லிம்: அரசியல்வாதிகளைத் ‘தெய்வமாக்கி’ விடாதீர்கள்

டிஏபி தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்,  பினாங்கு  முதலமைச்சர்  ஆனதிலிருந்து  அவரின்  புகழ்  வானளாவ  உயர்ந்து  கொண்டே  போகிறது. அவர்  செல்லுமிடங்களில்  எல்லாம்  பொதுமக்களும்  ஆதரவாளர்களும்  அப்படியே  அவரை   மொய்த்துக்கொள்வார்கள். இதைப்  பார்க்கும்  அவரின்  அரசியல்  எதிரிகள்,  ஆதரவாளர்கள்  அவரைத்  ;தெய்வமாக’  ஆக்கி  விட்டார்கள்  எனக்  கிண்டல் …

தாயிப் சகோதரருக்குக் கையூட்டு கொடுக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் விசாரிக்க ஜப்பானுக்கு…

ஜப்பானிய  நிறுவனமொன்று  சரவாக்  முதலமைச்சர்  அப்துல்  தாயிப்  மஹமுட்  குடும்பத்தாருக்குச்  சொந்தமான  நிறுவனத்துக்குக்  கையூட்டு  கொடுத்ததாகக்  கூறப்படும்  விவகாரத்தை  ஜப்பானிய  அதிகாரிகள்  மீண்டும்  விசாரிக்கத்  தொடங்க  வேண்டும்  என  சரவாக்  ரிப்போர்ட்  வலியுறுத்தியுள்ளது. 2007-இல், ஜப்பானிய  வருமான வரித்துறை  அதிகாரிகள்  மேற்கொண்ட  விசாரணையில் ஜப்பானிய  கப்பல்  நிறுவனம்  தாயிப்பின் …

மலேசியாகினி அலுவலகத்தில் செத்துப்போன வாத்தும் சிவப்பு சாயமும்

  கோலாலம்பூர், பங்சார் உத்தாமாவில் அமைந்திருக்கும் மலேசியாகினி இணையதள செய்தி அலுவலகத்திற்கு வெளியில் ஒரு பெட்டியில் செத்துப் போன வாத்து வைக்கப்பட்டிருந்த பொட்டலம் ஒன்று இன்ரு காலையில் காணப்பட்டது. சிவப்புச் சாயம் மலேசியாகினியின் நான்கு மாடி கட்டடத்தின் விளம்பரப்பலகையில் தெளிக்கப்பட்டிருந்தது. அச்சாயம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கில் மீதும்…

முகைதின்: எஸ்பிஏ-எதிர்ப்பு ஆசிரியரை மாற்றச் சொன்னது நானல்ல

பள்ளிசார்ந்த  மதிப்பீட்டு  முறை (எஸ்பிஏ)க்கு  பகிரங்க  எதிர்ப்புத்  தெரிவித்த  ஆசிரியரை  இடமாற்றம்  செய்யச்  சொல்லித்  தாம்  உத்தரவிடவில்லை  எனக்  கல்வி  அமைச்சர்   முகைதின்  யாசின்  கூறியுள்ளார். எஸ்ஏபிக்கு  எதிர்ப்புத்  தெரிவித்த  ஆசிரியர்களுக்குத்  தலைமைதாங்கியவர்    உடனடியாக  இடமாற்றம்  செய்யப்பட்டிருக்கிறார். “நடவடிக்கை  எடுக்கச்  சொல்லி  நான்  பணிக்கவில்லை”, என  துணைப்  பிரதமருமாகிய …

சிலாங்கூரில் நாளை முதல் நீர்ப் பங்கீடு

சிலாங்கூரில்,  நாளை  தொடங்கி  தண்ணீர்  பங்கீட்டு  முறை  நடைமுறைக்கு  வரும்  என்றும் “பிரச்னைக்குரிய  பகுதிகள்” கவனத்தைப்  பெற்றிருக்கும்  என்றும்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  இன்று  அறிவித்தார். “நாளையிலிருந்து, மாநில  அரசு அட்டவணைப்படி   நீர் விநியோகம் செய்யும். இதில்.  நீர் பிரச்னையை  எதிர்நோக்கும்  பகுதிகளுக்குக்  கவனம்  செலுத்தப்படும்”, …

மேலும் பல பக்காத்தான்-ஆதரவு முகநூல் பக்கங்களைப் பார்க்க முடிவதில்லை

இன்று  மேலும்  இரு  பக்காத்தான்  ஆதரவு  பக்கங்களைப்  பார்க்க  முடியாது  போயிற்று. இதனால், அதிகாரிகள்தான்  அவற்றைப்  பார்க்க  முடியாதபடி  தடங்கலை  ஏற்படுத்துகிறார்களோ  என்ற  சந்தேகம்  மேலும்  வலுப்பட்டுள்ளது. இதுவரை  சீனமொழி  பக்கங்களைத்தான்  பார்க்க  முடியாமல்  இருந்தது.  இன்று  பக்காத்தானை  ஆதரிக்கும் 'Otai Reformasi II' என்னும்   மலாய்மொழி  பக்கத்தைப் …

அன்வார்: அம்னோ இளைஞர் தலைவர்போல் லியோ பேசக்கூடாது

மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்,  “அம்னோ  இளைஞர்  தலைவர்போல்  பேசுவதை”  நிறுத்த  வேண்டும்  என்று பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  வலியுறுத்தினார்.  1987-இல், ஒப்ஸ்  லாலாங்  நடவடிக்கையில் 108  சமூக  ஆர்வலர்களும்  அரசியல்வாதிகளும் கைது  செய்யப்பட்டதற்கு  அன்வார்தான்  காரணம்  என்று  லியோ  சாடியிருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது …

எஸ்பிஏ எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கையை நிறுத்துக: அமைச்சுக்குக் கோரிக்கை

பள்ளிசார்ந்த  மதிபீட்டு  முறை (எஸ்பிஏ) நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால்  அதைக்  குறைகூறிய  பள்ளி  ஆசிரியர்களுக்கு  எதிரான நடவடிக்கையைக்  கல்வி  அமைச்சு  மீட்டுக்கொள்ள  வேண்டும்  என  டிஏபி  கேட்டுக்கொண்டுள்ளது. எஸ்பிஏ-யைக்  குறைகூறிய  முகம்மட்  நூர்  இஸ்ஸாட்  முகம்மட்  ஜொஹாரியையும்  மற்ற  ஆசிரியர்களையும்  கல்வி  அமைச்சு  தண்டிக்க  முற்பட்டதை  அது  கண்டித்தது.   அது, கல்விச் …

சரவாக்கின் 1,287 கைதிகளில் 25 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்

சரவாக்கின்  ஆறு  சிறைக்கூடங்களில்  மொத்தம்  1,287 கைதிகள்  இருப்பதாக  மாநில   சிறைத்துறை  இயக்குனர்  அப்துல்  காடிர்  ரயிஸ்  இன்று  சீபுவில்  கூறினார். அவர்களில்   25 விழுக்காட்டினர்  வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். சிவிக்  மையத்தில்,  இடைநிலைப்  பள்ளி  மாணவர்களிடம்  தேசியச்  சேவைப்  பயிற்சியாளர்களிடமும்  பேசிய  அப்துல்  காடிர்,  தீவகற்ப  மலேசியாவுடன்  ஒப்பிட்டால் …

அமைச்சரவையில் சேர வேண்டும் என்பதற்காக இஜிஎம் கூட்டப்படவில்லை

அமைச்சரவையில்  மீண்டும்  சேர்ந்துகொள்ள  வேண்டும்  என்பதற்காகவே  மசீச  அவசரப்  பொதுக்கூட்டம்  அவசரம்  அவசரமாகக்  கூட்டப்படுவதாகக்  கூறப்படுவதை  கட்சித்  தலைவர்  லியோ  தியோங்  லாய்  மறுத்தார். “நாங்கள்  அமைச்சரவையில்  சேர்வதற்கு  அவசரப்படுவதாகக்  கூறப்படுவதில்  உண்மையில்லை.  சீனர்களின் பிரச்னைகளுக்குத்  தீர்வுகாண  வேண்டியுள்ளது. அதுதான்  காரணம்”,என்று  லியோ  வலியுறுத்தினார்.

முகநூலில் பக்காத்தான்-ஆதரவு பக்கங்களுக்குத் தடையா?

நேற்று பிற்பகல்  தொடங்கி  மலேசியப்  பயனர்களால்  முகநூலில்  பக்காத்தான்-ஆதரவு  பக்கங்களுக்குள்  செல்ல  முடியவில்லை. 'We Fully Support PKR<DAP>'  'Zhong Zheng Kuai Xun’ போன்ற  முகநூல்  பக்கங்களைப்  பார்க்க  முடியவில்லை  என  பேராக்  டிஏபி-இன் பொருளாதாரப்  பிரிவுத்  தலைவர்  சொங்  ஸெமின்  கூறினார். மலேசியாவில்தான்  இப்படி.  அமெரிக்காவில் …

அமைச்சர் பதவி ஏற்பதில்லை என்ற மசீச முடிவில் மாற்றம்

அமைச்சர்  பதவி  உள்பட  அரசாங்கப்  பதவிகளை  ஏற்பதில்லை  என்ற  தீர்மானத்தை  மாற்ற  மசீச  முடிவு செய்துள்ளது. மசீச-வின்  புதிய  தலைவரான  லியோ  தியோங்  லாய்  தலைமையில்  நடைபெற்ற  அவசரப்  பொதுக்கூட்டத்தில்  இம்முடிவெடுக்கப்பட்டது. 13-வது  பொதுத்  தேர்தலில்  கூடுதல்  இடங்களை வெற்றிபெறத்  தவறினால்  அரசாங்கப்  பதவிகளை  ஏற்பதில்லை  என்று  அக்கட்சி…

உத்துசான் அத்துமீறல்! பாரிசான் மௌனம் ஏன்?

- மு. குலசேகரன், பெப்ரவரி 23, 2014.   கடந்த வார ஞாயிறு மிங்குவன் மலேசியா நாளிதழில், மலாய் இனமும் இஸ்லாம் மதமும் மலாய் மண்ணில் அவமதிக்கப்படுகின்றன என்று அதன் துணை ஆசிரியர் அஸ்மான் அனுவார் விலாவரியாக எழுதியிருந்தார்.   அவர் எழுத்தில் இனவாதமும் மதச் துவேசமும் நிறைந்திருந்தது.…

பாஸ் தலைவர் சரவாக்கில் நுழைய அனுமதி மறுப்பு

பாஸ்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  மஸ்லான்  அலிமான், சரவாக்கில் காலடி  எடுத்துவைக்க  அனுமதிக்கப்படவில்லை. “இன்று  காலை  மணி  11.30க்கு  சிபு  விமான  நிலையத்தில்  குடிநுழைவு  அதிகாரிகள்  என்னைத்  தடுத்து  நிறுத்தினர். “முதலமைச்சர்  அலுவலக  உத்தரவு  என்று  விளக்கம்  தரப்பட்டது. “நான்  அங்கு  செல்வது  சரவாக்  அரசாங்கத்துக்குப்  பிடிக்கவில்லையாம். குடிநுழைவு …

வேதா: ஒரு விவகாரத்துக்குத் தீர்வுகண்டு விட்டால் போதுமா?

டிங்கில்,  தாமான்  பெர்மாத்தா  அடுக்குமாடி  வீடுகளுக்கு  ரிம35  மில்லியன்  ஒதுக்கப்பட்டது  “புதிய  செய்தி” என்றும்  பிரதமருடன்  பேசியபோது  அது  குறிப்பிடப்படவில்லை  என்றும்  முன்னாள்  துணை  அமைச்சர்  பி.வேதமூர்த்தி  கூறினார். என்றாலும்  அதை  அவர் வரவேற்றார்.  ஆனால்,  இண்ட்ராப்  முன்வைத்த  பல  விவகாரங்களில்  ஒன்றுதான் அது. “டிங்கில்  மட்டும்தான் நம்முடைய …

பிகேஆர்: கர்பால் அரச நிந்தனை புரிந்தார் என்ற குற்றத்தீர்ப்பு ‘வக்கிரமானது’

டிஏபி  தலைவர்  கர்பால்  சிங், அரச  நிந்தனை  குற்றம்  புரிந்திருக்கிறார்  என்ற  தீர்ப்பு  “வக்கிரமானது, நீதித்  துறைமீதிருந்த   நம்பிக்கையையே  அரித்தெடுத்து  விட்டது”  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்  கூறினார்.  “அந்தத்  தீர்ப்பு  நாட்டை  அதிர வைத்துள்ளது; மலேசியாவில்  நீதியும்  சட்ட ஆளுமையும்  அடியோடு  தோல்வியுற்றிருப்பதை  அது  காட்டுகிறது.…

தேவாலயத்துக்கு அன்வார் ஒரு சகோதரர்; அரசியல்வாதி அல்ல

சமயங்களுக்கிடையில்  இணக்கநிலைக்கு  உதவும் என்ற நோக்கத்தில்தான்  காஜாங் இடைத்  தேர்தல்  வேட்பாளர்  அன்வார்  இப்ராகிம்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  தேவாலய  நிகழ்வு  ஒன்றுக்கு  அழைக்கப்பட்டிருந்ததாகவும் மற்றபடி  அவருக்கு  வாக்குகள்  தேடிக்கொடுக்கும்  நோக்கம்  இல்லை  என்றும்  காஜாங்  ஹோலி  பேமிலி  தேவாலயம்(எச்எப்சி)  கூறியுள்ளது.  தேவாலயம்  அரசியலில்  மூக்கை  நுழைப்பதாகக்  கூறப்படுவதை  அது …

ரபிஸி: என்மீது வழக்கு தொடுப்பதற்குப் பதில் பிரச்னைக்குத் தீர்வு காணுங்கள்

பிகேஆர்  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி, தம்மீது  வழக்குத்  தொடுக்க  செலவிடும்  பணத்தைக்  கொண்டு  ஷரிகாட்  பெக்காலான்  ஆயர்  சிலாங்கூர் (ஷபாஸ்), நீர்விநியோகத்துக்குத்  தடையாக  உள்ள  பிரச்னைகளைக்  கண்டறிந்து  அவற்றைச் சரி  செய்யலாம்  என்று  கூறியுள்ளார். செராஸ்  பத்து  11-இலும்  புக்கிட்  தம்போயிலும்  உள்ள  நீர்  சுத்திகரிப்பு  ஆலைகள் …

அன்வாருக்கு எதிராக சியு மெய் பன் போட்டியிடுவார்

காஜாங்   இடைத்  தேர்தலில்,  அன்வார்  இப்ராகிமுக்கு  எதிராக  போட்டியிடும்  பிஎன்  வேட்பாளராக  மசீச  உதவித்  தலைவர்  சியு  மெய்  பன்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்,  இன்று,  அம்னோ  தலைமையகத்தில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  இதை  அறிவித்தார். சியு, முன்னாள்  துணை  அமைச்சராவார். அத்துடன்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா …

இந்தியர்களை இழிவுபடுத்துவதை நிறுத்துவீர்

அம்னோ  அமைச்சர்களும்  அவர்களின்  ‘தலையாட்டி  பொம்மைகளான’  மஇகா-வினரும் இண்ட்ராபுடன்  செய்துகொண்ட  புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில்(எம்ஓயு)  அளிக்கப்பட்ட  வாக்குறுதிகளை  நிறைவேற்றத்  தவறியதற்கு  “மிக  அபத்தமான  சாக்குபோக்குகள்”  சொல்லி  இந்தியர்களின்  அறிவுத்திறத்தை  இழிவுபடுத்துவதை  நிறுத்த  வேண்டும். அம்னோ  அமைச்சர்களும் மஇகாவினரும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தற்காப்பதற்காக  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தியை  சரமாரியாக …

எல்எப்எல்: அரசியல் பழிவாங்கும் போக்கு திரும்பி வந்திருக்கிறது

டிஏபி  தலைவர்  கர்பால்  சிங்  அரச  நிந்தனைக்  குற்றம்  புரிந்தார்  என்று  தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது,  யதேச்சாதிகாரமும்  அரசியல்  பழிவாங்கும்  போக்கும்  மீண்டும்  தலைதூக்கி  இருப்பதை உறுதிப்படுத்துகிறது  என உரிமைகளுக்காக  போராடும்  வழக்குரைஞர்கள் (எல்எப்எல்)  அமைப்பு  கூறியுள்ளது. “எல்எப்எல் கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்  தீர்ப்பைக்  கேட்டு  அதிர்ச்சி  அடைகிறது. கர்பாலுக்கு ஐந்தாண்டுவரை …

வேதா கூறுவது பொய் என்பதற்கு அமைச்சர் காண்பிக்கும் ‘சான்றாதாரங்கள்’

அரசாங்கம் இந்திய  சமூகத்துக்கு   உதவவில்லை  என்று  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி  தப்பும்  தவறுமான  தகவல்களைப்  பரப்பி  வருவதாக  வீடமைப்பு,  உராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  முகநூலில்  குற்றம்  சாட்டியுள்ளார்.  ஒரு  தடவை  வேதமூர்த்தி,  சிலாங்கூர்,  டிங்கில்,  தாமான்  பெர்மாத்தாவில்  இந்தியர்களின்  வீட்டுப்  பிரச்னைகளுக்குத்  தீர்வுகாண  வேண்டும்  எனப் …

கர்பால் அரச நிந்தனை குற்றம் புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு

ஐந்தாண்டுகளுக்குமுன்,  பேராக்  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  முகம்மட்  நிஜார்  ஜமாலுடின்  அகற்றப்பட்ட  விவகாரத்தில் சுல்தான்  அஸ்லான்  ஷாவுக்கு  எதிராக  டிஏபி  தலைவர்  கர்பால்  சிங்  தெரிவித்த  கருத்து  அரச  நிந்தனைக்குரியதுதான்  என  உயர்  நீதிமன்றம்  இன்று  தீர்ப்பளித்தது. இக்குற்றத்துக்காக கர்பாலுக்கு  ஐந்தாண்டுக்கு  மேற்போகாத  சிறைத்தண்டனை  அல்லது  ரிம5,000-க்கு  மேற்போகாத …