அல்டான்துயா கொலை வழக்கில் அஸிலா, சிருல் விடுதலை

மங்கோலிய பெண்மணி அல்டான்துயா ஷாரிபுவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த போலீஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் ஆகிய இருவரையும் முறையீட்டு நீதிமன்றம் இன்று விடுவித்தது. நீதிபதி முகம்மட் அபாண்டி அலி தலைமையில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு…

அரசாங்கம் வகுத்த பாதையில் செல்லுமாறு வேதமூர்த்திக்கு ஸாஹிட் அறிவுரை

பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி அரசாங்கம் வகுத்த பாதையைப்  பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்கக் கொள்கைக்கு முரணான அறிக்கைகளை  வெளியிடக் கூடாது என்றும் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார். "அவர் (வேதமூர்த்தி) தம்மை அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் தலைவராக…

போலீசார் கெடாவில் ’04’ ரகசியக் கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காண்கின்றனர்

கெடாவில் இன்னும் எஞ்சியுள்ள '04' ரகசியக் கும்பல் உறுப்பினர்களை  அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 18ம் தேதி Ops Cantas தொடங்கப்பட்டது முதல் போலீசார் 58 ரகசியக்  கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக கெடா போலீஸ் தலைவர் அகமட்  இப்ராஹிம் சொன்னார். அவர்களில் '04' ரகசியக்…

சிறுநீர் கழிக்கும் காட்சி ‘கற்பனையானது’ என்கிறார் மே 13 சாட்சி

சர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படத்தில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார்  இல்லத்தில் இருந்த கொடிக் கம்பத்தின் மீது சீன இளைஞர்கள் குழு ஒன்று சிறுநீர்  கழிப்பதை காட்டும் காட்சி 'கற்பனையானது' 'முடியாத காரியம்' என மே 13  கலவரத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் சொல்கிறார். அந்த கொடிக்…

‘அல்லாஹ்’ என்னும் சொல் மீதான முறையீட்டை தள்ளுபடி செய்வதில் தேவாலயம்…

அல்லாஹ்' விவகாரம் மீது உள்துறை அமைச்சும் அரசாங்கமும் சமர்பித்த முறையீட்டைத் தள்ளுபடி செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியில் கத்தோலிக்கப் பேராயர் மர்பி பாக்கியம் தோல்வி கண்டுள்ளார். அந்த முறையீட்டை தள்ளுபடி செய்வதற்கு பேராயர் சமர்பித்த நோட்டீஸ் மனுவை ( notice of motion ) நீதிபது அபு சாமா நோர்டின் தலைமையிலான மூவர் கொண்ட முறையீட்டு…

‘சமூக பொருளாதார இடைவெளிக்கு தாய் மொழிப் பள்ளிகள் காரணமல்ல’

சீன தமிழ் தாய் மொழிப் பள்ளிக்கூடங்களுக்கு இடையில் தரத்தில் நிலவும்  வேறுபாடு சமூக பொருளாதார இடைவெளி விரிவடைவதற்கு வழி வகுக்கக் கூடும்.  ஆனால் அந்த நிலைக்குத் தாய் மொழிப் பள்ளிக்கூடங்கள் மீது பழி போடக் கூடாது என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் சொல்கிறார். தேசியப் பள்ளிக் கூட…

சாபாவுக்கான வாய்ப்பைக் கெடுக்காதீர்கள்: மூசாவுக்கு பங் வேண்டுகோள்

சாபா முதலமைச்சர் மூசா அமான், அம்னோ உதவித் தலைவர் போட்டியில் குதிக்கக்கூடாது என்று கூறும் பங் மொக்தார் ரடின்,  அது அப்பதவிக்குப் போட்டியிடும் மற்றொரு சாபா தலைவரின்(ஷாபி அப்டால்) வாய்ப்பைக் கெடுக்கும் என்கிறார். “சாபாவைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் போட்டியிட்டால் (வெற்றி) வாய்ப்பு குறையும்”,என கினாபாத்தாங்கான் எம்பியும் அடிக்கடி…

அளவுக்கதிகமான பல்கலைக்கழகங்களா?

நம் நாட்டில் 21  அரசாங்கப் பலகலைக்கழகங்கள், 37  தனியார் பல்கலைக்கழகங்கள், 20 தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகள், 7  வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கிளை வளாகங்கள், 414 தனியார் கல்லூரிகள்,  30 தொழில்நுட்பப்பயிலகங்கள் (போலிடெக்னிக்குகள்),  73  சமூகக் கல்லூரிகள் என மொத்தம்  602 உயர்கல்விக் கழகங்கள் உள்ளன. பலவகையான  கல்விக்கூடங்கள்  பல்வகை கல்விகளை வழங்குவது…

2016ல் மஇகா தலைவர் பதவியிலிருந்து விலகுவதை பழனிவேல் உறுதிப்படுத்துகிறார்

2016ம் ஆண்டு மஇகா தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதை ஜி பழனிவேல்  இன்று உறுதிப்படுத்தியுள்ளார். கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு உதவியாக 2016ம்  ஆண்டு முதல் கால் பகுதியில் தமது தவணைக் காலத்தின் இறுதியில் தாம் விலகப்  போவதாக இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சருமான பழனிவேல்…

வழக்குரைஞர்கள்: பிசிஏ உண்மையில் விசாரணையின்றி தடுத்து வைப்பதாகும்

1959ம் ஆண்டுக்கான குற்றத் தடுப்புச் சட்டத்தின் (பிசிஏ) கீழ் அனுமதிக்கப்படும்  நீண்ட காலத் தடுப்புக் காவல் விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு ஒப்பாகும்  என வழக்குரைஞர்கள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. "நாட்டில் அதிகரித்து விட்ட கடுமையான, வன்முறை குற்றங்களை ஒடுக்குவதற்கு  பிசிஏ சட்டத்தைப் பயன்படுத்துவது எனப் போலீசார் செய்துள்ள முடிவு…

பிடிபிடிஎன் கடன் பெற்றவர்கள் பற்றிய ஆய்வை பிகேஆர் தொடங்கியுள்ளது

பிடிபிடிஎன் எனப்படும் தேசிய உயர் கல்வி நிதிக்கு செலுத்த வேண்டிய கடன்கள்  பெருகுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ள அந்தக் கடனைப் பெற்றவர்கள்  பற்றிய ஒர் ஆய்வை பிகேஆர் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 29ம் தேதி இரவு மணி 8.30க்கு பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்ற  நூலகத்தில் நடைபெறும் ‘Tweetup’ என்னும்…

விபத்துக்குள்ளான பேருந்து போலீசால் கறுப்புப் பட்டியலிடப்பட்டது

நேற்று கெந்திங் மலை பள்ளத்தில் விழுந்த பேருந்து போலீசால் கறுப்புப்  பட்டியலிடப்பட்டிருக்கிறது. அது, சாலைப் போக்குவரத்துத் துறை(ஜேபிஜே)யால் கறுப்புப்  பட்டியலிடப்படவில்லை. மலேசியாகினி தேடிப்பார்த்ததில் இத்தகவல் தெரிவந்தது. போக்குவரத்துக் குற்றங்களுக்காக பல போலீஸ் சம்மன்கள் கொடுக்கப்பட்டதை அடுத்து அது போலீசால் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளது என ஜேபிஜே பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.…

திருமணச் சட்டத்தைத் திருத்துவீர்: ஜஹிட்டுக்கு டிஏபி வலியுறுத்து

மணவிலக்கு பெற்றாலும்கூட, 18-வயதைத் தாண்டிய பிள்ளைகளின் கல்விக்குப் பெற்றோர் இருவரையுமே பொறுப்பாக்கும் வகையில் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர்  அஹ்மட் ஜஹிட் ஹமிடியை கூலாய் எம்பி தியோ நை சிங்  கேட்டுக்கொண்டிருக்கிறார். “மணவிலக்கு பெற்ற முஸ்லிம்-அல்லாத பெற்றோரின்   பிள்ளைகளின் நலன்கருதி இந்தத் திருத்தம்…

‘புதுக் கிராமம்’ திரையிடப்படுவதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'புதுக் கிராமம்' திரையிடப்படுவதற்கு திரைப்படத்  தணிக்கை வாரியம் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. அந்தத் திரைப்படம் இரண்டாவது முறையாக மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது  தொடர்பில் அதிகாரிகள் தமக்கு ஏதும் விளக்கமளிக்காதது குறித்து அதன்  தயாரிப்பாளர் எட்வர்ட் தீ ஏமாற்றம் அடைந்துள்ளார். "உண்மையில் எங்களுக்குப் பதில் தான் தேவை.…

கெந்திங் துயரச் சம்பவம் பஸ் பயணப் பாதுகாப்பு பற்றி மீண்டும்…

"பஸ் நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறுகின்றன. ஒட்டுநர்கள் வேலை  செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் வேலை  செய்ய அவை அனுமதிக்கின்றன" கெந்திங் பள்ளத்தில் பஸ் விழுந்தது 37 பேர் உயிரிழந்தனர் சாதாரண மலேசியன்: அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய  குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுடைய…

கெந்திங் பள்ளத்தில் பஸ் விழுந்தது 33 பேர் மரணமடைந்ததாக அஞ்சப்படுகின்றது

49 பயணிகளை ஏற்றியிருந்த பஸ் ஒன்று இன்று பிற்பகல் கெந்திங் மலையிலிருந்து  கீழே செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையிலிருந்து விலகி  பள்ளத்துக்குள் விழுந்தது. அந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்ததாக  அஞ்சப்படுகின்றது. அந்தப் பஸ் கோலாலம்பூர் சென்ட்ரலை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக  நம்பப்படுகின்றது. பஸ் 200…

ஏஇஎஸ் என்ன, ஒரு தேசிய இரகசியமா? எம்பி வினவுகிறார்

தானியக்க செயலாக்கக் கட்டகம் (ஏஇஎஸ்) ஒரு “தேசிய இரகசியம்” என்று கூறிய போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேனை லிம் லிப் எங் சாடியுள்ளார். ஏஇஎஸ்-ஸை அதை நிர்வகித்துவரும் இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து எடுத்துக்கொள்ள  திட்டமிருப்பதாகவும் அதற்கு அந்நிறுவங்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படலாம் என்றும் ஹிஷாமுடின் நேற்று அறிவித்ததன் தொடர்பில் லிம்…

கோத்தா திங்கி நகராட்சி மன்றம் சூராவ் இடிக்கப்பட வேண்டும் என…

கோத்தா திங்கி நகராட்சி மன்றம் செடிலி புசாரில் உள்ள Tanjung Sutera ஒய்வுத்  தலத்தில் உள்ள சூராவ் இடிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளது. மன்றத் தலைவர் ஹாஸ்ரின் கமால் ஹஷிம் கையெழுத்திட்டுள்ள அதற்கான  நோட்டீஸ் சூராவ் இடிக்கப்பட வேண்டும் என கூறியது. சிங்கப்பூரைச் சேர்ந்த பௌத்தர்கள் குழு ஒன்று…

கறுப்புப்பட்டியலில் உள்ள 1.7 மில்லியன் வாகனமோடிகளின் உரிமங்கள் பறிக்கப்படலாம்

போக்குவரத்துப் போலீசாரின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 1.7 மில்லியன் வாகனமோட்டிகள் போக்குவரத்து அபராதத் தொகையைச் செலுத்தத் தொடர்ந்து மறுத்து வந்தால் அவர்களின் வாகனமோட்டும் உரிமங்கள் பறிக்கப்படலாம். இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்த தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட், அந்த 1.7 மில்லியன் வாகனமோட்டிகளை அடையாளம் காணும்…

பிகேஆர்: Ops Cantas பழமையான சட்டத்தை பயன்படுத்தும் ‘பொது உறவு…

Ops Cantas போலீசாரின் 'பொது உறவு நடவடிக்கை' எனத் தோன்றுவதாக  பிகேஆர் வருணித்துள்ளது. பழமையான ஒரு சட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையில் "விருப்பம்  போல்' கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என பிகேஆர் உதவித் தலைவர் என்  சுரேந்திரன் நிருபர்களிடம் கூறினார். "நான் பொது மக்களுடைய பாதுகாப்பு பற்றிக் கவலைப்படுகிறேன்.…

பிரதமர்: மலேசியாவில் முஸ்லிம் பழமைவாதம் என ஏதுமில்லை, வெறும் உணர்வுகள்…

நாய் பயிற்றுநர் மஸ்னா முகமட் யூசோப், ஜோகூர் ஒய்வுத் தல உரிமையாளர்  சையட் அகமட் அல்காப் ஆகியோர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் போன்ற  சம்பவங்களினால் சில தரப்புக்கள் சொல்வதைப் போல மலேசியா முஸ்லிம்  பழமைவாதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா ? புத்ராஜெயாவில் இன்று நிருபர்கள் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட அந்தக்…

பூஜியா: ஷாரிஸாட் வரி செலுத்துவோருக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட சுமை

மகளிர் விவகாரங்கள் மீது பிரதமருக்கான ஆலோசகராக முன்னாள் அமைச்சர்  ஷாரிஸாட் அப்துல் ஜலில் நியமிக்கப்பட்டுள்ளது, வரி செலுத்துவோருடைய  பணத்தைப் பயன்படுத்தி 'மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்' என பிகேஆர்  குவாந்தான் எம்பி பூஜியா சாலே வருணித்துள்ளார். ஏனெனில் குறிப்பாக மகளிர் விவகாரங்கள் என வரும் போது ஷாரிஸாட் 'கூடுதல்  மதிப்பு'…

குறைசொல்வோரை விளாசுகிறார் ஐஜிபி

திங்கள்கிழமை பினாங்கில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தூற்றுவோரை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கடுமையாகச் சாடினார். போலீஸ் சுட்டுக்கொல்லும் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுவதை  அவர் மறுத்தார். “லாஹாட் டத்துவில் நாட்டைக் காக்கும் பணியில் போலீசார் உயிரை நீத்தபோது அதை நாடகம் என்று எள்ளி நகையாடினர். “சுடும் சம்பவங்கள்…