ரிம270 மில்லியன் செலவிட்டும் பள்ளிகளில் ஆங்கிலமொழி தரம் உயரவில்லை

யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள், மாணவர்களின் ஆங்கிலமொழி தரம் தாழ்ந்து போயிருப்பதைக் காண்பிக்கின்றன. அப்படியானால்,  பள்ளிகளில் ஆங்கிலமொழி தரத்தை  உயர்த்த  ஆலோசகர்களுக்கு ரிம270 மில்லியன்  செலவிடப்பட்டதே,  அது என்னவானது என்று  கேள்வி  எழுப்புகிறார்  புக்கிட் பெண்டேரா எம்பி ஜைரில் கீர் ஜொஹாரி. மூன்றாண்டுகளாக ஆலோசகர்களை அமர்த்தி அவர்களின்  அறிவுரைகளுக்காக பெரும்தொகை…

சிறப்புத் தூதர்களின் சம்பளத்தைக் குறைக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

முன்பு அமைச்சர்களாக இருந்து இப்போது சிறப்புத் தூதர்களாக உள்ள மூவருக்கு வழங்கப்படும் அதிகப்படியான சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றம் தள்ளுபடி செய்தது. சிறப்புத் தூதர்களாக இருக்கும் அந்த மூவர்- முன்னாள் ரொம்பின் எம்பி ஜமாலுடின் ஜர்ஜிஸ்(அமெரிக்கா), மசீச முன்னாள் தலைவர் ஒங் கா திங்…

செர்டாங் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஐசியு பகுதியில் உட்கூரை இடிந்து விழுந்தது

செர்டாங் மருத்துவமனையில் உட்கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. கடந்த மூன்றாண்டுகளில் நான்காவது தடவையாக இப்படி நிகழ்ந்துள்ளது. இந்தத் தடவை, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர கவனிப்புப் பகுதியில் உட்கூரையிலிருந்து சில மரத்துண்டுகள் விழுந்ததாக ஹரியான் மெட்ரோ அறிவித்துள்ளது. சம்பவம் அதிகாலை மணி 1.30க்கு நிகழ்ந்ததாக மருத்துவமனை இயக்குனர்…

அம்னோவுக்காக மாணவர்கள் ‘கோணல்’ வரலாற்றில் தேர்ச்சிபெற வேண்டியுள்ளது

எஸ்பிஎம் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சிபெறுவதைக் கட்டாயமாக்கியதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக Kempen Sejarah Sebenar Malaysia (KemSMS) கருதுகிறது. அதனால்  மோசமான விளைவுகள் நேரலாம் என KemSMS தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம் எச்சரித்தார். “வரலாற்றுப் பாடத்தில் அரசியலைப் புகுத்துவது இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் ஒற்றுமையையும்…

சுரேந்திரன் 6மாத இடைநீக்கம்; அவையில் அமளி

பிரதமர்துறை பாடாங் செராய் எம்பி, என்.சுரேந்திரனுக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தை அடுத்து அவர் ஆறு மாதங்களுக்கு நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இடைநீக்கம் அறிவிக்கப்பட்டதும் அவரின் பக்காத்தான் ரக்யாட் சகாக்கள் அதை “சட்டவிரோதமானது” என்றுகூறி கூச்சலிட்டனர். பாக்காத்தான் எம்பிகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்களில் சிலர் தீர்மான அறிக்கையைக் கிழித்தெறிந்தனர்; சிலர்…

என்மீது அதிருப்தியா, தீர்மானம் கொண்டு வாருங்கள்’-பண்டிகார்

‘மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, தாம் குறைகூறலை ஏற்பதில்லை என்று கூறப்படுவதை மறுத்தார். தம்மீது மனநிறைவுகொள்ளாத எம்பிகள் தாராளமாக தீர்மானம் கொண்டுவரலாம் என்றாரவர். “ஒரு தீர்மானம் கொண்டு வந்து என் குறைநிறைகளை விமர்சிப்பதை வரவேற்கிறேன்”. இன்று பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரனை அவையிலிருந்து வெளியேறும்படி மீண்டும் உத்தரவிட்ட…

பிரதமர் கமலா சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்

நாளை சிறீ லங்காவில் தொடங்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் டிரினிடாட் டுபேகோ பிரதமர் கமலா பெர்ஷாத் பிஸ்செசார் கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, சீனாவுக்கான அவரது அதிகாரப்பூர்வமான வருகையை முடித்துக் கொண்ட பின்னர் சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் டிரினிடாட் டுபேகோ நாட்டின்…

‘அம்னோ போலீசைப் பயன்படுத்திக் கொண்டதை ஜாஹிட் ஹமிடி மறைக்கிறார்’

அக்டோபர் 20 அம்னோ தேர்தலுக்கு உதவியாக போலீஸ் படை பயன்படுத்திக்கொள்ளப்பட்டதா என்று தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிட் அளித்த பதிலில் “நேர்மையில்லை” என டிஏபி எம்பி ஒருவர் கூறுகிறார். ஜாஹிட் தம் பதிலில், அம்னோ பேராளர் கூட்டத்தின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அந்நிகழ்வுக்கு வந்திருந்த…

பழனிவேல் எந்த உலகத்தில் இருக்கிறார் ?

-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 14, 2013. நாளை வெள்ளிக்கிழமை (15-11-13) நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் நஜிப் இலங்கையில் கூடவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின்  தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது குறித்து கேள்வியெழுப்பப் போவதாக ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் கூறியதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. "நான் பிரதமருடன் வெள்ளிக் கிழமை பேசப்போகிறேன்” என்ற…

உதயகுமாரைச் சந்திக்க அவரின் குடும்பதாருக்கும் வழக்குரைஞருக்கும் அனுமதி மறுப்பு

நேற்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட இண்ட்ராப் நடப்பில் தலைவர் பி.உதயகுமாரை, அவரின் குடும்பத்தாரும் வழக்குரைஞரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றம் அதற்கு அனுமதித்திருந்தாலும் போலீசார் அனுமதிக்கவில்லை என உதயகுமாரின் வழக்குரைஞர்  எம். மனோகரன் கூறினார். “காஜாங் சிறைச்சாலைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டரும் ஏழெட்டு போலீஸ்காரர்களும் அவரைத் தரதரவென்று  இழுத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் முரட்டுத்தனமாக…

சிறீ லங்கா:பிரதமரின் செயல் நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும்.

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர், நவம்பர் 13, 2013.   மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் இலங்கையில் நடைபெறும்  காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டு அடையாளத்திற்கு நாட்டைப் பிரதிநிதிப்பதை விட நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிநிதிக்கும் வண்ணம் அம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே, மலேசியர்களுக்கு,…

பிரதமரே தயவு செய்து புறக்கணியுங்கள், 147 அமைப்புகள் மீண்டும் வலியுறுத்து!

பொதுநலவாய மாநாட்டுக்குப் பிரதமர் இலங்கை செல்வார் என்பது உறுதியாகியுள்ள நிலையிலும், அவர் தனது முடிவை மாற்றக் கோரி 147 சமூக அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. இது சார்பாக 33 பக்கங்கள் கொண்ட ஒரு மகஜரை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர்.…

பரந்து விரிந்து கிடக்கும் சைட் மொக்தாரின் தொழில் சாம்ராஜ்யம்

வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை பரிவர்த்தனை முடிவுக்கு வந்தபோது சைட் மொக்தார் அல்புகாரியின் தலையாய தொழில்நிறுவனமான எம்எம்சி பங்குகளின் சந்தை மதிப்பு ரிம8.22 பில்லியன். அதில், சைட் மொக்தாருக்குள்ள பங்குரிமை 51.76 விழுக்காடு. அதன் மதிப்பு ரிம4.25 பில்லியன். அவரது இன்னொரு முக்கிய நிறுவனமான டிஆர்பி ஹைகோமின் சந்தை மதிப்பு…

சுப்ரமணியம் ‘பொய்யான அறிக்கை’ கொடுத்தார்: தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்,  ஈராண்டுகளுக்குமுன் அனைத்துலக தொழிலாளர் நிறுவன(ஐஎல்ஓ)த்திடம் ‘பொய்யான அறிக்கை’ஒன்றைக் கொடுத்தார் என்று கூறி இரண்டு தொழிற்சங்கங்கள்- மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி), தேசிய வங்கி ஊழியர் சங்கம்(என்யுபிஇ) ஆகியவை- அமைச்சரைச்  சாடியுள்ளன. அத்தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டிய பிகேஆர் கோலா…

காமன்வெல்த் மாநாட்டிற்கு ரோஸ்மாவுடன் செல்கிறார் நஜிப்

சிறீ லங்காவில் நவம்பர் 15 லிருந்து 17 வரையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசிய குழுவுக்கு தலைமையேற்று  நஜிப் அவரது துணைவியாருடன் சிறீ லங்கா செல்வார் என்று பெர்னாமா செய்தி கூறுகிறது. அவ்விருவருடன் வெளிவிவகார அமைச்சர் அனிபா அமான், பிரதமர்துறை, வெளிவிவகார அமைச்சு, அலைத்துலக வாணிப…

14வது பொதுத் தேர்தலில் 135 தொகுதிகளைக் குறி வைக்கிறார் கிட்…

அடுத்த பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற எண்ணும் பக்காத்தான் ரக்யாட் 135 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல வேண்டும் என லிம் கிட் சீயாங் கூறினார். பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவை ஒவ்வொன்றும் 45 இடங்களில் வெல்வதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அப்படி வென்றால் நாடாளுமன்றத்தில் பக்காத்தானின் பெரும்பான்மை…

அரசாங்கம் தனியார் ஆலோசனைச் சேவைக்கு ரிம7.2பில்லியன் செலவிட்டது

அரசாங்கம்  2009-இலிருந்து தனியார் ஆலோசனை நிறுவனங்களின்  சேவைக்காக ரிம7.2 பில்லியனைச் செலவிட்டிருக்கிறது  என நேற்று,  நாடாளுமன்றத்தில் பிகேஆர் கிளானா ஜெயா எம்பி வொங் சென்னுக்கு வழங்கப்பட்ட எழுத்து வடிவிலான பதிலில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி பார்த்தால்  மாதத்துக்கு  ரிம125 மில்லியன் அல்லது  ஒரு நாளைக்கு ரிம4 மில்லியன் செலவிடப்பட்டிருக்கிறது என…

தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? பக்காத்தான் எம்பிகள் கேள்வி

பக்காத்தான் ரக்யாட் எம்பிகளின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும் அந்த நிதியைக் கண்ணால் பார்க்க முடிவதில்லை என்கிறார் பத்து கவான் எம்பி கஸ்தூரி பட்டு. அந்த நிதி ஒதுக்கீடு மாநில மேம்பாட்டு அதிகாரிகள் (எஸ்டிஓ) வழியாக வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அந்நிதி எதிரணி எம்பிகள் கைக்குக்…

எம்பிகேஜெ நெருக்கடிக்குத் தீர்வு காணாதிருக்கும் சிலாங்கூர் அரசுக்குக் கண்டனம்

காஜாங் முனிசிபல் மன்ற (எம்பிகேஜெ) கவுன்சிலர்களுக்கும் தலைவருக்குமிடையில் நிலவும் சர்ச்சைக்கு சிலாங்கூர் அரசு தீர்வு காண முடியாமல் தத்தளிப்பதாக மசீச குறைகூறியுள்ளது. அச்சர்ச்சை பல மாதங்களாக நீடிக்கிறது என மசீச விளம்பரப் பிரிவுத் தலைவர் யாப் பியான் ஹொன் தெரிவித்தார். “அவர்களின் சர்ச்சையால் காஜாங் மக்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.…

பக்கதான்: பிரதமர் சிறீ லங்கா மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

இம்மாதம் சிறீ லங்காவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் நஜிப் ரசாக் புறக்கணிக்க வேண்டும் என்று பக்கத்தான் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறீ லங்கா அரசின் மோசமான மனித உரிமை மீறல்களை அவர்கள் சுட்டிக் காட்டினர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறீ லங்காவில் நடந்த உள்நாட்டில் போரில்…

வேதா கூறிவிட்டார்: இந்து விவகாரங்களில் தலையிட தெங்கு அட்னானுக்கு உரிமை…

ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் சில பகுதிகள் உடைக்கப்பட்டதைத் தற்காத்துப் பேசிய கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூரை இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி சாடினார். “சிறிய கோயில், பெரிய கோயில் என்று விளக்கமளிக்கும் தகுதி” தெங்கு அட்னானுக்கு இல்லை என்றாரவர். நீண்ட மவுனத்துக்குப் பின் வாய் திறந்துள்ள பிரதமர்துறை  துணை…

மகாதிர்: முஸ்லிம்கள் மறுமை வாழ்வைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக்…

மக்கள், மறுமை வாழ்வுக்கு ஆயத்தமாவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது போதாது. முன்னேற்றம் காண விரும்பினால் இம்மை வாழ்வில் தொழில்நுட்ப அறிவு பெறுவதிலும் நாட்டம் செலுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தியுள்ளார். அரபு உலகம் சமய அறிவைப் பெருக்குவதில் மட்டுமே குறியாக இருந்ததால்தான் வீழ்ச்சி…

மரியா சின் பெர்சே 2.0-இன் புதிய தலைவராகலாம்

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் கூட்டமைப்பு(பெர்சே)க்கு, மனித உரிமை போராளியான மரியா சின் அப்துல்லா,  நவம்பர் 30-க்குப் பின்னர் தலைவராவார் எனத் தெரிகிறது. பெர்சேயில் இடம்பெற்றுள்ள 19 என்ஜிஓ-களில் 13,  தலைவர் பதவிக்கு மரியா சின்னை நியமனம் செய்துள்ளன. இதனைத் தெரிவித்த மூவரடங்கிய தேர்தல் குழு, அம்மாதம் 30 ஆம்…