டிஏபி: பெர்னாமா, என்எஸ்டி மீது துணைப் பிரதமர் நடவடிக்கை எடுக்க…

நாய் பயிற்றுநர் காணொளிப் பதிவு சர்ச்சை தொடர்பில் துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் முஸ்லிம் அல்லாதார் மீது பழி போடுவதாக தவறான  செய்தியை வெளியிட்ட பெர்னாமா, என்எஸ்டி (நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) மீது  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர்  லிம் குவான் எங்…

முஹைடின்: முஸ்லிம் அல்லாதார் என நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை

துணைப் பிரதமர் முஹைடின் யாசின், பரவலாக வெளியிடப்பட்டுள்ள தமது ஜுலை  30ம் தேதி சொற்பொழிவில் அண்மைய காலமாக முஸ்லிம் அல்லாதார்  இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்து கேலி செய்வதாக குறிப்பிட்டுச் சொல்லவில்லை  எனக் கூறிக் கொண்டுள்ளார். தாம் பொதுவான அறிக்கையை மட்டுமே விடுத்ததாக பெர்னாமா வழி வெளியிட்டுள்ள விளக்கத்தில் முஹைடின் தெரிவித்தார்.…

கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலைகாரர்களைக் கண்டு பிடிக்க போலீசாருக்கு நேரமில்லை. ஆனால்…

"குற்றச் சக்திகள் அங்குமிங்கும் ஒடிக் கொண்டு மக்களைச் சுடுகின்றனர். தனக்கு  அவசர காலச் சட்டம் தேவை என அரச மலேசியப் போலீஸ் படை சொல்கிறது.  என்றாலும் அம்னோவை எதிர்க்கின்றவர்களை அச்சுறுத்துவதற்கு அது தனது  வளங்களில் பெரும்பகுதியைப் பயன்படுத்துகின்றது" சுவாராம் ஸ்கார்ப்பின் மீது 'இரண்டாம் சுற்று' மருட்டலை எதிர்நோக்குகிறது ஸ்பிக்கரினி:…

மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்களுக்கு நாமம் !

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 3, 2013.  இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசனில் வழங்கப்பட்ட வாய்புக்களை நிராகரித்ததனால்தான்  அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை பூர்த்திசெய்ய இயலவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் இன்று ஆங்கிலப் முபத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளார்.   மெட்ரிகுலேசன் இடம் கிடைத்து அதை சில பேர் ஒதுக்கியிருக்கலாம். ஆனால்…

பெர்க்காசா: ‘புதுக்கிராமம்’ தொடர்பில் நாம்வீ மீது நடவடிக்கை எடுங்கள்

'புதுக்கிராமம்' என்ற திரைப்படம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என ஆணையிட்ட அரசாங்கத்தை குறை கூறிய நாம்வீ என்ற திரைப்படத்  தயாரிப்பாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெர்க்காசா  கேட்டுக் கொண்டுள்ளது. திரைப்படத் தொழில் தொடர்பில் அதிகாரிகள் தங்களது அணுகுமுறையில்  இரட்டைத் தரத்தைப் பின்பற்றுவதாக நாம்வீ தமது…

‘அன்வாரிடம் மில்லியன் கணக்கான ரிங்கிட் உள்ளது’ எனக் கூறிக் கொள்ளும்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அயல் நாட்டுக் கணக்குகளில்  மில்லியன் கணக்கான ரிங்கிட் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் கடிதங்கள் அவரது  சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவ்-வில் பரவலாக விநியோகம்  செய்யப்பட்டுள்ளன. எட்டு பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் அன்வாருக்குச் சொந்தமான  வங்கிக் கணக்குகளின் எண்களும் இடம் பெற்றுள்ளதாக உத்துசான்…

ஹிஷாமுடின் அம்னோ உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப்…

எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் தமது உதவித் தலைவர் பதவியைத் தக்க  வைத்துக் கொள்ளக் களமிறங்கப் போவதாக நடப்பு உதவித் தலைவர்  ஹிஷாமுடின் ஹுசேன் அறிவித்துள்ளார். தாம் பிரதிநிதிக்கும் செம்புரோங் அம்னோ தொகுதி அடித்தட்டு உறுப்பினர்களைச்  சந்திக்கும் போது தாம் அதிகாரப்பூர்வமாக அதனை தெரிவிக்கப் போவதாக  ஹிஷாமுடின் சொன்னார்…

மே பாங்க் வங்கியின் புதிய எஜமானர் ‘1.74 பில்லியன் ரிங்கிட்…

BII என்னும் Bank Internasional Indonesia வங்கியில் உள்ள தனது பங்குகளில் 9  விழுக்காட்டை விற்றதால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் '1.74 பில்லியன் ரிங்கிட்  இழப்பு' பற்றி புதிதாக நியமிக்கப்பட்ட மே பாங்க் தலைமை நிர்வாக அதிகாரி  அப்துல் பாரிட் அலியாஸ் விளக்க வேண்டும் என டிஏபி பெட்டாலிங் ஜெயா…

‘டிஏபி மறு தேர்தல் ஆணை அம்னோ மனோதத்துவ போரின் ஒரு…

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என ஆர்ஒஎஸ்  என்ற சங்கப்பதிவதிகாரி ஆணையிட்டுள்ளது அம்னோ பிரச்சாரத்தில் ஒர் அங்கமா  என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வினவியுள்ளார். ஆர்ஒஎஸ் மறு தேர்தல் நடத்த வேண்டும் என ஆணையிட்டதற்கான காரணத்தைச்  சொல்லவில்லை. ஆனால் அம்னோ…

அல்டான்துன்யா காவியத்தில் பதில்களைவிட கேள்விகளே அதிகம்

உங்கள் கருத்து ‘எந்த அடிப்படையில் பெரிமெக்கர் நிறுவனம் திட்ட நிர்வாகியாக அமர்த்தப்பட்டது?  அது நீர்மூழ்கிக் கப்பல் கட்டியதுண்டா அல்லது நீர்மூழ்கிக் கொள்முதலில் ஈடுபட்ட அனுபவம்தான் அதற்கு உண்டா?’ ஸ்கோர்பின் தரகர்: நீர்மூழ்கி பேரத்தில் அல்டான்துயாவுக்கு தொடர்பில்லை நியாயவான்:  அல்டான்துயாவுக்கு எந்தத் தொடர்புமில்லை என்றால் (அப்போது) துணைப் பிரதமர் நஜிப்…

ஸ்கோர்பின் தொடர்பில் சுவாராமுக்கு ‘இரண்டாவது சுற்று’ தொல்லை தொடங்குகிறது

பிரான்சில் நடைபெறும் ஸ்கோர்பின் வழக்குக்கு நிதி திரட்ட சுவாராம்  ஏற்பாடு செய்திருந்த விருந்தின் தொடர்பில் போலீசார்  அதன் நிர்வாக உறுப்பினர்  சிந்தியா கேப்ரிலை விசாரணைக்கு அழைத்துள்ளனர். நேற்று பிற்பகல் 3.30க்கு பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்திலிருந்து அழைப்பு வந்ததாக  கேப்ரில்  மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

போலீசார்: Ambank வங்கியைத் தோற்றுவித்தவருடைய புதல்வர் மலேசியாவுக்கு வர வேண்டும்

கொலையுண்ட ஹுசேன் அகமட்டின் புதல்வர் பாஸ்கால் நஜாடி மலேசியாவுக்குத்  திரும்பி தமது தந்தையின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு உதவ  வேண்டும் என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே  விரும்புகிறார். ஹுசேன் அகமட் Ambank வங்கியைத் தோற்றுவித்தவர் ஆவார். "உண்மையில் என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிந்து…

நீதிபதி: ஒரு தரப்பு மதம் மாற்றம் அனைத்துலக நடைமுறைகளுக்கு முரணானது

பெற்றோர்களில் ஒருவருக்கு இன்னொரு சமயத்துக்கு மதம் மாறுவதற்கு உரிமை  இருக்கலாம். ஆனால் வயது குறைந்த பிள்ளைகளை இன்னொரு பெற்றோரின்  ஒப்புதல் இல்லாமல் மதம் மாற்றுவதற்கு அவருக்கு உரிமை இல்லை. ஏனெனில்  அது அனைத்துலக ஒப்பந்தங்களுக்கு முரணானதாகும். இவ்வாறு கூறிய உயர் நீதிமன்ற நீதிபதி லீ ஸ்வீ செங், குழந்தைகள்…

பள்ளி முதல்வர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார்

மாணவர்களிடம் “பாலே இந்தியா டான் சீனா” என்று கூறிய எஸ்எம்கே தலைமையாசிரியர் அதற்காக இன்று மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதை ஷா ஆலம் மஇகா தொகுதி துணைத் தலைவர் ஏ.பிரகாஷ் ராவ் உறுதிப்படுத்தினார். “கல்வித் துறை அதிகாரியுடன் அவரைச் சந்தித்தபோது உறுதிகூறியபடி அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த விவரம்…

ஆர்ஓஎஸ் உத்தரவு சட்டப்படி கட்டுப்படுத்தாது- டிஏபி

டிஏபி  புதிய தேர்தல் நடத்த வேண்டும்  என்று உத்தரவிடும்  அதிகாரம் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்) க்கு இல்லை என்கிறார்  அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். சங்கச் சட்டத்தின் பிரிவு 16(1), பிரிவு 16(2) ஆகியவை  அப்படி உத்தரவிடும்  அதிகாரத்தை ஆர்ஓஎஸ்ஸுக்கு அளிக்கவில்லை  என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “எனவே,…

‘குளியலறை விவகாரத்தில் பெற்றோரைக் குற்றம் சொல்வது பொறுப்பற்ற பேச்சு’

‘எஸ்கே  ஸ்ரீபிரிஸ்தானா விவகாரத்தில் தகவல் சொன்னவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  கூக்குரல் “அறியாமையையும் பொறுப்பின்மையையும்” காட்டுகிறது என்று மஇகா இளைஞர் பகுதி  செயலாளர் சி.சிவராஜ் சாடியுள்ளார். அரசியல் நோக்கத்துடன்  தலைமையாசிரியரைத் தற்காக்கும்  அம்னோ தலைவர்களும் என்ஜிஓ-களும்  விவகாரத்தை  திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.…

‘பிட்ச் மதிப்பீடு தற்காப்புச் செலவுகளை குறைக்க வேண்டிய தேவையை உணர்த்துகின்றது’

பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் மலேசியாவுக்கு வழங்கியுள்ள 'எதிர்மறையான  எதிர்கால' மதிப்பீடு, நாடு விழித்துக் கொள்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை  என கெராக்கான் சொல்கிறது. தேவையற்ற பில்லியன் கணக்கான ரிங்கிட் தற்காப்புச் செலவுகளை குறைக்க  வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் அது தெரிவித்தது. அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரவு…

பெர்க்காசா: குவான் எங் பேராளர்களைச் சந்திக்க அஞ்சுகிறார்

பேராளர்களைச் சந்திக்க அஞ்சுவதால் டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு புதிதாக  தேர்தல் நடத்த அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  விரும்பவில்லை எனப்  பெர்க்காசா தகவல் பிரிவுத் தலைவர் ருஸ்லான் காசிம் கூறிக்   கொண்டுள்ளார். "பெரும்பாலான டிஏபி பேராளர்களைச் சந்திக்க லிம் அஞ்சுவது நிச்சயம். அதனால் தான்…

ஹிண்ட்ராப்-பிஎன் கூட்டணி மீதான 100 நாள் அறிக்கை விரைவில் வெளியாகும்

பிஎன் -உடன் தான் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் விளைவுகள் குறித்த 100  நாள் அடைவு நிலை அறிக்கையை விரைவில் வெளியிடப் போவதாக மலேசிய  ஹிண்ட்ராப் சங்கம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் பி வேதமூர்த்தி, செனட்டராகவும் பிரதமர் துறை துணை  அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட 100வது நாளில் அது வெளியிடப்படும் என…

டிஏபி துணைப் பிரதமருடைய ‘தேசநிந்தனை’ கருத்துக்கள் மீது புகார்

சர்ச்சைக்குரிய நாய் பயிற்றுநர் காணொளி தொடர்பில் துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது போலீசில்  புகார் செய்துள்ளது. முஹைடினின் கருத்துக்கள் குற்றவியல் சட்டத்தையும் தேசநிந்தனைச் சட்டத்தையும்  மீறியுள்ளதா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என அந்தப் புகாரைச்  சமர்பித்த தாமான் சிகாம்புட் டிஏபி…

நாய் பயிற்றுனர் விடுவிக்கப்படுவார்

ஹரி ராயா வாழ்த்து தொடர்பில்  விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்ட  நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப்,  “எந்த நேரத்திலும்”  விடுவிக்கப்படலாம். “விசாரணை  அதிகாரியுடன்  பேசினேன்.  எந்த நேரத்திலும் விடுதலை  செய்யப்படலாம் என்றார்”, என  அவரின் வழக்குரைஞர் லத்திபா கோயா மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தெரிவித்தார். மஸ்னாவைக் காவலில் வைக்கும்…

அம்னோ இளைஞர் துணைத் தலைவர் பதவிக்கு லொக்மான் போட்டி

அம்னோ இளைஞர் செயலவை உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார். நடப்புத் துணைத் தலைவர் ரசாலி இஸ்மாயில், பதவியைத் தக்க வைத்துக்கொள்ளப்போவதில்லை என அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து அம்னோ இளைஞர் தலைவர்கள் பலர் அதற்குப் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது.

துணைப் பிரதமர்: குற்றச் செயல்களை ஒடுக்க அரசாங்கம் நடப்புச் சட்டங்களைப்…

அரசாங்கம் இந்த நாட்டில் கடுமையான குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு  நடப்புச் சட்டங்களைப் பயன்படுத்தும். புதிய சட்டம் அறிமுகம்  செய்யப்படுவதற்காகக் காத்திருக்காது. நாட்டின் நடப்பு சட்ட வடிவமைப்பில் '1959ம் ஆண்டுக்கான குற்றத் தடுப்புச்  சட்டம்' உள்ளது. ஆனால் அது அமலாக்கப்படவில்லை என துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் தெரிவித்தார். இப்போது…