பிரதமர்: பிஎன் -னுக்கான சீனர் ஆதரவு நாட்டுக்கு மேலும் வெற்றியைக்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது தலைமைத்துவத்தை விரும்பும் சீனச் சமூகம் தேசிய உருமாற்றத் திட்டங்கள் வழி இந்த நாட்டுக்கு மேலும் வெற்றிகளைக் கொண்டு வர அம்னோ. பிஎன் -னுக்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் தொடங்கும் 66வது அம்னோ பொதுப்…

டாட்டாரான் மெர்டேகா ‘சீரமைப்புப் பணிகளுக்காக’ மீண்டும் மூடப்பட்டது

இன்று ஹிம்புனான் ஹிஜாவ் இயக்கத்தினர் டாட்டாரான் மெர்டேகாவை நோக்கி நடைப்பயணத்தைத் தொடர்ந்துள்ள வேளையில் அது மூடப்பட்டுள்ளது. மெர்டேகா சதுக்கத்தைச்   சீரமைத்து தரமுயர்த்தும் பணிகள் நடப்பதாக கோலாலும்பூர் மாநராண்மைக் கழகம் (டிபிகேஎல்) அறிவித்துள்ளது. இன்று காலை சுமார் 100 போலீசாரும் டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகளும் அங்கிருந்தனர். டாட்டாரான் மெர்டேகாவின் இரு…

ஹிம்புனான் ஹிஜாவ் டாட்டாரான் தடுப்புகளை மீறிச் செல்லாது

ஹிம்புனான் ஹிஜாவ் இன்றிரவு டாட்டாரான் மெர்டேகாவில் முகாமிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால், டாட்டாரானைச் சுற்றிலும் தடுப்புகள் போடப்பட்டிருப்பதால் அத்தடுப்புகளைத் தாண்டிச்செல்வதில்லை என அது முடிவு செய்துள்ளது. கோம்பாக், தாமான் மெலாவாரில் பாஸின் முன்னாள் தலைமையகத்தில் சுமார் 2,000 ஆதரவாளரிடையே பேசிய ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வொங் தாக், சட்டத்தைப் பின்பற்ற…

டோங் ஜோங்: மலேசிய கல்வி பெருந்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைதியான…

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கடந்த செப்டெம்பர் 11 இல் மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2015 முன்னறிக்கையை வெளியிட்டார். அத்திட்டம் நாட்டின் கல்வி தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும், கல்வியின் வழி  தேசிய ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவ்விரு நோக்கங்களும் வரவேற்கத்தக்கது. ஆனால், அவற்றை அடைவதற்காக…

பேராசிரியர்: பிஎன் 120 இடங்களை வெல்லும், உறுதியில்லாத தொகுதிகள் 24

தேர்தல் இன்று நடைபெற்றால் பிஎன் 120 நாடாளுமன்ற இடங்களிலும் பக்காத்தான் ராக்யாட் 70 இடங்களிலும்  வெல்லும். 24 தொகுதிகள் உறுதியற்றவை என பேராசிரியர் சம்சுல் அம்ரி பஹாருதின் கூறினார். மலேசியாவின் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள் 222. அவற்றுக்கு அடுத்த ஜுன் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். சாதாரண பெரும்பான்மையான…

ஆட்சி மாற்றம் மீது பிரதமர்: சீராக இருந்தால் ஏன் பழுதுபார்க்க…

நடப்பு நிர்வாகம் மலேசியாவை மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு மாற்றியுள்ளது. அதனால் அரசாங்க மாற்றம் தேவை இல்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அரபு எழுச்சி பற்றிக் குறிப்பிட்ட அவர், அத்தகைய எழுச்சியை மலேசியர்கள் இங்கு நிகழ அனுமதிக்கக் கூடாது என்றார் அவர். "அரசாங்கம் சீராக இருக்கும்…

பிரஞ்சு வழக்குரைஞர்களைப் பார்த்து அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது ?

"ஒர் அந்நியரை தொழில் நிபுணத்துவ வழக்குரைஞர் ஒருவரை ‘bodoh' என அழைப்பது, அம்னோ தலைவர்களுடைய கீழ்த்தரமான போக்கைக் காட்டுகின்றது." சுவாராம்: வரவேற்கப்பட்டாலும் வரவேற்கப்படா விட்டாலும் பிரஞ்சு வழக்குரைஞர்கள் வருவர் குழப்பம் இல்லாதவன்: மலேசியாவுக்குள் அந்த பிரஞ்சு வழக்குரைஞர்கள் நுழைவதை மறுப்பதின் மூலமும் அவர்களை அச்சுறுத்துவதின் மூலமும் வாய்மொழியாக அவர்களை…

கிளந்தான் தடை: முஸ்லிம் அல்லாதாருக்கு கருணை காட்டுங்கள் என்கிறார் ஆட்சி…

முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆண்களுக்கு முடி திருத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அமலாக்கும் போது கோத்தா பாரு நகராட்சி மன்றம் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தால் கருணை காட்ட வேண்டும் என கிளந்தான் மாநில முதுநிலை ஆட்சி மன்ற உறுப்பினர் அனுவார் தான் அப்துல்லா கூறுகிறார்.…

பிரதமர்: மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுங்கள்

மலேசியர்கள் மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுவதோடு மகளிருக்கு எதிரான எல்லா வகையான வன்முறைகளையும் துடைத்தொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். "நான் அரசியல்வாதி என்ற முறையில் மட்டுமின்றி ஒரு கணவர், ஒரு தந்தை என்ற முறையிலும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.…

இஸ்ரேல் எதிர்ப்புக் குழு பெல்டாவிடம் மகஜர் கொடுக்க முடியவில்லை

'யூத நிறுவனம்' எனக் கூறப்படும் நிறுவனம் ஒன்றுக்கு செம்பனை எண்ணெயை விற்பதை நிறுத்திக் கொள்ளுமாறு பெல்டாவைக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை பாஸ் தலைமையில் சென்ற 700 பேர் கொண்ட குழு அதனிடம் கொடுக்க முடியவில்லை. கோலாலம்பூர் ஜாலான் செமாராக்கில் உள்ள பெல்டா தலைமையகக் கட்டிடத்தின் காவற்காரர்கள் நுழைவாயிலைத்…

லிம் குவான் எங்: மக்களவை பதில் ‘குளறுபடி’ உண்மையான பிஎன்…

சுயேச்சை சீனப் பள்ளிகள் விவகாரம் மீது வழங்கப்பட்ட நாடாளுமன்ற பதிலைத் திருத்துவதற்குக் கல்வி அமைச்சு எடுத்துள்ள அவமானத்தை தரும் நடவடிக்கை பிஎன் கூட்டரசு அரசாங்கத்தின் உண்மையான நிறத்தை அம்பலப்படுத்து விட்டது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். "நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் முஹைடின் யாசின்…

பாஸ்: நஜிப் ‘அசைக்க முடியாத’ டாக்டர் மகாதீரைக் கண்டு அஞ்சுகிறார்

அரசியல் எதிரிகளை கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் வேட்டையாடும் 'அசைக்க முடியாத' முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டைக் கண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அஞ்சுவதாக பாஸ் கட்சி கூறிக் கொண்டுள்ளது. "மகாதீர் விரும்புவதை நஜிப் பின்பற்றுகிறார். தமக்கு பாதகமான கோப்புக்கள் வெளியே வரும் என அஞ்சி அந்த…

‘மெக்சிஸ்-ஏர்செல் விசாரணையில் நஸ்ரி இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும்’

அரசாங்கம் வெளிநாடுகளுடன் அணுக்கமாக ஒத்துழைப்பதாகக் கூறிக்கொள்ளும் அப்துல் நஸ்ரி அசீஸ், மெக்சிஸ்-ஏர்செல் விசாரணையில் மலேசியா ஒத்துழைப்புத் தரவில்லை என்று இந்தியா முறையிட்டிருப்பதற்குப் பதில் கூறியாக வேண்டும்.  மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எல்லைதாண்டிய ஊழல் விவகாரங்களில் வெளிநாடுகளுடன் அணுக்கமாக ஒத்துழைப்பதாக நஸ்ரி கூறிக்கொள்வதால் இந்தக் குறைக்கூறலுக்கு அவர் பதில்…

எம்ஏஎஸ்-இன் ‘பணம் பறிபோகிறது’

வெளிக்குத்தகைக்கு விடுவதால், மலேசிய விமான நிறுவனத்தின் (எம்ஏஎஸ்) “பணமெல்லாம் பறிபோவதாக” ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமட் கூறுகிறார். “மாஸ் ஊழியர்கள், அவர்கள் செய்த பணிகள் எல்லாம் இப்போது வெளியாருக்குக் குத்தகைக்கு விடப்படுவதாக என்னிடம் புகார் செய்துள்ளனர். “பயணப் பெட்டிகளையும் சரக்குகளையும் ஏற்றி இறக்க வங்காள தேசிகளையும்…

அந்த ‘மலிவான நிலத்தின்’ நடப்பு மதிப்பு 300 மில்லியன் ரிங்கிட்…

பிஎன் -னுக்கு மலிவாக விற்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தை மதிப்பை 20 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 300 மில்லியன் ரிங்கிட்டாக செக்கிஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லிம் உயர்த்தியுள்ளார். அவர் முதலில் மொத்தம் 33.5 ஏக்கார் பரப்புள்ள நிலம் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலையில்…

‘விளம்பர ஆசை’ பிடித்த டிஏபி என பிஎன் சாடல்

எதிர்வரும் தேர்தலில் மீண்டும் வேட்பாளராகும் வாய்பைப் பெருக்கிக்கொள்ள தனது சட்டமன்ற உறுப்பினர்களைத் தயார்படுத்தும் டிஏபி-இன் முயற்சிமீது வெறுப்பைக் கொட்டுகிறது பிஎன். “மக்கள் தங்கள் எதிர்காலத்தை எந்தக் கட்சியிடம் ஒப்படைப்பது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும்”, என்று கொம்டார் பிஎன் ஒருக்கிணைப்பாளர் லோ சை தெக் கூறினார். டிஏபி-இன் “உண்மை…

உத்துசானுக்கு எதிராக நுருல் இஸ்ஸா அவதூறு வழக்கு தொடுக்கிறார்

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார்,  இம்மாதத் தொடக்கத்தில் சுபாங் ஜெயா  Full Gospel Tabernacle தேவாலயத்தில் தாம் பேசியதைத் திரித்துக் கூறியதாகக் குற்றம்சாட்டி அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய தம் வழக்குரைஞரும் பாஸ்…

தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புக்கான குத்தகையாளர்கள் தேர்வு குறித்து IBC அதிருப்தி

இந்திய குத்தகையாளர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளை சீரமைப்பதற்கு குத்தகைகள் வழங்கியதற்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, குத்தகையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் வருத்தத்திற்குரியது என மலேசிய இந்தியர் கட்டுமானம் மற்றும் குத்தகையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சு. சிவா கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்தாவது; கடந்த…

முடி திருத்துவோர் சர்ச்சை பக்காத்தானிலிருந்து டிஏபி விலக வேண்டும் என்ற…

சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய 'கௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு' பாஸ் 'திரும்பத் திரும்ப அத்துமீறல்களில்' ஈடுபடுவதால் டிஏபி பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து விலக வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது. "சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய கௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் பாஸ் தொடர்ந்து அத்துமீறல்களிலும் ஒடுக்குமுறையிலும் ஈடுபடுவதை தடுக்கும்…

வோங்: டெம்ப்ளர் பங்களா உரிமையாளர்களில் அம்னோ தலைவர்களும் அடங்குவர்

சிலாங்கூர் மாநிலச் சட்ட மன்றக் கூட்டத்தில் அம்னோ உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய டெம்ப்ளர் பார்க் என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தில் உள்ள பங்களா உரிமையாளர்களில் பல அம்னோ தலைவர்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பங்களா உரிமையாளர்களில் முன்னாள் அமைச்சர் ஒருவர், எம்பி ஒருவர், பல முன்னாள் மாநிலச் சட்ட மன்ற…

கல்வி அமைச்சு எழுத்துப்பூர்வமான பதிலை திருத்தியது

"இப்போது நீங்கள் பார்க்கின்றீர்கள், ஆனால் இப்போது நீங்கள் பார்க்க முடியாது" என்ற கதை நேற்று நாடாளுமன்றத்தில் நடந்தது. எழுத்துப்பூர்மாக வழங்கப்பட்ட கல்வி அமைச்சு பதில் மீட்டுக் கொள்ளப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது தான் அந்தக் கதை. சீன வாக்காளர்களுடைய எதிர்ப்பைத் தவிர்க்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்பட்டதாக கருதப்படுகின்றது. தனியார் பள்ளிகள்,…

‘கிறிஸ்துவர்களை முஸ்லிம்கள் என விருப்பம் போல சபா NRD பட்டியலிடுகிறது’

தேசியப் பதிவுத் துறை சபாவில் பின் அல்லது பிந்தி என்ற சொற்களைத் தங்களது பெயர்களில் கொண்டுள்ள கிறிஸ்துவர்களை முஸ்லிம்கள் என அவர்களுடைய அடையாளக் கார்டுகளில் விருப்பம் போல் குறிப்பது கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ளது. தேசியப் பதிவுத் துறை அதனைச் செய்யக் கூடாது என MCCBCHST என்ற மலேசிய பௌத்த,…

ராஜபக்சேவை மலேசியாவுக்குள் அனுமதிக்க கூடாது; அனுமதித்தால் முற்றுகைப் போராட்டம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் இன்று கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின. ஒருவேளை, போர்க்குற்றவாளி…