அதிகப்படியான ஆசிரியர் பணிச்சுமையின் நீண்டகால பிரச்சினையை விரிவாகத் தீர்க்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்குமாறு தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் (The National Union of the Teaching Profession) கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் அமினுதீன் அவாங் கூறுகையில், நாடு முழுவதும் சுமார் 418,000 ஆசிரியர்கள்…
வேதமூர்த்தி: நான் ஹிண்ட்ராப்-புக்கு வேறு வியூகத்தை வகுத்துள்ளேன்
ஹிண்ட்ராப்-பைக் கட்சி சார்பற்ற பாதையில் தாம் கொண்டு செல்லப் போவதாக வெளிநாட்டில் நாடு கடந்து வாழ்ந்த பின்னர் அண்மையில் தாயகம் திரும்பியுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி கூறியிருக்கிறார். ஆனால் தாம் நாட்டில் இல்லாத வேளையில் ஹிண்டராப் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய தமது மூத்த சகோதரர் பி உதயமுமாருடன்…
“அம்னோ-இசி தொடர்பு”: பிகேஆர் சைபுடின் விசாரிக்கப்படுகிறார்
தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அஹமட் வான் ஒமார் ஓர் அம்னோ உறுப்பினர் என்று குற்றம் சுமத்தியத்தியதற்காக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் போலீசாரால் விசாரிக்கப்படுகிறார். குற்றவியல் சட்டம் பிரிவு 500 இன் கீழ் சைபுடின் கிரிமினல் அவதூறு குற்றத்திற்காக சைபுடின் விசாரிக்கப்படுகிறார் என்று பிகேஆர்…
பாபியா சட்டம் நிரபராதிகளை பாதுகாப்பதற்காகும், குற்றவாளிகளை அல்ல
"பாபியா சட்டம் வங்கித் தொழிலில் உள்ளவர்கள் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதைத் தடுப்பதற்காகும். குற்றச் செயல்களை அம்பலப்படுத்துவோரை மௌனமாக்குவதற்கு அல்ல." ராபிஸிக்கு எதிரான பாபியா குற்றச்சாட்டை நஜிப் ஆதரிக்கிறார் மாற்றம்: பிரதமர் நஜிப் ரசாக் சொல்வதில் பாதி மட்டுமே உண்மை. நாட்டின் நிதி முறை வெற்றி அடைவதற்கு வங்கி வாடிக்கையாளர்களுடைய…
நீர் நெருக்கடி: தீர்வுகான தடையாக இருப்பது யார்?, சேவியர் கேள்வி
சிலாங்கூர் மாநில அணைகளில் நீர் நிரம்பி ஆற்றில் வெறியேறலாம், ஆனால் அது குடிக்க உகந்த தண்ணீராக அல்ல என்கிறார் எரி சக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர்வள அமைச்சர் பீட்டர் சின். நீர் விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் அமைச்சர், முதலில் தானும் …
ராயிஸ் ‘Janji Ditepati’-யில் உறுதியாக இருக்கிறார், அது அமைச்சரவை முடிவு…
இவ்வாண்டுக்கான 'Janji Ditepati' தேசிய தின சுலோகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அந்த சுலோகத்தை அமைச்சரவை கூட்டாக முடிவு செய்துள்ளதாக தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். அந்த சுலோகம் கட்சிச் சார்புடையது என கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ள போதிலும் தமது அமைச்சு அந்த சுலோகத்தில்…
தீயொழுக்க-எதிர்ப்பு நடவடிக்கையின்போது ஊடகம் உடன் இருப்பது அவசியமே: சிஐஜே
தீயொழுக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளின்போது அவற்றுக்குச் சாட்சிகளாக ஊடகங்களும் உடன் இருப்பது Read More
மலேசியாவின் முதலாவது ஒலிம்பிக் தங்கத்தைக் கொண்டுவருவாரா சொங் வெய்?
நாட்டின் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்லும் கட்டத்தில் உள்ள பெட்மிண்டன் வீரர் லீ சொங் வெய்க்கு ஆதரவு தெரிவிக்க மலேசியர்கள் ஒன்றுதிரள வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். சீனாவின் சென் லொங்கை 21-13,21-14 என்ற புள்ளிகளில் வென்ற லீ, தங்கம் வெல்வதற்கான மனத்திடத்தையும்…
நுருல் இஸ்ஸா: சபா பிஎன்-னிலிருந்து பலர் வெளியேறக் கூடும் என்ற…
சபாவில் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் அதிகமாக வெளியேறக் கூடும் என்ற அச்சம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சூழ்ந்துள்ளது. அத்துடன் ஆளும் கூட்டணியின் இரண்டு எம்பி-க்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக நஜிப் அடுத்த வார இறுதியில் சபாவுக்குச் செல்கிறார். இவ்வாறு பிகேஆர் உதவித்…
எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை ஆராய நஜிப் சிறப்புக் குழுவை…
தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோர மாநிலங்களுக்கு பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகையை வழங்கும் பிரச்னையை நியாயமாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வதற்கு சிறப்புக் குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் தலைமை தாங்குவார். உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த…
புதிய தேசிய தினப் பாடலைப் புனைய பிரபல கவிஞர் முன்…
தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் எழுதியுள்ள அதிகாரத்துவ 'Janji Ditepati' பாடல் கடுமையாக குறை கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புதிய தேசிய தினப் பாடலைப் புனைய பிரபல கவிஞர் ஹாஸ்மி ஹஷிம் முன் வந்துள்ளார். "பாசத்துக்குரிய இந்த நாட்டின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் புதிய பாடல் ஒன்றை…
நீர் விவகாரம்:அமைச்சைச் சாடுகிறார் டிஏபி எம்பி
சிலாங்கூரில் நீர் விநியோகத்துக்கு குத்தகை உரிமைபெற்றுள்ள ஸபாஷ் நிறுவனத்தை சிலாங்கூர் அரசு எடுத்துக்கொள்ள அனுமதி மறுத்த எரிபொருள்,பச்சைத் தொழில்நுட்பம்,நீர் விவகார அமைச்சு அதற்கு அளித்த விளக்கம் “மிகவும் பலவீனமானது” என்று கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு சாடினார். மாநில அரசுக்கு எதிரான வழக்கு நடந்துகொண்டிருப்பதும் அதற்கான காரணங்களில் ஒன்று…
தமிழ் நாளேடுகளை விமர்சிக்க உத்துசானுக்கு தகுதியில்லை, சேவியர்
"மலேசிய தமிழ் நாளிதழ்களின் நடுநிலை பற்றியோ, தரம் பற்றியோ கேள்வி எழுப்பவோ, விமர்சிக்வோ சற்றும் தகுதியற்றது உத்துசான் நாளேடு என்பது நாடறிந்த உண்மை", என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் சேவியர் கூறினார். ஓர் அரசியல் கட்சியான அம்னோவிற்கு சொந்தமான அப்பத்திரிக்கை முழு மலாய் தீவிரவாதச் சித்தாந்தத்தைக்…
எண்ணெய் உரிமப் பணக் கூட்டத்தில் பாஸ் பேராளர் பங்கு கொள்ள…
கிளந்தான் மாநிலத்துக்கான எண்ணெய் உரிமப் பணம் மீது விவாதம் நடத்துவதற்கு பேராளர் ஒருவரை அனுப்புமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாஸ் வழி நடத்தும் கிளந்தான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த மாநில மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் அதனை இன்று அறிவித்தார். நிக்…
எல்ஆர்டி குத்தகை கொடுக்கப்பட்டது நமக்கு அவமானத்தைத் தருகிறது
"மலேசியாவில் மட்டுமே எல்லா அம்சங்களிலும் தோல்வி கண்ட ஒரு நிறுவனம் பல பில்லியன் டாலர் டெண்டரைப் பெற முடியும்." ஜார்ஜ் கெண்ட் பொய் சொல்வதை ஆவணங்கள் மெய்பிக்கின்றன என்கிறார் ராபிஸி அடையாளம் இல்லாதவன்#19098644: அரசாங்கக் கொள்முதல், டெண்டர் நடைமுறைகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான நிதி அமைச்சு…
நான் என் உயிருக்கு அஞ்சுகிறேன் என்கிறார் தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா
தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மலேசியாவுக்கு அவ்வப்போது வந்த போதிலும் தமது உயிருக்கு இன்னும் அஞ்சுகிறார். "நான் திரும்ப வருகிறேன். ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டுமே வருகிறேன். எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இங்கு மலேசியாவில் எனக்குப் பாதுகாப்பு…
அமைச்சர்: அணைகளில் நீர் நிரம்பியுள்ளது தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்காது
சிலாங்கூர் அணைகளில் நீர் நிரம்பியிருப்பது மாநிலத்தில் தண்ணீர் நெருக்கடி ஏதுமில்லை எனபதைக் காட்டுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான ரோனி லியூவும் டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் கூறியுள்ளதை எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் நிராகரித்துள்ளார். அந்த இருவரையும் பெயர் குறிப்பிடாமல் நீர் விநியோகம்…
‘பினாங்குத் துறைமுக தனியார் மயம் மீது பிஎன் போடும் இரட்டை…
பினாங்குத் துறைமுக தனியார் மயம் மீது பிஎன் "நேர்மையற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் அரசியல் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகவும்" குறை கூறப்பட்டுள்ளது. அந்தத் துறைமுகத்தை நிர்வாகம் செய்வதற்கான டெண்டரில் அம்னோவுடன் தொடர்புடைய செல்வந்தர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்ட பின்னர் அந்த விஷயம் பினாங்கில் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டு…
தேசத் துரோக விசாரணை: மகாதீருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும்,கர்பால்…
மலாய் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட விதிவிலக்கை அகற்றிய 1993ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டும் மேலும் நால்வரும் பேசிய விஷயங்களுக்காக ஏன் அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பதை விளக்குவதற்காக அந்த ஐவருக்கும்…
ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறாது; போராட்டம் தொடரும் என்கிறார் வேதா…
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கம் அரசியல் களத்தில் ஓர் அரசியல் கட்சியாக உருவெடுக்காது என்று நாடு திரும்பியுள்ள ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பி. வேதமூர்த்தி கூறினார். நாட்டில் உள்ள 20 இலட்சம் இந்தியர்களில் 5 இலட்சம் பேர் மட்டுமே ஓரளவு சுமாரான வாழ்க்கை நிலையில் உள்ளனர். மீதமுள்ள 15…
அம்னோ, கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை 13வது பொதுத்…
கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை தீர்ப்பதற்கு மாநில அம்னோ வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் அந்த விஷயத்தை பாஸ் தலைமையிலான மாநில அரசாங்கம் ஒர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை தடுப்பதே அதன் நோக்கமாகும். இவ்வாறு கிளந்தான் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் முஸ்தாபா முகமட் கூறியதாக இன்று…
தேசிய நாள் பாடல் திருடப்பட்டதாகக் கூறப்படுவதை அமைச்சு ஆராயும்
இவ்வாண்டு தேசிய நாள் பாடலான 'Janji Ditepati' இந்தோனேசியாவின் சுவிசேஷ துதிப்பாடல் ஒன்றிலிருந்து திருடப்பட்டது என்று கூறப்பட்டிருப்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் அறிவித்துள்ளார். “மெர்டேகா பாடலான 'Janji Ditepati' திருடப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா என்பதைக் கண்டறிய ஒரு தனிக் குழு…
ராபிஸி: ஜார்ஜ் கெண்ட் பொய் சொல்கிறது
அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கான திறன் சோதனையில் லயன் பசிபிக்-உடனான அதன் கூட்டுத் தொழில் திட்டத்தில் தோல்வி காணவில்லை எனக் கட்டுமான நிறுவனமான ஜார்ஜ் கெண்ட் கூறிக் கொள்வதை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நிராகரித்துள்ளார். அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்ட உரிமையாளரான Syarikat Prasarana Bhd-ன்…
ஜயிஸ் 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது
சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais), சிலாங்கூரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தளங்களாக மாறியுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது. “முன்பு 36 பள்ளிவாசல்கள்தாம் எங்கள் பட்டியலில் இருந்தன. இப்போது மேலும் இரண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன”, என்று ஜயிஸ் தலைவர் மர்சுகி உசேன் கூறியதாக இன்றைய சினார்…