மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
கேரித்தீவு தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்தில் ஸைட் ஹமிடியின் திருகுதாளம்
சேவியர் ஜெயக்குமார், மே5, 2018. கடந்த மே 1 இல், கோலலங்காட் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள கேரித்தீவுக்கு வருகை புரிந்த துணைப் பிரதமர் ஸைட் ஹமிடி தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்திற்கு உறுதி அளித்துள்ளார். ஆனால் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றினால் மட்டுமே வீடமைப்புத் திட்டத்தைப் பாரிசான் அரசாங்கம் குறுகிய காலத்தில்…
நீங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களியுங்கள், ஐஜிபி போலீஸ் படைக்கு அறிவுறுத்தல்
போலீஸ் படை உறுப்பினர்கள் அவர்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று போலீஸ் படையின் தலைவர் முகமட் ஃபூஸி ஹருண் கூறினார். அவர்களுடைய வாக்குகள் இரகசியமானவை என்று அவர் உறுதி அளித்தார். "அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. எல்லா வாக்குகளும்…
பெரும் மாற்றங்களைக் காணும் ரயிஸ், ஊழல் தலைவர்கள் தலைமை ஏற்கக்கூடாது…
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் பங்கேற்கும் பேரணிகளிலிருந்து வாக்காளர்களின் மனப்பாங்கில் பெரும் மாற்றம் இருப்பதைக் காண முடிகிறது என்று முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் மலேசியாகினியிடம் கூறினார். நியாயமான மற்றும் நேர்மையான சட்டங்கள் மீது தமக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை வலியுறுத்திய அவர், ஊழல் மற்றும் கரைபடிந்த…
ரந்தாவ் இருக்கையின் முடிவு கெஜெட்டில் பதிவு; ஶ்ரீராம் வழக்குத் தொடர்கிறார்
நெகிரி செம்பினான், ரந்தாவ் மாநில சட்டமன்ற தொகுதியை போட்டியின்றி பராமரிப்பு மந்திரி செசார் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அம்முடிவு அரசாங்க ஏட்டில் (கெஜட்டில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றையத் தேதியிட்ட கடிதத்தில் தேர்தல் ஆணையம் இதனைத் தமக்குத் தெரிவித்துள்ளாக ஶ்ரீராமின் வழக்குரைஞர் முகமட் ஹனிப் காட்ரி தெரிவித்தார். கடந்த…
‘சேற்று நீரை அருந்தி உயிர் வாழ்கிறோம்’, எல்மினா தோட்டத் தொழிலாளர்கள்…
கடந்த 6 மாதங்களாக, அழுக்கு நீரை அருந்தி உயிர்வாழும் சுங்கை பூலோ, பாயா ஜாராஸ், எல்மினா தோட்டத் தொழிலாளர்கள் 20 பேர், இன்று காலை சுபாங் ஜெயா ஆள்பல இலாகாவில் புகார் அளித்தனர். சைம் டர்பி எல்மினா டெவலப்மென்ட் சென்.பெர். நிறுவனம் மேற்கொண்டுவரும் மேம்பாட்டுத் திட்டத்தின் காரணமாக, அத்தோட்டத்து…
மகாதிர்: 93 வயதிலும் ஒரு மணி நேரம் என்னால் பேச…
மே 9 வாக்களிப்பு நாள். அதுவரை பக்கத்தான் ஹரப்பான் தலைவரும் லங்காவி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான டாக்டர் மகாதிர் முகம்மட் தேர்தல் பரப்புரையை நிறுத்தப்போவதில்லை. “குவாந்தானில் ஒரு மணி நேரம் பேசினேன்....முன்பெல்லாம் அனாயசமாக ஒரு மணி நேரத்துக்குப் பேசுவேன். அது இளமைக் காலம்”, என இன்று புத்ரா ஜெயாவில் …
தியான் சுவா சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா 14வது பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பி. பிரபாகரனை ஆதரிக்கிறார். பிரபாகரனை ஆதரிக்கும் முடிவு ஹரப்பான் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு அதற்கு அவர்களின் ஆசியும் கிடைத்துள்ளது என்றாரவர். “பிரபாகரன் இளைஞர், துடிப்பானவர். பொதுத் தேர்தலில் அவருக்கு நான் வழிகாட்டியாக …
ஹரப்பான் பரப்புரைகளில் கலந்துகொள்ளும் அம்னோ மூத்த உறுப்பினர்களுக்கு கூ நான்…
அம்னோ மூத்த உறுப்பினர்கள் எதிரணி பரப்புரைகளில் கலந்துகொள்வதையோ அதற்கு ஆதரவளிப்பதையோ பிஎன் பொறுத்துக்கொள்ளாது. இதனைத் தெரிவித்த அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குமுன் அம்னோ மூத்தோர் எந்த அளவுக்கு எதிரணியுடன் கூடிக் குலவுகிறார்கள் என்பதை பிஎன் ஆராயும் என்றார். “சில …
பொன்னான வாய்ப்பை’ வீணாக்காமல் விவேகமாக வாக்களிப்பீர்: கடல்படைத் தலைவர் வீரர்களுக்கு…
‘கடல்படை வீரர்கள் விவேகமாக வாக்களிக்க வேண்டும். இது ஒரு ‘பொன்னான வாய்ப்பு’. இதை வீணாக்கி விடக் கூடாது என்று கடல்படைத் தலைவர் எட்மிரல் அஹமட் கமருல்ஜமான் அஹமட் படாருடின் கேட்டுக்கொண்டிருக்கிறார். வீரர்கள் குடும்பத்தோடு சென்று முன்னேரத்திலேயே வாக்களிக்க வேண்டும். அவர்களின் வாக்குகள் “இரகசியமானவை” என்றவர் நினைவுறுத்தினார். சரியான தேர்வு …
ஹாடி: பாஸும் பிஎன்னும் ஒத்துழைப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை
14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஸும் பிஎன்னும் ஒத்துழைத்துக் கூட்டு அரசாங்கம் அமைத்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என பாஸ் தலைவர் ஹாடி ஆவாங் கூறினார். ஆனால், அப்படி ஓர் ஒத்துழைப்பு ஏற்பட பிஎன் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். “பாஸ் பிஎன்னுடன் ஒத்துழைப்பது விசித்திரமல்ல. ஆனால், பிஎன் …
தியன் சுவா 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது,…
பத்து நாடாளுமனறத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் தியன் சுவா 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அவரது வேட்பாளர் மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. தியன் சுவா தாக்கல் செய்துள்ள மனு…
செமிஞ்சே தொகுதி மக்களுக்கு 15 அம்சத் தேர்தல் அறிக்கை, பி.எஸ்.எம்.…
மலேசிய சோசலிசக் கட்சியின் செமிஞ்சே சட்டமன்ற வேட்பாளர் எஸ்.அருட்செல்வன் தனது 15 அம்சத் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டதோடு, வாக்காளர்களுக்கு உறுதி வழங்கும் வகையில் தனிப்பட்ட கடிதம் ஒன்றில் கையெழுத்தும் இட்டார். பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், அத்தொகுதி நிர்வாகத்தில் குடியிருப்பாளர்களின் நேரடி பங்கேற்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார…
கோத்தா டாமான்சாரா தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம், பி.எஸ்.எம். நம்பிக்கை
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கோத்தா டாமான்சாரா சட்டமன்ற வேட்பாளர் ஆ.சிவராஜன், அத்தொகுதியைச் சேர்ந்த 50,438 வாக்காளர்களும் அவர்களுக்குச் சேவையாற்ற, தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். 13-வது பொதுத் தேர்தலில், அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நசீர் ஹசிம் சில காரணங்களால்…
ஜிஇ14 வாக்காளர் பட்டியலில் 10 சிக்கல்கள், பெர்சே கேள்வி எழுப்பியுள்ளது
14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ14) வாக்காளர் பட்டியலில், பத்து முக்கிய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பெர்சே மற்றும் ‘எங்கேஜ்’ அரசு சாரா அமைப்புகள் கூறியுள்ளன. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அந்த இரு அரசு சாரா அமைப்புகளும் தற்போதைய மற்றும் முந்தைய வாக்காளர் பட்டியல் பகுப்பாய்வில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளன.…
நஜிப்பின் வாசல்படிக்கே சண்டையைக் கொண்டுவந்து விட்டார் மகாதிர்!
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிருக்கும் பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப்புக்கும் இடையிலான அரசியல் போரை நஜிப்பின் வாசல்படிக்கே கொண்டுவந்து விட்டார் மகாதிர். அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் நஜிப்புக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை நடத்த மகாதிர் பெக்கானுக்கு…
ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை ஹரப்பான் அகற்றும், வான் அசிஸா
14 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் ஊடகச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அனைத்து சட்டங்களையும் அதிகாரக் கட்டளைகளையும் மறுபரிசீலனை செய்யும் என்று அதன் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறினார். உலக பத்திரிக்கை சுதந்திரம் நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஓர்…
தொங்கு சட்டமன்றம் என்ற நிலையில் பாஸ் எவருடனும் கூட்டுச் சேரும்…
கெடாவில் தொங்கு சட்டமன்றம் என்ற நிலை ஏற்படுமானால் மாநில பாஸ் , அதன் இஸ்லாமியக் கோட்பாடுகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொள்கிறதோ அதனுடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்கத் தயாராக உள்ளது. சுங்கை லீமாவ் சட்டமன்ற வேட்பாளர் முகம்மட் அப்ட் சமட் இதனைத் தெரிவித்தார். பாஸுடன் ஒத்துழைப்பு தேவை என்றால் இது …
டயிம்: தேவை பொருளாதாரம் மீது நஜிப்- மகாதிர் விவாதம்
பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் பொருளாதார, நிதி விவகாரங்கள்மீது விவாதமிட வேண்டும் என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின். அது நடக்காது என்றால் அவர்களின் பிரதிநிதிகளாவது பொது விவாதத்தில் ஈடுபட வேண்டும். அது வாக்காளர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது …
அடுத்த வெள்ளிக்கிழமை மலாக்காவில் மகாதிர்-ரபிடா-டைம் சூறாவளி!
அடுத்த வெள்ளிக்கிழமை மலாக்காவில் நடைபெறவிருக்கும் ஒரு பெரிய செராமாவில் அம்னோ முன்னாள் அமைச்சர்கள் ரபிடா அசிஸ் மற்றும் டைம் ஸைனுடின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று மலாக்கா பிகேஆர் தலைவர் சம்சூல் இஸ்கந்தர் முகமட் அகின் அறிவித்துள்ளார். அன்றிரவு மலாக்கா மாநில சட்டமன்ற தொகுதி புக்கிட் கட்டிலில் (முன்பு…
டைம்: அம்னோவை வெளியேற்றுங்கள்
அம்னோவை வெளியேற்றுங்கள் என்று லெம்பா பந்தாய் வாக்காளர்களை இன்றிரவு முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனுடின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அவர் பராமரிப்பு அரசின் பிரதமர் நஜிப்பின் துணைவியையும் சாடினார். "பிஎன்-னுக்கு வாக்களிப்பது அவருடைய மனைவிக்கு அளிக்கும் வாக்காகும், அந்த மனைவி நஜிப்பின் மனைவியாகும். "வாக்களிப்பு நாளாக ராபுவை…
பாயா ஜாராஸ், எல்மினா தோட்ட மக்கள் அழுக்கு நீரை அருந்தி,…
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் பாயா ஜாராஸ், எல்மினா தோட்ட மக்கள், தினமும் அழுக்கு நீரை அருந்தி வருவதாக புகார் அளித்தது தங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியது. சைம் டர்பி எல்மினா டெவலப்மென்ட் சென்.பெர். நிறுவனம் மேற்கொண்டுவரும் ஒரு மேம்பாட்டுத்…
கெடாவில் பக்கத்தானுக்கு ஆதரவாக இந்தியர் சுனாமியா?
கெடாவில் பக்கத்தான் ஹரப்பானுக்கு இந்தியர்களின் ஆதரவு பெருகி வருவதாகத் தெரியும் வேளையில் மலாய் சுனாமியில் வேகம் இல்லை என்று மெர்டேக்க மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பக்காத்தானுக்கு ஏப்ரல் 2 இல் 32.5 விழுக்காடாக இருந்த இந்தியர்களின் ஆதரவு ஏப்ரல் 26 இல் அது 55.7 ஆக…
பணத்தை வாரி வழங்கும் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால்
சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் இத்தேர்தலில் ஒரு வேட்பாளர் அல்லர். ஆனால், அவர் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொள்கிறார், அனல் கக்கும் உரை நிகழ்த்துகிறார், பை நிறையப் பணம் வைத்திருக்கிறார். நேற்றிரவு, மலாய் சுங்கை லெமான் பென்டாங் உத்தாரா கிராமத்தில் நூறு பேர்…
























