பெர்சே புத்தம் புதிய இசி அமைக்க பேரரசரிடம் மனு செய்யும்

தற்போதையம் தேர்தல் ஆணையத்திற்கு மாற்றாக புதிய தேர்தல் ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று பேரரசருக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பெர்சே அமைப்பின் வழிகாட்டு குழு மேற்கொள்ளும். பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகாவிடமிருந்து தலைமைத்துவப் பொறுப்பை இன்று ஏரற்றுக்கொண்ட மரியா சின் அப்துல்லா…

பினாங்கில் குறைந்த-விலை வீடு வாங்குவோருக்கு நற்செய்தி

பினாங்கு மாநில அரசு வீட்டுடமை பங்கிட்டுத் திட்டமொன்றைத் தொடங்கவுள்ளது. இது,  குறைந்த வருமானம் பெறுவோரும் வீட்டுடமையாளர் ஆவதற்கு உதவும். கட்டுப்படியான விலையில் வீடு வாங்க விரும்பும் பலருக்கு வங்கிகளிடமிருந்து 90விழுக்காடு 100 விழுக்காடு கடன்பெற முடிவதில்லை என்பதால் அரசு இத்திட்டத்தைக் கொண்டுவருவதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.…

தடை உத்தரவு இருந்தாலும் கம்போங் ரயில்வேயில் தீபாவளி உபசரிப்பு நடக்கும்

மேம்பாட்டு நிறுவனமான ஒய்டிஎல், கம்போங் ரயில்வே பகுதியில்  மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெற்று வைத்திருந்தாலும்  குடியிருப்பாளர்கள், இன்று அப்பகுதியில் கடைசி தீபாவளி உபசரிப்பை ஒன்றுகூடி நடத்துவது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ரயில்வே ஊழியர்களான தங்கள் முன்னோர்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை…

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளத்தில் 20விழுக்காட்டை கல்வி நிதிக்கு வழங்குவர்

அடுத்த ஆண்டு கணிசமான அளவு சம்பள உயர்வு பெறும் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் அதில் ஒரு பகுதியை மாநில கல்வி நிதிக்கு வழங்கலாம் என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பரிந்துரைத்திருக்கிறார். இதன் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமுடன் கலந்துபேசிய அன்வார், அவர்கள் ரிம1,000…

மஇகா தேர்தல் தொடங்கியது: உயர் பதவிகளுக்கு 96பேர் போட்டி

மஇகா ஆண்டுக்கூட்டம் மலாக்காவில் நடக்கிறது. அதில்  உயர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. தலைவராக ஜி.பழனிவேலும் துணைத் தலைவராக டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மற்ற உயர் பதவிகளுக்குத்தான் போட்டி. உதவித் தலைவர் பதவிகளுக்கு எண்மர் போட்டியிடுகின்றனர். அதேவேளை  செயல்குழுவுக்கு 88 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 1,452 பேராளர்கள்…

‘அரசு-ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசை எதிர்ப்பது வழக்கமல்ல’

அரசு-ஆதரவு சட்டமன்ற  உறுப்பினர்கள்,  அரசு கொண்டு வரும்  மசோதாக்களை  எதிர்க்கும்  வழக்கம் இல்லை என்று  பத்து கேவ்ஸ்  சட்டமன்ற உறுபினர் அமிருடின் ஷாரி  (இடம்) கூறினார். அதனால்தான்  அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினர்  அஸ்மின் அலி சம்பள உயர்வு  மீதான விவாதத்தின்போது அதை   எதிர்க்காமல்  சட்டமன்றத்துக்கு வெளியில்  அதைக்  குறைகூறினார்…

மின்கட்டணம் உயர்ந்தால் கடும் எதிர்ப்பு தோன்றும்

அரசாங்கம் உயர்ந்துவரும் மின் உற்பத்திச் செலவை மக்கள் தலையில் கட்ட முனைந்தால் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை எரிபொருள், பசுமை தொழிநுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி, அடுத்த ஆண்டு மின்கட்டணம் 10-20 விழுக்காடு உயரலாம் எனக் கூறி இருந்தார். இதன்வழி அரசாங்கத்துக்கு, ஆண்டுதோறும் மின்…

குனோங் ராப்பார்ட் பள்ளிக்கு வீரா செய்ததென்ன?

-மு.குலசேகரன், நாடாளும்அன்ற உறுப்பினர், நவம்பர் 29, 2013.    குனோங் ராப்பார்ட் தமிழ்ப்பள்ளிக்கு நிலமும் மானியமும் ஒதுக்கப்பட்டும் இன்னும் அதற்கு விடிவு பிறக்கவில்லை என்று பெற்றோர்கள் முறையிட்டதாக இன்று (29-11-13) பத்திரிகையில் வெளியாகி உள்ளது.  இதற்கு யார் காரணம் ?   2011இல் ஈப்போ லிட்டல் இந்தியாவில் தீபாவளி சந்தைக்கு வருகை…

மஇகா கூட்டம் நடத்தப்பட்ட விதம் சரியில்லை: ஒரு தலைவரின் முறைப்பாடு

மஇகா தேர்தலுக்கு ஒரு நாள் எஞ்சியுள்ள வேளையில்,  கட்சியின்  செராஸ் தலைவர் ஒருவர் , தாம் சங்கப் பதிவகத்தில்(ஆர்ஓஎஸ்) கொடுத்த புகார்மீது கட்சித் தலைமை இன்னும் நடவடிக்கை எடுக்காதிருக்கிறது என்று முறையிட்டிருக்கிறார். கடந்த ஜூலையில் நடந்த கிளைத் தேர்தல்கள்  முறையாக நடத்தப்படவில்லை என்று புகார்தாரர் கூறுகிறார். அது பற்றி…

சட்டமன்றத் தலைவர் மஇகா தேர்தலில் மும்முரமாக இருக்கிறார் என்று சொன்ன…

எதிரணி  பிரதிநிதிகள் சட்டமன்றங்களிலிருந்தும்  நாடாளுமன்றத்திலிருந்தும் வெளியேற்றப்படும் படலம் தொடர்கிறது. ஆகக் கடைசியாக பேராக் சட்டமன்றத்திலிருந்து டிஏபி-இன் கெபாயாங் சட்டமன்ற உறுப்பினர் இங்கா கொர் மிங் வெளியேற்றப்பட்டார். சட்டமன்றத் தலைவர் எஸ்,கே. தேவமணியின் கவனம் மன்ற நடவடிக்கைகளில் இல்லை, மஇகா தேர்தல்மீதுதான் இருக்கிறது என்று சொல்லப்போக, இங்கா சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.…

பினாங்கு சட்டமன்ற உறுப்பினருக்கும் சம்பள உயர்வு. ஆனால், அது சர்ச்சைக்குரியதாக…

பினாங்கு சட்டமன்றத்தின் 40 உறுப்பினர்களும் விரைவில் சம்பள உயர்வு பெறுவார்கள். அவர்களின் சம்பளம் 88 விழுக்காடு உயரலாம் எனத் தெரிகிறது. இதற்கான சட்டமுன்வரைவு அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். நடப்புச் சட்டமன்றக் கூட்டம் டிசம்பர் 17-இல் முடிவுக்கு வரும்போது முதலமைச்சர் லிம் குவான் எங் அதன் தொடர்பில் அறிவிப்பு…

சம்பள உயர்வுமீதான விவாதத்தின்போது அஸ்மின் மவுனமாக இருந்தது ஏன்?

சிலாங்கூரில் அரசு-ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத் தலைவரான அஸ்மின் அலி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வை இப்போது குறை சொல்கிறார்.  ஆனால், அது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது அவர்  எதுவும் பேசவில்லை என மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “அது விவாதத்துக்கு வந்தபோது  அவர் (அஸ்மின்)  அங்கிருந்தார். ஆனால்,…

அமினுல்ரஷிட் வழக்கில் ஏஜி குளறுபடி செய்துவிட்டார்

பள்ளிமாணவர் அமினுல்ரஷிட்டின்  இறப்புக்கு எவரும் பொறுப்பாக்கப்படவில்லை.  இந்நிலைக்குச் சட்டத்துறை தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல்தான் காரணம் என்று அமினுல்ரஷிட் குடும்பத்து வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர். அவ்வழக்கில் கார்ப்பரல்  ஜெனாய்ன்  சுபி  விடுவிக்கப்பட்டது  சரிதான் என்று செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றம்  தீர்ப்பளித்திருப்பது பற்றிக் கருத்துரைத்த  வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரனும் லத்திபா கோயாவும்,…

ஜோகூர் மக்கள் மீது இஸ்லாத்தை வலிந்து திணிக்கக் கூடாது

ஜோகூரில், வெள்ளிக்கிழமைகளில் விற்பனை மையங்களையும் கேளிக்கை மையங்களையும் இரண்டு மணி நேரத்துக்கு மூடி வைக்கலாம் என்று ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆயுப்  ரஹ்மாட்(வலம்)  முன்மொழிந்திருப்பதற்குக் கெராக்கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் கவனம் வேறு திசைகளில் செல்லாமல் அவர்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உதவியாக இருக்கும் என்பதால் அவர் அப்படி ஒரு…

பிஎன் இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கும் அபாயம் : வேதா எச்சரிக்கை

கோயில்கள் உடைக்கப்படுவது  தொடர்ந்தால்  பிஎன் அரசாங்கம்  இந்தியர்கள் அதன்மீது வைத்துள்ள நம்பிக்கையை  இழக்கும் அபாயம்  இருப்பதாக மலேசிய  இண்ட்ராப் இயக்கம்  எச்சரித்துள்ளது. இண்ட்ராபுடன் செய்துகொண்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  பிஎன்னுக்கு நினைவுபடுத்திய  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி,  “மனம்போன போக்கில்” ஆலயங்களை உடைத்தெறிவதை நிறுத்திக்கொண்டு இண்ட்ராபுடன் பேச்சு நடத்தி அதற்குத் தீர்வுகாண…

நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு சம்பளம் மக்களின் வரிப்பணத்திலிருந்து

பினாங்கில் பிஎன் தோற்ற தொகுதிகளில் செயல்படும் தேர்ந்தெடுக்கப்படாத நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சம்பளம் அரசாங்கக் கருவூலத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் அவர்களுக்கு ரிம5,860, சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரிம3,630 மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது என்றார்.  பாயான் பாரு எம்பி, சிம் ட்சே ட்சின் கேட்ட கேள்விக்கு அமைச்சர்…

சண்முகசிவா: “மருந்திலிருந்தும்…மனத்திலிருந்தும்…” நூல் வெளியீடு

மருத்துவர் மா. சண்முகசிவா எழுதியுள்ள “மருந்திலிருந்தும்…மனதிலிருந்தும்…” என்ற நூல் மைஸ்கீல்ஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் வெளியீடு காண்கிறது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை நடைபெறும் இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் அறவாரியம் ஆலோசகர் மற்றும் சுவாராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் நூல் ஆசிரியர்…

இசி சுதந்திரமாக செயல்படுவதை நாடாளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்

தேர்தல் ஆணைய  (இசி)த்தின்  சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு,  குறிப்பாக அது  தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி  அமைப்பதிலும் தேர்தல்களை நடத்துவதிலும்  சுதந்திரமாக செயல்படுவதை  உறுதிப்படுத்த  அரசமைப்பு, சட்ட வழிகாட்டல்கள்  உருவாக்கப்பட வேண்டும்.  அதை விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்  என மனித உரிமை மேம்பாட்டுச் சங்கம் (புரொஹெம்)…

அன்வார்: சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பள உயர்வு அதிகம்தான்

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களின்  சம்பள உயர்வு  “கூடுதலான ஒன்றுதான்”  என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். சரவாக் மாநில அரசை  முன்மாதிரியாகக் காட்டி அச்செயலை,   நியாயப்படுத்த முடியாது என நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். “எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம்தான்”,  என்று குறிப்பிட்ட  அன்வார் , சம்பளம்  இந்த…

முகைதின் வாக்குறுதி அளித்த ரிம2.5 மில்லியனைத் தமிழ்ப் பள்ளிக்குக் கொடுக்க…

மூன்றாண்டுகளுக்குமுன் பேராக்கில் குனோங் ரபாட் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்துக்கு  ரிம2.5மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக அளித்த வாக்குறுதியைத் துணைப் பிரதமர் முகைதின் நிறைவேற்ற வேண்டும் என டிஏபி எம்பிகள் இருவர் வலியுறுத்தினார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்னர்,  அப்பள்ளி  அதன் விரிவாக்கத்துக்காக 2.4 ஏக்கர் நிலத்தைப் பெற்ற பிறகு, ஈப்போவில் ஒரு கூட்டத்தில்  பேசிய…

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு தள்ளிவைக்கப்படாது- தெங்கு அட்னான் திட்டவட்டம்

கேஎல் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு 2014 ஜனவரியில்  அமலாக்கப்படும், அது தள்ளிவைக்கப்படாது எனக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார். ஆனால், வரிசெலுத்துவோர் உடனடியாக அதைச் செலுத்த வேண்டியதில்லை. மார்ச் மாதம்வரை அவர்கள் காத்திருக்கலாம். அதற்கிடையில் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அமைச்சர்…

கேஎல் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்த்து டிசம்பர் 16-இல்…

கூட்டரசுத் தலைநகரின் பக்காத்தான் ரக்யாட் எம்பி-கள், கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) தலைமைகத்துக்கு எதிரில் டிசம்பர் 16-இல்  மாபெரும் கண்டனக் கூட்டத்தை நடத்துவர். அக்கூட்டத்தில்  கோலாலும்பூர் குடியிருப்பாளர்களிடம் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் கடிதங்களையும் அவர்கள் வழங்குவர். . சொத்துவரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிப்பதற்கான இறுதி…

சிலாங்கூர் அரசுக்குச் சொந்த நலனில்தான் அதிக அக்கறை: சாடுகிறார் ஹிஷாம்

சிலாங்கூர்  பக்காத்தான் ரக்யாட்  அரசு மக்கள் நலனைவிட சொந்த நலனுக்கே  மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதைத்தான்  சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சம்பள உயர்வு காண்பிக்கிறது என  அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் சாடினார். நகர்ப்புற வறுமை, வருமான ஏற்றதாழ்வு போன்ற விவகாரங்களை எதிர்த்துப்…