செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அயல் நாட்டவர்களுக்கு தங்கள் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ள்ளது. ஜேபிஜே அமலாக்க இயக்குனர் கிஃப்லி மா ஹாசன் கூறுகையில், நேற்றிரவு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும்…
எம்எசிசி: ஸாகிட்டின் ரிம230 மில்லியன் பற்றி இப்போதைக்கு கருத்து ஏதும்…
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அஹமட் ஸாகிட் ஹமிடி, இப்போது துணைப் பிரதமர், அவரது வங்கிக் கணக்கில் ரிம230 மில்லியன் வைத்திருந்தது குறித்து கருத்து ஏதும் கூறுவதற்கில்லை என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) இன்று தெரிவித்தது. "கருத்து இல்லை", என்று எம்எசிசி துணைத் தலைமை ஆணையர்…
அஷாலினா : நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு எதிர்க்கட்சியினர் கலங்கம் விளைவிக்கின்றனர்
பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியன், அவைத் தலைவர் பண்டிகார் அமினுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நடவடிக்கையானது, நாடாளுமன்றத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிப்பதாக உள்ளது என அமைச்சர் அஷாலினா ஒத்மான் கூறியுள்ளார். “இந்நடவடிக்கையானது கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நாடாளுமன்ற…
பகடிவதையைத் தெரிவிக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கை
பள்ளியில் நடக்கும் ஒழுக்கச் சீர்கேடுகள், குறிப்பாக பகடிவதைகளை மறைக்க முற்படும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு கூறியுள்ளது. பள்ளியின் முதல்வர்கள் அல்லது தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஒழுக்கச் சீர்கேடுகள் ஏதேனும் நடந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமெனக் கல்வி அமைச்சின் இயக்குநர்…
தலைமை நீதிபதியும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவரும் தீண்டத் தகாதவர்கள், மலேசிய…
மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் (பார்) மலேசிய தலைம நீதிபதி முகமட் ரவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுல்கிப்ளி அஹமட் மகினுடின் ஆகியோரை அதன் சமூக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அவர்களிடமிருந்து வரும் சமூக அழைப்புகளையும் ஏற்க வேண்டாம் என்று மன்றத்தின் உறுப்பினர்கள்…
ரஃபிஸி பத்து நாள்களில் ரிம1.5 மில்லியனுக்கு மேல் திரட்டினார்
தமக்கு நீதிமன்றம் விதித்துள்ள ரிம300,000 அபராதத்தைச் செலுத்துவதற்கு நன்கொடை அளித்து உதவுமாறு பத்து நாள்களுக்கு முன்பு பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். என்எப்சி வழக்கில் ரஃபிஸிக்கு இந்த அபராதம் விதிக்கப்படது. தமது வேண்டுகோளை ஏற்று மக்கள் மிகப் பெரும் தொகையை நன்கொடையாக…
மகாதிர்: மலாய்க்காரர்கள் நஜிப் நினைப்பது போல் அவ்வளவு மடையர்கள் அல்ல
ரொக்கமாக பணம் கொடுத்தல் மலாய்க்காரர்கள் பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பெரும் தொகை காணப்பட்டதை மறந்துவிடச் செய்யாது என்று மகாதிர் முகமட் கூறினார். "மலாய்க்காரர்கள் முட்டாள்கள் என்று நஜிப் நினைக்கிறார். (அவர்) மலாய்க்காரர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கிறார் ( வங்கிக் கணக்கிலிருந்த யுஎஸ்$600 மில்லியன் என்ன…
பி.எஸ்.எம். : வேலையிழப்பு காப்புறுதி திட்டத்தை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்!
வேலையிழந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, வேலையிழப்பு காப்புறுதி திட்ட (இ.ஐ.எஸ்.) மசோதாவை விரைவுபடுத்த வேண்டுமென, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் ஜயிம் அச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இச்சட்ட மசோதாவை முதல் வாசிப்புக்குக்…
துயரத்தில் மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அவர் அவையில் எடுக்கும் முடிவுகளுக்கு நீதிமன்றத்தில் சவால் விடப்படுவது குறித்து மகிழ்ச்சியற்றவராக இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒழுங்குச்சிக்கல் எதையும் எழுப்பமாட்டார்கள் என்று தாம் நம்புவதாக கூறிய பண்டிகார், "நீங்கள் அதைச் செய்தால் நான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால்,…
எரிபொருள் விலை தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏற்றம் காண்கிறது
இன்று நள்ளிரவிலிருந்து ரோன்95 1 லீட்டர் ரிம2.07-க்கும் ரோன்97 1 லீட்டர் ரிம2.32-க்கும் விற்கப்படும். டீசல் விலை 1 லீட்டருக்கு ரிம2.05 ஆகும்.
சொத்து விவகாரம்: ஸாகிட் பதில் அளிக்காமல் பறந்து விட்டார்
உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் ஒன்பது இலக்க சொத்து பற்றி மகாதிரின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும்படி இன்று கேட்டுக்கொள்ளப்பட்டார். இன்று நாடாளுமன்றத்தில் நீர் வளங்கள் குழு அனைத்து மாநிலத் தலைமை அதிகாரிகளுடன் நடத்திய ஒரு கூட்டத்திற்கு வருகையளித்திருந்த உள்துறை அமைச்சர் ஸாகிட்டை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு…
1எம்டிபி மீதான கேள்விகளை அனுமதிக்காத மக்களைவைத் தலைவர் மீது வழக்கு…
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தமது இரு கேள்விகளை நிராகரிக்க எடுத்த முடிவிற்காக அவர் மீது நீதி,மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் பிகேஆர் பெட்டாலிங் ஜெயா செலத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான். இந்த வழக்கு இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.…
ஸாகிட்டின் வங்கிக் கணக்கில் ரிம230 மில்லியன்: எப்படி கிடைத்தது, கேட்கிறார்…
துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவராக 1996 இல் நியமிக்கப்பட்ட போது அவரது சொத்து எவ்வளவு என்பதை அன்றையப் பிரதமர் மகாதிர் முகமட்டிடம் தாக்கல் செய்திருந்தார். அதில் அவரது சொத்தாக அவரது வங்கிக் கணக்கில் ரிம230 மில்லியன் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகவலை…
பிகேஎன்எஸ் வாரியத்தில் அதிகமான அரசியல்வாதிகள், சுல்தான் எதிர்ப்பு
சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழக வாரியம் (பிகேஎன்எஸ்) அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் இருப்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரீஸ் ஷா கூறுகிறார். பிகேஎன்எஸ் வாரியம் சமநிலையுடையதாக இருக்க வேண்டும். தொழிலியர்களும் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுடைய கருத்துகளும் ஆலோசனைகளும் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று…
இதர இனவாதிகளுக்கும் ஸாகிட்டுக்கும் வேறுபாடில்லை, மஇகா உறுப்பினர் கணேசன்
மஇகா இளைஞர் உயர்க்கல்வி பிரிவு தலைவர் கணேசன் சீரங்கம் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி முன்னாள் பிரதமர் மகாதிரின் அடையாள அட்டை குறித்து தெரிவித்திருந்த கருத்துக்காக அவரை மற்ற இனவாதிகளுக்கும் அவருக்கும் வேறுபாடில்லை என்றும் வெட்கக்கேடானவர் என்றும் கடுமையாகச் சாடினார். கணேசன் தெரிவித்திருந்த கருத்து மஇகா…
ஐபிஐசிக்கு பணம் கொடுக்க வேண்டிய காலக்கெடுவை 1எம்டிபி தவறவிட்டு விட்டது
இன்டர்நேசனல் பெட்ரோலியம் கம்பனிக்கு (ஐபிஐசி) இன்று மதியத்திற்குள் பணம் ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய காலக்கெடுவை 1எம்டிபி தவறவிட்டு விட்டதாக ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி த எட்ஜ் மார்க்கெட்ஸ் கூறுகிறது. நியுயோர்க் நேரப்படி நேற்று ஜூலை 31 நள்ளிரவில் (மலேசிய நேரப்படி இன்று மதியம்) பணம் கொடுக்கப்பட்டிருக்க…
பெர்சத்து இளைஞர்கள்: மகாதிரிடம் ஸாகிட் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்
முன்னாள்பிரதமர் மகாதிரின் தனிப்பட்ட தகவலை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பார்டி பிரிபூமி பெசத்து மலேசியா (பெர்சத்து) இளைஞர் பிரிவு கோருகிறது. துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கும் தேசிய பதிவு இலாகா தலைமை இயக்குனர் முகமட் யாஸிட் ரமலிக்கும் மன்னிப்புக் கோர…
நஜிப் : 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராக பதியவில்லை
14-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராகப் பதியாமல் இருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். நாட்டின் எதிர்காலம் வாக்காளர்களின் கைகளில் இருப்பதால், உடனடியாக வாக்காளராகப் பதியும்படி நஜிப் அவர்களைக் கேட்டுக்கொண்டார். “உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாய்ப்பை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடாதீர்கள். அவர்களின்…
இந்தோனேசிய வம்சாவளி மலேசியப் பிரதமராக இந்திய வம்சாவளியின் உதவியை நாடியதாம்
துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி பிரதமர் நஜிப்பை அகற்றிவிட்டு அப்பதவியில் தாம் அமர்வதற்கு ஆதரவும் அனுதாபமும் காட்டுமாறு தம்மிடம் கேட்டுக்கொண்டதை முன்னாள் பிரதமர் மகாதிர் நினைவுகூர்ந்தார். மேல்விபரம் எதுவும் மகாதிர் அளிக்கவில்லை. அவர்களுக்கிடையில் நடந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது ஸாகிட்டிற்கு ஞாபகம் இருக்க…
‘கேரளாவிலிருந்து வந்தவர் மகாதிரின் தாத்தா, தந்தை அல்ல’ -முக்ரிஸ் ரசிகர்…
பொதுத் தேர்தல் நெருங்க, நெருங்க, அரசியல்வாதிகள் ஒருவர் மற்றவரின் குடும்பப் பூர்விகத்தை எல்லாம் அம்பலப்படுத்தத் தொடங்கி விட்டனர். நேற்று, அம்னோ நிகழ்வு ஒன்றில் பேசிய துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் இந்திய வம்சாவளியினர் …
மகாதிரின் தனிப்பட்ட விவரங்களைத் ‘தப்பாகப் பயன்படுத்திய’ ஜாஹிட், என்ஆர்டி டி-ஜிமீது…
துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி மீதும் தேசியப் பதிவுத்துறை(என்ஆர்டி) தலைமை இயக்குனரஜி(டி-ஜி)மீதும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பற்றிய தனிப்பட்ட விவரங்களை “துஷ்பிரயோகம்” செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. என்ஆர்டி தலைமை இயக்குனர் தமக்கு மகாதிரின் அடையாள அட்டையின் பிரதி ஒன்றை அனுப்பியதாகவும் அதில் "Mahathir…
டிஓஜே வழக்குகளைப் பார்வையிட ஏஜிசி வழக்குரைஞர்களை அனுப்பாது
அமெரிக்க நீதித்துறை(டிஓஜே) , 1எம்டிபி- தொடர்புடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்காக தொடுக்கும் வழக்குகளைப் பார்வையிட வழக்குரைஞர்களை அனுப்ப சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (ஏஜிசி) திட்டமிடவில்லை. புத்ரா ஜெயா, சட்ட ஆளுமையையும் வழக்கு தொடுக்க டிஓஜே-க்குள்ள உரிமையையும் மதிக்கிறது என பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் கூறினார். “அமெரிக்க நீதித்துறை …
துணைப் பிரதமர்: கடந்தகால பிரதமர்கள் மட்டும்தானா, நஜிப்பும்தான் பிரமிக்க வைக்கிறார்
மலேசியா கடந்தகால வெற்றிகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆட்சியும் “வியக்க வைக்கிறது” என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி. இன்று கம்போங் பாருவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ஜாஹிட், மக்கள் இப்போதைய ஆட்சியை எண்ணியும் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.…
ஜம்ரி: ‘மலாய் சுனாமி’யா? தப்புக்கணக்கு போடுகிறது ஹராபான்
அதன் தலைவர்கள் சிலர் கட்சியை விட்டு விலகி பார்டி அமனா நெகராவை அமைத்தார்கள் என்பதற்காக பாஸ் பலவீனமடைந்திருப்பதாக பக்கத்தான் ஹராபான் நினைப்பது தவறு என்கிறார் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர். பிகேஆர், அமனா, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) ஆகிய கட்சிகளின் மூலமாக எதிர்வரும் …