கடந்த ஆண்டில், அந்த நிதியம் முதலாளிகளுக்கு எதிராக 3,530 சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ததுடன், 6,011 வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. "ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மொத்தம் 21,029 புகார்களில், 2025-ஆம் ஆண்டில் 8,868 நிலுவைப்பணிக் கூடுதல் (contribution arrears) வழக்குகள் தீர்க்கப்பட்டதாக ஊழியர் சேமநிதி வாரியத்தின் (EPF) தலைமைச்…
மேலும் நான்கு தேர்தல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி
தேர்தல் நீதிமன்றம், சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட நான்கு தேர்தல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. அவற்றில் ஒன்று செப்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்காக பிஎன் செய்த முறையீடு. பாஸ் கோலா சிலாங்கூர், சுங்கை புசார் நாடாளுமன்றத் தொகுதி முடிவுகளை எதிர்த்து மனு செய்திருந்தது. பிகேஆர் சாபாக் பெர்னாம் தொகுதிக்காக மனு…
துணைப் பிரதமர்: இஸ்லாத்தைப் பழித்துரைப்பது நாட்டில் பதற்றத்தை உருவாக்கும்
முஸ்லிம்களை ஆத்திரப்படவைக்கும் செயல்கள் நிற்காவிட்டால் மற்ற முஸ்லிம் நாடுகளில் நடப்பதுபோல் இங்கும் நெருக்கடி நிலை உருவாகலாம். இவ்வாறு எச்சரித்துள்ள துணைப்பிரதமர் முகைதின் யாசின், அமைதியை அனுபவிக்கும் ஒரு நாட்டில் அப்படிப்பட்ட நிலை உருவாகக் கூடாது என்றார். “இது, சமுதாயத்தில் ஆழ்ந்த புரிந்துணர்வு இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது. முஸ்லிம்கள் கிறிஸ்துவத்தையோ…
அவதூறு கூறியதற்காக ஆர்பிகே ரிம 300,000 கொடுக்க உத்தரவு
மலேசியா டுடே வலைப்பதிவு ஆசிரியர் ராஜா பெட்ரா கமருடின் (ஆர்பிகே), மூத்த வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம300,000 இழப்பீடு கொடுக்க வேண்டும் என கோலாலும்பூர் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-இல், ஆர்பிகே அவரது வலைப்பதிவில் வெளியிட்டிருந்த மூன்று கட்டுரைகள் தொடர்பில் அவருக்கு எதிராக ஷாபி வழக்குத் தொடுத்திருந்தார்.
பல ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர் யனேஷாவுக்குக் குடியுரிமை கிடைத்தது
என்.யனேஷா, நாடற்றவராக இருந்த நிலை பத்தாண்டுப் போராட்டத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. தேசியப் பதிவுத்துறை (என்ஆர்டி) அவருக்கு குடியுரிமையும் அடையாள அட்டையும் வழங்கி உள்ளதாக அவரின் வழக்குரைஞர் அன்னவ் சேவியர்(இடம்) உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரோசிலா யோப்பிடம் தெரிவித்தார். “ஆனால், அவரின் பிறப்புச் சான்றிதழில் மட்டும் குடியுரிமை-அற்றவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது”, …
தலைமையாசிரியர் ‘பாலே இந்தியா, சீனா’ என்று சொன்னதை ஒப்பினார்
ஷா ஆலம் எஸ்எம்கே ஆலாம் மெகா தலைமையாசிரியர், இந்திய, சீன மாணவர்களை நோக்கி ‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிப் போங்கள்’ என்று சொன்னதை ஒப்புக்கொண்டார். இதைத் தெரிவித்த மஇகா தொகுதித் துணைத் தலைவர் ஏ.பிரகாஷ் ராவ், (வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர்) அவ்வாறு கூறியதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் என்றார். மலாய்…
அவர்கள் இப்போது தகவலைச் சொன்ன தாய் மீது பாய்கின்றனர்
"உண்மையை வெளிப்படுத்தியவர்கள் மருட்டப்படுகின்றனர், மன்னிப்புக் கேட்குமாறு வற்புறுத்தப்படுகின்றது. அதே வேளையில் தவறு செய்தவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். ஹீரோக்கள் என புகழப்படுகின்றனர்" சிலாங்கூர் அம்னோ: கேண்டீன் பற்றிய தகவல்களை வெளியிட்டவர்களை தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரியுங்கள் ஏரியஸ்46: அந்த 'குளியலறை கேண்டீன்' விவகாரத்தில் சிலாங்கூர் அம்னோவுக்கும் அதன் தலைவர் நோ ஒமாருக்கும்…
‘balik India, China’ எனச் சொன்னதை தலைமை ஆசிரியர் ஒப்புக்…
பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘நண்பர்கள் சஞ்சீவனைச் சுட்டனர்’ என்ற செய்தியை போலீஸ் தலைவர் மறுக்கிறார்
மை வாட்ச் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவனை 'நண்பர்கள்' சுட்டனர். கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலைக்காரர்கள் அல்ல எனத் தாம் சொன்னதாகக் கூறும் செய்தியை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் மறுத்துள்ளார். விசாரணைகள் தொடருகின்றன என்று மட்டுமே தாம் குறிப்பிட்டதாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். "அந்த…
விற்பனைச் சந்தைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: மைக்கி
மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கக் கூட்டிணைப்பு (மைக்கி), அரசாங்க ஆதரவுடன் நடக்கும் அனைத்துலக விற்பனைச் சந்தைகளால் தங்களுக்கு இழப்புகள் ஏற்படுவதாகக் கூறும் வியாபாரிகளுக்கும் வணிகர்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது. அந்தச் சந்தைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மைக்கி தலைவர் கே.கே. ஈஸ்வரன், அதைப் பிரதமர் நஜிப்…
பிரதமர்: குற்றத்தை எதிர்க்க போலீசுக்கு தேவையான அனைத்தும் கொடுக்கப்படும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்கம் குற்றச்செயல்களைக் குறிப்பாக கடுமையான குற்றங்களை எதிர்ப்பதற்கு போலீசுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறது என்று கூறினார். துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொலைசெய்யும் சம்பவங்கள் அதிகரித்துவருவது பற்றிக் கவலை தெரிவித்த அவர், அது மக்களின் நம்பிக்கையைப் பாதித்து அச்சத்தை அதிகரித்துள்ளது என்றார். மக்களின்…
சொய் லெக்: ஆசிரியர்களுக்கு மலேசிய நாகரிகம் பற்றிக் கற்றுக் கொடுங்கள்
கல்வி அமைச்சு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சிமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் வலியுறுத்தியுள்ளார். முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இனங்கள் தனித்தனியே பிரிந்து நிற்பதற்குக் காரணமாக இருப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் சொன்னார். மலேசியாகினியிடம் பேசிய அவர்,…
இஸ்லாம் அல்லாத பிற வழிபாட்டு மையங்களுக்கு ஆலோசனை மன்றம்
கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு, இஸ்லாம் அல்லாத பிற வழிபாட்டு மையங்களுக்கு ஆலோசனை மன்றம் ஒன்றை அமைக்கும். அந்த மையங்களைக் காலி செய்வதற்கான நோட்டீஸ்கள், அவற்றைக் கட்டுவதற்கான பகுதிகளை உறுதி செய்வது போன்ற விஷயங்களை அந்தக் குழு ஆராயும் என அதன் துணை அமைச்சர் ஜே லோக பாலன்…
‘balik China, India’ எனச் சொன்னதாக கூறப்படுவதை கல்வி அமைச்சு…
இடைநிலைப் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் ஒருவர் இனவாதக் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரிக்கும் என கல்வித் துணை அமைச்சர் பி கமலநாதன் அறிவித்துள்ளார். அந்த விவகாரம் அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என்றும் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் அவர் அவ்வாறு…
சுப்ரா நிகழ்வைப் புறக்கணித்ததாக கூறப்படுவதை பினாங்கு மஇகா தலைவர் மறுக்கிறார்
புக்கிட் ஜம்புலில் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் நேற்றிரவு நடத்திய நிகழ்வில் மாநில மஇகா தலைவர் எஸ் கருப்பண்ணனும் பல கிளைகளும் கலந்து கொள்ளாதது 'புறக்கணிப்பு' நடவடிக்கை என்னும் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நிகழ்வைத் தாம் புறக்கணித்ததாக கூறப்படுவதை தொடர்பு கொள்ளப்பட்ட போது கருப்பண்ணன் மறுத்தார். தாம்…
டிஏபி-இன் சிஇசி செல்லாதென ஆர்ஓஎஸ் முடிவு, ஆனால் கடிதம் கொடுக்கப்படவில்லை
டிஏபி, அதன் மத்திய செயலவை (சிஇசி) தேர்தல் செல்லாது என சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) எழுத்துப் பூர்வமாக தெரிவிக்குமுன்னர் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி அதை அறிவித்ததால் கொதிப்படைந்துள்ளது. அஹமட் ஜாஹிட் நேற்று புத்ரா ஜெயாவில் நோன்பு திறக்கும் நிகழ்வு ஒன்றில் அதை அறிவித்தார். “அதைத் தெரிவிக்கும் ஆர்ஓஎஸ்…
இன ரீதியாக வேறுபடும் ( racial polarisation ) போக்கு…
அரசாங்கம் நல்ல நோக்கத்துடன் எடுக்கும் முயற்சிகள்- இன ரீதியாக வேறுபடும் போக்கினால் இனப் பிரச்னைகளாகி விடுவது குறித்து துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கவலை தெரிவித்துள்ளார். எடுத்துக்காட்டுக்கு 2013-2015 கல்வி மேம்பாட்டுப் பெருந்திட்டம் 'நல்ல நோக்கங்களை' கொண்டிருந்த போதிலும் அதனை சீனக் கல்விப் போராட்ட அமைப்பான டோங் ஜோங்…
‘மலேசியாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது’
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பெருகி வருவதைத் தொடர்ந்து மலேசியாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதோ என என்ஜிஓ-களின் கூட்டணி ஒன்று கவலை கொண்டுள்ளது. மலேசியா பாதுகாப்பான நாடு என்ற கருத்தைத் துப்பாக்கிக் குண்டுகள் தவிடு பொடியாக்கிவிட்டன. “உள்துறை அமைச்சும் போலீசும் நாடு பாதுகாப்பாக இருப்பதாக சொல்கின்றன. ஆனால், மக்கள் பயப்படுகிறார்கள்.…
பெர்க்காசா: ‘புதுக் கிராமம்’ மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை மேம்படுத்தினால் அதனைத்…
'புதுக் கிராமம்' திரைப்படத்தில் கம்யூனிசத்தைப் புகழும் அம்சங்கள் உண்மையில் இருந்தால் அதனை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் எனப் பெர்க்காசா கூறுகின்றது. "அந்தத் திரைப்படத்தில் கீழறுப்பு அம்சங்கள் இருந்து அது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை மேம்படுத்தினாலும் அதனைப் புகழ்ந்தாலும் அது முற்றாகத் திரையிடப்படுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்," என…
‘balik India, China’ விவகாரத்தில் விரைவான நடவடிக்கை தேவை என…
தமது பள்ளிக்கூடத்தில் உள்ள சீன, இந்திய மாணவர்களை 'இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்' எனக் கூறிய தலைமை ஆசிரியையை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு கெரக்கான் உதவித் தலைவர் ஏ கோகிலன் பிள்ளை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தலைமை ஆசிரியை அந்த வார்த்தைகளை சொல்லியிருப்பதை விசாரணைகள் கண்டறிந்தால் அவரை நீக்கவும்…
சிலாங்கூர் அம்னோ: கேண்டீன் பற்றிய தகவல்களை வெளியிட்டவர்களை தேசநிந்தனைச் சட்டத்தின்…
ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி குளியலறை கேண்டீன் சர்ச்சையை பெரிதுபடுத்தியதற்குப் பொறுப்பான பெற்றோர்களை 1948ம் ஆண்டுக்கான தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனச் சிலாங்கூர் அம்னோ கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு வேண்டுகோள் விடுத்த சிலாங்கூர் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் நோ ஒமார், அந்தப் பள்ளிக்கூடத்தின்…
போலீசின் வேலை குற்றத்தை எதிர்ப்பது; பிஎன் எதிரிகளைத் துரத்திக்கொண்டிருப்பதல்ல :டிஏபி
போலீஸ் படை குற்ற-எதிர்ப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிஎன்னின் அரசியல் எதிரிகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், குற்றத்தடுப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கையை 14 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.…
தர்மேந்திரனைக் கொலை செய்ததாக ஹரிகிருஷ்ணன்மீது குற்றச்சாட்டு
போலீஸ் காவலில் இருந்த என்.தர்மேந்திரனைக் கொன்றதாக இன்ஸ்பெக்டர் எஸ்.ஹரிகிருஷ்ணன்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஹரிகிருஷ்ணன் அவ்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள நாலாவது நபராவார். வழக்கு விசாரணைக்கான நாள் பிண-பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்னர் முடிவுசெய்யப்படும் என நீதிபதி நூர் அமினாதுல் மர்டியா முகம்மட் நூர் கூறினார். அது ஆகஸ்ட் 2…
அதிகார அத்துமீறல் தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூன்று…
பல மில்லியன் ரிங்கிட் பெறும் உணவுத் தொழில் திட்டம் சம்பந்தப்பட்ட அதிகார அத்துமீறல் எனக் கூறப்படுவது மீதான விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூன்று முன்னாள் உயர் அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. அந்த மூவரும் நிறுவனத்தில் இயக்குநர், தலைமை…


