டிஏபி: கதிரியக்கக் கழிவுகளை ஏற்றுமதி செய்ய முடியாது

குவாந்தானில் அமைந்துள்ள லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற மசீச நிலை, அபாயகரமான பொருட்களை எல்லைகளைக் கடந்து கொண்டு செல்லப்படுவதற்கான பேசல் மாநாட்டு ஒப்பந்தத்திற்கு முரணானது என டிஏபி எச்சத்துள்ளது. மசீச யோசனை "மூன்றாம் தர பயங்கர திரைப்படத்தின்" சதித் திட்டம்…

தமது உறவினருடைய சட்ட நிறுவனத்துக்கு ‘ஆதரவுக் கடிதத்தை’ வழங்கியதாகக் கூறப்படுவதை…

தமது உறவினருடைய சட்ட நிறுவனத்தை தனது சட்ட ஆலோசனைக் குழுவில் சேர்த்துக் கொள்வது பற்றிப் பரிசீலிக்குமாறு மாநில அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்குத் தாம் எழுதிய கடிதம் ஆதரவுக் கடிதம் எனக் கூறப்படுவதை சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கா ஹுசின் மறுத்துள்ளார். "நான் எழுதிய அந்தக்…

பெர்க்காசா ஏன் சிங்கப்பூரை மட்டும் குறி வைக்கிறது ?

'பெர்க்காசா தனது சுய லாபத்துக்காக அந்தப் பிரச்னையை மோசமாக்க விரும்புகிறது. அதனை நிறுத்துவதற்கு நமது அரசாங்கத்துக்கு துணிச்சல் இல்லை' மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகள் வெளியேற வேண்டும் என பெர்க்காசா விரும்புகிறது இது வெளியே போகும் வழி: தங்கள் உபசரணை நாடுகளின் அரசியல் விவகாரங்கள் மீது தகவல் கொடுப்பதற்கு எல்லா…

அனுபவம் வாய்ந்த தேர்தல் பார்வையாளர் அமைப்பு இசி அழைப்பை நிராகரித்தது

13வது பொதுத் தேர்தல்களுக்கான பார்வையாளர்கள் என ஐந்து அரசு சாரா அமைப்புக்களை இசி என்ற தேர்தல் ஆணையம் பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. ஆனால் NIEI என அழைக்கப்படும் National Institute for Democracy and Electoral Integrity தேசிய ஜனநாயக, தேர்தல் நேர்மைக் கழகம் இசி விடுத்த அழைப்பை ஏற்றுக்…

மகளிர் அமைச்சை எடுத்துக்கொண்டது ஏன்?-நஜிப் விளக்கம்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சுக்கு ஒரு பெண்மணியை அமைச்சராக நியமிக்காமல் தாமே அப்பொறுப்பை ஏற்றதைத் தற்காத்துப் பேசியுள்ளார். “இது தற்காலிகமானதுதான். அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றதும் மகளிர் ஒருவரை அமைச்சராக நியமிப்போம்”, என்று மக்கள் அவையில் கேள்விநேரத்தின்போது பிரதமர் கூறினார். அமைச்சர் யார்…

அம்பிகா: தேர்தல் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டாம்

வரும் பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு ஐந்து அரசு சாரா அமைப்புக்களை இசி என்ற தேர்தல் ஆணையம் பெயர் குறிப்பிட்டுள்ளதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வரவேற்றுள்ளார். என்றாலும் அந்த அமைப்புக்கள் மீது 'தேவையில்லாத கட்டுப்பாடுகள்' விதிக்கப்படுவதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த அரசு சாரா அமைப்புக்கள் தேர்தல்…

கிட் சியாங்: ‘பெண்டாத்தாங்’ என்ற அவதூறு, ஒரே மலேசியா தோல்வி…

பெண்டாத்தாங் (குடியேறி) என்னும் அவதூறுச் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதற்கு மூல காரணம் எனக் கருதப்படும் அரசாங்க ஆதரவு பெற்ற இனவாத போதனைகளை நிறுத்துவதற்கு நஜிப் நிர்வாகம் தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று குறிப்பிட்டுள்ளது போல அந்தச் சொல் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே…

அந்த மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகளும் வெளியேற வேண்டும் என பெர்க்காசா…

கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்திற்கு வெளியில் இன்று கூடிய மலாய் உரிமை நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா, அதன் மூன்று அரசதந்திரிகள் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியது. அந்த மூவரும் ஏப்ரல் 28ம் தேதி  கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியில் அவர்கள் பங்கு கொண்டதை பெர்க்காசா ஆட்சேபிப்பதாக…

என்எப்சி பாணியிலான அம்பலத்துக்கு தயாராகுங்கள் என பிகேஆர் நஜிப்-பிடம் சொல்கிறது

960 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீது தூய்மையாக இருக்க வேண்டும் அல்லது என்எப்சி எனப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவன பாணியிலான அம்பலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிகேஆர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எச்சரித்துள்ளது. அந்தத் திட்டம் டெண்டரில் தோல்வி கண்ட…

உரிமைகளை மீட்க கிள்ளானில் அமைதி ஊர்வலம்

இந்நாட்டில் தொடர்ந்து மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு வரும் மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைக்கான கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக அமல்படுத்தவேண்டும் எனக் கோரி நேற்று மாலை கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (படங்கள்) சிலாங்கூர் மாநில நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம்…

கிளந்தான் எரிவாயு திரெங்கானு செல்வது ஏன்?

கிளந்தானின் எண்ணெய் உரிமையைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைப்பு ஒன்று, தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் கிளந்தானுக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவைத் திரெங்கானுவுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் பாஸ் ஆட்சியில் உள்ள அம்மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போகும் என்றும் குறைகூறியுள்ளது. Gabungan Profesional Tuntut Royalti, Pendaratan…

300 பிஎன் உறுப்பினர்கள் பிகேஆரில் சேர்கிறார்கள்

கெராக்கான், இந்தியர் முற்போக்கு முன்னணி, மஇகா ஆகிய கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 300பேர் பிகேஆரில் சேர விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிரவு பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பல இனங்களையும் சேர்ந்த 5,000பேர் திரண்டிருந்த கூட்டத்தில் சொலிடேரிட்டி அனாக் மூடா மலேசியா தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரினிடமிருந்து(ச்சேகு பார்ட்…

‘ராபிஸி, பாக்கா பிரச்னைகள் சாதாரணமானவை என்கிறார் அன்வார்

பிகேஆர் கட்சியின் காலித் இப்ராஹிம் வழி நடத்தும் சிலாங்கூர் நிர்வாகத்துடன் தொடர்புடைய இரண்டு அண்மையப் பிரச்னைகள் சாதாரணமானவை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். சிலாங்கூர் அரசாங்கப் பதவி ஒன்றிலிருந்து பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் திடீரென விலகிக் கொண்டதும் காலித்-தின் அரசியல் செயலாளர் பரிந்துரைக்…

உங்கள் கருத்து: அறிகுறிகளை நோயுடன் இணைத்து குழப்பக் கூடாது

"தாய்மொழிப் பள்ளிகள் மலேசிய சமுதாயத்தை பிரித்து விட்டன எனக் கூறுவது கல்வி முறையில் உள்ள ஏற்றத்தாழ்வை மறைப்பதற்கு ஒப்பாகும்" டாக்டர் மகாதீரின் மோசமான மருந்து அடையாளம் இல்லாதவன்_3f4a: கல்வி முறையில் காணப்படுகின்ற பல்வகைத்தன்மை வலிமையாகும். அது பலவீனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தின் பாகுபாடான கொள்கைகளே நாட்டை பிளவுபடுத்தி…

‘pendatang’ என்ற கருத்துக்களை புறக்கணித்து விடுங்கள் என பிரதமர் சீனர்களிடம்…

சீன சமூகத்தினரை 'pendatang' (குடியேறிகள்) என சிலர் அழைத்ததால் மனம் புண்பட வேண்டாம் என அந்த சமூகத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். காரணம் அத்தகையை கருத்துக்களை 'கிறுக்கர்களான' சிலரே கூறியுள்ளனர் என்றார் அவர். சீன சமூகத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே சிலர் அந்தக்…

உத்துசான் அன்வாரை ‘மர்மப் பெண்’ ஒருவருடன் இணைக்கிறது

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு மொத்தம் 3 பில்லியன் ரிங்கிட் உள்ள 20 கணக்குகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என சொல்லப்படுகின்ற மாது ஒருவருடைய முகம் அம்பலமாகியுள்ளதாக மிங்குவான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஏடு அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பாகும்.…

பெர்சே ஒட்டக்காரர்கள் டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ‘ஊடுருவினர்’

இன்று டாத்தாரான் மெர்தேக்காவுக்குச் செல்லும் எல்லா சாலைகளிலும் தடுப்புக்கள் போடப்பட்டிருந்தன. காரணம் இன்னொரு பெர்சே பேரணி அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சதுக்கம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கேஎல் நெடுந்தூர ஒட்டத்துக்கு இறுதிக் கோடாக பயன்படுத்தப்பட்டதே அதற்குக் காரணமாகும். இருந்தாலும் அந்த நிகழ்வு பெர்சே ஆதரவாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் அதனை…

இசா-வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர் மீது கவனம்

மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்று பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு உதவி செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை அந்த நாட்டின் மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. "பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளருடன் தொடர்பு கொண்டுள்ள பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம், அந்த விவாகரம் மீது வெளியுறவு அலுவலகம்…

‘நவீன அடிமை’ முறையிலிருந்து டாக்சி ஒட்டுநர்களை விடுவிக்க பிரதமர் வாக்குறுதி

தனியார் நிறுவனங்கள் டாக்சி அனுமதிகளில் அனுபவித்து வரும் ஏகபோக உரிமையை ரத்துச் செய்யப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்குப் பதில் டாக்சி ஒட்டுநர்களுக்கு நேரடியாக அனுமதிகளை வழங்க அரசாங்கம் எண்ணியுள்ளதாக அவர் சொன்னார். டாக்சி தொழிலுக்கான புதிய வடிவமைப்பின் ஒரு பகுதியாக "மிக…

ஆட்சேபக்காரர்கள் போலீசாரைத் தாண்டிச் சென்று கெபெங்கில் குந்தியிருப்பு மறியலை நடத்தினர்

ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆட்சேபக்காரர்கள் போலீஸ் சாலைத் தடுப்புக்களத் தாண்டிச் சென்று கெபெங் தொழில் பேட்டைக்கு அருகில் ஒன்று திரண்டு லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அருகில் உள்ள பாலோக் கடற்கரையில் கூடியுள்ள ஆட்சேபக்காரர்களின் வரவை எதிர்பார்த்து போலீசார் இன்று…

ஹிண்ட்ராப் தமிழ்ப் பள்ளிக்கூடம் தொடர்பான புதிய வழக்கில் பெற்றோர்களையும் இணைக்கிறது

ஹிண்ட்ராப் அரசாங்கத்திற்கு எதிரான தனது வழக்கை மீண்டும் தாக்கல் செய்யும் முயற்சியின் கீழ் அதில் தமிழ்ப் பள்ளிக்கூட மாணவர்களுடைய பெற்றோர்களையும் சேர்த்துக் கொள்ளவிருக்கிறது. அந்த வழக்கில் மற்ற பல கோரிக்கைகளுடன் இந்த நாட்டில் உள்ள 523 தமிழ்ப் பள்ளிகளும் முழு உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும் அடங்கும். "பாதிக்கப்பட்ட…