 2012 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது. பினாங்கு முனிசிபல் மன்றம்…
பிகேஆர்: அடுத்த அறிக்கையாவது சுத்தமான அறிக்கையாக இருக்கும் என கேஜெ-ஆல்…
கடந்த ஆண்டு தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தின்போது K-Pop இசை நிகழ்ச்சிக்கு ரிம1.6 மில்லியன் செலவிடப்பட்டதற்குப் பொறுப்பேற்றதற்காக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடினுக்குப் பாராட்டுத் தெரிவித்த பிகேஆர் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், அடுத்த ஆண்டு அறிக்கையிலாவது இதுபோன்ற தேவையற்ற செலவினங்கள் இடம்பெறாமல்…
அம்பிகா: நன்றி, ஆனால் அரசு நியமனத்தை ஏற்பதற்கில்லை
குற்றத் தடுப்புச் சட்டத்தின்(பிசிஏ)கீழ் கைது செய்யப்படுவோரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மூவரடங்கிய வாரியத்தில் ஒருவராக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை நியமனம் செய்வது பற்றி ஆராய அரசு தயாராகவுள்ளது. ஆனால், அந்நியமனத்தை ஏற்க அம்பிகா விரும்பவில்லை. அவ்வாரியத்துக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள பெருமக்களை நியமிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும்…
தொலைந்துபோன போலீஸ் துப்பாக்கிகள் பற்றி இனி யாரும் பேசக்கூடாது
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, போலீஸ் ஆயுதங்கள் தொலைந்து போனதற்குக் கவனக் குறைவுதான் காரணம் என்றும் அதில் முறைகேடுகள் நிகழ வாய்ப்பில்லை என்றும் போலீசாரைத் தற்காத்துப் பேசினார். “அது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறு”, என்றாரவர். செய்தியாளர்களிடம் பேசிய ஜாஹிட், அது பற்றி மேலும் விவரிக்க விரும்பவில்லை.…
கே-போப் நிகழ்ச்சிக்கான செலவு இப்போது ரிம67 மில்லியன்!
ஹரி பெலியா 2012 நிகழ்ச்சிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சு செய்த செலவு நீண்டு கொண்டே போகிறது, ஜூனில் ரிம55 மில்லியனாக இருந்தது இப்போது ரிம67.61 மில்லியனாக நீண்டு இருக்கிறது. "ஆதரவு செயல்திட்டம்" என்ற தலைப்பில் ரிம12.61 மில்லியன் செலவு செய்யப்பட்டிருப்பது தேசிய கணக்காய்வாளர் அறிக்கையிலிருந்து தெரிய…
அன்வார்: அமைதியாக செயல்படுவதே பக்காத்தான் தலைவர்களின் வழிமுறையாகும்
பக்காத்தான் ரக்யாட் கூட்டணித் தலைவர்கள், அமைதியான முறையில் செயல்படுவது என்றும் மாற்றுக்கருத்தைத் தெரிவிக்க தெரு ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்றும் ஏக மனதாக முடிவு செய்துள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தாலும்கூட, அது தெரு ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து அமைதியாகவே செயல்பட்டு வருகிறது என…
முன்னாள் எம்பி: ஊழலைத் தடுக்க போதுமான அதிகாரம் இல்லை
அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் முறைகேடுகள், சீர்கேடுகள் பற்றிய தகவல்கள் வருவதற்கு, அப்பிரச்னைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்குப் போதுமான அதிகாரம் இல்லாததுதான் காரணம் என்கிறார் ஒரு முன்னாள் பிஎன் எம்பி. அதற்காக உருவாக்கப்பட்ட பொதுக் கணக்குக் குழு(பிஏசி), மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) போன்றவற்றுக்கும்கூட நடவடிக்கை…
மசீச, கெராக்கான் எம்பிகள் வெறும் ‘திண்ணை பேச்சு வீரர்கள்’
அண்மையில் கொண்டுவரப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து வாக்களிக்காத மசீச, கெராக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் “திண்ணைப்பேச்சு வீரர்கள்” என்று டிஏபி சாடியது. அவ்விரு கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்துக்கு வெளியில்தான் செய்தியாளர் கூட்டங்களில் எதிர்ப்புக் காட்டிப் பேசுவதிலும் அறிக்கைகள் விடுவதிலும் துணிச்சலைக் காண்பிப்பார்கள் என தைப்பிங் எம்பி இங்கா…
‘முடிவில்லா வாய்ப்புகள்’-சுலோகத்தை இஸ்ரேல்தான் மலேசியாவிடமிருந்து ‘காப்பி அடித்தது’
தேச நிர்மாணிப்புக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உருவாக்கிய ‘முடிவில்லா வாய்ப்புகள் (Endless Possibilities)’ என்னும் புதிய சுலோகம், மலேசியா இஸ்ரேலிடம் ‘காப்பி’ அடித்ததல்ல. இஸ்ரேல்தான் மலேசியாவைப் பார்த்து அப்படி ஒரு சுலோகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறிய பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம், இஸ்ரேல் மே மாதத்திலிருந்து அச்சுலோகத்தைப்…
மகாதிர்: குற்றச் செயல்கள் பெருகும் என நஜிப் எதிர்பார்க்கவில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்தபோது குற்ற விகிதம் இந்த அளவுக்குப் பெருக்கம் காணும் என்பதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். “அவர் (தடுப்புச் சட்டத்தை எடுத்தெறிய) வாக்குறுதி அளித்தது உண்மைதான். ஆனால், குற்றச்செயல்கள் பல்கிப் பெருகும்…
நவம்பர் 4-இல், சுங்கை லிமாவ் இடைத் தேர்தல்
கெடா, சுங்கை லிமாவ் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாள் நவம்பர் 4 என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 23, வேட்பாளர் நியமன நாளாகும். அதன்பின்னர் பரப்புரைக்கு 12 நாள்கள் ஒதுக்கப்பட்டு நவம்பர் 4-இல் வாக்களிப்பு நடைபெறும். அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசிசான் அப்துல் ரசாக், செப்டம்பர் 26-இல் காலமானதைத்…
பிசிஎ சட்டத் திருத்தம் இன்றிரவு நிறைவேற்றப்படலாம்
குற்றவியல் தடுப்புச் சட்டம் 1959 (பிசிஎ) க்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் இன்றிரவு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படலாம். இன்று மாலை இச்சட்டத் திருத்த மசோதா குழு நிலையில் விவாதிக்கப்படுவதற்கு 115 க்கு 66 என்ற வாக்குகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழு நிலையிலான விவாதம் இன்றிரவு நடைபெற விருக்கிறது. ஆறு எதிரணி…
ஹரி பெலியா 2012 ஆபாச நிகழ்ச்சிக்கு ரிம1.6 மில்லியன் மக்கள்…
ஹரி பெலியா 2012 கொண்டாட்டத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கே-போப் கலை நிகழ்ச்சிக்கு அரசாங்கம் பணம் கொடுத்ததை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டார். அந்நிகழ்ச்சி தனியார் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால், தேசிய கணக்காய்வாளர் அறிக்கை 2012 மூன்று கே-போப் குழுவினர்களுக்கு அந்த…