பங்: பாலியல் வசைச்சொற்கள் பயன்படுத்தப்படுவதற்கு ‘சினமூட்டும் பேச்சுகளே’ காரணம்

மக்களவையில் எம்பிகள் பாலியல் வசைமொழிகளைப் பயன்படுத்துவதற்கு சிலரது “ “சினமூட்டும் பேச்சுகள்” காரணமாக இருக்கலாம் என்று பிஎன் அரசுஆதரவாளர் மன்ற(பிஎன்பிபிசி)த் துணைத் தலைவர் பங் மொக்தார் ரடின் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். நிலைஆணை 36(4)-ஐ திருத்தம் செய்யும் பரிந்துரைமீதான விவாதத்தில் கலந்துகொண்ட பங் மொக்தார் (பிஎன்- கினாபாத்தாங்கான்) உத்தேச…

ஸ்கார்ப்பின் விசாரணைக்கு அல்தான்துயா கொலை வழக்கு விசாரணைக் குறிப்புக்கள் அனுப்பப்படுமா…

ஸ்கார்ப்பின் ஊழலை விசாரிக்கும் பிரஞ்சு நீதிபதிகள் மங்கோலிய பிரஜையான அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு விசாரணையையும் தங்கள் புலனாய்வில் சேர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர் ஒருவர் கூறியிருக்கிறார். [காணொளி | 4.46 நிமிடம்]…

கைரி: இளைஞர்கள் எளிதாக அந்நியச் சக்திகளுக்கு இரையாவதில்லை

இந்த நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட அந்நியச் சக்திகளுடைய செல்வாக்கிற்கு எளிதாக இரையாவதில்லை என அம்னோ தலைவர் கைரி ஜமாலுதின் கூறியிருக்கிறார். அரசாங்கம் இளைய தலைமுறையினருக்கு அணுக்கமாகச் சென்று அவர்கள் எழுப்பும் பிரச்னைகளையும் அவர்களுடைய பிரச்னைகளையும் செவிமடுப்பதால் பாரிசான் நேசனல் (பிஎன்)…

‘சபாநாயகராக பெண் ஒருவரை நியமிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது’

மக்களவை நடவடிக்கைகளின் போது பால் உணர்வுகள் உண்மையில் புரிந்து கொள்ளப்பட்டு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பெண் ஒருவர் அவையின் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் யோசனை கூறியிருக்கிறார். நாடாளுமன்ற விவாதங்களின் போது செக்ஸ் ரீதியிலான கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கும் வகையில்…

அம்னோவின் கோட்டைக்குள் பக்காத்தான் ஊடுருவல்

ஜோகூர், பிஎன்னின் அசைக்கமுடியாத கோட்டையாகவும் அங்குள்ளவர்களின் வாக்குகள் அதன் ‘வைப்புத் தொகையாகவும்’ நெடுகிலும் கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், பாஸ் ஆராய்ச்சி மையம் (பிபிபி) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அந்தத் தெற்கத்தி மாநில வாக்காளரிடையே மாற்றம் ஏற்பட்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அங்குள்ள இளம், நடுத்தர-வருமானம் பெறும் வாக்காளரிடையே குறிப்பிடத்தக்க…

உங்கள் கருத்து: டாக்டர் மகாதீர் அவர்களே, நிலைத்தன்மை சீர்குலைவதற்கு வித்திடுவது…

"நிலைத்தன்மை சீர்குலைவதற்கு வழி வகுப்பது ஜனநாயக உரிமைகளும் பேச்சுச் சுதந்திரமும் அல்ல. மாறாக ஊழலும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் சுதந்திரமுமே நிலைத்தன்மை குறைவதற்கு வழி வகுக்கின்றன." ஜனநாயக உரிமைகள் நிலைத்தன்மை சீர்குலைவுக்கு வித்திடுகின்றன ஜேஎம்சி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு.…

அன்வாரின் ‘செராமா’ வுக்குச் சென்ற ஆசிரியை வேலைநீக்கம்

பகுதி-நேர சமய ஆசிரியை ஒருவர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் செராமாவுக்குச் சென்றதற்காக தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். லாபுவானில், ஆசிரியையாக பணிபுரியும் குவாட்ருன் நாடா முகம்மட் லட்பி, உள்ளூர் அம்னோ தலைவர் ஒருவரின் பேச்சைக் கேட்டுக் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறை (ஜாவி)…

தங்க முதலீடு மோசடி தொடர்பில் பிஎன் எம்பிகள் பேங்க் நெகாராவைச்…

இரண்டு பாரிசான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசியர்கள் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து மோசம் போவதைத் தடுக்காததற்காக பேங்க் நெகாராவைக் கடுமையான சாடினர். “பேங்க் நெகாராவின் கவனக் குறைவே அதற்குக் காரணம்”, என்று மக்களவையில் நிதியியல் சேவைச் சட்டத் திருத்த முன்வரைவு மீதான விவாதத்தின்போது…

பினாங்கு பிஎன்: கிளந்தான் முடி திருத்தும் நிலையப் பிரச்னையில் டிஏபி…

கிளந்தானில் பாஸ் கட்சியின் இஸ்லாமியக் கொள்கைகள் குறிப்பாக முஸ்லிம் அல்லாதாரைப் பாதிக்கின்ற விஷயங்கள் குறித்து டிஏபி ஏன் இன்னும் ஏதும் செய்யாமல் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பக்காத்தான் ராக்யாட்டில் தனது தோழமைக் கட்சியான பாஸ் அத்தகைய கொள்கைகளை அமலாக்குவதைத் தான் தடுக்க முடியாமல் போனால் டிஏபி அந்தக்…

பிரஞ்சு வழக்குரைஞர்களுடைய விளக்கம் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது

ஸ்கார்ப்பின் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் Read More

டாக்டர் மகாதீர்: நாங்கள் சீர்திருத்தம் செய்து விட்டோம், உங்களுக்கு இன்னும்…

சீர்திருத்தங்களில் தான் ஈடுபாடு கொண்டுள்ளதை நிரூபிப்பதற்கு அம்னோ வழி நடத்தும் பாரிசான் நேசனல் அரசாங்கம் நிறையச் செய்துள்ளது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். புத்ரா உலக வாணிக வளாகத்தில் பூசல்கள், சமரசம் மீதான அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அவர் அதனூடோ நிருபர்களிடம் பேசினார்.…

பத்து காவான் பிஎன் ஒருங்கிணைப்பாளர் தொடுத்த வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியில்…

பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியின் உதவியாளர்களான எம் சத்தீஸ், என் அமால் தாஸ் ஆகிய இருவருக்கும் எதிராக பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் நேசனல் (பிஎன்) ஒருங்கிணைப்பாளர் ஏ மோகன் சமர்பித்திருந்த அவதூறு வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டுள்ளது. பினாங்கு உயர் நீதிமன்ற…

மகாதிர்: பொதுத் தேர்தலில் நஜிப் மட்டுமே மும்முரமாக இருக்கிறார்

அடுத்த ஆறு மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றாலும் அம்னோ தொகுதிகள் களத்தில் இறங்கி சுறுசுறுப்பாக செயல்படக் காணோம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். வேட்பாளர்களைத் தெரிந்துகொள்ள அவை காத்திருப்பதுபோல் தெரிகிறது என்றாரவர். “நான் (அம்னோ தலைவர்) நஜிப் (அப்துல் ரசாக்) மட்டுமே சுறுசுறுப்பாக செயல்படுவதைப்…

‘சிலாங்கூர் நில அபகரிப்பு, மாற்றத்துக்கான பிஎன் வாக்குறுதியை புறந்தள்ளியுள்ளது’

பிஎன் உறுப்புக் கட்சிகள் சிலாங்கூரில் நடத்தியுள்ளதாகக் கூறப்படும் நில அபகரிப்பு குறித்து பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் மௌனமாக இருப்பது அந்தக் கூட்டணி மாற்றத்தை செய்வதற்கு அருகதை இல்லாதது என்பதற்கு இன்னொரு எடுத்துக் காட்டு என டிஏபி கூறிக் கொள்கின்றது. "பிஎன் மாறுவதற்குத் தயாராக இருப்பதாக…

உதவித் தொகை பெற்ற பொருள்கள் மில்லியன் கணக்கில் இந்தோனேசியாவுக்குள் கடத்தல்

அப்துல் கபுர் சாலே (பிஎன்- கலாபாகான்), உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு அரசு உதவித் தொகை பெற்ற பொருள்களைச் சரியானபடி கண்காணிப்பதில்லை என்று சாடியுள்ளார். உதவித்தொகை பெறும் பொருள்கள் பெருமளவில் அண்டை நாடான இந்தோனேசியாவுக்குள் கடத்தப்படுவதாக அவர் கூறினார். “மில்லியன் கணக்கில் உதவித்தொகை பெறும் பொருள்கள்…

லைனாஸ் எதிர்ப்புக் குழு: நஜிப் அவர்களே, எங்கள் அறிக்கையை நீங்கள்…

அரிய மண் தொழில் கூடம் தீங்கை ஏற்படுத்தக் கூடியது என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே தாம் லைனாஸ் தொழில் கூடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளதை ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக் நிராகரித்துள்ளார். அந்த விவகாரம் மீது லைனாஸ்…

நெடும்பயணம் செய்தவர்கள் டாட்டாரானுக்குப் பக்கத்திலேயே ‘மக்கள் கூட்டம்’ நடத்தினர்

ஹிம்புனான் ஹிஜாவ் நடைப்பயணத்தில் பங்கேற்றோர்,  டாட்டாரான் மெர்டேகாவுக்குப் பக்கத்திலேயே ‘மக்கள் Read More

உங்கள் கருத்து: 13வது பொதுத் தேர்தல் மிகவும் இறுக்கமான போட்டியாக…

""13வது பொதுத் தேர்தலை உங்கள் விருப்பம் போல எப்படி வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். தேர்தல் தினத்தன்று என்ன நிகழ்கின்றது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்." பேராசிரியர்: பிஎன் 120 இடங்களை வெல்லும். உறுதி இல்லாத தொகுதிகள் 24 ஜெரார்ட் லூர்துசாமி: இது தான் பிஎன் -னுக்கு…

வந்திறங்கினால் ஆபத்து; மலேசியப் பயணத்தை ரத்து செய்த ராஜபக்சே!

மலேசியாவில் தமக்கு பெரும் அளவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்த இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே மலேசியாவிற்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறியமுடிகிறது. தவிர்க்கமுடியாத சில காரணங்களால் மலேசிவிற்கான பயணத்தை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இரத்துசெய்துள்ளதாக மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தின் ஊடகப் பிரிவு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளது.…

5வது டோங் ஜோங் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பு

தேசியக் கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிராக சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் இன்று ஏற்பாடு செய்த பேரணியில் 6,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அந்தப் பெருந்திட்டம் தாய்மொழிக் கல்விக்கு பாதகமாக உள்ளது எனக் கூறிக் கொண்டு அதற்கு எதிராக 700க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புக்களின்…

லைனாஸ்-எதிர்ப்பு நடைப்பயணத்தில் 20,000 பேர் சேர்ந்தனர்

பகாங், கெபெங்கில் லைனாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க  குவாந்தானிலிருந்து கோலாலலும்பூருக்கு மேற்கொண்ட 300கிமீ ஹிம்புனான் ஹிஜாவ் நடைப்பயணம் டாட்டாரான் மெர்டேகாவைச் சென்றடைந்துள்ளது. 70 பேருடன்தான் நடைப்பயணம் தொடங்கியது. ஆனால், படிப்படியாக அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. டாட்டாரான் மெர்டேகாவை அடைந்தபோது அந்த எண்ணிக்கை இருபதாயிரமாக பல்கிப்…

பிரதமர்: பிஎன் -னுக்கான சீனர் ஆதரவு நாட்டுக்கு மேலும் வெற்றியைக்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது தலைமைத்துவத்தை விரும்பும் சீனச் சமூகம் தேசிய உருமாற்றத் திட்டங்கள் வழி இந்த நாட்டுக்கு மேலும் வெற்றிகளைக் கொண்டு வர அம்னோ. பிஎன் -னுக்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் தொடங்கும் 66வது அம்னோ பொதுப்…

டாட்டாரான் மெர்டேகா ‘சீரமைப்புப் பணிகளுக்காக’ மீண்டும் மூடப்பட்டது

இன்று ஹிம்புனான் ஹிஜாவ் இயக்கத்தினர் டாட்டாரான் மெர்டேகாவை நோக்கி நடைப்பயணத்தைத் தொடர்ந்துள்ள வேளையில் அது மூடப்பட்டுள்ளது. மெர்டேகா சதுக்கத்தைச்   சீரமைத்து தரமுயர்த்தும் பணிகள் நடப்பதாக கோலாலும்பூர் மாநராண்மைக் கழகம் (டிபிகேஎல்) அறிவித்துள்ளது. இன்று காலை சுமார் 100 போலீசாரும் டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகளும் அங்கிருந்தனர். டாட்டாரான் மெர்டேகாவின் இரு…