அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு குடும்பத்துடன் பிச்சை எடுத்த விவசாயி!

ஆந்திராவில் 25 ஏக்கர் நிலத்தை மீட்க அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி விவசாயி குடும்பத்துடன் பிச்சை எடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயியான இவருக்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் மாதவரம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த…

புயல் நிவாரணம்.. வருவாய் துறையை மிரட்டும் அரசு!

கஜா புயல் தாக்கி 35 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அரசு அறிவித்த நிவாரணம் 50 சதவீதம் ஊர்களுக்கு கூட வந்து சேரவில்லை. வரும் நிவாரணமும் ஒரு கிராமத்திற்கு 50 சதவீதம் பேருக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. புயல் பாதித்த போது 100 சதவீதம் பாதிப்பு என்று வருவாய்துறையினர் அரசுக்கு அறிக்கை கொடுத்தனர்.…

’இந்தியாவில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது! ’-கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர்…

“இந்தியாவில் புற்று நோய் தாக்கம், கடந்த ஆறு வருடங்களில் 15.7% அதிகரித்திருப்பதாக  தகவல்கள்  வருகின்றன. இதுபற்றி அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? அப்படியெனில் கடந்த மூன்று வருடங்களாக  மாநில வாரியாக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அரசு தருமா? புற்றுநோயை தடுப்பதற்காக ,  புற்று நோய்க்கான சிகிச்சை செலவுகளை…

தஞ்சை பெரியகோவிலில் எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கலாம் – உயர்நீதிமன்ற…

தஞ்சை பெரியகோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பழமை, பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில்  கோயில் வளாகத்தில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.  மதம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட…

வேற வழியே இல்லை.. அரசியல் அழுத்தம் இருக்கத்தான் செய்யும்.. பொன்…

சென்னை: 'வேறு வழியே இல்லை. நேர்மையாக இருப்பவர்களுக்கு அரசியல் அழுத்தம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கும்" என்று பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு கமல் பதிலளித்து உள்ளார். சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திரைப்பட தயாரிப்பு சங்கத்தில் நடக்கும் பிரச்னை, பொன்.…

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவது எப்போது? தலைமை அதிகாரி கருத்து

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலையை எப்போது திறக்கமுடியும் என்பது குறித்து ஸ்டெர்லைட் காப்பரின் முதன்மை செயல் அலுவலர் பி.ராம்நாத் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தூத்துக்குடியில் நூறு கோடி ரூபாய் செலவில் ஒரு ஸ்மார்ட் பள்ளியையும் உலகத் தரம்…

”ரிசர்வ் வங்கியில் பணம் இல்லாததால் தாமதம்; விரைவில் உங்கள் கணக்கில்…

2014 நாடாளுமன்ற தேர்தலின்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என பிரதமர் நரேந்திர மோதி வாக்குறுதி அளித்தார். மேலும் 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வது குறித்து…

ஸ்டெர்லைட் வேண்டாம்: கருப்பு ஆடைகளை கொடியில் போட்டு பெண்கள் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சில பகுதிகளில் பெண்கள் தங்களது ஆடைகளை வீடுகளில் கருப்பு கொடியாக கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு ஆலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "இதனை எதிர்த்து தமிழக…

பொன்.மாணிக்கவேல் Vs தமிழக காவல்துறை: மோதல் முற்றுகிறது

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியான பொன். மாணிக்கவேல் மீது, அவருக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் இன்றும் காவல்துறை தலைவரை சந்தித்துப் புகார் அளித்ததோடு, செய்தியாளர்களை சந்தித்தும் விளக்கமளித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள் காணாமல் போனால் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு…

9 வயதில் டாக்டர் பட்டம் பெறும் வீர தமிழ்ச் சிறுமி…

திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த பிரிஷா என்ற 9 வயது மாணவி, பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரிஷா இளம் வயதிலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று, நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். பிரிஷா அவரது ஒன்பது வயதிற்குள்…

டெல்லியில் வன்புணர்வு செய்யப்பட்ட 3 வயது சிறுமி கவலைக்கிடம் –…

டெல்லியில் பேருந்தில் இளம்பெண் நிர்பயா கூட்டு வன்புணர்வுக்கு ஆளான சம்பவத்தின் நினைவு நாளில் அதே டெல்லியில் மூன்று வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குழந்தையின் வீடு உள்ள கட்டடத்தின் பாதுகாவலர் அந்த குழந்தையை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது…

1,636 குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் தமிழகத்தில் தடுத்து நிறுத்தம்

குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பான, யுனிசெஃப், தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் ஐ.சி.சி.டபிள்யூ., என்ற, குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, 'தமிழகத்தில் குழந்தை திருமணங்களின் நிலையும், அதை தடுப்பதற்கான வழிமுறைகளும்' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை, நேற்று சென்னையில் வெளியிட்டன. தமிழகத்தில், வறுமை, பாதுகாப்பின்மை, காதல், கடத்தல், பெற்றோரின்…

மீண்டும் தகிக்கும் தூத்துக்குடி.. பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கு பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். 100-ஆவது நாளன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணி…

காப்பகங்களில் பெண்களுக்கு சித்ரவதை: ஆய்வில் தகவல்

புதுடில்லி: உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், காப்பகங்களில் தங்கி உள்ள பெண்கள், சித்ரவதை செய்யப்படுவது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. பீஹார் மாநிலத்தின், முசாபர்பூர் நகரில் உள்ள, அரசு நிதியுதவி பெறும் காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் சிறுமியர், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை…

இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: சஜ்ஜன்குமாருக்கு…

1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தமது சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கு ஒன்றில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். 34 வருடத்திற்கு பிறகு சஜ்ஜன்…

ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக.. தந்தை வழியில் தனயன்…

சென்னை: நேருவின் மகளே வருக, நல்லாட்சி தருக என கருணாநிதி இந்திராகாந்திக்கு அழைப்பு விடுத்தார். அது போல் ஸ்டாலின் , ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கருணாநிதி சிலைத் திறப்பு விழாவை தொடர்ந்து ராயப்பேட்டையில் பொதுக் கூட்டம் நடந்தது.…

புயலால் வீடிழந்து 30 நாட்களாக தெருவோரத்தில் வசிக்கும் கீரமங்கலம் மக்கள்!!

கீரமங்கலம் அறிவொளி நகர் மக்கள் கஜா புயல் தாக்குதலில் வீடுகளை இழந்து மரத்தடியிலும், தெரு ஓரங்களிலும் வசிக்கின்றனர். நிவாரணம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட பழைய துணிகளையே உடுத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய நேரத்தில் கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் ( நரிக்குறவர் காலனி )…

உலக சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிவி சிந்து, நொசோமி ஒகுஹாரா ஆகியோர் முன்னேறினார்கள். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிவி சிந்து 21-19, 21-17 என ஒகுஹாராவை வீழ்த்தி முதன்முறையாக உலக…

பொன் மாணிக்கவேல் அதிரடி ஆரம்பம்.. இந்து அறநிலையத்துறை அதிகாரி திருமகள்…

சென்னை: இந்து அறநிலையத் துறை அதிகாரி திருமகளை சிலை தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தேவார பாடல் பெற்ற தலம். மயில் உருவம் பெற்ற பார்வதி…

காஷ்மீரில் 11 பேர் பலி: கலவரத்தால் பதற்றம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடந்த சண்டையில், நான்கு பேர் இறந்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஏழு பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள, சர்னுா என்ற கிராமத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, ராணுவத்தினருக்கு ரகசிய…

வளைகுடா நாடுகள்: “பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்” – செத்துப்…

கடந்த நான்காண்டுகளில் மட்டும் சௌதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. டிசம்பர் 12, 2018 அன்று மக்களவையில், குளிர்கால கூட்டத்தொதொடரின் கேள்வி நேரத்தின்போது, வளைகுடா நாடுகளில் அதிகளவில் உயிரிழந்து வரும்…

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளதுடன், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு…

மைசூருவில் விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி

மைசூரு : கர்நாடக மாநிலம் மைசூருவில் விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலியாயினர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹானூர் தாலுகாவிலுள்ள சுல்வாடி கிச்சுகுட்டி மாரம்மா கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 15 வயது சிறுமி உள்ளிட்ட 6…