போலீஸ்:கைதிகள் சித்திரவதை என்பது ஆதாரமற்ற,தீயநோக்கம் கொண்ட குற்றச்சாட்டு

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக சில குறிப்புகளில் கூறப்பட்டிருப்பதை போலீசார் அடியோடு மறுக்கிறார்கள். தடுப்புக்காவலில் இருப்போர் சித்திரவதைக்கு ஆளானதாக புகார் எதுவும் செய்ததில்லை; அவர்களிடம் வாரந்தோறும் மருத்துவசோதனை நடத்தும் கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவர்களும் அவர்களின் உடலில் காயங்களைக் கண்டதாக புகார் செய்ததில்லை என்று போலீஸ் பேச்சாளர்…

எச்ஆர்பி பதிவு மீதான மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

தன்னை ஒரு கட்சியாக பதிவு செய்யுமாறு சங்கப் பதிவகத்துக்கும்(ஆர்ஓஎஸ்) உள்துறை அமைச்சுக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனித உரிமைக் கட்சி(எச்ஆர்பி), செய்துகொண்ட மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதனை நிராகரித்த நீதிபதி ரொஹானா யுசுப், அவ்வாறு கேட்டுக்கொள்ளும் உரிமை எச்ஆர்பிக்கு இல்லை என்றார். அத்தீர்ப்பை எதிர்த்து முறையீட்டு…

சிலாங்கூர் எம்பி அவரின் அரசியல் செயலாளரைத் தற்காத்துப் பேசுகிறார்

தம் அரசியல் செயலாளர் ஃபாகா ஹுசினை மாசுபடுத்தும் இயக்கத்தைக் கண்டித்த சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், “சில நேரங்களில் உண்மை உறுத்தும்” என்றார். “அரசியலில் ஃபாகா முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக சிலர் கருதுகிறார்கள்.அவர் உண்மைகளை எடுத்துரைப்பதன்வழி எனக்கும் மாநிலத்துக்கும் பக்காத்தானுக்கும் தம் கடமையைச் சரிவர செய்து வருகிறார்.ஆனால், உண்மை…

ISA சித்திரவதை: அரசு மருத்துவர் அறிவார்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள்,போலீஸ் விசாரணையில் சித்திரவதைக்கு உள்ளானபோது  தங்கள் காயங்களுக்கு மருந்திட்ட அரசாங்க மருத்துவர்தான் தங்களின் முக்கிய சாட்சி என்கிறார்கள். அம்மருத்துவர், கைதிகள் பேராக்கில் தைப்பிங் தடுப்புமுகாமுக்கு அனுப்பப்படுமுன்னர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு ஒவ்வொரு வாரமும் சென்று அவர்களின் காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பது வழக்கம் என்று…

பிஎஸ்சி: லினாஸ் தொழில் கூடத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்குங்கள்

Lamp என அழைக்கப்படும் அரிய மண் தொழில் கூடம் பெரிய விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை. அதனால் அதற்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி வழங்கப்படவேண்டும் என அந்த தொழில் கூடம் மீது அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு கூறுகிறது. 700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில்…

13வது பொதுத் தேர்தல்: பிஎன் நிகழ்ச்சி நிரலில் ‘மகாதீர் சிந்தனைகளை’…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிஎன் நிகழ்ச்சி ந்ரலில் 'மகாதீர் சிந்தனைகளை' ரகசியமாகத் திணிப்பதற்கு அந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முயன்று வருகிறாரா ? நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தை மகாதீர் குறை கூறியிருப்பதைத் தொடர்ந்து அந்தக் கேள்வியை மூத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட்…

‘ஆதாரச் சட்டம் செய்தி இணையத் தளங்களுக்கு மரண அடி அல்ல’

அரசாங்கத் தகவல் ஏட்டில் இன்னும் அறிவிக்கப்படாத- 1950ம் ஆண்டுக்கான சட்டத் திருத்தங்களில் ஒன்றான அதன் 114 (ஏ) பிரிவு, இணைய எழுத்தர்கள் கீழறுப்புச் செய்யும் பொருட்டு  செய்தி இணையத் தளங்களில் தேச நிந்தனைக் கருத்துக்களை குவித்து விடுவர் என ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்…

குவாண்டனாமோ பாணி சித்தரவதைகள்: நாம் மாறுபட்டவர்கள் அல்ல

"குவாண்டனாமோ சித்தரவதைகள் வெளிச்சத்துக்கு வந்ததும் நாம் அமெரிக்கர்களுக்கு சாபம் போட்டோம். ஆனால் நாம் அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லை என்பது இப்போது தெரிந்து விட்டது. ஒரு வேளை அவர்களை விட மோசமாகவும் இருக்கலாம்."     கமுந்திங்கிலிருந்து கொடுமை எனக் குமுற வைக்கும் 'சித்தரவதைக் குறிப்புக்கள்' ஜெஸி: சித்தரவதை…

65 என்எஸ் பயிற்சியாளர்கள் இன்னமும் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்

கோலா நெராங்-கில் உள்ள டூசுன் ரீசோர்ட் முகாமில் தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் பயிற்சியாளர்களில் 65பேர்  இன்னமும் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கோலா நெராங் மருத்துவமனையில் எச்1என்1-க்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தேசிய சேவைப் பயிற்சித் துறை தலைமை இயக்குனர் அப்துல் ஹாடி ஆவாங்…

இசா ‘சித்தரவதைக் குறிப்புக்கள்’ பற்றி விவாதிக்க நாளை சுஹாக்காம் கூடுகிறது

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குறிப்புக்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கையை நாளை சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் விவாதிக்கும். கமுந்திங் முகாமிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் அந்தக் குறிப்புக்களை மலேசியாகினி அம்பலப்படுத்தியுள்ளது. அந்த விவகாரம் ஆணையத்தின்…

பெர்சே 3.0 பேரணியின் போது ‘கூடின பட்சக் கட்டுப்பாட்டுடன்’ நடந்து…

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியை எதிர்கொள்வதற்கு பின்பற்றப்பட்ட போலீஸ் நடைமுறைகளை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே, அரசாங்கம் அமைத்துள்ள சுயேச்சைக் குழுவிடம் விளக்கியுள்ளார். 'கூடின பட்சக் கட்டுப்பாட்டுடன்' நடந்து கொள்ளுமாறு போலீசாருக்கு ஆணையிடப்பட்டிருந்தது என அவர் முன்னாள் தேசியப் போலீஸ் படைத்…

கிளந்தான் மந்திரி புசாருக்கு ஹஜ் பயண ஏற்பாட்டை வழங்க முன்…

கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டிற்கு ஹஜ், உம்ரா பயணங்களுக்கான  ஏற்பாட்டை வழங்க முன் வந்தது தொடர்பான ஊழல் தடுப்பு விசாரணையை மீண்டும் திறக்க முடியும் தொடங்க முடியும். அந்த  விவகாரத்திலிருந்து மந்திரி புசாரை எம்ஏசிசி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விடுவித்துள்ள போதிலும்…

காற்றின் தூய்மைக்கேடு ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அளவுக்கு இல்லை

காற்றின் தரம் இன்று நல்ல நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. சுற்றுப்புறத்துறை இன்று காலை சுமார் 7மணிக்கு வெளியிட்ட காற்றுத்தூய்மைக்கேட்டுக் குறியீட்டு எண் எந்தப் பகுதியிலும் காற்றின் தூய்மைக்கேடு மோசமாக இருப்பதாய்க் காட்டவில்லை. நேற்று காலை மணி 7-க்கு காற்றுத் தூய்மைக்கேடு மோசமாக இருந்த போர்ட் கிள்ளான், பெட்டாலிங் ஜெயா,கோலா…

பெர்சே 3.0: போலீஸ்காரர்களின் மீதான வழக்கு ஒத்திவைப்பு

பெர்சே 3.0 பேரணியில் குவாங் மிங் டெய்லி படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்ட போலீஸ்காரர்கள் இருவர்மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களைக் காட்சிக்கு வைக்க கால அவகாசம் தேவை என்று அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து அது ஒத்திவைக்கப்பட்டது. இனி, லான்ஸ் கார்ப்பரல் முகம்மட் அஸ்ரி முகம்மட் சோப்ரி, கான்ஸ்டபள் ஷாருல்…

லினாஸ் மீதான பிஎஸ்சி அறிக்கை மக்களவையில் தாக்கல்

லினாஸ் ஆலை மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பகாங், கெபெங்கில் உள்ள அந்த அரியமண் ஆலை மீது ஆய்வுநடத்தி பரிந்துரைகள் வழங்க மார்ச் 30-இல் அமைக்கப்பட்ட அக்குழுவுக்கு மூன்றுமாத அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால், அதற்கு முன்பே அது அறிக்கையைத் தயாராகிவிட்டது. ஆனால், அறிக்கையில்…

மைரா ‘இண்டர்போல் பட்டியலில் இல்லை, சுதந்திரமாக ஐரோப்பாவில் பயணம் செய்கிறார்’

இண்டர்போல் என்னும் அனைத்துலகப் போலீசின் 'தேடப்படுவோர்' பட்டியலில் தாம் இருப்பதாகச் சொல்லப்படுவதை கஸக்ஸ்தானைச் சேர்ந்த மைரா நஸர்பயேவ்  தமது பேச்சாளர் வழி மறுத்துள்ளார். போலீசார் மைராவைக் கைது செய்யவில்லை என்பதையும் ஐரோப்பியப் பயணத்தை அவர் தொடங்கியிருப்பதையும் நிரூபிப்பதற்காக மைரா டுபாயில் எடுத்த படம் ஒன்றையும் ரோன் டோரோசியான் என்ற…

கொடுமை எனக் குமுறவைக்கும் கமுந்திங் ‘சித்திரவதைக் குறிப்புகள்’

கமுந்திங் தடுப்புமுகாமிலிருந்து கடத்திவரப்பட்ட சில ‘சித்திரவதைக் குறிப்புகள்’ நம் அதிகாரிகளின் விசாரணை முறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன. அந்தத் தடுப்புமுகாமிலிருந்து கடத்திக்கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டு மலேசியாகினியிடம் ஒப்படைக்கப்பட்ட குறிப்புகள், அங்கு உள்ள 45 கைதிகள் அனுபவித்த குவாண்டானாமோ-பாணி ‘சித்திரவதைகள்’ பற்றித் தெளிவாகவே விவரிக்கின்றன. அவற்றில் தேதிகள் குறிப்பிடப்படவில்லை.ஆனால், கமுந்திங்குக்கு…

பணத்தை வெள்ளையாக்கியதாக சம்சுபாஹ்ரெய்ன் மீது 17 குற்றச்சாட்டுக்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஆலோசகர் சம்சுபாஹ்ரெய்ன் இஸ்மாயில் மீது மொத்தம் 4.14 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பணத்தை வெள்ளையாக்கியதாக மேலும் 17 குற்றச்சாட்டுக்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே என்எப்சி-யின் முகமட் சாலே இஸ்மாயிலை ஏமாற்றியதாக சம்சுபாஹ்ரெய்ன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்…

நஸ்ரி: அரசாங்க ஆணையைப் பெற்ற வழக்குரைஞர் ஏஜி மீது வழக்குப்…

அரசாங்கத்திடமிருந்து சிறப்பு ஆணையைப் பெறும் வழக்குரைஞர் ஒருவர், ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பில் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியும் என சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். "தனி நபர் என்ற முறையில் ஏஜி மீது அவருக்கு…

டாக்டர் மகாதீர் மீண்டும் அச்சத்தை விதைக்கிறார்

"உண்மையில் மலாய்க்காரர்கள் பெரிதும் மறி விட்டனர். மகாதீருடைய போலித்தனத்தை அவர்கள் இப்போது நன்கு அறிந்துள்ளனர்." டாக்டர் மகாதீர்: சீர்திருத்தங்கள் பதற்றத்தை உருவாக்கக் கூடும் வெறும் பேச்சு: ஆம். டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, சீர்திருத்தம் இந்த நாட்டுக்கு நல்லதல்ல. ஊழல் மலிந்த அம்னோ அரசாங்கத்தின் கீழ் மலேசியா மேலும்…

PKFZ வழக்கில் நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும் என லிங்…

PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி விவகாரத்தில் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக், அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அகமாடி அஸ்னாவி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டுள்ளார். நீதிமன்றம்…

மலாய் அமைப்புக்கள்: டோங் ஜோங் தகராற்றை மூட்டுகிறது

அதிகமான சீன சுயேச்சைப் பள்ளிக்கூடங்களை அமைப்பதற்கு சீன கல்விப் போராட்ட அமைப்பான டோங் ஜோங் நடத்தும் இயக்கம் குழப்பத்தைக் கொண்டு வரும் என அரசு சாரா மலாய் அமைப்புக்களின் கூட்டணியான மலாய் ஆலோசனை மன்றம் (MPM) எச்சரித்துள்ளது. அந்த டோங் ஜோங் இயக்கம் நாட்டின் பல வழிக் கல்வி…

நபிகள் நாயகம் ஹஜ் பயணத்தைத் தாமதப்படுத்தியதை பாஸ் சுட்டிக் காட்டுகிறது

ஹஜ் யாத்திரைக் காலத்தின் போது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பாஸ் கட்சி உறுப்பினர்கள் தங்களது ஹஜ் பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என அந்தக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளதை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தற்காத்துப் பேசியிருக்கிறார். அது போன்ற முடிவு திருமெக்காவின் Quraish-டன்…