இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஜொகூர் மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டியிட விரும்புவதாக வெளியான செய்தியை ஜொகூர் மாநில பிகேஆர் தலைவர் டாக்டர் ஜாலிகா முஸ்தபா நிராகரித்துள்ளார். தனது முகநூல் பதிவில் இது குறித்து கருத்து தெரிவித்த ஜாலிகா, இந்தத் தகவல்கள் உண்மையற்றவை, ஊக அடிப்படையிலானவை மற்றும்…
மலாய்க்காரர்களை அதிகாரத்திலிருந்து ஒதுக்கிவிட ‘மலேசியாவின் மலேசியா ‘வைப் பயன்படுத்தாதீர்
"மலேசியன் மலேசியா' என்ற கருத்தைப் பயன்படுத்துவோரின் நோக்கம் முஸ்லிம்களின் அதிகாரத்தை ஒதுக்கித்தள்ளுவதாகும், ஆகவே. அம்மாதிரியான முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். இஸ்லாம் ஆளுவதை உறுதி செய்வதற்காக பாஸ் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறும் ஹாடியின் செய்தி பாஸின் ஹரக்கா டெய்லியில்…
ஜாஹிட்: பல்முனை போட்டிகள் இருப்பது நல்லது ஆனால் அதிலும் ஆபத்து…
அம்னோ பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் அது பல்முனைப் போட்டிகள் நடப்பதையே விரும்புகிறது என அதன் நடப்பில் துணைத் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். அது எதிரணி வாக்குகளைப் பிளவுபடுத்தும், ஆளும் கட்சிக்கு நன்மையாக அமையும். ஆனாலும், எல்லா இடங்களிலும் அது அம்னோக்குச் சாதகமாக அமையும் …
டிஎம்ஐமீது எம்சிஎம்சி விசாரணை: சாலே உறுதிப்படுத்தினார்
மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) த மலேசியன் இன்சைட்(டிஎம்ஐ)மீது விசாரணை மேற்கொண்டிருக்கிறது. தேவையானால் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். “டிஎம்ஐமீது புகார் ஒன்று பெறப்பட்டது. எம்சிஎம்சி இப்போது விசாரிக்கத் தொடங்கியுள்ளது. “அது சட்டத்தை மீறியிருந்தால் அது குறித்து விசாரிப்போம், மேல்நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கையை உரிய அதிகாரிகளிடம் அனுப்பி வைப்போம்”, …
ஷீலாவைத் தாக்கிப் பேசிய அம்னோ கட்சியினர் விலைவாசி உயர்வு குறித்து…
பாடகர் ஷீலா மஜிட் விலைவாசி உயர்ந்து விட்டதாக சொன்னபோது அம்னோவும் அதன் ஆதரவாளர்களும் சீறிப்பாய்ந்து அவரை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார்கள். ஆனால் நேற்றைய அம்னோ பேரவையில் அதுதான் பேச்சாக இருந்தது. விலைவாசி உயர்வு குறித்து பேராளர்கள் அங்கலாய்த்துக் கொண்டது இன்றைய பெரித்தா ஹரியானில் இரண்டு பக்கங்களில் …
டிஎம்ஐ தொடர்பில் ஏஜி துணைவியாரை விசாரிப்பீர்: அம்னோ பேராளர் கோரிக்கை
அம்னோ தலைமைத்துவத்தையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவமதித்த த மலேசியன் இன்சைட்(டிஎம்ஐ) செய்தித்தள உரிமையாளருக்கு எதிராக அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்னோ பேராளர் ஒருவர் வலியுறுத்தினார். மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் ஆவணங்களின்படி டிஎம்ஐ -இன் உரிமையாளர் பரிடா பேகம். டிஎம்ஐ தலைமைச் செய்தி ஆசிரியர் …
நண்பர்கள் இல்லாத ஸைட், ஸாகிட்டை சந்திக்க விரும்புகிறார்
சிலாங்கூர் சுல்தானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தமக்கு எதிரணித் தலைவர்கள் ஆதரவு அளிக்கத் தவறியதால் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் இப்போது துணைப் பிரதமர் அஹமட் ஸாடகிட் ஹமிடியைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். எனது தற்போதைய இக்கட்டான நிலையில் ஆதரவு அளிக்க எனக்கு…
இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 14-ம் நாள்
டிசம்பர் 8, 2017 – நெகிரி செம்பிலான், லாபு - நடைப்பயணத்தின் 14-ம் நாள், அதிகாலையிலேயே இன்று லாபு நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர் தியாகு குழுவினர். போகும் வழியில், பொது மக்களில் பலர் அவர்களின் நடைப்பயணத்தின் நோக்கம் மற்றும் இருமொழி திட்டத்தின் விவரம் கேட்டறிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.…
அம்னோ கெடா : புரோட்டோனை நஜிப் காப்பாற்றினார், மகாதீர் ஒன்றுமே…
புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் பங்குகளை, ஷிஜியாங் கீலி ஹோல்டிங் குரூப்-இடம் (கீலி) விற்க அனுமதியளித்த, அம்னோ தலைவர் நஜிப் இராசாக்குக்குக் கெடா அம்னோ பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துகொண்டது. புரோட்டோன் - ஷிஜியாங்கின் ஒத்துழைப்பு, 10,000 பூமிபுத்ரா தொழிலாளர்களை வேலை இழப்பதிலிருந்து காப்பாற்றியிருக்கிறது, என்று அலோர்ஸ்டார் பிரதிநிதியான முகமட் யூசுஃப் இஸ்மாயில்…
குவான் எங் கிட்டத்தட்ட அழுதே விட்டார், அதனால் என்ன?, ராம்கர்பால்…
இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அம்னோ பேராளர் ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்பார்த்தபடி பலவகையான குற்றச்சாட்டுகளை பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராக அள்ளிவீசிக் கொண்டிருக்கிறது. இதில் ஆழ்ந்த வெறுப்பை ஏற்படுத்துவது பினாங்கில் நவம்பர் 5 இல் தொடங்கிய வெள்ளம் பற்றி பிரதமர் நஜிப் கூறியது. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பினாங்கு மாநிலத்திற்கு மத்திய…
நஜிப் : உலகம் ஒன்றுபட்டால், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அங்கீகரிக்கப்படுவது…
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை உருவாக்குவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக, உலக நாடுகள் ஐக்கியப்பட்டால் அத்திட்டம் தோல்வியடையும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறினார். "உலகம் ஒன்றுபட்டால், இஸ்ரேலின் தலைநகரான பைத்துல்மாக்டிஸை உருவாக்குவதற்கான அமெரிக்க முன்மொழிவைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்,” என அம்னோ தலைவருமான அவர்,…
சிலாங்கூர் சுல்தான் – ஸைட் விவகாரத்தில் டிஎபி ஒதுங்கி நிற்கிறது
சிலாங்கூர் சுல்தான் கருத்துக்கு பதில் அளித்ததின் எதிர்விளைவுகளை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் டிஎபியின் தலைவர் டோனி புவா கூறுகிறார். இந்த விவகாரத்தில் டிஎபியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கை, நிலைப்பாடு ஏதும் இல்லை என்று புவா பதில் அளித்தார்.…
மூத்த போலீஸ்காரரும் இதர இருவரும் எம்எசிசியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
எசிபி என்ற தகுதியைக் கொண்ட ஒரு மூத்த போலீஸ் கமிஷனரையும் இரண்டு பெண்களையும் ஊழல் சம்பந்தமாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) தடுத்து வைத்துள்ளது. பெர்னாமா தகவலின்படி, சந்தேகத்திற்குரிய அந்த முன்னாள் போலீஸ் தலைவரும் அவருடைய உறவினர்களாகக் கருதப்படும் இரண்டு பெண்களும் அடுத்த செவ்வாய்க்கிழமை வரையில்…
ஜமாலின் சுத்தியால் அடிப்பேன் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஸைட் ஐஜிபியின் பாதுகாப்பை…
மண்டையில் சுத்தியால் அடிப்பேன் என்று சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் விடுத்திருந்த அச்சுறுத்தலின் விளைவாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகமட் பூஸியின் பாதுகாப்பை நாடியுள்ளார். ஜமாலும் அவரது அம்னோ நண்பர்களும் என்னை சுத்தியால் மண்டையில்…
கலைஞர்கள் அரசியல் முட்டாள்கள் அல்லர்- உள்ளூர் நடிகை மியாவ் மியாவ்
நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து டிவிட் செய்ததற்காக பலருடைய குறைகூறலுக்கு ஆளான ஷிலா மஜிட்டுக்கு ஆதரவாக மியாவ் மியாவ் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் உள்ளூர் நடிகை லிம் சிங் மியாவ் குரல் கொடுத்துள்ளார். நேற்று முகநூலில் பதிவிட்ட லிம், கலைஞர்கள் இந்நாட்டின் குடிமக்கள், கருத்துச் சொல்லும் உரிமை …
முன்னாள் டிஏபி பிரதிநிதி 100ஆதரவாளர்களுடன் பிஏபிக்குத் தாவினார்
முன்னாள் டிஏபி சட்டமன்ற பிரதிநிதி ஒருவர் மக்கள் மாற்றுக் கட்சி(பிஏபி)க்குத் தாவியுள்ளார். அவர்தான் டான் பெங் ஹுவாட். அவர் இப்போது அக்கட்சியின் பினாங்கு மாநிலத் தொடர்புக்குழுத் தலைவர். இன்று ஜாவியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிஏபி இப்போது கட்சிக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்றார். “கட்சி மூத்த தலைவர்களை …
அம்னோவில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியில்லை
அடுத்த ஆண்டு கட்சித்தேர்தல்களின்போது அம்னோ தலைவர் பதவிக்கும் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டி இருக்கக்கூடாது என்ற தீர்மானம் அம்னோவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்னோ இளைஞர் பிரிவு கொண்டுவந்த தீர்மானம் அம்னோ பொதுப் பேரவையில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி இல்லை என்றால் கட்சி 14வது பொதுத் …
ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க முடிவுக்கு ஹரபான் கண்டனம்
எதிரணியான பக்கத்தான் ஹரபான் ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புக்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. கண்டன மகஜரைக் கோலாலும்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமனா தலைவர் முகம்மட் சாபு , அம்முடிவு வருத்தமளிக்கிறது என்றும் எல்லா இஸ்லாமியர்களும் பாலஸ்தீன …
உறுப்பினர் அல்ல என்றாலும் அம்னோ பொதுப்பேரவையில் 1எம்டிபி தலைவர் கலந்துகொண்டார்
1எம்டிபி தலைவர் அருள் கண்ட கந்தசாமி அம்னோவின் சிவப்பு வண்ண பாஜு மலாயு அணிந்து அம்னோ பேரவைக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியான அம்னோவில் அவர் சேர்ந்து விட்டார் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அருள் கந்தாவுக்கு நெருக்கமான ஒருவர், அருள் அம்னோ …
மகாதிர்: அம்னோவை காபிர் என்று அழைத்த ஹாடி இன்று அதற்குப்…
ஒரு காலத்தில் அம்னோ அரசாங்கத்தை காபிர்கள் என்று அழைத்தவர்தான் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஆனால் இன்று அவர் அம்னோவை ஆதரிப்பதுபோல் தெரிகிறது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். “காலனித்துவகால அரசமைப்பையும் சட்டங்களையும் வைத்துக்கொண்டிருப்பதால் காபிர்கள் என்று அழைத்த ஹாடி இப்போது அம்னோவுடன் …
இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 13-ம் நாள்
டிசம்பர் 7, 2017 – நெகிரி செம்பிலான், பண்டார் சிரம்பான் செலாத்தான் - நடைப்பயணத்தின் 13-ம் நாள், உடல்நலக்குறைவின் காரணமாக தியாகுவும் அஞ்சாதமிழனும் இன்று முழுநேர ஓய்வில் இருந்தனர். செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணாவின் அலுவலகத்திலேயே தங்கி, ஓய்வெடுத்ததாக தியாகு நம்மிடம் தெரிவித்தார். ‘தமிழ்ப்பள்ளிகள் காப்போம்! தமிழ்க்கல்வி மீட்போம்!!’…
நஜிப் : மலபாரிகளையும் நாங்கள் மலாய்க்காரர்களாகக் கருதுகிறோம்
இந்தியாவின் கேரளா மாநிலத்திலிருந்து வந்த, முஸ்லீம் இந்திய வம்சாவழிகள் உட்பட, பல்வேறு இன குழுக்களை, மலாய் இனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் மூலம், அம்னோ திறந்த வெளிப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது என்று நஜிப் இராசாக் தெரிவித்தார். மலேசியாவில் "மலபாரி" மலாய் இனத்தின் ஒரு பாகமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது, அவர்களைத் திரும்பி…
டிஏபி மறுதேர்தல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆர்ஓஎஸ்ஸிடம் வழங்கி முடிவுக்காகக் காத்திருக்கிறது
நவம்பர் 12இல் நடைபெற்ற கட்சி மறுதேர்தல் தொடர்பான ஆவணங்களைச் சங்கப் பதிவகத்திடம் வழங்கியதன்வழி டிஏபி அதன் பொறுப்புகளை நிறைவேற்றி விட்டதாக கட்சியின் அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் இன்று கூறினார். மத்திய செயல்குழுவின் மறுதேர்தல் தொடர்பான ஆவணங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு விட்டன. “இதில் ஆர்ஓஎஸ் திருப்தியுற்று டிஏபி-இன் அதிகாரப்பூர்வ …
நஜிப் : எதிர்க்கட்சியால் சீனர்களும் இந்தியர்களும் ஏமாற்றப்படுவார்கள்
சீன மற்றும் இந்திய சமுதாயங்களில் சிலர், எதிர்க்கட்சிகளின் பொய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக நஜிப் தெரிவித்துள்ளார். இன்று, அம்னோ பொதுக்கூட்டத்தில், தலைமை உரையாற்றிய அவர், அம்னோவை ஓர் இனவெறி கட்சி என்று கூறுவதை நிராகரித்தார். "அம்னோ இனவாதக் கட்சி அல்ல. இல்லையென்றால், நாம் எப்படி ஏற்றுகொள்ளப்பட்டோம்? பல ஆண்டுகளாக, பல்லினங்களைக் கொண்ட…











