மைனர்களை ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யலாம்

உரிய  வயது  வராத  சிறுவர்களை  அவர்களின்  பெற்றோரில்  ஒருவர்  ஒருதலைபட்சமாக  மதமாற்றம்  செய்வதைக்  கூட்டரசு  அரசமைப்பு  அனுமதிக்கிறது. அதை  மாற்றும்  எண்ணம்  அரசாங்கத்துக்கு  இல்லை. இன்று,  எம்.குலசேகரனுக்கு(டிஏபி- ஈப்போ  பாராட்)  வழங்கிய  எழுத்து வடிவிலான  பதிலில் பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்   பஹாரோம் இவ்வாறு  கூறினார். அப்படி  மதம்…

பண விரயங்களுக்கு அமைச்சர்களையே பொறுப்பாக்க வேண்டும்

தலைமைக் கணக்காய்வாளர்  அறிக்கை  வெளிச்சம்போட்டுக்  காட்டும்  பண  விரயங்களுக்கு  அந்தந்த  அமைச்சுக்களுக்குத்  தலைமைதாங்கும்  அமைச்சர்களையே  பொறுப்பாக்க  வேண்டும்  என  ட்ரேன்பேரன்சி  இண்டர்நேசனல்  வலியுறுத்தியுள்ளது. அப்படிச்  செய்யாதவரை  கணக்கறிக்கையை  யாரும்  பொருட்படுத்தப்  போவதில்லை  என்று  அதன்  தலைவர் அக்பர் சத்தார்  கூறினார். “தங்களின்  நேர்மையையும்  தங்களுக்குக்  கீழே  பணிபுரிவோரின்  நேர்மையையும் …

கணக்கறிக்கை விளக்கக் கூட்டத்திலிருந்து எம்பிகள் வெளியேற்றப்பட்டனர்

பிரதமர்துறை  அமைச்சர்  பால்  லவ்  ஏற்பாடு  செய்திருந்த  தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கை  விளக்கக்   கூட்டத்துக்குச்  சென்ற  பக்காத்தான்  ரக்யாட்  எம்பிகள்   இருவர் கூட்டத்திலிருந்து  வெளியேற்றப்பட்டனர். அது  ஊடகவியலாளர்களும்  அரசாங்க  ஊழியர்களும்  மட்டுமே  கலந்துகொள்ளும்  கூட்டமாம். பிகேஆரின்  பாயான் பாரு எம்பி  சிம்  ட்ஸே  ட்ஸின்,  பாஸின்  கோலா  திரெங்கானு …

கிட் சியாங் பற்றிய ‘தீய’ வதந்தியைக் கண்டிக்கிறது கெராக்கான்

டிஏபி  மூத்த  தலைவரும் கேளாங்   பாத்தா  எம்பியுமான  லிம்   கிட்  சியாங்  காலமானார்  என   முகநூலில்  செய்திகளை  உலவ  விடுவது  “பொறுப்பற்ற  செயல்”  என  பினாங்கு கெராக்கான்  கண்டித்துள்ளது. அச்செயல்களைப்  “பண்பற்ற,  தீயச்  செயல்கள்”  எனக்  கட்சியின்  மாநிலச்  செயலாளர்  ஓ  தொங்  கியோங்  வருணித்தார். “சமுதாயத்தில்  விஷத்தைப் …

ஐஆர்பி முதலீட்டு மசோதா அக்டோபருக்குத் தள்ளிவைப்பு

அரசாங்கம்,  மலேசிய  உள்நாட்டு  வருமான வரி  வாரிய(ஐஆர்பி)  சட்டத்தில்  செய்யப்படும்  திருத்தங்கள் மீதான விவாதத்தை அக்டோபருக்குத்  தள்ளிவைத்தது.  அத்திருத்தங்கள்  குறித்து  பிகேஆர்  தலைவர்கள்  கவலைகொண்டு  வாரம்  முழுக்க  தொடர்ந்து  கொடுத்துவந்த  அழுத்தத்தின்  காரணமாக அது  தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம்  ஐஆர்பி  முதலீட்டு  வாரியம் ஒன்றை  அமைக்கும்  நோக்கத்தில்  அத்திருத்தத்தைத்  தாக்கல் …

இண்ட்ராப்: அமைச்சர் வரலாற்றைத் திரும்பப் படிக்க வேண்டும்

பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோம்,  மலேசியா  சமயச்சார்பற்ற  நாடல்ல  என்று அறித்தது  ஒரு பொறுப்பற்ற  செயல்  என மலேசிய  இண்ட்ராப்  இயக்கம்  சாடியுள்ளது. அமைச்சரின்  அறிவிப்பு,  ஏற்கனவே  முஸ்லிம்- அல்லாதாரின்  வாழ்க்கையில்  அத்துமீறி  நுழைந்து  குளறுபடி  செய்யும்  முஸ்லிம்  என்ஜிஓ-களை  ஊக்கப்படுத்துவதுபோல்  உள்ளது  என  இண்ட்ராப்  தலைவர் …

‘இஸ்லாமிய நாடா, சமயச் சார்பற்ற நாடா? தலைமை நீதிபதிதான் முடிவு…

மலேசியா  இஸ்லாமிய  நாடா  அல்லது  சமயச்  சார்பற்ற  நாடா  எனத்  தலைமை  நீதிபதி  அரிப்பின்  ஜக்கரியாதான்  ஒரு  முடிவு சொல்ல  வேண்டும்  என்று  கல்வியாளரும்  அரசமைப்பு  வல்லுனருமான  அப்துல்  அசீஸ்  பாரி  கூறுகிறார். கூட்டரசு  அரசமைப்பின்  பகுதி  130-ஐப்  பயன்படுத்தி  அரசாங்கம்,  இவ்விவகாரத்துக்குக்    விளக்கம்பெற  வேண்டும்  என  பூச்சோங் …

சிஎம் தொகுதியில் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம்

கம்போங்  பாகான்  ஆஜாமில்,   மேம்பாட்டாளரால்  குடியிருக்கும்  இடத்தைவிட்டு  வெளியேற்றப்படும்  அபாயத்தை  எதிர்நோக்கியுள்ள  சுமார்  70 பேர்,  அதற்கெதிராக  இன்று  கண்டனக்  கூட்டமொன்றை நடத்தினர். அந்த  இடத்தைக்  காலிசெய்யும்படி   கடந்த  ஆண்டு  நவம்பரில் அங்குள்ள  குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கை  அனுப்பப்பட்டது. பாகான்  ஆஜாம்  கம்போங்  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்-கின்  நாடாளுமன்றத் …

எச்சரிக்கை: உங்கள் பேச்சை ஒட்டுக் கேட்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உண்டு

மலேசிய  குடிமக்களின்  தொலைபேசி  அழைப்புகளை  ஒட்டுக்கேட்கும்  அதிகாரம்  அரசாங்கத்துக்கு  உண்டு  என்கிறார்  பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி. அஞ்சல்வழியும்   தொலைத்தொடர்புக்  கருவிகள்  வழியும் நடைபெறும்  செய்தி  பரிமாற்றங்களையும்  உரையாடல்களையும்  இடைமறிக்கும்  அதிகாரம்  அதிகாரிகளுக்கு  உண்டு  என்றாரவர். 5 சட்டங்கள்  அந்த  அதிகாரத்தை  வழங்குவதாக  அவர்  சொன்னார். குளுவாங்  எம்பி …

ஜிஎல்சிகளின் எண்ணிக்கை அதிகம், அவை கொண்டுவரும் வருமானம் குறைவு

அரசாங்கம், அரசுதொடர்பு  நிறுவனங்களை  மறுஆய்வு  செய்ய  வேண்டும்  என்று  பொதுக்  கணக்காய்வுக்  குழுத்(பிஏசி)  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அவற்றில் பல  எந்த  வருமானத்தையும்  கொண்டுவருவதில்லை. “ஒரு வேலையைச்  செய்ய  ஒரு  நிறுவனமே  போதும்  என்கிறபோது  இரண்டு  நிறுவனங்கள்  எதற்கு?”, என  நூர்  ஜஸ்லான்  வினவினார். இன்று…

நீர் பாதுகாப்பானதா? அருந்திக் காட்டுங்கள்: ஆட்சிமன்றத்துக்கு என்ஜிஓ சவால்

முன்னாள்  ஈயக் குட்டைகளிலிருந்து  எடுக்கப்படும்  நீர்  பாதுகாப்பானது  என்றால் சிலாங்கூர்  ஆட்சிமன்ற  உறுப்பினர்கள்  அதை  அருந்திக்  காட்டுவார்களா  என  ஒரு  என்ஜிஓ   சவால்  விடுத்துள்ளது. ஈயக்  குட்டைகளிலிருந்து  எடுக்கப்பட்டும்  நீரில் உலோகக் கலவை  அதிகமிருக்கலாம்  என்பதால்  அது  குடிப்பதற்குப்  பாதுகாப்பானதல்ல  என்று  கூறப்படுவதை  அடுத்து  ஊழலையும் வேண்டப்பட்டவர்களுக்குச்  சலுகை…

சாபாவில் அதற்குள் இன்னொரு கடத்தல் சம்பவம்

சாபாவில் கிழக்குக் கரையில்  சீனச்  சுற்றுப்பயணி  ஒருவர்  கடத்தபட்ட  சம்பவம்  அண்மையில்தான்   முடிவுக்கு  வந்தது. அதற்குள்  அதே  பகுதியில்  இன்னொரு  கடத்தல்  சம்பவம்  நடந்துள்ளது. செம்பூர்ணாவில்  பூலாவ்  திம்புன்  மாத்தாவுக்கு  மேற்கே  மீன்வளர்ப்புப்  பண்ணையிலிருந்து  அதன் பராமரிப்பாளரையும்  ஒரு  தொழிலாளரையும்  ஆயுதம்தாங்கிய  இருவர்  கடத்திச்  சென்றதாக  பெர்னாமா  கூறியது.…

அரசாங்கம் கேஎல்ஐஏ2 பேரங்காடியில் செலுத்தும் கவனத்தை விமான முனையத்தில் செலுத்துவதில்லை

பிஎன்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்,  கேஎல்ஐஏ2  விமான  நிலையத்தில்  பல  பிரச்னைகள்  நிலவுவதைச்  சுட்டிக்காட்டினார்.  அரசாங்கம்  “பொருள் விற்பனை  மையத்தில்”  காண்பிக்கும்  அக்கறையை விமான  முனையத்தின்  வசதிகளை  மேம்படுத்துவதில்  காண்பிப்பதில்லை. “விற்பனை  மையத்தைப்  பற்றி  மட்டுமே  கவலைப்படுவதாக  தெரிகிறது. விமான  முனையம்  என்னாவது? மக்கள்  பொருள்  வாங்கிச்  செல்வதற்கா …

மின் உற்பத்தியைவிட்டு விலகு: ஒய்டிலுக்கு டிஎன்பி தொழிற்சங்கங்கள் கோரிக்கை

தெனாகா  நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி)  தொழிற்சங்கங்கள்  நான்கும்,  முன்எப்போதுமில்லாத  வகையில்  ஒன்றுசேர்ந்து ஒய்டிஎல்  கார்ப்பரேஷனுடன்  உள்ள  உறவுகளை  டிஎன்பி  துண்டித்துக்கொள்ள  வேண்டும்  என்ற கோரிக்கையை  முன்வைத்துள்ளன. ஒய்டிஎல்-இடமிருந்து  மின்சாரம்  வாங்கும்  உடன்பாடு  2015-இல்  முடிவுக்கு  வரும்போது  டிஎன்பி   அதைப் புதுப்பிக்கக் கூடாது  என்று  அவை கூறின.  பாசிர்  கூடாங்கில் …

அரசாங்கம்: மலேசியா சமயச் சார்பற்ற நாடு அல்ல

அரசமைப்பில்  இஸ்லாத்துக்குச்  சிறப்பான  இடமளிக்கப்பட்டிருப்பதால்  மலேசியா  ஒரு  சமயச்  சார்பற்ற  நாடல்ல  என்று  அரசாங்கம்  வலியுறுத்தியுள்ளது. பிரதமர்துறை  அமைச்சர்  ஜமிர்  கீர்  பஹாரோம்,  கடந்த  வாரம்,  நாடாளுமன்றத்தில்  ஒஸ்கார்  லிங்  சாய்  இயு-வுக்கு  எழுத்துப்பூர்வமாக  அளித்த  பதிலில்  இவ்வாறு  தெரிவித்தார். ஷியாரியா  நீதிமன்றத்தின்  பார்வையில்  உள்ள  விவகாரங்களை  விசாரிக்கும் …

மலேசியா சமய சார்பற்ற நாடல்ல

  மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிலை காரணமாக மலேசியா ஒரு சமய சார்பர்ற நாடல்ல என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ஓஸ்கார் லிங் சாய் இயு (டிஎபி-சிபு) எழுப்பி இருந்த கேள்விக்கு கடந்த வாரம் எழுத்து மூலம் பதில் அளித்த பிரதமர்துறை…

பைபிள்களை திருப்பித்தர மறுக்கும் ஜாயிஸ் மீது வழக்கு தொடுக்கலாம்

  மலேசிய பைபிள் கழகத்திலிருந்து ஜனவரியில் கைப்பற்றிச் சென்ற மலாய் மற்றும் இபான் மொழிகளிலான 321 பைபிள் பிரதிகளை சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா திருப்பித்தர மறுத்தால் மலேசிய பைபிள் கழகம் அதன்மீது வழக்கு தொடுக்கலாம் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி இன்று கூறினார்.…

தொடரும் மத மாற்ற பிரச்சனைக்களுக்கு தேசிய பதிவு இலாகாதான் காரணம்

  இந்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மத மாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் தேசிய பதிவு இலாகாதான் என்று கூறுகிறார் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே கூ ஹாம். "சமீபகாலத்தில் மதம் சம்பந்தப்பட்ட சச்சரவுகளும் பதற்றங்களும் ஏற்படுவதற்கு சில தரப்புகள், குறிப்பாக தேசிய பதிவு இலாகா, மலேசிய அரசமைப்புச்…

ஜிபிஎம்: ஐஜிபி பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்

  அரசியல் கட்சி மற்றும் அரசு சார்பற்ற மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு நீதிமன்ற உத்தரவுக்கு பணிய மறுத்துள்ள மலேசிய போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாக்கார் உடனடியாக பதிவு விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.…

அபிம்: நஜிப்பின் கருத்து ஷியாரியா நீதிமன்றத்தை அவமதிக்கிறது

வெவ்வேறு  சமயத்தவர்  சம்பந்தப்பட்ட  பராமரிப்புச்  சர்ச்சைகளைக்  கூட்டரசு  நீதிமன்றத்துக்குக்  கொண்டுசெல்ல  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பரிந்துரைத்திருப்பது  ஷியாரியா  நீதிமன்றத்தை  இழிவுபடுத்துவதாகும்  என  மலேசிய  இஸ்லாமிய  இளைஞர்  இயக்கம் (அபிம்) குற்றம்  சாட்டியுள்ளது. “கூட்டரசு  அரசமைப்பின்  பகுதி 121 (1ஏ), இஸ்லாம்  சம்பந்தப்பட்ட  விவகாரங்களில்  தீர்ப்பளிக்கும்   முழு அதிகாரத்தை …

நஜிப், ரோஸ்மாமீது பாலா குடும்பத்தினர் வழக்கு

காலஞ்சென்ற  (தனித் துப்பறிவாளர்) பி.பாலசுப்ரமணியத்தின்  குடும்பத்தினர்,  ஐந்தாண்டுகள்   நாடுகடந்து வாழ வேண்டிய  கட்டாயத்துக்கு  ஆளானதற்கு  இழப்பீடு  கேட்டு  பிரதமர்  நஜிப் ரசாக், அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  உள்பட  ஒன்பதின்மர்மீது  வழக்கு  தொடுத்துள்ளனர். “புதிய  ஆதாரங்கள்”  கிடைத்ததன்  அடிப்படையில்  இந்த  வழக்கைத்  தொடுத்திருப்பதாக  அக்குடும்பத்தின் வழக்குரைஞர்  அமெரிக்  சித்து …

மயிஸ், ஏஜியை எதிர்க்கிறது; பைபிள்களைத் திருப்பிக் கொடுக்காது

சிலாங்கூர்  இஸ்லாமிய  மன்றம்(மயிஸ்) கடந்த  ஜனவரில் மலேசிய  பைபிள்  கழக(பிஎஸ்எம்)த்தில்  கைப்பற்றப்பட்ட  பைபிள்களைத்   திருப்பிக்  கொடுக்காது. அவ்வழக்கைக் கைவிடுவது  என்ற  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி பட்டேய்லின்  முடிவு  ஏற்கத்தக்கதல்ல  என  மயிஸ்,  நேற்று  நடந்த  ஒரு  சிறப்புக் கூட்டத்தில் கூறியது. “வழக்கைத்  தொடராததற்குச்  சட்டத்துறை  தலைவர்  கூறும் …

தாமான் தேசாவில், கைவிடப்பட்ட நிலையில் ஒரு பள்ளி

தாமான்  தேசாவில்,  பத்தாண்டுகளாகக்  கைவிடப்பட்டுக்  கிடக்கும்  எஸ்கே  டானாவ்  பெர்டானா, பார்ப்பதற்கே  அருவருப்பாகக்  காட்சியளிக்கிறது. பள்ளியின்  நிலை  கண்டு  அங்குள்ள  குடியிருப்பாளர்கள்  கொதித்துப்  போயுள்ளனர். “கல்வி  அமைச்சு  மெதுவாக  செயல்படுகிறது. இந்த  இடம்   கண்ணறாவியாக  காட்சியளிப்பதுடன்   குப்பைமேடாகவும்  போதைப்  பித்தர்களின்  வசிப்பிடமாகவும்,  கொசுக்கள்  வளருமிடமாகவும்  மாறியுள்ளது”, என  சீபூத்தே …