‘மாற்றத்துக்குப் பதில் நஜிப் நமக்கு வெட்கத்தையே கொண்டு வந்துள்ளார்’

"கடினமான வாழ்க்கை என்ன என்பதையும்  தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க  சட்டியை சுரண்டவும் சேமிக்கவும் தெரிந்த தலைவர்களே நமக்குத் தேவை." நஜிப்: நான் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவையில்லை எம்எப்எம்: மாற்றம் ? என்ன மாற்றம் ? வாழ்க்கைச் செலவுகள் கூடுவதால் என் சேமிப்பு குறைந்து கொண்டே போகிறது.…

அருணின் ‘தமிழர் தடங்கள்’ இன்று வெளியீடு!

கருத்து: தமிழர்களின் வரலாற்று வாழ்வாதார தடங்களை நிறையவே அழித்து விட்டார்கள். எஞ்சி இருப்பவை சில. அவற்றையாவது நாம் தற்காத்துக் கொள்வோமா? என்கிற நியாயமான உணர்வால், ஆதங்கத்தால் நண்பர் சீ. அருண் அவர்களின் ‘தமிழர் தடங்கள்’ வரலாற்று ஆவணம் மலேசிய தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டிருந்த சில உண்மைகளை மிகத் துல்லியமாக…

‘நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது ‘பாவம்’ என்கிறார் நஜிப்

இந்த நாட்டின் எதிர்காலம் மிகவும் மதிப்புமிக்கது. அதனால் அதனைப் பணயம் வைக்கக் கூடாது. நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது 'பாவம்' (pantang) என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அம்னோ தலைவருமான அவர் நேற்று ஜோகூர் அம்னோ பேராளர் கூட்டத்தில் பேசினார். 13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி…

தொல்லை தீர உதவுங்கள்: சுஹாகாமுக்கு சுவாராம் வேண்டுகோள்

அரசாங்கத் துறைகள் விசாரணை என்ற பெயரில் தனக்குத் தொல்லை தருவதாக மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அடிப்படை மனித உரிமை ஆணையத்திடம்(சுஹாகாம்) புகார் செய்துள்ளது. நேற்று சுஹாகாம் தலைமையகத்தில் 14-அம்ச மகஜரை வழங்கிய சுவாராம், தனக்குக் கொடுக்கப்படும் தொல்லைகள் மனித உரிமை மற்றும் சிவில் உரிமை மீறல்கள்…

அனைத்துலக பொது மன்னிப்புக் கழகம்: போராளிகளை ‘அச்சுறுத்துவதை’ நிறுத்திக் கொள்ளுங்கள்

அரசாங்கம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள மனித உரிமைப் போராட்ட அமைப்பு ஒன்றை 'அச்சுறுத்துவதை' நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்துலக பொது மன்னிப்புக் கழகம் மலேசியாவை கேட்டுக் கொண்டுள்ளது. போலீஸ் முரட்டுத்தனம் மற்றும் இதர அத்துமீறல்களுக்கு எதிராக போராடி வரும் சுவாராமுக்கு கிடைக்கும் நிதி உதவிகள் பற்றிய ஆய்வை அதிகாரிகள்…

பினாங்கு முதலமைச்சர் தாம் குடியிருக்கும் வீட்டின் வாடகை ஒப்பந்தத்தை வெளியிடுகிறார்

ஜார்ஜ் டவுனில் தாம் வசிக்கும் தனியார் வீடு குறித்து விளக்குமாறு மாநில பிஎன் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை முதலமைச்சர் லிம் குவான் எங் ஏற்றுக் கொண்டுள்ளார். ஜாலான் பின்ஹோர்னில் உள்ள அந்த வீட்டுக்கு நிதி அளிப்பதற்காக பொது நிதிகள் விரயம் செய்யப்படுவதாக பிஎன் தொடர்ந்து தாக்கிப் பேசி வந்ததைத்…

ஹிஷாம்: அரசாங்கம் வெளிநாட்டு நிதியுதவியைக் கண்காணிக்கும்

வெளிநாட்டு நிதியுதவி நாட்டின் சுதந்திரத்திலும் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் உள்துறை அமைச்சு அதை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று அதன் அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். 2005இலிருந்து மலேசியாவின் பல்வேறு என்ஜிஓ-கள் கிட்டதட்ட ரிம20மில்லியன் வெளிநாட்டு உதவியைப் பெற்றிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பற்றி ஹிஷாமுடின் கருத்துரைத்தார். “அவ்விவகாரம் சட்டத்துறைத்…

FGV பங்கு விலைகள் தொடர்ந்து விழுந்தால் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும்

FGV என்ற Felda Global Ventures பங்கு விலை நான்கு ரிங்கிட்டுக்கு கீழே விழுந்தால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அனாக் எனப்படும் Persatuan Anak Peneroka Felda அமைப்பு மருட்டியுள்ளது. "4 ரிங்கிட்டுக்கும் குறைவாக அதன் பங்கு விலை சரியுமானால் ஆரஞ்சுப் பேரணியைக் காட்டிலும் பெரிதாக…

ஜனநாயகத்தில் ‘பாச்சா’ பலிக்கவில்லை; பயமுறுத்தும் தந்திரங்களைக் கையாள்கிறது பிஎன்

அயல்நாட்டு ஜனநாயக-ஆதரவு அமைப்புகள், உள்நாட்டு என்ஜிஓ--களுக்கு நிதியுதவி செய்து அரசாங்கத்தை Read More

தாயிப் கோடீஸ்வரர் (billionaire) எனக் கூறப்படுவதை பிரதமர் நிராகரிக்கிறார்

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பில்லியன் கணக்கான ரிங்கிட் செல்வத்தை சேர்த்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். "எல்லா விதமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுகின்றன. அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை," என அவர் இன்று காலை நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறினார். 15…

நஜிப்: எங்களுக்கு இன்னொரு தவணைக்கு வாய்ப்பு கொடுங்கள், நாங்கள் நிறையச்…

பிஎன், அரசாங்கத்தை அமைப்பதற்கு இன்னொரு தவணைக் காலத்துக்கு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் வழி பிஎன் நாட்டுக்கு இன்னும் நிறைய வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என அவர் சொன்னார். "என்னை நம்புங்கள். மக்கள் ஆதரவுடன் நாட்டை…

பகைமைப் போக்கு வேண்டாம்: அதனை உங்கள் குண்டர்ளிடம் சொல்லுங்கள்

"நஜிப் ஏன் தமிழில் கடிதங்களை அனுப்பவில்லை ? இந்தியர்கள் பகைமைப் போக்கை கொண்டிருக்கவில்லை என்பது காரணமா ? அல்லது அவர் இந்தியர்களை பற்றிக்  கவலைப்படவில்லை என அர்த்தமா ?" "பகைமைப் பண்பாட்டை கைவிடுமாறு பிரதமர் சிலாங்கூர் இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்" ஒப்பா: 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷா…

நஜிப்: நான் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவை இல்லை.

பிஎன் தமது தலைமைத்துவத்தின் கீழ் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அதனால் எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் மாற்றத்திற்கு முயற்சி செய்து ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். "பிஎன் தலைமைத்துவத்தின் கீழ் நான் வாக்குறுதியை வழங்குவதோடு…

மலேசியாகினி தலைமை நிர்வாக அதிகாரி: Seacem-க்கு ஆதரவாக நிதி திரட்டப்பட்டது

சுயேச்சை செய்தி இணையத் தளமான மலேசியாகினி, Seacem எனப்படும் தென்கிழக்காசிய மின்னியல் ஊடக மய்யத்துக்கும் இதர திட்டங்களுக்கும் ஆதரவாக அனைத்துலக நன்கொடையாளர்களிடமிருந்து நிதிகளைத் திரட்டியதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் இன்று கூறினார். மலேசியாகினி Seacem அமைப்பை 2004ம் ஆண்டு தோற்றுவித்தது. பத்திரிக்கை சுதந்திரம், மனித…

பசுமையைப் பேணுவோம், பெங்கெராங்கைப் பாதுகாப்போம்!

ஆஸ்திரேலிய மக்களால் புறந்தள்ளப்பட்ட லினாஸ் (Lynas), பஹாங் , கெபெங்கில் செயல்பட மலேசிய அணு எரிசக்தி வாரியத்தால் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தைவானில் சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டு, அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட ராபிட் (சுயினை) திட்டம் நமது நாட்டின் பெட்ரோனாஸ் நிறுவனத்தால் ‘பெங்கெராங்’கில் கட்டமைக்கப்பட்டு…

சிவில் வான் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர்: நாங்கள் கட்டுப்பாட்டை…

கோலாலம்பூரில் உள்ள வான் போக்குவர்த்து மய்யத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஒரு மணி நேரத்துக்கு விமானங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகக் கூறப்படுவதை சிவில் வான் போக்குவத்துத் துறை இன்று நிராகரித்துள்ளது. "மின் விநியோகத் தடை ஏற்பட்டதால் ராடார் இயங்காமல் போனது," என்பதை அதன்…

அப்துல் அசீஸ்: சிலாங்கூரின் வாக்காளர் தணிக்கை இசி பெயரைக் கெடுக்கும்…

வாக்காளர்களைத் தணிக்கை செய்யும் சிலாங்கூர் அரசின் நடவடிக்கையில் நல்ல நோக்கம் கிடையாது. அது, உண்மையான வாக்காளர்களையும் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் என்று முத்திரை குத்தி தேர்தல் ஆணைய(இசி)த்தின் பெயரைக் கெடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டது. இவ்வாறு கூறிய இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், தம் கூற்றுக்கு ஆதாரமாக அண்மையில்…

சைபுடின்: மலேசியாவுக்குத் தேவை ‘புது அரசியல்’

மலேசியாவுக்கு “புது அரசியல் தேவை”. அதன்வழிதான் “மலேசியா சிறப்புற முடியும்” என்கிறார் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா.  ஒரு புதிய அரசியல் அணுகுமுறை, “ஆரோக்கியமான, தூய்மையான, பக்குவப்பட்ட, முற்போக்கான ஜனநாயக முறை”யைக் காண்பதற்கான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் என்றாரவர். நேற்று மெல்பர்ன் பல்க்லைக்கழகத்தில் மெல்பர்ன் அம்னோ மன்றம்…

தயிப்பின் சொத்துவளம் அம்பலம்: ஆனால், எம்ஏசிசி நடவடிக்கை எடுக்குமா?

உங்கள் கருத்து: "ரிம 500,000 கணக்கில் குழப்பமாம். சுவாராமைப் போட்டுக் குடைகிறார்கள். பிஎன், பில்லியன் கணக்கில் கொள்ளையிடுகிறது. ஒன்றும் செய்வதில்லை. என்ன அநியாயம்." தயிப்பின் யுஎஸ்21பில்லியன் சொத்துவளம் அம்பலம் டெலி:புருனோ மன்செர் நிதி அறிக்கை((பிஎம்எப்)யில் சொல்லப்பட்டிருப்பதில் 10விழுக்காடுதான் உண்மை என்றாலும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப்பின் சொத்துவளம் இயுஎஸ்2…

பினாங்கில் மிகவும் வெறுக்கப்படும் டிஏபி மாண்புமிகு யார் ?

வரும் தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் பினாங்குத் தொகுதியை சுயேச்சை எம்பி-யான தான் தீ பெங் முடிவு செய்து விட்டார். ஆனால் அதனை அவர் இப்போது வெளியிட மாட்டார். "மக்களும் அவரது கட்சியும் மிகவும் வெறுக்கும் மாண்புமிகு-வை (சட்டமன்ற உறுப்பினர்) கொண்ட டிஏபி இடமாகும்," என அந்த நிபோங்…

‘ஜோடிக்கப்பட்ட படம் மீது ராயிஸ், ஹிஷாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

தனது படங்களில் ஒன்று திருத்தப்பட்டு ஜோடிக்கப்பட்டதை பெர்னாமா ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து உள்துறை, பண்பாட்டு அமைச்சர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஜோகூர் பிகேஆர் கூறுகிறது. ஏனெனில் அந்த தேசிய செய்தி நிறுவனம் அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகும். "அது பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கத்தின் தேசிய செய்தி நிறுவனம் ஆகும்.…