மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற நிலை நிலவியபோதிலும், நெகிரி செம்பிலானில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது நெகிரி செம்பிலான் மன்னர் துங்கு முஹ்ரிஸ் அவர்களின் முடிவு மற்றும் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று பாக்காத்தான் ஹரப்பான் தலைவரான அன்வார்…
வேதாவுக்குப் பதிலாக, வேறொரு இந்தியத் தலைவர் ஒற்றுமை அமைச்சராக நியமிக்கப்படுவதைப்…
பொ வேதமூர்த்திக்குப் பதிலாக, தனது கடமைகளைச் சிறந்த முறையில் செய்யக்கூடிய ஓர் இந்தியத் தலைவரை, ஒற்றுமை துறையமைச்சராக நியமித்தால், அதில் பாஸ்-க்குப் பிரச்சனை ஏதும் இல்லை. வேதமூர்த்தி பதவி விலக வேண்டுமென தாங்கள் வலியுறுத்துவது, இனப் பாகுபாட்டினால் அல்ல, மாறாக அவரது பணியை அவர் திறம்படச் செய்யத் தவறியதாலேயே…
முன்னாள் நீதிபதி : உயர் நீதிபதிகள் நால்வரின் சேவை தொடர,…
உயர் நீதிபதிகள் நால்வர், தங்களின் பணியை 70 வயது வரை தொடரும் வகையில், மத்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என முன்னாள் நீதிபதி கோபால் ஶ்ரீ ராம் புத்ராஜெயாவிடம் பரிந்துரைத்துள்ளார். நாட்டு நலனுக்கான பரிந்துரை இது என்பதால், மக்கள் அவை மற்றும் செனட் சபையின் 2/3 ஆதரவை…
எண்ணெய் நிரப்பியதும் பழுதடைந்த கார்கள்: பெட்ரோனாஸ் மன்னிப்பு கேட்டது
இன்று காலை சுங்கை பீசி நெடுஞ்சாலை(பெஸ்ராயா)யில் அங்குள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் எண்ணெய் நிரப்பிய சுமார் 20 கார்கள் ஓட முடியாமல் பழுதடைந்து நின்றன. அச்சமபவம் தொடர்பில் பெட்ரோனாஸ் டாகாங் பெர்ஹாட் “பொருளில் ஏற்பட்ட கோளாறுக்காக” சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. “சுமார் 20 கார்கள் சோலாரிஸ் பெஸ்ராயா பெட்ரோனாஸ்…
கோலாலும்பூரில் இந்து கோயில்கள் பதிவு செய்யப்பட வேண்டும்
கோலாலும்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள இந்து கோயில்கள் அனைத்தும் கோலாலும்பூர் மாநகராண்மைக் கழக(டிபிகேஎல்)த்தில் பதிவு செய்யப்பட வேண்டும். டிபிகேஎல்லுக்கு ஆலயங்களின் முழுப் பட்டியல் தேவைப்படுகிறது. அது, கோயில்கள் கட்டப்பட்டுள்ள நிலங்களின் தகுதி, அவற்றின் பராமரிப்பாளர்கள் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர்…
பெர்சத்து ஏஜிஎம்-மில் மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்
பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் வார இறுதியில் நடைபெறும் அக்கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில்(ஏஜிஎம்) பேராளர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார். திங்கள்கிழமை ஊடகங்களிடம் பேசிய முகைதின், பேராளர்கள் அக்கூட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பெர்சத்துவையும் பக்கத்தான் ஹரப்பானையும் வலுப்படுத்த வேண்டும் என்று…
கைது செய்யப்படலாம் என அஞ்சி, கோயில் கலவரத்தின் சாட்சிகள் வெளிவர…
சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் கலவரத்தின் சாட்சிகள், போலிஸ் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் எனும் பயத்தில் சாட்சியம் அளிக்க வர மறுப்பதாக ஆர்வலர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று, ஊடகவியலாளர்களிடம் பேசிய எ இளங்கோவன், இச்சம்பவம் தொடர்பில், போலிஸ் சிலரைக் காவலில் வைத்ததன் அடிப்படையில் இதனைக் கூறுவதாகத்…
முன்னாள் அமைச்சரின் முந்திய உதவியாளருக்கு சிறைதண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது
ஓர் அமைச்சரவை முன்னாள் உறுப்பினரின் சிறப்பு அதிகாரிக்கு ரிம80,000 சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஷா அலாம் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டணையும் ரிம400,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது. ஸைலான் ஜவ்ஹாரி, 48, என்ற நபருக்கு நீதிபதி ரோஸைலா சாலே இத்தண்டனையை விதித்தார். ஸைலானுக்கு எதிரான…
2019-இல் நாடு முழுக்க 21 நெடுஞ்சாலைகளில் சாலைக்கட்டண உயர்வு முடக்கம்
அமைச்சரவை 2019-இல் சாலைக்கட்டணத்தை உயர்த்த தகுதிபெற்ற 21 நெடுஞ்சாலைகளில் கட்டணை உயர்வை முடக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்தார். டிசம்பர் 12-இல் அமைச்சரவை எடுத்த அம்முடிவால் சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு ரிம972.75 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும் என்றவர் இன்று ஓர்…
கேஎப்சி, மெக்டோனடல்ஸ்மீது அமைச்சு விசாரணை
உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, விரைவு உணவுப் பொருள் விற்பனை செய்யும் கேஎப்சியும் மெக்டோனல்ட்’ஸும் பொருள் விலைகளை உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தும். அமைச்சின் அமலாக்கப் பிரிவுத் துணை இயக்குனர் இஸ்கண்டார் ஹாலிம் சுலைமான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கேஎப்சி விற்பனை செய்யும்…
‘திருடர்களும் கொள்ளைக்காரர்களும் சேர அனுமதிக்கப்பட்டால், நான் பெர்சத்துவிலிருந்து விலகுவேன், சைட்…
பெர்சத்துவில் 'திருடர்களும் கொள்ளைக்காரர்களும்' சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டால் அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்வேன் என்று பெர்சத்துவின் இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சடிக் கூறுகிறார். எந்தத் திருடர்களும் கொள்ளைக்காரர்களும் பெர்சத்துவில் சேர்ந்தால், நானே அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்வேன். அம்மாதிரியான ஒன்று நடப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். பெர்சத்துவின் தலைமைத்துவம் இதில்…
நஜிப்: எஸ்எஸ்டிதான் விலை உயர்வுக்கு காரணம், கேஎப்சி அதற்கு ஓர்…
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) போல் விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி)யில் வெளிப்படைத்தன்மை குறைவு அதுதான் சமூக ஊடகங்களில் கெண்டக்கி பொறித்த கோழி(கேஎப்சி) விலை உயர்ந்திருப்பதாக செய்தி பரவலாவதற்குக் காரணம் என்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். கேஎப்சியே நேற்றிரவு அதன் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதற்கு எஸ்எஸ்டி…
அடிப் மரணம் மீதான விசாரணை விரைவில் நடத்தப்படும், முகைதின் கூறுகிறார்
காலஞ்சென்ற தீயணைப்புப் படை வீரர் முகம்மட் அடிப் முகமட் காசிம் மரணத்தின் மூலகாரணங்களைக் கண்டறிவதற்காக ஒரு முழு விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படும் என்பதை உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் உறுதிப்படுத்தினார். சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸுடன் கலந்தாலோசித்தப் பிறகு அது குறித்து தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக முகைதின் தமது…
ஆடிப்-பின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு மாதத்தில் தயாராகும்
தீயணைப்பு வீரர் முகமட் ஆடிப் முகமட் காசிம்மின், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை, ஒரு மாதக் காலத்தில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நோயியல் வல்லுநர்கள் நினைத்தால், அந்தக் கால அளவு தேவைப்படும், மேலும் விதிமுறைப்படி, ஒரு மாதம் எடுக்க வாய்ப்புள்ளது என…
கேமரன் மலை இடைத்தேர்தலில் மனோகரன் போட்டியிட வேண்டும், பஹாங் டிஏபி…
எதிர்வரும் ஜனவரி 26-ல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில், வழக்குரைஞர் எம் மனோகரன் போட்டியிட வேண்டும் என பஹாங் டிஏபி பரிந்துரைத்துள்ளது. கடந்த 2013 தொடக்கம், கேமரன் மலை தொகுதியில் சேவையாற்றி வருவதால், அங்குப் போட்டியிட மனோகரன்தான் தகுதியான வேட்பாளர் என்று பஹாங் டிஏபி தலைவர், லியோங் ங்கா…
தாபோங் ஹரப்பான் ரிம200 மில்லியன் இலக்கை அதன் இறுதி வாரத்தில்…
புத்ரா ஜெயாவின் தாபோங் ஹரப்பான் அதன் ரிம200 மில்லியன் திரட்டும் இலக்கை அது இன்னும் ஒரு வாரத்திற்குள் மூடப்படுவதற்கு முன்பே எட்டிவிட்டது. இன்று பிற்பகல் மணி 3.00 அளவில், அந்த நிதியம் ரிம200,032,580.24-ஐ பெற்றிருந்தது. பெடரல் அரசாங்கத்தின் கடனைக் குறைக்கும் முயற்சியாக மக்கள் நிதி உதவி அளிப்பதற்கு…
அஸ்வாண்டினிடமிருந்து ரிம30 மில்லியன், மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் அமைச்சர்…
அமைச்சர் தெரெசா கோ ஜாரிஞான் மிலாயு மலேசியா (ஜெஎம்எம்)-வின் தலைவர் அஸ்வாண்டினிடமிருந்து அவர் கூறியதைத் திரும்பப் பெறுதல், மன்னிப்பு கோருதல் மற்றும் ரிம30 மில்லியன் இழப்பீடு ஆகியவற்றை கோருகிறார். சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு கலவரத்தில் தம்மைத் தொடர்பு படுத்தி…
என்ஜிஓ தலைவர் அஸ்வாண்டின் கைது செய்யப்பட்டதாக ஜேஎம்எம் கூறுகிறது
ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) அதன் தலைவர் அஸ்வாண்டின் ஹன்சாவைப் போலீசார் கைது செய்துவிட்டதாகக் கூறிக்கொள்கிறது. அதன் மின்னஞ்சல் ஒன்று அஸ்வாண்டின் இன்று பிற்பகல் 2.45க்கு டத்தோ கிராமாட்டில் கைது செய்யப்பட்டு கிள்ளான் உத்தாரா போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறிற்று. முன்னதாக, சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில்…
டிபிஎச் மரணம்மீது விரைவான விசாரணை தேவை- டிஏபி இளைஞர் அணி…
அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதற்காக தியோங் பெங் ஹொக் மரணம் மீதான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று டிஏபி இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. அதன் செயல்குழு உறுப்பினர்களான லியோங் யு செங், டான் தியோங் ஈய், வூ கா லியோங் ஆகியோர் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில், தியோவின் மரணம்மீது…
‘காவல் நிலையத்தைத் தாக்குவேன்’ என்று மிரட்டிய அஸ்வான்டின்மீது போலீஸ் விசாரணை
நேற்றைய பேரணியில் சினமூட்டும் வகையில் பேசிய அஸ்வான்டின் ஹம்சாமீது போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. கிறிமினல் மிரட்டல் விவகாரங்கள் தொடர்பான குற்றவியல் சட்டம் 506-ஆவது பிரிவின்கீழ் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில் அஹமட் கூறினார். அவரை வினவியதற்கு, “பிரிவு 506-இன்கீழ் விசாரணை நடக்கிறது”, என்று குறுஞ் செய்திவழி…
வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலக்குங்கள், அரசாங்கத்திற்கு 40 நாள் அவகாசம்
கெராக்கான் ரக்யாட் மலேசியா இயக்கம் (கெராஸ்), தங்களது ஏழு கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு 40 நாள்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது. இன்று, செனி கிள்ளான் சதுக்கத்தில் கூடிய அவர்கள், தீயணைப்பு வீரர் முகமது ஆடிப் முகமது காசிம் இறப்பிற்கு நீதி கேட்டும் பொ வேதமூர்த்தியைப்…
மலேசியா.. மலேசியர்களுக்காக, சித்தி காசிம்
அன்பு செலுத்தவும் உதவி நல்குவதற்குமான பருவம் இது. ஆனால், இதற்கு மாறாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? வெறுப்பைக் காட்டுவதற்கான பருவத்தைப் போல ஒரு சில தரப்பினர் செயல்படுகின்றனர். இதற்காக ஒரு பலியாட்டை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர்களைப் போல.. இப்படிப்பட்ட சந்தர்ப்ப்பத்தை உருவாக்கி,தங்களின் வஞ்சத்தை வெளிப்படுத்துகின்றனர். இப்படிப்பட்டவர்கள், அதிகாரத்தை…
பாஸ் தலைமைச் செயலாளர் கிறிஸ்மஸ் வாழ்த்துத் தெரிவித்தார்
கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி பாஸ் தலைமைச் செயலாளர் தகியுட்டின் ஹசான் கிறிஸ்மஸ் வாழ்த்துத் தெரிவித்தார். “கிறிஸ்மஸ் கொண்டாடும் மலேசியர் அனைவருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ். நாம் நேசிக்கும் இந்நாட்டில் அனைவரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோமாக. “மலாயாப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்விப் புலத்தில் என்னுடன் பயின்ற பெரும்பாலோர் மலாய்க்காரர்- அல்லாதார்தான். இன்றும்…
அம்னோவை மிகவும் நெருங்கிச் சென்றால் பாஸும் மூழ்கிவிடும்- ஹாடி
அம்னோ மூழ்கிக் கொண்டிருப்பதால் அதனுடன் இணைவது நடக்கக்கூடியதல்ல என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். “அம்னோ இப்போது மூழ்கிக் கொண்டிருக்கிறது. கடலுக்குப் போகும்போது மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலுக்கு அருகில் சென்றால் நாமும் சேர்ந்து மூழ்கி விடுவோம். “ஓட்டை விழுந்த கட்சியுடன் இணைவது தொல்லை மிக்கது”, என்றவர்…
























