‘ஒரே நாடு, ஒரே ஆன்மா’- பக்காத்தான் மெர்தேக்கா கருப்பொருள்

பக்காத்தான் ராக்யாட் 55வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான அதிகாரத்துவ 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்னும் கருபொருளுக்கு மாற்றாக 'Sebangsa, Senegara, Sejiwa' ('ஒரே இனம், ஒரே நாடு, ஒரே ஆன்மா') என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது. மின் அஞ்சல் வழியாக பெறப்பட்ட 250க்கும் மேற்பட்ட நுழைவுகளிலிருந்து அல்ஹைமி…

தி ஸ்டார் படப் பிடிப்பாளர்: “படங்களை அழிக்குமாறு போலீஸ்காரர்கள் என்னை…

போலீஸ்காரர்கள் குழு ஒன்று தம்மைச் சூழ்ந்து கொண்டு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் அதிகாரிகள் அடிப்பதைக் காட்டும் படங்களை தமது கேமிராவின் நினைவு கார்டிலிருந்து அழிக்குமாறு கட்டாயப்படுத்திய போது தமது பாதுகாப்பு குறித்து மிகவும் அஞ்சியதாக முக்கிய ஆங்கில நாளேடு ஒன்றின் படப் பிடிப்பாளர் கூறியிருக்கிறார். "அவர்களில் சிலர் என்னைச்…

வீட்டில் இருந்து வினோதினி மாயம்; கடத்தப்பட்டிருக்கலாம் என தாயார் சந்தேகம்!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணமல்போனதாக கூறப்படும் தனது மகள் வினோதினி குனசேகரன் (வயது 14) கடத்தப்பட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக தாயார் சிவபாக்கியம் அச்சம் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 24-ஆம் தேதி ஜொகூர் பாருவிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதாகக்கூறி வெளியே சென்ற வினோதினி இதுவரை வீடு…

ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மலேசியா வந்து சேர்ந்தார்

லண்டனில் வசித்து வந்த ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி இன்று பகல் மணி 12.20-க்கு சிங்கப்பூரிலிருந்து மலேசியா வந்து சேர்ந்தார்.  அவருடன் அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் இருந்தனர். வேதமூர்த்தி மலேசிய குடிநுழைவுத்துறை முகப்பை வந்ததடைந்ததும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அவரது கடப்பிதழை பெற்றுக்கொண்டு அவரை அலுவலகத்திற்குள் வருமாறு…

வேதமூர்த்தி சிங்கப்பூரிலிருந்து புறப்படவிருக்கிறார்

ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பி. வேதமூர்த்தி தற்போது சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரில் அவர் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில், பிற்பகல் மணி 12.30 அளவில் வேதமூர்த்தி சிங்கப்பூரிலுள்ள மலேசிய குடிநுழைத்துறை அலுவலகத்தை வந்தடைவார் என்று தொடர்பு கொண்டபோது வி.சாம்புலிங்கம் கூறினார்.…

எல்ஆர்டி வேலையை ஜார்ஜ் கெண்ட்-டுக்கு வழங்கிய துணிச்சல்

 "அது டெண்டர் முறை அல்ல. மாறாக அதிக விலை வெற்றி பெறும் ஏலமாகும். முழு டெண்டர் முறையையும் அது கேலிக்கூத்தாக்கியுள்ளது." ஜார்ஜ் கெண்ட்- லயன் பசிபிக் ஜேவிக்கு எல்ஆர்டி வேலை கிடைத்தது பார்வையாளன்: இது தான் விஷயம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ அரசாங்கம் திறந்த டெண்டரைக்…

மலேசிய தினம், பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்காக நாடு முழுவதும் தேவாலயங்களில்…

வரும் செப்டம்பர் 16ம் தேதி,  50வது மலேசிய தினக் கொண்டாட்டங்களை ஒட்டியும் எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலை ஒட்டியும் மலேசியா முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்த நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ அமைப்புக்களின் பேராளர்களைக் கொண்ட இடைக்காலக் குழு ஒன்று கடந்த திங்கட்கிழமையன்று அதனை…

பிகேஆர் ரபீஸ்சி பாபியா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்

பிகேஆரின் வியூக இயக்குனர் ரபீஸ்சி ரமலி தேசிய தீவன கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழல் விவகாரத்தில் வங்கிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிடப்பட்டத்தில் உட்பட்டிருந்ததற்காக இன்று காலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். "நான் தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் (பாபியா) கைது செய்யப்பட்டுள்ளேன். இப்போது நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுவேன்", என்று…

ரயிஸ்: மெர்டேகா பாடல் குறித்து கருத்து சொல்வீர்

கடும் குறைகூறலுக்கு இலக்கான தேசிய நாள் சின்னம் கைவிடப்பட்டு சில நாள்களே ஆகும் வேளையில் அதேபோன்ற சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கும் தேசிய நாள் கருப்பொருள் பாடல் குறித்து மக்களின் கருத்தறிய விரும்புகிறார் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம். “Janji Ditepati?(வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) பாடல் பற்றி உங்கள் கருத்து…

சுவாராம் சிசிஎம்-மில் பதிவு செய்யப்படவில்லை

சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்டுடன் தொடர்புகொண்ட சுவாரா ரஹ்யாட் மலேசியா (சுவாராம்), 1956 நிறுவனச் சட்டம் அல்லது 1965 நிறுவனச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று மலேசிய நிறுவன ஆணையம் (சிசிஎம்) கூறுகிறது. மறுபுறம், சுவாரா இனிஷியேடிப் மட்டுமே 2001-இல் குவா கியா சூங், இயோ செங் குவா  ஆகிய…

‘அடுத்த பொதுத் தேர்தல் வரையில் பினாங்கு துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட…

பினாங்கு துறைமுகத்தை தனியார் மயமாக்கும் பொருட்டு Seaport Terminal (Johor) Sdn Bhd-உடன் ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடுவதை அடுத்த பொதுத் தேர்தல் வரையில் தவிர்க்குமாறு கூட்டரசு அரசாங்கத்தை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டிருக்கிறார். "அந்த பிஎன் யோசனையை தாங்கள் ஆதரிக்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதை…

லாஜிம் துணை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதற்கு அகோங் ஒப்புதல் அளித்தார்

லாஜிம் உக்கின் வீடமைப்பு, ஊராட்சி துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது உடனடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அந்த நியமனத்தை ரத்துச் செய்வதற்கு யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று விடுத்த அறிக்கை கூறியது. கூட்டரசு அரசமைப்பின் 43வது…

பிகேஆர்: கார்களுக்கான கலால் வரி படிப்படியாக அகற்றப்படும்

கார்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை அகற்றுவதற்கு பிகேஆர் தெரிவித்த யோசனை படிப்படியாக அமலாக்கப்படும். அவ்வாறு செய்வதால் பழைய கார் விற்பனைச் சந்தையில் ஏற்படக் கூடிய தாக்கத்தைத் தணிக்க முடியும். இவ்வாறு அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். "கலால் வரியைக் கைவிடுவது படிப்படியாக…

பக்காத்தான் மாற்று மெர்தேக்கா கருப்பொருளை வெளியிடும்

இவ்வாண்டுக்கான மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்காக பக்காத்தான் மாற்று கருபொருளை நாளை வெளியிடும். "55 Tahun Janji Ditepati ( வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட 55 ஆண்டுகள்) என்னும் கருப்பொருளை மறு ஆய்வு செய்வதற்கு பக்காத்தான் வழங்கிய ஒரு வார காலக் கெடுவை அரசாங்கம் அலட்சியம் செய்து விட்டதால் அது மாற்று…

AIMST கணக்காய்வு அறிக்கையில் காணப்படுகிற ‘பொய்யான கோரிக்கைகளை’ பிகேஆர் சுட்டிக்…

மஇகா-வுக்குச் சொந்தமான  ஏய்ம்ஸ்ட் (AIMST) பல்கலைக்கழகம் மீதான கணக்காய்வு அறிக்கையின் சில பகுதிகளை பிகேஆர் இன்று அம்பலப்படுத்தியுள்ளது. பல மஇகா தலைவர்களை 'பணக்காரர்களாக்குவதற்கு' அந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவனம் ஒன்று 'ஏமாற்றியதை' அவை காட்டுவதாக அது கூறிக் கொண்டது. ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உணவு விடுதியை நடத்தி வரும் ஜெயா கபே…

பாஸ்: ‘மலாய் நிலம் விற்கப்பட்டதை அம்னோ இளைஞர்கள் எதிர்ப்பார்களா ?”

பினாங்கு பாலிக் புலாவ்-வில் மலாய் சமூகத்துக்குச் சொந்தமான நிலத்தை கொழுத்த ஆதாயத்திற்கு விற்றதாக கூறப்படும் தனது இரண்டு தலைவர்களுக்கு எதிரான தனது நிலையை அம்னோ இளைஞர் பிரிவு அறிவிக்க வேண்டும் என பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவு சவால் விடுத்துள்ளது. மலாய் சமூகத்தை அலட்சியம் செய்வதாக பினாங்கு அரசாங்கத்தை…

கெடா எம்பி: மெர்செடிஸ் எனக்காக அல்ல; விருந்தினருக்காக

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், மாநில அரசு வாங்கிய மெர்செடிஸ் பென்ஸ் எஸ்350 கார் தமக்காக அல்லவென்றும் கெடாவுக்கு வருகை புரியும் விருந்தினர்களுக்காக அது வாங்கப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார். டாக்டர் மகாதிர் முகம்மட் கெடாவுக்கு வருகை மேற்கொண்டபோதும் ஜோகூர் பட்டத்திளவரசர் கோலா நெராங்கில் ஒருவாரம் பயிற்சியில்…

தீவகற்பத்தில் காற்றின் தரம் மோசமடைகிறது

வியாழக்கிழமை தொடங்கி இந்தோனேசியாவின் சுமத்ராவில் பல இடங்களில் தீப் பற்றி எரிவதால் தீவகற்ப மலேசியாவின் பல இடங்களில் காற்றின் தரம்  சீர்கெட்டிருக்கிறது. சுமத்ராவில் திறந்த வெளிகளில் கட்டுப்பாடற்ற முறையில் காடுகள் எரிக்கப்படுவதும் தென்மேற்குக் காற்று வீசுவதும் தீவகற்ப மலேசியாவின் பல இடங்களில் குறிப்பாக போர்ட் கிள்ளான் பகுதியில் தூய்மைக்கேட்டை…

கெடா அரசு ஆடம்பரச் செலவு செய்வதாக கெராக்கான் குற்றச்சாட்டு

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், அதிகாரப்பூர்வ பணிகளுக்காக ஆடம்பரக் கார்கள் வாங்குவதில் பணத்தை வாரி இறைக்கிறார் என்று குறைகூறப்பட்டுள்ளது. கெடா அரசு, கடந்த ஆண்டு இறுதியில் மந்திரி புசாருக்காக மெர்செடிஸ் எஸ்320 கார் ஒன்றை வாங்கியதாக மாநில கெடா கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங்…

தடுப்புக் காவலில் குணசேகரன் மரணமடைந்தது தொடர்பில் வழக்கு

ஆர்எஸ் குணசேகரன் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்தது தொடர்பில் சமர்பிக்கப்பட்ட வழக்கை ஆகஸ்ட் 30ம் தேதி வழக்கு நிர்வாகத்துக்கு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று ஆணையிட்டுள்ளது. காலஞ்சென்ற குணசேகரனுடைய சகோதரியான ஆர்எஸ் கங்கா கௌரி அந்த வழக்கை ஜுலை 13ம் தேதி தாக்கல் செய்திருந்தார். குணசேகரனைத்…

மெர்தேக்கா தினம் அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல. அது மக்களுடையது

"மெர்தேக்கா தினம் அரசாங்கத்தின் தனிப்பட்ட உரிமையா ? அது மக்களுக்கும் நாட்டுக்கும் சொந்தமானது என்று அல்லவா நான் நினைத்திருந்தேன்." பெர்க்காசா: 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) ஒர் அனைத்துலக சுலோகம் மௌனமான பெரும்பான்மை: மெர்தேக்கா தினம் அரசாங்கத்தின் தனிப்பட்ட உரிமையா ? - உண்மையில் திசை திருப்பப்பட்ட கருத்தாகும்.…

அபு செமான்: கோலாலம்பூர் கடைத் தொகுதிகளில் 9 சம்பவங்கள் மட்டுமே…

இவ்வாண்டு கோலாலம்பூர் கடைத் தொகுதிகளில் 9 குற்றச் செயல்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக உள்துறை துணை அமைச்சர் அபு செமான் யூசோப் கூறுகிறார். அந்த இடங்கள் பாதுகாப்பானவை அல்ல என்ற பொது மக்கள் எண்ணத்துக்கு ஆதரவாக புள்ளி விவரங்கள் இல்லை என அவர் சொன்னார். "இவ்வாண்டு கோலாலம்பூரில் கடைத் தொகுதிகள்…

“தேவாலயம் இடிக்கப்பட்ட” வழக்கு: ஜோகூர்பாரு மாநகராட்சி மன்ற முறையீடு தள்ளுபடி…

ஒராங் அஸ்லி தேவாலயம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரம் மீது ஜோகூர்பாரு மாநகராட்சி மன்றம் (MBJB ) செய்து கொண்ட முறையீட்டை புத்ராஜெயாவில் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி சையட் அகமட் ஹெல்மி சையட் அகமட் தலைமையில் கூடிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு அந்த முடிவை ஏகமனதாக…