ஏஜி அலுவலகம்: பெர்சே 2.0 தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு…

அரசு சார்பற்ற அமைப்புக்களைக் கொண்ட பெர்சே 2.0 கூட்டணி சட்ட விரோதமான அமைப்பு எனப் பிரகடனம் செய்வதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் விடுத்த ஆணையை ரத்துச் செய்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு செய்யாது. அந்தத் தகவலை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர்…

பக்காத்தான்: முன்னாள் பிஎன் எம்பிகளை ஏற்றுக்கொண்டதில் நியாயம் உண்டு

பக்காத்தான் ரக்யாட், தான் ஆட்சி  செய்யும் பினாங்கு மாநிலத்தில் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டு வர திட்டமிடும் வேளையில் சாபாவில் பிஎன் எம்பிகள் கட்சிமாறியதை ஏற்றுக்கொண்டது அதன் போலித்தனத்தைக் காண்பிப்பதாகக் குறைகூறப்பட்டதை எதிர்த்து தான் செய்ததே நியாயமே என்று வாதிடுகிறது. அந்த எம்பிகள் பக்காத்தானுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மக்களின் உரிமைக்கட்டளையை…

மெர்டேகா கொண்டாட்டம்:1மலேசியா சின்னத்தையே பயன்படுத்த அரசு முடிவு

இவ்வாண்டு மெர்டேகா தினக் கொண்டாட்டத்துக்கான சின்னமாக 1மலேசியா சின்னமே பயன்படுத்தப்படும் என்று தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.தொடர்ந்து மூன்றாண்டுகளாக அச்சின்னமே பயன்படுத்தப்படுகிறது. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆறு வெவ்வேறு சின்னங்கள்  வெளியிடப்பட்டது அந்நிகழ்வை விளம்பரப்படுத்தும் முயற்சியாகும் என்று அமைச்சின் தலைமைச் செயலாளர் கமருடின் சியாராப் கூறினார். “அவையெல்லாம் விளம்பரத்துக்காக…

பாரம்பரிய சிந்தனைப்போக்கிலிருந்து வெளிவரும் துணிச்சல் வேண்டும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசு ஊழியர்கள் மேலும் சிறந்த சாதனைகளைச் செய்ய பாரம்பரிய சிந்தனைப்போக்கிலிருந்து விலகி வர வேண்டும் என்று வலியுறுத்தினார். “பாரம்பரிய சிந்தனைப்போக்கிலிருந்து வெளிவரும் துணிச்சல் வேண்டும்,முடியாது என்பதை உடைத்தெறியும் துணிவு வேண்டும்,ஆக்கத்திறனும் புதுமுறைகாணும் போக்கும் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறேன்”,…

“பொய்யான” குற்றப் புள்ளி விவரங்கள் பற்றிய கடிதத்தை “போலீஸ்காரர் எழுதவில்லை”

குற்றப் புள்ளிவிவரங்களைப் போலீஸ் தில்லுமுல்லு செய்துள்ளதாக கூறிக் கொள்ளும் அனாமதேயக் கடிதத்தை போலீஸ் படையைச் சாராத ஒருவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு புக்கிட் அமான் போலீஸ் செயலக (பொது உறவு) உதவித் தலைவர்  ராம்லி முகமட் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் துல்லிதமல்லாத பல…

‘நஜிப், யூத சார்புடைய ஏஜண்டை நியமித்தது பற்றி விளக்குங்கள்’

அனைத்துலக நிலையில் மலேசியாவின் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக யூத சார்புடைய ஆலோசகர் நிறுவனத்தின் சேவையை தமது நிர்வாகம் நியமித்ததற்கான காரணத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என பிகேஆர் இன்று கோரியுள்ளது. அண்மையில் யுஎஸ் கார்டியன் பத்திரிக்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட கட்டுரையாளர் ஜோசுவா டிரெவினோவுடன் வேலை செய்வதற்குப் பதில்…

ஹுடுட் சட்டத்துக்காக அரசமைப்புச் சட்டத்தை பாஸ் திருத்தும் என சொல்லவில்லை…

 புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் ஹுடுட்டை அமலாக்க கூட்டரசு அரசமைப்பை தமது கட்சி திருத்தும் எனத் தாம் சொன்னதாக  வெளியாகியுள்ள செய்தியை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மறுத்துள்ளார். நடப்புச் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்க வேண்டும், கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்ப இருக்க…

பத்திரிகையின் வலிமை பொறுப்புடன் அதிகரிக்க வேண்டும்!

அண்மையில் (ஆகஸ்ட் 12) டத்தோ அம்பிகா சீனிவாசனுடன் நான்கு தமிழ் நாளிதழ்கள் பங்குபெற்ற உரையாடல் நிகழ்ச்சி மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பிகா சீனிவாசனிடம் கேள்விகள் கேட்ட நான்கு தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களிடம் அம்பிகா இரு கேள்விகளைக் கேட்டார். [காணொளி] கேள்வி : எனது கேள்வி இரு நிலைகளில்…

‘பொய்யான’ குற்றப் புள்ளிவிவரங்கள்: அரசாங்க மௌனம் அதனை ஒப்புக் கொள்வதாக…

போலீஸ் மோசமடைந்து வரும் குற்றச் செயல் விகிதங்களை மறைக்கும் பொருட்டு  குற்றப் புள்ளிவிவரங்களில் தில்லுமுல்லு செய்துள்ளது என்று கூறப்படுவது மீது அரசாங்கம் ஆழ்ந்த மௌனம் அனுசரிப்பதைத் தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டை மறுக்குமாறு அதிகாரிகளுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது. Pricewaterhouse Coopers (PwC) என்ற அனைத்துலக கணக்குத் தணிக்கை நிறுவனத்தால் தணிக்கை …

மெர்டேகா கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளலாம், ரயிஸ்

வெள்ளிக்கிழமை புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே கலந்துகொள்ளலாம் எனத் தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அறிவித்துள்ளார்.அரங்கத்துக்குள்  அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சின் அதிகாரிகள் கூறியிருந்த சில மணி நேரத்துக்குப்பின் அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. “ஆகஸ்ட் 31-இல் புக்கிட்…

ஞாயிற்றுக்கிழமை சைனாய்ட் எதிர்ப்புப் பேரணியை நடத்த போலீஸ் ஒப்புதல்

சைனாய்ட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமான 'Himpunan Hijau Raub'க்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் வேளையில் போலீஸ் ஒரு வழியாக ரவூப் நகர மய்யத்தில் உள்ள காற்பந்துத் திடலில் அதனை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சைனாய்ட் தடை நடவடிக்கைக் குழு உறுப்பினர்களும் ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமட்…

கொல்வதற்காக சுடுவது: போலீஸ் நம்பகத்தன்மை பணயம் வைக்கப்பட்டுள்ளது

"பாராங்கத்திகளை வைத்துள்ள மக்கள் மட்டுமே ஏன் போலீசாரைத் தாக்குகின்றனர் ? போலீசாரை யாராவது நம்புகின்றனரா?" நேரில் பார்த்தவர்கள்: போலீசார் ஆயுதம் இல்லாத மனிதர் மீது அருகிலிருந்து சுட்டனர் ஒடின்: அந்தச் சம்பவம் திரைப்படக் காட்சிகளைப் போன்றுள்ளது. அடையாளம் இல்லாத ஒரு கார் உங்கள் காரை வழி மறிக்கிறது. சாதாரண…

‘டத்தோ விருது டிஏபி-க்கு மிகவும் சிக்கலான பிரச்னை’

டத்தோ விருதுகளுக்காக டிஏபி அரசியலில் ஈடுபடவில்லை என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கூறியுள்ளார். ஆனால் அத்தகைய விருதுகளை ஏற்றுக் கொள்வதில்லை என்ற தனது எழுதப்படாத விதியை மாற்றுவது மீதான அரசிய ரீதியில் உணர்ச்சிகரமான பகுதிக்குள் செல்ல அவர் மறுத்து விட்டார். "இது…

பழனிவேலுடன் தொகுதி தொடர்பில் சர்ச்சையா?மறுக்கிறார் தேவமணி

சில தரப்புகள் தாம் கட்சியையும் அதன் தலைமையையும் களங்கப்படுத்திவிட்டதாகக் கூறுவதை மஇகா உதவித் தலைவரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.தேவமணி மறுத்தார். 13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்குக்கும் மஇகா தலைவர் ஜி.பழனிவேலுக்கும்…

“துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கான சாட்சிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது”

கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பார்த்த சாட்சிகளையும் காலஞ்சென்றவருடைய உறவினர்களையும் நண்பர்களையும் 'அச்சுறுத்துவதின்' மூலம் அதனை மறைப்பதற்கு போலீசார் முயலுகின்றனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீப்பா கோயா கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 21ம் தேதி அம்பாங்கில் 26 வயது டி தினேஷ் துப்பாக்கிச்…

குற்றச்செயல்களை எதிர்க்க முடியாத உள்துறை அமைச்சர் பதவி விலகுவதே நல்லது

-Jeyaseelen Anthony போலீசைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் குற்ற விகிதம் பற்றித் தகவல்களைக் கசிய விட்டிருக்கிறார்.  CPI Asia வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது மிகவும் சரியே. என்கேஆர்ஏ குற்றச்செயல்கள் குறைந்திருப்பதாக பெருமை பேசினாலும் பெரும்பாலான மக்கள் கொள்ளைச் சம்பவங்களையும் வழிப்பறிகளையும் போலீசில் புகார் செய்வதில்லை என்பதுதான்…

சைனாய்ட் எதிர்ப்புப் பேரணிக்கு முந்திய நிகழ்வில் மசீச அமைச்சர்கள் கேலி…

செப்டம்பர் 2ம் தேதி நடைபெறவிருக்கும் 'Himpunan Hijau Raub' என்னும் சைனாய்ட் எதிர்ப்புப் பேரணிக்குத் தங்களது 'தூதர்களாக' சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய்-யையும் சுற்றுப்பயண அமைச்சர் டாக்டர் இங் யென் யென் -னையும் பாகாங் புக்கிட் கோமான் குடியிருப்பாளர்கள் நியமித்துள்ளனர். சைனாய்ட்டை தடை செய்வதற்கான நடவடிக்கைக் குழு…

ஆதாரச் சட்டத்தின் பிரிவு 114ஏ-யை ரத்துச் செய்வதற்கு இரண்டு வழிகள்

சர்ச்சையை உருவாக்கியுள்ள ஆதாரச் சட்டத்தின் பிரிவு 114ஏ அரசமைப்புச்  சட்ட  விதிகளுக்கு  ஏற்ப மறு  ஆய்வு செய்தின் மூலம் ரத்துச் செய்ய முடியும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கூறுகிறார். கூட்டரசு அரசமைப்பின் 5(1), 8(1) பிரிவுகள், "சட்டத்துக்கு முரணாக எந்த ஒரு நபருடைய உயிர் அல்லது தனிப்பட்ட…

ரோஸ்லி டாஹ்லான் வழக்கில் பாங்க் நெகாரா மலேசியா மீண்டும் பிரதிவாதியாக…

முன்னாள் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ராம்லி யூசோப் எழுப்பிய போலீஸ் ஊழல் விவகாரத்தின் போது தமது சொத்துக்கள் சட்ட விரோதமாக தேடப்பட்டதாக கூறிக் கொண்டு வழக்குரைஞர் ரோஸ்லி டாஹ்லான் தொடுத்துள்ள 50 மில்லியன் ரிங்கிட் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புக்களில் ஒன்றாக பாங்க் நெகாரா மலேசியாவை மீண்டும்…

அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங் டிஏபியில் சேர்ந்தார்

பிரபல அரசியல் ஆய்வாளரான ஒங் கியான் மிங் டிஏபியில் சேரப்போவதாக இன்று அறிவித்தார். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர் அக்கட்சியில் சேர்வது அந்த மாற்றரசுக்கட்சிக்கு ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. “முக்கியமான தேசிய விவகாரங்களில் டிஏபியின் நிலைப்பாடு என் அரசியல் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகிறது. “ஆய்வாளர் என்ற நிலையிலிருந்து விலகி அரசியலில் பங்கேற்கும்…

அட்னான், கட்சி நலனைவிட நாட்டின் நலன் முக்கியமானது

உங்கள் கருத்து: “அம்னோவில் காலத்தை மீறி தங்கிவிட்ட தலைவர்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள். அவர்களில் சிலர் மற்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறவும் முற்படுகிறார்கள்.” அட்னான்: திறம்பட செயல்படாத அம்னோ தலைவர்கள் பதவி விலக வேண்டும் கேஎஸ்என்:நல்லாத்தான் சொல்லியிருக்கிறீர் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு…

அன்வார்: “நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால் புத்ராஜெயாவில் இருக்க மாட்டேன்”

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் புத்ராஜெயாவில் உள்ள பிரதமருக்கான அதிகாரத்துவ இல்லத்தில் வசிக்கப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார். அவர் நேற்று புக்கிட் கந்தாங்கில் பேராக் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பேசினார். "அந்த இடத்துக்கான மின்சாரக் கட்டணம்…

‘நாங்கள் அந்தத் தேவதைகளுக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போம்’

"அதற்கு நம்பிக்கை தேவை. என்றாலும் ஒரே வலையில் தொடர்ந்து சிக்கியிருப்பதை விட அது எவ்வளவோ மேலானது." மகாதீர்: மக்கள் அறிந்த பிசாசுகள் நாங்களே ஸ்விபெண்டர்: பிஎன் பிசாசு என்பதை ஒப்புக் கொண்ட டாக்டர் மகாதீர் முகமட் பேய்களுக்கு இன்னும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் 22 ஆண்டுகள் நாட்டை…