மறைந்த ஜஹாரிஃப் அஃபெண்டி ஜாம்ரியை அதிவேகத்தில் பின் தொடர்வது அப்பலியின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதை நஸ்ரி அப்துல் ரசாக் அறிந்திருந்தார் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் கூறுகிறார் 2023, டிசம்பர் 15 அன்று காலை 11.45 மணிக்கும் பிற்பகல் 12.32 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், ஈப்போவில் உள்ள எஸ்.எம்.கே…
ஹசான் அலி: வத்திகன் பேராளர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது போதாது
நீடித்து வரும் அல்லாஹ் விவகாரம் மீது தாம் வெளியிட்ட கருத்துக்காக வத்திகன் பேராளர் பேராயர் ஜோசப் மரினோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டது போதாது என ஜாத்தி தலைவர் ஹசான் அலி சொல்கிறார். காரணம் அது முஸ்லிகளுடைய ஆத்திரத்தையும் மகிழ்ச்சியின்மையையும் நிறுத்தவில்லை என்றார் அவர். இந்த நாட்டில் கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்'…
‘முஸ்லிம் மக்கள்தொகையைப் பெருக்க அம்னோ திட்டமிட்டு வேலை செய்தது’
சாபாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்குத் திட்டமிட்டு வேலை நடந்துள்ளதாக ஸ்டார் கட்சித் தலைவர் ஜெஃப்ரி கிட்டிங்கான் சாபா மீதான அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) த்திடம் இன்று கூறினார். சாபாவுக்குள் அம்னோ நுழைவதற்கு வசதியாக அதை முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக்குவதுதான் அதன் நோக்கமாகும் என்று ஜெஃப்ரி தெரிவித்தார். “1963-இல்…
பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரிம44 மில்லியன்
கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் பரிவாரத்துடன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரிம 44 மில்லியன் செலவிடப்பட்டிருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. இது, 2008, மார்ச் மாதத்திலிருந்து 2013-வரை மேற்கொள்ளப்பட்ட பயணங்களுக்கான செலவுத்தொகை என தைப்பிங் டிஏபி எம்பி இங்கா கொர் மிங்-கின் கேள்விக்கு எழுத்து…
மகாதிர்: சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதே டிபிபிஏ-இன் நோக்கம்
ட்ரேன்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்தின்வழி வலிய நாடுகள் எளிய நாடுகளைக் கட்டுப்படுத்த முயல்வதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். “அது, பலவீனமான நாடுகளின் சந்தைக்குள் ஊடுருவி எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவை மேற்கொள்ளும் இன்னொரு வகை முயற்சியாகும். “படைவலிமையால் உலகைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கும் அவை…
பெர்காசா: மன்னிப்பு தேவையில்லை; நடவடிக்கையே தேவை
வலைப்பதிவர்கள் அலிவின் டானும் விவியான் லீயும் மன்னிப்பு தெரிவிப்பதைப் புறந்தள்ளும் பெர்காசா அவ்விருவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறது. “முதலில் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அங்கு வேண்டுமானால் அவர்கள் மன்னிப்பு கேட்கலாம்”, என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
அந்நியர்களிடம் ‘வியாபாரத்தை இழப்பது’ மீது உள்ளூர் வணிகர்கள் ஆட்சேபம்
இந்த நாட்டில் அந்நியர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கும் அரசாங்கக் கொள்கைக்கு எதிராக பினாங்கிலும் சிலாங்கூரிலும் இன்று நூற்றுக்கணக்கான வணிகர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். கிள்ளானில் உள்ள லிட்டில் இந்தியாவில் 250க்கும் மேற்பட்ட மலேசிய இந்திய வணிகர்கள் இன்று காலை ஒன்று திரண்டு ஆட்சேபத்தை தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஏந்திக் கொண்டு…
பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவர்களுக்காக அமைச்சரவை தலையிடும்
பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தை அமைச்சரவை இந்த வாரம் விவாதித்து அந்த மாணவர்களுக்கு உதவும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். "பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காததால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளது எனக்குத் தெரியும். ஆனால் மனம் தளர வேண்டாம். அந்த மாணவர்களுக்கு எந்த…
சாப்ரி உரிமைகள் குழுவுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என பிகேஆர்…
அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான ஆர்டிஎம் 'பாரபட்சம் காட்டுவதில்லை' எனக் கூறியதற்காக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாப்ரி சிக் நாடாளுமன்றத்தின் உரிமைகள், சலுகைகள் குழுவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை பாடாங் செராய் எம்பி என் சுரேந்திரன் சமர்பித்துள்ளார். ஆர்டிஎம் மீது மக்களவையில் சாப்ரி வாய்மொழியாக அளித்த பதில்…
டிஏபி: மலாயன் ரயில்வேயின் தானியங்கி கட்டண வசூலிப்பு முறை எங்கே…
கேடிஎம் பெர்ஹாட் என்ற மலாயன் ரயில்வே-க்காக 85 மில்லியன் ரிங்கிட் செலவில் அமலாக்கப்படவிருந்த தானியங்கி கட்டண வசூலிப்பு முறை இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை என டிஏபி எம்பி டோனி புவா கூறியுள்ளார். அதனால் அந்தத் திட்டத்துக்குப் பொறுப்பான தரப்புக்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என…
அன்வார் அயல்நாடுகளில் கணக்கு வைத்திருப்பதாகக் கூறிய எம்பி-க்கு எதிராக நடவடிக்கை?
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அயல்நாடுகளில் கணக்கு வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்திய சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் டெக் மெங் (இடம்), நாடாளுமன்றத்தின் உரிமை மற்றும் சலுகைக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்படுவாரா என்பது விரைவில் தெரியவரும். அவ்விவகாரம்மீது வியாழக்கிழமை விவாதிக்கப்படும் என மக்களவைத் தலைவர் தம்மிடம் தெரிவித்திருப்பதாக…
மாச்சாங்மீதான பிகேஆரின் தேர்தல் மனு தள்ளுபடி
தேர்தல் நீதிமன்றம், மே 5 பொதுத் தேர்தலில் மாச்சாங்கில் பாரிசான் நேசனலின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி பிகேஆர் செய்துகொண்டிருந்த தேர்தல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரர் 1954 தேர்தல் முறையீட்டு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறிய நீதிபதி ஜமானி அப்துல் ரஹிம் செலவுத் தொகையுடன்…
பேராசிரியர் :டிபிபிஏ மலேசியாவை அமெரிக்காவின் ‘அடிமையாக்கிவிடும்’
ட்ரேன்ஸ் பசிபிக் பார்ட்னர்சிப் ஒப்பந்தம் (டிபிபிஏ) ஒரு புதுவகை நவகாலனித்துவம் என்று கூறும் மலேசிய யுனிவர்சிடி கெபாங்சான் பேராசிரியர் ஆகுஸ் யூசுப் அதன் விளைவாக மலேசியா அமெரிக்காவுக்கு அடிமையாகும் நிலை உருவாகலாம் என்று எச்சரிக்கிறார். அது குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் எச்சரித்திருப்பதை ஆகுஸ் தம்…
மாணவியை ‘விபசாரி’ என்று ஏசினாராம் ஆசிரியர்
கட்டொழுங்கு ஆசிரியர் ஒருவர் தொடக்கப் பள்ளி மாணவியை விபசாரி என்று திட்டியதாகக் கூறப்படுவதை விசாரிக்குமாறு மலாக்கா கல்வித் துறை பணிக்கப்பட்டிருப்பதாக கல்வி துணை அமைச்சர் மேரி யாப் கூறினார். அச்சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்துள்ள மலாக்கா, பத்து பிரண்டாமைச் சேர்ந்த அந்த 12-வயது மாணவி, ஓர் ஆசிரியை…
பங், செக்ஸ் வலைப்பதிவாளர்களுடைய பதிவுக்கு டிஏபி மீது பழி போடுகிறார்
அல்வின் தான், விவியன் லீ என்ற இரு செக்ஸ் வலைப்பதிவாளர்கள் முகநூலில் சேர்த்த இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாக கருதப்படும் பதிவுக்குப் பின்னணியில் டிஏபி இருப்பதாக மக்களவையில் பிஎன் கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ராடின் சொன்னதும் அவையில் குழப்பம் ஏற்பட்டது. அந்த வலைப்பதிவாளர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனக்…
தர்மேந்திரன் கொலையில் சந்தேகத்துக்குரிய நாலாவது நபரைத் தேடும் முயற்சி தொடர்கிறது
போலீசார், தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் நாலாவது நபரை இன்னமும் தேடி வருவதாகக் கூறுகின்றனர். மே 22-இல் போலீஸ் காவலில் நிகழ்ந்த தர்மேந்திரனின் மரணம் தொடர்பில் மூன்று போலீஸ் அதிகாரிகள்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாலாமவர் தப்பி ஓடிவிட்டார். அவர் தலைமறைவாகி 41 நாள்கள் ஆகின்றன. அவரை இன்னமும் தேடிவருவதாக…
அன்வார் பெரித்தா ஹரியான் மீது ‘அவதூறு’ வழக்குப் போடுவார்
505 கறுப்பு தினப் பேரணிகளுக்கு பக்காத்தான் ராக்யாட் அந்நிய நிதிகளைப் பெறுவதாக கூறப்பட்டதின் தொடர்பில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் பெரித்தா ஹரியான் நாளேடு மீது 'அவதூறு' வழக்குப் போடவிருக்கிறார். முன்னாள் இந்தோனிசிய அதிபர் யூசோப் கல்லாவை மேற்கோள் காட்டி பெரித்தா ஹரியான் வெளியிட்ட அந்தச் செய்தியை பிஎன்…
டிபிபிஏ-இல் கையொப்பமிட்டால் ஆர்ப்பாட்டம் செய்வோம்: பிஎஸ்எம் எச்சரிக்கை
அரசாங்கம், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் ட்ரேன்ஸ் பசிபிக் பார்ட்னர்சிப் ஒப்பந்தத்தில் (டிபிபிஏ) கையொப்பமிட்டால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்) எச்சரித்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காகூட காங்கிரசில் அது பற்றி விவாதித்திருக்கிறது. ஆனால், மலேசியா அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றிய…
தேசிய நல்லிணக்கச் சட்ட வரைவு ‘மத்திய கட்டத்தில்’
1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் அறிமுகம் செய்யப்படும் தேசிய நல்லிணக்கச் சட்ட வரைவு 'மத்திய கட்டத்தில் இருப்பதாக சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். "முதல், இரண்டாம், மூன்றாம் கட்டம் மரணம் நான்காம் கட்டம் எனச் சொல்வதற்கு சட்ட வரைவு என்பது புற்று…
தடுப்புக்காவல் சட்டத்தை நிராகரிக்கிறார் ஏஜி
சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், தடுப்புக்காவலில் வைக்க வகை செய்யும் புதிய சட்டம் உருவாக்கப்படுவதை ஆதரிக்கவில்லை. இதை இன்று வலியுறுத்திய அப்துல் கனி(நடுவில் இருப்பவர்) , உள்துறை அமைச்சிடமிருந்தோ வேறு அரசாங்க அமைப்புக்களிடமிருந்தோ அவசரகாலச் சட்ட(இஓ) த்துக்குப் பதிலாக தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கும் புதிய சட்டத்தின் வரைவையோ…
சுலு ஊடுருவலுக்கு இரண்டு வாரம் முன்னதாக அது பற்றி மாவட்ட…
இவ்வாண்டு தொடக்கத்தில் சுலு துப்பாக்கிக்காரர்கள் மேற்கொண்ட ஊடுருவலுக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக அவர்கள் அதற்குத் திட்டமிடுவதாக உள்ளூர் போலீசார் தமக்குத் தகவல் கொடுத்ததாக லஹாட் டத்து மாவட்ட அதிகாரி சுல்கிப்லி நாசிர் கூறிக் கொண்டுள்ளார். ஆனால் அதனை ரகசியமாக வைத்திருக்குமாறு தமக்குக் கூறப்பட்டதாக சபா கள்ளக் குடியேறிகள் மீதான…
பிஎன் மீண்டும் மீண்டும் மலாய்க்காரர் அல்லாதார் பூச்சாண்டியைக் காட்டுகின்றது
'கர்பால் சிங் நாட்டின் 'அதிபராகி' விடுவார் எனக் கூறிக் கொள்வதின் மூலம் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கல்வியறிவற்ற கிராமப்புற மலாய்க்காரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார்.' பாஸ் வெற்றி பெற்றால் கர்பால் அதிபர் ஆவார் என கோலா பெசுட் மக்களுக்கு கூறப்பட்டுள்ளது வெறும் பேச்சு வேண்டாம்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,…
‘ஒ நஜிப் உங்கள் வலிமை எங்கே போனது ?’
"நஜிப் தீவிரவாதிகள், எஜமானரும் பொம்மலாட்டக்காரருமான மகாதீர் ஆகியோரது விருப்பங்களுக்கு எதிராக செயல்பட முடியாது. இல்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார்" எம்பி: 'கேப்டன்' எல்லா நோக்கங்களையும் மறந்து விட்டார் ஒடின்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆழமில்லாதவர், முதுகெலும்பு இல்லாதவர், பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றவர் என்பது தான் பிரச்னை. அவர்…
‘IPCMC அரசமைப்புக்கு ஏற்ப அமைகிறது’
IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைக்கும் யோசனை கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்ப உள்ளதாக முன்னாள் தலைமை நீதிபதி முகமட் ஜைடின் அப்துல்லா கூறுகிறார். அவர் IPCMC, கூட்டரசு அரசமைப்பின் கீழ் சட்டப்பூர்வமானது என்பதற்கு 140வது பிரிவைச் சுட்டிக்காட்டினார். அரச மலேசியப் போலீஸ்…


