முக்ரிஸின் கூற்று ‘குறைந்த விலை கார்கள் சாத்தியம்தான்’ என்பதை நிரூபிக்கிறது

துணை அமைச்சர் ஒருவர், கார்களின் இறக்குமதிக்குக் கொடுக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் (ஏபி) Read More

சுவாராம்மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசுத்துறைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன

பிஎன்,அரசுத்துறைகளை ஒவ்வொன்றாக பயன்படுத்தி  அடிப்படை மனித உரிமைக்காக போராடும்  அரசுசாரா Read More

இலவச நீர் விநியோகம் தொடர்பில் சிலாங்கூர் அரசு மீது 711…

சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமல் செய்துள்ள இலவச தண்ணீர் விநியோகம் தங்களுக்குக் கிடைக்காதது குறித்து மொத்தம் 711 பயனீட்டாளர்கள் மூன்று தரப்புக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர். அந்த மூன்று தரப்புக்களில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமும் ஒருவர் ஆவார். சிலாங்கூர் அரசாங்கம்,…

ஆண்-பெண் என பிரிக்கப்படுவதில்லை என்கிறது பாஸ்

நெகிரி செம்பிலான் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கூடாரங்கள் அமைக்கப்பட்டது அவர்களை பிரித்து வைக்கும் நோக்கத்தைக் கொண்டது எனக் கூறப்படுவதை பாஸ் இன்று மறுத்துள்ளது. வருகையாளர்களுடைய சௌகரியத்தைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்பட்டதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி சொன்னார். "நாங்கள்…

முன்னாள் சுஹாக்காம் ஆணையர்கள் சுவாராமுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்

சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களைக் கொண்ட ஒர் அமைப்பு சுவாராமுக்கு ஆதரவு நல்கியுள்ளது. சுவாராமை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது. சுவாராம் குறித்து ஆதாரமற்ற அறிக்கைகளை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு வெளியிடக்…

எதிர்ப்புக்கிடையிலும் லங்காட்2-க்கு டெண்டர்கள் அழைக்கப்படுகின்றன

சிலாங்கூர் அரசு இணக்கம் தெரிவிக்காத நிலையிலும் மத்திய அரசு பலமில்லியன் ரிங்கிட் லங்காட் 2 நீர்சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது.அத்திட்டத்துக்கு டெண்டர்கள் சமர்ப்பிக்குமாறு அது கேட்டுக்கொண்டிருக்கிறது. நீர் ஆதார நிர்வாக நிறுவன(பிஏஏபி)த்தின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கை, நவம்பர் 30-க்குள் டெண்டர்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று…

பிகேஆர்: கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதற்காக என்எப்சி-யை விசாரியுங்கள்

முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் என எதிர்த்தரப்பான பிகேஆர் கட்சி விரும்புகிறது. என்எப்சி, கால் நடைகள் கொள்முதலுக்கு சகோதர நிறுவனங்களைப் பயன்படுத்தி நிகழ்ந்துள்ள சட்ட விரோதமாக பரிவர்த்தனைகளில்…

பெற்றோர் அமைப்பு: கல்விப் பெருந்திட்டத்தில் வலு ஏதுமில்லை

புதிய கல்விப் பெருந்திட்டம் குறித்து Page எனப்படும் பெற்றோர் நடவடிக்கைக் குழு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. அதில் 'புதிதாக ஒன்றுமில்லை' என்றும் அது வருணித்தது.   அந்தப் பெருந்திட்டம் மீதான பூர்வாங்க அறிக்கை கல்வி அமைச்சின் பொறுப்புக்களுக்கு 'மறு பெயரிட்டுள்ளது' என அந்த அமைப்பின் தலைவர் நூர் அஸிமா அப்துல்…

புதிய கல்விப் பெருந்திட்டம்: முக்கியமான அம்சங்கள்

கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் நாட்டின் புதிய கல்விப் பெருந்திட்டத்தை இன்று வெளியிட்டார். கல்வி முறையை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தேசியக் கலந்துரையாடlலைத் தொடர்ந்து அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெருந்திட்டத்தின் முக்கியமான அமசங்களை அடுத்த மூன்று மாதங்களில் பொது…

பிரதமர்: தெரு ஆர்ப்பாட்டங்கள், பிட்டத்தைக் காண்பித்தல் போன்றவை நம் கலாச்சாரமல்ல

ஆகஸ்ட் 30-ல், இளைஞர் ஒருவர் கால்சட்டையை இறக்கிப் பிட்டத்தைக் காண்பித்த சம்பவத்தைக் கண்டித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அது ‘மலேசியத்தன்மை அற்றது’என்றார். அப்படிப்பட்ட செய்கைகள் மலேசியப் பண்பைப் பிரதிபலிப்பதில்லை என்பதால் அவற்றை ஊக்குவிக்கலாகாது என்று பிரதமர் இன்று ஒர் உரையில் குறிப்பிட்டார். “தெரு ஆர்ப்பாட்டங்கள் ஊக்குவிக்கத்தக்க மலேசிய…

அரசாங்கம் சுவாராமை வேட்டையாடுவது குற்றத்தை ஒப்புக் கொள்வதாகும்

"ஊழலும் அதிகார அத்துமீறலும் நிறைந்துள்ள ஒர் அரசாங்கம் அத்தகைய சம்பவங்களை அம்பலப்படுத்தப் போவதாக மருட்டும் போது அந்த அரசை என்னவென்று அழைப்பது?" சுவாராம்: ஸ்கோர்பியன் வழக்குக் காரணமாகத்தான் அரசு எங்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது ஜேஎஸ்டாம்: மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம், சங்கம் என்ற முறையில் தன்னை பதிவு…

சுவாராம்: ஸ்கோர்பியன் வழக்குக் காரணமாகத்தான் அரசு எங்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது

ஸ்கோர்பியன்-ரக நீர்மூழ்கிக்கப்பல்கள் வாங்கியதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகக் கூறி Read More

பாபியா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை ராபிஸி அம்பலப்படுத்துவார்

1989ம் ஆண்டுக்கான பாபியா என்ற வங்கிகள், நிதி நிறுவனச் சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி இஸ்மாயில் அந்தச் சட்டம் எப்படி நேர்மையற்ற முறையில் அமலாக்கப்படுகின்றது என்பதை தெரிவிப்பதற்காக விளக்கக் கூட்டங்களை நடத்தவிருக்கிறார். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன…

ஒன்று கூடுவதற்கான அரசமைப்பு உரிமை பற்றி போலீஸ்காரருக்குத் தெரியாது

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பது Read More

‘அம்னோ மூட்டும் நெருப்பை பிகேஆர், தண்ணீரைக் கொண்டு எதிர்க்க வேண்டும்

"அந்த பஸ் மீது வீசப்பட்ட சாயம் அப்படியே இருக்கட்டும். நம்மிடையே முதிர்ச்சி அடையாதவர்கள் இருப்பதற்கும் வன்முறைக்கும் அது நிலையான சாட்சியாக இருக்கும். நாம் ஏன் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கும்." பிகேஆர் பஸ் மீது மீண்டும் சிவப்புச் சாயம் வீசப்பட்டது உண்மை 1:…

சுவாராமுக்கு சோரோஸுடன் தொடர்புண்டா என்று அமைச்சு ஆராய்கிறது

சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) வுக்கு பணஉதவி செய்வதாகக் கூறப்படும் அமெரிக்காவின் அரசுசாரா அமைப்பு ஒன்று நாணய ஊக வணிகரான ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்பு கொண்டதா என்பதை உள்நாட்டு வாணிப,கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு ஆய்வு செய்து வருகிறது. அதன் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் இதனைத் தெரிவித்தார்.…

ஆத்திரமுற்ற அங்காடிக்காரர்கள் மலேசியாகினிமீது பாய்ச்சல்

நேற்று பினாங்கு எஸ்பிளேனேட்டின் பேச்சாளர் மூலையில் அமைதியாக நடந்துகொண்டிருந்த உள்ளூர் ஜனநாயக விழாவில் சில அங்காடிக்கார்கள் புகுந்து குழப்பத்தை விளைவித்தனர். அவர்களின் பேராளர்களில் ஒருவர் மலேசியாகினியையையும் அதன் செய்தியாளரையும் திட்டுத்திட்டென்று திட்டித் தீர்த்தார். தம்மைப்  பாதிக்கப்பட்ட அங்காடிக்காரர்களின் பிரதிநிதி என்றும் பெர்சாத்துவான் மூக்காபுக்கா பூலாவ் பினாங் (Persatuan Mukabuka…

பினாங்கு அம்னோ தலைவர்: 13வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இல்லை

13வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நிகழாது என பினாங்கு அம்னோ தலைவர் ஒருவர் உறுதியாக நம்புகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ மீது அக்கறையும் பரிவும் கொண்டிருப்பதால் தமது முழுத் தவணைக் காலத்தையும் முடிக்க எண்ணம் கொண்டுள்ளார் என பாயான் பாரு அம்னோ தலைவர் அப்துல்…

பாபியா குற்றச்சாட்டு கைவிடப்பட வேண்டும் என ராபிஸி விண்ணப்பம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன வங்கிக் கணக்குகளை அம்பலப்படுத்தியதாக தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி ராம்லி விண்ணப்பித்துக் கொண்டுள்ளார். "அந்த முழு நடவடிக்கையும் தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்க வழக்குரைஞர்களின் அதிகார…

பாஸ் கட்சி syura மன்றத்தில் நசாருதினை தொடர்ந்து வைத்திருக்கிறது

ஹுடுட் சர்ச்சை மீது பாஸ் கட்சி நிலையை நசாருதின் குறை கூறிய போதிலும் அவரைத் தொடர்ந்து syura மன்றத்தில் தொடர்ந்து வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நேற்றிரவு அந்தத் தகவலை வெளியிட்டார். இரவு 9 மணி வாக்கில் தொடங்கிய syura…

வோங்: சிலாங்கூர் விரைவில் வாக்காளர் கணக்காய்வுகளை வெளியிடும்

சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் கணக்காய்வு முடிவுகளை மாநில அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வெளியிடுவார் என மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத் வோங் தெரிவித்துள்ளார். "நாங்கள் அனைத்து மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆய்வுகளை நடத்தினோம். அது மாறுபட்ட தகவலாக இருக்கும்," என்றார்…

பிஎன் பினாங்கு நில விற்பனைகளை ஆராய குழு அமைக்கப்பட்டது

பினாங்கு மாநிலத்தில் 2008ம் ஆண்டுக்கு முன்னதாக பிஎன் நிர்வாகத்தில் சந்தை மதிப்புக்கு குறைவாக அல்லது இலவசமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் கேள்விக்குரிய நிலப் பேரங்கள் பற்றி ஆராய சிறப்பு ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டார். ஜாலான் எஸ்பி…