கெராக்கான்: பிஎன் பெர்காசாவுக்கு நிதிஉதவி அளிப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்

பிஎன் அரசாங்கம்,  மலாய் மேலாதிக்கத்துக்குப் போராடி வரும் அமைப்பான பெர்காசாவுக்கு நிதிஉதவி அளிப்பதன்வழி தனக்குத் தானே குழிபறித்துக்கொள்கிறது என கெராக்கான் கூறியது. அது வாக்காளர்களால், நகர்ப்புறங்களில் மலாய் வாக்காளர்களால்கூட புறக்கணிக்கப்பட்ட ஓர் அமைப்பு என்றது வருணித்தது. பிஎன் நோக்கங்களுக்கு எதிரான ஓர் அமைப்புப்போல் பெர்காசா செயல்பட்டு வந்துள்ளது எனக்…

டிசம்பர் 31 பேரணிக்குச் செல்லாதீர்: மாணவருக்கு யுஎம் எச்சரிக்கை

டிசம்பர் 31-இல் டாட்டாரான் மெர்டேகாவில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்)  மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவ்வாறு கேட்டுக்கொள்வதாக யுஎம் மாணவர் விவகாரத் துறை கூறிற்று. அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட அப்பேரணியை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என அத்துறை அதன் முகநூல்…

கம்போங் ரயில்வேயை உடைக்கும் வேலை தொடங்கியது ஆனாலும் 13 குடும்பங்கள்…

கம்போங் ரயில்வே-இல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் செந்தூல் ராயா சென்.பெர்ஹாட், இன்று அங்குள்ள வீடுகளை இடித்துத்தள்ளும் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆனால், மற்ற குடியிருப்பாளர்கள் அந்த இடத்தைக் காலி செய்த விட்டபின்னரும் 13 குடும்பங்கள் மட்டும் இன்னும் அங்கேயே தங்கி இருக்கின்றன. இவர்களுக்குப் புதிய தற்காலிக வீடுகள் வழங்கப்படுவதைத் தெரிவிக்கும்…

முகநூலில் பேரணிக்கு அழைப்பு விடுத்த இளைஞன் கைது

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம்கொண்ட பேரணி என்று கூறப்படும் புத்தாண்டுக்கு முதல்நாள் பேரணியில்  கலந்துகொள்ள முகநூலில் அழைப்பு விடுத்த இளைஞனைப் போலீசார் கைது செய்தனர். அஸ்மால்ஸ் ஹட்ஸெனி II என்னும் பெயரில் முகநூலில் பதிவிட்டு வரும் அவ்வாடவனை இன்று காலை 11 மணிக்கு சரவாக், சரதோக்கில் கைது செய்ததாக தேசிய…

பெர்காசாவுக்கு அரசாங்கம் எவ்வளவு பணம் கொடுத்துள்ளது? நஜிப் அறிவிக்க வேண்டும்

வலச்சாரி அமைப்பான பெர்காசாவுக்கு மக்கள் பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவிக்க வேண்டும் என பிகேஆர் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றது உண்மைதான் என்று அவ்வமைப்பு ஒப்புக்கொண்டிருப்பதை அடுத்து பிகேஆர் இவ்வாறு கேட்டுக்கொண்டது. “பெர்காசா ஒரு தீவிரவாத அமைப்பு, வெறுப்பை உண்டாக்கும் பேச்சுக்கும்…

தயிப் மீதான எம்ஏசிசி புலன் விசாரணை தொடர்கிறது ஆனால் அது…

மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹமூட் மீதான புலன் விசாரணையை நிறுத்தவில்லை, அது “தொடர்கிறது”. இவ்வாறு தெரிவித்த அவ்வாணையத்தின் நடவடிக்கை பரிசீலனை வாரிய(பிபிஓ)த் தலைவர் ஹடினான் அப்துல் ஜலில், அந்த விசாரணை “சிக்கல்மிக்க” ஒன்று என்றார். அதனால்தான் அது இத்தனை நாள் எடுத்துக்கொண்டிருக்கிறது.…

இஸ்மா: விலை உயர்வுக்கு அம்னோவே காரணம்

விலை உயர்வுக்குக் காரணம் அம்னோதான் என்று மக்கள் குறைகூறுவதில் என்ன தப்பு என ஈக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) என்னும் என்ஜிஓ வினவியுள்ளது. விலை உயர்வுக்கு அம்னோ மீது குறைகாணக் கூடாது என்று கூறிய பெல்டா தலைவர் இசா சமட்டைச் சாடிய இஸ்மா துணைத் தலைவர் அமினுடின் யாஹ்யா,…

மகாதிர்: செலவுகளைக் குறைப்பீர் அல்லது விலை உயராமல் தடுப்பீர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்கம் விலைகளை உயர்த்துவதைவிட செலவுகளைக் குறைக்கலாம் அல்லது நடப்பு விலைகளை அப்படியே வைத்திருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். தம் வலைப்பதிவில் “செலவினக் குறைப்பு”த் தத்துவத்தைச் சுட்டிக்காட்டிய டாக்டர் மகாதிர், ஒரு தொழில் போட்டியை எதிர்நோக்கும்போது அல்லது அதன் செலவினத்தால் ஆதாயம் குறையும்போது…

ஜைட்: கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் ஆனால், மதமாற்றத்தைத்…

‘அல்லாஹ்’ என்னும் சொல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு முடிவுகாண பிரதமர்துறை முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் ஒரு தீர்வை முன்வைத்திருக்கிறார். கிறிஸ்துவர்கள் அச்சொல்லைப் பயன்படுத்தப் பிரதமரும் மலாய் ஆட்சியாளர்களும் அனுமதிக்கலாம். ஆனால், அதற்குக் கைம்மாற்றாக கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தம்…

“அல்லா” விவகாரம்: நஜிப்பை வறுத்தெடுத்தார் பேராயர் பாக்கியம்

  பதவி விலகிச் செல்லும் பேராயர் மர்பி பாக்கியம் வழக்கமான அவரது அமைதியான போக்கிற்கு மாறாக "அல்லா" என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது என்று வலியுறுத்தும் பிரதமர் நஜிப் ரசாக்கை பகிரங்கமாக கடுமையாகச் சாடினார். நஜிப் இதனை அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூறியதாக பாக்கியம்…

அரசாங்க உதவிகள் கிடைத்தது உண்டு: பெர்காசா ஒப்புக்கொள்கிறது

  மலாய்க்காரர்களின் உரிமைகளுக்காகப் போராடும் இனவாத அமைப்பான பெர்காசா அரசாங்க இலாகாகளிடமிருந்து சில உதவிகளைப் பெற்று வருகிறது என்பதை அதன் தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி ஒப்புக்கொண்டுள்ளார். பிஎன்னுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு பெர்காசா உதவியிருக்கிறது. ஆகவே, அரசாங்க இலாகாகள் அளித்த உதவிகளை அவர் நியாயப்படுத்தினார்.…

“அல்லா” தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை நிராகரிக்க கோரும் முஸ்லிம் அமைப்புகள்

"அல்லா" விவகாரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ரோமன் கத்தோலிக்க திருச்சபை பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை அந்நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று ஆறு மாநில இஸ்லாமிய மன்றங்களும் ஒரு சீன முஸ்லிம் அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளன. மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் கத்தோலிக்க திருச்சபையின் மனுவில்…

வான் ஜுனாய்டி வீட்டைக் கொள்ளையிடும் முயற்சி பலிக்கவில்லை

கூச்சிங்கில் கிரீன் ரோட்டில் உள்ள பிரதமர்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பாரின் (வலம்)வீட்டுக்குள் புகக் கொள்ளையர்கள் திட்டமிட்டனர். ஆனால், அலாரம் ஒலி எழுப்பியதால் அவர்களின் முயற்சி ஈடேறவில்லை. அலாரம் ஒலி கேட்டு இரண்டு போலீஸ்காரர்களும் ரேலா படையினர் இருவரும் வீடு இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தனர்.…

ஷபரி: டிசம்பர் 31 பேரணி எதிரணியினரின் பொய்களை மூடிமறைக்கும் முயற்சி

மே 5 பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற  முடியாமல்போன  எதிரணியினர் தாங்கள் பரப்பும் பொய்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப டிசம்பர் 31 பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவ்வாறு கூறிய தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹமட் ஷபரி சிக்,  ‘கறுப்பு 505’இயக்கம், ‘பெர்சே’ பேரணிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்தவர்களே இதன்…

இந்தோனேசியப் பணிப்பெண்களைத் தருவிக்கும் நடவடிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை

இந்தோனேசியாவிலிருந்து பணிப்பெண்களை வேலைக்குச் சேர்க்கும் நடவடிக்கை தொடர்பில்  இந்தோனேசிய அரசாங்கத்துடன் பேச்சுக்கள் இன்னும் தொடர்கின்றன. பணிப்பெண்கள் மலேசியர்களின் தேவைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருப்பதால் பல அம்சங்களை ஆராய வேண்டி இருப்பதாக மனிதவள துணை அமைச்சர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் கூறினார்.  

உள்துறை அமைச்சு ஊடகங்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும்

உள்துறை அமைச்சு, அச்சக, பதிப்பகச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களைத் தண்டிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஜிங்கா 13 அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் த ஹீட் செய்தித்தாளுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டது ஒரு “கடுமையான” நடவடிக்கை என்று குறிப்பிட்ட ஜிங்கா 13, தடையை உடனடியாக நீக்க…

டோல் கட்டண உயர்வு ‘அப்பட்டமான வாக்குறுதி மீறல்’ ஆகும்

அரசாங்கம்  சாலைக்கட்டணத்தை உயர்த்தினால் அது “அப்பட்டமான வாக்குமீறல்” ஆகும் என முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா இன்று கூறினார். “டோல் கட்டணத்தை மறுபரிசீலனை செய்வோம் என்பது தேர்தல் வாக்குறுதி. அரசாங்கம் இப்போது (டோல் கட்டணத்தை உயர்த்தும்) அதன் நடவடிக்கையைத் தொடர்ந்தால் அது வாக்குறுதி மீறலாகும். அது…

கருத்துக்கணிப்பு: விலை உயர்வுதான் பலரின் பெருங் கவலை; கவலையைக் குறைக்க…

2014 பட்ஜெட் பல சலுகைகள் பற்றிப் பேசினாலும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க அவை உதவும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மலேசியர்களுக்கு இல்லை. அவர்களின் இப்போதைய பெருங் கவலை எல்லாம்  எண்ணெய், சீனி, ஆகியவற்றின் விலை உயர்வும் மின்கட்டண உயர்வும்தான். மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக மற்றும் தேர்தல் மையம் (Umcedel)…

மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை: குவான் எங்குக்கு ஜஹாரா எச்சரிக்கை

பினாங்கு சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாதப் பாட்டி” என்று குறிபிட்டதற்காக முதலமைச்சர் லிம் குவான் எங் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். செபராங் பிறை முனிசிபல் மன்றம் மலாய்க்கார அங்காடி வியாபாரிகளின் கடைகளாக பார்த்து…

விலை உயர்வு-எதிர்ப்பியக்கத் தலைவர் முகம்மட் அஸான் கைது

பல்கலைக்கழக மாணவரும், பொருள் விலைகள், சேவைக்கட்டணங்கள் ஆகியவற்றைக் குறைக்கப் போராடும் காபோங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் மலேசியா (காமிஸ்), ஒரு என்ஜிஓ-வான துருன்(Turun) ஆகியவற்றின் தலைவருமான முகம்மட் அஸான் சபார்(இடம்) நேற்றிரவு கைது செய்யப்பட்டார். நேற்று  நள்ளிரவுக்குமுன், கோலாலும்பூர் கம்போங் பாருவில் உணவருந்திக் கொண்டிருந்த அஸான் அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ்…

இசா: அம்னோவின் இடத்தை பெர்காசாவால் நிரப்ப முடியாது

அம்னோவின் இடத்தில் இருந்து கொண்டு மலாய்க்காரர் நலன் காப்போம் என்று பெர்காசா கூறுவது நடவாத காரியம் என்கிறார்  அம்னோ உச்சமன்ற உறுப்பினர்  இசா சமட். மலாய்காரர் நலன் காத்தல் என்பது சாதாரணமான செயல்  அல்ல என்று  கூறிய இசா, பெர்காசாவே அம்னோவிடமிருந்து நிறைய உதவி பெற்றுள்ளது  என்றார். “அது…

மகாதிர்: மனிதர்கள்தான் தீமை செய்கிறார்கள் ஆவிகள் அல்ல

தீயச் செயல்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆவிகள் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டவை காரணம் என்பதைக் காட்டிலும் மனிதர்களே காரணம் என்பதைத்தான் அதிகம் நம்புவதாகக் கூறுகிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். மலாய்க்காரர்களுக்கு ஆவிகள், பூதங்கள்மீது தீரா மோகம் இருக்கிறது. அது, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வெளிப்படுகின்றது.   இந்நம்பிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது.…

டோல் கட்டண உயர்வு திருப்பி அடிக்கும்: அம்னோவுக்கு எச்சரிக்கை

சாலைக்கட்டண உயர்வு, அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவையே திருப்பி அடிக்கப்போகிறது என ரித்வான் டீ அப்துல்லா எச்சரித்துள்ளார். டோலை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவால் “குழப்பமடைவதாக” அந்தக் கல்வியாளர் கூறினார். “1மலேசியா என்று சொல்லி ‘மக்களுக்கு முன்னுரிமை, அடைவுநிலைக்கு முக்கியத்துவம்’ என்று முழக்கமிட்டதன் அர்த்தம் என்ன? தேர்தலின்போது மட்டும்தான் மக்களுக்கு…