பிஎஸ்என் தலைவர் நியமனம் குறித்து பாஸ் கேள்வி எழுப்பியது

பொதுச் சேவைத்துறை இயக்குனராக இருந்தபோது ‘பொதுநலன் கருதி’ பணிநீக்கம் செய்யப்பட்ட அபு பக்கார் அப்துல்லா, பேங்க் சிம்பானான் நேசனல் (பிஎஸ்என்) தலைவராக நியமிக்கப்பட்டது எப்படி என்று பாஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று, பாஸின் பொக்கொக் சேனா எம்பி மாபுஸ் ஒமாருக்கு வழங்கிய எழுத்துவடிவிலான பதிலில் பிரதமர்துறை அமைச்சர் ஷாஹிடான்…

நீதிமன்றத்தை அவமதித்த இப்ராகிம் அலிக்கு ஒரு நாள் சிறை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் ரிம20,000 அபராதமும் விதித்தது. சைனுடின் சாலே எழுதிய கட்டுரை ஒன்றை பெர்காசா வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக அவருக்கு இத்தண்டனை. அக்கட்டுரையில் இப்போது பணிஓய்வு பெற்றுவிட்ட நீதிபதி  வி. டி. சிங்கத்தின் நேர்மை…

பொம் பொம் தீவு, சொத்துவரி அதிகரிப்பு மீதான தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன

இன்று மக்களவையில் மாற்றரசுக் கட்சியினர் கொண்டுவந்த இரண்டு தீர்மானங்கள் மக்களவை துணைத் தலைவர் ரொனால்ட் கியாண்டியால் தள்ளுபடி செய்யப்ப்பட்டன. ஒன்று பொம் பொம் தீவில் தைவானிய தம்பதிகளில் ஒருவர் கொல்லப்பட்டு இன்னொருவர் கடத்தப்பட்ட சம்பவம் பற்றியது; இன்னொன்று கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்தின் சொத்துவரி அதிகரிப்பு பற்றியது. முதல் தீர்மானத்தை…

மசீச: பாஸ் கட்சியைத் தற்காப்பதை பக்காத்தான் நிறுத்த வேண்டும்

டிஏபியும் பிகேஆரும் பாஸ் கட்சியின் கடும் போக்காளர்களைத் தற்காத்துப் பேசுவதை விடுத்து 1993-இல் இயற்றப்பட்ட கிளந்தான் ஷியாரியா குற்றவியல் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்வதற்கு வழிகாண வேண்டும் என மசீச வலியுறுத்தியுள்ளது. நாடும் சரி, கிளந்தான் மாநிலமும் சரி இரண்டு வகை குற்றவியல் சட்டங்களைக் கொண்டு செயல்பட முடியாது…

அமைச்சர் சொல்வதுபோல் வழக்குரைஞர் கட்டணம் ‘இரகசியமானது’ அன்று

குதப்புணர்ச்சி வழக்கின் மேல்முறையீட்டில் வழக்குரைஞராக முன்னிலை ஆகும் ஷாபி அப்துல்லாவுக்கு அரசாங்கம் கொடுத்த கட்டணத்தை வெளியிடுவதற்கில்லை எனவும் அது வழக்குரைஞர்-கட்சிக்காரர் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதால் இரகசியமானது எனவும் நடப்பில் சட்ட அமைச்சர் நன்சி ஷுக்ரி கூறியிருப்பது தவறான விளக்கம் என டிஏபி எம்பி ஒருவர் கூறினார்.. “ஒரு வழக்குரைஞர் …

ரோஸ்மாவின் ஜெட் விமானப் பயணத்திற்கு மக்கள் பணம்!

இம்மாதத் தொடக்கத்தில் கட்டாருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நஜிப்பின் துணையார் ரோஸ்மா மன்சூர் அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்தியது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் துறை அமைச்சர் சகாடின் காசிம் குடைந்தெடுக்கப்பட்டார். அரசாங்க விதிகளின்படி ரோஸ்மாவுக்கு அதுபோன்ற சலுகைகள் அனுமதிக்கப்படுகின்றனவா என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.…

கார்களுக்கு 12-ஆண்டு வரம்பு கட்டுவது குடும்பங்களைக் கடனாளிகளாக ஆக்கிவிடும்

கார் கடனைக் கட்டி முடிக்கவே ஒன்பதாண்டுகள் ஆகிறது என்கிறபோது,  12 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்கள் பாதுகாப்பற்றவை என்ற விதி நடைமுறைப்படுத்தப்பட்டால் “பல ஆயிரம் மலேசியர்கள்” பாதிக்கப்படுவர்  என்கிறது பிகேஆர். “அதன்படி கார் கடனைத் திருப்பிச் செலுத்திய மூன்றாண்டுகளிலேயே அவர்கள் இன்னொரு கடனை எடுக்க வேண்டி இருக்கும்”, என பாண்டான்…

‘ரிம10 மில்லியனை இடமாற்றம் செய்த நெகிரி எம்பிமீது ஏன் நடவடிக்கை…

நெகிரி செம்பிலான் மந்திரி புசார்(எம்பி) முகம்மட் ஹசான் ரிம10 மில்லியனை  நாணய மாற்று வணிகர்  மூலமாக இடமாற்றம் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டத்துறை தலைவர் அலுவலகம்  “இரட்டை நியாயத்தை”க் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 2014 பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட அந்தோனி லொக் (டிஏபி-சிரம்பான்), 2009-இலிருந்தே அதிகாரிகள்…

மகாதிர் ஐஜேஎன் -இல் சேர்க்கப்பட்டார்

டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று தேசிய இருதயக் கழகத்தில் (ஐஜேஎன்) சேர்க்கப்பட்டார். நெஞ்சில் ஏற்பட்ட பாதிப்புக்காக முன்னாள் பிரதமருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர் மகாதிர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது. மகாதிர் சில நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் எனத் தெரிகிறது.

டிஏபி புஜுட் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

டிஏபி, புஜுட் சட்டமன்ற உறுப்பினர் போங் பாவ் டெக்-கைக் கட்சியிலிருந்து விலக்கியது. அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சிக்கு கண்டிப்பாக செலுத்த வேண்டிய மாதக் கட்டணத்தைச் செலுத்தவில்லை அதனால் கட்சிநீக்கம் செய்யப்பட்டார் எனக்  கட்சியின் ஒழுங்குக் குழுத் தலைவர் டான் கொக் வாய் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். புஜுட்,…

மாற்றுத்திறனாளி செனட்டராக நியமனம்

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகப் போராடும் சமூகஆர்வலரான பத்மாவதி கிருஷ்ணா இன்று செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பத்மாவதியும் ஒரு மாற்றுத் திறனாளிதான்.  இரண்டாவது தடவையாக மாற்றுத் திறனாளி ஒருவர் செனட்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரைப் பாராட்டிய டேவான் நெகாரா தலைவர் அபு ஸ்ஹார், “மாற்றுத்திறன் பெண்ணாக இருந்தாலும் அவையில் துணிச்சலுடன் பேச…

சரவாக்கில் கால்வைக்காதே: பெர்காசாவுக்கு எச்சரிக்கை

சரவாக்கில் ஒரு கிளையை அமைக்கும் பெர்காசாவின் திட்டத்துக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சரவாக்கில் கிளை அமைக்கும் எண்ணத்தை பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி நேற்று வெளியிட்டிருந்தார். சாபா கிளை அமைந்ததை அடுத்து அவர் அவ்வாறு அறிவித்தார். “மாநில அரசு,  இந்தத் தீவிரவாதிகள் சரவாக்…

சுரேந்திரன்: திரும்பி வருவேன்…..பழிதீர்ப்பேன்

நவம்பர் 14-இல், நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட என்.சுரேந்திரனிடம் அவரின் அடுத்த திட்டம் என்னவென்று வினவியதற்கு,  “திரும்பி வருவேன், பழிதீர்ப்பேன்” என்றார். “இதற்குமுன் என்ன செய்தேனோ அதைத்  தொடர்வேன். பொதுநலன்  சம்பந்தப்பட்ட  விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவேன்”, என்றவர் சொன்னார். நாடற்ற மக்கள், சிவப்பு அடையாள அட்டை,…

ஸுனார்: கார்ட்டுன் நூலை அச்சடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது

மலேசியாவில் அரசியல் கேலிச் சித்திரம் வரைவது ஆபத்தான வேலையாக இருக்கிறது என்கிறார் பிரபல கேலிச்சித்திர ஓவியர் ஸுனார். அவரது புதிய கேலிச்சித்திர நூலான ‘Pirates of the Carry-BN'-னை அச்சடிக்க   10 அச்சகங்களை அணுகியபோது பத்தும் மறுத்து விட்டன.  இறுதியாக ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்டது.   “அவர்களும் தங்கள் பெயரைப்…

நாடாளுமன்றத்தில் ஹூடுட் தீர்மானத்தை ஷஹிடான் ஆதரிப்பார்

நாடாளுமன்றத்தில் ஹூடுட் சட்டம் மீதான தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிக்க தயார் என பிரதமர் துறையில் நாடாளுமன்ற விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் அமைச்சரான ஷஹிடான் காசிம் கூறியுள்ளார். “நாங்கள் அதை ஆதரிக்கத் தயார். ஆனால், எல்லா எம்பிகளும் ஆதரித்தால்தான் அது ஏற்கப்படும். “பாஸ் ஒரு சிறுபான்மைக் கட்சி. அதன் பக்காத்தான்…

மக்கள் வெறுப்படையுமுன்னர் போய்விடுங்கள்: சொய் லெக்-குக்கு உத்துசான் அறிவுரை

கட்சியில் வரவேற்பு இல்லை என்பதால் மசீச தலைவர் சுவா சொய் லெக் விலகிக் கொள்வதே மேல் என்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு கூறியுள்ளது. “சொய் லெக்கின் காலம் முடிந்து விட்டது. காலவரம்பை மீறி தங்க வேண்டாம்.  இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மக்கள் வெறுப்படையும்வரை காத்திராதீர்கள்”,…

இலங்கை மாநாட்டில் மலேசியா கலந்துகொண்டதற்கு இளைஞர்கள் கண்டனம்

நேற்று, கோலாலும்பூர், பிரிக்பீல்ட்சில், இளைஞர்கள் நால்வர், ஸ்ரீலங்கா காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் மலேசியா கலந்துகொண்டதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் கைகளில், “போர்க்குற்றவாளி காமன்வெல் மாநாட்டுத் தலைவர்”, “ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்துங்கள்”, “ஸ்ரீலங்காவில் இனஒழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்”, “நஜிப், வாயை மூடிக்கொண்டிருப்பதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்ற…

யூ.பி.எஸ்.ஆர்: சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், நவம்பர் 16, 2013. இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற எல்லா மாணவர்களுக்கும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற மாநிலங்களுடன்…

மலேசியாகினி இல்லம்: ஒரு செங்கல் வாங்கி உதவுங்கள்

கடந்த 14 வருடங்களாகப் பல போராட்டங்களுக்கிடையில் செயல்பட்டு வந்த மலேசியாகினி அதற்கென ஒரு நிரந்தர இல்லத்தை வாங்கியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வில்லம் அதன் புதிய செயலாகமாக இயங்கும். அக்கட்டடம் பெட்டாலிங் ஜெயா, செக்சன் 51, பிஜே51 பிஸ்னெஸ் பார்க் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து மலேசியர்களுக்கு இணையதளம்…

அனைத்தையும் விட மிக முக்கியமானது மனித உரிமைகள், பிரதமர் நவீன்

மோரீசஸ் நாட்டில் 2015 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டிற்கு தலைமை ஏற்கவிருக்கும் அந்நாட்டின் பிரதமர் நவீன் சந்திரா ராம்குலாம் மனித உரிமைகள் மிக முக்கியமானது என்று கூறுகிறார். சிறீலங்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2013 ஆண்டிற்கான காமன்வெல்த மாநாட்டில் பிரதமர் நவீன் கலந்துகொள்ளவில்லை. சிறீ…

சுரேந்திரனின் இடைநீக்கம் ‘நிலை ஆணைகளுக்கு எதிரான ஒன்று’

பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரனுக்கு  நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாத இடைநீக்கம் என்பது “அதிகப்படியான” ஒன்று எனவும் அது நிலை ஆணைகளை மீறிய ஒன்று எனவும் சுதந்திரத்துக்குக் குரல்கொடுக்கும் வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியுள்ளது. சுரேந்திரன் அவருக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துகளால் ஆத்திரமடைந்திருந்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா (வலம்) “சுய-நல”…

வீ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை மசீச இளைஞர்கள் விரும்புகிறார்கள்

மசீச இளைஞர் பகுதியின் மத்திய செயல்குழு, அதன் தலைவர் வீ கா சியோங்கும் துணைத் தலைவர் மா ஹங் சூன்னும் முறையே துணைத் தலைவர், உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட வேண்டும் என ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. “மசீசவுக்கு இளம் இரத்தம் தேவை என்று முடிவுசெய்து மத்திய செயல்குழுவினர் என்னையும்…

ஜப்பானிய நிறுவனம் பினாங்கில் ரிம1.3 பில்லியன் முதலீடு

உலகம் முழுவதும் பொருளாதாரம் சற்று சுணக்கம் கண்டுவரும் வேளையில் ஜப்பானிய நிறுவனமொன்று பினாங்கில் ரிம1.3 பில்லியன் முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறது. அதன் பயனாக அடுத்த ஆண்டில் 1,500 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே மலேசியாவில் செயல்பட்டுவரும் இபிடென் எலக்ட்ரோனிக்ஸ் மலேசியா என்னும் நிறுவனம், பினாங்கு அறிவியல்…