டாக்டர் பட்டத்துக்குப் பணமா? மறுக்கிறார் ரோஸ்மா

பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், பிப்ரவரி 12-இல் கர்டின் பல்கலைக்கழகம் வழங்கிய கெளரவ டாக்டர் பட்டத்தைப் பணம் கொடுத்து வாங்கியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். “கர்டின் விருதைப் பணம் கொடுத்து வாங்கியதாக சிலர் கூறுகிறார்கள்.அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. “ஒருவேளை  அவர்களுக்கு (பட்டங்களை)ப் பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் இருக்கலாம். அதனால்தான்…

1பராமரிப்புக்கு சம்பளத்தில் 10% பிடித்தம் “சாத்தியமற்றது”, சுகாதார அமைச்சர்

பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் 10விழுக்காட்டை சுகாதாரக் காப்புறுதித் திட்டமான 1பராமரிப்புத் திட்டத்துக்குச் செலுத்த வேண்டியிருக்காது என்று சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய் நேற்று அறிவித்தார். “அது அரசின் எண்ணமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.சம்பளத்தில் 10விழுக்காட்டைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்”, என்றாரவர். மாற்றரசுக் கட்சியினர்…

உங்கள் கருத்து: அம்னோ ஏன் அடையாள அட்டை திட்டம் மீதான…

"சபாவில் தங்களது உண்மையான எஜமானர்கள் அம்னோக்காரர்கள் என்பது ஒங்கிலி-க்கும் டொம்போக்-கிற்கும் தெரிந்திருக்க வேண்டும். காரணம் அந்த அடையாளக் கார்டு மோசடியில் முக்கியமாக நன்மை அடைந்தது அம்னோக்காரர்கள்." அடையாள அட்டை  திட்டம் மீது ஆர்சிஐ பற்றி ஏதும் தெரிவிக்காமல் நஜிப் சபாவிலிருந்து புறப்பட்டார் ஹலோ: சபா பிஎன் -னில் உள்ள…

சுவா-லிம் சொற்போர்: தோற்றவர்…?

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மற்றும் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சொற்போர் காட்டமாக இருந்த போதிலும், இருவரும் அடிக்கடி தாங்கள் பேச வேண்டிய தலைப்பிலிருந்து விலகிச் சென்று வேறு விசயங்களை நுழைத்தனர். "திருப்புமுனையில் சீனர்கள் - இரு கட்சி முறை இரு…

தேர்தலில் பாஸ் கட்சி புதுமுகங்களையும் முஸ்லிம் அல்லாதாரையும் நிறுத்தும்

அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி பல புதுமுகங்களை நிறுத்தும். அவர்களில் பல முஸ்லிம் அல்லாதவர்களும் தொழில் நிபுணர்களும் முன்னாள் அரசாங்க ஊழியர்களும் இருப்பதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார். அவர் 'புத்ராஜெயாவுக்கு பாஸ் செல்லும் வழிமுறை' என்னும் தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட…

புந்தோங், ஈப்போவில் இண்ட்ராப் ஏற்பாட்டில் அபு பொதுக்கூட்டம்

54 ஆண்டுகள் மலேசியர்கள் நம்பிக்கையோடு வாக்களித்தும் நியாயமான சமூக பொருளாதார உரிமைகளைப் பாகுபாடின்றி நிலை நிறுத்த அம்னோ தலைமையிலான பாரிசன் நேசனல் கூட்டணி தவறிவிட்டதால் அடுத்த 13  ஆம் பொதுத் தேர்தலில் அதற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரைகளை நாடெங்கும் நடத்தி வரும் "எதுவாயினும் அம்னோ…

கேஎப்சி, தனது ஐ சிட்டி கடையில் தாக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டது

ஷா அலாம் ஐ சிட்டி கேஎப்சி கடையில் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட டேனி இங்-கை கேஎப்சி மலேசியா நிர்வாகம் இன்று சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. அந்த விரைவு உணவு கடை கட்டமைப்பு "அன்றைய தினம் எங்கள் ஊழியர்கள் வழங்கிய திருப்தி இல்லாத சேவைக்கும் ஏற்படுத்திய அசௌகரியத்துக்கும் அங்கு…

நஜிப்: பிஎன் கொள்கைகள் கோடீஸ்வரர்களை உருவாக்கின

நாட்டில் இன்று இத்தனை கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர் என்றால் அதற்கு பிஎன் அரசின் சலுகைகள்தான் காரணம் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “கோடீஸ்வரர்களின் பட்டியலைப் பார்த்தேன். ஒவ்வொருவரையும் உன்னிப்பாகக் கவனித்தேன்.அவர்களில் சிலர் இங்கும் இருக்கிறார்கள். “அவர்கள் செல்வந்தர்கள் ஆனார்கள் என்றால் அதற்கு எங்கள் கொள்கைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக…

இப்ராஹிம் அலி: அடுத்த பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்

அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அலி அறிவித்துள்ளார். என்றாலும் பாசிர் மாஸ் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அதில் நிற்பதா அல்லது வேறு இடத்தில் களம் இறங்குவதா என்பதையும் சுயேச்சை வேட்பாளாராக நிற்பதா அல்லது எந்த அரசியல் கட்சியையும்…

விவாதத்திற்கு முன்னர் சுவா ஏவுகணைகளை வீசுகிறார்

"மலேசிய சீனர்கள் அரசியல் திருப்பு முனையில்" என்னும் தலைப்பிலான மாநாட்டை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்  தொடக்கி வைத்துள்ளார். தமது தொடக்க உரையில் அவர் பக்காத்தான் ராக்யாட்டை முழுமூச்சாகத் தாக்கிப் பேசினார். இன்று மாலை  டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-குடன் அவர் நடத்தும்…

பகாங் பெல்டாவில் அன்வாருக்கு உற்சாகமான வரவேற்பு

நேற்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கொள்ளைப்புறமாக விளங்கும் பகாங்கில் உள்ள பெல்டா குடியிருப்பு ஒன்றுக்குச் சென்றபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அண்மையில் மலாக்கா, மாச்சாபில் உள்ள பெல்டா நிலத்திட்டத்துக்கு அவர் சென்றபோது ஏற்பட்ட குழப்பம்போல் அல்லாது இங்குள்ள மக்கள்…

பெக்கானில் அன்வாரின் செராமா காரணமாக 5கிமீ தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல்

பெக்கானில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவு நடைபெறவிருந்த பாஸ் தலைமையகத்தை நோக்கிச் செல்லும் முக்கிய சாலையில் போலீசார் சாலைத்தடுப்பு ஒன்றைப் போட்டதால் 5கிலோமீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாக அன்வாரின் பேச்சைக் கேட்கச்  சென்றவர்கள் “40 நிமிடத்துக்கு மேலாக” போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள…

லிம்-சுவா சொற்போர் இனவெறியைப் பிரதிபலிக்கவில்லை

இன்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் மசீச தலைவர் சுவா சொய் லெக்கும் இடையில் நடக்கும் சொற்போர் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள வேளையில் சிலர் சொற்போர் இனச் சார்புடையது எனக் குறைகூறியுள்ளனர். ஆனால்,அந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகம் (அஸ்லி) அதை…

கெர்ட்டினைப் பொறுத்த வரையில் அது “நான் உங்களுக்கு உதவுகிறேன், நீங்கள்…

"எது மோசமானது என்பதை என்னால் முடிவு செய்ய முடியவில்லை- கெர்ட்டினின் அறியாமையா அல்லது அதன் பேராசையா? ஆனால் கல்வி என்பது வர்த்தகமாகி விட்ட போது கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து விடும்." கெர்ட்டின் ரோஸ்மாவைத் தலை மகள் எனத் தவறாகக் குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டது பார்வையாளன்: கெர்ட்டின் பல்கலைக்கழகத்…

நஜிப் ஆர்சிஐ பற்றி அறிவிக்காமல் சபாவிலிருந்து புறப்பட்டார்

அடையாளக் கார்டு திட்டத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (RCI) அமைக்கப்படுவது தொடர்பில் எந்த அறிவிப்பும் செய்யாமல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று சபாவிலிருந்து புறப்பட்டார். அவர், அந்த ஆணையம் அமைக்கப்படுவது மீது தமது சபா பயணத்தின் போது அறிவிப்பு செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அடையாளக்…

புது டில்லி மாநாட்டில் இண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி பங்கேற்கிறார்

இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல் படும் "மனித உரிமை பாதுகாப்பு (HRDI)"  அமைப்பு தனது 2  ஆவது சர்வதேச பேராளர்கள் மாநாட்டை எதிர்வரும் பிப்ரவரி 24  மற்றும் 25  ஆகிய தேதிகளில் புது டில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு முறையே புது டில்லியில் அமைந்திருக்கும் ஹிந்தி பவன் மற்றும் …

குடியிருப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அமைச்சரின் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது

கடந்த ஆண்டில் பொது வீடமைப்புத் திட்டக் குடியிருப்பாளர் சங்கங்களின் நடவடிக்கைக்காக  கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் (டிபிகேஎல்) ஒதுக்கிய நிதி, கூட்டரசு பிரதேச மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சரின் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் இவ்வாறு கூறியுள்ளார். இன்று பங்சாரில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய…

கேர்ட்டின் பல்கலைக்கழகம் ரோஸ்மாவின் டாக்டர் பட்டம் மீதான முக நூல்…

கேர்ட்டின் பல்கலைக்கழக முக நூல் பக்கத்தில் பல நாட்களாக கண்டனம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த உயர் கல்விக் கூடம் தனது முக நூல் பக்கத்தில் கருத்துக்கள் தெரிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. "பயனீட்டுக்கான நிபந்தனைகளும் முக நூல் நிபந்தனைகளும் தொடர்ந்து மீறப்படுவதாலும் 2006ம் ஆண்டுக்கான அவதூறுச் சட்டம், காமன்வெல்த் குற்றவியல்…

செர்டாங் தமிழ்ப்பள்ளி கூரை சரிவு பிரதமர் நஜிப்பின் போலி அரசியலுக்கு…

இந்திய சமூகம் பிரதமர் நஜிப்பின்  வானவேடிக்கை அரசியலில் ஏமாறக்கூடாது என்று பலமுறை எச்சரித்திருந்தோம். இன்று அனைத்து மலேசியர்களிடமும், குறிப்பாக இந்திய சமூகத்தின் துன்பங்கள் மீது, பரிவுமிக்கவர் போன்றப் பாவனை காட்டித் திசைதிருப்புவதில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார்.  ஆனால் நேர்மையான தலைமைத்துவத்தின் உண்மையான அணுகுமுறையின்றி ஒருபோதும் இந்திய சமூகத்தின் இன்னல்கள்…

அன்வார் தமது கருத்துக்களை மீட்டுக் கொள்ள வேண்டும் அல்லது நீக்கப்படலாம்…

இஸ்ரேல் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த சர்ச்சைக்குரிய அறிக்கை மீது தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பினாங்கில் அவருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ள அந்தப் பேரணி டோபி காட் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் நடைபெறும்…

ஐயா, விளையாட்டுத்தனம் வேண்டாம்:ஹசானுக்கு ஆயர் அறிவுறுத்தல்

கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களை மதம் மாற்றுவது தொடர்பில் ஹசான் அலி கூறியுள்ளது “குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கிறது. ஆனால், எதையும் எளிதில்  நம்பிவிடுவோரை அது வெகுவாக ஆத்திரம் கொள்ளவும் வைக்கும்” என்று வருணித்துள்ளார் கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் டான் சீ இங். “மக்கள் அவ்வளவு எளிதில் அதை நம்பி …

டிஏபி: கடன் வாங்குவதைச் சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் சட்டங்களை திருத்தியது

கடன் வாங்குவதை சட்டப்பூர்வமாக்குவதற்கு அரசாங்கம் வாங்கும் கடன்களுக்கான உச்சவரம்பை "பல முறை" உயர்த்தி விட்டதே நாட்டின் கடன் அளவு அதிகரித்து வருவதற்குக் காரணம் என டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. "சட்டப்பூர்வ கடன் உச்ச வரம்பு என்பதற்கு அர்த்தமில்லாமல் போகும் வகையில் தனது விருப்பங்களுக்கு ஏற்ப அந்த உச்ச வரம்பை…