ரபிஸி: திரெங்கானுவிடம் பணம் நிறைய உண்டு; பயன்படுத்தத் தெரியவில்லை

நிறைய பணம் வைத்துள்ள திரெங்கானு அரசுக்கு அப்பணத்தைச் செலவு செய்யத் தெரியவில்லை என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சாடினார். பணம் தேவையற்ற திட்டங்களில் வீணடிக்கப்படுவதாக நேற்றிரவு கோலா பெசுட்டில் ஒரு செராமாவில்  ரபிஸி கூறினார். எண்ணெய் வருமானத்தின்வழி  ஆண்டுக்கு ரிம 2பில்லியன் பெறும் திரெங்கானு மலேசியாவின்…

கோத்தா கினாபாலு TPPA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் கைது

TPPA எனப்படும் பசிபிக் வட்டாரப் பங்காளித்துவ ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம்  தெரிவித்த 14 போராளிகள் இன்று காலை கோத்தா கினாபாலுவில் கைது  செய்யப்பட்டனர். கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தின் 18 அம்சங்கள் பற்றிய  பேச்சுக்கள் நிகழும் சூத்ரா துறைமுக ஹோட்டலுக்கு வெளியில் கூடிய அவர்கள்  கைது செய்யப்பட்டதாக மனித…

மனிதக் கடத்தல் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து விடுபட மலேசியாவுக்கு இறுதி வாய்ப்பு

மலேசியா மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான தனது கடமைகளை நிறைவேற்றாமல்  போனால் தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மனிதக் கடத்தல்  ஆய்வறிக்கையில் தற்போது 'இரண்டாம் கட்டத்தில்' உள்ள மலேசியாவின் நிலை  மேலும் சரியக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது. மனிதக் கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசியல் உறுதியும் மலேசியாவில்  காணப்படவில்லை எனக்…

ஐஜிபி: சுல்கிப்லி மீதான புலனாய்வு நிறுத்தப்பட வேண்டும் என ஏஜி…

இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக கூறப்பட்ட பெர்க்காசா உதவித் தலைவர்  சுல்கிப்லி நூர்டின் மீதான புலனாய்வு அறிக்கையை போலீஸ் ஏஜி எனப்படும்  சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு சமர்பித்தது என்றும் ஆனால்  விசாரணையை நிறுத்திக் கொள்ளுமாறு அதற்கு உத்தரவிடப்பட்டது என்றும் ஐஜிபி  என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித்…

இசி மை: பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனம்…

"பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனத்துக்கு 7 மில்லியன் ரிங்கிட் அழியா  மை குத்தகை கொடுக்கப்பட்டதா ? ஒரு வேளை அதன் பின்னணியை ஆராய  இசி மறந்து விட்டதோ ?' அழியா மை விநியோகிப்பாளர் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பு அனோன்xyz: உலகம் முழுவதும் குத்தகைகள் தொடர்புகள் அடிப்படையில்…

குவாலா பெசுட் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பு இன்று நடைப்பெறுகிறது.

திரங்கானு குவால பெசூட் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று இராணுவத்தினரும் காவல் துறையினரும் தங்கள் துணைவியருடன் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர். இன்று காலை மணி எட்டு முதல் மாலை ஐந்து வரையில் வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. 24 ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் மொத்தம் 17 ஆயிரத்து 683 பேர் வாக்களிக்க…

அல்விவி ஜாமீன் கோரி மறு ஆய்வு விண்ணப்பத்தைச் சமர்பித்தார்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அல்வின் தான், விவியன் லீ ஜோடி, தங்களது  ரமதான் bak kut teh வாழ்த்து, ஆபாசப் படங்கள் மீது மூன்று தங்களுக்கு எதிராக  மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்னர் தங்களுக்கு ஜாமீன்  வழங்குவதில்லை என செஷன்ஸ் நீதிமன்றம் எடுத்த முடிவை மறு ஆய்வு செய்ய  வேண்டும்…

505 கறுப்பு தினப் பேரணி தொடர்பில் இரண்டு எம்பி-க்கள், பக்காத்தான்…

ஜுன் 22ம் தேதி பாடாங் மெர்போக்கில் நிகழ்ந்த 505 கறுப்பு தினப் பேரணி தொடர்பில் இரண்டு எதிர்க்கட்சி எம்பி-க்கள், பக்காத்தான் ராக்யாட் ஊழியர்  ஒருவர் ஆகியோர் மீது அமைதியாக கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும். சிரம்பான் எம்பி அந்தோனி லோக், பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில்,  பக்காத்தான் ராக்யாட்…

நுருல் இஸ்ஸா, மலேசியாகினி மீது நோங் சிக் வழக்குப் போடுகிறார்

லெம்பா பந்தாய் அம்னோ தொகுதித் தலைவர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல்  அபிடின், புக்கிட் கியாராவில் நிலக் கொள்முதல் ஒன்று தொடர்பில் தமக்கு எதிராக  அவதூறு கூறியதாக லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் மற்றும் இருவர் மீது வழக்குப் போட்டிருக்கிறார். ஜுலை 17ம் தேதி மெஸர்ஸ்…

மரினோ போக வேண்டும் என பெர்க்காசா கோரிக்கை

வத்திகன் மலேசியாவுக்குப் புதிய தூதரை நியமிக்க வேண்டும் எனக் கோரும்  ஆட்சேபக் குறிப்பு ஒன்றை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி தலைமையில்  சென்ற 30 பேர் கொண்ட குழு ஒன்று கோலாலம்பூரில் உள்ள வத்திகன்  தூதரகத்தில் வழங்கியுள்ளது. ஆனால் அந்தக் குழுவைச் சந்திக்க தூதரக அதிகாரிகள் யாரும் வராததால்…

தேர்தல் பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் யார்? ஜூலை 25-க்குள் தெரிந்துவிடும்

பெர்சே, பொதுத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் தேர்தல் மோசடிகளை விசாரணை செய்யும் மக்கள் பஞ்சாயத்தின் உறுப்பினர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதனை மலேசியாகினியிடம் தெரிவித்த பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் எண்ட்ரு கூ, ஜூலை 25-க்குள் அவர்களின் பெயர்களை அறிவிக்க முடியும் என்று நம்புகிறார். “அது இறுதிசெய்யப்பட்டதும் அறிவிப்பு செய்வோம்.…

சுவாராம்: மற்ற தடுப்புக்காவல் மரணங்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

இவ்வாண்டில் இதுவரை 12 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் ஒரே ஒரு மரணம் தொடர்பில்தான் மூன்று போலீஸ்காரர்கள்மீது குற்றம் சாட்டப்படுள்ளது என்று கூறும் சுவாராம் தடுப்புக்காவல் மரணங்கள் எல்லாவற்றுக்குமே போலீஸ் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. “என்.தர்மேந்திரன் மரணம் தொடர்பில் மூன்று போலீஸ்காரர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றவாளி என்ற…

ஆகாயப் படை பள்ளிவாசலில் நிக் அஜிஸ் தொழுகை நடத்த தடை

கோலா பெசுட்டிற்கு அருகில் உள்ள கோங் கெடாக்கில் அமைந்துள்ள அரச  மலேசிய ஆகாயப் படைப் பள்ளிவாசாலில் நேற்றிரவு தமது Maghrib  தொழுகையை நடத்துவதற்கு பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்  அனுமதிக்கப்படவில்லை முன்னாள் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அஜிஸ் அந்தப் பள்ளிவாசலுக்கு  ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்ததாக…

பெர்சே பொதுத் தேர்தல் பஞ்சாயத்து மன்றம்: ஆதாரங்களை அனுப்புங்கள்

13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்த  தங்கள் ஆதாரங்களை அனுப்புமாறு பெர்சே அமைத்துள்ள மக்கள் பஞ்சாயத்து  மன்றம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களையும் சாட்சிய  அறிக்கைகளையும் அவர்கள் அனுப்பலாம். வாக்காளர்கள் எதிர்நோக்கிய சூழ்நிலைகள் பட்டியலையும் பெர்சே வெளியிட்டது.  அவற்றுள்:…

ஓராங் அஸ்லி அமைப்புகள்: அரசாங்கம் எங்கள் நிலத்தைத் திருடப் பார்க்கிறது

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து தங்களின்  மூதாதையர் நிலத்தில் 60 விழுக்காட்டைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறது என ஓராங் அஸ்லி அமைப்புகள் இரண்டு  குற்றம் சுமத்தியுள்ளன. பகாங்கையும் மலாக்காவையும் சேர்ந்த ஒராங் அஸ்லி பிரதிநிதிகள்,  1954 பூர்வீகக் குடிச் சட்டத்துக்குக்  கொண்டுவரப்படும் திருத்தத்துக்கு  எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்திருத்தம், …

முஹைடின்: முஸ்லிம் அல்லாதாரை மதம் மாற்றுவது Titas நோக்கமல்ல

Titas என்ற இஸ்லாமிய ஆசிய நாகரீகங்கள் பாடத்தை உள்நாட்டு தனியார்  உயர்கல்விக் கூடங்களில் கட்டாயமாக்குவது முஸ்லிம் அல்லாத மாணவர்களை  இஸ்லாத்துக்கு மதம் மாற்றாது. இவ்வாறு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். இந்த நாட்டிலுள்ள பல இன, பல சமய மக்களிடையே புரிந்துணர்வை மேம்படுத்தும் அரசாங்க முயற்சிகளில் ஒன்று…

பாஸ்: சாப்ரிக்கும் ராபிஸிக்கும் இடையில் விவாதம் நடக்க வேண்டும்

கோலா பெசுட்டில் விவாதம் நடத்த வருமாறு பாஸ் கட்சி அம்னோவுக்குச் சவால்  விடுத்துள்ளது. அந்த விவாதத்தில் பாஸ் கட்சியையும் எதிர்த்தரப்பையும் பிரதிநிதிக்க தாம்  பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலை அழைக்கப் போவதாகவும்  அம்னோ/பிஎன் சார்பில் தொடர்பு, பல்லூடக அமைச்சரும் அம்னோ உச்ச மன்ற  உறுப்பினருமான அகமட் சாப்ரி…

‘நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்’ – ஆர்கே…

'நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்' என்ற முதுமொழி மஇகா  இப்போது எதிர்நோக்கியுள்ள குழப்பத்தை தெளிவாக வருணிக்கிறது. ஒரு காலத்தில் அந்த நாட்டில் வளம் கொழித்தது. அதற்கு வல்லமையும் செல்வமும் நிறைந்திருந்தது. ஆற்றல் மிக்க மலேசிய இந்தியர்கள் அரசியல்  பெருமக்களாக உயர்ந்து பெரும் செல்வத்தைச் சேர்க்க உதவியது. ஆனால்…

குவான் எங்: இனவாத அமைச்சருக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எடுக்க…

அமைச்சரவை மலாய் மொழி பைபிளை எரிக்க வேண்டும் என பெர்க்காசா  விடுத்த அறைகூவலை ஆதரித்துள்ள அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து,  தான் பல இனங்களையும் பிரதிநிதிப்பதை நிரூபிக்க வேண்டும் என டிஏபி  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார். 'அல்லாஹ்' என்ற சொல்லைக் கொண்ட பைபிள்களுக்கு…

அல்விவிக்கு பிணை வழங்காதது ஏன்? ஏஜி விளக்கம்

முஸ்லிம்களையும் ரமலான் மாத நோன்பையும் முகநூலில் கேலி செய்ததற்காக வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் அல்வின் டான், விவியன் லீ ஆகிய இருவருக்கும்  பிணை  மறுக்கப்பட்டது  ஏன்  என்று  சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல்  விளக்கமளித்துள்ளார்  . அவ்விருவரும்  இணையத்தில் பதிவிடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்பதால் அவர்களின்…

அகதிகள் வேலை செய்ய அரசாங்கம் ஒப்புதல்

மலேசியாவில் உள்ள அகதிகள் சட்டப்பூர்வமாக வேலை செய்ய இடமளிக்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஜிட் ஹமிடி அறிவித்துள்ளதை வரவேற்பதாக சுவராம் மனித உரிமை கழகத் தலைவர் கா. ஆறுமுகம் கூறுகிறார். கடந்த வாரம், செலாயாங் மொத்த வணிக…

இப்ராஹிம் அலியை அல்விவி-யுடன் ஒப்பிடக் கூடாது

'அல்லாஹ்' என்ற சொல்லைக் கொண்ட பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா  தலைவர் இப்ராஹிம் அலி விடுத்த அறைகூவலை , முஸ்லிம்களை  இழிவுபடுத்தியதாக முகநூல் ஜோடி அல்வின் தான் விவியன் லீ ஆகியோர் மீது  தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ஒப்பிட முடியாது என கோத்தா பெலுட் எம்பி  அப்துல் ரஹ்மான் டாஹலான் கூறியுள்ளார்.…

பாஸ்: பெசுட் கடலோர நிலம் பற்றிய தகவல் எங்களுக்கு கொடுக்கப்பட்டது

நான்கு பெசுட் அம்னோ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கடலோர நில விவகாரம்  பெயர் குறிப்பிட விரும்பாத தரப்பு ஒன்றினால் பாஸ் கட்சியிடம் 'வேண்டுமென்றே  கசியவிடப்பட்டது' என பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம் மூசா கூறிக்  கொண்டுள்ளார். "எங்களுக்கு அந்தத் தகவல் அப்படித் தான் கிடைத்தது. அந்தத் தகவல் கசியாவிட்டால் அதனை…