பாங்க்: ஷாரிஸாட், எனது முன்னுதாரணத்தைப் பின்பற்றுங்கள்

ஊழல்களில் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் மகளீர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் மற்றும் துணை நிதி அமைச்சர் அவாங் அடெக் ஹுஸ்ஸின் ஆகிய இருவரும் தம்முடைய முன்னுதாரணத்தைப் பின்பற்றி பதவி விலகுமாறு மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்தின் (எம்எசிசி) முன்னாள் ஆலோசகர் ரோபர்ட் பாங்க் கேட்டுக்கொண்டார்.…

ஸாக்காத் நிதியில் மோசடி என்பதை மறுக்கிறார் ஜமில் கீர்

ஸாக்காத் நிதியியை தாம் தவறாகப் பயன்படுத்தியாக கூறப்படும் புகாரையும் அவரது வீடு பற்றிய பிரச்னையையும் பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் கொடுமையானது என்று கருதுகிறார். ஓர் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு ஆய்வுகள் செய்திருக்க வேண்டும். இந்த அறிக்கையைப் பொறுப்பற்ற தரப்பினர் பெரிதுபடுத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அவர் கருதுகிறார்.…

கிளந்தானில் அன்வார் துண்டறிக்கை விநியோகித்த 13பேர் கைது

நேற்று மாலை, கிளந்தானில் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கு மீதான துண்டறிக்கைகளை விநியோகம் செய்த பிகேஆர் உறுப்பினர் 13 பேர் போலீசால் கைது செய்யப்பட்டனர். அந்த அறிக்கையில் குதப்புணர்ச்சிII  வழக்குக்  காலவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அடுத்த வாரம் மாச்சாங்கில் மாற்றரசுக் கட்சித் தலைவரின் ‘செராமா’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவலும் அதில்…

இண்ட்ராப்: ஒரே வாரத்தில் நான்கு இந்து கோயில்கள் உடைக்கப்பட்டன

ஒரு வார காலத்தில் நான்கு இந்து கோயில்கள் உடைக்கப்பட்டன என்று இண்ட்ராப் இயக்கம் கூறியுள்ளது. அவை: கெடா, பத்து பெகாகாவிலுள்ள ஸ்ரீ காளியம்மன் இந்து கோயில், காப்பாரில் இரண்டு கோயில்கள் - ஓம் ஸ்ரீ காளியம்மன் கோயில் மற்றும் பெயரற்ற ஒரு கோயில், மற்றும் கோலாலம்பூரில் ஸ்ரீ முனேஸ்வரரர்…

மன்னிப்பு கேளுங்கள், இல்லையேல் மன்னரிடம் கூறுவோம், அமைச்சருக்கு எச்சரிக்கை

ஸாக்காத் நிதியில் "மோசடி செய்ததற்காக" பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரும் மற்றும் இருவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிகேஆருடன் தொடர்புடைய அரசு சார்பற்ற (என்ஜிஒ) ஜிங்கா 13 இன்று அம்மூவரையும் கேட்டுக்கொண்டுள்ளது. அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அந்த விவகாரம் அகோங்கிடம் கொண்டு செல்லப்படும் என்று அந்த…

சிஜேயிடம் புகார் செய்தாக கூறப்படுவதை கர்பால் மறுக்கிறார்

தலைமை நீதிபதியின் அலுவலகத்தில் தீர்ப்பை திருடிய நீதிபதி விவகாரம் குறித்து தாம் புகார் செய்ததாக கூறப்படுவதை மூத்த வழக்குரைஞர் கர்பால் சிங் மறுத்ததோடு அப்புகாரில் நற்கூறு ஏதும் இல்லை என்று அந்த அலுவலகம் இன்று எடுத்திருந்த முடிவு குறித்து வியப்படைவதாக கூறினார். "பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களிலிருந்து விசாரணை செய்யுமாறு நான்…

அன்வாரின் கைக்கருவி ஆகிவிடாதீர்: UiTM மாணவர்களுக்கு எச்சரிக்கை

யுனிவர்சிடி டெக்னோலோஜி மாரா (யுஐடிஎம்) துணை வேந்தர் சாஹோல் ஹமிட் அபு பக்கார், பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் “பயன்படுத்திக்கொள்ள” இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கில் ஜனவரி 9-இல் தீர்ப்பளிக்கப்படுவதன் தொடர்பில், பிகேஆர் ஏற்பாடு செய்துள்ள பேபாஸ் அன்வார்901 (அன்வார்…

சட்ட விரிவுரையாளர்: பாதிரியார் கருத்தில் தேச நிந்தனை இல்லை

அருள்திரு இயு ஹொங் செங், சனிக்கிழமை பேசியதில் தேசநிந்தனை கருத்து இருப்பதாக தெரியவில்லை. அரசமைப்பின் 153வது பகுதி தொடர்பில் சில முக்கிய விவகாரங்களை அவர் கவனப்படுத்தியுள்ளார், அவ்வளவுதான். இவ்வாறு மலேசியாகினியிடம் கூறிய பன்னாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அசீஸ் பாரி, பெர்காசா மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்கும்…

நீதிபதி “தீர்ப்பைத் திருடினார்” புகார் நிராகரிப்பு

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திருடிப் பயன்படுத்திக்கொண்டார் என்ற புகாருக்கு ஆதாரமில்லை என்று தலைமை நீதிபதி அலுவலகம் இன்று அறிவித்தது. எனவே வழக்குரைஞர் கர்பாலின் புகார் நிராகரிக்கப்படுவதாக தலைமை நீதிபதியின் தனி அதிகாரி சே வான் சைடி சே வான் இப்ராகிம் இன்று…

தி கியாட்: பாண்டான் தவிர்த்து வேறு இடத்தில் போட்டியிடேன்

தெங்கு ரசாலி ஹம்சா உருவாக்கிய அரசுசார்பற்ற அமைப்பான அங்காத்தான் அமானா ரக்யாட்(அமானா) தம் கருத்துகளைச் சொல்ல ஒரு தளமாக விளங்குவதால்தான் அதில்  சேர்ந்ததாகக் கூறுகிறார் முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட். தலைவராக இருந்தபோது அரசியல் வலிமை இருந்தது. 2010-இல் கட்சித் தலைவர் தேர்தலில் தோற்ற பின்னர்…

புவா:16.6 பில்லியன் கொள்முதல்கள், அமைச்சரை சந்திக்க தயார்

ஆறு இரண்டாம் தலைமுறை ரோந்துக் கப்பல்கள் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதால் தம்மை சந்திக்குமாறு தற்காப்பு அமைச்சர் ஸாகிட் ஹமிடி பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாண்டு பெப்ரவரி 5 இல் இந்த ஆறு கப்பல்களின்…

அடுக்குமாடி மாடும்! கோவணம் வாங்க பணமும்!

[கா. ஆறுமுகம் ] முனுசாமியும், முனியம்மாவும் மலேசியாவில் பிறந்திருந்தும் இன்னும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. இவரோடு சண்முகம், குப்பன், சுப்பன், பெருமாள், அஞ்சலை, மாலதி, பவாணி என்று இன்னொரு 42,000 மலேசிய இந்தியர்களுக்கும் இதே கதிதான். அதேவேளை அண்மையில் குடியேறிய ஆயிரக்கணக்கான அயல் நாட்டவர்களுக்கு மலேசிய அரசாங்கம் குடியுரிமைகளை வழங்கியுள்ளது.…

“புரஜெக்ட் ஐசி” விசாணைக்கு அரசு ஆணையம் வேண்டும், டோம்போக்

சாபாவில் சட்ட விரோத குடியேறிகள் மற்றும் கள்ள குடியுரிமை ஆவணம் குறித்து ஓர் அரச விசாரணை ஆணயம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆணைய விசாரணை தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்று அப்கோவின் தலைவர் பெர்னட் டோம்போக் ஆலோசனை கூறினார். தோட்டத் தொழில் மற்றும்…

கடற்படை வழங்கிய “முகவர் கட்டணம்” பற்றி விளக்க ஜாஹிட் தயார்

தற்காப்பு அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, கடற்படை வாங்கிய ஆறு காவல் படகுகள் பற்றி விளக்கம் தேவையென்றால் கித்தா கட்சி தலைவர் சைட் இப்ராகிம் தம்மை வந்து பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். “மேல்விவரங்கள் பெற என்னைச் சந்திக்குமாறு சைட்டை அழைக்கிறேன்”, என்றாரவர். அப்படிப்பட்ட வினாக்களுக்கு விளக்கம் அளிக்க…

பிப்ரவரியிலிருந்து அழியா மையைப் பயன்படுத்த EC முடிவு

பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்யும் பணி பிப்ரவரி முதல் தேதிக்குள் முடிந்துவிடும் என்று தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (PSC) இன்று அறிவித்தது. பிஎஸ்சி, இந்த அறிவிப்பைச் செய்வதற்குமுன் அழியா மை எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதைத் தேர்தல் ஆணைய…

முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா காலமானார்

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா,78, செர்டாங்  மருத்துவமனையில் இன்று காலை மணி 6.05க்குக் காலமானார். எதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால்,  நீண்ட நாள்களாகவே அவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது. அரிபின் காலமானதை மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ…

கர்பால்: ராமசாமி விவகாரம் மீது டிஏபி-யே முடிவெடுக்கட்டும்

டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி.ராமசாமியுடன் பொதுவில் வாய்ச்சண்டையில் ஈடுபட்ட கட்சி தேசியத் தலைவர் கர்பால் சிங், அந்நெருக்கடிக்குக் கட்சிக்குள் தீர்வு காண்பதையே விரும்புவதாகக் கூறுகிறார். “கட்சிக்குள்ளேயே இதற்குத் தீர்வு காண்போம்”, என்ற அவர், உயர்ந்த பதவியில் இருந்தாலும் கட்சியின் உத்தரவை மீறிப் பேசினால் கடும் நடவடிக்கையிலிருந்து தப்ப…

தேர்தலில் கழுதை ஜெயிக்குமா?

வேலு: கோமாளி, கழுதை தேர்தலில் நின்றால் ஜெயிக்குமா? நீங்கள் நின்றால் என்ன செய்வீர்கள்?  கோமாளி: ஒன்பதாவது பொதுத் தேர்தலின்போது (1995) உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்ற பழனிவேலுவின் தேர்தல் விபச்சார உரையை கேட்க நேர்ந்தது. "கழுதை கழுத்தில் பாரிசான் சின்னத்தை கட்டினால் போதும், கழுதை கூட ஜெயிக்கும்" என்றார்.…

பினாங்கு மசீச இளைஞர் தலைவரும் 439பேரும் கட்சி விலகினர்

நேற்றிரவு பினாங்கு மசீச இளைஞர் தலைவர் எங் ஹியாப் பூன், கட்சியிலிருந்து விலகுவதாக  திடீர் அறிவிப்பைச் செய்தார். தம்முடன் 439 உறுப்பினர்களும் கட்சி விலகியிருக்கிறார்கள் என்று எங்(வலம்) தெரிவித்தார்.இதன் விளைவாக இரண்டு மசீச கிளைகள் மூடப்பட்டன.  “என் சகாக்களும் நானும் கட்சித் தலைவர்களின் ஒழுக்கக்கேடுகளையும் நெறிமுறையற்ற செயல்பாடுகளைக் கண்டும்…

செய்திநாயகர் 2011…யார்?

கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஆண்டை முடிவுற்கு கொண்டு வரும் டிசம்பர் மாதத்தில் தவறாமல் ஒரு செய்திநாயகரை மலேசியாகினி தெரிவுசெய்துள்ளது. "செயல்பாடுகள் வழி தலைப்புச் செய்திகளை உருவாக்குகின்றவர், பொது விவாதங்களின் போக்கில் விளைவுகளை ஏற்படுத்துகின்றவர் மற்றும் மலேசிய அரசியலில், நல்லதற்கோ தீயதற்கோ, தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர்", செயல்நாயகர் என்று வர்ணிக்கப்படுகிறார்.…

நீதிபதி பதவிவிலக வேண்டும், கர்பால் மீண்டும் வலியுறுத்து

கருத்துத்திருடு குற்றம் சாட்டப்பட்டு அதற்கு எவ்வித மறுமொழியும் கூறாதிருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் மாலிக் இஷாக் பதவி விலக வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் கர்பால் இன்று மறுபடியும் வலியுறுத்தினார். நீதிபதி அப்துல் மாலிக் “ ஒழுக்கக்கேடான செயல்” புரிந்திருப்பதாகவும் எனவே பொதுநலன் கருதி அவர்  பதவி…

தீர்ப்புக்கு முன்னதாக அன்வார் புயல்வேகச் சுற்றுலா

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,  ஜனவரி 9-இல், குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்குமுன் நாட்டுக்குள் புயல்வேகச் சுற்றுலா ஒன்றை மேள்கொள்வார். ஜனவரி 3-இலிருந்து 8வரை ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பாகாங், திரெங்கானு, கிளந்தான், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் 18 இடங்களில் அவர் பேசுவார்.  தீர்ப்பில் குற்றவாளி…

இங்கா தொடர்புடைய தையல்காரரிடம் போகுமறு என்னிடம் கூறப்பட்டது, சட்டமன்ற உறுப்பினர்

டிஎபி மாநில செயலாளர் இங்கா கோர் மிங் தொடர்புடைய தையல் நிறுவனத்துடன் வணிகத்தில் ஈடுபடுமாறு ஈப்போ மாநகர் மன்றம் மட்டும் கூறப்படவில்லை என்று ஒரு முன்னாள் டிஎபி சட்டமன்ற உறுப்பினர் கூறிக்கொண்டார். தங்களுடைய சம்பிரதாய உடைகளை ஈதன் & எல்டன் தையல் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைத்து…