உலகம் புகைபிடிப்பதைக் குறைத்து வந்தாலும், புகையிலை இன்னும் உலகளவில் ஐந்து பெரியவர்களில் ஒருவரைப் பிடிக்கிறது, இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான தடுக்கக்கூடிய இறப்புகள் ஏற்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) திங்களன்று வெளியிட்ட அறிக்கையின்படி, மின்-சிகரெட்டுகள் நிக்கோடின் போதைப்பொருளின் புதிய அலையைத் தூண்டிவிடுகின்றன என்று சின்ஹுவா தெரிவித்துள்ளது.…
மசீச தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஒழுங்கு வாரியத்துக்கு…
அரசாங்கப் பதவிகளை ஏற்கக்கூடாது என்ற கட்சியின் முடிவை தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மீறினாரா என்பதை விசாரிக்கும் அதிகாரம் மசீச ஒழுங்கு வாரியத்துக்கு உண்டு. தன்னிடம் செய்யப்படும் புகார்கள்மீது வாரியம் விசாரணை மேற்கொள்ளும் என அதன் செயலாளர் பென்சன் பூ கூறினார். கட்சியின் அமைப்புவிதிகள் தலைவருக்கு சிறப்புச்…
ரபிஸி: எரிபொருள் விலையை உயர்த்துமுன்னர் கார் வரிகளைக் குறைக்க வேண்டும்
காருக்கு அளவுகடந்த வரி செலுத்த வேண்டியிருப்பதால் பிஎன் அரசாங்கம் பெட்ரோலின் விலையை உயர்த்துவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பிகேஆர் எம்பி, ரபிஸி ரம்லி கூறினார். “வரிவிதிப்பின் காரணமாக மலேசியர்கள் மற்ற நாடுகளைவிட ஒரு மடங்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது”, என பிகேஆர் வியூக இயக்குனருமான ரபிஸி…
பூலாவ் திக்குஸ் கூட்டத்தில் பினாங்கு அரசுக்குக் கண்டனம்
பினாங்கு அரசு, பல சாலைகளை ஒருவழிச் சாலைகளாக மாற்றியதற்காகக் கடுமையாகக் குறைகூறப்பட்டுள்ளது. உச்ச நேரங்களிலும் வார இறுதிகளிலும் விடுமுறை காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும் ஜாலான் பர்மா, ஜாலான் கெலாவாய், கர்னி டிரைவ் ஆகிய சாலைகள் ஒருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதன் தொடர்பில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில்…
100 நாள் சிறையில் இருந்தாலும் போராட்டத்தைக் கைவிடவில்லை உதயகுமார்
இந்தியர்களுக்காக குரல் கொடுப்பதில் வருத்தமே கிடையாது என்கிறார் இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார். அதுவும் 100 நாள் கடுமையான சிறைவாழ்க்கையை அனுபவித்த பின்னரும் அவர் அதில் உறுதியுடன் இருக்கிறார். தேச நிந்தனை குற்றம் சாட்டப்பட்டு அதற்காக இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் உதயகுமார் செய்தி ஊடகங்களுக்கு ஒரு கடிதம்…
தேசிய சேவை முகாமைச் சீர்படுத்த ஒரு வாரக் கெடு
பாலேக் பூலாவ் White Resort முகாமைச் சீர்படுத்துமாறு அதன் இயக்குனருக்குத் தேசிய சேவை பயிற்சித் துறை (பிஎல்கேஎன்) உத்தரவிட்டுள்ளது. “அதனைச் சுத்தப்படுத்த ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக்கிறோம். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என பிஎல்கேஎன் தலைமை இயக்குனர் ரொசைனோர் ரம்லி கூறினார். இன்று பிற்பகல் அம்முகாமைப் பார்வையிட்ட…
பழனிவேல்: சுப்ரா போட்டியின்றி துணைத் தலைவராக வேண்டும்
மஇகா தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.பழனிவேல், துணைத் தலைவர் டாக்டர் எஸ், சுப்ரமணியமும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். தம் நிலைப்பாட்டுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை, அது பிரதமரின் முன்னிலையில் அவரும் சுப்ரமணியமும் செய்துகொண்ட ஏற்பாட்டின் விளைவாக இருக்கலாம். ஆனால், உதவித் தலைவர் பதவிக்கு…
மகாதிர்: அன்வார் ஏன் புரொஜெக்ட் ஐசி-யைத் தடுக்கவில்லை?
‘புரொஜெக்ட் ஐசி’ பற்றித் தாம் அறிந்திருக்கவில்லை என்றது முழுப் பொய் என்று குறை சொல்வோர், அன்வார் இப்ராகிம் அந்த விவகாரம் தொடர்பில் மெளனமாக இருக்கிறாரே அவரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டியதுதானே என்று காட்டமாக உரைத்தார். தாம் பிரதமராக இருந்த காலத்தில் ‘புரொஜெக்ட் ஐசி’ நடந்திருந்தால் அப்போது துணைப்…
சைபுடின்: சீனமொழியை ஒழிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை
முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா, புதிதாகக் கொண்டுவரப்பட்ட கல்வி செயல்திட்டத்துக்கு சீன மொழியை ஒழித்துக்கட்டும் நோக்கம் கிடையாது என்றே நம்புகிறார். “அது, தொடக்கநிலைப் பள்ளிகளில் சீன மொழியை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அனுமானிப்பது சரியல்ல. பகாசா மலேசியா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் (மாணவர்களின்) புலமையை அதிகரிப்பதே…
புரிதல் உடன்பாட்டில் முன்னேற்றமில்லை என இண்ட்ராப் அதிருப்தி
இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி அரசாங்கப் பதவி ஏற்று 100 நாள்களுக்குமேல் ஆகிவிட்டன ஆனால், பிஎன்னுடன் செய்துகொள்ளப்பட்ட 32-அம்ச உடன்பாட்டில், ஒரே ஒரு விசயத்தைத் தவிர்த்து, எவ்வித முன்னேற்றமும் காணப்படாமல் இருப்பதாக இண்ட்ராப் கூறுகிறது. பிரதமர்துறையில் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது மட்டுமே ஒரு முன்னேற்றம். “அப்பிரிவின் தலைவரிடம் (வேதமூர்த்தி)…
தேசிய சேவை முகாமில் நிலைமை ‘சிறையைவிட மோசமாகவுள்ளது’
பாலேக் பூலாவ் தேசிய சேவை முகாமின் வாழ்க்கை வசதிகள் “சிறைச்சாலையில் உள்ளத்தைவிட மோசமாகவுள்ளது” என்று கூறி அங்குள்ள பயிற்சியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். துருப் பிடித்த, உடைந்த கட்டில்களில் படுக்க வேண்டியிருப்பதாகவும் கறைபடிந்த தலையணைகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குளியலறைகளில் தண்ணீர் தேங்கிக் கிடப்பதாகவும் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் செய்திருக்கிறார்கள்.…
பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் தாழ்ந்து போனது ஏன் என ஆராய வேண்டும்-…
கல்வி அமைச்சு பல்கலைக்கழகங்களின் தரவரிசையை எப்போதும் கண்காணித்து வருவதுடன் அவை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு இணையாக விளங்க தேவையான உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளது. இவ்வாறு தெரிவித்த துணைப் பிரதமர் முகைதின் யாசின், பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் ஏற்றஇறக்கம் நிகழ்வது இயல்பான ஒன்றுதான் என்றார். “அது ஒன்றும் புதிதல்ல. அண்மையில் அறிவிக்கப்பட்ட…
மசீச: செயல்திட்டத்தை விளக்கும் பொறுப்பு இட்ரிசுக்கு உண்டு
கல்வி செயல்திட்டம் பிடிக்காத பெற்றோர் அவர்களின் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கலாம் என்று கருத்துரைத்த கல்வி அமைச்சர்,II, இட்ரிஸ் ஜூஸோவைச் சாடுவோர் வரிசையில் மசீச-வும் சேர்ந்து கொண்டிருக்கிறது. செயல்திட்டம்மீது நிபுணர்களும், அரசுசாரா அமைப்புகளும் பொதுமக்களும் 55,000-க்கு மேற்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர் என மசீச இளைஞர் கல்விப் பிரிவு …
கழிவறை கேமிராக்களை அகற்றுமாறு அமைச்சு உத்தரவு
எஸ்எம்கே ஸ்ரீ செந்தோசா கழிவறைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை உடனடியாக அகற்றுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. “கழிவறையில் அது இருப்பது சரியல்ல. அதை எடுத்துவிடுமாறு கூறியுள்ளோம்”, என கல்வி அமைச்சர் (II), இட்ரிஸ் ஜூஸோ, புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்பள்ளி அமைச்சின் அனுமதியின்றி ரிம100,000 செலவில் 64 கேமிராக்களைப்…
சிலாங்கூரின் நீர் விநியோகத் தொழில் ஆண்டு இறுதிக்குள் திருத்தி அமைக்கப்படும்
மாநில நீர் விநியோகத் தொழிலைத் திருத்தி அமைக்கும் விவகாரம் டிசம்பர் 31-க்குள் முடிவு செய்யப்படும் எனக் கூட்டரசு அரசாங்கம் சிலாங்கூர் அரசுக்கு உறுதி அளித்துள்ளது. அதன் தொடர்பில் மாநில அரசு முன்வைத்த வாதங்களும் உண்மைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பதாக எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி செப்டம்பர்…
குடியிருப்பாளர்கள் சபாஷை நீதிமன்றத்துக்கு இழுக்கிறார்கள்
அம்பாங்கையும் பாண்டானையும் சேர்ந்த 15 குடியிருப்பாளர்கள், நீர் விநியோகத் தடையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சபாஷ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரி பயனீட்டாளர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார்கள். கடந்த டிசம்பரிலும் இவ்வாண்டு ஆகஸ்டிலும் நீர் விநியோகத்தில் பெருமளவு தடங்கல் ஏற்பட்டதாக அவர்கள் கூறிக்கொண்டனர். 1999ஆம் ஆண்டு பயனீட்டாளர் சட்டத்தின்கீழ் அவர்கள் இழப்பீடு…
‘எச்எம் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை ஒலிப்பதிவு உறுதிப்படுத்துகிறது’
தலைமையாசிரியருக்கும் பெற்றோருக்குமிடையில் நடந்த சந்திப்பின் ஒலிப்பதிவு ஒன்றில் மன்னிப்பு கேட்டதாக எதுவும் பதிவாகவில்லை என்று எஸ்கே பிரிஸ்தானா பள்ளிப் பணியாளர்கள் கூறுகின்றனர். “செய்தித்தாள்களில் வந்திருக்கும் அவ்வளவும் தப்பு”, என்று கூறிய ஒருவர்- அவர் தம் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை- “தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை அந்த ஒலிப்பதிவு நிரூபிக்கும்”,…
அமைச்சர்: சில தரப்புகள் இன விவகாரங்களைத் தூண்டி விட முயல்கின்றன
சில தரப்புகள், பள்ளிகளில் நடப்பனவற்றையெல்லாம் இன விவகாரங்களாக மாற்ற முயல்கின்றன என்று கல்வி அமைச்சர் II இட்ரிஸ் ஜூஸோ குற்றம் சாட்டியுள்ளார். எஸ்கே பிரிஸ்தானா குளியலறை விவகாரம் பற்றியும் ரவாங்கில் ஒரு இந்திய மாணவனை ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படும் விவகாரம் பற்றியும் கருத்துரைத்த அமைச்சர், சமுதாயத்துக்கு மன்னிக்கும் மனம்…
உதயகுமாரைச் சந்திக்க விரும்புகிறார் குவான் எங்
பினாங்கு முதலமைச்சரும் டிஏபி தலைவருமான லிம் குவான் எங், சிறையில் உள்ள இண்ட்ராப் தலைவரைச் சந்திக்க ஆர்வம் கொண்டிருக்கிறார். உதயகுமாரைச் சந்திக்க சிறைத்துறை தலைமை இயக்குனர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார் என்பதால் உள்துறை அமைச்சரிடம் முறையீடு செய்துகொள்ளப்போவதாய் அவர் தெரிவித்தார். அவரின் விருப்பத்துக்குப் பின்னே அரசியல் நோக்கம்…
தலைமையாசிரியர் மன்னிப்பு: பொய் சொல்வது யார்?
உங்கள் கருத்து ‘கண்ணியமற்ற, நேர்மையற்ற அந்தத் தலைமையாசிரியரை மன்னிப்பு கேட்கும்படி மாநிலக் கல்வித் துறை பணிக்க வேண்டும்’. மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுக்கிறார் தலைமை ஆசிரியர் டான்: எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா தலைமை ஆசிரியர் முகம்மட் நாசிர் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். ஆனால், மலேசியன் தமிழன் டுடே அமைப்பின்…
தாண்டா புத்ரா இரண்டாவது வாரத்தில் படுத்துக்கொண்டது
மலேசியத் திரைப்படங்களில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான படம் ‘தாண்டா புத்ரா’ என்பதில் ஐயமில்லை. சர்ச்சையின் காரணமாகவே பரவலான விளம்பரமும் கிடைத்தது அப்படத்துக்கு. ஓர் ஆண்டுக்கு மேலாக வெளியிடாமல் வைத்திருந்து இறுதியில் ஆகஸ்ட் 29-இல், திரையிடப்பட்ட அப்படம், முதல் வாரத்தில் நல்ல வசூலைக் கண்ட 10 படங்களின் வரிசையில் 6-வது இடத்தில்…
மகாதிர்: ‘புரொஜெக்ட் ஐசி பற்றி அறியேன்’
கள்ளக் குடியேறிகளுக்குக் குடியுரிமை கொடுப்பதற்குக் காரணமான இருந்தது என்று சொல்லப்படும் ‘புரொஜெக்ட் ஐசி’ அல்லது ‘புரொஜெக்ட் மகாதிர்’ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறார் டாக்டர் மகாதிர். சாபாவில், கள்ளக் குடியேறிகள் மீது விசாரணை நடத்தும் அரச ஆணையத்திடம் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர், “இப்போதுதான் அதைக் கேள்விப்படுகிறேன்”,என்றார்.…
சபா ஆர்சிஐ: இன்று மகாதிர் சாட்சியம் அளிக்கிறார்
சபாவில் அந்நியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது சம்பந்தமாக நடந்து வரும் அரச விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று முன்னாள் பிரதமர் மாகாதிர் முகமட் சாட்சியமளிக்கிறார். அந்த ஆணையத்தின் விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவிற்கு வரவிருக்கும் வேளையில் மகாதிர் சாட்சியமளிக்கிறார். அந்நியர்களுக்கு அடையாள அட்டை வழங்கியதில் மலேசியாவின் பிரதமராக 22…
தாண்டா புத்ராவைத் திரையிடும் முக்ரிசுக்கு எம்பி கண்டனம்
கெடா மந்திரி புசார் முகிரிஸ் மகாதிர், தாண்டா புத்ரா திரைப்படத்தை அரசின் ஏற்பாட்டில் விஸ்மா டாருல் அமானில் திரையிடுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் அலோர் ஸ்டார் எம்பி, கூய் ஹிசியாவ் லியோங். முக்ரிசைத் தவிர்த்து வேறு எந்த மந்திரி புசாருக்கும் ஏன் பிரதமருக்கும்கூட தாண்டா புத்ரா படத்தை அதிகாரப்பூர்வமாக …