உள்துறை அமைச்சர்: இசா குறித்து எவ்வித முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை

இசா சட்டம் மற்றும் இதர தடுப்புக்காவல் சட்டங்களுக்கான திருத்தங்கள் குறித்து அரசாங்கம் இன்னும் ஆய்வு செய்து வருகிறது என்று உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுஸ்சேன் இன்று கூறினார். சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அச்சட்டத்தை அகற்றுவது பற்றி அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படும் சமீபகாலச் செய்திகளை அவர் மறுத்தார். அதே வேளை, அப்பிரச்னை…

இசா சட்டத்தில் சீர்திருத்தம், பிரதமர் சிந்திப்பதாகத் தகவல்

2012 ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சர்சைக்குள்ளாகியிருக்கும் பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றங்கள் கொண்டு வந்து கூடுதல் பேச்சு சுதந்திரம் அளிப்பது பற்றியும், சீர்திருத்தங்கள் பற்றி கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி வாக்காளர்களுடான தொடர்பை அதிகரிப்பது பற்றியும் பிரதமர் நஜிப் சிந்தித்து வருகிறார். உள்துறை அமைச்சரின்…

உத்துசான் “கம்யூனிஸ்ட் கொடூரங்களை” சித்திரங்களாக வெளியிட்டுள்ளது

"முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பன்றி இறைச்சியை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்... குழைந்தைகளும் முதியவர்களும் நெருப்புக்குள் எறியப்படுகின்றனர்"  மலாயா கம்யூனிஸ்ட்கள் சாதாரண மக்களுக்கு இழைத்த 'கொடுமைகள்' என அம்பலப்படுத்துவதற்கு ஒவியர் ஹம்சா முகமட் அமின் வரைந்துள்ள சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களில் அவை அடங்கும். அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவின் அச்சுப் பதிப்பிலும்…

“அடுத்த பொதுத் தேர்தலை சேர்ந்தே முடிவு செய்ய வேண்டும்”

அரசாங்கம், மாற்றரசுக் கட்சியுடன் ஆலோசனை கலந்த பின்னரே பொதுத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்ய வேண்டும் என்று பக்காத்தான் ரக்யாட் கோரிக்கை விடுத்துள்ளது. உத்தேச நாடாளுமன்றக்குழு (பிஎஸ்சி) அதன் பணியைச் செய்வதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்படுவது அவசியம் என்றது நினைக்கிறது. பிஎஸ்சி-இல் சேர்வதற்கு…

அம்னோவின் கூட்டாளிகளுக்குத் தொகுதித் தேர்வில் சிக்கல்

பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற நிலையில், அம்னோவுடன் கூட்டுவைத்திருக்கும் கட்சிகள், எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவுசெய்ய இயலாமல் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. விரும்பும் இடங்களைப் பேரம் பேசிப் பெறும்  நிலையில் அவை இல்லை என்றுதான் தோன்றுகிறது. அம்னோ தலைவரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் அப்துல்…

உங்கள் கருத்து: இதற்குப் பெயர் பிரச்சாரம்; வரலாறு அல்ல

"வரலாற்று விவரங்களை எல்லோரும் எப்போதும் பார்க்கலாம். ஆனால் அந்த விவரங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கம் அதனை விளக்குகின்றவரைப் பொறுத்தது."       மகாதீர்: பிரிட்டிஷ்காரர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று நடந்து கொண்டார்கள் புரோஅர்ட்: சுல்தான்கள் தங்கள் மாநிலங்களை நிர்வாகம் செய்ய பிரிட்டிஷாரை அழைத்தனர் என்பதே டாக்டர் மகாதீர் முகமட்…

அனைத்து தேர்தல் சீர்திருத்தங்களும் உடனடியாக அமலாக்கப்படவேண்டும், அம்பிகா

எல்லாத் தரப்புக்களும் ஒப்புக்கொண்ட அனைத்து தேர்தல் சீர்திருத்தங்களும் உடனடியாக அதுவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். விரைவில் அமைக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு விவாதித்து முடிவு செய்த பின்னரே பரிந்துரைக்கப்படும் அனைத்து சீர்திருத்தங்களும் அமலாக்கப்படும்…

நஜிப், 15வது மலேசியா புருணை ஆண்டு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புருணை சுல்தான் சுல்தான் ஹசானால் போல்கியாவுடன் 15வது ஆண்டு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்கிறார். புருணையில் அந்தக் கூட்டம் நிகழ்கிறது. பிரதமருடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் செல்கிறார். வெளியுறவு அமைச்சர் அனீபா அமான், பல அமைச்சர்கள், சபா முதலமைச்சர் மூசா அமான்,…

நஜிப்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஃபோர்பஸ் பாராட்டு

உலகின் முன்னணி வணிக இதழான ஃபோர்பஸின் தலைவர், புதிய பொருளாதார வடிவத்தின்(என்இஎம்)கீழ் நாட்டைச் சீரமைக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின்  முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். “ஈராண்டுகளுக்குமுன் பிரதமர் பதவியேற்ற புதிதில் நல்ல விசயங்களைச் சொன்னார்.இன்று அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறார்”, என்று அமெரிக்கக் கோடீஸ்வரரும், பதிப்பாளருமான ஸ்டீவ் ஃபோர்பஸ் கூறினார்.  “பொருளாதாரத்தைச்…

டெல்கோ சேவை வரிவிதிப்பைத் தள்ளி வைத்தது (விரிவாக)

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்(டெல்கோ) 6 விழுக்காடு சேவை வரியை அமல்படுத்தும் திட்டத்தைத் தள்ளிவைத்தன. சேவை வரி தொடர்பில் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் கலந்துரையாடப் போவதாகவும் அதுவரை சேவை வரி நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அவை அறிவித்தன. கடந்த வியாழக்கிழமை அந்நிறுவனங்கள், கைபேசிகளுக்கான முன்கூட்டிக் கட்டணம் செலுத்திப் பெறப்படும் அட்டைகளுக்கும் சேவைகளுக்கும்…

மலேசியாவுடனான அகதிகள் ஒப்பந்தத்திற்கு புத்துயிரூட்ட கில்லர்ட் முயற்சி

ஆஸ்திரேலியாவில் புகலிடம் நாடியுள்ளவர்களை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு வகை செய்த மலேசியா ஆஸ்திரேலியா ஒப்பந்தத்திற்கு எதிராக அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்திற்கு புத்துயிரூட்டும் முயற்சியில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலை கில்லார்ட் இறங்கியுள்ளார். அந்த நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவருடைய சிறுபான்மை அரசாங்கத்துக்கான…

டெல்கோ, சேவை வரி விதிப்பைத் தள்ளி வைத்தது

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (டெல்கோ) 6 விழுக்காடு சேவை வரியை அமல்படுத்தும் திட்டத்தைத் தள்ளிவைத்தன. சேவை வரி தொடர்பில் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் கலந்துரையாடப் போவதாகவும் அதுவரை சேவை வரி நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அவை அறிவித்தன.

கட்டணத்தைக் குறைப்பீர்: டெல்கோவுக்கு எம்டியுசி கோரிக்கை

மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), தொலைத்தொடர்பு நிறவனங்கள் அவற்றின் சேவையைத் தரத்தை உயர்த்தி கட்டணங்களைக் குறைக்க வேண்டுமே தவிர 6 விழுக்காடு சேவை வரி என்று மக்களின் சுமையை அதிகரிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வரியை அவர்களே ஏற்றுகொண்டு அதன் பின்னரும்கூட மிகப் பெரிய அளவில் ஆதாயம் காண…

பிரிட்டிஷ்காரர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று இயங்கினர்

மலாயாவில் பிரிட்டிஷ்காரர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று இயங்கினர் என்பது தான் உண்மை நிலை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். மலாயா, பிரிட்டிஷாரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது இல்லை என தேசிய பேராசிரியர்கள் மன்ற உறுப்பினர் ஜைனல் கிளிங் கூறியிருப்பதை ஒப்புக் கொண்ட மகாதீர்,…

தாயிப் மீது விசாரணை செய்ய ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் டூச் வங்கி ( Deutsche Bank )க்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை புலனாய்வு செய்யுமாறு ஜெர்மானிய நிதி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியது தொடர்பில் ஏதும் நிகழ்ந்துள்ளதாக என்பதைக் கண்டறிவது அந்த புலனாய்வின் நோக்கமாக இருக்கும். ஸ்விசர்லாந்தில் இயங்கும் புருனோ…

சிலாங்கூர் சொந்தமாக எஃப் வகுப்பு உரிமங்களை வெளியிடும்

சிலாங்கூர் அரசு, மாநில அரசின் குத்தகைகளைப் பெறுவதில் எல்லாக் குத்தகையாளர்களும் போட்டியிட வாய்ப்பளிக்கும் வகையில் சொந்தமாகவே பூமிபுத்ரா நிறுவனங்களுக்கும் பூமிபுத்ரா-அல்லாதார் நிறுவனங்களுக்கும் எஃப் வகுப்பு குத்தகை உரிமங்களை வழங்கும். “இத்திட்டத்தின்கீழ் எல்லாக் குத்தகையாளர்களுக்கும் சிலாங்கூரின் எஃப் வகுப்பு குத்தகை உரிமம் வழங்கப்படும்.இதற்கு வகை செய்ய வேண்டும் என்று சிலாங்கூர்…

மெர்தேகா கதை “கானல் நீராகி” விடும்

"இன்னும் எஞ்சியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள். அதனால் அம்னோ தயாரித்த சுதந்திரப் போராட்ட வரலாறு கரைந்து 'கானல் நீராகி' விடும்'."       மாட் சாபு: அம்னோ வரலாற்று உண்மைகளைக் கண்டு அஞ்சுகிறது ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: அம்னோ ஆதரவு பெற்ற பேராசிரியர்கள்…

மசீச-வும் தொகுதிகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறது

அடுத்த பொதுத் தேர்தலில்  பிஎன் உறுப்புக் கட்சிகள் தொகுதிகளை மாற்றிக் கொள்ளும் வியூகம் பிஎன் வெற்றியை உறுதி செய்யுமானால் அந்த யோசனையை மசீச திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். பிஎன் உறுப்புக் கட்சிகள் அதிக இடங்களை வெல்வது…

இந்தியர் வாக்குகள் திசை மாறினால் சிலாங்கூர் மந்திரி புசார், நுருல்…

அடுத்து வரும் பொதுத் தேர்தலில் இந்தியர் வாக்குகள் மீண்டும் பிஎன் -னுக்கு திரும்பினால் சில பக்காத்தான் பெரும்புள்ளிகள் தங்கள் இடங்களை இழக்க நேரும் என அரசியல் ஆய்வாளரான ஒங் கியான் மிங் கூறுகிறார். அவ்வாறு இந்தியர் வாக்குகள் திசை மாறுமானால் எம்பி-க்களான லெம்பா பந்தாய் நுருல் இஸ்ஸா அன்வார்,…

மாட் சாபு: அம்னோ வரலாற்று உண்மைகளைக் கண்டு அஞ்சுகிறது

அம்னோ தோற்றம் பெறுவதற்கு முன்னரே நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடிய பல ஹீரோக்கள் (வீரர்கள்) உள்ளனர். ஆனால் அந்த ஆளும் கட்சி, தான் எழுதிய வரலாறு உண்மையை எடுத்துரைப்பதற்காக திருத்தப்பட்டால் தனது அதிகாரத்தை இழந்து விடுவோமோ என அஞ்சுகிறது என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறுகிறார். அவர்…

‘ஒரே மலாய் நாட்டுக்குள், ஒரே மலேசியா வெளிநாட்டில்’

"லண்டனில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். இங்கு திரும்பியதும் அவர் வேறு எதனையாவது சொல்வார்"     Read More

மாட் சாபு மீது நடவடிக்கை எடுப்பtது சட்டத் துறைத் தலைவரைப்…

1950ம் ஆண்டு ஜோகூரில் புக்கிட் கெப்போங் துயரச் சம்பவத்தில் உண்மையான வீரர்கள் கம்யூனிஸ்ட்கள் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறியதாக சொல்லப்படும் அறிக்கை தொடர்பில் அவர் மீது நடவடிக்கை மீது எடுப்பதா இல்லையா என்பது சட்டத் துறைத் தலைவரைப் பொறுத்தது என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின்…