ஐயோ, காப்பாற்றுங்கள் சிலாங்கூரை!

  பிரதமர் ஆகும் முயற்சியில் தோல்வி கண்ட எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இப்போது சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு எதுவும் செய்வார் என்று அம்னோவின் தலைமைச் செயலாளரும் அமைச்சருமான உத்தமபுத்திரன் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார். மந்திரி புசார் ஆக வேண்டும் என்ற தமது இலட்சியத்தை…

சஞ்சீவன்: கார் என்னை மோதித்தள்ளப் பார்த்தது

துப்பாக்கிச்  சூட்டிலிருந்து  தப்பிப் பிழைத்த  குற்ற-எதிர்ப்பாளர் ஆர்.ஸ்ரீசஞ்சீவனை நேற்று  நெகிரி  செம்பிலானில்  ஒரு  கார்  மோதித்தள்ள  முயன்றது. பாஹாவில், சட்டவிரோத  செயல்களுக்குப்  பேர்பெற்ற  ஒரு  இடத்துக்கு  மாணவர்கள்  சென்றுவருவதாகக்  கேள்விப்பட்டு  அங்கு  சென்றார்  சஞ்சீவன். “மாலை  4மணிக்கு  அந்த  இடத்துக்குச்  சென்றேன்.  அங்கு   ஒரு  புரோடூவா  கஞ்சில்  கார் …

கிறிஸ்துவர்கள் தாக்கப்படுவதை பாஸ் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது

பாஸ்  தலைவர்கள் தொடர்ந்து  கிறிஸ்துவர்களுக்கு  அணுக்கமாகவே  இருந்துவருவர்  என  அக்கட்சியின்  அமைதித்  தூதர்  முஜாஹிட்  யூசுப்  ராவா  கூறினார். சில  தரப்பினர்  சமுதாயத்தில்  குழப்பத்தையும்,  வேற்றுமையையும் உண்டுபண்ணி  வருவதை  வெறுமனே  பார்த்துக்  கொண்டிருக்க  முடியாது  என்றாரவர். முஹாஹிட்,  நேற்று  சுங்கை பட்டாணியில்  கிங்  கத்தோலிக்க  தேவாயலத்தில்  நடைபெற்ற முஸ்லிம்-அல்லாதாருடனான …

காலிட் இப்ராகிம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்

  இன்றிரவு பிகேஆர் அடிமட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு விருந்தில் பேசிய சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார். காஜாங் இடைத் தேர்தல் முடியும் வரையில் தமக்காக யாரும் பரப்புரையில் ஈடுபட வேண்டாம் என்று அவர்…

காஜாங், பிஎன்மீதான இந்தியர்களின் கருத்துக்கணிப்பாக அமையட்டும்

காஜாங்  இடைத்  தேர்தல், இந்திய  சமூகத்துக்கு பிஎன்னின்  பங்களிப்பு  மீதான   கருத்துக்கணிப்பாக  அமைய  வேண்டும் என  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி  வலியுறுத்தியுள்ளார்.  ஆளும்  கட்சி  இந்தியர்களுக்கு  உதவத்  தவறிவிட்டது  என்று  அவர்  கூறியதை  அவரின்  முன்னாள்  பிஎன் சகாக்கள்  மறுத்து  அவருக்குக்  கடும்  கண்டனம்  தெரிவித்திருப்பதை  அடுத்து  வேதமூர்த்தி …

உயிர் வாழ்வதற்காக போராடும் பெரியக்கா சமூக பொதுநல இலாகாவிடம் கைகட்டி…

  கடந்த 17 ஆண்டுகளாக பத்து ஆராங் சி. பெரியக்காவுக்கு சமூக பொதுநல இலாகாவிலிருந்து மாதாமாதம் கிடைத்து வந்த ரிம95 2013 ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டு விட்டது என்றும் அந்த உதவித் தொகை தமக்கு மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் நவம்பர்…

மலேசியா, மலாய்க்காரர்களுக்கே’ என்ற இஸ்மாவுக்கு கெராக்கானும் பிகேஆரும் கண்டனம்

‘மலேசியா,  மலாய்க்காரர்களுக்கே  சொந்தம்  மற்ற  இனத்தவர்   அது  குறித்து  கேள்வி  எழுப்பக்கூடாது  என்று  கூறிய  இஸ்லாமிய  என்ஜிஓ-வான  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)-வை  கெராக்கானும்  பிகேஆரும்  சாடியுள்ளன. அது  இனவாதம்  மிக்க  ஓர்  அறிக்கை  என்று  சாடிய  கெராக்கான்  துணைத்  தலைவர்  சியா சூன்  ஹாய்,  அது  இஸ்மாவின்  உதவித் …

அன்வாருக்கு ரிம800,000 இழப்பீடு கொடுக்குமாறு பாபாகோமோ-வுக்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம், வான்  முகம்மட்  அஸ்ரி  வான்  டெரிஸ்தான்  பாபாகோமோ  என்பதும்  அவர்  தீய  நோக்குடன்  அன்வார்  இப்ராகிம்மீது  அவதூறு கூறி  வந்தார்  என்பதும்  நிரூபிக்கப்பட்டிருப்பதாக  தீர்ப்பளித்தது. . தீர்ப்பை  வழங்கிய நீதித்துறை  ஆணையர்  ரோலிலா  யோப், அவதூறு  செய்த  வான்  முகம்மட்  அஸ்ரி ரிம800,000  இழப்பீடு …

துணைப் பிரதமர்: அன்வார் பெயரளவுக்குத்தான் சிலாங்கூருக்கு ஆலோசகர்

சிலாங்கூர்  மத்திய  அரசாங்கத்துடன்  நீர்  ஒப்பந்தம்  செய்து  கொண்டதைக்கூட  அறியாத  அன்வார்  இப்ராகிம்  பெயரளவில்தான்  சிலாங்கூர்  பொருளாதார  ஆலோசகர்  என  பிஎன்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  கூறினார். “மாநிலத்தின்  பொருளாதார  ஆலோசகர்  என்று  கூறிக்கொள்கிறார்  ஆனால்,  சிலாங்கூரில்  என்ன  நடக்கிறது  என்பதைக்கூட  அறியாதிருக்கிறார். அப்படியானால்  இவ்விசயத்தில்  அவர் …

போலீஸ் அதிகாரிகள்மீது விசாரணை என்பது பொய்யான செய்தி

மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி),  ஊழல்களிலும்  பணத்தைச்  சலவைசெய்யும்  நடவடிக்கையிலும்  ஈடுபட்ட  60  போலீஸ்  அதிகாரிகள்மீது  விசாரணை  நடத்துவதாக  இணைய  செய்தித்தளம்  ஒன்றில்  வெளிவந்த  செய்தியில்  உண்மை  இல்லை  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  மறுத்துள்ளார். “எம்ஏசிச்  தலைமை  ஆணையர்  டான்ஸ்ரீ அபு  காசிம்  முகமட்டைச் …

மார்ச் 2-க்குப் பின்னர் 2.2 மில்லியன் பேர் நீர்ப் பங்கீட்டை…

அணைக்கட்டுகளில்  நீரின்  அளவு  குறைந்து  வருவதால்  கிள்ளான்  பள்ளத்தாக்கில்  மேலும்  2.2 மில்லியன்  பேர்  நீர்ப்  பங்கீட்டை  எதிர்நோக்குவர்.  “இதனால்,  கோம்பாக்,  கோலாலும்பூர்,  பெட்டாலிங்,  கிள்ளான், ஷா  ஆலம்,  கோலா  சிலாங்கூர்,  ஹுலு  சிலாங்கூர்  ஆகிய  ஆறு  மாவட்டங்களில்  260  பகுதிகள்  பாதிக்கப்படும்”,  என ஷபாஸ்  செயல்முறை  இயக்குனர்…

அன்வார் நஜிப்புடன் சேர்கிறாரா?

அன்வார்  இப்ராகிமையும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையும்  சேர்த்துவைக்க மிகப்  பெரிய  ஏற்பாடு  ஒன்று  கமுக்கமாக  நடைபெற்று  வருகிறதாம். அம்னோவுடன்  நெருக்கமான  தொடர்பு  வைத்திருக்கும்  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்  தம்  வலைப்பதிவில்  இவ்வாறு கூறியுள்ளார்.  அன்வாரை  அமைச்சராக்கி  அவருக்கு  முக்கியமான  பொறுப்பு  கொடுக்கப்படும்  சாத்தியம்  இருப்பதாக  அவர் …

எம்.ஐ.இடி, எய்ம்ஸ்ட் சாமிவேலுவின் சொத்தா? அப்படி இல்லையே!

-மு. குலசேகரன், பெப்ரவரி 27, 2014 2000 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட எம்.ஐ.டி கல்வித்திட்டம் அப்போதைய ம.இ.காவின் தலைவரால் பெரும் ஆரவாரத்துடன் இந்திய மாணவர்களின்  கல்வி  நலன் கருதி ம.இ.காவின் பெரும் திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பலனாக எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு நிதி திரட்ட ச. சாமிவேலு நாடு…

மசீச: காலிட் ஒரு நல்ல எம்பி-ஆக இருப்பார்

திடீரென்று  சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட் இப்ராகிமின்  புகழ்பாடத்  தொடங்கி  இருக்கிறது  மசீச.  இந்த  வகையிலாவது  காஜாங்  இடைத்  தேர்தலில்  அன்வார்  இப்ராகிமை  எதிர்த்துப்  போட்டியிடும்  தன்  வேட்பாளருக்கு  கூடுதல்  வாக்குகள்  கிடைக்காதா  என்கிற  ஒரு  நப்பாசைதான். நேற்று  புத்ரா ஜெயாவும்  சிலாங்கூர்  அரசும் செய்துகொண்ட   நீர்  ஒப்பந்தம் …

எம்ஏஎஸ் தொழிற்சங்கத் தலைமைச் செயலாளரும் மற்றவர்களும் பணி இடைநீக்கம்

மலேசிய  விமான  நிறுவனம் (எம்ஏஎஸ்), தேசிய  விமானப்  பணியாளர்  சங்க(நுவாம்)த்  தலைமைச்  செயலாளரையும்  மேலும்  மூன்று  விமானப்  பணியாளர்களையும்  தற்காலிக  பணிநீக்கம்  செய்துள்ளது. நுபாம்  நேற்று  ஓர்  அறிக்கையில்  இதைத்  தெரிவித்தது.    நுவாம்  பேரணி  ஒன்றில்  கலந்துகொண்டதற்காகவும்  தொழிற்சங்க  சுற்றறிக்கை  ஒன்றை  அனுப்ப  எம்ஏஎஸ்  மின்னஞ்சலைப்  பயன்படுத்தியதற்காகவும் தலைமைச் …

33 ஆண்டு தயிப் ஆட்சிக்குப் பின்னரும் சரவாக்கில் வறுமை குறையவில்லை

அப்துல்  தயிப்  மஹ்மூட் 33  முதலமைச்சராக   இருந்து  ஆண்டுகள்  ஆண்ட  பின்னரும்,  சரவாக்,  வறுமைப் பட்டியலில்  இன்னும் மூன்றாம் இடத்திலேயே  இருப்பது  ஏன்  என்று  சரவாக்  பிகேஆர்  இளைஞர்  பகுதி  கேள்வி  எழுப்பியுள்ளது. அம்மாநிலத்தில்  நிதிக் கையிருப்பு  ரிம22 மில்லியன் இருந்தும்  இந்நிலை  ஏன்  என  இஸ்வார்டி  முர்னி …

மலேசியா மலாய்க்காரர்களுக்கே உரியது என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும்

மலேசியா, மலாய்க்காரர்களின்  நாடு  என்பது  உலக  அளவில்  அங்கீகரிக்கப்பட  வேண்டும்  என்று  இஸ்லாமிய  என்ஜிஒ-வான ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)  கோரிக்கை  விடுத்துள்ளது.  “உலகம்  சீனாவைச்  சீனர்களுடையதாக,  இந்தியாவை  இந்தியர்களுடையதாக,  இங்கிலாந்தை  ஆங்கிலேயருடையதாக,  ஜெர்மனியை  ஜெர்மானியருடையதாக  அங்கீகரித்து  ஏற்றுக்கொண்டிருப்பதுபோல்  இது  மலாய்க்காரர்  நாடு”, என இஸ்மா  உதவித்  தலைவர் II…

ஜைட்: நிலம் பெறுவதற்கு யாருடைய ஆதரவையும் நாடவில்லை

முன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்,  தம்  “கட்சிக்காரர்களுக்கு”  சிலாங்கூரில்  அரசு  நிலங்களைப்  பெற்றுத்தர  பிகேஆரின் ஆதரவை  நாடினார்  என்று  கூறப்படுவதை  மறுத்தார். பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  அம்பலப்படுத்திய  மின்னஞ்சல்கள்  தொடர்பில்  விளக்கமளித்த  ஜைட்,  அந்த  நிலங்கள்  அந்த  நிறுவனங்களுக்குச்  சொந்தமானவைதான்  என்றும்  அவற்றை  மேம்படுத்துவதற்கு  உரிமம் …

மஇகா: வேதா யார், எங்களை பிஎன்னிலிருந்து வெளியேறச் சொல்ல

மஇகாவை  பிஎன்னிலிருந்து  வெளியேறச்  சொல்லவோ, குறைகூறவோ இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்திக்கு  உரிமை  கிடையாது  என மஇகா  தலைமைப்  பொருளாளர் எஸ்.முருகேசன் காட்டமாகக்  கூறியுள்ளார். “அவர்  இந்திய  சமூகத்துக்குச்  சேவையாற்றத்  தவறி  விட்டார்,  இப்போது  அரசாங்கத்தை  விட்டும் விலகி  விட்டார். எங்களை  பிஎன்னிலிருந்து  விலகச்  சொல்லவோ, விரல்  நீட்டி  எங்களைக் …

மை வாட்ச்: போலீஸ் படை ஐஜிபி-இன் கட்டுப்பாட்டில் இல்லை

தம் அதிகாரிகள்மீது  ஊழல்  விசாரணை  நடப்பது  பற்றித்  தமக்குத்  தெரியாது  என்று  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறியிருப்பது  போலீஸ்  படை  அவரது  கட்டுப்பாட்டில்  இல்லை  என்பதைக் காண்பிக்கிறது. குற்றச்செயல்களை  எதிர்க்கும்  மைவாட்ச்  அமைப்பின்  தலைவர் எஸ். ஸ்ரீசஞ்சீவன்  நேற்று  ஓர்  அறிக்கையில்  இவ்வாறு  கூறினார்.…

மலேசியாகினி மீது செய்வினை தாக்குதல்?

மலேசியாகினி  தொடக்கப்பட்ட  காலத்திலிருந்து  அதற்குத்தான்  எத்தனை  எத்தனை  தடைகள், தடங்கல்கள். கடுமையான    விமர்சனங்கள்,  போலீஸ்  அதிரடிச் சோதனைகள்  வழக்குகள்,  செய்தியாளர்  கூட்டங்களில் கலந்துகொள்ளத்  தடை....இப்படி  பல  எதிர்ப்புகளை  அது  சந்தித்து  வந்துள்ளது. ஆனால், நேற்று  அதிகாலை  அதன்  அலுவலகத்தில்  நடந்துள்ள  தாக்குதல்  அது  சற்றும்  எதிர்பாராத  ஒன்று. சிவப்புச் …

சிலாங்கூரில் நீர் விநியோகம் மொத்தமும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது

சிலாங்கூரில்  நீரளிப்புச்  சேவையில்  ஈடுபட்டுள்ள  நான்கு  நிறுவனங்களையும்  மாநில  அரசு  எடுத்துக்கொள்ளும். அந்நிறுவனங்களுக்கு  இழப்பீடாக  ரிம9.64 பில்லியன்  ரிங்கிட்  வழங்கப்படும். இதற்கான  ஒப்பந்தம்  ஒன்றை  சிலாங்கூர்  அரசும்  கூட்டரசு  அரசாங்கமும்  இன்று  செய்துகொண்டன. சிலாங்கூர்  அரசு  அந்நிறுவனங்களில்  பங்குரிமை  பெறுவதற்கு  புத்ரா ஜெயா  ரிம 2 பில்லியன்  கொடுத்துதவும்.…

வேதா: மஇகாவே அடிமைத்தனத்தை உதறித்தள்ளி ‘துவானை’விட்டு விலகி வா

துணை  அமைச்சர்  பதவியைத்  துறந்த  பின்னர்,  இந்தியர்களுக்கு  உதவவில்லை  எனப்  பிரதமரைச்  சாடிவரும்  பி.வேதமூர்த்தி,  இப்போது  மஇகா  பிஎன்னைவிட்டு  வெளியேற  வேண்டும்  என்ற  கோரிக்கையை  முன்வைத்துள்ளார். மஇகா இந்திய  சமூகத்திடம்  நேர்மையாக  நடந்துகொள்வது  உண்மையாயின்  அதை  நிரூபிக்க  இதைச்  செய்ய  வேண்டும்  என்று  மலேசிய  இண்ட்ராப்  சங்கத்தின்  தலைவரான …