இன்று நள்ளிரவு தொடக்கம் 4 டோல் சாவடிகள் மூடப்படும்

இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம், சிலாங்கூர், சுங்கை ராசாவ் மற்றும் பத்து தீகா, கெடா, புக்கிட் காயு ஈத்தாம் மற்றும் ஜொகூரில் கிழக்குக்கரை இணைப்பு நெடுஞ்சாலை (இடிஎல்) ஆகிய நான்கு டோல் சாவடிகளும் மூடப்படும். சுங்கை ராசாவ் , பத்து தீகா மற்றும் புக்கிட் காயு ஈத்தாம்…

இன்றிரவு 11.59-க்குப் பிறகு, மாஹ்ஃபூஸ் பாஸ் உறுப்பினர் அல்ல

பொக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினர், மாஹ்ஃபூஸ் ஓமார் இன்று நள்ளிரவிலிருந்து தான் அதிகாரப்பூர்வமாக பாஸ் கட்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். “இன்று, நான் பாஸ் தலைமை செயலாளர் தக்கியுடின் ஹசானுக்கு கடிதம் அனுப்பவுள்ளேன். “நான் ஏன் நள்ளிரவு 12 மணிக்கு அதனைச் செய்யவில்லை? காரணம், ஒரு நிமிடம் மூச்சை நன்றாக…

புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளி நாளையும் திறக்கப்படாது, மக்கள் அமைதி மறியலில்…

இன்று காலை, ஜொகூர் பாரு, ஸ்கூடாயில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் முன் பெற்றோர்கள், வட்டாரப் பொதுமக்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்த சிலர் அமைதி மறியலில் ஈடுபட்டனர். 2018, ஜனவரி 1-ம் தேதி பள்ளி திறக்கப்படும்…

அஸ்வான் தன் அண்ணனை ஒழித்துக்கட்ட நினைப்பது ஏன்? அவரே விளக்குகிறார்

ஒரு  காலத்தில்   தன்  அண்ணன்  சிலாங்கூர்   மந்திரி  புசார்  அஸ்மின்   அலிமீது  அளவற்ற  அன்பும்  பாசமும்   வைத்திருந்தவர்தான்  தொலைக்காட்சிப்  பிரபலம்   அஸ்வான்  அலி. 2013-இல்  அஸ்மின்  அலி  சிலாங்கூர்   மந்திரி  புசார்   ஆவதை    ஆதரித்ததுடன்   அண்ணனுக்கு   மற்றவர்களின்    ஆதரவைத்   திரட்டிக்கொடுப்பதற்கும்   மிகவும்   பாடுபட்டார்  என்றும்  கூறப்படுகிறது. அப்படி   இருந்தவர் …

சுமார் 3,000 பேர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

அக்டோபர்  9 முடிய  2787பேர்  முறையாக    குற்றம்  சாட்டப்படாமல்   பல்வேறு  குற்றங்களுக்காகத்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாக   சிறைத்துறை   ஆவணங்கள்   கூறுகின்றன. அவர்களில்  600பேர்  குற்றச்செயல்  தடுப்புச்   சட்ட(பொகா) த்தின்கீழும், 18பேர்  2015 பயங்கரவாதச்   சட்டத்தின்கீழும், 1,829பேர் போதைமருந்துச்   சட்டத்தின்கீழும், 340பேர் 2012 பாதுகாப்புக்  குற்ற(சிறப்பு   நடவடிக்கை)ச் சட்டத்தின்கீழும்  தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்.…

மியன்மாரில் கைது செய்யப்பட்ட மலேசிய செய்தியாளர் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்

  மலேசிய ஆவணப்படம் தயாரிப்பாளர் மோக் சோய் லின் மற்றும் சிங்கப்பூர் நிழற்படம் எடுப்பவர் (கேமராமேன்) லவ் ஹோன் மெங் ஆகிய இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாங்கூனியிலிருந்து சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர்.என்று ஒரு சிங்கப்பூர் நாளிதழ் கூறுகிறது. இவ்விருவரும் மியன்மார் சிறையில் இரண்டு மாதங்களைக் கழித்துள்ளனர். நேற்று…

ஹரப்பானின் இடைக்கால பிரதமர் வேட்பாளர் தேர்வில் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது…

  பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட் இடைக்கால பிரதமர் வேட்பாளராக ஹரப்பான் செய்துள்ள முன்மொழிதலில் 'அரசமைப்புக்கு முரணானது எதுவும் இல்லை' என்று மகாதிரின் வழக்குரைஞர் ஹனிப் காதிரி அப்துல்லா இன்று கூறினார். அம்முன்மொழிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று நேற்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான்…

கடந்த காலத் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார் மகாதிர்: ‘நானும் மனிதன்தானே’

முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்    தம்   அரசியல்  வாழ்க்கையில்   இழைத்த     தவறுகளுக்கு   மன்னிப்பு   கேட்டார். இன்று   பெர்சத்து   கட்சியின்   முதலாவது    ஆண்டுக்   கூட்டத்தைத்   தொடக்கி  வைத்து   உரையாற்றிய    அவர்,  தாமும்  மனிதன்தான்   என்றும்  தவறு    செய்வதைத்   தவிர்க்க  இயலாது  என்றும்   குறிப்பிட்டார். “என்  உரையை   முடிக்குமுன்னர்   நான்  …

கொள்ளையர் என்று சந்தேகிக்கப்பட்ட மூவர் சுட்டுக் கொலை

பத்து    மலை,  உலு  யாம்  பாரு,  ஜாலான்  சுங்கை  துவாவில்       கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்பட்ட 3 நபர்களை   போலீசார்   சுட்டுக்கொன்றனர். அம்மூவரும்  கிள்ளான்   பள்ளத்தாக்கிலும்    நெகிரி   செம்பிலானிலும்   வங்கிகளில்   பணம்   மீட்டுச்   செல்லும்  வாடிக்கையாளர்களிடம்   கொள்ளையிடுவதை    வழக்கமாகக்   கொண்டவர்கள்   என்று    நம்பப்படுகிறது. போலீசார்   முதன்முதலில்   பண்டார்   பாரு   செலாயாங்கில் …

நாடற்ற சிறார்கள் அதிகமுள்ள மாநிலம் சாபா

சாபாவில்தான்  குடியுரிமையில்லாக்   குழந்தைகள்   அல்லது   இளம்  சிறார்கள்  அதிகம்   என  உள்துறை  அமைச்சு   கூறுகிறது. சாபாவில்  21வயதுக்குக்  குறைந்தவர்களில்  23,154  பேர்   நாடற்றவர்கள்   என்று    தேசிய  பதிவுத்துறை   புள்ளிவிவரங்கள்   காட்டுகின்றன. இவ்வளவுக்கும்    இவர்களின்  பெற்றோரில்   ஒருவர்  மலேசியராக   இருப்பார். அக்டோபர்  13வரையிலான  கணக்கெடுப்பின்படி  நாட்டில்  21வயதுக்கு  உட்பட்டவர்களில்  43,445…

மிட்டி: 2017 முற்பகுதியில் அன்னிய முதலீட்டைப் பெறாத இரண்டு மாநிலங்கள்…

ஆண்டின்  முற்பாதியில்   கிளந்தானுக்கும்   பெர்லிசுக்கும்   அன்னிய   நேரடி   முதலீடு(எப்டிஐ)  என்று  எதுவும்   வரவில்லை   என்கிறது  அனைத்துலக  வாணிக,   தொழில்  அமைச்சு(மிட்டி). என்றாலும்  பெர்லிஸ்  எப்படியோ  உள்நாட்டு   வட்டாரங்களிலிருந்து  ரிம525 மில்லியன்  முதலீட்டைப்  பெற்றது.  கிளந்தானால்  ரிம4.2மில்லியன்   முதலீட்டைத்தான்  பெற   முடிந்தது. அந்த  வகையில்  மிட்டியால்  அங்கீகரிக்கப்பட்ட   முதலீட்டைப்  பெற்ற  …

பாஸ்: இடைக்கால பிரதமர் முன்மொழிதல் விரும்பத்தகாதது, அரசமைப்புக்கு முரணானது

  இடைக்கால பிரதமர் நியமனம் பற்றிய முன்மொழிதல் விரும்பத்தாகாதது மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பாஸ் இன்று கூறியது. அவ்வாறான முன்மொழிதல் அமலாக்கப்பட்டால் அது ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தைப் பிரதிபலிக்காது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் இனறு வெளியிட்ட ஓர் அறிக்கையில்…

டிசம்பர் 31 பேரணி : போராட்டம் தொடங்கும் முன் கைது…

பேரணியைத் தொடங்குமுன், யாரையும் கைது செய்ய வேண்டாம் என, எண்ணெய் விலை குறைப்பு, பிரதமரின் தலைமைத்துவத்தை நிராகரித்தல் அல்லது ‘துருன் துருன்’ டிசம்பர் 31 பேரணியின் ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினரைக் கேட்டுகொண்டுள்ளனர். “…….பேரணியைத் தொடங்குமுன், யாரையும் கைது செய்ய வேண்டாம், ஆத்திரமூட்டும் எந்த செயலும் வேண்டாம் எனக் காவல்துறையினரை நான்…

சைஃபூல் : பிரதமர் பதவிக்குக் கைரி மிகத் தகுதியானர்

பிரதமர் பதவியை அலங்கரிக்க, மிகச் சிறந்த தேர்வாக பல வேட்பாளர்கள் மீது மக்கள் விருப்பம் கொண்டிருப்பார்கள். அதைப்போல, அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவியாளரான முகமட் சைஃபூல் புகாரி அஸ்லான், அப்பதவிக்கு மிகச் சரியான தேர்வாக இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறார். அதுமட்டுமின்றி, எந்தவொரு தயக்கமுமின்றி, அப்பதவிக்கு…

ஹரபான் ஜிஇக்குமுன் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்…

பெர்சத்து  தலைவர்   முகைதின்   யாசின்,   அடுத்த  பொதுத்   தேர்தலுக்குமுன்  பக்கத்தான்   ஹரபான்  அதன்  பிரதமர்   வேட்பாளர்   யார்  என்பதை   அவ்சியம்  அறிவிக்க   வேண்டும்   என்று  வலியுறுத்தினார்.   ஒரு   நேர்காணலில்   அவர்  இதைக்    கூறியதாக   த  மலேசியன்  இன்சைட்   தெரிவித்துள்ளது. தேர்தலில்   ஹரபான்  வெற்றி  பெற்றால்   அரசாங்கத்தை  வழிநடத்தப்போவது   யார் …

பெல்டா நில விவகாரம்: அண்ணனை நினைத்து பரிதாபப்படுகிறார் காலிட்

ஷா  ஆலம்   எம்பி  காலிட்  சமட்,  தம்    அண்ணனும்  பெல்டா   தலைவருமான   ஷாரிர்  சமட்டின்  நிலை  கண்டு   பரிதாபப்படுகிறார். 2015-இல்  பெல்டாவுக்குச்  சொந்தமான  நிலங்களின்  உரிமை   சந்தேகத்துக்குரிய முறையில்   மாற்றப்பட்டிருக்கிறது.  அதில்  ஊழல்  நிகழ்ந்திருக்கலாம்   என்றும்  நம்பப்படுகிறது. “அண்ணனை  நினைத்தால்  பாவமாக  இருக்கிறது. உண்மையில்  மிகக்  கவனமாக  இருக்குமாறும்   …

அன்வார் குடும்பத்தினருக்குப் புதுத் தொகுதிகளா?

பிகேஆர்  உதவித்   தலைவர்   நுருல்  இஸ்ஸா  அன்வார்,   எதிர்வரும்   பொதுத்  தேர்தலில்  பெர்மாத்தாங்   பாவிலும்   இப்போது  பெர்மாத்தாங்  பாவ்  எம்பியாகவுள்ள   டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயில்   கிள்ளான்   பள்ளத்தாக்கிலும்   போட்டியிடுவார்கள்   எனத்   தெரிகிறது. இரண்டு    தவணைகள்   லெம்பா   பந்தாயில்    போட்டியிட்ட   நுருல்  இஸ்ஸா  இம்முறை   அங்கு  போட்டியிட  …

பிரதமர் வேட்பாளர் தொடர்பில் அனைத்துத் தரப்புடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே…

எதிரணி  பிரதமர்  வேட்பாளராக   அன்வார்  இப்ராகிமின்  பெயர்  அடிக்கடி  குறிப்பிடப்பட்டாலும்,   அவரைப்  பொருத்தவரை  அவ்விசயத்தில்   பிகேஆர்  தலைமைத்துவம்   பொதுமக்கள்  உள்பட   அனைத்துத்   தரப்பினரிடம்  கலந்து  பேசி  முடிவெடுப்பதையே  விரும்புகிறாராம். பிகேஆர்  தொடர்பு  இயக்குனர்   ஃபாஹ்மி  ஃபாட்சில்   இதனைத்   தெரிவித்தார். டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைப்  பிரதமர்   வேட்பாளராகவும்    டாக்டர்   வான் …

மகாதிர்-அஸிசா கூட்டு, பிகேஆர் ஒப்புதல்

  மகாதிர் முகமட் பிரதமராகவும் வான் அஸிசா துணைப் பிரதமராகவும் நியமிக்க பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்த கருத்தை பிகேஆர் சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டாதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன. வட்டாரங்களின் தகவல்படி, இம்முடிவு டிசம்பர் 19 இல் எடுக்கப்பட்டது. இம்முடிவுக்கு அன்வார் இப்ராகிம் சம்மதம் தெரிவித்துள்ளார். பல பிகேஆர் தலைவர்கள்…

‘உண்மையைப் பேசியதற்காக’ செப் வானுக்கு நன்றி கூறுகிறார் மகாதிர்

செப் வான் என்று அழைக்கப்படும் செப் ரெட்ஸுவான் நாட்டின் விவகாரங்கள் குறித்து பேசியதற்காக மகாதிர் அவருக்கு நன்றி கூறினார். செப் வான் எந்த ஓர் அரசியல் கட்சியிலும், பெர்சத்துவிலும், உறுப்பினராக இல்லை என்பது தமக்குத் தெரியும். எனினும், அவரது கருத்துகளைப் பாராட்டுவதாக மகாதிர் கூறினார். செப் வான் எவர்…

சேவியர்:  முஸ்லிம்-அல்லாதவர்கள் இல்லாத அமைச்சரவையா?, ஹாடியின் கண்டிக்கத்தக்க கருத்து

  பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அமைச்சரவையில் முஸ்லிம் அல்லாதவர்களின் பொறுப்பு மற்றும் அந்தஸ்து குறித்துக் கூறியுள்ள கருத்து கண்டிக்கத்தக்கது. இந்நாட்டுச் சுதந்திரம் மற்றும் மேம்பாட்டுக்குப் போராடிய அனைத்துச் சமயங்களைச் சார்ந்தவர்களின் தியாகங்களையும், உழைப்பையும் அவர் இழிவுபடுத்துவதாகப் பொருள்படுகிறது.   இந்நாட்டில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் உழைக்கலாம்,…

ஜிஇ 14 குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியை நம்பாதீர்:…

நாடாளுமன்றக்  கலைப்பு  மற்றும்  14வது  பொதுத்  தேர்தல்  தொடர்பில்   சமூக  வலைத்தளங்களில்   வைரலாகும்   செய்திகளைப்  பொதுமக்கள்  புறக்கணிக்க   வேண்டும்   எனத்   தேர்தல்   ஆணையம்  (இசி)   கேட்டுக்கொண்டுள்ளது. பிரதமரின்  ஆலோசனையின்பேரில்   மாமன்னரின்  இணக்கத்துடன்  மட்டுமே   நாடாளுமன்றத்தைக்  கலைக்க   முடியும்    என  இசி    தலைவர்   முகம்மட்  ஹஷிம்  அப்துல்லா    தெரிவித்தார். சமூக …

செய்தி: சீன நிறுவனங்கள் 1எம்டிபிக்கு உதவின

1எம்டிபி  சொத்துக்களை   சீன   நாட்டு  நிறுவனங்களுக்கு  விற்றதன்வழி  கிடைக்கப்பெற்ற  பணத்தைக்  கொண்டு    அபு  டாபி   அனைத்துலக   பெட்ரோலிய   முதலீட்டு   நிறுவன(ஐபிஐசி)த்துக்கு   ஆண்டு  இறுதிக்குள்  கொடுக்கப்பட   வேண்டிய  யுஎஸ்$602.7 மில்லியன்  கடன்  கட்டி  முடிக்கப்பட்டதாக   சிங்கப்பூர்  ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்   கூறியது. 1எம்டிபி  பினாங்கின்   வட   பகுதியிலும்    போர்ட்  கிள்ளானிலும்  அதற்குச்  …