நுருல் இஸ்ஸா, மலேசியாகினி மீது நோங் சிக் வழக்குப் போடுகிறார்

லெம்பா பந்தாய் அம்னோ தொகுதித் தலைவர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல்  அபிடின், புக்கிட் கியாராவில் நிலக் கொள்முதல் ஒன்று தொடர்பில் தமக்கு எதிராக  அவதூறு கூறியதாக லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் மற்றும் இருவர் மீது வழக்குப் போட்டிருக்கிறார். ஜுலை 17ம் தேதி மெஸர்ஸ்…

மரினோ போக வேண்டும் என பெர்க்காசா கோரிக்கை

வத்திகன் மலேசியாவுக்குப் புதிய தூதரை நியமிக்க வேண்டும் எனக் கோரும்  ஆட்சேபக் குறிப்பு ஒன்றை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி தலைமையில்  சென்ற 30 பேர் கொண்ட குழு ஒன்று கோலாலம்பூரில் உள்ள வத்திகன்  தூதரகத்தில் வழங்கியுள்ளது. ஆனால் அந்தக் குழுவைச் சந்திக்க தூதரக அதிகாரிகள் யாரும் வராததால்…

தேர்தல் பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் யார்? ஜூலை 25-க்குள் தெரிந்துவிடும்

பெர்சே, பொதுத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் தேர்தல் மோசடிகளை விசாரணை செய்யும் மக்கள் பஞ்சாயத்தின் உறுப்பினர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதனை மலேசியாகினியிடம் தெரிவித்த பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் எண்ட்ரு கூ, ஜூலை 25-க்குள் அவர்களின் பெயர்களை அறிவிக்க முடியும் என்று நம்புகிறார். “அது இறுதிசெய்யப்பட்டதும் அறிவிப்பு செய்வோம்.…

சுவாராம்: மற்ற தடுப்புக்காவல் மரணங்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

இவ்வாண்டில் இதுவரை 12 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் ஒரே ஒரு மரணம் தொடர்பில்தான் மூன்று போலீஸ்காரர்கள்மீது குற்றம் சாட்டப்படுள்ளது என்று கூறும் சுவாராம் தடுப்புக்காவல் மரணங்கள் எல்லாவற்றுக்குமே போலீஸ் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. “என்.தர்மேந்திரன் மரணம் தொடர்பில் மூன்று போலீஸ்காரர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றவாளி என்ற…

ஆகாயப் படை பள்ளிவாசலில் நிக் அஜிஸ் தொழுகை நடத்த தடை

கோலா பெசுட்டிற்கு அருகில் உள்ள கோங் கெடாக்கில் அமைந்துள்ள அரச  மலேசிய ஆகாயப் படைப் பள்ளிவாசாலில் நேற்றிரவு தமது Maghrib  தொழுகையை நடத்துவதற்கு பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்  அனுமதிக்கப்படவில்லை முன்னாள் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அஜிஸ் அந்தப் பள்ளிவாசலுக்கு  ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்ததாக…

பெர்சே பொதுத் தேர்தல் பஞ்சாயத்து மன்றம்: ஆதாரங்களை அனுப்புங்கள்

13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்த  தங்கள் ஆதாரங்களை அனுப்புமாறு பெர்சே அமைத்துள்ள மக்கள் பஞ்சாயத்து  மன்றம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களையும் சாட்சிய  அறிக்கைகளையும் அவர்கள் அனுப்பலாம். வாக்காளர்கள் எதிர்நோக்கிய சூழ்நிலைகள் பட்டியலையும் பெர்சே வெளியிட்டது.  அவற்றுள்:…

ஓராங் அஸ்லி அமைப்புகள்: அரசாங்கம் எங்கள் நிலத்தைத் திருடப் பார்க்கிறது

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து தங்களின்  மூதாதையர் நிலத்தில் 60 விழுக்காட்டைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறது என ஓராங் அஸ்லி அமைப்புகள் இரண்டு  குற்றம் சுமத்தியுள்ளன. பகாங்கையும் மலாக்காவையும் சேர்ந்த ஒராங் அஸ்லி பிரதிநிதிகள்,  1954 பூர்வீகக் குடிச் சட்டத்துக்குக்  கொண்டுவரப்படும் திருத்தத்துக்கு  எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்திருத்தம், …

முஹைடின்: முஸ்லிம் அல்லாதாரை மதம் மாற்றுவது Titas நோக்கமல்ல

Titas என்ற இஸ்லாமிய ஆசிய நாகரீகங்கள் பாடத்தை உள்நாட்டு தனியார்  உயர்கல்விக் கூடங்களில் கட்டாயமாக்குவது முஸ்லிம் அல்லாத மாணவர்களை  இஸ்லாத்துக்கு மதம் மாற்றாது. இவ்வாறு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். இந்த நாட்டிலுள்ள பல இன, பல சமய மக்களிடையே புரிந்துணர்வை மேம்படுத்தும் அரசாங்க முயற்சிகளில் ஒன்று…

பாஸ்: சாப்ரிக்கும் ராபிஸிக்கும் இடையில் விவாதம் நடக்க வேண்டும்

கோலா பெசுட்டில் விவாதம் நடத்த வருமாறு பாஸ் கட்சி அம்னோவுக்குச் சவால்  விடுத்துள்ளது. அந்த விவாதத்தில் பாஸ் கட்சியையும் எதிர்த்தரப்பையும் பிரதிநிதிக்க தாம்  பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலை அழைக்கப் போவதாகவும்  அம்னோ/பிஎன் சார்பில் தொடர்பு, பல்லூடக அமைச்சரும் அம்னோ உச்ச மன்ற  உறுப்பினருமான அகமட் சாப்ரி…

‘நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்’ – ஆர்கே…

'நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்' என்ற முதுமொழி மஇகா  இப்போது எதிர்நோக்கியுள்ள குழப்பத்தை தெளிவாக வருணிக்கிறது. ஒரு காலத்தில் அந்த நாட்டில் வளம் கொழித்தது. அதற்கு வல்லமையும் செல்வமும் நிறைந்திருந்தது. ஆற்றல் மிக்க மலேசிய இந்தியர்கள் அரசியல்  பெருமக்களாக உயர்ந்து பெரும் செல்வத்தைச் சேர்க்க உதவியது. ஆனால்…

குவான் எங்: இனவாத அமைச்சருக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எடுக்க…

அமைச்சரவை மலாய் மொழி பைபிளை எரிக்க வேண்டும் என பெர்க்காசா  விடுத்த அறைகூவலை ஆதரித்துள்ள அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து,  தான் பல இனங்களையும் பிரதிநிதிப்பதை நிரூபிக்க வேண்டும் என டிஏபி  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார். 'அல்லாஹ்' என்ற சொல்லைக் கொண்ட பைபிள்களுக்கு…

அல்விவிக்கு பிணை வழங்காதது ஏன்? ஏஜி விளக்கம்

முஸ்லிம்களையும் ரமலான் மாத நோன்பையும் முகநூலில் கேலி செய்ததற்காக வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் அல்வின் டான், விவியன் லீ ஆகிய இருவருக்கும்  பிணை  மறுக்கப்பட்டது  ஏன்  என்று  சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல்  விளக்கமளித்துள்ளார்  . அவ்விருவரும்  இணையத்தில் பதிவிடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்பதால் அவர்களின்…

அகதிகள் வேலை செய்ய அரசாங்கம் ஒப்புதல்

மலேசியாவில் உள்ள அகதிகள் சட்டப்பூர்வமாக வேலை செய்ய இடமளிக்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஜிட் ஹமிடி அறிவித்துள்ளதை வரவேற்பதாக சுவராம் மனித உரிமை கழகத் தலைவர் கா. ஆறுமுகம் கூறுகிறார். கடந்த வாரம், செலாயாங் மொத்த வணிக…

இப்ராஹிம் அலியை அல்விவி-யுடன் ஒப்பிடக் கூடாது

'அல்லாஹ்' என்ற சொல்லைக் கொண்ட பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா  தலைவர் இப்ராஹிம் அலி விடுத்த அறைகூவலை , முஸ்லிம்களை  இழிவுபடுத்தியதாக முகநூல் ஜோடி அல்வின் தான் விவியன் லீ ஆகியோர் மீது  தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ஒப்பிட முடியாது என கோத்தா பெலுட் எம்பி  அப்துல் ரஹ்மான் டாஹலான் கூறியுள்ளார்.…

பாஸ்: பெசுட் கடலோர நிலம் பற்றிய தகவல் எங்களுக்கு கொடுக்கப்பட்டது

நான்கு பெசுட் அம்னோ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கடலோர நில விவகாரம்  பெயர் குறிப்பிட விரும்பாத தரப்பு ஒன்றினால் பாஸ் கட்சியிடம் 'வேண்டுமென்றே  கசியவிடப்பட்டது' என பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம் மூசா கூறிக்  கொண்டுள்ளார். "எங்களுக்கு அந்தத் தகவல் அப்படித் தான் கிடைத்தது. அந்தத் தகவல் கசியாவிட்டால் அதனை…

‘அடையாளக் கார்டை குடியேற்றக்காரர்கள் வாக்களிப்புக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்’

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளக் கார்டுகளை 'வாக்களிப்புக்கு மட்டுமே'  பயன்படுத்த முடியும் என சில சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் சுஹாக்காம்  என்ற மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளதாக அதன் முன்னாள்  உதவித் தலைவர் சைமன் சிப்பாவுன் கூறியுள்ளார். அவர், சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திற்கு…

அன்வாருடைய வங்கிக் கணக்குகள் எனக் கூறிக் கொண்ட எம்பி கண்டனத்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் 'இஸ்ரேல் தேசிய வங்கியில்' ஒன்பது  கணக்குகள் உட்பட 20 வங்கிக் கணக்குகளை வெளிநாடுகளில் வைத்துள்ளதாக  கூறிக் கொண்ட பிஎன் சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் தெக் மெங் நாடாளுமன்ற  உரிமைகள், சலுகைகள் குழுவுக்கு முன்னர் நிறுத்தப்படுவதிலிருந்து தப்பித்துக்  கொண்டுள்ளார். லியாங்கை அந்தக் குழுவுக்கு…

‘பெர்க்காசா என வரும் போது போலீசாரின் இரட்டைத் தரம்’

நிருபர்களுக்கு எதிரான வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் எனக்  கூறப்படுகின்றவர்கள், தமக்கு மிரட்டல்களை விடுத்தவர்கள் ஆகியோர் மீது  குற்றம் சாட்டுவதில் போலீசார் 'செயலற்றுப் போவது' குறித்து பினாங்கு  முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார். மே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படுவது…

அகமட் ஸாஹிட்-டுக்கு எதிரான குற்றச்சாட்டை வணிகர் மீட்டுக் கொண்டார்

உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தம்மைத் தாக்கியதாக கூறப்பட்டது  தொடர்பில் தாம் சமர்பித்திருந்த இழப்பீட்டுக் கோரிக்கைகளை (claim for  damages) மீட்டுக் கொள்ள வணிகரான அகமட் பாஸ்லி அப்துல்லா ஒப்புக்  கொண்டுள்ளார். அதற்கு ஈடாக அகமட் பாஸ்லி மீது தாம் போட்டிருந்த கோரிக்கையை மீட்டுக்  கொள்ள அகமட்…

சமய, செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் அல்விவி மீது சுமத்தப்பட்டன

ரமதான் மாதத்தில் தங்கள் முகநூல் பக்கத்தில் bak kut teh வாழ்த்துக்களைத்  தெரிவிக்கும் பதிவைச் சேர்த்தது, தங்கள் வலைப்பதிவுகளில் ஆபாச படங்களை  சேர்த்தது ஆகியவை தொடர்பாக தங்கள் மீது கோலாலம்பூர் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை சர்ச்சைக்குரிய அல்வின்  தான், விவியன் லீ ஜோடி மறுத்துள்ளது. தான்…

சுல்கிப்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத ஏஜி மீது போலீசில் புகார்

என்ஜிஓ-களின் கூட்டமைப்பு ஒன்று, சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுத்த முறையில் வழக்கு தொடுக்கிறார் என்று போலீசில் புகார் செய்தது. வலைப்பதிவர்கள் அல்வின் டானுக்கும் விவியன் லீ-க்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதும் பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நூர்டினுக்கு எதிராக நடவடிக்கை…

அம்பிகா: தேர்தல் சட்டத்தின் பிரிவு 9ஏ-யை அகற்றுவீர்

தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அமைப்பான பெர்சே-இன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்,  அரசாங்கம்  வாக்காளர் பட்டியலில் “எதுவும் மூடி மறைக்கப்படவில்லை” என்பதை நிரூபிக்க 1958 தேர்தல் சட்டம் பிரிவு 9ஏ-யை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அது நீக்கப்பட்டால் தேர்தல் ஆணையம் “திருப்தியற்ற” விளக்கங்களைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. “9ஏ,…

இசி, மை அழியாதது என்பதை நிரூபித்துக் காட்டியது

தேர்தல் ஆணையம் (இசி), கோலா பெசுட் இடைத் தேர்தலில் பயன்படுத்தும் மை 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தியதுபோல் அல்லாமல் தரமானது என்பதை நிறுவ செய்முறைக் காட்சி ஒன்றை இன்று நடத்தியது. பல செய்தியாளர்கள் அதில் பங்கேற்றனர். மலேசியாகினி செய்தியாளர், அந்த மையை ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் நீரில்…