எம்பி: ‘கேப்டன்’ நஜிப் எல்லா நோக்கங்களையும் மறந்து விட்டார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'அம்னோ தீவிரவாதிகளுக்கு அமைதியாக விட்டுக்  கொடுக்காமல்' 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தாம் வாக்குறுதி  அளித்த சீர்திருத்தங்களை நிறைவேற்றும் துணிச்சலைப் பெற வேண்டும் என  பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். "நமது பிரதமர் எங்கே என மலேசியர்கள்…

சிறப்பான தேர்ச்சிதான் ஆனாலும் இடமில்லை

உங்கள் கருத்து  ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, மலேசியாவில் கெட்டிக்கார, அறிவார்ந்த, நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தண்டிக்கப்படுவதை நினைத்தால்’ கமலநாதனைச் சாடுகிறார் மஇகா பொருளாளர் தேவதூதன்: மஇகா பொருளாளர் ஜஸ்பால் சிங் அவர்களே, உங்களில் ஒருவரையே கேள்வி கேட்கிறீர்களே. துணிச்சலான ஆளய்யா, நீங்கள். முந்தைய…

எல்லா நாகரீகங்களையும் படிக்க வேண்டும் என்கிறார் ஆயர்

தனியார் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய ஆசிய நாகரீக ஆய்வியல் பாடத்தைக்  கட்டாயமாக்கும் நடவடிக்கை, 'இந்த உலகில் சிறந்த சிந்தனைகளையும்  நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் முயற்சியில் குறுகிய நோக்கம் கொண்டது'  என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கூறுகிறார். "மனித நாகரீகத்துக்கு மதிப்பைத் தந்துள்ள பல அம்சங்களை…

பெர்சே 4.0 – அம்பிகா, அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்

'எனக்கு வயது 72. பெர்சே 3.0ல் நான் என் நண்பர்களுடன் கலந்து கொண்டேன்.  பெர்சே 4.0 நடத்தப்பட்டால் அதிலும் நான் இருப்பேன். மடிவதற்கு அன்றைய  தினம் நல்ல நாளாகும்' இசி தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணயத்தை தன் விருப்பம் போல செய்ய  முயன்றால் பெர்சே 4.0 சிகியூ…

பிகேஆர்: குகன் வழக்கில் அரசாங்க முறையீடு ‘மனிதநேயமற்றது’

தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த ஏ குகனின் தாயார்  போலீசாருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு அரசாங்கம் முறையீடு செய்து  கொண்டுள்ளது 'மனிதநேயமற்றது' என பிகேஆர் வருணித்துள்ளது. தமது புதல்வருக்கு நீதி கேட்டு வாதியான என் இந்திரா நான்கு…

மசீச: ஒரே மதத்தை மட்டும் படிப்பது இன உறவுகளுக்குப் பாதகமாக…

ஒரே ஒரு சமயத்தை பற்றி மட்டும் படிக்குமாறு மாணவர்களைக்  கட்டாயப்படுத்துவது இன உறவுகளுக்கு பாதகமாக அமையும் என மசீச மகளிர்  பிரிவு உதவித் தலைவி ஹெங் சியா கீ கூறுகிறார். தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இஸ்லாமிய ஆசிய நாகரீகம் என்னும்  பாடத்தைக் கட்டாயமாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பற்றி…

தேச நிந்தனைச் சட்டத்தை புதிய வடிவத்தில் கொடுங்கள் என்கிறார் முன்னாள்…

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் புதிய சட்டத்தைக்  கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தினால் 'பழைய கள்ளை புதிய  மொந்தையில்' (it should still put old wine in a new bottle) என்பது போல அதனைக் கொடுக்க  வேண்டும் என முன்னாள்…

ஏமாற்றியது மஇகா! ஏமாந்தது இந்திய மாணவர்கள்!

-மு. குலசேகரன், ஜூலை 14, 2013.   கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வருட மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்களுக்கான 1500 இடங்களை பூர்த்தி செய்துவிடுமாறு பிரதமர் கட்டளையிட்டதாக அறிகிறோம்.   தேர்தல் முடிந்து ஏறக்குறைய 8 அமைச்சரவைக் கூட்டங்கள் கூட்டப்பட்டு இப்பொழுதுதான் முதன் முதலாக இந்திய…

‘முதலில் கொள்ளையடித்ததை திருப்பிக் கொடுக்குமாறு ரசாக் பகிந்தாவிடம் சொல்லலாம்’

"ரொவெனா, நீங்கள் பெரும்பான்மையோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனச்  சொல்வதால் நேர்மையற்ற வழியில் கிடைத்த ஆதாயத்தைத் திருப்பிக்  கொடுக்குமாறு அந்த ரசாக் பகிந்தாவுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்" இனம் மீது அரசு சாரா அமைப்புடன் ரசாக் பகிந்தாவின் புதல்வி வாக்குவாதம் விஜய்47: ரொவெனா ரசாக்கின் தகுதிகள் எதுவாக இருந்தாலும்…

‘அல்லாஹ்’ கருத்து தொடர்பில் மரினோவை ஜமில் கிர் கண்டிக்கிறார்

'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது மலேசியாவுக்கான வத்திகன்  தூதர் பேராயர் ஜோசப் மரினோ அறிக்கை விடுத்திருக்கக் கூடாது என பிரதமர்  துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹ்ரோம் சொல்கிறார். அந்த அறிக்கை பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி விட்டது என்றும்  அது தேசிய ஒற்றுமையைப் பாதிக்கக் கூடும்…

‘IPCMC குறித்து பெரும்பான்மை போலீஸ்காரர்கள் அஞ்சவில்லை’

IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை  ஆணையத்தை அமைப்பது பற்றி போலீஸ்காரர்களில் பெரும்பாலோர் கவலைப்படவில்லை என கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள்  தலைவர் மாட் ஜைன் இப்ராஹிம் சொல்கிறார். IPCMC பற்றி உண்மையில் அதிகம் கவலைப்படுகின்றவர்கள் முன்னாள் தேசியப்  போலீஸ் படைத் தலைவர் மூசா…

மெட்ரிகுலேஷன் இன்னமும் பூமிபுத்ராக்களுக்குதான்!

அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த கல்வி அமைச்சர் , மெட்ரிகுலேஷன் இன்னமும் பூமிபுத்ராக்களுக்குதான் என்று குறிப்பிட்டுள்ளார் என்கிறார் கா. ஆறுமுகம். 1998-ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் கல்வி அமைச்சால் தொடங்கப்பட்ட இந்த மெட்ரிகுலேஷன் திட்டம் பூமிபுத்ரா மாணவர்களுக்கானது. அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் அறிவியல், தொழில்நுட்பம்…

கோபிந்த் விடுத்த சவாலை வான் ஜுனாய்டி நிராகரித்தார்

IPCMC என்ற போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம்  குறித்து விவாதம் நடத்த வருமாறு பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ விடுத்த  சவாலை உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபார் வெறும்  கால விரயம் என அதனை நிராகரித்துள்ளார். அந்த ஆணையத்தை…

இனம் மீது ரசாக் பகிந்தாவின் புதல்வி அரசு சாரா அமைப்புடன்…

அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பகிந்தாவின் புதல்வி ரொவெனா, இனம்,  தேர்தல் சீர்திருத்தங்கள் மீது Tindak Malaysia தலைவர் வோங் பியாங் யாவ்-உடன்  வாக்குவாதத்தில் இன்று ஈடுபட்டார். வோங், கோலாலம்பூரில் வழக்குரைஞர் மன்றத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி  தாம் சமர்பித்த கட்டுரையில் இன விஷயத்தைக் குறிப்பிடாதது குறித்து ரொவெனா…

பாஸ்: கோலா பெசுட் புறக்கணிக்கப்பட்டுள்ளது

கோலா பெசுட் மக்கள் பிஎன் அரசாங்க உதவியை எப்போதும் சார்ந்திருக்கும்  பொருட்டு அவர்கள் ஏழைகளாகவே வைத்திருக்கப்படுகின்றனர் எனப் பாஸ்  தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறுகிறார். அந்தத் தொகுதியில் 1979ல் இடைத் தேர்தல் நிகழ்ந்த போது தாம் பாஸ் தேர்தல்  இயக்குநராக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு பின்னர்…

டாக்டர் மகாதீர்: TPPA நமது கால்களையும் கைகளையும் கட்டிப் போட்டு…

TPPA என்ற பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம் ஏற்றத்தாழ்வானது என்றும் அது  மலேசியாவுக்கு நன்மையைத் தராது என்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் எச்சரித்துள்ளார். TPPA ஏற்றத்தாழ்வான பங்காளித்துவம் என வருணித்த அவர், மலேசியாவுக்கு  பாதகமான ஏற்பாடுகளே கிடைக்கும் என்றார். "கடந்த காலத்தில் நமது பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாட்டைப்…

ஷாஹிடான் எந்த மை விநியோகிப்பாளரை நீங்கள் பாதுக்காக்கின்றீர்கள் ?

"மை விநியோகிப்பாளரை ரகசியமாக வைத்திருந்து எதிர்காலத்தில் பயன்படுத்த  'சேவகர் காரணம்' இல்லாத வரையில் அவரது பெயரை வெளியிடுவதில் என்ன  தவறு ?" அழியா மை விநியோகிப்பாளர் பெயர் ரகசியமாக வைத்திருக்கப்படுவதை அமைச்சர் ஆதரிக்கிறார் டுடெனோ: மினி மார்க்கெட்டில் 'உணவுப் பொருளில் சேர்க்கப்படும் அந்த சாயம்'  கிடைக்கும் போது மக்கள்…

2-ஆம் நாளிலேயே களைத்துப் போனார் பாஸ் வேட்பாளர்

கோலா பெசுட் இடைத் தேர்தல். 2-ஆம் நாள் பாஸ் வேட்பாளர் அஸ்லான் யூசுப் பரப்புரையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்.  இன்று காலை அவர் கோலா பெசுட் மார்க்கெட்டுக்குச் சென்று வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் சந்தித்தார். ஆனால்,ஊடகங்களைக்  தவிர்த்தார். களைப்பாக இருப்பதாகக் கூறினார். “நீங்களும் வேட்பாளராக இருந்தால், உங்களுக்கும் இப்படித்தான் இருக்கும்”,…

முஸ்லிம் என்ஜிஓ-களின் எதிர்வினை கண்டு ஆயர் அதிர்ச்சி

உள்ளூர் தேவாலயங்கள் அவற்றின் சமயக் கல்வியிலும் வழிபாட்டிலும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நடத்திவரும் பரப்புரைக்கு மலேசியாவுக்கான வத்திகன் தூதர் ஜோசப் மரினோ தெரிவித்துள்ள ஆதரவுக்கெதிராக சில முஸ்லிம் என்ஜிஓ-கள் கொதித்து எழுந்திருப்பது கண்டு கத்தோலிக்க ஆயர்  டாக்டர் பால் டான் சீ  இங்(இடம்)…

பிகேஆர் குற்றச்சாட்டை மறுக்கிறது பினாங்கு எம்ஏசிசி

பினாங்கில் பொதுத் தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்டதாக புகார் செய்த வேட்பாளர்களில் எவரும் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படவில்லை என  பிகேஆர் சுமத்திய குற்றச்சாட்டை பினாங்கின் மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மறுத்துள்ளது. முன்னாள் பினாங்கு சட்டமன்றத் தலைவரும் தெலோக் பாகாங் வேட்பாளருமான அப்துல் ஹலிம் உள்பட,…

மலேசியாவில் உள்ள வத்திகன் அலுவலகம் மூடப்பட வேண்டும் என பெர்க்காசா,…

கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான தமது  அறிக்கையை மலேசியாவில் உள்ள வத்திகன் பேராளர் ஒரு வாரத்துக்குள் மீட்டுக்  கொள்ளா விட்டால் இங்குள்ள அவருடைய அலுவலகத்தை மூடுமாறு இரண்டு  மலாய் உரிமைப் போராட்ட அமைப்புக்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக்  கேட்டுக் கொண்டுள்ளன. இறைவனைக் குறிப்பதற்கு கிறிஸ்துவர்கள்…

‘மலேசியாவிலிருந்து வத்திகன் பேராளரைத் துரத்துங்கள்’ என அரசாங்கத்துக்கு வேண்டுகோள்

'இந்த நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களில்' தலையிட்டதற்காக மலேசியாவுக்கான  வத்திகன் தூதரை 'துரத்துமாறு' மலாய் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்களின்  கூட்டணி ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. 'அல்லாஹ்' என்னும் சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்துவதற்கு பேராயர்  ஜோசப் மரினோ அங்கீகாரம் அளித்துள்ளது, தூதருக்கு 'கெட்ட நோக்கம்'  உள்ளதை நிரூபிப்பதாக மலேசிய…

ரியாவ் காட்டுத் தீ-க்கு மலேசிய நிறுவனம் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது

ரியாவ் மாநிலத்தில் தோட்டங்களை உருவாக்குவதற்கு நிலத்தைத் துப்புரவு  செய்வதற்கு காட்டுத் தீ மூட்டப்பட்டதில் சந்தேகத்துக்குரிய நிறுவனம் என  மலேசிய நிறுவனம் ஒன்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ரியாவ் மாநிலத்தில் தனக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைப் பகுதியில் அந்த மலேசிய  நிறுவனம் பொறுப்பற்ற முறையில் எரியூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக  இந்தோனிசிய தேசியப் போலீஸ்…