அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
நாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதே- பெர்சத்து தலைவர் வருத்தம்
பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் ரயிஸ் உசேன், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரியாக வருவதில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார். “பட்ஜெட் 2020 போன்ற முக்கியமான ஒன்று விவாதிக்கப்படும் வேளையில் எம்பிகளின் வருகை படுமோசமாகக் குறைந்துள்ளது. “நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு எம்பிகளின் வருகையை அதிகரிப்பது எப்படி? மக்களே உங்களுக்கு ஏதாவது…
அஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன், கட்சியிலிருந்து விலக மாட்டேன்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கட்சியிலிருந்து விலகி வேறொரு கட்சியில் சேரத் திட்டமிடுவதாக முன்னாள் பிகேஆர் தலைவர் சைட் உசேன் அலி கூறியிருப்பதை மறுத்தார் “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிகேஆர் உறுப்பினர்கள் மிகப் பெரிய அதிகாரத்தைக் கொடுத்துள்ளனர். எனக்கு மட்டுமல்ல. மொத்தக் குழுவுக்கும். “கடந்த கட்சித் தேர்தலில்…
சோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் என்று கூறப்படும் 12 பேரைக் கைது செய்ய 2012 பாதுகாப்புச் சட்டம் (சோஸ்மா) பயன்படுத்தப்பட்டதை மீண்டும் தற்காத்துப் பேசியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்கைது நடவடிக்கை குறித்து போலீசார் தமக்கு விளக்கமளித்திருப்பதாகக் கூறினார். அத்துடன்,…
எல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட ஐவர் கைது
தமிழீழ வ்டுதலைப் புலி (எல்டிடிஇ) தொடர்புள்ளவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையில் ஆகக் கடைசியாக ஓர் ஆசிரியர், மாநில அரசுத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சினமூட்டும் நடவடிக்கைகளைத் தூண்டி விட்டார்கள் எல்டிடிஇ-யை ஆதரித்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக புக்கிட்…
பிஎன், ஹரப்பான்மீது வெறுப்படைந்த இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்- பெட்ரா…
பாரிசான் நேசனல் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் ஆகிய இரண்டையும் சாடிய பெட்ரா ஜெயா எம்பி ஃபாதில்லா யூசுப், அவற்றின் பிளவுபடுத்தும் அரசியலால் ஏமாற்றமடைந்துள்ள இளைஞர்கள் ஒரு புதிய இயக்கத்தின் மூலம் எழுச்சி பெற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். முன்னாள் பொதுப் பணி அமைச்சரும் இப்போது அவர் பார்டி…
எல்டிடிஇ விவகாரத்தை போலீசிடமே விட்டுவிடுக: அமைச்சரவைக்குப் பிரதமர் அறிவுறுத்து
வெள்ளிக்கிழமை நடந்த வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றியும் பேசப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள் குறிப்பாக டிஏபி-யைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்புச் சட்டம்(சோஸ்மா) அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த பக்கத்தான் ஹரப்பான் அதே…
சட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில் பேசப்பட்டது- சைபுடின்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இரு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் கைதான விவகாரம் பற்றி பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் விவாதித்துள்ளனர். நேற்று அது குறித்து சாதாரணமாக பேசப்பட்டது என்று தெரிவித்த ஹரப்பான் செயலகத் தலைவர் சைபுடின் அப்துல்லா, அதன்மீது இப்போதைக்கு எம் முடிவும் செய்யப்படவில்லை…
எல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால், குற்றமற்றவர்கள் கொடுமைப்படுத்தப்படக் கூடாது-…
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்துக் கருத்துரைத்த மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் குற்றவாளிகள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது சரிதான் ஆனால், நிரபராதிகளைத் துன்பத்துக்குள்ளாக்கக் கூடாது என்றார். ஸ்ரீலங்காவில் தனி நாடு கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் டிஏபி-யின்…
மசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு அநியாயம்: வீ கண்டனம்
மசீச தலைவர் வீ கா சியோங், 2020 பட்ஜெட்டில் மசீசவுக்குச் சொந்தமான துங்கு அப்துல் ரஹ்மான் பல்கக்லைக் கழகக் கல்லூரிக்கு கொடுக்கப்பட்டு வந்த நிதியில் 81.8 விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தார். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு கல்வி அமைச்சு வழக்கமாக ரிம5.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யும்…
அன்வார்: மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’ ஆவதற்காக இன வேற்றுமையை வளர்க்காதீர்கள்
மலாய்க்காரர் நலனுக்காக போராடுவது சரி ஆனால், நாட்டைப் பிளவுபடுத்தியும் இனங்களுக்கிடையில் வேற்றுமையை விதைத்தும்தான் அதைச் சாதிக்க வேண்டும் என்பதல்ல என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். “மலாய்க்கார்களிடையே ஹீரோ என்று பெயரெடுப்பது எளிது. எப்படி என்று எனக்குத் தெரியும். “ஆனால் பிளவையும் பகைமையையும் உண்டாக்கித்தான் அதைச் சாதிக்க…
அம்பிகா: சோஸ்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்; அழைத்து விசாரித்திருக்கலாம்
வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் குற்றத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் பி.குணசேகரன், ஜி.சுவாமிநாதன் ஆகிய இருவரும் நேற்று…
டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட் சியாங், இராமசாமியைக் கைது…
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் பி.குணசேகரன், ஜி.சுவாமிநாதன் ஆகிய இருவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என இஸ்கண்டார் புத்ரி எம்பி லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். 2012 பாதுகாப்புச் சட்டம்(சிறப்பு நடவடிக்கைகள்) அல்லது சோஸ்மாவின்கீழ் கைது…
பேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும் இல்லை
பேராக்கில் திடீர் தேர்தல் நடகக்ப் போவதாகவும் கட்சித்தாவல்கள் நிகழப் போவதாகவும் உலவி வந்த வதந்திகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தலுக்காக பள்ளிகளின் நிலையைப் பார்வையிட்டு வருவதாக இணையத்தளத்தில் உலவும் ஊகங்களைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பள்ளிகளைப் பார்வையிடல் ஒரு வழக்கமான பணிதான் என்று இசி தலைவர் அஸ்ஹார் ஹருன்…
டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் கைது: விடுதலைப் புலிகளுடன் தொடர்பா?
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைதானதை புக்கிட் அமான் பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவுத் தலைவர் ஆயுப் கான் மைடின் பிச்சை உறுதிப்படுத்தினார். காடெக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு(எக்ஸ்கோ) உறுப்பினருமான ஜி.சுவாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற…
வரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத செயல்- பிரதமர்
அரசாங்கம் ஒரே நேரத்தில் வரிகளைக் குறைப்பதும் உதவித் தொகையை அதிகரிப்பதும் சாத்தியமற்றது என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “வரிகள் குறைவாக இருப்பதையும் உதவித் தொகை அதிகரிப்படுவதையும்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், வரிகளைக் குறைத்து அதே நேரத்தில் உதவித் தொகையை அதிகரிப்பது நடக்கக் கூடியதல்ல. “அரசாங்கத்துக்குப் பணம் தேவை.…
உத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்
பல ஆண்டுகளாக நிதிப் பிரச்னையால் தடுமாறிக் கொண்டிருந்த மலாய்மொழி நாளேடான உத்துசான் மலேசியா இன்றுடன் அதன் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும். அதன் பணியாளர்கள் அனைவருக்கும் வேலைநீக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. உத்துசான் நிர்வாகம் பணியாளர்களுக்காக விடுத்திருந்த சுற்றறிக்கை ஒன்று மிங்குவான் மலேசியா, கோஸ்மோ ஆகியவையும்கூட மூடப்படுவதாக தெரிவித்தது. அந்த 80ஆண்டுக்கால…
ரிம4 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அரசாங்கம் விற்றது
பக்கத்தான் அரசாங்கம் 2018 மே 8-இல் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்றதாகக் கூறப்படுவதை நிதி அமைச்சர் லிம் குவான் எங் மறுத்தார். முன்னாள் அரசாங்கம்தான் 2010க்கும் 2017க்குமிடையில் ரிம4 பில்லியனுக்குமேல் பெறுமதியுள்ள நிலங்களை விற்றது என்றாராவர். “அப்போது பெரும்பாலான அரசாங்க நில விற்பனை நேரடிப்…
‘maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று சொல்லவில்லை- அன்வார்
அன்வார் இப்ராகிம் கடந்த வார இறுதியில் ஷா ஆலமில் நடைபெற்ற காங்கிரஸ் மாருவா மலாயு-வைச் சிறுமைப்படுத்திப் பேசியதாகக் கூறப்படுவதை மறுத்தார். அந்தக் காங்கிரஸ் பற்றிக் குறிப்பிட்டபோது “மாருவா” என்றுதான் சொன்னதாகவும் ”பருவா” என்று சொல்லவில்லை என்றும் விளக்கமளித்த அவர், தம்மீது அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவதை “மடத்தனமான அரசியல்” என்றும் சாடினார்.…
அஸ்மின் புதிய கட்சி அமைக்க விரும்பினார் -சைட் உசேன்
பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி அவருக்கும் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் சச்சரவு முற்றியதை அடுத்து தனிக் கட்சி அமைக்க விரும்பியதாக பிகேஆர் நிறுவனர் சைட் உசேன் அலி கூறினார். அஸ்மின் பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறியதும் செய்வதற்குத் திட்டமிட்டிருந்த மூன்று காரியங்க்களில் புதுக் கட்சி அமைப்பதும்…
சாலே நஜிப்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்- சாபா பிகேஆர் தலைவர்
சாபா பிகேஆர் துணைத் தலைவர் முஸ்டபா சக்முட்-டுக்கு முன்னாள் சாபா முதலமைச்சர் சாலே சைட் கெருவாக் பிகேஆரில் சேர்வது பிடிக்கவில்லை. சாலே நஜிப்பின் “நம்பிக்கைக்குரிய ஆதரவாளராக” இருந்தவர் என்றாரவர். சாலே பிகேஆரில் சேர்வது உண்மைக்கும் நீதிக்கும் போராடும் கட்சியான அந்தக் கட்சியில் எதிர்மறை தாக்கங்களை உண்டுபண்ணும் என்று இன்று…
எதிரணியுடன் சேர்ந்து புதிய அரசாங்கம் அமைப்பதில் விருப்பமில்லை- மகாதிர்
அம்னோ தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதுபோல் எதிரணியுடன் சேர்ந்து ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பக்கத்தான் ஹரப்பானுக்கு வீருப்பமிலலை எனப் பிரதமர் அம்காதிர் முகம்மட் கூறினார். “அதில்(புதிய அரசாங்கத்தில்) எங்களுக்கு ஆர்வமில்லை. இது ஒரு பல்லின நாடு. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை எல்லா இனங்களையும் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்று வந்துள்ளனர்”,…
மலாய்க்காரர் ஒற்றுமைக்காக அம்னோ மற்றும் பாஸுடன் சேர்வீர்- மகாதிருக்கு மாட்…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மலாய்க்காரர் ஒற்றுமையின் பொருட்டு பக்கத்தான் ஹரப்பானிலிருந்து பெர்சத்துக் கட்சியுடன் வெளியேறி அம்னோ, பாஸ் கட்சிகளுடன் இணைய வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகம்மட் ஹசான் வலியுறுத்தியுள்ளார். “அம்னோவும் பாஸும் இதுகாறும் சொல்லி வந்தது உண்மைதான் என்பதை காங்கிரஸ் மாருவா மலாயு உறுதிப்படுத்தியுள்ளது.…
எரிபொருள் பண உதவித் திட்டம் ஜனவரி 1-இல் தொடங்குகிறது
குறிப்பிட்ட தரப்பினரை இலக்காகக் கொண்ட எரிபொருள் பண உதவித் திட்டம் 2020 ஜனவரி முதல் நாள் தொடங்குவதாக உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். அத்திட்டத்தின்கீழ் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உதவித்தொகை உதவிபெற தகுதி பெறுவோர் கணக்கில் நேரடியாகச் சேர்ப்பிக்கப்படும் என்றாரவர்.…
























