அம்னோ தொடர்ந்திருக்க பிரதமராகக் காத்திருக்கும் அன்வாரை நாடுகிறார் நஸ்ரி

அம்னோ ஒரு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படையாகச் சுருங்கியுள்ளது. அதற்குச் சாதகமான எதையும் டாக்டர் மகாதிரிடமிருந்து அது பெற முடியவில்லை. இதற்கு காரணம் அம்னோ உயர்நிலை தலைவர்களுடன் ஒத்துழைப்பு பற்றி ஆலோசிப்பதற்கு முன்பு அம்னோ கலைக்கப்பட வேண்டும் என்கிறார்…

நான் அனைவரையும் சந்திக்கிறேன் – அன்வார்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்றத்தில் எவரையும் தன்னால் சந்திக்க முடியும் என்றும், மாற்றத்திற்கு ஆதரவளிப்பவருடன் கலந்துரையாட தான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில், பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அஸீஸ்-உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக, மலேசியாகினி வெளியிட்ட செய்தி தொடர்பில், ஊடகங்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு அவர் இவ்வாறு…

ஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும், சாபா அம்னோ…

  ஒரு டஜனுக்கு மேற்பட்ட சாபா அம்னோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இந்த மிக அண்மையச் சம்பவத்திற்கு ஸாகிட்டின் தலைமைத்துவ போக்குதான் காரணம் என்று சாபா அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கஸாலி அன்சிங் கூறுகிறார்.…

அம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம் அம்னோவைக் கலைக்க வேண்டாம்…

முகம்மட் ஹசான் தாமும் மேலும் நான்கு அம்னோ தலைவர்களும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்தது கட்சித்தாவுவதற்காக அல்ல என்று விளக்கினார். எந்தக் கட்சிக்கு இரு தசாப்தங்களுக்குமேல் தலைமை வகித்தாரோ அந்தக் கட்சியைக் கலைத்து விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவே தாங்கள் ஐவரும் மகாதிரைச் சென்று கண்டதாக அம்னோ…

மகாதிர்- அம்னோ தலைவர்கள் சந்திப்பு அக்டோபரில் நிகழ்ந்தது- காடிர்

பக்கத்தில் உள்ள படத்தில் நாம் பார்க்கிறோமே பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அம்னோ தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு அது அக்டோபர் 22-இல் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின். அச்சந்திப்பைக் காண்பிக்கும் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அது தொடர்பாக தம் முகநூல் பக்கத்தில் கருத்துரைத்த…

சாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம் மகாதிரைச் சந்தித்தனர், ஹரப்பான்…

  கட்சியிலிருந்து இன்று விலகிய சாபா அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் பிரதமர் மகாதிரைச் சந்தித்துள்ளனர். இதை மகாதிர் உறுதிப்படுத்தினார். "ஆம், அவர்கள் என்னைச் சந்தித்தனர். அவர்கள் அம்னோவிலிருந்து விலக விரும்புவதை என்னிடம் சொல்ல வந்தனர்", என்று பிரதமர் மகாதிர் இன்றிரவு கூறினார். ஆளும் கூட்டணியை ஆதரித்தால்,…

ஜொகூர் சுல்தான் : குகூப் தீவு தேசியப் பூங்காவாக நிலைநிறுத்தப்படும்

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், சுல்தானிய நிலச் சட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பூலாவ் குகூப் சேர்க்கப்பட்டுள்ளப் போதிலும், ஜொகூர் தேசியப் பூங்கா எனும் அதன் தற்போதைய நிலை, தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என உறுதியளித்தார். இன்று, தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், சுல்தான்…

பிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது

  1எம்டிபி கணக்காய்வாளர் அறிக்கையில் சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் தமக்கு விதிக்கப்பட்டுள்ள ரிம500,000 பிணையைத் தவணையில் கட்டுவதற்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்திடம் இன்று அனுமதி கோரினார். நஜிப்பின் வேண்டுகோளை செசன்ஸ் நீதிமன்றம் இன்று நிராகரித்து விட்டது. நஜிப்பின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி…

நஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார் அம்னோவிலிருந்து வெளியேறினர்

  முன்னாள் தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் சாபா அம்னோவிலிருந்து இன்று மதியம் வெளியேறினார். கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ மற்றும் பிஎன் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு நஜிப் ரசாக்கின் மிக உறுதியான விசுவாசியாக சாலே இருந்தார். முன்னாள் சாபா முதலமைச்சராக இருந்த சாலே-யை 2015…

பாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க ஆர்சிஐ அமைப்பீர்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், தம் கட்சி தாபோங் ஹாஜி நிதிநிலையை ஆராய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதை அல்லது நாடாளுமன்றம் அதை விசாரிக்கப்பதையே விரும்புவதாகக் கூறினார். “பாஸ் நாட்டின் மிகப் பெரிய இஸ்லாமிய நிதிக்கழகத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் குளறுபடிகளைக் கடுமையாகக் கருதுகிறது. “அதை அமைச்சர், அதிலும்…

கேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மஇகா…

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மஇகா மேல்முறையீடு செய்யப்போவதில்லை. “நீதிமன்றத்தை நாடுவதற்குப் பதிலாக மக்களிடமே முறையீடு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்”, என மஇகா தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் மலேசியாகினி தொடர்புகொண்டபோது தெரிவித்தார். கேமரன் மலை காலங்காலமாக மஇகா…

1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம், நஜிப் குற்றச்சாட்டை மறுத்தார்

இன்று காலை, செஷன்ஸ் நீதிமன்றத்தில், தேசியப் பொது கணக்குக் குழுவிடம் (பிஏசி) தாக்கல் செய்யும் முன்னர், தனக்கு சாதகமாக அமையும் வகையில், 1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள் செய்ய, மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தபோது, தனது பதவியைப் பயன்படுத்தி கட்டளையிட்டார் எனும் குற்றச்சாட்டை, முன்னாள் பிரதமர் நஜிப்…

1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள், அருள் கந்தா மீது…

1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையின் திருத்தங்கள் தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் இணைந்து சதியில் ஈடுபட்டார் என்று, 1எம்டிபியின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அருள் கந்தா கந்தசாமி மீது, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. ஆயினும், நீதிபதி ரோசினா அயோபிற்கு முன்னிலையில், அவருக்கு…

வேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்

பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தி, 2 மாதங்களுக்கு முன்னமே, தனது சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) அறிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார். தனது சொத்து அறிவிப்பில், தன் பெயரில் இருக்கும் 2 கார்களையும் தான் குறிப்பிட்டதாகவும், ஆனால், எம்ஏசிசி வலைதளத்தில், சொத்துகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த இடம் காலியாகவே…

அம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும், நான் ஒரு…

இன்று நாடாளுமன்றத்தில் தாஜுடின் ரஹ்மான் (அம்னோ- பாசிர் சாலாக்) தம்மை இந்திய சமூகத்துக்காக போராடும் ஒரு போராளி என்றார். தாம் ஒரு “அல்ட்ரா இந்தியன்” என்றும் கூறிக்கொண்டார். கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக், கேள்வி நேரத்தின்போது தமிழ்ப் பள்ளிகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது தாஜுடின் குறுக்கிட்டு அவ்வாறு…

சாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து விலகுவார்கள்

சாபாவில் அம்னோ எம்பிகள் நால்வர் இன்று அக்கட்சியிலிருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியிலிருந்து வெளியேறும் அவர்கள் கூட்டரசு அரசாங்கத்தை ஆதரிக்கும் சுயேச்சை எம்பிகளாகச் செயல்படுவார்கள். மலேசியன் இன்சைட் , இன்று அம்னோ சாபா கலைக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. “தடை ஏதுமில்லாதிருந்தால், அது இன்று கலைக்கப்படும்”,…

அருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது

இன்று காலை 9.45 மணியளவில், புத்ராஜெயா, ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்தில் இருந்தபோது, அருள் கந்தா கந்தசாமி கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி உறுதி செய்தது. “முன்னாள் பிரதமர் நஜிப்புடன், நாளை காலை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட அவர் அழைத்துச் செல்லப்படுவார்," என்று அவரது வழக்கறிஞர் என் சிவநந்தன் எம்ஏசிசி கட்டிடத்திற்கு…

அரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான மதமாற்றத்துக்கு எதிராக தனிச்…

அரசாங்கம் சட்டச் சீர்திருத்த(திருமண, மணவிலக்கு)ச் சட்ட(எல்ஆர்ஏ)த்தில், தன்மூப்பான மதமாற்றத்தைச் சட்ட விரோதமாக்கும் பிரிவு 88ஏ-யை இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொள்ளாது. நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுய் கியோங், கூட்டரசு நீதிமன்றம் இந்திரா காந்தி வழக்கில் வயதுக்கு வராத பிள்ளைகளை மதமாற்றம் செய்ய பெற்றோர் இருவரின் இணக்கம் தேவை…

‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது

நாடாளுமன்றம் |  மாணவர்கள் உயர்க்கல்வி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத்தில் (அவ்கு) திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, தனியார் உயர்க்கல்வி நிறுவனங்கள் சட்டம் 1996 மற்றும் கல்வி நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 1976 ஆகியவற்றிற்கும்…

‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத அவகாசம் கொடுத்துள்ளது’

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதன் காரணமாக, சொத்துக்களை அறிவிக்க அவருக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகக் கூறியுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வழங்கியுள்ள, மூன்று மாதக் கால அவகாசத்தைத் தான் மீறவில்லை என்றும் அந்தப் போர்ட்டிக்சன்…

எங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள் – லைனஸ் தொழிலாளர்கள் முறையீடு

இன்று காலை, சுமார் 130 லைனஸ் தொழிலாளர்கள், நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; தங்கள் வேலைகளைக் காப்பாற்றுமாறு அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்து, அவர்கள் ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர். "இன்று நாங்கள் லைனஸ் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம், லைனஸ் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் அல்ல. "எங்களுக்கு நீதி வேண்டும், வேலை…

பினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார், முடிவு பெடரல் அரசைப்…

  பினாங்கு மாநிலம் ஊராட்சிமன்ற தேர்தல்களை நடத்தத் தயாராக இருக்கிறது, முடிவு பெடரல் அரசாங்கத்தைப் பொறுத்துள்ளது என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ கூறுகிறார். ஊராட்சிமன்ற தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை பினாங்கு மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வந்துள்ளது. ஆனால், பலனில்லை.…

மகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’ அல்ல, புலாவ் குகுப்…

பெடரல் அரசாங்கம் ஒரு 'வெளியாள்' அல்ல. ஆகையால் அதற்கு ஜொகூரின் புலாவ் குகுப் மீது அதிகாரம் உண்டு என்று பிரதமர் மகாதிர் இன்று கூறினார். ஜொகூர் நில விவகாரங்களில் 'வெளியாள்கள்' குறுக்கீடு செய்யக்கூடாது என்று ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் கூறியிருந்தது பற்றி கருத்துரைக்குமாறு…