குதப்புணர்ச்சி வழக்கு ஆகஸ்ட் 22-க்குத் தள்ளி வைக்கப்பட்டது

அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில்,  சாட்சிகளாகும் சாத்தியமுள்ள அனைவரையும் எதிர்த்தரப்புச் சந்திக்க வாய்ப்பளிக்கும் வகையில் விசாரணை ஆகஸ்ட் 22-க்குத் தள்ளி வைக்கப்பட்டது. கர்பால் தலைமையில் செயல்படும் எதிர்த்தரப்பு இதுவரை, சாட்சிகளாகும் சாத்தியம் உள்ளவர்கள் என அரசுத்தரப்புப் பட்டியலில் உள்ளவர்களில் 19 பேரைச் சந்தித்துள்ளது. அது சந்தித்தவர்களில் பிரதமர் நஜிப்…

த ஸ்டார் நாளேடு இஸ்லாத்திற்கு எதிரானது என்கின்றனர் “இஸ்லாம் காவலர்கள்”

பெர்க்காசா த ஸ்டார் ஆங்கில மொழி நாளேட்டை இஸ்லாத்திற்கு பகைவன் எனக் கண்டித்துள்ளது. ரமதான் மாத உணவு வகைகள் பற்றிய அதன் சிறப்பு வெளியீட்டில் தவறுதலாக பன்றி இறைச்சி உணவு பற்றிய ஒரு கட்டுரை இடம் பெற்று விட்டது தொடர்பில் பெர்க்காசா அவ்வாறு கண்டித்துள்ளது. "நாம் அந்த நாளேட்டை இஸ்லாத்துக்கு…

இண்ட்ராப், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களைத் திரட்டுகிறது

இண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்துள்ள சிவில் வழக்கு தொடர்பில் 'ஆதாரங்களைத் திரட்டும்' பணியில் அதன் வழக்குரைஞர் சுரேஷ் குரோவர் ஈடுபட்டுள்ளார். அவர் மலேசியாவில் இந்திய சமூகத்தினரை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இண்ட்ராப் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு அதன் தலைவர்கள் உள்நாட்டுப்…

ராயிஸ்: “பெர்சே பேரணி பங்கேற்பாளர்களுக்கு தலா 50 ரிங்கிட் கொடுக்கப்பட்டது”

கூட்டரசு தலைநகரில் ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியில் பங்கு கொண்டவர்களுக்கு அந்த விவகாரத்தில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர்கள் உண்மையில் பணம் கொடுத்ததாக தகவல் பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் நேற்று கூறியிருக்கிறார். மஞ்சள் நிற டி சட்டையை அணிந்து அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு…

தாஜுடின் மீது கஸானா, ஜிஎல்சி-க்களுக்கு விளக்கக் கூட்டத்தை நடத்துகிறது

தாஜுடின் ராம்லி விவகாரத்தில் எதிர்பாராத புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் விளக்கமளிப்புக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கத்தின் முதலீட்டுக் கரமான கஸானா ஹோல்டிங்ஸ் நேசனல் பெர்ஹாட் அனைத்து ஜிஎல்சி-க்கள் என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பணித்துள்ளது. Read More

எஸாம்: ‘எரியூட்டுவது’ என நான் சொன்னது அந்த அர்த்தத்தில் அல்ல

கடந்த வெள்ளிக் கிழமை செய்தி இணையத் தளங்களைக் கடுமையாக சாடிய செனட்டர் முகமட் எஸாம் முகமட் நோர், இப்போது அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறார். Read More

அன்வாருடைய குதப்புணர்ச்சி வழக்கு 11 விசாரணை தாமதமாகலாம்

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு 11 விசாரணையில் அவரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் கடந்த வெள்ளிக் கிழமை நடத்திய பேட்டிக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் எதிர்பாராத வகையில் ஆஜராகினர். Read More

இந்தியர்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஏன் மெத்தனப் போக்கு?, சார்ல்ஸ்

மலேசிய மருத்துவமனைகளில் பிறந்தும் குடியுரிமை பெறுவதில் அவதிப்படுகின்றனர் நமது இந்திய சமூகத்தினர்.  இப்பிரச்னையில் 40,000 இந்தியர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது வேதனைக்குரியதே என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். "19 பிப்ரவரி முதல் 26 பிப்ரவரி வரை நடைபெற்ற மை டஃப்தார் பதிவில் மொத்தம் 6,541…

டிஎபி: தாஜுடினைக் காப்பாற்றும் முயற்சி மிகப் பெரிதாக இருக்கும்

முன்னாள் மலேசிய விமான நிறுவனத் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிராக பல ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடுத்துள்ள வழக்குகளில் அரசாங்கம் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுவது, "அம்னோ புத்ராக்களைக் காப்பாறும் முயற்சிகள் அனைத்தையும் காட்டிலும் மிகப் பெரியது" என டிஎபி குற்றம் சாட்டியுள்ளது. "அந்த வழக்குகளை மீட்டுக் கொள்வதால்…

பெர்சே அதன் நிதிமூலங்களைத் தெரிவிக்கத் தயார்

அரசாங்க ஆதரவாளர்களால் வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெர்சே 2.0, அதன் நிதிமூலங்களைத் தெரிவிப்பதற்குத் தயாராகவுள்ளது. கடந்த வாரம் மலேசியாகினியின் நேர்காணல் ஒன்றில் பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்,  ஜூலை 9 பேரணி,  மலேசியர்களின் நிதியுதவி கொண்டு நடத்தப்பட்ட மக்கள் இயக்கமாகும் என்றார். “பேரணி  முழுக்க…

பள்ளிவாசல் ஒலிபெருக்கி மீது பினாங்கு விதித்துள்ள தடையை பெர்லிஸ் ஆதரிக்கிறது

வைகறையின் போது பள்ளிவாசல் அல்லது சூராவ் ஒலிபெருக்கிகள் மூலம் திருக்குர் ஆன் போதனைகளை ஒலிபரப்பும் நடைமுறை முகமது நபியின் போதனைகளுக்கு முரணானவை என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா கூறுகிறார். "வைகறைக்கு முன்னதாக ஒலிபெருக்கியின் அளவைக் கூட்டுவது முகமது நபியின் போதனைகளுக்கு எதிரானது. ஏனெனில் அது இன்னும் உறங்கிக்…

அம்னோ தலைவர்: பெர்சே பேரணி லண்டன் கலவரங்களைப் போன்றதல்ல

பெர்சே 2.0 பேரணி லண்டனில் இந்த வாரத் தொடக்கத்தில் நிகழ்ந்த கலவரங்களைப் போன்று மாறியிருக்கக் கூடும் என்ற அரசாங்க நிலையிலிருந்து உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா மாறுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது. "நான் சட்டவிரோதக் கூட்டங்களை ஒப்புக் கொள்ளவில்லை. என்றாலும் பெர்சே கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளாமலும் இல்லை. அத்துடன்…

வழக்குரைஞர் மன்றம் தாஜுடின் விவகாரத்தில் ஜிஎல்சி-க்களை எச்சரிக்கிறது

தாஜுடின் ராம்லியுடனான விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணும் போது ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குநர் வாரிய உறுப்பினர்கள், தங்களது கடமைகளைச் செய்ய தவறி விட்டதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் கவனக் குறைவாக இருந்ததற்காக நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என வழக்குரைஞர் மன்றம் எச்சரித்துள்ளது. ஒரு…

பக்காத்தான் பெரிய வெற்றி பெறும் என்ற ஆரூடம் தவறானது என்கிறார்…

அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்பான பக்காத்தான் ராக்யாட் 100 நாடாளுமன்ற இடங்களை வெல்லும் என முடிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வழி முறை தவறானது என ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதீன் கூறுகிறார். Read More

அரசாங்கம்: மலேசியா, உலக அளவிலான பேச்சு சுதந்திர தரத்தை பூர்த்தி…

மலேசியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பேச்சு, தகவல் சுதந்திரம் அனைத்துலகத் தரங்களுக்கு இணையானது என அரசாங்கம் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கூறியுள்ளது. கடந்த மக்களவைக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமர்பிக்கப்பட்ட 2010ம் ஆண்டுக்கான சுஹாக்காம் அறிக்கைக்கு அரசாங்கம் அளித்துள்ள 69 பக்க பதிலில் அவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்,…

பிகேஆர்: இணையத்தளங்களுக்கு எதிரான எஸ்ஸாமின் மிரட்டல் ஒரு குற்றச்செயலாகும்

செனட்டர் எஸ்ஸாம் முகம்மட் நோர், இணையச் செய்தித்தளங்களைக் கொளுத்தப்போவதாக மிரட்டல் விடுத்திருப்பது ஒரு “குற்றச் செயல்” என்றும் அவருக்கு எதிராக போலீசும் சட்டத்துறை தலைவரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். “மேலவை உறுப்பினர் ஒருவர் இப்படிப் பேசியிருப்பதையும் குற்றச்செயல்களில்…

இண்ட்ராபின் பிரிட்டிஷ் வழக்குரைஞர் நாடு கடத்தப்பட்டார்

மலேசியாவில் இந்திய-மலேசியர்கள் ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படுவது சரியா என்பதைக் கண்டறிய வந்த பிரிட்டிஷ் வழக்குரைஞர் இம்ரான் கானைக் குடிநுழைவுத்துறை நாட்டை விட்டு வெளியேற்றியது. இரண்டாவது தடவையாக வெளிநாட்டு வழக்குரைஞர் ஒருவர் இவ்வாறு நாடு கடத்தப்படுகிறார். கடந்த மாதம், ஸ்கோர்பியன் நீர்மூழ்கி ஊழல் வழக்கில் சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரெஞ்ச் வழக்குரைஞர் கேஎல்ஐஏ…

இசி அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தவும், காரணம் சொல்லக் கூடாது

 உங்கள் கருத்து:  "மை கார்டு எண்களைப் பாருங்கள் அந்த மூன்று விஷயங்களிலும் ஒரே ஒரு இலக்கம் மட்டும் மாறியிருக்கிறது. அது தவறு அல்ல. திட்டமிடப்பட்ட மோசடி என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது."       "படியாக்கம்' செய்யப்பட்ட வாக்காளர்கள் அம்னோ உறுப்பினர்கள்" ஹலோ: தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல்…

இணையத்தளங்களைத் “தீக்கிரையாக்குவோம்”, மிரட்டுகிறார் செனட்டர் எஸ்ஸாம்

இஸ்லாத்தை தற்காக்க தாம் போராடப்போவதாக அம்னோ செனட்டர் முகமட் எஸ்ஸாம் முகமட் நூர் இன்று (ஆகஸ்ட் 12) கூறினார். அப்போரில் இஸ்லாத்தின் எதிரிகளின் முகவர்களாக செயல்படும் செய்தி இணையத்தளங்களும் அடங்கும் என்று அவfர் கூறிக்கொண்டார். "சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகவுக்கு (ஜயிஸ்)எதிரான பண்பற்ற நடத்தையை அவர்கள் (இஸ்லாத்தின் எதிரிகள்)…

ரோஸ்மா: என்னை அச்சுறுத்தாதீர், மிஸ்டர் கர்பால் சிங்

பிரதமர் நஜிப்பும் அவருடைய மனைவி ரோஸ்மாவும் தாங்கள் குதப்புணர்சி II வழக்கில் அன்வார் இப்ராகிமின் சாட்சிகளாக இருக்க விரும்பவில்லை என்று அவர்களைப் பேட்டி கண்ட அன்வாரின் வழக்குரைஞர்களிடம் கூறினர். இத்தகவலை எதிர்தரப்பின் தலைமை வழக்குரைஞர் கர்பால் வெளியிட்டார். அதே தகவலை சங்கராவும் தெரிவித்தார். "பேட்டி அளிக்கும் அறைக்கு முதலில்…

நஜிப்பும் ரோஸ்மாவும் பேட்டியளிக்க நீதிமன்ற கட்டடத்திற்கு வந்தனர்

குதப்புணர்ச்சி II வழக்கில் அன்வார் இப்ராகிம்மை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்களுக்கு பேட்டி அளிப்பதற்காக பிரதமர் நஜிப்பும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் ஜாலான் டூத்தா நீதிமன்ற கட்டடத்திற்கு வந்தனர். பிற்பகல் மணி 2.55 க்கு அவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். மலாக்கா முன்னாள் போலீஸ் தலைவர் முகமட் ரௌடான் முகமட்…

படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் அம்னோ உறுப்பினர்கள், பாஸ் கண்டுபிடிப்பு

வாக்காளர் பட்டியலில் இரண்டு தடவை வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் சிலர், அம்னோ உறுப்பினர்கள் என்பதை பாஸ் கண்டுபிடித்துள்ளது. இதனால் ஆளும் கட்சி இந்த மோசடிக்குப் பின்னணியில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் கயாட், படியாக்கம் செய்யப்பட்ட மேலும் மூவரின் பெயர்கள் இன்னமும் வாக்காளர்…

வாக்காளர் மிஸ்மா கண்டுபிடிக்கப்பட்டார்

நிரந்தர வசிப்பிடத்தகுதி பெற்றிருந்தவர் என்றும் பின்னர் நான்கே மணி நேரத்தில் குடியுரிமை பெற்றவர் என்றும்  கூறப்பட்ட  மிஸ்மாவை ஊடகங்கள் தேடிக் கண்டுபிடித்துள்ளன. ஆனால் அவர், தமக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதில் முறைகேடு  நிகழ்ந்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறார். “எல்லாரையும்போல் நானும் சட்டத்தைப் பின்பற்றியே பெற்றேன். மற்றவர்கள் சொல்வதைப்போல் அல்ல”, என்று அவர்…