கார்களுக்கு 12-ஆண்டு வரம்பு கட்டுவது குடும்பங்களைக் கடனாளிகளாக ஆக்கிவிடும்

கார் கடனைக் கட்டி முடிக்கவே ஒன்பதாண்டுகள் ஆகிறது என்கிறபோது,  12 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்கள் பாதுகாப்பற்றவை என்ற விதி நடைமுறைப்படுத்தப்பட்டால் “பல ஆயிரம் மலேசியர்கள்” பாதிக்கப்படுவர்  என்கிறது பிகேஆர். “அதன்படி கார் கடனைத் திருப்பிச் செலுத்திய மூன்றாண்டுகளிலேயே அவர்கள் இன்னொரு கடனை எடுக்க வேண்டி இருக்கும்”, என பாண்டான்…

‘ரிம10 மில்லியனை இடமாற்றம் செய்த நெகிரி எம்பிமீது ஏன் நடவடிக்கை…

நெகிரி செம்பிலான் மந்திரி புசார்(எம்பி) முகம்மட் ஹசான் ரிம10 மில்லியனை  நாணய மாற்று வணிகர்  மூலமாக இடமாற்றம் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டத்துறை தலைவர் அலுவலகம்  “இரட்டை நியாயத்தை”க் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 2014 பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட அந்தோனி லொக் (டிஏபி-சிரம்பான்), 2009-இலிருந்தே அதிகாரிகள்…

மகாதிர் ஐஜேஎன் -இல் சேர்க்கப்பட்டார்

டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று தேசிய இருதயக் கழகத்தில் (ஐஜேஎன்) சேர்க்கப்பட்டார். நெஞ்சில் ஏற்பட்ட பாதிப்புக்காக முன்னாள் பிரதமருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர் மகாதிர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது. மகாதிர் சில நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் எனத் தெரிகிறது.

டிஏபி புஜுட் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

டிஏபி, புஜுட் சட்டமன்ற உறுப்பினர் போங் பாவ் டெக்-கைக் கட்சியிலிருந்து விலக்கியது. அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சிக்கு கண்டிப்பாக செலுத்த வேண்டிய மாதக் கட்டணத்தைச் செலுத்தவில்லை அதனால் கட்சிநீக்கம் செய்யப்பட்டார் எனக்  கட்சியின் ஒழுங்குக் குழுத் தலைவர் டான் கொக் வாய் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். புஜுட்,…

மாற்றுத்திறனாளி செனட்டராக நியமனம்

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகப் போராடும் சமூகஆர்வலரான பத்மாவதி கிருஷ்ணா இன்று செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பத்மாவதியும் ஒரு மாற்றுத் திறனாளிதான்.  இரண்டாவது தடவையாக மாற்றுத் திறனாளி ஒருவர் செனட்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரைப் பாராட்டிய டேவான் நெகாரா தலைவர் அபு ஸ்ஹார், “மாற்றுத்திறன் பெண்ணாக இருந்தாலும் அவையில் துணிச்சலுடன் பேச…

சரவாக்கில் கால்வைக்காதே: பெர்காசாவுக்கு எச்சரிக்கை

சரவாக்கில் ஒரு கிளையை அமைக்கும் பெர்காசாவின் திட்டத்துக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சரவாக்கில் கிளை அமைக்கும் எண்ணத்தை பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி நேற்று வெளியிட்டிருந்தார். சாபா கிளை அமைந்ததை அடுத்து அவர் அவ்வாறு அறிவித்தார். “மாநில அரசு,  இந்தத் தீவிரவாதிகள் சரவாக்…

சுரேந்திரன்: திரும்பி வருவேன்…..பழிதீர்ப்பேன்

நவம்பர் 14-இல், நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட என்.சுரேந்திரனிடம் அவரின் அடுத்த திட்டம் என்னவென்று வினவியதற்கு,  “திரும்பி வருவேன், பழிதீர்ப்பேன்” என்றார். “இதற்குமுன் என்ன செய்தேனோ அதைத்  தொடர்வேன். பொதுநலன்  சம்பந்தப்பட்ட  விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவேன்”, என்றவர் சொன்னார். நாடற்ற மக்கள், சிவப்பு அடையாள அட்டை,…

ஸுனார்: கார்ட்டுன் நூலை அச்சடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது

மலேசியாவில் அரசியல் கேலிச் சித்திரம் வரைவது ஆபத்தான வேலையாக இருக்கிறது என்கிறார் பிரபல கேலிச்சித்திர ஓவியர் ஸுனார். அவரது புதிய கேலிச்சித்திர நூலான ‘Pirates of the Carry-BN'-னை அச்சடிக்க   10 அச்சகங்களை அணுகியபோது பத்தும் மறுத்து விட்டன.  இறுதியாக ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்டது.   “அவர்களும் தங்கள் பெயரைப்…

நாடாளுமன்றத்தில் ஹூடுட் தீர்மானத்தை ஷஹிடான் ஆதரிப்பார்

நாடாளுமன்றத்தில் ஹூடுட் சட்டம் மீதான தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிக்க தயார் என பிரதமர் துறையில் நாடாளுமன்ற விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் அமைச்சரான ஷஹிடான் காசிம் கூறியுள்ளார். “நாங்கள் அதை ஆதரிக்கத் தயார். ஆனால், எல்லா எம்பிகளும் ஆதரித்தால்தான் அது ஏற்கப்படும். “பாஸ் ஒரு சிறுபான்மைக் கட்சி. அதன் பக்காத்தான்…

மக்கள் வெறுப்படையுமுன்னர் போய்விடுங்கள்: சொய் லெக்-குக்கு உத்துசான் அறிவுரை

கட்சியில் வரவேற்பு இல்லை என்பதால் மசீச தலைவர் சுவா சொய் லெக் விலகிக் கொள்வதே மேல் என்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு கூறியுள்ளது. “சொய் லெக்கின் காலம் முடிந்து விட்டது. காலவரம்பை மீறி தங்க வேண்டாம்.  இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மக்கள் வெறுப்படையும்வரை காத்திராதீர்கள்”,…

இலங்கை மாநாட்டில் மலேசியா கலந்துகொண்டதற்கு இளைஞர்கள் கண்டனம்

நேற்று, கோலாலும்பூர், பிரிக்பீல்ட்சில், இளைஞர்கள் நால்வர், ஸ்ரீலங்கா காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் மலேசியா கலந்துகொண்டதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் கைகளில், “போர்க்குற்றவாளி காமன்வெல் மாநாட்டுத் தலைவர்”, “ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்துங்கள்”, “ஸ்ரீலங்காவில் இனஒழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்”, “நஜிப், வாயை மூடிக்கொண்டிருப்பதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்ற…

யூ.பி.எஸ்.ஆர்: சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், நவம்பர் 16, 2013. இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற எல்லா மாணவர்களுக்கும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற மாநிலங்களுடன்…

மலேசியாகினி இல்லம்: ஒரு செங்கல் வாங்கி உதவுங்கள்

கடந்த 14 வருடங்களாகப் பல போராட்டங்களுக்கிடையில் செயல்பட்டு வந்த மலேசியாகினி அதற்கென ஒரு நிரந்தர இல்லத்தை வாங்கியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வில்லம் அதன் புதிய செயலாகமாக இயங்கும். அக்கட்டடம் பெட்டாலிங் ஜெயா, செக்சன் 51, பிஜே51 பிஸ்னெஸ் பார்க் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து மலேசியர்களுக்கு இணையதளம்…

அனைத்தையும் விட மிக முக்கியமானது மனித உரிமைகள், பிரதமர் நவீன்

மோரீசஸ் நாட்டில் 2015 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டிற்கு தலைமை ஏற்கவிருக்கும் அந்நாட்டின் பிரதமர் நவீன் சந்திரா ராம்குலாம் மனித உரிமைகள் மிக முக்கியமானது என்று கூறுகிறார். சிறீலங்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2013 ஆண்டிற்கான காமன்வெல்த மாநாட்டில் பிரதமர் நவீன் கலந்துகொள்ளவில்லை. சிறீ…

சுரேந்திரனின் இடைநீக்கம் ‘நிலை ஆணைகளுக்கு எதிரான ஒன்று’

பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரனுக்கு  நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாத இடைநீக்கம் என்பது “அதிகப்படியான” ஒன்று எனவும் அது நிலை ஆணைகளை மீறிய ஒன்று எனவும் சுதந்திரத்துக்குக் குரல்கொடுக்கும் வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியுள்ளது. சுரேந்திரன் அவருக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துகளால் ஆத்திரமடைந்திருந்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா (வலம்) “சுய-நல”…

வீ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை மசீச இளைஞர்கள் விரும்புகிறார்கள்

மசீச இளைஞர் பகுதியின் மத்திய செயல்குழு, அதன் தலைவர் வீ கா சியோங்கும் துணைத் தலைவர் மா ஹங் சூன்னும் முறையே துணைத் தலைவர், உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட வேண்டும் என ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. “மசீசவுக்கு இளம் இரத்தம் தேவை என்று முடிவுசெய்து மத்திய செயல்குழுவினர் என்னையும்…

ஜப்பானிய நிறுவனம் பினாங்கில் ரிம1.3 பில்லியன் முதலீடு

உலகம் முழுவதும் பொருளாதாரம் சற்று சுணக்கம் கண்டுவரும் வேளையில் ஜப்பானிய நிறுவனமொன்று பினாங்கில் ரிம1.3 பில்லியன் முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறது. அதன் பயனாக அடுத்த ஆண்டில் 1,500 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே மலேசியாவில் செயல்பட்டுவரும் இபிடென் எலக்ட்ரோனிக்ஸ் மலேசியா என்னும் நிறுவனம், பினாங்கு அறிவியல்…

அம்னோ பேர்வழியின் இனவாதத்துக்கு கெராக்கான் கண்டனம்

கெராக்கான் உதவித் தலைவர் அஷாருடின் அஹ்மட், “மலாய்க்காரர்களின் கருணையைச் சாதகமாக்கிக்கொண்டு”  என்ன வேண்டுமானாலும் பேசலாம் என சீனர்களும் இந்தியர்களும் நினைக்கக்கூடாது என்று கூறியுள்ள அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹப்ஷியைச்  சாடினார். சைட் அலியின் “இனவாதமும் இனச்சார்பான பேச்சும் கோணங்கித்தனமானது, பொறுத்துக்கொள்ள முடியாதது”, என அஷாருடின்…

ஓராங் ஆஸ்லிகளை இழிவுபடுத்திய பூங்கா அதிகாரி மன்னிப்பு கேட்டார்

பகாங் வனவிலங்கு தேசியப் பூங்கா காப்புத்துறை அதிகாரி ஒருவர், ஓராங் அஸ்லிகள் சமூகத்தினர் “சுற்றித்திரியும் விலங்குகள்”போல் நடந்துகொள்ளக் கூடாது என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஹசான்  காசிம், என்னும் அந்த அதிகாரி முகநூலில்,  ஓராங் அஸ்லிகள் “விலங்குகள்”போல் நடந்துகொள்ளக் கூடாது என்றும் “காடுகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்குத்தான் கானகம் அவற்றின்…

ரிம270 மில்லியன் செலவிட்டும் பள்ளிகளில் ஆங்கிலமொழி தரம் உயரவில்லை

யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள், மாணவர்களின் ஆங்கிலமொழி தரம் தாழ்ந்து போயிருப்பதைக் காண்பிக்கின்றன. அப்படியானால்,  பள்ளிகளில் ஆங்கிலமொழி தரத்தை  உயர்த்த  ஆலோசகர்களுக்கு ரிம270 மில்லியன்  செலவிடப்பட்டதே,  அது என்னவானது என்று  கேள்வி  எழுப்புகிறார்  புக்கிட் பெண்டேரா எம்பி ஜைரில் கீர் ஜொஹாரி. மூன்றாண்டுகளாக ஆலோசகர்களை அமர்த்தி அவர்களின்  அறிவுரைகளுக்காக பெரும்தொகை…

சிறப்புத் தூதர்களின் சம்பளத்தைக் குறைக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

முன்பு அமைச்சர்களாக இருந்து இப்போது சிறப்புத் தூதர்களாக உள்ள மூவருக்கு வழங்கப்படும் அதிகப்படியான சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றம் தள்ளுபடி செய்தது. சிறப்புத் தூதர்களாக இருக்கும் அந்த மூவர்- முன்னாள் ரொம்பின் எம்பி ஜமாலுடின் ஜர்ஜிஸ்(அமெரிக்கா), மசீச முன்னாள் தலைவர் ஒங் கா திங்…

செர்டாங் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஐசியு பகுதியில் உட்கூரை இடிந்து விழுந்தது

செர்டாங் மருத்துவமனையில் உட்கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. கடந்த மூன்றாண்டுகளில் நான்காவது தடவையாக இப்படி நிகழ்ந்துள்ளது. இந்தத் தடவை, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர கவனிப்புப் பகுதியில் உட்கூரையிலிருந்து சில மரத்துண்டுகள் விழுந்ததாக ஹரியான் மெட்ரோ அறிவித்துள்ளது. சம்பவம் அதிகாலை மணி 1.30க்கு நிகழ்ந்ததாக மருத்துவமனை இயக்குனர்…

அம்னோவுக்காக மாணவர்கள் ‘கோணல்’ வரலாற்றில் தேர்ச்சிபெற வேண்டியுள்ளது

எஸ்பிஎம் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சிபெறுவதைக் கட்டாயமாக்கியதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக Kempen Sejarah Sebenar Malaysia (KemSMS) கருதுகிறது. அதனால்  மோசமான விளைவுகள் நேரலாம் என KemSMS தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம் எச்சரித்தார். “வரலாற்றுப் பாடத்தில் அரசியலைப் புகுத்துவது இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் ஒற்றுமையையும்…