‘பிடிபிடிஎன் கழிவு பணக்காரர்களுக்கு மட்டுமே பயனாக இருக்கும்’

பிடிபிடிஎன் கடன்களை முழுமையாக செலுத்தும் மாணவர்களுக்கு கழிவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது பணக்காரர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என ஷா அலாம்  பாஸ் எம்பி காலித் சாமாட் கூறுகிறார். ஏனெனில் அவ்வளவு பெரிய தொகையை பணக்காரர்கள் மட்டுமே உடனடியாக திரட்டி திருப்பிக் கொடுக்க முடியும் என அவர் இன்று…

பெட்டாலிங் ஜெயா மேயருடைய இட மாற்றத்தை சிலாங்கூர் மந்திரி புசார்…

பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ரோஸ்லான் ஸாக்கிமானுடைய இட மாற்ற ஆணை இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது பொதுச் சேவைத் துறையுடன் விவாதங்கள் முடிவடையும் வரையில் சிலாங்கூர் உயர்நிலை  அதிகாரிகள் இட மாற்றங்கள் முடக்கி வைக்கப்பட்டுவதாக சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளதே அதற்குக் காரணமாகும். அந்த…

தயிப்-தான் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்கிறார் ஷானாஸ்

சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்முட்தான் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர், அவரே தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பண்காரராகவும் இருக்கலாம் என்கிறார் அவரின் முன்னாள் மருமகள். தமது முன்னாள் கணவர் மஹ்முட் அபு பெகிர் தயிப்பின் சொத்துரிமை பற்று சாட்சியமளித்த ஷானாஸ் அப்துல் மஜிட்,49, (வலம்) மஹ்முட்டுக்கு உலக…

ஸ்மார்ட்போனுக்குக் கழிவு ‘குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே’ கிடைக்கும்

ஸ்மார்ட் போனுக்கு (சுட்டிப் பேசிகள்) வழங்கப்படும் ரிம 200 கழிவைக் “குறிப்பிட்ட சில கடைகளில் மட்டுமே” பெற முடியும். “விலையில் கழிவைப் பெற மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தில் (எம்சிஎம்சி) பதிவு செய்துகொண்டிருக்கும் கடைகளில் அதைப் பெறலாம்”, என்று நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மட் இர்வான் சிரேகார்…

‘சமயப் பள்ளிகள் நேர வெடி குண்டுகள்’

மலேசியாவில் சமயப் பள்ளிக்கூட முறை 'நேர வெடி குண்டு' என கூறப்பட்டுள்ளது. அந்தக் கல்வி முறையை முழுமையாக ஆய்வு செய்த தேசியத் தற்காப்பு பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளர் அரிபின் ஒமாரும் அவரது சகாக்களும் அவ்வாறு முடிவுக்கு வந்துள்ளனர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வரும் அந்தப் பள்ளிக்கூடங்களின்…

சுஹாக்காம்: அந்நிய நிதிகளைப் பெறுவதற்கு சுவாராமுக்கு உரிமை உண்டு

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணையை அதிகாரிகள் தொடரும் வேளையில் சுஹாக்காம் என்ற மனித உரிமைகள் ஆணையம் சுவாராமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு சுவாராம் அந்நிய நிதி உதவிகளைப் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என சுஹாக்காம் கூறியது.…

நஸ்ரி: சபாவில் உள்ள அந்நியர்கள் பாதுகாப்பு மருட்டல் அல்ல

சபாவில் சட்ட விரோதமாகவும் சட்டப்பூர்வமாகவும் உள்ள கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்கள் மாநிலம் அல்லது நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் எந்த அபாயத்தையும் ஏற்படுத்தவில்லை எனப் பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். "மற்ற மாநிலங்களைப் போல அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது," என அவர்…

எரிசக்தி அமைச்சர்: மின் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது

நிலக்கரி, இயற்கை எரி வாயு உட்பட எரிபொருட்களின் விலைகள் உலக அளவில் கூடிக் கொண்டே போகின்றன. அதனால் எதிர்காலத்தில் மின் கட்டணத்தை மாற்றம் செய்வதைத் தவிர்க்க முடியாது என எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் கூறியிருக்கிறார். மின் கட்டண உயர்வு எப்போது எந்த…

பிரதமர்: மலேசியாவில் மகளிர் உரிமை போராட்ட அமைப்புக்கள் தேவை இல்லை

மலேசியாவில் மகளிருக்கு தொடக்க காலத்திலிருந்தே சம நிலை கொடுக்கப்பட்டு வந்துள்ளதால் " மலேசியாவில் மகளிர் உரிமை போராட்ட அமைப்புக்கள் தேவை இல்லை" பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொண்டுள்ளார். அவர் இன்று காலை 50வது தேசிய மகளிர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அந்த வகையில்…

உங்கள் கருத்து : நஜிப்புக்கு எல்லாம் குரைப்புத் தான் கடிப்பு…

"நிதி அமைச்சரும் எல்லா முதுநிலை அமைச்சர்களும் இல்லாத சூழ்நிலையில் ஒரு நாட்டின் பட்ஜெட் விவாதம் நிகழ்வது இதுவே உலகில் முதல் முறையாக இருக்கும்" பட்ஜெட் விவாதம் தொடங்கியது நஜிப் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது கேஎஸ்என்: பட்ஜெட் விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளுடைய கருத்துக்களைச் செவிமடுக்க நிதி அமைச்சரும் மற்ற…

பெட்டாலிங் ஜெயா மேயர் திடீர் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா மேயர் முகம்மட் ரோஸ்லான் சகிமான் 24 மணி நேரத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அறிந்து சிலாங்கூர் அரசு வியப்படைகிறது. சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான ரோனி லியு, தமக்கும் மந்திரி புசார் அலுவலகத்துக்கும் அது பற்றி எதுவும் தெரியாது என்றார். “அது ஐயத்துக்குரியதாகவும் வழக்கத்துக்கு…

நீதிமன்றம்: மலேசியாகினிக்கு வெளியீட்டு அனுமதி பெறுவதற்கு உரிமை உண்டு

மலேசியாகினி (Malaysiakini) செய்தி இணையத் தளத்தை நடத்துகின்ற Mkini Dotcom Sdn Bhd-க்கு வெளியீட்டு அனுமதியை வழங்குவது இல்லை என்ற உள்துறை அமைச்சு முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் (முறையீட்டு, சிறப்பு அதிகாரங்கள் பிரிவு) தள்ளுபடி செய்துள்ளது. அது "பொருத்தமற்றது, நியாயமற்றது' என தீர்ப்பளித்த நீதிபதி அபாங் இஸ்காண்டார் அபாங்…

இன்னுமொரு நிறுவனச் சட்டமீறல்: டோனி புவா அம்பலப்படுத்தினார்

பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, இன்னொரு நிறுவனம் 1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறினார்.  ஆனால், மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமை விடாமல் துரத்தும் மலேசிய நிறுவனங்களின் ஆணையம் (சிசிஎம்), அந்த நிறுவனத்தின் விசயத்தில் கவனம் செலுத்துவதுபோல் தெரியவில்லை. நாட்டின் புதிய சிக்கன…

அன்வார்: பிஎன் கூட நிழல் அமைச்சரவையைப் பெற்றிருக்கவில்லை

பக்காத்தான் ராக்யாட் நிழல் அமைச்சரவையை ஏன் அமைக்கவில்லை என்ற பிஎன் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி, தான் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் கூட நிழல் ஆட்சிமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளது. "நிழல் அமைச்சரவை பற்றிக் குறிப்பிடும் போது யார் சிலாங்கூர் மந்திரி புசார் என்பதை…

பாஸ்: பட்ஜெட் ஏற்படுத்திய மயக்கத்தைக் கணக்கறிக்கைத் தெளிய வைக்கும்

விரைவில் வெளிவரும் தலைமைக் கண்காய்வாளர் (ஏஜி) அறிக்கை. 2013 பட்ஜெட் என்னும் ‘கஞ்சா’வால் ஏற்பட்டிருக்கும்  போதையைத் தெளிய வைக்கும் என்று பாஸ் கூறுகிறது. கணக்கறிக்கையின்முன் பட்ஜெட் முக்கியத்தும் இழக்கும் என்பதால் மத்திய அரசு வேண்டுமென்றே அதன் வெளியீட்டைத் தாமதப்படுத்தியது என்று பாஸ் விளம்பரப் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம்…

பட்ஜெட் விவாதம் தொடங்கியது நஜிப் அவையில் இல்லாதது குறித்து கேள்வி…

2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று காலை மக்களவையில் தொடக்கி வைத்தார். அப்போது மக்களவையில் பிரதமர் நஜிப் காணப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். "பட்ஜெட் விவாதத்தின் போது நிதி அமைச்சர் இங்கு இருப்பதுதான் வழக்கம். ஆனால் விவாதத்திற்கு…

பினாங்கை மீண்டும் கைப்பற்ற அம்னோவின் 3-3-3-1 வழி முறையை டிஏபி…

13வது பொதுத் தேர்தலில் பினாங்கு சட்டமன்றத்தில் தனக்கு தற்போது உள்ள 11 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டு மாநில அரசை பிஎன் மீண்டும் கைப்பற்ற அம்னோ வழங்கியுள்ள 3-3-3-1 வழி முறையை பினாங்கு டிஏபி சாடியுள்ளது. பிஎன் உறுப்புக் கட்சியான கெரக்கான் 2008ல் எந்தத் தொகுதியும் கிடைக்காமல் போன…

எஸ்யூபிபி இப்போதைக்கு சரவாக் பிஎன்-னில் தொடர்ந்து இருக்கும்

எஸ்யூபிபி என்னும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி இப்போதைக்கு மாநில பிஎன் -னில் இருந்து வரும் என அதன் தலைவர் பீட்டர் சின் அறிவித்துள்ளார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள விஷயங்கள் மீது கூட்டணித் தலைமைத்துவத்துடன் 'கலந்தாய்வு' செய்வதற்கு மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது என…

அன்பளிப்புகளுடன் வரும் அம்னோ தலைவர்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்

உங்கள் கருத்து:  “நஜிப் அவர்களே, எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் நீங்கள் விட்டெறியலாம். பணத்தால் Read More

ஊடகங்கள் ‘வி கழுத்து தினத்தை’ பதிவு செய்யத் தடை

கேஎல்சிசி என்ற Suria Kuala Lumpur City Centre வளாகத்தில் நடத்தப்பட்ட   'வி கழுத்து தின' கூட்டத்தைப் பதிவு செய்ய ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்தக் கூட்டத்தைப் பதிவு  செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களை அணுகிய இரண்டு கேஎல்சிசி காவலர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். அந்த நிகழ்வு…

மலேசியாகினி நாளிதழ் வெளியீட்டிற்கான உரிமம்: தீர்ப்பு இன்று

மலேசியாவின் முன்னணி செய்தி இணையதளமான மலேசியாகினி ஒரு நாளிதழை வெளியிடுவதற்கான உரிமத்திற்கு உள்துறை அமைச்சிடம் மனு செய்திருந்தது. அம்மனுவை உள்துறை அமைச்சு நிராகரித்ததைத் தொடர்ந்து மலேசியாகினி உள்துறை அமைச்சின் மீது வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிவுற்றதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் மணி 4.30…

நீண்ட காலத்திற்குப் பின்னர் ஹிண்ட்ராப்- பிகேஆர் சந்திப்பு நிகழ்ந்தது

2008 மார்ச் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எழுந்த வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஹிண்ட்ராப்பும் பிகேஆரும் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளன. ஹிண்ட்ராப் ஆலோசகர் என் கணேசன் கடந்த வாரம் கோலாலம்பூரில் பல பிகேஆர் தலைவர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான…