சட்டத்துறைத் தலைவர்: BR1M லஞ்சம் அல்ல

பிஎன் பராமரிப்பு அரசாங்கம் BR1M என்ற ஒரே மலேசியா உதவித் தொகை போன்றவற்றை வழங்குவது லஞ்சம் அல்ல. ஏனெனில் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். 10வது மலேசியத் திட்டம், 2013ம்…

அரசியல் விவாத அரங்கிற்கான இடம் கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டது

அரசியல் களத்தில் இரு புறமும் உள்ளவர்களை சொற்பொழிவாளர்களாகக் கொண்ட ஒர் அரசியல் விவாத  அரங்கம் நிகழ்வதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் வேளையில் அதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்த இடம்  மறுக்கப்பட்டுள்ளது. CPPS எனப்படும் பொது, கொள்கை ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்துள்ள அந்த விவாதம் நிகழ்வதற்கு அனுமதிப்பதில்லை எனக் கோலாலம்பூரில்…

‘பிஎன் சொன்னால் பாராட்டு, டிஏபி சொன்னால் பொல்லாப்பு’

உங்கள் கருத்து : ‘பக்காத்தான், இண்ட்ராபின் செயல்திட்டத்தில் உள்ளதை எடுத்துக்கொண்டால் அது கருத்தைத் திருடிக்கொண்டது என்பார்கள். அதையே பிஎன் செய்தால் இணைத்துக்கொண்டது என்பார்கள்’ பிஎன் எங்கள் கோரிக்கைகள் சிலவற்றைத் தத்தெடுத்துக்கொண்டது என்கிறது இண்ட்ராப் குய்கோன்போண்ட்: இண்ட்ராப் அதன் கோரிக்கைகளை பிஎன் “பரிசீலிப்பதாக”க் கூறியதும் மகிழ்ச்சி அடைவதும் அதே வேளை…

பிஎன் பத்து நடவடிக்கை மையத் திறப்பு விழாவில் தகவல் துறை…

நேற்று நடைபெற்ற கோலாலம்பூர் பத்து நாடாளுமன்றத் தொகுதி பிஎன் தேர்தல் தளபத்திய மையத்தின் திறப்பு விழாவுக்கு  உதவியாக தகவல் துறைக்குச் சொந்தமான மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்க எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்…

24 மில்லியன் ரிங்கிட் வைர மோதிர தொடர்கதை: கற்பனையைக் காட்டிலும்…

"அது ஜேக்கப் அண்ட் கோ-வுக்கு வியாபாரம். ஆனால் அது விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வமும்  அவற்றைப் பொதுச் செலவில் பயன்படுத்தும் ஆர்வமும் கொண்ட பிரமுகர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகும்' 24 மில்லியன் ரிங்கிட் வைர மோதிரம் ரோஸ்மாவுக்காக அல்ல என்கிறார் அமெரிக்க நகை வியாபாரி பெர்ட் தான்: அந்த விவகாரம்…

பிரதமர் நஜிப் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்று நிருபிக்கத் தவறி விட்டார்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 7, 2013. நேற்று  மாலை புக்கிட் ஜாலில் புத்ரா அரங்கில் பாரிசான் நேஷனல் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர் நஜிப் தனது உரையின் இறுதியில் தனது சொந்தக் கட்சிக்காரர்களைப் பார்த்து  யாரை நம்புகிறீர்கள், இந்நாட்டின் பிரதமராக வர நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் அவரா, அன்வாரா…

தியான் சுவா சபாவுக்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் இன்று  காலை கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் தரையிறங்கியதும் குடிநுழைவு அதிகாரிகள் அவரைத் தடுத்து  வைத்து தீவகற்ப மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பினர். "இன்று காலை மணி அளவில் கோத்தா கினாபாலுவில் இறங்கினேன். குடிநுழைவுத் துறை…

“டாக்டர் மகாதீர் இப்ராஹிம் அலிக்கு அளிக்கும் ஆதரவு அவருக்கு ‘பாதகமானது’

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியை பகிரங்கமாக அங்கீகரித்ததின் மூலம் முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் 'தமக்கும் தமது கடந்த காலத்திற்கும் பாதகத்தை' ஏற்படுத்தியுள்ளதாக பிகேஆர் உதவித்  தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியிருக்கிறார். தமது மலாய் மேலாண்மை எண்ணங்கள் மூலம் இந்த நாட்டில் இனப் பதற்றத்தைத் தூண்டுவதாக…

லைனாஸ் மீது நிபுணர் குழு அமைக்கப்பட்டது

பாகாங் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு தொழில் கூடத்தின் நடவடிக்கைகளைக்  கண்காணிக்க நிபுணர் குழு ஒன்றை அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு அமைத்துள்ளது. அந்த அரிய மண் சுத்திகரிப்பு தொழில் கூடத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு அனுமதிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளை அது பூர்த்தி செய்வதை அந்தக்…

நஜிப்பின் சிலாங்கூர் பணிப்படைக்கு இலவசத் தலைக்கவசங்கள்

சிலாங்கூரில் பிஎன் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்களை அதிகரிக்கும் பொருட்டு சிலாங்கூரில் உள்ள 22,000   இளைஞர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் மோட்டார் கைக்கிள் தலைக்கவசங்களை  வழங்கியுள்ளார். அந்தத் தலைக்கவசத்தின் முன்புறத்தில் 'IM4U' என எழுதப்பட்டுள்ளது. பின்புறத்தில் பிஎன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தத் தலைக்கவசங்களை விநியோகம் செய்வதற்கு Kelab…

கூடுதல் பணம் கிடைக்கும், எங்களுக்கு வாக்களியுங்கள், பின் கூறுகிறது

பிஎன்-னுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று இன்று புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெற்ற அதன் ஆதரவாளர்கல் கூட்டத்தில் பாரிசான் மலேசியர்களிடம் கூறியது. இன்று வெளியிடப்பட்ட அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் மாதம் ரிம3,000 க்கும் குறைவான மாத வருமானம் ஈட்டும் குடும்பம் ஒன்றுக்கு…

பக்கத்தானில் இந்தியர்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?

  நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு விட்டன. தேர்தல் ஆணையம் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவிருக்கும் கூட்டத்தில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அதன் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கும். ஆக, அனைத்தும் பொதுத் தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. 13 ஆம் பொதுத் தேர்தலில் மோத விருக்கும் பாரிசான் மற்றும் பக்கத்தான் கூட்டணிகள்…

லிம் குவான் எங்: தாயிப்பை நஜிப் தொடர்ந்து வைத்திருந்தால் எம்ஏசிசி…

Global Witness வீடியோ தகவல் தொடர்பில் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு  ஒத்துழைக்க மறுக்கும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பதவி துறக்க வேண்டும் என பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக் கோரவேண்டும். இல்லை என்றால் தனது கடமைகளைச் செய்யத் தவறியதற்காக அந்த…

‘வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்’ விவகாரம் தொடர்பில் சாமிவேலு,பழனிவேல் மீது…

முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு, 'வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்' என்னும் விவாகரம் தொடர்பில்  கட்சித் தலைவர் ஜி பழினிவேல் மீதும் துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் மீதும் அவர் ஆத்திரமடைந்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்தன்று-புதன் கிழமை- சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கு தாம் 'வெற்றி பெறக்…

பக்காத்தானின் இரகசியங்களை அம்பலப்படுத்தி நாட்டையே ‘அதிரவைக்க’ப் போகிறாராம் இப்ராகிம் அலி

பக்காத்தான் தலைவர்களின்  சொத்துக்கள் தொடர்பில் இரண்டு இரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாகக் கூறிய பெர்காசா தலைவர்  இப்ராகிம் அலி,   அவற்றைக் கேட்டு அதன் ஆதரவாளர்கள் கட்சிமீதுள்ள நம்பிக்கையை இழப்பர் என்றும் நம்புகிறார். இதைத் தெரிவித்த அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளுக்குப் பின்னர் இப்ராகிம் அவ்வாறு…

லாபுவான் தொகுதிக்கு பாஸ்-பிகேஆருக்கிடையில் இழுபறி

லாபுவான் தொகுதி தனக்கே என்று பிகேஆர் அறிவித்த மறுநாள் பாஸ் அத்தொகுதிக்கான தனது வேட்பாளரை அறிவிக்க அத்தொகுதி யாருக்கு என்பதில் இரண்டுக்குமிடையில் இழுபறி நிலவுகிறது. நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூட்டரசு பிரதேச பாஸ், லாபுவானில், லாபுவான் பாஸின் தகவல் தலைவர் அட்னான் முகம்மட் களமிறக்கப்படுவார் என்று அறிவித்தது. ஆனால்,…

டிஏபி-இன் சிலாங்கூர்/ கேஎல் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்படலாம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் டிஏபி-இன் சிலாங்கூர்/ கேஎல் வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்கள் நிகழலாம் எனத் தெரிகிறது. சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரேசா கொக் அவரின் தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்கும் சாத்தியம் உள்ளது. கொக், சீ பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர். 1999-இலிருந்து அந்தத் தொகுதியை அவர்  வைத்துள்ளார்.  அவர்,…

மலாய்க்காரர்கள் கூடுதல் நன்மை பெற பக்காத்தானுக்கு வாக்களிக்க வேண்டும்: ஜைட்…

பிரதமர்துறை முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம், மலாய்க்காரர்கள் பக்காத்தானுக்கே வாக்களிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். பக்காத்தானை வலுப்படுத்துவதால் பிஎன் தேர்தலில் வென்றாலும்கூட அவர்கள் கூடுதல் நன்மை அடைவார்கள் என்றாரவர். நேற்று தம் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த ஜைட், வாக்காளர்களில் பெரும்பான்மையோரான மலாய்க்காரர்கள் இந்தத் தடவை மாற்றரசுக் கட்சிக்கு அடுத்த அரசாங்கத்தை…

பக்காத்தான் இன்னும் மூன்று மாநிலங்களில் தொகுதி ஒதுக்கீட்டுப் பிரச்னையைத் தீர்க்கவில்லை

வரும் பொதுத் தேர்தலில் முக்கியமான போர்க்களங்கள் எனக் கருதப்படும் ஜோகூர், சபா, சரவாக்  ஆகியவற்றில் இட ஒதுக்கீடு மீதான பேச்சுக்களை விரைவில் முடித்துக் கொள்ள பக்காத்தான் ராக்யாட்  எண்ணியுள்ளது. "அந்த மூன்று மாநிலங்களிலும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் சம்பந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன," என பிகேஆர்…

கிட் சியாங்: நான் கேலாங் பாத்தாவிலிருந்து ஒட மாட்டேன்

கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானை பிஎன் நிறுத்தக் கூடும் என்ற செய்திகள் வெளியான போதும் தாம் அங்கிருந்து ஒடப் போவதில்லை என டிஏபி மூத்த தலைவர்  லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார். "கனி கேலாங் பாத்தாவில் போட்டியிட விரும்பினால் நான் பின்…

அன்வார்: நான் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தான் இருப்பேன்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், தமது பெர்மாத்தாங் பாவ் தொகுதியைத் தக்க வைத்துக்  கொள்ள மீண்டும் அங்கு களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர் போட்டியிடும் தொகுதி குறித்து பல நாட்களாக நீடித்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பினாங்கில் விளக்கக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ள…

அன்வார்: தம்பூன் இல்லை என்றால் பெர்மாத்தாங் பாவ் தான்

பேராக் தம்பூனில் தாம் போட்டியிடா விட்டால் பெர்மாத்தாங் பாவ்-ல் களமிறங்கப் போவதாக பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அவர் இப்போது தமது தேர்வை இரண்டு தொகுதிகளாகக் குறைத்துக் கொண்டுள்ளார். தம்பூனில் தாம் போட்டியிடா விட்டால் பிகேஆர் கட்சியின் Srikandi பிரிவைச் சேர்ந்த (இளம் பெண்கள் பிரிவு)…

அந்நியர்கள் வாக்களிப்பதை ஏபியூ (ABU) ‘அமைதியாக’ நிறுத்த முயலும்

மலேசிய அடையாளக் கார்டுகளை வைத்துள்ள அந்நியர்களை வாக்களிப்பதிலிருந்து நிறுத்துவதற்கு  திட்டமிட்டுள்ளதை ‘Asalkan Bukan Umno’ (அம்னோவைத் தவிர எதுவாக இருந்தாலும் பரவாயில்லை)  எனப்படும் இயக்கம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அது 'அமைதியான' முறையில் மேற்கொள்ளப்படும் என  அது வலியுறுத்தியது. வாக்களிக்க வேண்டாம் என அந்நியர்களை எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள்…