13வது பொதுத் தேர்தலில் 10க்கும் மேற்பட்ட புதிய அம்சங்கள் அமலாக்கப்படும்

வாக்களிப்பு நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக 13வது பொதுத் தேர்தலில்  அமலாக்கப்படும் பல அம்சங்களில் நான்கு புதிய விதிகளும் அடங்கும். அழியா மையைப் பயன்படுத்துவது, அஞ்சல் வாக்குக்குப் பதில் போலீஸ் இராணுவ வீரர்கள் முன்கூட்டியே வாக்களிப்பது, உடற்குறையுடையவர்கள் வாக்களிக்க ஒருவரை அழைத்துச் செல்ல அனுமதிப்பது, வேட்பு மனுத் தாக்கல்…

நஜிப் நிர்வாகம் இப்போது பராமரிப்பு அரசாங்கம்

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் நடப்பு அரசாங்கம் பராமரிப்பு அரசாங்கமாகி விடும்.   தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் அமையும் வரை அது சேவை செய்யும். இடைக்காலத்தில் நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் பிரதரிடமும் அவரது அமைச்சரவையிடமும் இருக்கும். அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்வர். பராமரிப்பு அரசாங்கம் என்பது உண்மையில் நடப்பு…

பினாங்கு சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது

எதிர்பார்க்கப்பட்டதுபோல் பினாங்கு சட்டமன்றம் இன்று கலைக்கப் படவில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்ததைத் தொடர்ந்து அதுவும் கலைக்கப்படும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அச்செய்திக்காக, நண்பகல் 12 மணிக்கே செய்தியாளர்கள் பெருங் கூட்டமாக கொம்டாரில் 28-வது மாடியில் உள்ள முதலமைச்சர் லிம் குவான் எங் அலுவலகத்தில் கூடிவிட்டனர்.…

டிஏ ஆய்வு நிறுவனம்: பக்காத்தான் வெற்றி என்பது குறுகிய கால…

அரசாங்க மாற்றம் பங்குச் சந்தையில் 'இழப்பை' தரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பக்காத்தான்  ராக்யாட் கொள்கைகள் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டால் பொருளாதாரம் மீது சாதகமான விளைவுகள்  ஏற்படும் என டிஏ ஆய்வு நிறுவனம் சொல்கிறது. "பக்காத்தன் தெரிவித்துள்ள நடவடிக்கைகள் அவற்றின் நோக்கங்களில் வெற்றி கண்டு வாக்குறுதி அளிக்கப்பட்ட  விளைவுகளை அளித்தால்…

ஆட்சிமாற்றம் அமைதியாக நடைபெறும் என உறுதி கூறினார் நஜிப்

13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் மாற்றம் ஏற்படுமாயின் அது எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியாகவே நடைபெறும். இன்று காலை 12வது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதைத் தொலைகாட்சியில் அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இவ்வாறு உறுதி கூறினார். “நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள், அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்பவர்கள், மக்கள் குரலுக்கு மரியாதை…

சாமிவேலு: நான் வெற்றிபெறக்கூடிய வேட்பாளனே, அதில் எனக்கு சந்தேகமில்லை

மஇகா முன்னாள் தலைவர் ச.சாமிவேலு, 13வது பொதுத் தேர்தலில் தம்மைக் களமிறக்கினால் வெற்றி பெறுவது உறுதி என்று பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார். நீண்ட காலம் மஇகா தலைவராக  இருந்த அவர் 2008-இல் சுங்கை சிப்புட்டில் தோல்வியுற்றார் என்றாலும், “வெற்றிபெறத்தக்க வேட்பாளரா என்றால்- நான் வெற்றிபெறக்கூடிய வேட்பாளனே. அதில் எள்ளளவும் ஐயமில்லை”, என்று…

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது (விரிவான செய்தி)

பல மாதங்களாக வாக்காளர்களை ஊகிக்கவிட்டு வேடிக்கை பார்த்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். இன்று காலை பேரரசரைச் சந்தித்த பின்னர், காலை மணி 11.30க்கு தொலைக்காட்சியில் நஜிப் அந்த அறிவிப்பைச் செய்தார். இனி, தேர்தல் ஆணையம் (இசி) தேர்தலுக்கான நாளை நிர்ணயம் செய்யும்.…

சுல்கிப்லி மன்னிப்பு கேட்டார்: அது ஏற்றுக் கொள்ளப்படலாம் ஆனால் மறக்க…

உங்கள் கருத்து : 'ஒருவருடைய வழக்குரைஞராக இருப்பதற்கும் முட்டாள்தனத்துக்கும் தொடர்பு இருப்பதை என்னால் உணர  முடியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்குரைஞர் முட்டாளாக இருந்தால் அவர் இன்றும்  முட்டாளாகத் தான் இருப்பார்' சுல்கிப்லி இந்திய சமூகத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் தோலு: எவ்வளவு சுலபம் ! பல…

மசீச இளைஞர் தலைவருக்கு எதிராக ஒரு கிறிஸ்துவரை நிறுத்த பாஸ்…

வரும் தேர்தலில் ஜோகூர் பக்காத்தான் ராக்யாட்டுக்கு முன்னணி போர்க்களமாக மாறி வரும் வேளையில் பாஸ்  கட்சி தனது முஸ்லிம் அல்லாதார் பிரிவிலிருந்து இருவரை அந்த மாநிலத்தில் இறக்குவதற்கு ஆயத்தமாகி  வருகின்றது. அது பிஎன் கோட்டை எனக் கருதப்படும் ஜோகூரில் ஊடுருவ பக்காத்தான் ராக்யாட் வகுத்துள்ள திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் என…

ஜோகூர் பாருவில் பிகேஆர் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி

ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதிக்கான பிகேஆர் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி ஒய்வு பெற்ற ஜெனரல் முகமட் ஹஷிம் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் தெப்ராவ் தொகுதியில் ஸ்டீவன் சூங்-கும் மூவாரில் நோர் ஹிஸ்வானும் பத்து பஹாட்டில் இட்ரிஸ் ஜாவ்சியும் களமிறக்கப்படுவதாக எதிர்த் தரப்புத் தலைவரும் பிகேஆர்…

ஓட்டை பாக்கெட்!

எம். குலசேரகன்,  ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர், 02.04.2013 இன்றைய மலேசிய தமிழ் நாளேடுகளில் வெளிவந்த துணை அமைச்சர் சரவணனின் ஓட்டை  பாக்கெட் என்ற தலைப்பிலான செய்தியைப் படித்து நகைத்து நின்றேன். எங்களின் பாக்கெட் ஓட்டைதான்  அதில் பணம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், மக்கள் பணத்தை கொள்ளையடித்து…

திட்டமிடப்பட்டிருந்த பக்கத்தான் – ஹிண்ட்ராப் சந்திப்பு கைவிடப்பட்டது, கணேசன்

பக்கத்தான் மற்றும் ஹிண்ட்ராப் தரப்பினர்களுக்கிடையில் கடந்த வாரம் வரையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து நடைபெறவிருந்த கூட்டம் கைவிடப்பட்டது. கடந்த வாரம், டிஎபி தேர்தல் வியூகர் டாக்டர் ஓங் கியன் மிங் ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தையும் பக்கத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையையும் ஒப்பிட்டு தயாரித்திருந்த…

சாபாய் சட்டமன்றத்தில் ஜசெக வேட்பாளராக காமாட்சி துரைராஜூ களமிறங்குகிறார்

பெந்தோங் நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள ஜசெக-வின் பீலூட், கெத்தாரி, சாபாய் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கான வேட்பாளர்களை ஜசெக தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங், நேற்று மாலை நடைபெற்ற ஜசெக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார். இவற்றுள் சாபாய் சட்டமன்றத்தில் திருமதி காமாட்சி…

70 வயதான குழந்தைவேலு குடியுரிமை கோருகிறார்

நிரந்தர வசிப்பிடத் தகுதியைக் கொண்டுள்ள ஆர் குழந்தைவேலு, தமக்கு குடியுரிமையையும் நீல நிற மை  கார்டையும் வழங்க மறுத்த தேசியப் பதிவுத் துறை முடிவு மீது நீதித் துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துக்  கொள்வதற்கு அனுமதி பெற்றுள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸாலேஹா யூசோப் அந்த அனுமதியை…

தெங்: குவான் எங்-கிற்கு பல இனத் தொகுதியில் போட்டியிடும் துணிச்சல்…

பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தம்மை ஏமாற்றி விட்டதாக முதலமைச்சர் லிம் குவான் எங்  கூறியிருக்கிறார். "13வது பொதுத் தேர்தலில் அது தான் பெரிய நகைச்சுவை," என உடனடியாக லிம் -முக்குப் பதில் அளித்த தெங் சொன்னார். "நான் அவருக்காக வருந்துகிறேன். டிஏபி-க்காக அதை விட…

ஹாடி: ‘தேர்தல் தேதிக்காக பிஎன் போமோவைப் பார்க்கிறதோ, என்னவோ’

தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிஎன் தலைவர்கள் போமோவைப் பார்க்கிறார்களோ என்னவோ - அதனால்தான் நாடாளுமன்றக் கலைப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது என்று கிண்டலடித்தார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். “முஸ்தபா அலி (பாஸ் தலைமைச் செயலாளர்) சாத்தியமான தேர்தல் தேதி குறித்து சற்றுமுன்னர் கூறினார். நான் என்ன நினைக்கிறேன்…

பொதுத் தேர்தல் மீதான விவாத அரங்கில் பிஎன் பக்காத்தான் இளம்…

13வது பொதுத் தேர்தல் பற்றி ஏப்ரல் 10ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று மணி நேர விவாத அரங்கில்  பிஎன், பக்காத்தான் ராக்யாட் ஆகியவற்றைச் சேர்ந்த நான்கு இளம் தலைவர்கள் கலந்து கொள்வர். CPPS எனப்படும் பொது, கொள்கை ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்யும் அந்த நிகழ்வு யூ…

பட்டியலில் சந்தேகமான வாக்காளர்கள் இருப்பதை சிலாங்கூர் இசி தலைவர் ஒப்பினார்

சிலாங்கூர்  தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் சுல்கிப்ளி அப்துல் ரஹ்மான், அம்னோ உதவிப் பதிவதிகாரி ஒருவர் சந்தேகத்துக்குரிய பலரை வாக்காளர்களாக பதிவு செய்தார் என்று தெரிவித்ததாக டிஏபி-இன் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு கூறினார். சுல்கிப்ளியை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியபோது அதை ஒப்புக்கொண்டார் என்றாரவர். அதே…

தாமான் மேடான் வாக்காளர் ஸ்ரீ செத்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிகேஆர் சொல்கிறது

வாக்காளர்களுக்குத் தெரியாமல் அவர்கள் வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து பிகேஆர்  சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து புகார் செய்கின்றனர். 2008ல் தாமான் மேடான் தொகுதியில் வாக்களித்த சம்சியா அரிபின் என்பவர் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதிக்கும் கிளானா ஜெயா நாடாளுமன்றத் தொகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தாமான் மேடான் சட்டமன்ற  உறுப்பினர் ஹனிஸா…

கேலாங் பாத்தா பிரகடனம் எல்லா இந்தியர்களுக்கும் மகிழ்ச்சி தரவில்லை

உங்கள் கருத்து : ‘என்னைக் கேட்டால், டிஏபி-இன் வாக்குறுதிகளை ஏற்போம். அவர்கள் திருப்தி அளிக்கும் வகையில் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்’ இந்தியர்களுக்கான டிஏபி-இன் 14-அம்சத் திட்டம் ஜெரார்ட் லூர்துசாமி: டிஏபி-இன் இந்த 14-அம்சத் திட்டத்துக்கு இணையான திட்டத்தை அம்னோ/பிஎன்னால் கொண்டு வர முடியுமா? இதை முன்பே அறிவித்திருக்க வேண்டும்…

இந்தியர்களுக்கான டிஏபி பெருந்திட்டத்தை சாமிவேலு சாடுகிறார்

இந்திய சமூக வாக்குகளைப் பெறுவதற்காக கடைசி நேரத்தில் சலுகைகளை அறிவிப்பதின் மூலம் அந்த  சமூகத்தை ஏமாற்ற முயலுவதாக முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு சாடியிருக்கிறார். மலேசிய இந்தியர்களுடைய சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் பொருட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை  டிஏபி அறிவித்த 'கேலாங் பாத்தா பிரகடனம்' என…

தேர்தலில் வெற்றி பெற்றால் பக்காத்தான் ‘அந்நியச் செலாவணி ஊழலை’ புலனாய்வு…

அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெற்றால் 1990-களின்  தொடக்கத்தில் பாங்க் நெகாரா மலேசியாவுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய அந்நியச் செலாவணி ஊழல்  விசாரிக்கப்படும். அந்த வகையில் தற்போது பிரதமர் துறையில் அமைச்சராக இருக்கும் நோர் முகமட் யாக்கோப்பின் பங்கு எனக்   கூறப்படுவது மீது கவனம் செலுத்தப்படும்.…

பினாங்கில் குவான் எங்-தெங் போட்டி இல்லை

பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோவின் கோமாளித்தனங்களால் எரிச்சலடைந்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அவருக்கு எதிராக பாடாங் கோத்தாவில் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கிறார். தெங் “சர்க்கஸ் கோமாளி”போல் நடந்துகொண்டிருக்கிறார் என்று லிம் கூறினார். எனவே, “இனியும் இந்த ஆட்டத்தில் ஈடுபட ஆர்வமில்லை”, என்றாரவர்.…