‘நவீன அடிமை’ முறையிலிருந்து டாக்சி ஒட்டுநர்களை விடுவிக்க பிரதமர் வாக்குறுதி

தனியார் நிறுவனங்கள் டாக்சி அனுமதிகளில் அனுபவித்து வரும் ஏகபோக உரிமையை ரத்துச் செய்யப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்குப் பதில் டாக்சி ஒட்டுநர்களுக்கு நேரடியாக அனுமதிகளை வழங்க அரசாங்கம் எண்ணியுள்ளதாக அவர் சொன்னார். டாக்சி தொழிலுக்கான புதிய வடிவமைப்பின் ஒரு பகுதியாக "மிக…

ஆட்சேபக்காரர்கள் போலீசாரைத் தாண்டிச் சென்று கெபெங்கில் குந்தியிருப்பு மறியலை நடத்தினர்

ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆட்சேபக்காரர்கள் போலீஸ் சாலைத் தடுப்புக்களத் தாண்டிச் சென்று கெபெங் தொழில் பேட்டைக்கு அருகில் ஒன்று திரண்டு லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அருகில் உள்ள பாலோக் கடற்கரையில் கூடியுள்ள ஆட்சேபக்காரர்களின் வரவை எதிர்பார்த்து போலீசார் இன்று…

ஹிண்ட்ராப் தமிழ்ப் பள்ளிக்கூடம் தொடர்பான புதிய வழக்கில் பெற்றோர்களையும் இணைக்கிறது

ஹிண்ட்ராப் அரசாங்கத்திற்கு எதிரான தனது வழக்கை மீண்டும் தாக்கல் செய்யும் முயற்சியின் கீழ் அதில் தமிழ்ப் பள்ளிக்கூட மாணவர்களுடைய பெற்றோர்களையும் சேர்த்துக் கொள்ளவிருக்கிறது. அந்த வழக்கில் மற்ற பல கோரிக்கைகளுடன் இந்த நாட்டில் உள்ள 523 தமிழ்ப் பள்ளிகளும் முழு உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும் அடங்கும். "பாதிக்கப்பட்ட…

விவாதங்கள் மீது தடை உத்தரவு ஏதுமில்லை என்கிறார் சைபுதின்

அம்னோ உறுப்பினர்கள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்துவதற்கு அம்னோ எந்தத் தடை உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா இன்று கூறியிருக்கிறார். நாட்டின் முழுமையான அரசியல் முறையில் விவாதங்கள், பண்பாட்டில் ஒரு பகுதி அல்ல என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிக்கை…

தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரிங்கிட் மட்டுமே…

தீவகற்ப மலேசியாவில் தோட்டத் தொழிலாளர் குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டில் இரண்டு மில்லியன் ரிங்கிட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் இன்று தகவல் வெளியிட்டுள்ளார். பாங்க் சிம்பானான் நேசனல் கீழ் கடந்த ஆண்டு அமலாக்கப்பட்ட அந்தத் திட்டம்,…

Opps 2020 கூட்டக் குறிப்புக்கள் உண்மையானவை என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்

மாணவர் தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வதற்கு அம்னோ தலைவர்களும் அரசாங்க நிறுவனங்களும் போலீசாரும் சதித் திட்டத்தை வகுப்பதற்காக நடத்தப்பட்டது எனக் கூறப்படும் கூட்டக் குறிப்புக்கள் உண்மையானவை என பிஎம்என் என்ற Pro-Mahasiswa Nasional அமைப்பு நம்புகின்றது. அதற்கான ஆவணம் தங்களிடம் இருப்பதாக பிஎம்என் பேச்சாளர் எடிக்குப் லாக்கிப் செடியாந்தோ கூறினார்…

லினாஸ் எதிர்ப்பு பாலோக்- கெபெங் ஆக்கிரமிப்பு பேரணியின் தொடக்கத்தில் 300…

குவாந்தானில் 24 மணி நேர பாலோக்- கெபெங் ஆக்கிரமிப்பு பேரணியை இன்று 300க்கும் மேற்பட்ட லினாஸ் எதிர்ப்பு போராளிகள் தொடக்கி வைத்தனர்.  பாலோக் கடற்கைரையில் தோரணங்களை முதலில் ஒரு குழு நடத் தொடங்கியது. பிற்பகலில் காற்று வேகமாக வீசிய போது 50 பேர் லினாஸ் எதிர்ப்பு சுலோகங்களைக் கொண்ட…

‘ஆர்டிஎம் முன்கூட்டியே ஒலிபரப்பை பதிவு செய்வது தில்லுமுல்லுகளுக்கு வழி வகுக்கும்’

ஆர்டிஎம் எனப்படும் மலேசிய வானொலி தொலைக்காட்சி முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட கட்சி கொள்கையறிக்கைகளை மட்டுமே ஒலிபரப்புச் செய்யும் என கட்டுப்படுத்துவது அந்த கொள்கையறிக்கைகள் கத்திரிக்கப்படுவதற்கும் செய்யப்படுவதற்கும் திருத்தப்படுவதற்கு வழி வகுத்து விடும் எனப் பாஸ் குற்றம் சாட்டியுள்ளது. "இப்போது கூட அரசியல் தலைவர்கள் ஏதாவது சொல்லும் போது அவர்களுடைய…

எம்பி-க்கு விலைபேசும் வீடியோமீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க ஜிங்கா13 வலியுறுத்து

மாற்றரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ கையூட்டுக் கொடுக்கும் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் அதன்மீது நடவடிக்கை எடுக்காதிருப்பதை பிகேஆர் தொடர்புள்ள ஊழல் கண்காணிப்பு அமைப்பான ஜிங்கா 13 கண்டித்துள்ளது. ஷா ஆலம் பாஸ் எம்பி காலிட் சமட் “வெறுக்கத்தக்க ஒரு செயலைக்” காண்பிக்கும் வீடியோ…

ஐஎஸ்ஏ கைதிகள் இருவர் உண்ணாவிரதம் தொடங்கினர்

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள்.விடுதலை செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவ்விருவரும் வியாழக்கிழமை  இரண்டாம் தடவையாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.பேராக், கமுந்திங் தடுப்புமுகாமில் உள்ள கைதிகள் இருவர்தான் இப்படி உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியிருப்பவர்கள். மலேசியர்களான அவ்விரு கைதிகளும் மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) தங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யும்வரை காத்திருக்க விரும்பவில்லை என சுதந்திரத்துக்குப் போராடும்…

கையூட்டுக் கொடுப்போர் கறுப்புப்பட்டியலிடுவதை டிஐ-எம் ஆதரிக்கிறது

கையூட்டுக் கொடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டும் நிறுவனங்களின் பெயர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதென்ற மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் முடிவை ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) வரவேற்கிறது. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை டிஐ-எம் தலைவர் பால் லோ நேற்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார். ஊழல்கள்மீதான…

பதவி விலகும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் சிடெக் பெட்ரோனாஸ் தலைவராகிறார்

முகமட் சிடெக் ஹசான் பெட்ரோனாஸ் தலைவராக நியமிக்கப்படவிருக்கும் தகவலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு வெளியிட்டார். அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் என்ற முறையில் முகமட் சிடெக்-கின் பதவிக் காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பெட்ரோனாஸில் நிலவும் பல உள் விவகாரங்கள் தீர்க்கப்பட்டதும் முகமட் சிடெக் அந்தப் பொறுப்பை…

காலித்தை தாம் முதுகில் குத்தவில்லை என்கிறார் அஸ்மின்

 பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, தமக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமுக்கும் இடையில் தகராறு நிலவுவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். அந்த வதந்திகளை 'அவதூறுகள்' என அவர் வருணித்தார். காலித் தலைவர் என்ற ரீதியில் நல்ல முறையில் செயல்பட்டு வருவதால் தாம் அவரை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளதாக…

பேரணியில் மலேசியர்கள் மட்டுமே பங்கு கொண்டதாக சிங்கப்பூர் பெர்சே கூறுகிறது

மலேசியாவில் நிகழவிருக்கும் பொதுத் தேர்தலில் தலையிடும் பொருட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பயிற்சி ஒன்றில் சிங்கப்பூரர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என அதன் ஏற்பாட்டாளரான சிங்கப்பூர் பெர்சே ஒர் அறிக்கையில் கூறியுள்ளது. "அது, மலேசியர்களுக்காக மலேசியர்கள் ஏற்பாடு செய்த மலேசிய நிகழ்வு என சிங்கப்பூர் பெர்சே வலியுறுத்த விரும்புகிறது." "அந்த நிகழ்வில்…

அம்பிகா நியாயமான சிந்தனைகளைக் கொண்ட மலேசியர்களைப் பிரதிநிதிக்கிறார்

"அம்பிகா கௌரவமான மாது. மலாய்க்காரர்கள்- மலாய்க்காரர் அல்லாதார் என அனைத்து மலேசியர்களுடைய முழு ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்." அம்பிகாவைத் தூற்றுவதால் பிஎன் இந்தியர் வாக்குகளை இழக்க நேரிடும் உண்மையான வீரன்: பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஒரு சாதாரண மனிதர். அரசாங்கம் மேற்கொண்ட விவேகமற்ற நடவடிக்கைகளினால் அவர்…

‘Opps2020’ பற்றிப் புலானாய்வு செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புக்கள்…

பல்கலைக்கழக தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வதற்கு அல்லது 'தீவிரமான நடவடிக்கை' எடுப்பதற்கு அம்னோ சதி செய்ததாகக் கூறப்படுவதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என மாணவர் அமைப்புக்களின் கூட்டணி ஒன்று கோரியுள்ளது. "அரசாங்கம் இந்தப் பிரச்னையை கடுமையாக எடுத்துக் கொண்டு முழுமையான ஆய்வைத் தொடங்க வேண்டும் அல்லது நாங்கள் அந்த நடவடிக்கையை…

ஈராக்கியக் கைதி கமுந்திங் சித்தரவதைகளை வெளியிடுகிறார்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் கமுந்திங்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈராக்கியக் கைதி ஒருவர் அங்கு தமக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தையும் துயரத்தையும் வழக்குரைஞர்களிடம் இன்று விவரித்துள்ளார். குவாண்டானாமோ பாணியிலான 'சித்தரவதையை' தாங்கிக் கொள்ள முடியாமல் தாம் இரண்டு முறைக்கு மேல் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ஸாமி…

‘பாக்காவின் ஆதரவுக் கடிதம் அம்பலமாகிறது தகராறு முற்றுகிறது

சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கா ஹுசினுக்கும் சட்ட நிறுவனம் ஒன்றுக்கும் சிலாங்கூர் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் கடிதத் தொடர்புகள் சிலாங்கூர் பிகேஆர்-ல் உருவாகியுள்ள தகராற்றில் பாக்கா எதிர்ப்பு குழுவிற்குப் புதிய தீவனமாகியுள்ளது. பிகேஆர்-ரையும் சிலாங்கூர் அரசாங்கத்தையும் கடுமையாகக் குறை கூறி வரும் Sel13.com…

உத்துசானுக்கு எதிரான இன்னொரு வழக்கிலும் குவான் எங் வெற்றி

முதலமைச்சர் லிம் குவான் எங் உத்துசான் மலேசியா நாளேட்டுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறார். லிம் புதிய பொருளாதாரக் கொள்கையை(என்இபி) ஒழித்துக்கட்டுவார் என்று அம்னோ தொடர்புடைய அந்நாளேட்டில் 2008-இல் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் தொடர்பில் அவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது. லிம்முக்கு இழப்பீடாக ரிம200,000-மும் செலவுத்தொகை ரிம20,000-மும் கொடுக்க வேண்டும்…

‘PKR’ கார் எண் தகடுகளுக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை

எதிர்க்கட்சியான Parti Keadilan Rakyatன் சுருக்கமான சொல்லான 'PKR'  கார் எண் தகடுகள் பிகேஆர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரிடமிருந்து அவ்வளவாக ஆதரவைப் பெறவில்லை. 'PKR1' என்ற எண்ணை பினாங்கு வணிகரான ஒங் தாய் யாங், 99,555 ரிங்கிட்டுக்கு - PKR எண்ணுக்கு அதிகமான ஏல விலை- எடுத்துள்ளார்.…

என்ன செய்ய வேண்டும் என்பது எம்ஏஎஸ்-ஸூக்குத் தெரியும் ஆனால் செய்யாது

 “செலவுக்குறைப்பா. எம்ஏஎஸ் அதைப் பற்றிப் பேசத்தான் செய்யும். செயலில் காட்டாது. அது எந்தக் காலத்திலும் ஒரு தொழில்நிறுவனமாக நடத்தப்பட்டதில்லையே.”     எம்ஏஎஸ் எதிர்காலத்தில் செலவுகளைக் குறைக்க பணியாளர்களைக் குறைக்கக்கூடும் பிஎம்ஜேஆர்: எம்ஏஎஸ் தலைவர் முகம்மட் நோர் யூசுப் பொறுப்பேற்றவுடன் செய்திருக்க வேண்டிய வேலை.இப்போதுதான் அதைப் பற்றிப் பேசுகிறார்.…

போலீசார் முரட்டுத்தனம் மீது வீடியோ தயாரிப்பளர் வாக்குமூலம் கொடுத்தார்

பெர்சே 3.0 பேரணியின் போது எத்தகைய தூண்டுதலும் இல்லாத சூழ்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை போலீஸ் அதிகாரிகள் எனத் தோற்றமளிக்கும் குழு ஒன்று தாக்கும் படத்தை வீடியோ ஒளிப்பதிவு ஒன்றை இணையத்தில் சேர்த்த வீடியோ தயாரிப்பாளரான லினஸ் சுங்-கின் வாக்குமூலத்தைப் போலீசார் இன்று பதிவு செய்தார்கள். கோலாலம்பூரில் உள்ள டாங்…

எம்ஏஎஸ்-தாஜுடின் ரம்லி வழக்குகளுக்குத் தீர்வு

மலேசிய விமான நிறுவனம்(எம்ஏஎஸ்) அதன் முன்னாள் தலைவர் தாஜுடின் ரம்லிமீது தொடுத்திருந்த மூன்று வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வின் ஒரு பகுதியாக எம்ஏஎஸ், லங்காவியில் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் கட்டப்பட்டிருக்கும் நிலத்தைப் பெறும் எனத் தெரிகிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்,எம்ஏஎஸ்ஸும் தாஜுடினும் ஒரு தரப்பு மற்ற தரப்பின்மீது தொடுத்திருந்த…