மலேசியாகினி நாளிதழ் வெளியீட்டிற்கான உரிமம்: தீர்ப்பு இன்று

மலேசியாவின் முன்னணி செய்தி இணையதளமான மலேசியாகினி ஒரு நாளிதழை வெளியிடுவதற்கான உரிமத்திற்கு உள்துறை அமைச்சிடம் மனு செய்திருந்தது. அம்மனுவை உள்துறை அமைச்சு நிராகரித்ததைத் தொடர்ந்து மலேசியாகினி உள்துறை அமைச்சின் மீது வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிவுற்றதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் மணி 4.30…

நீண்ட காலத்திற்குப் பின்னர் ஹிண்ட்ராப்- பிகேஆர் சந்திப்பு நிகழ்ந்தது

2008 மார்ச் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எழுந்த வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஹிண்ட்ராப்பும் பிகேஆரும் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளன. ஹிண்ட்ராப் ஆலோசகர் என் கணேசன் கடந்த வாரம் கோலாலம்பூரில் பல பிகேஆர் தலைவர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான…

பினாங்கில் வெற்றிபெற அஹ்மட் ஜஹிடியின் ‘3-3-3-1 சூத்திரம்’

13வது பொதுத் தேர்தலில் பிஎன் பினாங்கில் வெற்றிபெற விரும்பினால் அம்னோ அதன் 11சட்டமன்ற இடங்களைத் தக்க வைத்துக்கொண்டு  3-3-3-1 சூத்திரத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். அந்தச் சூத்திரத்தை விளக்கிய அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி, அதன்படி அம்னோ, மசீச, கெராக்கான் ஆகியவை மூன்று இடங்களையும் மஇகா ஓர்…

‘அதற்குப் பதில் உத்துசான் மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

"யார் துரோகி ? அதிகாரத்தைத்தையும் மக்கள் பணத்தையும் தவறாகப் பயன்படுத்தும் மக்களா அல்லது உண்மைகளை வெளியிடும் மக்களா?" உத்துசான்: மலேசியாகினி 'மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்' ஒய்கே சுவா: உத்துசான் மலேசியா அம்னோ குரலாக திகழுவதால் மலேசியாகினி சுதந்திரம் குறித்து கருத்துரைக்க அதற்கு அருகதை இல்லை. மலேசியாகினி நல்ல…

அலி ரூஸ்தாம் புதல்வர் திருமணம் மலேசியச் சாதனை

மலாக்கா ஆயர் குரோ டேவான் துன் அலி புக்கிட் கட்டில் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாம் மூத்த புதல்வருடைய திருமண விருந்தில் கிட்டத்தட்ட 130,000 பேர் கலந்து கொண்டனர். மணமகன் 26 வயதான முகமட் ரித்வான், மணமகள் 26 வயதான நூர் அஸிஹா…

சிலாங்கூர் இருக்கட்டும், முதலில் இயற்கை வள பேரழிவிலிருந்து பகாங்கை காப்பாற்றுங்கள்

சிலாங்கூர் மாநிலத்தின் மீது பரிவும் கருணையும் காட்டுவது இருக்கட்டும். முதலில், பகாங் மாநிலத்தை இயற்கை வள பேரழிவிலிருந்து காப்பாற்றுங்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் பகாங் மாநில அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார். பகாங்கிலிருந்து சிலாங்கூரின் உத்தேச லங்காட் 2…

உத்துசான்: மலேசியாகினி ‘மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

மலேசியாகினி செய்தி இணையத் தளத்துக்கு நாணய ஊக வணிகர் ஜார்ஜ் சோரோஸ் நிதி அளித்தார் என்று கூறப்படுவது மீது அது எல்லா மலேசியர்களிடமும் 'மன்னிப்பு' கேட்க வேண்டும் என உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது. 'அந்நியர்களுடைய கருவியாக இருப்பதை நிறுத்திக் கொள்ள' மலேசியாகினி எண்ணம் கொண்டுள்ளதா என அந்த…

2013 பட்ஜெட் உண்மையிலேயே மக்கள் பட்ஜெட்தானா?

கடிதம்- Chris Anthony மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2013 பட்ஜெட் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போலவே அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மாற்றரசுக் கட்சி, அது தேர்தல் பட்ஜெட் என்றும் நாடும் மக்களும் நலமே வாழ அதில் புதிதாக எதுவுமில்லை என்றும் கூறி  ஒதுக்கித்தள்ளியது. சுருங்ககூறின்,…

கோ: பினாங்கில் ஒன்றும் இல்லாதிருக்கும் நிலையை உடைத்தெறிய வேண்டும்

கெராக்கான் தலைவர் கோ சூ கூன், பினாங்கில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியாதபடி முற்றாக துடைத்தொழிக்கப்பட்ட களங்கத்தைத் துடைக்கக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றுசேர வேண்டும் என  உருக்கமாக வேண்டிக் கொண்டிருக்கிறார். “பினாங்குதான் என்றுமே கெராக்கானின் இதயம்.அம்மாநிலத்தையும் மலேசியாவையும் மாற்றுவதற்குச் சேவையாற்ற நமக்குக் கிடைத்த…

பிரதமர்: புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட…

புக்கு ஜிங்கா- பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கை பொருத்தமான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அதே வேளையில் பிஎன் கொள்கைகள் நிரூபிக்கப்பட்டவை என்றார் அவர். "புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட இல்லாதது," எனக் கூறிய அவர் கோலாலம்பூரில் 44வது…

உங்கள் கருத்து: ஆர்ஒஎஸ் அலுவலகம் அம்னோவுக்காக ஆடுகிறது

"எல்லா அரசாங்க அமைப்புக்களும் அம்னோ நிறுவனங்களா ? தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்த அவை எதனையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது." சுவாராமை இழுப்பதற்கு ஆர்ஒஎஸ் அலுவலகம் போலீசை சேர்த்துக் கொண்டுள்ளது பெர்ட் தான்: ஒரு நிறுவனத்தின் மீது கட்டுப்பாட்டு அதிகாரத்தைப் பெற்றுள்ளது சிசிஎம் என்ற  மலேசிய நிறுவன…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சேபித்து பெங்கெராங்கில் பேரணி

ஜோகூர் பெங்கெராங் வட்டாரத்தில் உள்ள மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு அருகில் கட்டப்படவிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பேரணி ஒன்றை நடத்துகின்றனர். 'Himpunan Hijau Lestari Pengerang' ( பெங்கெராங் நிலையான பசுமைப் பேரணி) என அது அழைக்கப்பட்டுகின்றது. அந்தத் திட்டம்…

2013 பட்ஜெட்டில் இந்தியர் வளர்ச்சிக்கு ஏதும் இல்லை, சேவியர் ஜெயக்குமார்

நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமரும் நம் நாட்டின்  நிதி அமைச்சருமான நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த பட்ஜெட் மிக முக்கியமானது. ஆனால் அது இந்நாட்டின் பல இன மக்களுக்குப் பெரும் ஏமாற்றம்  அளிப்பதாக இருந்தது.  நாடு  சுதந்திரம் அடைந்து 55 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்னோ மக்களைப் பிரித்தாளும்  அதன்…

பதற்றமிக்க பிரதமர் தேர்தலைத் தள்ளிப்போட்டிருக்கிறார்; பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்

கருத்தாக்கம்: Andrew Ong 2013 பட்ஜெட் உரையிலிருந்து ஒன்று தெரிகிறது. தேர்தலைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடுத்த ஆண்டு மார்ச் வரை தள்ளிப்போட முடிவு செய்திருக்கிறார். இன்னொரு பற்றாக்குறை பட்ஜெட்தான் என்ற போதிலும் நஜிப்பின் நிர்வாகம், தனக்கு உதவக்கூடியவர்கள் என்று பெரிதும் நம்பும்  குறைந்த-வருமானம் ஈட்டும் தரப்பினருக்கு…

குவான் எங்: பினாங்கின்மீது நஜிப்புக்கு அன்பு இல்லை

2013 பட்ஜெட்டில் பினாங்கு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார். “பினாங்குக்கு எதுவும் இல்லை என்பதைப் பார்க்கையில் எரிச்சலாக இருக்கிறது”, என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், கடந்த பட்ஜெட்டில் பினாங்குக்கு 200 பேருந்துகள் கொடுப்பதாகக் கூறிய வாக்குறுதியைக்கூட நஜிப்…

சுவாராமை இழுப்பதற்கு சங்கப்பதிவதிகாரி அலுவலகம் போலீசைப் பயன்படுத்துகிறது

சுவாராம் அலுவலகத்துக்குள் நுழையும் முயற்சிகளில் தோல்வி கண்ட சங்கப்பதிவதிகாரி அலுவலகம் Read More

வான் அஜிஸா காதல் கடிதத்தை 50,000 ரிங்கிட்டுக்கு ஏலம் விட்டார்

பக்காத்தன் ராக்யாட் மூத்த தலைவர்கள் நேற்று நடத்தப்பட்ட நிதி திரட்டும் விருந்தில் தங்களிடம் இருந்த ' மதிப்புள்ள பொருட்களை" ஏலத்திற்கு விட்டனர். பொதுத் தேர்தலை ஒட்டி புத்ராஜெயாவுக்குச் செல்வதற்கான தங்கள் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுப்பதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட அந்தப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. பாஸ் ஆன்மீகத் தலைவர்…

பக்காத்தான் விருந்தில் 2013ம் ஆண்டுக்கான பட்ஜெட் விமர்சனம் செய்யப்பட்டது

பக்காத்தான் தலைவர்கள் நேற்றிரவு ஷா அலாமில் நிதி திரட்டும் விருந்து நிகழ்வை நடத்தினார்கள். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களவையில் மாலையில் சமர்பித்த 2013 வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். பிரதமர் தமது பட்ஜெட் உரையில் பக்காத்தான் தலைவர்களைத் தாக்கிப்…

‘பிரதமர் இப்படித் தொடர்ந்து செலவு செய்து கொண்டு போவதை நாம்…

"அந்த 250 பில்லியன் ரிங்கிட் கடனை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகள்- ஒர் ஆண்டு அப்துல்லா அகமட் படாவிக்கும் நான்கு ஆண்டுகள் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும்- பிடித்தன." இப்போது கூட்டரசுக் கடன் 502.4 பில்லியன் ரிங்கிட் ஜியூடைஸ்: மலேசியர்கள் ஆட்சேபித்து வருவது, கூட்டரசு அரசாங்கக் கடன்கள் அதிகரித்து வருவதைப் பற்றி…

பட்ஜெட் நாடகத்தில் காமெடியனாக பிரதமர்

குபேரன்: பட்ஜெட் 2013 பற்றி கோமாளியின் கருத்து என்ன? கோமாளி: குபேரா! சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள், ஆனால், அரசியல்வாதிகளுக்கு அது தேவையற்றது. ஒரு நாட்டின் வரவு-செலவு திட்டம் என்பது மிகவும் சிக்கலானது. அதை திறமையாக செய்யும் நிலையில் நமது அரசியல்வாதிகள் இல்லை. நமது நாட்டு மக்களில்…

விரக்தி அதிகரிக்க அதிகரிக்க மலேசியாகினி மீது குறி வைக்கப்படுகிறது

"பிஎன் அரசாங்கம் மிகவும் விரக்தி அடைந்துள்ளதால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நியாயமற்ற முறையில் மலேசியாகினி மீது மீண்டும் குறி வைக்கப்படுகின்றது." மலேசியாகினி மீது மீண்டும் தாக்குதல்கள் சின்ன அரக்கன்: மலேசியாகினி உரிமை, அந்தச் செய்தி இணையத் தளம் நிர்வகிக்கப்படும் முறை, அதனை ஏன் பிஎன் அரசாங்கம் தாக்குகிறது போன்ற…

தேர்தலுக்கு முன்னர் பிரதமர் அன்பளிப்புக்களை அறிவித்துள்ளார்

அடுத்த பொதுத் தேர்தல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்காளர்களுக்கு நட்புறவான 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். கடந்த 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்து வரும் அவரது பாரிசான் நேசனல்…