அன்வாருக்கு ரிம800,000 இழப்பீடு கொடுக்குமாறு பாபாகோமோ-வுக்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம், வான்  முகம்மட்  அஸ்ரி  வான்  டெரிஸ்தான்  பாபாகோமோ  என்பதும்  அவர்  தீய  நோக்குடன்  அன்வார்  இப்ராகிம்மீது  அவதூறு கூறி  வந்தார்  என்பதும்  நிரூபிக்கப்பட்டிருப்பதாக  தீர்ப்பளித்தது. . தீர்ப்பை  வழங்கிய நீதித்துறை  ஆணையர்  ரோலிலா  யோப், அவதூறு  செய்த  வான்  முகம்மட்  அஸ்ரி ரிம800,000  இழப்பீடு …

துணைப் பிரதமர்: அன்வார் பெயரளவுக்குத்தான் சிலாங்கூருக்கு ஆலோசகர்

சிலாங்கூர்  மத்திய  அரசாங்கத்துடன்  நீர்  ஒப்பந்தம்  செய்து  கொண்டதைக்கூட  அறியாத  அன்வார்  இப்ராகிம்  பெயரளவில்தான்  சிலாங்கூர்  பொருளாதார  ஆலோசகர்  என  பிஎன்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  கூறினார். “மாநிலத்தின்  பொருளாதார  ஆலோசகர்  என்று  கூறிக்கொள்கிறார்  ஆனால்,  சிலாங்கூரில்  என்ன  நடக்கிறது  என்பதைக்கூட  அறியாதிருக்கிறார். அப்படியானால்  இவ்விசயத்தில்  அவர் …

போலீஸ் அதிகாரிகள்மீது விசாரணை என்பது பொய்யான செய்தி

மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி),  ஊழல்களிலும்  பணத்தைச்  சலவைசெய்யும்  நடவடிக்கையிலும்  ஈடுபட்ட  60  போலீஸ்  அதிகாரிகள்மீது  விசாரணை  நடத்துவதாக  இணைய  செய்தித்தளம்  ஒன்றில்  வெளிவந்த  செய்தியில்  உண்மை  இல்லை  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  மறுத்துள்ளார். “எம்ஏசிச்  தலைமை  ஆணையர்  டான்ஸ்ரீ அபு  காசிம்  முகமட்டைச் …

மார்ச் 2-க்குப் பின்னர் 2.2 மில்லியன் பேர் நீர்ப் பங்கீட்டை…

அணைக்கட்டுகளில்  நீரின்  அளவு  குறைந்து  வருவதால்  கிள்ளான்  பள்ளத்தாக்கில்  மேலும்  2.2 மில்லியன்  பேர்  நீர்ப்  பங்கீட்டை  எதிர்நோக்குவர்.  “இதனால்,  கோம்பாக்,  கோலாலும்பூர்,  பெட்டாலிங்,  கிள்ளான், ஷா  ஆலம்,  கோலா  சிலாங்கூர்,  ஹுலு  சிலாங்கூர்  ஆகிய  ஆறு  மாவட்டங்களில்  260  பகுதிகள்  பாதிக்கப்படும்”,  என ஷபாஸ்  செயல்முறை  இயக்குனர்…

அன்வார் நஜிப்புடன் சேர்கிறாரா?

அன்வார்  இப்ராகிமையும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையும்  சேர்த்துவைக்க மிகப்  பெரிய  ஏற்பாடு  ஒன்று  கமுக்கமாக  நடைபெற்று  வருகிறதாம். அம்னோவுடன்  நெருக்கமான  தொடர்பு  வைத்திருக்கும்  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்  தம்  வலைப்பதிவில்  இவ்வாறு கூறியுள்ளார்.  அன்வாரை  அமைச்சராக்கி  அவருக்கு  முக்கியமான  பொறுப்பு  கொடுக்கப்படும்  சாத்தியம்  இருப்பதாக  அவர் …

எம்.ஐ.இடி, எய்ம்ஸ்ட் சாமிவேலுவின் சொத்தா? அப்படி இல்லையே!

-மு. குலசேகரன், பெப்ரவரி 27, 2014 2000 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட எம்.ஐ.டி கல்வித்திட்டம் அப்போதைய ம.இ.காவின் தலைவரால் பெரும் ஆரவாரத்துடன் இந்திய மாணவர்களின்  கல்வி  நலன் கருதி ம.இ.காவின் பெரும் திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பலனாக எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு நிதி திரட்ட ச. சாமிவேலு நாடு…

மசீச: காலிட் ஒரு நல்ல எம்பி-ஆக இருப்பார்

திடீரென்று  சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட் இப்ராகிமின்  புகழ்பாடத்  தொடங்கி  இருக்கிறது  மசீச.  இந்த  வகையிலாவது  காஜாங்  இடைத்  தேர்தலில்  அன்வார்  இப்ராகிமை  எதிர்த்துப்  போட்டியிடும்  தன்  வேட்பாளருக்கு  கூடுதல்  வாக்குகள்  கிடைக்காதா  என்கிற  ஒரு  நப்பாசைதான். நேற்று  புத்ரா ஜெயாவும்  சிலாங்கூர்  அரசும் செய்துகொண்ட   நீர்  ஒப்பந்தம் …

எம்ஏஎஸ் தொழிற்சங்கத் தலைமைச் செயலாளரும் மற்றவர்களும் பணி இடைநீக்கம்

மலேசிய  விமான  நிறுவனம் (எம்ஏஎஸ்), தேசிய  விமானப்  பணியாளர்  சங்க(நுவாம்)த்  தலைமைச்  செயலாளரையும்  மேலும்  மூன்று  விமானப்  பணியாளர்களையும்  தற்காலிக  பணிநீக்கம்  செய்துள்ளது. நுபாம்  நேற்று  ஓர்  அறிக்கையில்  இதைத்  தெரிவித்தது.    நுவாம்  பேரணி  ஒன்றில்  கலந்துகொண்டதற்காகவும்  தொழிற்சங்க  சுற்றறிக்கை  ஒன்றை  அனுப்ப  எம்ஏஎஸ்  மின்னஞ்சலைப்  பயன்படுத்தியதற்காகவும் தலைமைச் …

33 ஆண்டு தயிப் ஆட்சிக்குப் பின்னரும் சரவாக்கில் வறுமை குறையவில்லை

அப்துல்  தயிப்  மஹ்மூட் 33  முதலமைச்சராக   இருந்து  ஆண்டுகள்  ஆண்ட  பின்னரும்,  சரவாக்,  வறுமைப் பட்டியலில்  இன்னும் மூன்றாம் இடத்திலேயே  இருப்பது  ஏன்  என்று  சரவாக்  பிகேஆர்  இளைஞர்  பகுதி  கேள்வி  எழுப்பியுள்ளது. அம்மாநிலத்தில்  நிதிக் கையிருப்பு  ரிம22 மில்லியன் இருந்தும்  இந்நிலை  ஏன்  என  இஸ்வார்டி  முர்னி …

மலேசியா மலாய்க்காரர்களுக்கே உரியது என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும்

மலேசியா, மலாய்க்காரர்களின்  நாடு  என்பது  உலக  அளவில்  அங்கீகரிக்கப்பட  வேண்டும்  என்று  இஸ்லாமிய  என்ஜிஒ-வான ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)  கோரிக்கை  விடுத்துள்ளது.  “உலகம்  சீனாவைச்  சீனர்களுடையதாக,  இந்தியாவை  இந்தியர்களுடையதாக,  இங்கிலாந்தை  ஆங்கிலேயருடையதாக,  ஜெர்மனியை  ஜெர்மானியருடையதாக  அங்கீகரித்து  ஏற்றுக்கொண்டிருப்பதுபோல்  இது  மலாய்க்காரர்  நாடு”, என இஸ்மா  உதவித்  தலைவர் II…

ஜைட்: நிலம் பெறுவதற்கு யாருடைய ஆதரவையும் நாடவில்லை

முன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்,  தம்  “கட்சிக்காரர்களுக்கு”  சிலாங்கூரில்  அரசு  நிலங்களைப்  பெற்றுத்தர  பிகேஆரின் ஆதரவை  நாடினார்  என்று  கூறப்படுவதை  மறுத்தார். பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  அம்பலப்படுத்திய  மின்னஞ்சல்கள்  தொடர்பில்  விளக்கமளித்த  ஜைட்,  அந்த  நிலங்கள்  அந்த  நிறுவனங்களுக்குச்  சொந்தமானவைதான்  என்றும்  அவற்றை  மேம்படுத்துவதற்கு  உரிமம் …

மஇகா: வேதா யார், எங்களை பிஎன்னிலிருந்து வெளியேறச் சொல்ல

மஇகாவை  பிஎன்னிலிருந்து  வெளியேறச்  சொல்லவோ, குறைகூறவோ இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்திக்கு  உரிமை  கிடையாது  என மஇகா  தலைமைப்  பொருளாளர் எஸ்.முருகேசன் காட்டமாகக்  கூறியுள்ளார். “அவர்  இந்திய  சமூகத்துக்குச்  சேவையாற்றத்  தவறி  விட்டார்,  இப்போது  அரசாங்கத்தை  விட்டும் விலகி  விட்டார். எங்களை  பிஎன்னிலிருந்து  விலகச்  சொல்லவோ, விரல்  நீட்டி  எங்களைக் …

மை வாட்ச்: போலீஸ் படை ஐஜிபி-இன் கட்டுப்பாட்டில் இல்லை

தம் அதிகாரிகள்மீது  ஊழல்  விசாரணை  நடப்பது  பற்றித்  தமக்குத்  தெரியாது  என்று  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறியிருப்பது  போலீஸ்  படை  அவரது  கட்டுப்பாட்டில்  இல்லை  என்பதைக் காண்பிக்கிறது. குற்றச்செயல்களை  எதிர்க்கும்  மைவாட்ச்  அமைப்பின்  தலைவர் எஸ். ஸ்ரீசஞ்சீவன்  நேற்று  ஓர்  அறிக்கையில்  இவ்வாறு  கூறினார்.…

மலேசியாகினி மீது செய்வினை தாக்குதல்?

மலேசியாகினி  தொடக்கப்பட்ட  காலத்திலிருந்து  அதற்குத்தான்  எத்தனை  எத்தனை  தடைகள், தடங்கல்கள். கடுமையான    விமர்சனங்கள்,  போலீஸ்  அதிரடிச் சோதனைகள்  வழக்குகள்,  செய்தியாளர்  கூட்டங்களில் கலந்துகொள்ளத்  தடை....இப்படி  பல  எதிர்ப்புகளை  அது  சந்தித்து  வந்துள்ளது. ஆனால், நேற்று  அதிகாலை  அதன்  அலுவலகத்தில்  நடந்துள்ள  தாக்குதல்  அது  சற்றும்  எதிர்பாராத  ஒன்று. சிவப்புச் …

சிலாங்கூரில் நீர் விநியோகம் மொத்தமும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது

சிலாங்கூரில்  நீரளிப்புச்  சேவையில்  ஈடுபட்டுள்ள  நான்கு  நிறுவனங்களையும்  மாநில  அரசு  எடுத்துக்கொள்ளும். அந்நிறுவனங்களுக்கு  இழப்பீடாக  ரிம9.64 பில்லியன்  ரிங்கிட்  வழங்கப்படும். இதற்கான  ஒப்பந்தம்  ஒன்றை  சிலாங்கூர்  அரசும்  கூட்டரசு  அரசாங்கமும்  இன்று  செய்துகொண்டன. சிலாங்கூர்  அரசு  அந்நிறுவனங்களில்  பங்குரிமை  பெறுவதற்கு  புத்ரா ஜெயா  ரிம 2 பில்லியன்  கொடுத்துதவும்.…

வேதா: மஇகாவே அடிமைத்தனத்தை உதறித்தள்ளி ‘துவானை’விட்டு விலகி வா

துணை  அமைச்சர்  பதவியைத்  துறந்த  பின்னர்,  இந்தியர்களுக்கு  உதவவில்லை  எனப்  பிரதமரைச்  சாடிவரும்  பி.வேதமூர்த்தி,  இப்போது  மஇகா  பிஎன்னைவிட்டு  வெளியேற  வேண்டும்  என்ற  கோரிக்கையை  முன்வைத்துள்ளார். மஇகா இந்திய  சமூகத்திடம்  நேர்மையாக  நடந்துகொள்வது  உண்மையாயின்  அதை  நிரூபிக்க  இதைச்  செய்ய  வேண்டும்  என்று  மலேசிய  இண்ட்ராப்  சங்கத்தின்  தலைவரான …

நேர்மையானவரா ஜைட்? கேள்வி எழுப்புகிறார் ரபிஸி

முன்னாள்  பிகேஆர் உறுப்பினரான  ஜைட் இப்ராகிம்,  அரசாங்க  நிலம்  கேட்டு  அனுப்பிவைத்த மின்னஞ்சல்களை  அம்பலப்படுத்தியுள்ளார்  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி. அவை   2010-இல்,  ரபிஸி சிலாங்கூர்  பொருளாதார  அலுவலகத்தின்  தலைமை  செயல்  அதிகாரியாக  இருந்தபோது  அனுப்பப்பட்டவை.  அவற்றில்  ஜைட்  அவரின்  “கட்சிக்காரர்”  சார்பில்  நிலம்  கேட்டிருந்தார். “நீங்கள்…

கால்பந்தாட்ட சச்சரவு தொடர்பில் ஜோகூர் இளவரசரிடம் போலீஸ் விசாரணை

பிப்ரவரி  முதல் நாள்  லார்கினில்,  டி-டீமுக்கும்  ஜோகூர்  டாருல்  டா’ஸிம் (ஜெடிடி)  குழுவுக்குமிடையில்   நிகழ்ந்ததாகக்  கூறப்படும்   சச்சரவு தொடர்பில்  போலீசார்  ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில் சுல்தான்  இப்ராகிமின்  வாக்குமூலத்தைப்  பதிவு  செய்துள்ளனர். இதை இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  உறுதிப்படுத்தியதாக  மலாய்மொழி  நாளேடான  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது.  ஆனால்,…

ஜிஎஸ்டி வந்த பிறகு விலைகளைக் குறைத்த அரசு என பிஎன்…

பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)யைக்  கண்டு  மாற்றரசுக் கட்சிகள்  மிரண்டு  போயுள்ளன.  எனென்றால்,  உண்மையில் அந்த  வரியால்  பொருள்களின்  விலை  குறையும்- ஓராண்டுக்குப்  பின்னர்  அவ்வாறு  நிகழும்  என்கிறார்  நிதி துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான். ஜிஎஸ்டி  நடைமுறைக்கு  வரும்போது  5-10% விற்பனை  வரி  இரத்தாகும்  என்பதால்  பொருள் தயாரிப்பின் …

டிஏபி-க்கே சிலாங்கூர் எம்பி ஆகும் தகுதி இருக்கிறதாம்: மசீச கூறுகிறது

சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  பிகேஆரைவிட  டிஏபி-யே  கூடுதல்  தகுதி  பெற்றிருப்பதாக  சிலாங்கூர்  மசீச செயலாளர்  இங்  சொக்  சின்  கூறுகிறார். சட்டமன்றத்தில்  பிகேஆரிடம்  இருப்பது  14  இடங்கள். ஆனால், டிஏபி  15 இடங்களை  வைத்துள்ளது. மந்திரி புசார்  பதவிக்கு உரிமை  கொண்டாடும்  துணிச்சல்  டிஏபி-க்கு  வர  வேண்டும் …

எஸ்எம்கே புலாவ் கேரி இடைநிலைப்பள்ளி தமிழ் மாணவர் காலணியால் அடிக்கப்பட்டார்

  தமிழ் மாணவர்கள் இழிவான முறையில் ஆசிரியர்களால் கண்டிக்கப்படுவது இப்போதெல்லாம் ஒரு வழக்கமான பாணியாக இருக்கிறது.   அதற்கேற்ப, கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரித் தீவு இடைநிலை பள்ளியில் 2 ஆம் படிவ தமிழ் மாணவர் ஒருவர் அங்குள்ள மலாய் ஆசிரியரால் காலணியால் தாக்கப்பட்ட சம்பவத்தை மலேசியா தமிழர்…

டயிம்: நஜிப் மிகவும் மென்மையாக நடந்துகொள்கிறார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் இன்னும்  திடமாக  நடந்துகொள்ள  வேண்டும்  என  நினைக்கிறார்  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின். “வலுவான  தலைமைத்துவத்தையே  மக்கள்  விரும்புகிறார்கள்”,  என்று  கினிபிஸ்   நேர்காணலில்  தெரிவித்த  டயிம்,  நஜிப்  திடமாக  நடந்துகொள்வதுமில்லை  சரியாக  முடிவெடுப்பவதும்  இல்லை  என்றார். பணவீக்கத்தைச்  சமாளிப்பதிலும்  சமய  விவகாரங்களில் …

மூன்று மில்லியன் பேருக்கு நீர் விநியோகம் தடைப்படும்

சிலாங்கூர்  அரசு,  நான்கு  நீர் சுத்திகரிப்பு  ஆலைகளுக்கு  சுத்திகரிக்கப்படாத   நீர்  அளிப்பதை  நிறுத்துவதால் மூன்று  மில்லியன்  பயனீட்டாளர்கள்  பாதிக்கப்படுவார்கள்  என  ஷபாஸ்  எச்சரித்துள்ளது. “நாள்தோறும்  500 மில்லியன்  லிட்டர்  நீரைக் குறைக்கும்  சிலாங்கூர்  அரசின்  திட்டத்தால்  750,000  வீடுகளுக்கு(மூன்று  மில்லியன்  பயனீட்டாளர்களுக்கு)  நீர்  விநியோகம்  தடைப்படும்.......”என  ஷபாஸ்  செயல்முறை …