இரண்டு மெர்டேகா கருப்பொருள்களைக் கொண்டிருப்பதில் பிளவுபடுத்தும் நோக்கமில்லை

பக்காத்தான் ரக்யாட் மாநிலங்களில் தேசிய நாள் கொண்டாட்டத்துக்கு வேறு கருப்பொருளைப் பயன்படுத்துவது மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி அல்ல என்று கூறிய பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், நடப்புக் கருப்பொருள்தான் “குறுகிய கட்சி மனப்பான்மை கொண்டது” என்றார். “ஒன்றே நாடு ஒன்றே மூச்சு என்பது எப்படிப் பிளவுபடுத்தும் முயற்சியாகும்?”,…

தகவல்களை வெளியிடுவோரைப் பாதுகாக்கவும் தயார் செய்யவும் ஒரு மய்யம் அமைக்கப்படும்

NFC என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் வங்கிச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபிஸி இஸ்மாயில், தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் பாதுகாப்பு வழங்கவும் மய்யம் ஒன்று அமைக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். தமது நிலையைப் போன்ற சூழலில் இருக்கின்றவர்களுக்கு உதவியாக அந்த…

அரசாங்கம் முறையீட்டை கை விடுகிறது, ராம்லி-க்கு 753,000 ரிங்கிட் ஒய்வுக்…

முன்னாள் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ராம்லி யூசோப்-புக்கு எதிராக அழைப்பாணைக் குற்றச்சாட்டு மீது முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்பித்த முறையீட்டை அரசு தரப்பு  மீட்டுக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ராம்லி-க்கு ஒய்வூதியமும் ஒய்வுக் கொடையுமாக மொத்தம் 753,000 ரிங்கிட் கொடுப்பதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. அவர் 2007ம் ஆண்டு…

சாபாவிலிருந்து மேலும் ‘நல்ல செய்திகள்’: கோடி காட்டினார் அன்வார்

செப்டம்பர் 16 நிகழ்வுகளை நினைவுபடுத்துவதுபோல் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சாபாவிலிருந்து மேலும் பல “நல்ல செய்திகள்” வரும் என்கிறார். வார இறுதியில், பிஎன்னிலிருந்து துவாரான் எம்பி வில்ப்ரட் பும்புரிங்கும் பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உக்கினும் வெளியேறியதை அடுத்து அன்வார் இவ்வாறு கூறியுள்ளார். “ஆகஸ்ட் 12-இல் சாபா…

துப்பறிவாளர் பாலா: “மீண்டும்… அவர்கள் எனக்கு கையூட்டு கொடுக்க முயன்றனர்”

மறைந்து வாழும் தனித் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மீண்டும் தலைகாட்டியுள்ளதுடன் இன்னொரு குண்டையும் போட்டிருக்கிறார்-அவர் இந்தியாவில் நாடுகடந்து வாழ்ந்தபோது அவருக்கு இரண்டாவது தடவையாக கையூட்டு கொடுக்க முயன்றார்களாம்-பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைக் களங்கப்படுத்துவதற்காக. கடந்த மாதம் கோலாலம்பூரில்  மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சரவாக் மாநிலத்…

ஏய்ம்ஸ்ட் குத்தகை மீது விவரமான அறிக்கை வழங்குமாறு மஇகா ஆணை

மஇகா-வுக்குச் சொந்தமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட தவறுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை நிராகரிப்பதற்கு 'விவரமான அறிக்கையை' தயாரிக்குமாறு அந்தக் கட்சி தனது கல்விக் கரமான எம்ஐஇடி-க்கும் பினாங்கு மாநில இளைஞர் தலைவருக்கும் ஆணையிட்டுள்ளது. ஏய்ம்ஸ்ட் உணவு விடுதி குத்தகையை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் ஏதும் முறைகேடுகளைக் காணவில்லை என…

அன்வார்:ரபிஸிக்கு எதிரான நஜிப்பின் ‘பழிவாங்கும்’ படலம்

பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிக்கு எதிரான வழக்கு, பிரதமர் நஜிப்பின் பழிவாங்கும் படலத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். “பல மாதங்களாக(ரபிஸி) ஊழல்களைத் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி வந்துள்ளதன்வழி அதிகாரத்தில் உள்ள பலரை எதிரிகளாக்கிக் கொண்டார்.இப்போது அவர்கள் தங்கள் கைவரிசையைக்…

மந்திரி புசார்: தலாம் மீது பொது விசாரணை தேவை இல்லை

தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டின் கடன்கள் மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனைகளை சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். பொது விசாரணைக்கு அதிகக் காலம் பிடிக்கும். மிகவும் நுட்பமானது என அவர் சொன்னார். ஆகவே அந்த விஷயத்தை ஆழமாக ஆராய்வதற்கு ஐந்து…

சிலாங்கூர் நீர் விவகாரம்: பேச்சுக்கிடமில்லை: முகைதின்

சிலாங்கூர் நீர் விவகாரத்துக்குப் பேசித் தீர்வு காணலாம் என்று சிலாங்கூர் மந்திரி புசார் விடுத்த அழைப்பைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் நிராகரித்தார். “முகைதின் ‘முடியாது’ என்றார்,அதே வேளையில் அவ்விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் ஆலோசனையை நாடப்போவதாகவும் தெரிவித்தார்”, என்று ஊராட்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு…

பிரதமரின் ஊழல்-ஒழிப்பு தம்பட்டமெல்லாம் என்னவாயிற்று?, டிஎபி

வங்கி தகவல்களைக் கசிய விட்டார் என்பதற்காக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிமீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஊழலை எதிர்ப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்துக்கு ஒரு சறுக்கலாக விளங்கப்போகிறதென்று சாடியுள்ளார் டிஏபி பரப்புரை தலைவர் டோனி புவா. அரசாங்கம், ரபிஸி அம்பலப்படுத்திய நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி) ஊழலில்…

கருத்துத் திருட்டு: சின் சியூ மன்னிப்பு கேட்டது, அனுதாபத்தை நாடுகின்றது

சீன மொழி நாளேடான சின் சியூ டெய்லி வெளியிட்ட மூன்று தலையங்கக் கட்டுரைகள் திருடப்பட்டவை என குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நாளைக்குப் பின்னர் அந்த நாளேடு அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது. அத்துடன் அந்த தலையங்க எழுத்தாளர் மீது அனுதாபம் கொள்ளுமாறும் அது வேண்டுகோள் விடுத்தது. "அமைதியாக வாழ அவரை…

வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகள்: பிஎன் யாரைப் பாதுகாக்கிறது ?

பிஎன் தலைவர்கள் எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தங்கள் பைகளை நிரப்புவதற்காக வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளுக்கான நிலம் பற்றிய பிரச்னையை அரசியலாக்கக் கூடாது  என அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று பிஎன் -னைக் கேட்டுக் கொண்டுள்ளது. தாமான் மாங்கிஸில் (ஜாலான் ஜைனல் அபிடின்)…

‘ஒரே நாடு, ஒரே ஆன்மா’- பக்காத்தான் மெர்தேக்கா கருப்பொருள்

பக்காத்தான் ராக்யாட் 55வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான அதிகாரத்துவ 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்னும் கருபொருளுக்கு மாற்றாக 'Sebangsa, Senegara, Sejiwa' ('ஒரே இனம், ஒரே நாடு, ஒரே ஆன்மா') என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது. மின் அஞ்சல் வழியாக பெறப்பட்ட 250க்கும் மேற்பட்ட நுழைவுகளிலிருந்து அல்ஹைமி…

தி ஸ்டார் படப் பிடிப்பாளர்: “படங்களை அழிக்குமாறு போலீஸ்காரர்கள் என்னை…

போலீஸ்காரர்கள் குழு ஒன்று தம்மைச் சூழ்ந்து கொண்டு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் அதிகாரிகள் அடிப்பதைக் காட்டும் படங்களை தமது கேமிராவின் நினைவு கார்டிலிருந்து அழிக்குமாறு கட்டாயப்படுத்திய போது தமது பாதுகாப்பு குறித்து மிகவும் அஞ்சியதாக முக்கிய ஆங்கில நாளேடு ஒன்றின் படப் பிடிப்பாளர் கூறியிருக்கிறார். "அவர்களில் சிலர் என்னைச்…

வீட்டில் இருந்து வினோதினி மாயம்; கடத்தப்பட்டிருக்கலாம் என தாயார் சந்தேகம்!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணமல்போனதாக கூறப்படும் தனது மகள் வினோதினி குனசேகரன் (வயது 14) கடத்தப்பட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக தாயார் சிவபாக்கியம் அச்சம் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 24-ஆம் தேதி ஜொகூர் பாருவிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதாகக்கூறி வெளியே சென்ற வினோதினி இதுவரை வீடு…

ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மலேசியா வந்து சேர்ந்தார்

லண்டனில் வசித்து வந்த ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி இன்று பகல் மணி 12.20-க்கு சிங்கப்பூரிலிருந்து மலேசியா வந்து சேர்ந்தார்.  அவருடன் அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் இருந்தனர். வேதமூர்த்தி மலேசிய குடிநுழைவுத்துறை முகப்பை வந்ததடைந்ததும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அவரது கடப்பிதழை பெற்றுக்கொண்டு அவரை அலுவலகத்திற்குள் வருமாறு…

வேதமூர்த்தி சிங்கப்பூரிலிருந்து புறப்படவிருக்கிறார்

ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பி. வேதமூர்த்தி தற்போது சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரில் அவர் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில், பிற்பகல் மணி 12.30 அளவில் வேதமூர்த்தி சிங்கப்பூரிலுள்ள மலேசிய குடிநுழைத்துறை அலுவலகத்தை வந்தடைவார் என்று தொடர்பு கொண்டபோது வி.சாம்புலிங்கம் கூறினார்.…

எல்ஆர்டி வேலையை ஜார்ஜ் கெண்ட்-டுக்கு வழங்கிய துணிச்சல்

 "அது டெண்டர் முறை அல்ல. மாறாக அதிக விலை வெற்றி பெறும் ஏலமாகும். முழு டெண்டர் முறையையும் அது கேலிக்கூத்தாக்கியுள்ளது." ஜார்ஜ் கெண்ட்- லயன் பசிபிக் ஜேவிக்கு எல்ஆர்டி வேலை கிடைத்தது பார்வையாளன்: இது தான் விஷயம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ அரசாங்கம் திறந்த டெண்டரைக்…

மலேசிய தினம், பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்காக நாடு முழுவதும் தேவாலயங்களில்…

வரும் செப்டம்பர் 16ம் தேதி,  50வது மலேசிய தினக் கொண்டாட்டங்களை ஒட்டியும் எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலை ஒட்டியும் மலேசியா முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்த நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ அமைப்புக்களின் பேராளர்களைக் கொண்ட இடைக்காலக் குழு ஒன்று கடந்த திங்கட்கிழமையன்று அதனை…

பிகேஆர் ரபீஸ்சி பாபியா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்

பிகேஆரின் வியூக இயக்குனர் ரபீஸ்சி ரமலி தேசிய தீவன கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழல் விவகாரத்தில் வங்கிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிடப்பட்டத்தில் உட்பட்டிருந்ததற்காக இன்று காலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். "நான் தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் (பாபியா) கைது செய்யப்பட்டுள்ளேன். இப்போது நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுவேன்", என்று…

ரயிஸ்: மெர்டேகா பாடல் குறித்து கருத்து சொல்வீர்

கடும் குறைகூறலுக்கு இலக்கான தேசிய நாள் சின்னம் கைவிடப்பட்டு சில நாள்களே ஆகும் வேளையில் அதேபோன்ற சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கும் தேசிய நாள் கருப்பொருள் பாடல் குறித்து மக்களின் கருத்தறிய விரும்புகிறார் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம். “Janji Ditepati?(வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) பாடல் பற்றி உங்கள் கருத்து…

சுவாராம் சிசிஎம்-மில் பதிவு செய்யப்படவில்லை

சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்டுடன் தொடர்புகொண்ட சுவாரா ரஹ்யாட் மலேசியா (சுவாராம்), 1956 நிறுவனச் சட்டம் அல்லது 1965 நிறுவனச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று மலேசிய நிறுவன ஆணையம் (சிசிஎம்) கூறுகிறது. மறுபுறம், சுவாரா இனிஷியேடிப் மட்டுமே 2001-இல் குவா கியா சூங், இயோ செங் குவா  ஆகிய…