அடுத்து இரு முனைகளில் பெர்சே இயக்கம்

தேர்தல் முறையில் காணப்படுகின்ற 'கவலை அளிக்கும்' நிலையைச் சமாளிப்பதற்கு தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 'வாக்களிப்பு, கண்காணிப்பு' என்னும் இரு முனை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. "தேர்தல் மோசடிகளை முறியடிக்கும் பொருட்டு வாக்களிக்க முடிந்த அனைவரும் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்கச் செல்ல வேண்டும்," என பெர்சே கூட்டுத் தலைவர்…

இந்தியத் தூதரகம் மொண்ட் கியாராவுக்கு இடம் மாறுகிறது

கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், ஜாலான் தாமான் டூத்தாவில் உள்ள தனது இப்போதைய இடத்திருந்து வரும் திங்கட்கிழமை தொடக்கம் 28வது மாடி, மெனாரா 1, மொண்ட் கியாரா, எண் 1, ஜாலான் மொண்ட் கியாராவுக்கு இடம் பெயர்கிறது. எனினும் அந்தத் தூதரகத்தின் கான்சுலர் ( consular ) பிரிவு…

இப்போதைக்கு பெர்சே 4.0 இல்லை என அம்பிகா உறுதி அளிக்கிறார்

பெர்சே 4.0 பேரணியை நடத்துவதற்கான திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை எனத் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்கு போராடும் கூட்டமைப்பின் கூட்டுத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார். "பெர்சே 4.0 பேரணியை நடத்துவதற்கான திட்டம் எதனையும் எனது தரப்பு சிந்திக்கவில்லை," என அவர் மலாய் நாளேடான சினார் ஹரியானிடம் கூறினார்.…

நெகிரி செம்பிலான் அங்காடிகள் எதிர்க்கட்சி செராமாக்களில் வியாபாரம் செய்யத் தடை

நெகிரி செம்பிலானில் அரசாங்கம் வழங்கும் சாதனங்களைப் பயன்படுத்தும் அங்காடிக் கடைக்காரர்கள் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்யும் செராமா கூட்டங்களில் தங்கள் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்தால் அவர்களுடைய அனுமதிகள் ரத்துச் செய்யப்படுவதோடு அவர்களுடைய சாதனங்களும் மீட்டுக் கொள்ளப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. "அவர்கள் வியாபாரம் செய்வதைத்…

‘உடற்பயிற்சி’ செய்வதற்கு உரிமை உண்டு என்கிறார் வழக்குரைஞர் ஒருவர்

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு  முன்னாள் இராணுவ வீரர்களுக்கு உரிமை இருப்பதாக Pusat Rakyat Loyar Burok அமைப்பு உறுப்பினரான வழக்குரைஞர் எட்மண்ட் போன் கூறுகிறார். ஆனால் நேற்று நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தின் போது அந்தக் குழு விடுத்த செய்தியை தாம்…

‘உடற்பயிற்சி’: அரசு அங்கீகரித்த அச்சுறுத்தல்

"அவர்கள் தங்கள் மூளை இருக்கும் இடத்தைக் காட்டுகின்றனர். அது அவர்கள் மூளை வழங்கும் செய்தி." அம்பிகா வீட்டுக்கு முன்பு முன்னாள் இராணுவ அதிகாரிகள் 'உடற்பயிற்சி' ('butt exercises') செய்கின்றனர் டேவிட் தாஸ்: தாங்கள் நம்பும் எந்த ஒரு காரணத்துக்கும் பொது இடம் ஒன்றில் ஆர்ப்பாட்டம் செய்ய எந்தக் குழுவுக்கும்…

அம்பிகா வீட்டுக்குமுன் மாட்டு பேர்கர்; இந்து சேவை சங்கம் கண்டனம்!

பெர்சே 2.0 இணைத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசனின் வீட்டுமுன் மாட்டிறைச்சி கொண்ட பேர்கர்களை வேண்டுமென்று சமைத்து விநியோகம் செய்ததோடு அம்பிகாவிற்கும் கொடுக்க முற்பட்ட செயல் சமய துவேசமானது என்று சமய அமைப்பொன்று கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி இக்லாஸ் என்ற சில்லரை வணிகர்கள் அமைப்பின் தலைவர்…

பாக் சாமாட்: அந்த ‘இழிவான’ உடற்பயிற்சி அடுத்து என் வீட்டுக்கு…

பெர்சே கூட்டுத் தலைவர் ஏ சமாட் சைட், நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் தமது சகா அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு 'உடற்பயிற்சியை' ( ‘butt exercises’ ) நடத்தியவர்கள் அடுத்து என்னைக் குறி வைத்தால் நான் வியப்படைய மாட்டேன் என்று கூறியிருக்கிறார். "அது இழிவானது, கழிசடையான நடவடிக்கை…

உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள இசா கைதிகளை சுஹாக்காம் சந்திக்கும்

பேராக் கமுந்திங் தடுப்புக் காவல் மய்யத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தடுப்புக் காவல் (இசா) கைதிகளைக் காண்பதற்கு சுஹாக்காம் என்னும் தேசிய மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கு செல்லும். அந்தக் கைதிகளின் உடல் நிலையைச் சோதிப்பதற்காக மூவர் கொண்ட குழு ஒன்று…

பெர்சே ‘ரௌடிகளுக்கு’ எதிராக படை பலத்தைப் பயன்படுத்திய போலீஸ்காரர்களை மகாதீர்…

கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுடைய அடாவடித்தனத்தை நிறுத்தவும் சக போலீஸ் அதிகாரிகளுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்கவும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் படை பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "போலீசார் என்ன செய்ய…

பெர்சே 3.0ல் பங்கு கொண்டது தொடர்பில் தியான் சுவா மீது…

பத்து எம்பி சுவா தியான் சாங் மீது ஏப்ரல் 28ம் தேதி பெர்சே பேரணியில் சம்பந்தப்பட்டது தொடர்பில் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. தியான் சுவா என பரவலாக அறியப்படும் அவர் மீது தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போலீஸ் பயிற்சி மய்யத்திலிருந்து வெளியேறுமாறு டிஎஸ்பி ராஜகோபால்…

பத்து தீகா- சுங்கை ராசாவ் டோல் சாவடிகளை அகற்றுமாறு கோரிக்கை

கூட்டரசு நெடுந்சாலையில் அமைந்துள்ள பத்து தீகா மற்றும் சுங்கை ராசாவ் டோல் சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் கூட்டணி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அமைதி மறியலில் ஈடுபட்டனர். (படங்கள்)   &  (காணொளி) நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி தொடங்கி 4 மணி வரை நீடித்த…

‘பினாங்கு பிஎன் யோசனைகளை வழங்குவதில் முதலமைச்சருடன் போட்டியிடவில்லை’

பினாங்கிற்கு தீர்வையற்ற துறைமுகத் தகுதியை மீண்டும் வழங்கும் யோசனையை முதலமைச்சர் லிம் குவான் எங் கடத்திச் சென்று அதனை பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தின் சாதனை எனக் கூறிக் கொள்ளக் கூடும் எனக் கருதுவதால் பிஎன் அந்த யோசனைக்கு புத்துயிரூட்டத் தயங்குகிறதா? அந்தக் கேள்வியை நிருபர்கள் எழுப்பிய போது, பினாங்கை…

பிஎன் நசுக்கப்படப் போகிறது என்பதையே லிங் மறைமுகமாகச் சொல்கிறார்

"வழக்கமாக அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிகளைப் பற்றி எதிர்மறையான (கவலைப்படும்) கருத்துக்களைத் தெரிவித்தால் உண்மையான நிலைமை மோசமாக இருப்பது திண்ணம்." பிஎன் சிலாங்கூரை மறந்து விடலாம் என்கிறார் முன்னாள் மசீச தலைவர் லிங் Anonyxyz: டாக்டர் லிங் லியாங் சிக், ஊமையைப் போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் கெட்டிக்காரர். டாக்டர்…

முன்னாள் ஆயுதப் படை அதிகாரிகள் அம்பிகா வீட்டுக்கு முன்பு “உடற்…

புக்கிட் டமன்சாராவில் பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு  உடற்பயிற்சி (exercises’) மேற்கொள்ளப்பட்டது. மலாய் ஆயுதப்படைகளின் முன்னாள் வீரர்கள் சங்க (PVTM)உறுப்பினர்கள் எனத் தங்களை அழைத்துக் கொண்ட அதன் பங்கேற்பாளர்கள் "நாட்டின் பெயரைக் களங்கப்படுத்தி நாட்டின் எதிரியாக" அம்பிகா இருப்பதற்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு…