இராகவன் கருப்பையா - இந்த புத்தாண்டிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் 'நெக் டை' எனப்படும் 'கழுத்துக் கச்சு' அணிய வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு செய்துள்ள அறிவிப்பு நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சு முன்வைக்கும் காரணங்கள் நமக்கு அதை விட…
அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள்
அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியர்களுக்குத் தேவை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள். அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்புடையை நிறுவனங்களில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிரிக்க வழி வகை செய்யுங்கள். அடுத்து PPRK வீடுகள் நகர்புற இந்திய ஏழைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யுங்கள். சிறிய…
மலேசிய நாணயம் – நோட்டுகளில் தமிழ் மற்றும் சீனம் மொழி…
மலேசிய திருநாட்டின் நாணயம் மற்றும் நோட்டுக்கள் மாற்றி அமைக்கப்பட்டால், அதில் தமிழ், சீனம் மொழி எழுத்துக்களும் பொறிக்கப்பட வேண்டும் என மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி கேட்டுக் கொண்டார். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மூவினத்தின் தாய்மொழியை,…
மஇகா தலைவர் பொறுப்பிலிருந்து சுப்ரா விலகுகிறார்
‘ஞாயிறு’ நக்கீரன்- சுகாதாரத் துறை முன்னார் அமைச்சரும் மஇகா-வின் இந்நாள் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், அமைச்சர் பொறுப்பை மே 9-ஆம் நாள் இழந்துவிட்ட நிலையில் தற்பொழுது கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அறுபது ஆண்டு கால ஆட்சி அதிகார வாய்ப்பை இழந்த நிலையில் மஇகா…
நிதி அமைச்சுக்கு குறி வைத்த பிகேஆர் சமாளித்த மகாதீர்
‘ஞாயிறு’ நக்கீரன்-14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் பிகேஆர்(மக்கள் நீதிக் கட்சி) அறிவித்த தேர்தல் அறிக்கையில், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் பிரதமர் பொறுப்பு ஏற்பவர் அமைச்சரவையில் எந்த அமைச்சுக்கும் பொறுப்பு ஏற்க மாட்டார். குறிப்பாக, நிதி அமைச்சகத்தைப் பற்றி பிரதமர் கனவிலும் கருதக் கூடாதென்ற கொள்கையை வகுத்திருந்தது. இது…
பேராக் மாநில சபாநாயகராக திரு. மணிவண்ணன் அவர்களை நியமிக்க, மலேசிய…
கடந்த 14வது பொது தேர்தலில் பேராக் மாநிலத்தை கைப்பற்றிருக்கும் பாக்காத்தான் அரப்பான் அரசு மாநில சபாநாயகராக ஊத்தான் மெலிந்தான் சட்டமன்ற வேட்பாளர் திரு. மணிவண்ணன் அவர்களை நியமிக்க மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுப்பதாக இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். கடந்த…
துன் மகாதீர், குலசேகரன், கோபிந்த் சிங் மூவரும் இந்திய அமைப்புகளிடம்…
இந்திய சமுதாயத்தில் நலிந்த நிலையில் இருக்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் அவர்களின் பிள்ளை(மாணவர்)களையும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசாங்கத்திடம் இருந்து மானியங்களைப் பெற்று மஞ்சள் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்திய அரசு சாரா அமைப்புகளைப் பற்றி புதிய அரசு விழிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, துன் மகாதீர், குலசேகரன், …
நம்பிக்கைக் கூட்டணி அரசு 8-ஆம் நாள் அதிரடி
‘ஞாயிறு’ நக்கீரன் - சொல்லி அடித்த வெற்றிக் ‘கோலை’ப் போல நம்பிக்கைக் கூட்டணி 14-ஆவது பொதுத் தேர்தலில் முன்கூட்டியே சொன்னபடி வெற்றி பெற்றது ஒருபுறமிருக்க, 61 ஆண்டுகளாக தொடர் ஆட்சி நடத்திய தேசிய முன்னணியின் வரலாற்றுப் பெருமைக்கும் முடிவு கட்டியது. தேர்தலுக்கு அடுத்த நாள் புதிய ஆட்சியின் தலைவராகப்…
14-ஆவது பொதுத் தேர்தல் பிரதிபலிப்பு: மஇகா-வில் சரவணன் கை ஓங்குகிறது!
14-ஆவது பொதுத் தேர்தல் முடிவால் மஇகா-வில் மாற்றம் நிகழலாம். அது, இன்னொரு பதவிப் போராட்டத்திற்கு அடித்தளமும் அமைக்கலாம். ம.இ.கா.வின் நெடிய வரலாற்றை உற்று நோக்குபவர்களுக்கு ஓர் உண்மை பளிச்சென தெரியும். விட்டு விட்டு பதவிக்காக போராட்டம் இடம் பெறும் இடம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மாளிகை ஆகும். அத்தகையப் போராட்டம்,…
சபாவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் புது முதல்வர் மூசா அமானின்…
14-ஆவது பொதுத் தேர்தல் முடிவு வெளிவரத் தொடங்கியது முதலே சபா மாநில அரசியலில் அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து இடம்பெற்று வருகின்றன. இப்பொழுது தேசிய முன்னணியின் டான்ஸ்ரீ மூசா அமான் முதல் அமைச்சராக அவசர அவசரமாக பதவி ஏற்ற அடுத்த நாளே நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுள்ளார். 60 இடங்களைக்…
கம்பீர் சட்டமன்றத் தொகுதியில் பிஎன் தோல்வி உறுதியாகிறது!
‘ஞாயிறு’ நக்கீரன், நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு முதல் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். நாட்டின் தென் கோடி மாநிலமான ஜோகூரின் வடபகுதியில் உள்ள கம்பீர் சட்டமன்றத் தொகுதியில்தான் நம்பிக்கைக் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அத்தகையை வெற்றிக்கு உரியவராக இப்பொழுதே…
கோகிலனை இழந்த பத்து!
‘ஞாயிறு’ நக்கீரன், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் இந்திய சமூகத்தின் சார்பில் ஓர் இளம் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கள நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், 14-ஆவது நாடாளுமன்றத்திற்கு 22 வயதேயான ஓர் இளம் வேட்பாளரை தங்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த பெருமையை பத்து…
வாழ வழிகேட்டால் சாவுக்கு வழிகாட்டும் போக்கு!
‘ஞாயிறு’ நக்கீரன் - அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை வழிநடத்திவரும் தேசிய முன்னணியின் இப்போதைய இடைக்கால அரசின் துணைப் பிரதமர், தாம் போட்டியிடும் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு பிணப்பெட்டியை அன்பளிப்பு செய்வதாக அறிவித்துள்ளது, கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமாகும். அரசாங்க மட்டத்திலும் அரசியல் கூட்டணி என்ற வகையிலும்…
எரிநெய்(பெட்ரோல்) விலை குறைகிறது!
‘ஞாயிறு’ நக்கீரன் - கோலாலம்பூர், மே 02: எரிநெய் எனப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை இன்று இரவு கட்டாயம் குறைக்கப்படுகிறது. அடுத்த வாரம் இதே நாளில் பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு மக்களின் நலனில் நாட்டமும் கரிசனமும் கொண்ட இன்றைய இடைக்கால இந்தச் சலுகையை அளிக்கவிருப்பதாகத்…
அவலமான அரசியலில் இருந்து கேவியஸ் விடுதலையானார்!
படை பலமும் பொருள் வலிமையும் கொண்டிருக்கும் ஈஸ்வரன் நடத்திய நம் நாடு நாளேட்டின் நிலையை தாய்மொழி நாளிதழும் எட்டும்போலத் தெரிகிறது. நம் நாடு இதழுக்கு நஜிப்பின் அரவணைப்பு எந்த அளவிற்கு இருந்ததோ, ஏறக்குறைய அதே அளவு நஜிப் ஆதரவில் வெளிவந்து கொண்டிருந்த தாய்மொழி நாளிதழ், கேவியஸின் அரசியல் பயணம்…
மைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுமா?
ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக தேசிய முன்னணியின் புகழ் பாடியும் அதன் தலைமையை துதிபாடியும் வந்த டத்தோஸ்ரீ கேவியஸ், தேசிய முன்னணியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார் என்று அக்கட்சியின் தலைமைப் பொறுப்பாளர்களே படபடத்து வருகின்றனர். தேசிய அரசியலில் மட்டுமல்ல; சமூக மட்டத்திலும் தகவல் உலகிலும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல்…
14வது பொது தேர்தல் மலேசிய தனித் தமிழர்களின் வாக்குகள் தற்சார்பு…
பாக்காத்தான், பாரிசான் தேர்தல் கொள்கை அறிக்கையின் ஒப்பீடல் ஆய்வுக்கு பின்னர், நாம் தமிழர் தமிழர்களுக்கு சில அரசியல் நகர்வுகளை முன் வைக்க கடமை பட்டுள்ளது. பாக்காத்தான் ரிம 4 பில்லியனும், பாரிசான் ரிம 1 பில்லியனும் (புளுபிரிண்டில்) அறிவித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடலில் 80% மலேசியத் தனித்தமிழர்களுக்கு வழங்கிட…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய மத்திய அரசுக்கு, மலேசிய…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய மத்திய அரசுக்கு, மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டனம் தமிழகத்தில் நீரில்லாமல் விவசாயிகள் செத்து கொண்டிருக்க, தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தரமறுக்கும் கர்நாடக மாநில சிக்கலுக்கு தீர்வாக இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை மலேசிய…
தமிழர்களுக்கு ஆண்டுக் கணக்கு – பூனைக்கு மணி கட்டுவது!
‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 24, 2018 - இன்றைய உலகில் தமிழர்களை எந்தக் கருத்தாலும் ஒன்றுபடுத்த முடியாது. காரணம், தமிழர்களிடையே கலப்பினத்தவரும் தமிழ்ப் பகைவரும் அடையாளம் காண முடியாத அளவிற்கு ஒன்றெனக் கலந்து நிற்கின்றனர். அத்துடன், இன-மொழி உணர்வு குன்றி ‘தான்-தன் சுகம்’ என்ற நிலைக்கு வந்து விட்டனர்.…
தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா, அல்லது சித்திரையா? –…
தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா அல்லது சித்திரை மாதமா என்பது தமிழ் நாட்டிலேயே பிசுபிசுத்துப் போன ஒரு விவாதமாகக் கருதப்படுகிறது. அந்த பிசுபிசுப்பை இந்த நாட்டிலும் சிலர் பிடித்துக் கொண்டு தொங்க நினைப்பது ஏன் என்று தான் புரியவில்லை. பொதுவாக சித்திரை மாதத்தில் அனுசரிக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டை…
தமிழ் நாட்டுத் தமிழர் நமக்கு வழி காட்ட தகுதியுண்டா? –…
தமிழ் நாட்டிலேயே தமிழ்ப்புத்தாண்டு தேதி குறித்த குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழப்பத்தை இந்த நாட்டில் இறக்குமதி செய்வது எந்த வகையில் நியாயம்? கட்டுரையாளர் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தலில் ஆச்சரியமில்லை. ஆனால் அவருடைய் முடிவான ஆலோசனையை சற்றே ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் நாட்டுத் தமிழர்க்களைக் காணும்போது, அவர்களை இந்தியாவுடனும் அந்நாட்டில்…
தே.மு. ஆட்சியில் இந்தியர்கள் புறக்கணிப்பு, மகாதீரும் மஇகா-வும் ஒப்புதல் வாக்குமூலம்
தேசிய முன்னணி ஆட்சியில் இந்திய சமுதாயம் வெகுவாக புறக்கணிக்கப்பட்டதை மாறிவிட்ட இன்றைய அரசியல் சூழலில் துன் டாக்டர் மகாதீரும் மஇகா தலைவர்களும் தங்களையும் அறியாமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்; இதன் தொடர்பில் ஒப்புதல் வாக்கு மூலமும் அளித்து வருகின்றனர். இதற்கு வெகு அண்மைய சான்று, மலேசியவாழ் இந்திய சமுதாயத்திற்கு நான்…
மகேசுவரியின் ‘வெற்றியின் விழுதுகள்’ – நூல் வெளியீடு!
ஆசிரியரும் தன்முனைப்புச் சிந்தனையாளருமான சு.மகேசுவரியின் வெற்றியின் விழுதுகள் எனும் நூல் மார்ச் திங்கள் 3-ஆம் நாள் காரிக்கிழமை தலைநகரத்து நேதாஜி மண்டகத்தில் வெளியிடப்பட்டது. சிலாங்கூர், ரவாங் வட்டாரத்தில் வசிப்பவரும் இடைநிலைப் பள்ளி ஆசிரியருமான இவர், பெருஞ்சித்தனார் பற்றாளரும் தமிழ் ஆர்வலருமான அர்சேந்திரனின் துணைவியாரும் ஆவார். இவர், கல்விப் பணியில்…
ஏப்ரல் பிற்பகுதியில் பொதுத் தேர்தல்!
‘ஞாயிறு’ நக்கீரன் -நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல் ஏப்ரல் மாத பிற்பகுதியில் நடைபெறக் கூடும் என்று புத்ராஜெயா வட்டார புதுத் தகவல் தெரிவிக்கிறது. தேசிய முன்னணி தலைமை யும் அதன் கைப்பாவையான தேர்தல் ஆணையமும் கடந்த 13-அவது பொதுத் தேர்தலைப் போலவே இந்தப் பொதுத் தேர்தலையும் இப்போது நடத்தலாமா…























