பாஸ் எம்பி: குவான் எங்கைப் போல் குற்றங்களிலிருந்து விடுபட அம்னோ…

அம்னோ தலைவர்கள் பக்கத்தான் ஹரப்பானில் சேர்வதற்கு கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். எதற்கு என்றால், தங்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்குத்தான் என்கிறார் பாஸ் எம்பி சே அப்துல்லா மாட். அதே மூச்ச்சில் டிஏபி தலைவர் லிம் குவான் எங்கையும் ஜாடையாக சாடினார். “குற்றங்களிலிருந்து விடுபடவும் லிம் குவான் எங்கைப்…

ரபிசி: கேஜே-யையும் நுருல் இஸ்ஸாவையும் சந்தித்தது புதிய கட்சி அமைப்பதற்காக…

அண்மையில் தானும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரும் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின்னும் ஒரு புதிய கட்சியை அமைப்பதற்குச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுவதை ரபிசி ரம்லி மறுத்தார். சமூக வலைத்தளங்களில் தாங்கள் மூவரும் அடிக்கடி கருத்துப் பரிமாறிக் கொள்வதை வைத்து ஒரு புதிய கட்சியை,…

கேமரன் மலை இடைத் தேர்தல் ஜனவரி 26-இல்

தேர்தல் ஆணையத் தலைவர் அஸ்ஹார் அசிசான் ஹருன் கேமரன் மலை இடைத் தேர்தல் ஜனவரி 26-இல் என்று இன்று அறிவித்தார். தேர்தல் பரப்புரைக்கு 14 நாள்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனவரி 12 வேட்புமனு தாக்கல் செய்யும் நாள். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளும் வாக்களிப்பு நாளும் சனிக்கிழமையில் வருகின்றன. கேமரன்…

ஸாகிட் அம்னோ தலைவர் பொறுப்பை துணைத் தலைவரிடம் ஒப்படைத்தார்

  பாகன் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான அஹமட் ஸாகிட் ஹமிடி கட்சியில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். தமது துணைத் தலைவர் முகமட் ஹசான் அம்னோ தலைவர் பொறுப்புகளை இப்போது ஏற்றுக்கொள்கிறார் என்று ஸாகிட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார். கட்சியில்…

ராம்கர்பால்: ஹரப்பானுக்கு மிரட்டல் விட்டுள்ள ரஹிமுடன் ஒத்துழைப்பது எப்படி?

கூட்டணியில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள மலாக்கா முன்னாள் முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக்குடன் பக்கத்தான் ஹரப்பான் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று ராம்கர்பால் கேட்கிறார். ரஹிம் ஒரு கறை படிந்த தலைவர் என்றும் பெர்சத்துவில் சேருவதற்கான அவரின் மனுவை கட்சி நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதற்காக…

அடிப் மற்றும் ஆலய கலவரம்மீது ஆர்சிஐ தேவை- ஜாஹிட்

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, தீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணத்தையும் அதற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளையும் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இறந்து போன அவருக்கு நீதி கிடைக்க அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றாரவர். “அடிப் மரணத்தையும் ஆலயத்தில்…

நெகிரி எம்பி மாநில பிகேஆர் தலைவராவதற்குத் தொகுதிகள் எதிர்ப்பு

நெகிரி செம்பிலானில் பெரும்பாலான பிகேஆர் தொகுதித் தலைவர்கள் மந்திரி புசார் அமினுடின் ஹருன் மாநில பிகேஆர் தலைவராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். மலேசியாகினியின் பார்வைக்குக் கிடைத்த கடிதத்தில் மந்திரி புசார் “நிர்வாகத்தில் பலவீனமானவர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “எட்டுத் தொகுதிகளில் ஏழு…

காலஞ்சென்ற தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க சுமார் ஆயிரம்…

காலஞ்சென்ற தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் உடல் இன்று காலை மணி 10.30 வாக்கில் கோலா கெடா, ஸ்கோலா கெபாங்சான் தெபாங்காவுக்கு ஒரு ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பள்ளிக்கு உள்ளும் வெளியிலும் சுமார் ஆயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க காத்திருந்தனர்.…

முன்னாள் அம்னோ கட்சியினரைச் சேர்த்துக் கொள்ளும் விசயத்தில் கவனம் தேவை:…

மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் அம்னோவின் முன்னாள் தலைவர்களைச் சேர்த்துக் கொள்வதில் அவசரம் கூடாது என்று பெர்சத்துவை எச்சரித்துள்ளார். அம்னோவில் செல்லாக்காசாகிவிட்ட அவர்களில் சிலரை பெர்சத்துவில் இணைத்துக் கொண்டது பெரிய வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது என்றவர் கூறினார். “அவர்கள் ஒரு நேரத்தில் நம் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள் என்பதை மறந்து…

சீ ஃபீல்ட் ஆலய விவகாரம்: இந்து  சங்கம் விலகி நிற்க வேண்டும்- வேதமூர்த்தி

சுபாங் ஜெயா, சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயப் பிரச்சினையில்  மலேசிய இந்து  சங்கம் விலகிநிற்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர்  பொன்.வேத மூர்த்தி வலியுறுத்தி உள்ளார். தேசிய அளவில் பிரதிபலித்த இந்தப் பிரச்சினைக்கு அமைதியாகவும் அதேவேளை அனைத்துத்தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தேசிய சட்டத் துறைத்  தலைவர் (ஏ.ஜி.) ஒரு சுமுகமான தீர்வை கண்டுள்ள நிலையில், மலேசிய இந்து சங்கம் புதுக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீ ஃபீல்ட் ஆலயம்தற்பொழுது எட்டிவரும் ஒரு சுமூகமான சூழலைக் கெடுக்கவும் தேசிய சட்டத்துறைத் தலைவருக்கே வழிகாட்டவும் முயல்வதாகத் தெரிகிறது. அரச நடைமுறைச் சட்டம், 9-ஆவது பிரிவு, சட்டத் துறைத் தலைவருக்கு அளித்துள்ள அதிகாரவரம்பிற்குட்பட்டும் பொது அமைதியில் நாட்டம் கொண்டும் சட்டத்துறைத் தலைவர் எடுத்துள்ளமுடிவை இந்த ஆலயம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட சுமூகமான சூழலில், வெண்ணெய் திரண்டு வருகின்ற  நேரத்தில் தாழியை உடைக்கமுயல்வதைப்போல, மோகன் ஷான், கெடுக்கின்ற விதமாகவும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கை விடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் சட்டத்துறைத் தலைவரின் ஒருங்கிணைப்பின்வழி எடுக்கப்பட்டுள்ள முடிவிற்கு அனைத்துத்தரப்பினரும் இசைவும் ஒப்புதலும் தெரிவித்துள்ள நிலையில், மோகன் ஷான் மட்டும் இந்த ஆலய சிக்கல் தொடர்பான தெளிவும் புரிதலும் இல்லாமல் அறிக்கை வெளியிட்டு பொதுமக்களுக்கு தவறாக வழிகாட்ட முயலக் கூடாதென்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் கூறினார். -நக்கீரன்

நுருல் பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகினார், அரசாங்கத்தில் பதவி…

நுருல் இஸ்ஸா அன்வார், பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிர்ச்சிதரும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் இனி, அரசாங்கப் பதவிகளிலும் இருக்கப் போவதில்லை. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் மகளுமான நுருல் இஸ்ஸா இன்று பிற்பகல்…

உங்கள் கருத்து: ‘அந்த நல்லவர்கள்’ அடுத்த ஜிஇ-வரை ஹராப்பானுக்கு வெளியிலேயே…

அம்னோவில் நல்லவர்களும் உண்டு என்கிறார் மகாதிர்   டேவிட் தாஸ்: 70விழுக்காட்டு மலாய்க்காரர்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரிக்கவில்லை. அவர்கள் அம்னோ அல்லது பாஸை ஆதரித்தார்கள். அதற்காக அவர்களைக் கெட்டவர்கள் எனலாமா? பலருக்கு அவர்கள் காலங்காலமாக இருந்து வந்துள்ள ஒரு கட்சியைக் கைவிட்டு வர மனமில்லை. பாஸ் ஆதரவாளர்களில் ஒரு…

ஜாஹிட்: தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டே போனால் அம்னோ அழிந்து விடும்

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, கட்சிக்குள் பிளவுகள் தொடர்வது அதன் அழிவுக்குத்தான் வழிகோலும் என்று எச்சரித்தார். கட்சித் தலைவர்கள் எது வரினும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும், தங்களை மட்டுமே காப்பாற்றிக் கொள்வது பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றவர் வலியுறுத்தினார். “தோல்விக் காலத்தில், கட்சி வீழ்ச்சி…

முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு மனு செய்துள்ளார்

  மலாக்கா முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு தமது மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று ஆயர் கெரோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரஹிம் தம்பி சிக் அவரது மனுவை மலாக்கா பெர்சத்து தலைவர் முகமட் ரெட்ஸுவான் யுசோப்பிடம் கொடுத்தார். மலாக்காவின் ஆறாவது முதலமைச்சராக 12 ஆண்டுகள்…

ஹரப்பான் அரசாங்கத்திற்கு ஐசெர்ட் தேவையில்லை, சுல்கெப்லி கூறுகிறார்

  பக்கத்தான் அரசாங்கத்திற்கு ஐநாவின் அனைத்துலக அனைத்து வகையான இனப் பாகுபாடுகளை அகற்றும் (ஐசெர்ட்) ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டிய தேவை இல்லை என்று டாக்டர் சுல்கெப்லி அஹமட் இன்று கூறினார். ஹரப்பான் நிருவாகம் கடந்த காலத்தில் சிறுபான்மை இனம் மற்றும் சமயத்தினரைக் கொடுமைப்படுத்திய அரசாங்கங்கள் போன்றதல்ல என்று அமனாவின்…

கோபிந்த்: அம்னோவுடன் இணைந்து டிஎபி செயல்படாது

  இவ்வாரம் அம்னோவிலிருந்து பலர் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். டிஎபி அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யாது என்று டிஎபியின் துணைத் தலைவர் கோபிந்த் சிங் உறுதியாகக் கூறுகிறார். டிஎபி அம்னோவுடன் இணைந்து செயல்படாது. இது இறுதி முடிவாகும். அவர்கள் எங்களுக்கு எதிராக 14-ஆவது பொதுத் தேர்தல் வரையில் போராடியுள்ளனர். அம்னோவை…

மலாக்கா முன்னாள் சிஎம் அம்னோவிலிருந்து நாளை வெளியேறுகிறார்

  மலாக்காவின் முன்னாள் முதலமைச்சர் அம்னோவிலிருந்து விலகப் போகிறார் என்பதை நாளை ஒரு நிகழ்ச்சியில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரித்தா ஹரியான் கூற்றுப்படி, இந்த முன்னாள் முதலமைச்சர் மலாக்காவின் "மேம்பாட்டு தந்தை". மலாக்காவின் முதலைமைச்சராக 1999-லிருந்து 2013 வரையில் பதவியிலிருந்த முகமட் அலி ருஸ்தாம் வழக்கமாக இவ்வாறு அழைக்கப்பட்டார்.…

இந்தியர் கட்சியின் அவசரத் தேவை

புதிய மலேசியா உருவாகியுள்ள தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்திலும் அரசு சார்பான மற்ற அமைப்புகளிலும் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இடம்பெறுவதற்காக இந்தியர் சார்பான அரசியல் கட்சிக்கு அவசரத் தேவை எழுந்துள்ளதென்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். மலேசிய இந்தியச்  சமுதாயத்தின் அரசியல், பொருளாதார, கல்வி,…

பாஸ்: அம்னோ கட்சியினருக்கு எங்கள் கதவுகளும் திறந்தே உள்ளன

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், அம்னோ கட்சியின் எம்பிகளோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, சாதாரண உறுப்பினர்களோ அவர்கள் தாராளமாக பாஸ் கட்சியில் சேரலாம் என்றார். “எங்கள் கதவு திறந்தே உள்ளது. எம்பிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் , அல்லது சாதாரண உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்கிறோம். “ஆனால்,…

அம்னோ நிலைத்திருக்க நல்ல தீர்வு தேவை- நஜிப்

அம்னோவிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை பெருகி வரும் வேளையில் அக்கட்சி நிலைத்திருக்க சிறந்த தீர்வு காணப்பட வேண்டும் என்று அதன் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நிலைமை மோசமாக உள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்கத்தக்க ஒரு தீர்வு காணப்பட வேண்டும்”, என்று நஜிப் இன்று பெக்கானில் கூறினார்.…

கேமரன் மலையில் புதிய தேர்தல்

தேர்தல் ஆணையம், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தேர்தல் நடத்தப்படும் என்பதை இன்று உறுதிப்படுத்தியது. 4வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு கேமரன் மலையில் கிடைத்த வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்ததற்கு எதிராக மேல்முறையீடு எதுவும் செய்யப்படாததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக இசி தலைவர் அஸ்ஹார் அசிசான்…

அம்னோவில் தேர்தல் ‘உடனடியாக’ நடத்தப்பட வேண்டும்- கைரி

அம்னோவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுப்பினர்களும் பெரும் எண்ணிக்கையில் வெளியேறுவதால் கட்சிக்குப் புதிய தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுக்க “உடனடி”த் தேர்தல் நடத்தப்படுவது அவசியம் என்கிறார் முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். இணையத்தள பதிவு ஒன்று கேட்டுக்கொண்டிருப்பதைப் போல் புதிய கட்சித் தேர்தலை நடத்துவதற்காக அவசரப் பொதுக் கூட்டம் கூட்டப்படுவதைத்…

தானா மேரா எம்பி அம்னோவிலிருந்து வெளியேறினார்

ஆகக் கடைசியாக அம்னோவிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தானா மேரா எம்பி இக்மால் ஹிஷாம் அப்துல் அசீஸ் ஆவார். அம்னோவிலிருந்து வெளியேறுவதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார். தானா மேரா தொகுதித் தலைவருமான இக்மால், தொகுதி மக்களின் நலனை முன்னிறுத்தி இம்முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இக்மால் கட்சியிலிருந்து…