முன்னாள் அட்மிரல் லுமுட் கடற்படைத் தளத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை

37 ஆண்டுகளுக்கு லுமுட் கடற்படைத் தளத்தை தமது இல்லம் என முதல் அட்மிரல் முகமட் இம்ரான் அப்துல்   ஹமிட் அழைந்து வந்தார். நேற்று லுமுட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் அவர் அந்தத் தளத்துக்குள் பிரச்சாரம் செய்ய முயன்ற போது அதன் கதவுகள் அவருக்கு மூடப்பட்டன. இம்ரானுடைய…

ஜோகூர் பாருவில் முன்னாள் இராணுவத் தளபதியின் ‘போஸ்னியா போர் திட்டம்’

முன்னாள் இராணுவத் தளபதி ஹஷிம் உசேன், 1990-இல் போஸ்னியா-ஹெசகோவினாவின் உள்நாட்டுப் போரில் செயல்படுத்தி வெற்றிகண்ட அதே போர் திட்டத்தை ஜோகூர் பாருவில் அம்னோவின் மூத்த தலைவரான ஷாரிர் அப்துல் சமட்டுக்கு எதிராகவும் கடைப்பிடிப்பார். “அதை இப்போது விவரிக்கப்போவதில்லை. ஆனால் (போஸ்னியாவில் கடைப்பிடித்த) அதே போன்ற திட்டம்தான். ஜோகூர் பாரு…

கோத்தா டமன்சாரா தவிர, பிகேஆர்-பாஸ் தொகுதி மோதல்கள் தீர்க்கப்பட்டுள்ளன

ஆறு தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்கள் நிற்பதால் உருவான தகராற்றை பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் தீர்த்துக் கொண்டுள்ளன. தலா ஒவ்வொன்றும் மூன்று தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. என்றாலும்  கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதி மீதான தேக்க நிலை தொடருகின்றது. லாபுவான் (சபா) நாடாளுமன்றத் தொகுதி சுங்கை ஆச்சே (பினாங்கு)…

அம்னோவிலிருந்து கட்சி நீக்கம் செய்யப்பட்ட கமிலியாவுக்கு பிகேஆர் அழைப்பு

கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் அம்னோவிலிருந்து கட்சி நீக்கம் செய்யப்பட்ட அதன் மகளிர் துணைத் தலைவர் கமிலியா இப்ராகிமுக்கு  தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு பிகேஆர் அழைப்பு விடுத்துள்ளது. கமிலியாவுக்கு அந்த அழைப்பை விடுத்த பிகேஆர் துணைத் தலைவர் ரோட்சியா இஸ்மாயில் அந்த முன்னாள் அம்னோ தலைவி…

பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் இரண்டு தொகுதிகளில் மோதிக் கொள்கின்றன

பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் பினாங்கு சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியிலும் மோதுகின்றன. லாபுவானில் பிகேஆர் இப்ராஹிம் மெனுடினையும் பாஸ் ஹாட்னான் முகமட்டையும் நிறுத்தியுள்ளன. அவர்களுடன் அம்னோவைச் சேர்ந்த புதுமுகமான ரோஸ்மான் இஸ்லியும் லாபுவானில் களமிறங்கியுள்ளார். 2008ல் அம்னோவின் யூசோப் மஹால் அந்தத் தொகுதியில்…

இரண்டு இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள பிகேஆர் சின்னத்தில் பிஎஸ்எம்…

பல தொகுதிகள் மீது பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia -வுக்கும் பிகேஆர் கட்சிக்கும் இடையில் நிலவிய தேக்க நிலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. 2008ம் ஆண்டு செய்ததைப் போல பிகேஆர் சின்னத்தில் கோத்தா டமன்சாராவிலும் சுங்கை சிப்புட்டிலும் தனது  நடப்பு உறுப்பினர்களை நிறுத்துவதற்கு பிஎஸ்எம் ஒப்புக் கொண்டுள்ளது.…

சிலாங்கூர் பிகேஆர் பட்டியலில் வியப்பு ஏதுமில்லை; பிகேஆர்-பிஎஸ்எம் தேக்க நிலை…

சிலாங்கூர் செமினியில் போட்டியிட விரும்புவதாக பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia விருப்பம்  தெரிவித்துள்ள போதிலும் அந்தத் தொகுதிக்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வேட்பாளர்  ஒருவரை அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு மும்முனைப் போட்டி நிகழக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. அந்தத் தொகுதிக்கு செர்டாங் தொகுதி பிகேஆர்…

செக்ஸ் வீடியோவுடன் தனக்கு தொடர்பு இல்லை என்கிறது பிகேஆர்

அண்மையில் வெளியான செக்ஸ் வீடியோவுடன் பிகேஆர் உறுப்பினர்களை பல வலைப் பதிவாளர்கள்  தொடர்புபடுத்தி எழுதியிருப்பது அபத்தமானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என பிகேஆர் இன்று வருணித்துள்ளது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட கிரிமினல் ஒருவர் (வலைப்பதிவாளர் பாப்பாகோமோ) அந்தக்  குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் சொன்னார். அத்தகைய…

வான் அசிசா: காலிட் மீண்டும் எம்பி ஆவது உறுதியில்லை

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயில், சிலாங்கூரில் மாற்றரசுக் கட்சி மீண்டும் வெற்றிபெற்றால் அப்துல் காலிட்  இப்ராகிம்தான்  மந்திரி புசார் ஆவார் என்பதில்லை,  தகுதி படைத்த வேறு பலரும் கட்சியில் உள்ளனர் என்று கூறியுள்ளார். என்றாலும்,  பக்காத்தான் ரக்யாட் ஆட்சியில் சிலாங்கூரை நல்லவிதமாகவே காலிட் நிர்வகித்து வந்தார் என்றும் அவர்…

பிகேஆர்: நஜிப் பொது நிதிகளைப் பயன்படுத்துகிறார்

பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள பொது  நிதிகளைப் பயன்படுத்துவதாக பிகேஆர் பொருளாளர் வில்லியம் லியோங் குற்றம் சாட்டியுள்ளார். மீடியா பிரிமா-விலும் ஆஸ்ட்ரோ-விலும் விளம்பரம் செய்யும் அமைப்புக்களில் பிரதமர் துறை முதலிடம்  வகிப்பதாக மே பாங்க் முதலீட்டு வங்கி ஆய்வு தெரிவித்துள்ளதை…

‘ஒப்புக்காக சில மைகார்டுகளைக் கொடுத்தது, ஒரு மலிவான தந்திரம்’

பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நேற்று நாடற்ற இந்தியர்களுக்காக 120 மைகார்டுகளை வழங்கிய நிகழ்வு ஒரு “மலிவான தந்திரம்” என்பதுடன் இந்திய சமூகத்தை மட்டம் தட்டும் ஒரு செயலுமாகும் என பிகேஆர் சாடியுள்ளது. “இது, நாடற்ற மக்களின் பிரச்னைக்கு பிஎன் தீர்வுகண்டு வருகிறது என்று இந்திய…

ஜோகூர் பாருவில் பிகேஆர் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி

ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதிக்கான பிகேஆர் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி ஒய்வு பெற்ற ஜெனரல் முகமட் ஹஷிம் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் தெப்ராவ் தொகுதியில் ஸ்டீவன் சூங்-கும் மூவாரில் நோர் ஹிஸ்வானும் பத்து பஹாட்டில் இட்ரிஸ் ஜாவ்சியும் களமிறக்கப்படுவதாக எதிர்த் தரப்புத் தலைவரும் பிகேஆர்…

தாமான் மேடான் வாக்காளர் ஸ்ரீ செத்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிகேஆர் சொல்கிறது

வாக்காளர்களுக்குத் தெரியாமல் அவர்கள் வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து பிகேஆர்  சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து புகார் செய்கின்றனர். 2008ல் தாமான் மேடான் தொகுதியில் வாக்களித்த சம்சியா அரிபின் என்பவர் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதிக்கும் கிளானா ஜெயா நாடாளுமன்றத் தொகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தாமான் மேடான் சட்டமன்ற  உறுப்பினர் ஹனிஸா…

பிகேஆர்: இந்துக்களை இழித்துரைத்த பெர்காசா உதவித் தலைவர்மீது நடவடிக்கை தேவை

இந்து சமயத்தவரை ஆத்திரப்பட வைக்கும் விதத்தில் பேசிய மலாய் உரிமைக்காக போராடும் பெர்காசா அமைப்பின் உதவித் தலைவர் சுல்கிப்ளி நூர்டின்மீது குற்றவியல் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிகேஆர் அறைகூவல் விடுத்துள்ளது. ஐந்து நிமிடத்துக்குமேல் நீளும் ஒரு காணொளியில், சுல்கிப்ளி “இந்துக்களையும் அவர்களின் சமயத்தையும் படுமோசமாக இழித்துரைத்திருக்கிறார்”…

பிகேஆரும் 10-நிமிட ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தது

பிகேஆர், அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை விளக்க மலேசிய வானொலி-தொலைக்காட்சி (ஆர்டிஎம்) கொடுக்க முன்வந்த 10-நிமிட ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தது. நேற்று டிஏபி ஆர்டிஎம் ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தைத் தொடர்ந்து இன்று பிகேஆரும் அவ்வாறே செய்தது. ஒலிபரப்பு நேரம் கொடுக்க முன்வந்தது ஒரு “அரைவேக்காட்டு அரசியல் தந்திரம்” என்பதால்…

பிஎன் ஆதரவு செராமாவுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு செய்தனர்

பினாங்கு பெனாந்தி, குவார் பெராஹு தேசிய இடைநிலைப் பள்ளியில் நேற்றிரவு நடைபெற்ற பிஎன் ஆதரவு செராமா ஒன்றுக்கு இடையூறு செய்ய பிகேஆர் ஆதரவாளர்களையும் உள்ளூர் கிராம மக்களையும் கொண்ட ஒரு கும்பல் முயற்சி செய்த போது குழப்பம் ஏற்பட்டது. லஹாட் டத்து சம்பவம் பற்றியும் மலாய் பைபிள்களில் 'அல்லாஹ்'…

சைபுலின் தந்தை பிகேஆரில் சேர்கிறார்

சைபுல் புகாரி அஸ்லானின் தந்தை மாற்றரசுக்கட்சியான பிகேஆரில் சேர முடிவுசெய்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சி செயலகத்தில் அவரின் விண்ணப்பப் பாரத்தை இன்று சமர்பித்தார். அன்வார்  இப்ராகிம் தம்முடன் குதப்புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியவர் சைபுல்.   அக்குற்றச்சாட்டு மீது வழக்கு நடந்து இவ்வாண்டு  ஜனவரியில் அன்வார் குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டார். “நான்…

‘மாற்றரசுக் கட்சிகளில் பிகேஆர்தான் பெரிய கட்சியாக இருக்கும், டிஏபி அல்ல’

எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் தொடர்ந்து ஆட்சியில் இருக்குமானால் எதிர்தரப்பில் மிகப் பெரிய கட்சியாக பிகேஆர்தான் இருக்கும் என்கிறார் டிஏபி தேசிய விளம்பரப் பகுதித் தலைவர் டோனி புவா. பக்காத்தான் ரக்யாட்டில் டிஏபிதான் மிகப் பெரிய கட்சியாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மறுத்து அவர்…

பிகேஆர் நிகழ்வில் 1மலேசியா என்று கூவி அதிர்ச்சி ஏற்படுத்திய அறிவிப்பாளர்

அண்மையில் ஜாவியில் சாப் கோ மே தினத்தில் கால்-மெரோதோன் போட்டியை ஏற்பாடு செய்ததற்காக நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது பிகேஆர். அதற்காக அதை பிஎன் கடுமையாகக் குறைகூறியிருந்தது. அதைவிட மோசமாக அந்த நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம் பிகேஆருக்கு மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வின் அறிவிப்பாளர் “1மலேசியா” என்று உரக்கக்…

வழக்குரைஞர் மன்றம் பிகேஆர் தலைவர் ஒருவரை அழைத்துள்ளதை ஒரு வழக்குரைஞர்…

வழக்குரைஞர் மன்றம் நாளை நடத்தும் ஆய்வரங்கம் ஒன்றில் பேசுவதற்கு பிகேஆர் தலைவர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளதை வழக்குரைஞர் ஒருவர் தலைமையிலான சிறிய குழு ஒன்று ஆட்சேபித்துள்ளது. தேர்தல் மனுவைத் தயாரிப்பதற்கான வழி காட்டிகளும் நடைமுறைகளும் என்னும் தலைப்பில் பேசுவதற்கு பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர் ஸ்டீவன் சூங் அழைக்கப்பட்டுள்ளதை தாம்…

ஜோகூரில் டிஏபி, பிகேஆர் தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு

நேற்று ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவும் அவரின் பிகேஆர் சகாவான சுவா ஜுய் மெங்கும் வெளிப்படையாக சர்ச்சையிட்டுக்கொண்டதை அடுத்து இருவருக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. “பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தொடர்பு கொண்டேன். சுவாவும் பூ-வும் ஜோகூரில் மாநில டிஏபி, பிகேஆர் உறவுகள் பற்றி அதிலும்…

தைப்பூச திருவிழா குறித்த ரித்துவான் தீ-யின் இனவாதக் கருத்தை பிகேஆர்…

தைப்பூச திருவிழா குறித்து யூனிவர்சிட்டி பெர்தகனான் நேசனல் விரியுரையாளர் ரித்துவான் தீ அப்துல்லா எழுதி சினார் ஹரியான் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையை இனவாதமானது என்று பிகேஆர் கடுமையாகச் சாடியுள்ளது. அக்கட்சியின் மனித உரிமைகள் மற்றும் சட்டப் பிரிவின் துணைத் தலைவர் எஸ். ஜெயதாஸ் அக்கட்டுரையில் ரித்துவான் திருவிழா…

பிகேஆர் எம்பி-யிடம் மன்னிப்பு கேள் : உத்துசானுக்கு நீதிமன்றம் உத்தரவு

உத்துசான் மலேசியா நாளேடு, இந்திரா மக்கோத்தா எம்பி அஸான் இஸ்மாயில்மீது அவதூறு கூறியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் இழப்பீடும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அஸான் இஸ்மாயில் பிகேஆரில் வகித்த எல்லாப் பதவிகளிலிருந்தும் விலகியதுடன் அக்கட்சியைவிட்டும் வெளியேறி இருப்பதாக அந்நாளேடு செய்தி வெளியிட்டதற்காக இத்தண்டனை…