மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல், எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதுடன், மலேசியர்களுக்கான உணவுச் செலவையும் அதிகரிக்கக்கூடும். இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால் உர விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே உலகின் சுமார் 50…
பாலிங்கான் இடைத் தேர்தல் மார்ச் 29-இல்
முன்னாள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்முட் காலி செய்த பாலிங்கான் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் மார்ச் 29-இல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காஜாங் இடைத் தேர்தல் முடிந்த ஒரு வாரத்தில் அந்தத் தேர்தல் நடைபெறும். சரவாக் ஆளுனர் பதவி ஏற்பதற்காக அப்துல் தாயிப், அத்தொகுதியை பிப்ரவரி …
சொய் லெக்: ‘கறை படிந்த’ அன்வாரின் கதை முடிப்பார் சியு
மசீச வேட்பாளர் சியு மெய் பன், “களங்கமில்லா ஸ்படிகம்”. அவர், “கறை படிந்த” அன்வார் இப்ராகிமை காஜாங் தேர்தலில் கபளீகரம் செய்வார். காஜாங் இடைத் தேர்தலில் சியுவின் வாய்ப்புப் பற்றி வினவியதற்கு முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் இவ்வாறு சொன்னார். “குத்தலாகக் கூறவில்லை; உண்மையைத்தான் …
அன்வார் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடுமீதான விசாரணை தொடங்கியது
இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுதரப்பு செய்த மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வருகிறது. அதன் விசாரணைக்காக முறையீட்டு நீதிமன்றம்-இன்றும் நாளையுமாக- இரண்டு நாள்களை ஒதுக்கியுள்ளது. மேல்முறையீடு மீதான விசாரணைக்கு மூத்த வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா தலைமை தாங்க அனுமதிக்கக்கூடாது என்று அன்வார் …
தண்ணீர் கட்டணம் உயராது: காலிட்
சிலாங்கூரில் நீர்விநியோகத் தொழில் திருத்தி அமைக்கப்படுவதால் தண்ணீர் கட்டணம் உயரலாம் என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி விடுத்துள்ள எச்சரிக்கையை சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் தள்ளுபடி செய்தார். ரபிஸியின் எச்சரிக்கை பற்றி செய்தியாளர்கள் வின்வியதற்கு சுருக்கமாக “இல்லை” என்றவர் பதிலளித்தார். நீர் விநியோக …
மக்களைப் பாதுகாக்கவே மருத்துவக் கட்டண உயர்வு: அமைச்சர்
சுகாதார அமைச்சு, மக்கள் நலன் கருதியே கடந்த டிசம்பரில் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் உயர்வை அரசிதழில் பதிவு செய்தது என்கிறார் அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம். “அதில் இரகசியம் ஏதுமில்லை”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மலேசிய மருத்துவ சங்கம் இன்னும் கூடுதலான மருத்துவக் கட்டணத்துக்குக் கோரிக்கை விடுத்தது.…
நீர் விநியோகம் மீதான எம்ஓயு: ஒரு வாரத்தில் வெளியிடப்படும்
சிலாங்கூர் அரசு, சர்ச்சைக்குரிய நீர் விநியோகத்தைச் சீரமைக்க கடந்த வாரம் மத்திய அரசுடன் கையொப்பமிட்ட புரிந்துணர்வுக் குறிப்பின் உள்ளடக்கத்தை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடும். இன்று புத்ரா ஜெயாவில், எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், மற்றும் நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலியையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் சந்தித்த பின்னர் …
எம்எம்ஏ: 12 ஆண்டுகளாக மருத்துவக் கட்டணம் உயர்த்தப்படவில்லை
தனியார் மருத்துவக் கட்டணங்கள் திருத்தப்பட்டதற்கு ஒரு பக்கத்தில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கும்வேளையில் மறுபக்கம் மலேசிய மருத்துவச் சங்கம், நீண்டகாலத்துக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் 12 ஆண்டுகளாக மருத்துவக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது. “ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அதைப் பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், அது …
புகைமூட்டம் கலைகிறது
புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருகிறது. இன்று காலை 7மணிக்கு எந்த இடத்திலும் காற்றின் தூய்மைக்கேட்டு அளவு (ஏபிஐ) சுகாதாரத்துக்குக் கேடு செய்யும் அளவுக்கு இல்லை. 28 இடங்களில் ஏபிஐ மிதமான அளவில் இருந்ததாகவும் 23 இடங்களில் ஏபிஐ நல்ல நிலையில் இருந்ததாகவும் சுற்றுச்சூழல் துறை இணையத்தளம் …
மருத்துவக் கட்டணம் உயர்ந்திருக்கிறது…..சேவை மேம்பட்டுள்ளதா?
சேவைகளின் தரம் உயர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தனியார் மருத்துவக் கட்டணத்தை உயர்த்தி இருக்கக்கூடாது என்று மலேசிய பயனீட்டாளர் சங்கக் கூட்டமைப்பு (போம்கா) கூறுகிறது. 2011-இல், போம்கா மருத்துவக் கவனிப்புப் பற்றி 882 புகார்களைப் பெற்றதாகக் கூறிய அதன் உதவித் தலைவர் ரத்னா தேவி நடராஜன், அவற்றில் பெரும்பகுதி தனியார்துறை …
சுஹாகாம்: போலீஸ் பிஏஏ-யைச் சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும்
போலீசார் 2012 அமைதிப்பேரணிச் சட்டத்தை (பிஏஏ) அமல்படுத்துவதில் “சிந்தனைப் போக்கை மாற்றிக்கொண்டு” அமைதியாக ஒன்றுகூட மக்களுக்குள்ள அரசமைப்பு உரிமையை மதிக்க வேண்டும். நேற்றிரவு, போலீஸ் சீரமைப்புமீதான கருத்தரங்கில் பேசிய மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) துணைத் தலைவர் காவ் லேக் டீ இவ்வாறு கூறினார். “ஒரு பேரணி நடந்தால்…
அல்லாஹ் வழக்கு: தேவாலய மனு மீது இன்று பெடரல் நீதிமன்ற…
த ஹெரால்ட் வார இதழுக்கு எதிரான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரி தேவாலயம் செய்துள்ள மனுவை இன்று பெடரல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. புத்ராஜெயாவில் இன்று காலையிலிருந்து பெடரல் நீதிமன்றத்தின் முன்பு இவ்வழக்கின் ஆதரவாளர்களும்…
பேராக் எம்பி நிறுவனம் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப்…
பேராக் மந்திரி புசார் இன்கோபொரேடட், ரிம6 பில்லியன் செலவில் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள ஒரு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளது.. அதன் தலைமை செயல் அதிகாரி அமினுடின் ஹஷிம், கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி மூன்று தடவை இடத்தைக் காலிபண்ணச் …
அஸ்மின்: ஓஎஸ்ஏ-யைக் காரணம்காட்டி நீர்நிர்வாக ஒந்தத்தை மறைக்காதீர்
மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் அதிகாரப்பூர்வ இரகசிய சட்ட(ஓஎஸ்ஏ)த்தின் பின்னால் பதுங்கிக் கொண்டு இரகசிய ஒப்பந்தங்களைச் செய்யக்கூடாது என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார். நீர்நிர்வாக ஒப்பந்தம் பற்றி மாநில மந்திரி புசார் கட்சிக்கும் சிலாங்கூர் மக்களுக்கும் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றாரவர்.…
புகைமூட்டத்தில் பழனிவேலும் மாயமாய் மறைந்து விட்டார்: வேள்பாரி சாடல்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பார்க்கும் தூரத்தை வெகுவாகக் குறைத்து விட்டிருக்கும் புகைமூட்டத்தில் மஇகா தலைவர் ஜி.பழனிவேல் மாயமாய் மறைந்து போனார் எனச் சாடியுள்ளார் எஸ்.வேள்பாரி. இயற்கைவள சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல் புகைமூட்ட நிலவரம் குறித்து மலேசியர்களுக்கு விளக்கம் அளிக்கத் தவறிவிட்டதாக வேள்பாரி குறை கூறினார். கெப்போங் மஇகா தலைவருமான …
3 மாதங்களில் போலீஸ் காவலில் 3 மரணங்கள்: சுவாராம் கவலை
2014-இன் முதல் மூன்று மாதங்களில் போலீஸ் காவலில் மூன்று மரணங்கள் நிகழ்ந்திருப்பது குறித்து சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) கவலை தெரிவித்துள்ளது. ஆகக் கடைசியாக, மார்ச் முதல் நாள் இராமசாமி நாகு என்பார் பாயான் பாரு போலீஸ் நிலையத்தில் ஒரு லாக்-அப் மையத்தில் இறந்தார் என சுவாராம் ஒருங்கிணைப்பாளர் …
‘வருத்தப்படும்’ பிகேஆர் ஆதரவாளர்களைக் குறி வைக்கிறது பிஎன்
பிஎன், 13வது பொதுத் தேர்தலில் பிகேஆருக்கு வாக்களித்ததை எண்ணி வருத்தப்படும் காஜாங் வாக்காளர்களை அடையாளம் காண்பதில் முழு மூச்சாக ஈடுபடும் என்கிறார் அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. பிகேஆரின் லீ சின் சே-யைத் தேர்ந்தெடுத்த அவ்வாக்காளர்கள், அவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்கு வழிவிட்டு சட்டமன்ற உறுப்பினர் …
மருத்துவக் கட்டணங்கள் கமுக்கமாக உயர்த்தப்பட்டுள்ளன
கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு மருத்துவக் கட்டணங்கள் கூடி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது சரிதான். அறுவைச் சிகிச்சைக் கட்டணங்கள் உள்பட எல்லாவகை மருத்துவக் கட்டணங்களும் வெளியில் தெரியாமல் கமுக்கமான முறையில் உயர்த்தப்பட்டுள்ளன. மருத்துவர்களான எம்பிகளைக் கேட்டால் அவர்களுக்கும் இது பற்றித் தெரியவில்லை. “இதைப் பற்றி கடந்த நாடாளுமன்றக் …
பிஎன் எதிர்தாக்குதல் நடத்தும் ஆனால் தனிநபர் தாக்குதலில் ஈடுபடாது
காஜாங் இடைத் தேர்தலில் பிஎன் எதிரணியைத் தாக்கிப் பரப்புரை செய்யும் ஆனால், “தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசாது” என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கூறினார். பிஎன் தலைவர்களுடன் இரகசிய கூட்டம் நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முகைதின், பரப்புரை செய்கையில் பிஎன் கூட்டணி “கண்ணியமாக நடந்து கொள்ளும்”…
குவான் எங்: ‘பாலத்தின் பெயரால் எரிச்சல் அடைகிறோமா? சுத்த பொய்’
இரண்டாவது பினாங்கு பாலத்துக்கு சுல்தான் அப்துல் ஹாலிம் முவா’ட்ஸாம் ஷா பாலம் எனப் பெயர் இடப்பட்டதால் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் எரிச்சல் அடைந்திருப்பதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருக்கிறது. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலாயுவால்தான் இப்படி எல்லாம் செய்தி வெளியிட முடியும் என்று லிம் இன்று …
கே.ஜெ.: பிரிம் உதவித் தொகையால் நிதிச்சுமை அதிகரிக்கவில்லை
பந்துவான் ரக்யாட் 1மலேசியா(பிரிம்) உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரொக்க உதவியால் அரசாங்கத்தின் நிதிச்சுமை கூடும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரது வலைப்பதிவில் கூறி இருப்பதை இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜ்மாலுடின் மறுக்கிறார். உதவித் தொகைகளை நிறுத்தியதால் மிச்சமான பணத்தைக் கொண்டுதான் அரசாங்கம் பிரிம் …
தியான் சுவாவும் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குக் குறி வைக்கிறார்
பிகேஆர் துணைத் தலைவருக்குப் போட்டியிடலாமா என்று பத்து எம்பி தியான் சுவாவும் ஆலோசித்து வருவதைப் பார்க்கையில் அப்பதவிக்குப் போட்டி வலுத்து வருவதுபோல் தெரிகிறது. தியான் சுவாவும் அப்பதவிக்குக் குறி வைத்திருப்பதாக சின் சியு டெய்லியும் குவோங் வா இட் போ-வும் தெரிவித்துள்ளன. தியான் சுவாவைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது அவரும் …
அன்வார் நீர் ஒப்பந்தத்தை ஆதரிக்கிறார், எம்பி-யுடன் தகராறு இல்லை என்றார்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூரும் கூட்டரசு அரசாங்கமும் செய்துகொண்ட நீர் ஒப்பந்தத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொண்டார். புரிந்துணர்வுக் குறிப்பு (எம்ஓயு) கையொப்பமிடுவதற்குமுன் அதன் உள்ளடக்கம் பற்றித் தெரிவிக்காமல் அவர் அலட்சியப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அன்வார் மறுத்தார். “அதை முழுமையாக ஆதரிக்கிறேன். அதை உருவாக்குவதில் நானும் சம்பந்தப்பட்டிருந்தேன். எம்ஓயு …
அஸ்மின்: முதலில் காஜாங், பிறகுதான் கட்சித் தேர்தல்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, கட்சித் தேர்தலில் தம் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுவாரா என்பதைத் தெரிவிக்க மறுத்தார். “இன்னும் முடிவு செய்யவில்லை. இப்போதைக்கு காஜாங்கில் கவனம் செலுத்த விரும்புகிறேன்”, என்றாரவர். அஸ்மின் பிகேஆர் தேர்தல் இயக்குனருமாவார். வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் பிகேஆர் …


