கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
வசந்தகுமார்: இந்து சமயம் குறித்த பிஎன் வேட்பாளர் கருத்துக்கள் மீது…
ஷா அலாம் தொகுதிக்கான பிஎன் வேட்பாளரை ஆதரிக்க வேண்டாம் என மஇகா விடுத்துள்ள வேண்டுகோள் 'சற்று கால தாமதமாக' வந்துள்ளது என தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் வசந்த குமார் கூறுகிறார். பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த 12 நாட்களுக்குப் பின்னரே…
‘பக்காத்தானுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கலாம் ஆனால், இடங்கள் கிடைக்காது’
உங்கள் கருத்து : "தேர்தல் மோசடிகள், ரொக்க அன்பளிப்புக்கள், அச்சுறுத்தல் ஆகியவை குறையாத வரையில் அந்த ஆய்வுகளில் எந்த அர்த்தமும் இல்லை." 43 விழுக்காட்டினர் அன்வாரை ஆதரிக்கின்றனர், நஜிப்புக்கு 39 விழுக்காடு ஜிமினி கிரிக்கெட்: ஆய்வில் சம்பந்தப்பட்ட மலாய்க்காரர்களிடையே நஜிப் பற்றிய மதிப்பீடு 18 புள்ளிகள் குறைந்துள்ளன. அன்வார்…
தேர்தலில் வெற்றி பெற காருக்கு தீ மூட்டுபவர்கள் நல்ல இளைஞர்களை…
- டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 27, 2013. கடந்த வியாழக்கிழமை இரவு என் மகள்வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தீ மூட்டியது, நம் இன இளைஞர்கள் தவறான முறையில் வழி நடத்தப் படுகிறார்கள் என்பதற்குச் சரியான சான்றாகும். இப்படி நம் இளைஞர்களுக்குத்…
அன்வாரின் முன்னாள் ‘உற்ற தோழர்கள்’ பிஎன் வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்
பெர்மாத்தாங் பாவ் பிஎன் வேட்பாளரான மஸ்லான் இஸ்மாயில், அத்தொகுதியைக் கைப்பற்றுவதற்கு உதவியாக அன்வார் இப்ராகிமின் “உற்ற தோழர்களை”த் தமக்குப் பக்கபலமாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். அன்வாரின் தோழர்கள் என்று சொல்லப்படும் அவ்விருவரும்- கல்வியாளர் சித்திக் பாபாவும் இஸ்லாமிய ஆய்வாளர் அய்டிட் கசாலியும்- முன்னாள் பாஸ் கோம்பாக் சித்யா சட்டமன்ற உறுப்பினர் அசன்…
எதிர்க்கட்சிகளின் ‘Ubah’ சுலோகத்தை மாயாஜாலம் என நஜிப் நிராகரிக்கிறார்
எதிர்க்கட்சிகளின் 'Ubah' சுலோகம் மக்கள் கவனத்தை பெறுவதற்கான எதிர்க்கட்சிகளுடைய மாயாஜாலம் என்று நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். அதற்கு பலியாகி விட வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். உண்மையில் அந்த சுலோகத்திற்கு பின்னணியில் உள்ள அமிழ்தம் எனக் கூறப்படுவது உண்மையில் விஷம் என பராமரிப்பு அரசாங்கப்…
‘பக்காத்தான்- சுலு ஊடுருவல் தொடர்புகளை தற்காப்பு அமைச்சர் நிரூபிக்க வேண்டும்’
லாஹாட் டத்து ஊடுருவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் உடந்தையாக இருந்ததாக தாம் சொல்வதை தற்காப்பு அமைச்சர் முகமட் ஸாஹிட் ஹமிடி நிரூபிக்க வேண்டும் அல்லது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என பாஸ் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது. "அவரிடம் ஆதாரம் இருந்தால் அவர் அதனைக் காட்ட வேண்டும். வெறுமனே ஊதக்…
மலேசியாகினியை திறப்பதை இணையச் சேவை நிறுவனங்கள் (ISPs) ‘கட்டுப்படுத்தியுள்ளன’
மே 5 பொதுத் தேர்தலுக்கான அதிகாரத்துவப் பிரச்சார காலம் தொடங்கியது முதல் இணையச் சேவையை வழங்கும் பல மலேசிய நிறுவனங்கள் வழியாக மலேசியாகினியை திறப்பது 'கட்டுப்படுத்தப்பட்டுள்ளது'. அதன் விளைவாக வாசகர்கள் மலேசியாகினி வாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அது ஒரு நிமிடம் கிடைக்கும். அடுத்த நிமிடம் அது காணாமல் போகும்.…
பாஸ் கோட்டா டமன்சாராவில் போட்டியிடாது
ஒரு வாரகாலமாக பிகேஆருடனும் பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வுடனும் பேச்சு நடத்திப் பார்த்த பாஸ் முடிவில் கோட்டா டமன்சாராவில் போட்டியிடுவதினின்றும் பின்வாங்கியது. “அந்த இடத்தை பிகேஆரிடமே கொடுக்கிறோம்”, என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி இன்று கோலாலும்பூரில் கட்சித் தலைமையகத்தில் கூறினார். இதனால், அங்கு பிகேஆரின் சின்னத்தில் போட்டியிடும்…
உதயாவின் ஹிண்ட்ராப் வேதமூர்த்தியை ‘நீக்குகிறது’
ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமைகள் நடவடிக்கைகள் குழு அமைப்பைத் தோற்றுவித்த தலைவரான பி உதயகுமார் தலைமையில் இயங்கும் ஹிண்டராப் பிரிவு அவரது இளைய சகோதரரும் பிரிந்து சென்ற நடப்பு ஹிண்ட்ராப் பிரிவின் 'தலைவருமான' பி வேதமூர்த்தியை அந்த அமைப்பிலிருந்து 'நீக்கியுள்ளது'. ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராப் உச்ச…
ஹிண்ட்ராப்: இனவாதம், தடுப்புக் காவல் மரணங்கள் “எதிர்கால ஒப்பந்தம்”
இந்தியர் நலன்கள் சம்பந்தப்பட்ட ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பிலான முக்கிய அம்சங்கள், அந்த அமைப்பு பிஎன் உடன் செய்து கொண்ட 'புதிய உடன்பாட்டில்' விடுபட்டிருந்தன. அவை எதிர்கால விவாதங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டதாக ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன் மலேசியாகினியிடம் கூறினார். "எதிர்கால உடன்பாடுகளில் நாங்கள் அவை…
பொருளாதார அரிச்சுவடி: பிரிமைவிட எரிபொருள் விலைக்குறைப்பு மேலானது
உங்கள் கருத்து ‘விரைவில் வளர்ச்சியடைந்த நிலையை எட்டவுள்ள ஒரு நாட்டில் எப்படிப்பட்ட கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கிறார்? இதுதான் நஜிப்பின் பொருளாதாரமா?’ நஜிப்: பிரிம் மேலானது என்கிறபோது பெட்ரோல் விலையைக் குறைப்பானேன்? பெர்ன்ஸ்: ரொக்க அன்பளிப்பு என்பது மக்களிடம் மற்றவரை நம்பியிருக்கும் மனநிலையை உருவாக்கி அவர்களை நிரந்தர பிச்சைக்காரர்களாக்கி விடும்.…
இனவாத அரசியல் பினாங்கை பக்காத்தான் இழப்பதற்கு வழி வகுக்கக் கூடும்…
பினாங்கு மாநிலத்தில் 'இனவாத அரசியல்' காரணமாக வாக்குகள் திசை மாறி அதனால் பக்காத்தான் ராக்யாட் அந்த மாநில அரசாங்கத்தை இழக்கக் கூடிய அபாயம் உள்ளதாக அதன் பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார். பக்காத்தான் தோழமைக் கட்சிகளில் ஒன்றான பிகேஆர் போட்டியிடும் பாயான் பாருவில் அந்த…
மூன்று பக்காத்தான் தலைவர்கள் சூலு சதிகாரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
தென் பிலிப்பீன்சிலிருந்து போராளிக் கும்பலொன்று லஹாட் டத்துவுக்குள் ஊடுருவல் செய்ய சதித்திட்டம் போட்டவர்கள் மூன்று பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் என்பதைத் தற்காப்பு அமைச்சு கண்டுபிடித்துள்ளது. இதனைத் தெரிவித்த அதன் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இது தொடர்பான எல்லாத் தகவல்களும் விவரங்களும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்…
சுல்கிப்லியை ஆதரிக்க வேண்டாம் என மஇகா கேட்டுக் கொள்கிறது
ஷா அலாம் நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் சுல்கிப்லி நூர்டின் குறித்த தமது அதிருப்தியை மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த பெர்க்காசா தலைவருக்கு தங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டார். இந்தியர்கள் பற்றி சுல்கிப்லி…
சொய் லெக்: பக்காதானின் வெறுப்பூட்டும் அரசியல்தான் வன்செயல்களுக்குக் காரணம்
ஆளும் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கை அறைகள் தாக்கப்பட்டதற்கு பக்காத்தான் ரக்யாட்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் மசீச தலைவர் சுவா சொய் லெக். அது பிஎன்னுக்கு எதிராக வெறுப்பூட்டி வருவதாக அவர் கூறினார். “மாற்றரசுக் கட்சி பிஎன்னுக்கு எதிராக வெறுப்பூட்டும் அரசியலை ஊக்குவித்து வருகிறது”, என இன்று பிற்பகல்…
நஜிப்: பிரிம் மேலானது என்கிறபோது பெட்ரோல் விலையைக் குறைப்பானேன்?
பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பிரிம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரொக்க அன்பளிப்புப்போல் பெட்ரோல் விலைக்குறைப்பு ஏழை மக்களுக்கு நன்மை அளிக்காது என்கிறார். “பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால் நன்மை அடைவது யார்? பணக்காரர்கள் பயனடைவார்கள். பெரிய, பெரிய கார்களை வைத்துள்ள பணக்காரர்களுக்குத்தான் அது நன்மையாக இருக்கும். “ஆனால், பிரிம்…
முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கான தடையை நஜிப்…
முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது என்னும் அரசாங்க முடிவை பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தற்காத்துப் பேசியிருப்பதாகக் கூறப்படுகின்றது. முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் ஒருவரை ஒருவர் மன வருத்தமடையச் செய்யக் கூடாது என அவர் சொன்னார். "அல்லாஹ்' என்னும் கோட்பாடு மீதான முஸ்லிம் சிந்தனை,…
பிகேஆரின் தேர்தல் பரப்புரைகளில் ‘நேரடித் தொடர்புக்கு’ முன்னுரிமை
இன்னும் 10 நாள்களுக்குத்தான் தேர்தல் பரப்புரைகள் செய்யலாம் என்பதால் இந்தக் கடைசி 10 நாள்களில் பிகேஆர் அதன் பரப்புரைகளில் இரண்டு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும்- அதிகமான செராமாக்கள் ஏற்பாடு செய்யப்படும், வாக்காளர்களை நேரடியாக தொடர்புகொள்வது தீவிரப்படுத்தப்படும். விவாதிக்கப்படும் விவகாரங்களைப் பொறுத்தவரை, அன்றாட வாழ்க்கைப் பிரச்னைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். டிஏபியைப் பொறுத்தவரை…
சுயேச்சையாக போட்டியிடுவதற்காக கமிலியா மன்னிப்புக் கேட்கிறார்
கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக முன்னாள் அம்னோ மகளிர் துணைத் தலைவி கமிலியா இப்ராஹிம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் தமது முகநூல் பதிவில் அவ்வாறு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் நாடாளுமன்றத்தில் மகளி பங்கேற்பை அதிகரிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். "என்னுடைய நடவடிக்கையால் காயப்பட்டவர்களிடம் நான் மன்னிப்புக்…
மகாதீரைப் பொறுத்த வரையில் எப்போதும் ‘அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்’
'உங்களுக்கு நேரம் நன்றாக இல்லை. சீனர்களும் இந்தியர்களும் இப்போது பாஸ் கட்சியையும் பிகேஆர் கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கியிருப்பதும் மலாய்க்காரர்கள் டிஏபி-யை ஆதரிக்கத் தயாராக இருப்பதும் தான் உண்மை நிலை.' டாக்டர் மகாதீர்: தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்க்காசா வேட்பாளர்கள் 'எங்களுக்காக செயல்படுகின்றனர்' மஹாஷித்லா: ஆகவே இப்போது யார் எஜமானர் ? முன்னாள்…
சுங்கத் துறையின் உயர் நிலை அதிகாரி ஒருவர் புத்ராஜெயாவில் சுட்டுக்…
சுங்கத்துறை துணைத் தலைமை இயக்குநர் ஷாஹாருடின் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சென்ற அந்தத் தாக்குதல்காரன் புத்ராஜெயாவில் உள்ள லெபோ வாவாசானில் காலை மணி 8.40 வாக்கில் அவரைச் சுட்டதாக ஊடகத்…
பிகேஆர் வேட்பாளருடைய புதல்வியின் கார் எரியூட்டப்பட்டது
பிகேஆர் வேட்பாளர் டாக்டர் சேவியர் ஜெயகுமாருடைய புதல்விக்குச் சொந்தமான இரண்டு கார்கள் மீது கும்பல் ஒன்று நேற்றிரவு மண்ணெண்ணெய் கொள்கலங்களை வீசியது. அதனால் அந்தக் கார்கள் சேதமடைந்தன. நேற்று கிள்ளான் தாமான் கொளாங் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் இரவு மணி 11 வாக்கில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.…
ஆய்வு: மே 5 தேர்தல் பிஎன் பக்காத்தானுக்கு இடையில் நெருக்கமான…
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் வேளையில் இரு தரப்புக்கும் மக்கள் ஆதரவு 40 விழுக்காட்டுக்கு மேல் இருப்பது ஒர் ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் மய்யம் (Umcedel) மேற்கொண்ட அண்மையை கருத்துக் கணிப்பில் அது தெரிய வந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஏப்ரல்…


