மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
அடுத்த பினாங்கு பிஎன் தலைவர் குறித்து கோ மௌனம் சாதிக்கிறார்
கெரக்கான் கட்சியின் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் அடுத்த பினாங்கு பிஎன் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற ஊகங்கள் பற்றிக் கருத்துரைக்க கெரக்கான் தலைவர் கோ சூ கூன் மறுத்துள்ளார். அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை பிஎன் கூட்டணித் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்…
“கடல் நாக ஆண்டு திருப்பு முனையாகும்”
மலேசிய சீனர்கள் கடல் நாக ஆண்டைக் கொண்டாடும் வேளையில் அவர்களுடைய எதிர்காலம் ஒர் திருப்பு முனையில் இருப்பதாக பாண்டான் எம்பி ஒங் தீ கியாட் கூறுகிறார். "சீன வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு கடல் நாக ஆண்டு சிறந்த நேரம் எனக் கருதுகின்றனர்," என…
சிட்னியில் அளவுமீறி பொருள்வாங்கிக் குவித்தேனா? மறுக்கிறார் ரோஸ்மா
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவீயார் ரோஸ்மா மன்சூர், அண்மையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் விடுமுறை கழிக்கச் சென்றிருந்தபோது பொருள்களை மிதமிஞ்சி வாங்கிக் குவித்தார் என்று கூறப்படுவதை நிராகரித்தார். “அது அபத்தம், மிகைப்படக் கூறப்பட்டிருக்கிறது.அதில் உண்மை இல்லை”, என்றாரவர். இன்று, கோலாலம்பூரில் மசீச-வின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில்…
பகாங்கில் எதிர்த்தரப்பிடம் உள்ள இடங்களை பிஎன் கைப்பற்றும்
பகாங் பாரிசான் நேசனல் (பிஎன்), 13வது பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தில் எதிர்த்தரப்பிடம் உள்ள அத்தனை இடங்களையும் கைப்பற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. மந்திரி புசார் அட்னான் யாக்கூப் இவ்வாறு கூறியுள்ளார். நேற்றிரவு மூவாயிரம் பிஎன் மகளிர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், இப்போது திசைமாறி வீசத்தொடங்கியிருக்கும் அரசியல் காற்று…
லிம் கிட் சியாங்: மலேசியர்கள் விவாதிப்பதற்கு ஐந்து சூடான விஷயங்கள்
கடல் நாக ஆண்டை மலேசியர்கள் வரவேற்கும் வேளையில் மலேசியர்கள் விவாதிப்பதற்கு ஐந்து சூடான விஷயங்களை டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முன் வைத்துள்ளார். 1) கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அன்வார் இப்ராஹிமை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததற்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் முறையீடு செய்து கொண்டது. …
அப்பட்டமான குண்டர்தனத்தைப் பார்க்க போலீஸ் தலைவருக்குக் கண்ணில்லையா?
“இந்தப் போலீசார் என்றுதான் பொய் சொல்வதை நிறுத்துவார்கள்?இப்போதுதான் ஒன்று நடந்த மறுநிமிடமே இணையத்தளத்தில் இடம்பெற்றுவிடுகிறதே.” அம்னோ எதிர்ப்புக் கூட்டம் தடைப்பட்டது விஜயன்: சிலாங்கூர் போலீஸ் தலைவருக்குக் கண்ணில்லையா அல்லது அறிவிலியா? காணொளியைப் பாருங்கள்.அதன்பின் அங்கே குழப்பம் விளைவிக்கப்படவில்லை; அச்சுறுத்தப்படவில்லை என்று கருத்துரைக்கலாம். இவ்வளவு நடந்திருக்க போலீஸ் எங்கு போனார்கள்? …
இண்ட்ராப் கூட்டத்தை கலைத்த அம்னோ ரவுடிகள்!
ரசாக்: நேற்று ‘அம்னோவை தவிர எதுவானலும் சரி’ என்ற கூட்டத்தைக் கலைத்த அம்னோ ரவுடிகள் பற்றி கோமாளி ஏன் கண்டம் செய்யவில்லை? கோமாளி: காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகள் அனைத்தையும் கோமாளி வன்மையாக கண்டனம் செய்கிறேன். காந்தி படங்களை ஏந்தியும், வன்முறையைற்ற வகையில் இனவாதத்தை ஒழிக்க முற்பட்டுள்ள அமைப்புகளுடன் இணைந்து…
நஜிப் மசீச, கெரக்கான் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்களில்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாரிசான் நேசனல் (பிஎன்) உறுப்புக்கட்சிகளான மசீச-வும் கெரக்கானும் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்களில் கலந்து கொண்டார். ஜாலான் அம்பாங்கில் உள்ள மசீச தலைமையகத்தில் நடத்தப்பட்ட மசீச திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப்புடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும்…
பழனிவேல் இப்போது இந்திய விவகாரங்களுக்கான வழிகாட்டும் அமைச்சர்
இந்நாட்டின் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான வழிகாட்டும் அமைச்சராக பிரதமர் இலாகா அமைச்சரான ஜி.பழனிவேல் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார். கோலாலம்பூர் எஸ்ஜேகே கின்றாரா தமிழ்ப்பள்ளியில் இன்று நடைபெற்ற மலேசிய தமிழ்ப்பள்ளிகள் சமூகத்தின் ஆண்டு கூட்ட நிகழ்ச்சியில் மஇகா தலைவருமான ஜி.பழனிவேலின் நியமனம் அறிவிக்கப்பட்டது. சமூகத்தை…
50-50 அல்ல, இடங்களை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பு இன்னும் பிஎன்…
எதிர்க்கட்சிகள் வசம் இப்போது இருக்கும் மாநிலங்களை பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் கைப்பற்றுவதற்கு 50க்கு 50 வாய்ப்புக்களே உள்ளன என்று கூறப்படுவதை அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிடி நிராகரித்துள்ளார். குத்து மதிப்பாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் ஆய்வின் விளைவே அத்தகைய எண்ணம் என அவர் சொன்னார். "பிஎன்-னாக…
நிக் அஜிஸ் எம்ஏசிசி-யிடம் சொத்துக்களை அறிவிக்கத் தயார்
கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், கேட்டுக் கொள்ளப்பட்டால் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சொத்துக்களை அறிவிக்கத் தயாராக இருக்கிறார். அரசியல்வாதிகளும் அரசாங்க ஊழியர்களும் சொத்துக்களை அறிவிப்பது என்பது பழைய விஷயம் என பாஸ் ஆன்மீகத் தலைவருமான நிக் அஜிஸ் சொன்னார்.…
RM 600,000 தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதை எதிர்க்குமாறு NFC-க்கு பெர்க்காசா…
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை நடத்துகின்றவர்கள், 600,000 ரிங்கிட் நிறுவன நிதிகளை தவறாகப் பயன்படுத்தும் பொருட்டு கிரடிட் கார்டுகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்து போலீஸில் புகார் செய்யுமாறு மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா இன்று என்எப்சி-க்கு சவால் விடுத்தது. மறுப்பறிக்கைகளை வெளியிட்டு வரும் என்எப்சி…
நஜிப்: தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து சிறப்பு மாநாடு நடத்தப்படவேண்டும்
இந்த நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும் நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும் சிறப்பு மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்த மாநாட்டில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் சம்பந்தப்பட வேண்டும்.…
டெங்கி நோயாளிகள் பற்றி அறிவிக்காமல் இருப்பது குற்றமாகும்
மருத்துவர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் சிகிச்சை பெற்ற டெங்கி நோயாளிகள் பற்றி அறிவிக்கத் தவறுவது தொற்று நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். அந்தச் சட்டத்தின் கீழ் 24 மணி நேரத்துக்குள் மருத்துவர்கள் டெங்கி நோயாளிகள் பற்றித் தகவல் கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் லியாவ்…
அம்னோ-எதிர்ப்புக் கூட்டம் தடைப்பட்டது;ஒருவருக்குக் காயம்
Anything But Umno(அபு) என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘செராமா’ ஒன்று “போக்கிரி” கூட்டமொன்றின் அடாவடித்தனத்தால் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. பிஎன், அம்னோ அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட டி-சட்டை அணிந்து இளைஞர்கள் கலாட்டா செய்ததால் ‘செராமா’ தடைப்பட்டது என சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) நிர்வாக இயக்குனர்…
பிகேஆர்: முறையீட்டின் நோக்கமே அன்வாரை சிறைக்குள் தள்ளுவதுதான்
அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு பதிவு செய்யப்பட்டிருப்பது, அரசின் அதிகாரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். “முறையீட்டின் நோக்கமே அன்வாரைச் சிறையிடுவதும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றுவதைத்…
“ஆக, அரசியல்வாதிகள் வரலாற்றைக் கடத்தி விட்டனர்”
"ஆகவே, இறுதியில் எல்லாமே சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதுதான். கல்வி அல்ல. முழுமையான சதித் திட்டத்தில் நீங்கள் பகடைக் காய்களே." மலாய் இடச்சாரிகள் உண்மையில் சுதந்தரப் போராளிகள் அல்ல அடையாளம் இல்லாதவன்_3hdchd: வரலாறு என்பது தத்துவத்தைப் போல நிர்ணயிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டது அல்ல. மாறாக அது ஒர் ஒட்டமாகும். அது பல…
குதப்புணர்ச்சி முறையீட்டுக்கு யார் பணம் கொடுக்கப் போகிறார்கள்: சைபுலா அல்லது…
"குற்றச்சாட்டு, இணக்கமான செக்ஸ், ஆகவே சைபுல் விருப்பமுள்ள கூட்டாளி. இந்த முறையீடு அவருடைய கௌரவத்தையும் நேர்மையையும் எப்படிக் காப்பாற்றப் போகிறது?" குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக ஏஜி முறையீட்டை சமர்பித்தார் மூன் டைம்: இது போதும், போதும் என்ற அளவுக்கு நீண்டு விட்டது. வெட்கத்தைக் கொண்டு வந்ததற்காகவும் ஏமற்றியதற்காகவும் நீதிமன்றங்களின்…
லிம் குவான் எங்: ஊழல்கள் பிஎன் கலாச்சாரம்
40 மில்லியன் ரிங்கிட் நில ஊழலில் முந்திய மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புக் கேட்குமாறு விடுக்கப்பட்டுள்ள அறைகூவலை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்துள்ளார். "ஊழல்கள் பிஎன் கலாச்சாரம்" என வருணித்த அவர் அந்தக் குறிப்பிட்ட நில மோசடி 2002ம் ஆண்டு நிகழ்ந்தது என்றார்.…
“மலாய் இடச்சாரிகள் உண்மையான சுதந்தரப் போராளிகள் அல்ல”
வரலாற்றில் துல்லிதம் இல்லாத பல விஷயங்கள் அடங்கியிருப்பதாக வரலாற்றுப் பேராசியரான கூ கே கிம் கூறுகிறார். அவற்றில் ஒன்று மலாய் இடச்சாரி அமைப்புக்களில் உண்மையில் சுதந்திரப் போராளிகள் இருந்தனரா என்ற கேள்வியாகும். அது குறித்து கூ சந்தேகம் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பாக பிகேஎம்எம் என்ற Parti Kebangsaan Melayu…
டிஏபி-யிடம் “வெறும் பேச்சுத்தான்” என்று ஜாடைபேசும் மசீச வீடியோ
சீனப்புத்தாண்டு அருகிலும் பொதுத் தேர்தல் நெருங்கியும் வந்து கொண்டிருக்கும் வேளையில், மசீச ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் நோக்கில் யு-டியுப்பில் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளது.அக்காணொளி புத்தாண்டு வாழ்த்தும் சொல்கிறது, மசீசவின் பரம-வைரியான டிஏபியை ஜாடையாக தூற்றவும் செய்கிறது. மூன்று நாள்களுக்குமுன் மசீச தலைமையகத்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட…
பாஸ் இளைஞர்கள்: மாணவர் விசயத்தில் “சும்மா” இருக்கவில்லை
பாஸ் இளைஞர் பகுதி, பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை (யுயுசிஏ)த் தான் எப்போதும் எதிர்த்து வந்திருப்பதை வலியுறுத்தியதுடன் கோலெஜ் யுனிவர்சிடி இன்சானியா(கேயுஐஎன்) மாணவர் தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறு கெடா மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. “எங்கள் நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை. அது தெளிவாக…


