மலேசியாவில் தமிழுக்கு உழைத்தவர்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்: வழக்கறிஞர் சி.பசுபதி

அண்மையில் (03.10.2011) கோலாலும்பூர் சீன அசெம்பெளி அரங்கில் ‘லிம் லியன் கியோக்: தாய்மொழி கல்வியின் தந்தை’ எனும் மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. தாய்மொழி போராட்ட இயக்கமான தமிழ் அறவாரியமும் லிம் லியன் கியோக் கலாச்சார பண்பாட்டு மையமும் இணைந்து இந்நூலை வெளியிட்டன. ஆங்கிலத்தில் முனைவர் குவா கியா சூங்…

நகைச்சுவை நடிகரைக் கைது செய்வதற்கான ஆணைக்கு ஜயிஸ் விண்ணப்பிக்கும்

ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையின் முன்பு ஆஜராகத் தவறியதற்காக நகைச் சுவை நடிகரும் பாடலாசிரியருமான போப் லோக்மானைக் கைது செய்வதற்கான ஆணைக்கு அந்தத் துறை விண்ணப்பித்துக் கொள்ளும். "அவர் நேற்று காலை ஜயிஸ் தலைமையகத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அவர் பிடிவாதமாக…

ஜுலை 9 மரணம்: விசாரணைக்கான விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது தமது கணவர் பஹாருடின் அகமட் திடீரென மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கு மாஜிஸ்திரேட் ஒருவருக்கு உத்தரவிடுமாறு ரோஸ்னி மாலான் தாக்கல் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ரோஸ்னி மாலானின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்த நீதிபதி சு…

ஆட்சியாளர்களின் ஆணைகளை விமர்சிக்கலாம், நெகிரி இளவரசர்

எந்தவொரு  பாதிப்பையும் ஏற்படுத்தாத வரை ஆட்சியாளர்கள் விடுக்கும் ஆணைகளைக் கல்வியாளர்களும் ஊடகங்களும் விவாதிப்பதில் தவறில்லை என்கிறார் நெகிரி செம்பிலான் அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவர். பேச்சுரிமை இதற்கு இடமளிக்கிறது. மலேசியாகினி மின் அஞ்சல்வழி நடத்திய நேர்காணலில் துங்கு ஜைன் அல்’அபிடின் இவ்வாறு கூறினார். “நான் பேச்சுரிமையையும் ஒன்றுகூடும் சுதந்திரத்தையும்…

உத்துசான், 1993ம் ஆண்டு அம்னோ, அரசர் அமைப்பு முறை குறித்து…

"எஸாம் முகமட் நூர் மற்றும் அவரது கும்பலுக்கு, அம்னோ கூட அரசர் அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. தவறு செய்வது மனித இயல்பு." அரசர் அமைப்பு முறையை கீழறுப்புச் செய்வதாக மலேசியாகினி மீது குற்றச்சாட்டு ஜனநாயகம்53: நாம் கற்காலத்தில் வாழவில்லை. சுல்தானுடைய அறிக்கையை முஸ்லிம் அல்லாத சமூகம் ஏற்றுக்…

கர்பால் குற்றச்சாட்டு: நீதிபதி மாலிக் வழக்கை செவிமடுப்பதிலிருந்து விலகிக் கொண்டார்

சிங்கப்பூர் நீதிபதியின் தீர்ப்பை திருடி விட்ட ஒரு மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு ஒரு விசாரணை மன்றம் அமைக்கக் கோரும் மனு ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தாக்கல் செய்த கர்பால் சிங் இன்று அந்த நீதிபதியை நேருக்கு நேர் சந்தித்தார். நீதிபதி…

ஹுடுட், பக்காத்தான் அதிகாரப் பூர்வமான கொள்கை அல்ல

ஹுடுட் சட்ட அமலாக்கம் பக்காத்தான் கூட்டணியின் அதிகாரப் பூர்வமான கொள்கை அல்ல என்பதை கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த அந்தக் கூட்டணியின் உயர் நிலைக் கூட்டம் உறுதிப்படுத்தியது. டிஏபி தலைமையகத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க பாஸ் எண்ணியிருப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான்…

முனைவர்: அரண்மனையும் விமர்சனத்துக்கு உட்பட்டதே

மற்ற பொது அமைப்புக்களைப் போன்று மலாய் ஆட்சியாளர்களும் பொது மக்களுடைய ஆழமான ஆய்வுக்கு உட்பட்டவர்களே என அரசியலமைப்பு நிபுணர் அப்துல் அஜிஸ் பேரி கூறுகிறார். அது எந்த வகையிலும் ஆட்சியாளர்களுக்கும் மரியாதை அளிக்கவில்லை எனக் கருதப்படக் கூடாது என்றார் அவர். ஆட்சியாளர்களுடைய அடைவு நிலையையும் அவர்கள் தங்களது அரசியலமைப்பு…

“அந்நிய” வாக்காளர்கள் எனக் கூறப்பட்ட 200 பேரை குடியிருப்பாளர்கள் சூழ்ந்து…

மலேசிய அடையாளக் கார்டுகளையும் வாக்களிக்கும் உரிமையையும் பெறவிருப்பதாக கூறப்பட்ட- அந்நியர்கள் என தாங்கள் சந்தேகிக்கும் 200 பேர் கொண்ட குழு ஒன்றை புத்ராஜெயாவில் உள்ள தேசா ஸ்ரீ புத்ராவைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் சூழ்ந்து கொண்டனர். கூட்டரசு நிர்வாகத் தலைநகருக்கு அருகில் உள்ள ஒய்வுத் தலம் ஒன்றில் குடியிருப்பாளர்கள் அந்தக்…

பிஎன், பக்காத்தான் பட்ஜெட்டுகளில் தேர்தல் காலக் கவர்ச்சிதான் அதிகம்

மாற்றரசுக் கட்சி, அரசாங்கம் இரண்டுமே பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தன. இரண்டிலும் தேர்தல்கால கவர்ச்சி அம்சங்கள் நிறைய இருந்தனவே தவிர கொள்கைரீதியான பரிசீலனைகளுக்குக் குறைந்த இடமே கொடுக்கப்பட்டிருந்தது என்கிறார் துங்கு ஜைன் அல் அபிடின் முக்ரிஸ். ஜனநாயக பொருளாதார விவகாரக் கழகத்தின் நிறுவனரான அவர், கூடுதல் பொருளாதாரத் தாராளமயத்துக்குப் பாதை…

குதப்புணர்ச்சி வழக்கு ll: மூசா, ரோட்வான் ஆகியோரை பிரதிவாதித் தரப்பு…

குதப்புணர்ச்சி வழக்கில் சாட்சியமளிக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் அனுப்பப்பட்ட அன்வார் இப்ராஹிமின் அழைப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மேலும் இரண்டு சாட்சிகளை அழைப்பதில்லை என பிரதிவாதித் தரப்பு இன்று முடிவு செய்துள்ளது. முன்னாள் தேசிய போலீஸ்…

காணாமல் போன முக்கிய பத்திரங்களுக்கு இனிமேல் போலீஸ் புகார் தேவை…

காணாமல் போன அல்லது சேதமடைந்த பிறப்பு, திருமண, கல்வி, வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், மலேசிய பாஸ்போர்ட், வாகனமோட்டுவதற்கான அனுமதி, நில உரிமைப் பத்திரம் ஆகியவை குறித்து பொது மக்கள் இனிமேல் போலீஸில் புகார் செய்ய வேண்டியதில்லை. பிரதமர் துறை செப்டம்பர் 29ம் தேதி வெளியிட்ட 2011ம் ஆண்டுக்கான மூன்றாவது…

அரசர் அமைப்பு முறையை கீழறுப்புச் செய்வதாக மலேசியாகினி மீது குற்றச்சாட்டு

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா இன்று தனது முதல் பக்கச் செய்தியில் செய்தி இணையத் தளமான மலேசியாகினி அரசர் அமைப்பு முறையைக் கீழறுப்புச் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. "சுல்தான் ஆணை குறித்து கேள்வி எழுப்புவது கண்டிக்கப்பட வேண்டும்" என்னும் தலைப்பிலான அந்தச் செய்தி, மலேசியாகினியை கண்டிக்கும் இரண்டு உட்பக்கக்…

கெராக்கான் மாநாட்டுக்கு முன்னதாக பதில்களை எதிர்பார்க்கிறார்கள் பேராளர்கள்

கெராக்கான் தேசியப் பேராளர் மாநாடு, இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வேளையில் பேராளர்கள் பலரும்- அரசியல் பார்வையாளர்களும்கூட -ஐந்து முக்கிய கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றனர்.கட்சி தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இந்தக் கேள்விகளுக்குத் தெள்ளத்தெளிவான பதில்கள் கிடைப்பது அவசியம் என்பது அவர்களின் நினைப்பு. கட்சியின் முதல்-தவணை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கோ…

பொருளாதார சுதந்திர குறியீட்டில் மலேசியாவுக்கு விழுந்த அடி

இவ்வாண்டுக்கான பொருளாதார சுதந்திர அளவை மதிப்பீடு செய்யும் குறியீட்டில் இடம் பெற்றுள்ள 140 நாடுகளில் மலேசியா 78வது இடத்துக்கு தாழ்ந்து விட்டது. அரசாங்கத்தின் அளவு,  வலிமையான பணத்திற்கான வாய்ப்புக்கள் ஆகியவை உட்பட பல துறைகளில் நாட்டின் அடைவு நிலை அந்தக் குறியீட்டில் மோசமாகப் பதிவாகியுள்ளதே அதற்குக் காரணம் ஆகும்.…

உள்ளடக்கம் வலுவாக இல்லாவிட்டால் எந்த முயற்சியும் விரயமே

 "நல்ல ஆளுமையே நாட்டின் தோற்றத்தை மேம்படுத்துவதற்குச் சிறந்த, குறைந்த செலவைக் கொண்ட வழியாகும். நாட்டுக்கு அவமானத்தைத் தரக் கூடிய பல விஷயங்கள் இருக்கும் போது நமது தோற்றத்தை மேம்படுத்த பெரும் பணத்தைச் செலவு செய்வதில் எந்த நன்மையுமில்லை."     நாட்டின் தோற்றத்தை மேம்படுத்த எப்பிசி-க்கு 84 மில்லியன்…

சுஹாகாம் விசாரணையில் மாட் சாபு சாட்சியமளிக்கிறார்

பெர்சே 2.0 பேரணி நடந்த போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) நடத்தும் விசாரணையில் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு சாட்சியம் அளிக்கவிருக்கிறார். இதனை அவரது வழக்குரைஞர் முகமட் ஹனிபா மற்றும் பெர்சே 2.0 இன் வழிகாட்டல்…

கம்போங் பாரு மசோதாவை பேரரசரிடம் கொண்டு செல்ல பக்கத்தான் திட்டமிடுகிறது

கம்போங் பாரு மேம்பாட்டு கார்ப்பரேசன் மசோதா 2010 வைத் தடுத்து நிறுத்தும் இறுதி முயற்சியாக பேரரசர் மற்றும் சிலாங்கூர் சுல்தான் ஆகியோரின் தலையீட்டை பெற பக்கத்தான் ரக்யாட் ஆலோசித்து வருகிறது என்று அதன் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். "மலாய்க்காரர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த மசோதாவை தாமதப்படுத்துவதற்கு அகோங்…

பிரதமரின் கஸாக்ஸ்தான் வருகையின் செலவு ரிம1 மில்லியன்

இவ்வாண்டு ஜூன் மாதம் பிரதமர் நஜிப் கஸாக்ஸ்தானுக்கு மேற்கொண்ட வருகைக்கான செலவு ரிம1 மில்லியன் என்று வெளிவிவகார அமைச்சு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. பிரதமரும் அவரது பரிவாரமும் கஸாக்ஸ்தானில் நடந்த உலக இஸ்லாமிய பொருளாதார கருத்தங்கில் கலந்துகொண்டதற்கான மொத்த செலவு ரிம1,072,213.22 சென். இந்தக் கருத்தரங்கின் போது மலேசியா…

பிரதமரின் பெர்த் பயணம் தனிப்பட்ட முறையிலானது

மெர்தேகா தினத்தன்று அரசாங்க விமானம் ஒன்றில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது தனிப்பட்ட முறையிலானது என இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. "ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரையிலான அந்தப் பயணம் அவரது தனிப்பட்ட பயணம்", என வெளியுறவு அமைச்சு, பிகேஆர் பத்து…

என்ஜிஒ: மதம் மாற்ற முயற்சிக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய நன்றி தெரிவிக்கும் விருந்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என முஸ்லிம் அரசு சாரா அமைப்பு ஒன்று கோரியுள்ளது. போதுமான ஆதாரம் இல்லாததால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும் அந்த நிகழ்வில் முஸ்லிம்களுடைய நம்பிக்கைகளையும்…

எம்டியூசி நவம்பர் 3ம் தேதி நாடு முழுவதும் மறியலை நடத்தும்

கடந்த வாரம் மக்களவை ஏற்றுக் கொண்ட வேலை வாய்ப்புச் சட்டத் திருத்தங்களை எம்டியூசி என்ற மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் வன்மையாக ஆட்சேபிக்கிறது. அந்தத் திருத்தங்களை நிராகரிப்பதற்காக காரணங்களை விளக்கி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அது கடிதம் எழுதும் என எம்டியூசி தலைவர் முகமட் அலி அத்தான் கூறினார்.…

எச்ஆர்பி, பதிவு மீது நீதித்துறை மறு ஆய்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கிறது

ஹிண்ட்ராப் அமைப்பின் அரசியல் களமான மலேசிய மனித உரிமைக் கட்சி, ஒர் அரசியல் கட்சியாகத் தன்னைப் பதிவு செய்து கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை அரசாங்கம் நிராகரித்ததை, நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி மீண்டும் விண்ணப்பம் செய்து கொண்டுள்ளது. இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட அந்த…