தேர்தல் முன்கூட்டியே நடக்கும்: அன்வார் ஆருடம்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,13வது பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படுவதைவிட விரைவாக நடத்தப்படலாம் என்று ஆருடம் கூறியுள்ளார். அண்மைய கூட்டமொன்றில் பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் பலரும் மே அல்லது ஜூன் மாதம் தேர்தல் நடக்கலாம் என்று ஊகம் தெரிவித்ததாக அவர் கூறினார். அரசாங்கம் மக்களுக்கு அளித்துவரும் உதவிகள் மார்ச்…

இந்தியர்களின் பிரச்னைகளை பேரரசரிடம் நேரில் தெரிவிக்க இண்ட்ராப் விருப்பம்

"மலேசியாவின் வளப்பத்திற்கு இந்தியர்கள் ஆற்றிய பங்கையும், அவர்கள் இன்று அனுபவிக்கும் சமூக, பொருளாதார அவலங்களையும், கேட்பாரற்று இருக்கும் நிலைமைகளையும் தெளிவாக" விவரித்து ஐந்து பக்க மகஜர் ஒன்றை இண்ட்ராப் நேற்று பேரரசரிடம் தாக்கல் செய்தது. பேரரசரின் அந்தரங்கச் செயலாளரின் தனிச்செயலாளர் புவான் ஜைனாப்பிடம் அந்த மகஜரை நேற்று காலை…

“ஆமாம் ரோஸ்மா அவர்களே, நாங்கள் உண்மையில் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறோம்”

"அழகான ஆடைகள், ஆபரணங்கள், கைப்பைகள் வாங்குவதிலும் அமெரிக்காவில் வாழ்த்துத் தெரிவிக்கும் விளம்பரத்தை பெறுவதிலும் நீங்கள் படைத்துள்ள சாதனைகளைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்." ரோஸ்மா: என்னைக் குறை கூறுகின்றவர்கள் விரக்தி அடைந்துள்ளனர், பொறாமைப்படுகின்றனர். பெண்டர்: ரோஸ்மா மான்சோர் அவர்களே, உங்களைக் கண்டு பொறாமைப்படுகிறோமா? நிச்சயம் நான் பொறாமைப்படுகிறேன். யாருக்குத்தான் பொறாமை…

வாக்காளர் தணிக்கை ஆயிரக்கணக்கான போலிப் பதிவுகளை அம்பலப்படுத்தியது

வாக்காளர் பட்டியல் தணிக்கை செய்யப்பட்ட போது பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர் பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது அதிர்ச்சியூட்டும் தகவல் ஆகும். அந்த போலி வாக்காளர் பதிவுகள் கிட்டத்தட்ட 200,000-ஆக இருக்கும் என தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிடம் (பிஎஸ்சி) நேற்று கூறப்பட்டது. அரசாங்கத்துக்குச்…

பெர்க்காசா: நஜிப் பத்துமலைக்கு “ஒற்றுமை ஒளி விளக்குடன்” சென்றார்

பத்துமலையில் நடந்தப்பட்ட தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சென்றது இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானது என பேராக் முப்தி அறிக்கை விடுத்துள்ள வேளையில் அந்த வருகை மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியாக இருக்கக் கூடுமென்று கூறி நஜிப் நடவடிக்கையை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி இன்று நியாயப்படுத்த முயன்றுள்ளார்.…

பங்குச் சந்தை இணையத்தளம்மீது சைபர் தாக்குதல்

மலேசியப் பங்குச் சந்தையின் இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்கானது. பலமுனைகளிலிருந்தும் போக்குவரத்து அளவுமீறி பெருகியதால் பயனர்கள் அந்த இணையத்தளத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக பங்குச் சந்தை இன்று ஓர் அறிக்கையில் கூறியது. நேற்று பயனர்கள் பலரும் பார்க்க முடியாதவாறு தன் இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது என புர்ஸா மலேசியா…

லியோ: 1பராமரிப்புப் பற்றி தப்பும் தவறுமாகக் கூறி அச்சுறுத்துகின்றனர்

சில தரப்பினர், 1பாராமரிப்புத் திட்டம் தொடர்பில் தப்பும்தவறுமான தகவல்களைக் கூறிப் பொதுமக்களைப் பயமுறுத்தப் பார்க்கிறார்கள் என்கிறார் சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய். “அவ்விவகாரம் தொடர்பில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களைக் குழப்பி வருகிறார்கள்.எடுத்துக்காட்டுக்கு, பணியாளர்கள் சம்பளத்தில் 10விழுக்காட்டைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறி மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள்”,…

உண்ணாவிரத போராட்டக்காரர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய இரத்த அழுத்த நிலையை அறிந்து கொள்ள மருத்துவ உதவியாளர்கள் தவறியதைத் தொடர்ந்து அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செருவான் கெமிலாங் மாஹ்முர் சென் பெர்ஹாட் என்ற வெட்டு மர நிறுவனத்தில் ஒர் முதலீட்டாளரான…

ரௌடிக் கும்பல் தாக்கினாலும் மாணவர் விளக்கக் கூட்டங்கள் தொடரும்

கல்வித் துறை சுதந்திரம் மீதான விளக்கக் கூட்டங்களை எதிர்ப்பாளர்கள் வன்முறையைக் கொண்டு தாக்கினாலும் அந்தக் கூட்டங்கள் நாடு முழுவதும் தொடரும் என அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். பிப்ரவரி 26ம் தேதி ஜோகூர் பத்து பஹாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடுத்த விளக்கக் கூட்டத்துக்குப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு…

இஸ்ரேல் விவகாரத்தில் “இரட்டை முகம்”காட்டும் அன்வாரைச் சாடுகிறார் நஜிப்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,பாலஸ்தீன-இஸ்ரேலிய விவகாரம் குறித்து வெவ்வேறு கூட்டங்களில் வெவ்வேறு விதமாக பேசி வருவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  சாடினார். “ஒரு நிலைப்பாட்டைக் கொண்டால் அதில் உறுதியாக நிற்க வேண்டும். நீங்கள் பாச்சோக்கில் பேசினாலும் தாமான் துன்னில் பேசினாலும் அது உலகம் முழுவதும் தெரிந்துவிடும்”.இன்று…

குப்பைத்தொட்டிக்குச் செல்ல வேண்டியது அம்னோதானே தவிர புக்கு ஜிங்கா அல்ல

உங்கள் கருத்து: “பண்பாடற்ற இந்தத் துணை அமைச்சர் ‘புக்கு ஜிங்கா’வைத் தொட்டியில் போட்டார்.அச்செயல் பரிதாபத்துக்குரிய அவரது பண்பைக் காண்பிக்கிறது.” பெல்டா குறித்துக் கருத்துரைக்கும் புக்கு ஜிங்காவைக் குப்பை என்றார் துணை அமைச்சர் பிரளயம்: பிரதமர்துறை துணை அமைச்சர் அஹமட் மஸ்லான், மற்றார் கருத்துக்கும் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு…

அன்வாருடைய மலாக்கா செராமாவில் கைகலப்பு

நேற்று மலாக்கா அலோர் காஜாவில் உள்ள பெல்டா நிலக் குடியேற்றத் திட்டம் ஒன்றில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வில் பிகேஆர் ஆதரவாளர்களுக்கும் பிஎன் ஆதரவாளர்களுக்கும் இடையில் கைகலப்பு மூண்டது. அந்த செராமாவில் கலந்து கொண்டவர்களுக்கு 50க்கும் மேற்பட்ட பிஎன் ஆதரவாளர்கள் "வேண்டுமென்றே ஆத்திரத்தை…

நில விற்பனை மீது அவதூறு கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள், லிம்

பினாங்கு மேம்பாட்டுக் (பிடிசி) பாயான் முத்தியாராவில் உள்ள அரசாங்க நிலத்தை பேச்சு வார்த்தை மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூறிக் கொள்வதை நிறுத்துமாறு அம்னோ தலைவர்களை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார். அந்த நில விற்பனை திறந்த டெண்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர். . அம்னோ…

மகாதீர்: “மலேசியாவில் ஆட்சி மாற வேண்டும் என அமெரிக்காவும் இஸ்ரேலும்…

மலேசியாவில் ஆட்சி மாறுவதைக் காண அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆர்வமாக இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். மலேசிய நிர்வாகம் தொகுதி சேராக் கொள்கையைப் பின்பற்றுவதும் சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் நல்ல உறவுகளை வைத்திருப்பதும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை என அவர் தமது சே டெட் வலைப்பதிவில்…

பாஸ் பசுமைப் பேரணிக்கு உறுப்பினர்களைத் திரட்டுகிறது

பாகாங்கில் லினாஸ் அரிய மண் தொழிற்கூடம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக பிப்ரவரி 26ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமைப் பேரணி 2.0க்கு (Himpunan Hijau) ஆதரவாக ஒன்று திரளுமாறு அந்த மாநில பாஸ் தனது உறுப்பினர்கள் அனைவருக்கும் பணித்துள்ளது. மக்களுக்குப் பாதகமான விளைவுகளைக் கொண்டு வரும் அந்தத் தொழிற்கூடத்தை…

ராமசாமி த ஸ்டார், பத்திரிக்கையாளர் மீது 10 மில்லியன் ரிங்கிட்…

பினாங்கு துணை முதலமைச்சர் II டாக்டர் பி ராமசாமி, த ஸ்டார் நாளேட்டின் பத்திரிக்கையாளர்,  பத்திரிக்கை வெளியீட்டாளர் ஆகியோருக்கு எதிராக 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். மெசர்ஸ் ஏ சிவநேசன் அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக அந்த வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற…

பிரதமர் போலீசாருக்குச் சொல்கிறார்: பொது மக்களுடைய நம்பிகையை பெற முயலுங்கள்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படவிருப்பதைக் கருத்தில் கொண்டு போலீசார் புதிய சவால்களை எதிர்கொள்வதற்குத் தங்களது ஆற்றலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். "நன்கு கல்வி கற்ற, விஷயங்களை அறிந்த சமுதாயம் உயரிய தரத்தை எதிர்பார்க்கிறது. ஆகவே போலீசார் புதிய எதிர்பார்ப்புக்களை…

சுங்கை சிப்புட் மஇகா பழனிவேல் போட்டியிடுவதையே விரும்புகிறது

சுங்கை சிப்புட் மஇகா, கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் அல்லது அவரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அங்கு போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்தத் தொகுதியை பாரிசான் நேசனல் திரும்பவும் கைப்பற்ற அது கடுமையாக பாடுபடும் என்று அதன் தலைவர் ஆர்.கணேசன் கூறினார்.இப்போது அத்தொகுதி எம்பியாக இருப்பவர் பிஎஸ்எம்மின் டாக்டர் டி.ஜெயக்குமார். அவர்,…

நஸ்ரி: ஷாரிசாட் குடும்பத்தினர் ரிம250மில்லியனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) திட்டத்தில் சம்பந்தப்பட்ட மகளிர், குடும்ப, சமூக மேம்ப்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தார் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரிம250மில்லியன் கடனைத் திருப்பிக் கொடுத்திட வேண்டும். பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது தொகுதியான பாடாங் ரெங்காசில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி,…

மாபுஸ்: என்எப்சி ஊழலால் தேர்தல் தாமதமாகலாம்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) ஊழலால், அரசாங்கம் தேர்தலை விரைவில் நடத்தாமல் தள்ளிப்போடக் கூடும். பொதுத் தேர்தல் அடுத்த இரண்டு மாதங்களில் நடக்காது என்பதற்கு அதுவும் காரணம் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார். “என்எப்சி விவகாரம் பேயாக வந்து அரசாங்க மற்றும் அம்னோ தலைவர்களை மிரட்டிக்கொண்டிருப்பதால் அரசாங்கம்…

“மிதவாத மலேசியா” என்ற கூற்றைக் கேலிசெய்யும் செயல், சார்ல்ஸ் சந்தியாகு

எம்பி பேசுகிறார்: தண்டனையிலிருந்து தப்பிக்க தம் நாட்டைவிட்டுத் தப்பியோடி வந்த ஒரு சவூதி அராபியரைப் பிடித்து அவரது நாட்டுக்கு - கொலைக்களத்து என்றுகூட சொல்லலாம் -  திருப்பி அனுப்பி வைத்ததன்வழி அவரது நம்பிக்கையை நாசமாக்கிவிட்டது மலேசிய அரசாங்கம். 23வயது பத்தி எழுத்தாளரான ஹம்சா காஷ்ஹாரி, நியு சிலாந்து செல்லும்…

ஒரே பராமரிப்பு: இன்னொரு சுற்று “கொள்ளை”

யோசனை தெரிவிக்கப்பட்டுள்ள ஒரே பராமரிப்புத் திட்டம் சில நன்மைகளைக் கொண்டிருந்தாலும் வரி வசூலிப்பு மூலம் அதற்காக உருவாக்கப்படும் பில்லியன் கணக்கான ரிங்கிட் நிதிகள் மீது அரசாங்கத்தை வரி செலுத்துவோர் நம்ப முடியாமல் இருப்பதாக சுகாதாரத் துறைக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறுகிறார்.…