ஹிண்ட்ராப்-அன்வார் சந்திப்பு நிகழ்ந்தது

இந்திய சமூகத்தைப் பாதிக்கின்ற விஷயங்களை விவாதிப்பதற்காக ஹிண்ட்ராப் என்னும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு முதன் முறையாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பிகேஆர் உயர் நிலைத் தலைவர்களை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்துள்ளது. ஹிண்ட்ராப் குழுவுக்கு அதன் தலைவர் பி வேதமூர்த்தி தலைமை தாங்கினார். தமது சகோதரர் உதயகுமாருடன்…

Hummer வாகனம் நஸ்ரி-சியா தொடர்புகளைக் காட்டுவதாக பிகேஆர் சொல்கின்றது

சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், வணிகரான மைக்கல் சியா-ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து சியா விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதில் சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் இருவரும் நண்பர்கள் எனத் தெரிவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் சொன்னார். நஸ்ரிக்கும் சியாவுக்கும் இடையிலான தொடர்பு சியாவுக்கு சொந்தமான…

ஏய்ட்ஸ் நோயால் இறந்ததாக கூறப்படும் கைதிக்குச் சவப்பரிசோதனை

திங்கள்கிழமை காஜாங் சிறையில் இறந்துபோன ஆர்.குமரராஜாவுக்கு சவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர் ஏய்ட்ஸ் நோயால் இறந்தார் என்று போலீசார் அறிவித்துள்ளனர். அவரின் உடல்மீது பரிசோதனை இன்று நண்பகல் தொடங்கியது. அது முடிய மூன்று மணி நேரம் ஆகலாம் என்று பிகேஆர் மனித உரிமை ஆர்வலர் எஸ்.ஜெயதாஸ் மலேசியாகினியிடம்…

கொங்: அம்னோ இளைஞர்கள் ஒரேயடியாக ஏஇஎஸ்-ஸை நிராகரிக்கவில்லை

போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா, தானியக்க அமலாக்க முறை(ஏஇஎஸ்)  விவகாரத்தில் மாற்றரசுக் கட்சி சொந்த அரசியல் நலனுக்காக மக்களின் உயிர்களைப் பணயம் வைக்கக்கூடாது என்று கூறுகிறார். “பக்காத்தான் சாலைப் பாதுகாப்பை வைத்து அரசியல்  ஆடக்கூடாது.பிறகு, விபத்துகள் நிகழ்ந்தால் நாங்கள்தான் தேவையானதைச் செய்யவில்லை என்பார்கள். “நாங்கள் ஏதாவது செய்தால்…

Tanda Putera தாமதம் திரைப்படத் தணிக்கை வாரிய முடிவு என்கிறார்…

Tanda Putera திரைப்படம் திரையிடப்படுவது வைக்கப்பட்டுள்ளது, தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் முடிவு அல்ல. இவ்வாறு அதன் அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறியிருக்கிறார். உள்துறை அமைச்சின் கீழ் வரும் திரைப்படத் தணிக்கை வாரியம் அதனைத் தள்ளி வைப்பது என முடிவு செய்துள்ளதாக அவர் சொன்னார். "அது தற்போது அதிகாரிகளுடைய…

பொதுச்சேவை ஊழியர் சம்பளத்தைத் திருத்தி அமைக்க அரசு ஆலோசனை

பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஐந்து விழுக்காடு ஊதிய உயர்வு கொடுப்பது உள்பட சம்பளத் திட்டத்தை மாற்றி அமைப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூறினார். வாழ்க்கைச் செலவு கூடி வருவதால் இந்த மாற்றம் அவசியமாகிறது என்றாரவர். “பிரிவுவாரியாக ஆராய்வோம். உயர்நிலையில் உள்ளவர்களுக்கு ஐந்து விழுக்காடு…

தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை பிரதமரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது

பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) பினாங்கில் வெற்றி பெற்றால் அம்மாநிலத்தை மேம்படுத்தும் திட்டங்கள் எல்லாம் தயார்நிலையில் இருப்பதாகவும் அவை இப்போது திருத்திச் சீர்மைப்படுத்தப்பட்டு வருவதாகவும் மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோ கூறினார். இப்போதுள்ள நிலையில், சுற்றுலா, அடக்கவிலை வீடுகள், போக்குவரத்து என எட்டு முக்கிய பொருளாதார…

கெடா மாநிலச் செயலாளர் விலக வேண்டும் என ஊராட்சி மன்ற…

கெடா மாநிலச் செயலாளர் ராஸ்லி பாசிர் பதவி துறக்க வேண்டும் எனக் கோரி அலோர் ஸ்டாரில் மாநிலச் செயலகம் அமைந்துள்ள விஸ்மா டாருல் அமானுக்கு வெளியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டனர். கிராமத் தலைவர்களும் உள்ளிட்டிருந்த அந்த ஊராட்சிமன்ற உறுப்பினர் குழு ஏற்கனவே இது போன்று மூன்று…

என்ஜிஒ போராளிகள் நிறுத்தப்படுகின்றனர், பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர்

"உண்மையான பயங்கரவாதிகள் மீது அதிகாரிகள் இசா சட்டத்தைப் பயன்படுத்துவது இல்லை. மாறாக தங்கள் அரசியல் எதிரிகள் மீது அதிகாரிகள் அதனைப் பயன்படுத்துகின்றனர்" பயங்கரவாதிகள் நம்ம்மிடையே இருப்பதை ஹிஷாமுடின் ஒப்புக் கொள்கிறார் ஜெடி_ஹு: போலீஸ் வளங்களைக் கொண்டு பெர்சே, சுவாராம், எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் அவற்றின் மீது வழக்குப் போடுகிறது.…

பக்காத்தான் நெகிரி செம்பிலான் பேரணியை நடத்தும், இலக்கு 50,000 ஆதரவாளர்கள்

பக்காத்தான் ராக்யாட் உள்ளூர் போலீசார் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் வரும் சனிக்கிழமையன்று சிரம்பானில் மாபெரும் பேரணியை நடத்த உறுதி பூண்டுள்ளது. அதற்கு 50,000 ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் அது எண்ணியுள்ளது. நாடு முழுமைக்குமான பக்காத்தான் விளக்கக் கூட்டங்களின் முதல் கட்டமாக சிரம்பான் பேரணி அமைகின்றது. அந்தப் பேரணிக்கு அனுமதி…

“தவறு செய்த” பாகாங் எம்ஏசிசி தலைவருக்கு டத்தோ பட்டம் வழங்கப்படுவது…

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பாகாங் பிரிவுத் தலைவர் மோ சம்சுடின், டத்தோ பட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது அந்த ஆணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடான நடத்தைக்காக அவர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு மூன்றாவது விசாரணையை எதிர்நோக்கியுள்ள வேளையில் அவருக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும்.…

பத்துமலை ‘கொண்டோ’ பணிக்குழு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

புகழ் பெற்ற பத்துமலை கோவிலை சுற்றிலும் மேற்கொள்ளப்படுகின்ற மேம்பாடுகளை ஆய்வு செய்வதற்கான சுயேச்சைப் பணிக் குழு விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும். சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அந்தத் தகவலை வெளியிட்டார். அந்தக் குழுவுக்கு ஐந்து முதல் ஏழு உறுப்பினர்கள் வரையில் நியமிப்பது என மாநில…

எட்டாவது பெர்சே உறுப்பினரை குடிநுழைவுத் துறை நிறுத்தியுள்ளது

இந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக குடிநுழைவு வாயிலைக் கடந்து செல்லாமல் இன்னொரு பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். போலீஸ் உத்தரவின் பேரில் தாம் கடந்த சனிக்கிழமையன்று குறைந்த கட்டண விமான நிலைய முனையத்தில் தாம் நிறுத்தப்பட்டதாக குழு உறுப்பினரான அருள் பிரகாஷ் கூறினார். "நான் கறுப்புப்…

‘தம்பட்டம்’ அடித்துக் கொள்வதற்கு ‘நம்பிக்கையின்மையே’ காரணம்

மலேசியர்கள் தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு அதிகாரிகளிடம் போகாமல் எதிர்க்கட்சிகளிடம் செல்வதற்கு 'நம்பிக்கை பிரச்னையே' காரணம் என மலேசிய அனைத்துலக வெளிப்படை நிறுவனம்  (Transparency International-Malaysia- TI-M ) கூறுகின்றது. தகவல்களை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்புச் சட்டம் 2010 அமலாக்க நிறுவனங்களுக்குச் செல்லும் மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்குவதால் தகவல்களை வெளியிடுவோர் எதிர்விளைவுகளுக்கு …

மேயர் விவகாரத்தை நீதிமன்றம் கொண்டுசெல்ல எம்பிபிஜே திட்டம்

பெட்டாலிங் ஜெயா மாநகராண்மைக் கழகம்(எம்பிபிஜே) மேயர் முகம்மட் ரோஸ்லான் பணிமாற்றம் செய்யப்படும் விவகாரத்தை நீதிமன்றம் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளது. நேற்று 24 எம்பிபிஜே கவுன்சிலர்களும் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தில் ஏகமனதாய் அம்முடிவு செய்யப்பட்டது.  விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லும் பொறுப்பை கவுன்சிலர் கைருல் அன்வார் அஹ்மட் சைனுடின் தலைமையில் அமைந்த…

ஈப்போ மருத்துவமனையின் சரும நோய் மருந்தக பகுதியின் கூரை சரிந்தது

ஈப்போ ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையின் நிபுணத்துவ மருந்தக வளாகத்தில் உள்ள சரும நோய் மருந்தக (dermatology clinic) பகுதியின் முன் கூரை இன்று காலை மணி 6.00 அளவில் சரிந்தது. பாதுகாவலர் ஒருவர் கண்டு பிடித்த அந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. தொலைபேசி, தகவல் தொடர்பு தொழில்நுட்ப…

ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டதாகக் கூறப்படுவதை அமைச்சர் மறுக்கிறார்

உணவுக்கு முன்னர் துவா ஒதாமல் இருந்ததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகளை அவர்கள் ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுவதை கிராமப்புற வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபீ அப்டால் மறுத்துள்ளார். பெற்றோர்களுடைய அனுமதி இல்லாமல் குவா மூசாங்கில் உள்ள போஸ் பிஹாய் தேசியத் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு-அவர்கள் அனைவரும்…

வாரிசான் மெர்டேகா கோபுரம் 118 மாடிகளைக் கொண்டிருக்கும்

உத்தேச வாரிசான் மெர்டேகா கோபுரம் முதலில் திட்டமிடப்பட்டதுபோல் 100 மாடிகளைக் கொண்டிருக்காமல் 118 மாடிகளைக் கொண்டிருக்கும். அக்கட்டிடத்தைக் கட்டும் பிஎன்பி மெர்டேகா வெண்ட்சர்ஸ் சென்.பெர்ஹாட் ஏற்கனவே அதை மறுத்திருந்தாலும் அக்கோபுரம் 118 தளங்களைக் கொண்டிருக்கும் என்பதைக் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.  புக்கிட் பிந்தாங் எம்பி…

‘நம்மிடையே பயங்கரவாதிகள் இருப்பதை ஹிஷாமுடின் ஒப்புக் கொள்கிறார்

'பல பயங்கரவாதிகள்' மலேசியாவுக்குள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பதாக உள்துறை அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த 'பயங்கரவாதிகள்' உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள் என அது தெரிவித்தது. "அவர்கள் மலேசியாவை இடை மய்யமாக பயன்படுத்துகின்றனர். மலேசியாவை அவர்கள் இலக்காகக் கொண்டிருக்கவில்லை," என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன்…

விருந்தினர் வெளியேறிய விஷயத்தை சைனா பிரஸ் பெரிதுபடுத்தியதாக சுவா புகார்

கடந்த சனிக்கிழமையன்று மசீச விருந்து ஒன்றின் போது விருந்தினர்கள் 'வெளியேறிய' விஷயத்தை சைனா பிரஸ் வேண்டுமென்றே பெரிதுபடுத்தியுள்ளதாக கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் குற்றம் சாட்டியுள்ளார். அன்றிரவு கடும் மழை பெய்த போதிலும் பல விருந்தினர்கள் விருந்து நிகழ்வில் தொடர்ந்து இருந்த உண்மையை அந்த ஏடு…

போலீஸ்: பக்காத்தான் பெரும் பேரணிக்கு அனுமதி இல்லை

பக்காத்தான் ராக்யாட் வரும் சனிக்கிழமை சிரம்பானில் 'மக்கள் எழுச்சிக் கூட்டம்' என அழைக்கப்படும் மாபெரும் பேரணியை நடத்துவதற்குப் போலீஸ் அனுமதி கொடுக்காது. அக்டோபர் 24ம் தேதி மூன்று பக்காத்தான் பேராளர்கள் சிரம்பான் போலீஸ் தலைமையகத்துக்கு வந்ததாகவும் ஆனால் அவர்கள் விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றும் சிரம்பான் ஒசொபிடி…

டெக்சி ஓட்டுனர்கள்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டம்

டெக்சி ஓட்டுநர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி தங்களுக்குத் தனிப்பட்ட உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று நாடாளுமன்ற இல்லத்தில் அவர்கள் கொடுத்த மகஜரில் உள்ள 11 கோரிக்கைகளில்  அதுவும் ஒன்று. அம்மகஜரை டெக்சி ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்கும் இடைக்காலக் குழு ஒன்று, பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல்…

கோகிலன்: “பத்துமலை கொண்டோ விவகாரத்தில் எனக்குச் சம்பந்தம் இல்லை”

வெளியுறவு துணை அமைச்சர் ஏ.கோகிலன் பிள்ளை, தாம் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் பத்துமலை ஆலயத்துக்கு அருகில் 29-மாடி கொண்டொமினியம் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது என்றாலும் அனுமதி கொடுப்பதில் தாம் சம்பந்தப்படவில்லை என்றார். அவருக்குத் தொடர்புண்டு என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு கூறியுள்ளதை மறுத்த கோகிலன்,…